Jump to content

உலகப் பள்ளிகள் தர வரிசையில் கிழக்காசியா முன்னணி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Countries ranked on maths and science   1. Singapore 2. Hong Kong 3. South Korea 4. Japan (joint) 4. Taiwan (joint) 6. Finland 7. Estonia 8. Switzerland 9. Netherlands 10. Canada 11. Poland 12. Vietnam 13. Germany 14. Australia 15. Ireland 16. Belgium 17. New Zealand 18. Slovenia 19. Austria 20. United Kingdom 21. Czech Republic 22. Denmark 23. France 24. Latvia 25. Norway 26. Luxembourg 27. Spain 28. Italy (joint) 28. United States (joint) 30. Portugal 31. Lithuania 32. Hungary 33. Iceland 34. Russia 35. Sweden 36. Croatia 37. Slovak Republic 38. Ukraine 39. Israel 40. Greece 41. Turkey 42. Serbia 43. Bulgaria 44. Romania 45. UAE 46. Cyprus 47. Thailand 48. Chile 49. Kazakhstan 50. Armenia 51. Iran 52. Malaysia 53. Costa Rica 54. Mexico 55. Uruguay 56. Montenegro 57. Bahrain 58. Lebanon 59. Georgia 60. Brazil 61. Jordan 62. Argentina 63. Albania 64. Tunisia 65. Macedonia 66. Saudi Arabia 67. Colombia 68. Qatar 69. Indonesia 70. Botswana 71. Peru 72. Oman 73. Morocco 74. Honduras 75. South Africa 76. Ghana

 
 
சொறீலங்கா ரூ கிளவர் என்ற படியால்.. தரவுகளை கொடுக்காமல் தப்பிவிட்டது. :D:lol:
 
Link to comment
Share on other sites

அடப்பாவிகளா.. சிங்கப்பூரிலயே இன்னும் கொஞ்சக் காலத்தை ஓட்டியிருக்கலாம் போலிருக்கு..

Link to comment
Share on other sites

அடப்பாவிகளா.. சிங்கப்பூரிலயே இன்னும் கொஞ்சக் காலத்தை ஓட்டியிருக்கலாம் போலிருக்கு..

இதுதான் சொல்லுறது எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் எண்டு....ரைட்ஆ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட 21 ஆவது தரவரிசையில் இருக்கும் லண்டனில் படித்த டாக்குத்தர்மாருக்கும் எஞ்சினியர்மாருக்கும் இருக்கிற நடப்பு :D:lol:
சொல்லி வேலையில்லை :lol:

Link to comment
Share on other sites

140508043418_asia_education_464x261_bbc_

சிங்கப்பூர் பள்ளிகள் முதலிடம்
 
பள்ளிக்கூடங்களின் செயல்பாடு குறித்த ஒரு சர்வதேச ஆய்வு, ஆசிய நாடுகளை முதல் ஐந்து இடங்களிலும், ஆப்ரிக்க நாடுகளை கீழ் ஐந்து இடங்களிலும் வைத்திருக்கிறது.
பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைப்பால் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வு, 70க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 15 வயது மாணவர்கள் எழுதிய பரீட்சை முடிவுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளை வைத்து இந்த பட்டியலைத் தொகுத்திருக்கிறது.
 
இந்த ஆய்வில் சிங்கப்பூர் முதலிடத்திலும் கானா கடைசி இடத்திலும் இருக்கின்றன.
அமெரிக்கா 28வது இடத்தில் இருக்கிறது.
பொருளாதார வளர்ச்சிக்கும் கல்விக்கும் இடையே இருக்கும் தொடர்பைக் காட்டுவதும், தரங்களை உயர்த்துவதன் மூலம் எப்படி எல்லா நாடுகளும் பலன் பெறலாம் என்பதைக் காட்டுவதும் இந்த ஆய்வின் நோக்கம் என்று இந்த அமைப்பு கூறுகிறது
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட 21 ஆவது தரவரிசையில் இருக்கும் லண்டனில் படித்த டாக்குத்தர்மாருக்கும் எஞ்சினியர்மாருக்கும் இருக்கிற நடப்பு :D:lol:

சொல்லி வேலையில்லை :lol:

 

21 அல்ல.. 20 வாத்தியார். அவர்களின் வெட்டிப் பெருமைக்கு செவி மடுக்கும் மற்றவர்களால் தான் அவர்கள் பெருமை பேசிக்கிட்டு திரிகிறார்கள். தவறு எங்க இருக்கு பார்த்தீங்களா..?! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிசு,கிசு... செய்தி..............:

 

 

வாத்தியார் ஐயாவின்.... இரண்டு பிள்ளைகள்,
டாக்டராக.... படித்துக் கொண்டு இருக்கிறார்கள். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் எஞ்சினியருக்கு ஸ்கூலில படிக்கிறேல்ல. யூனிவர்சிட்டிக்குப் போகோணும்.

இது ஸ்கூல் வயது பிள்ளைகளின் கணித, விஞ்ஞான அறிவை (மட்டும்) தரப்படுத்திய வரிசை.

யூனிவர்சிட்டி முதல் பத்தில் 3 ம் இடத்தில் ஆக்ஸ்போர்ட், 5 ம் இடத்தில் கேம்பிரிட்ஜ், 8 இடத்தில் இம்பீரியல் இருக்கு.

பத்துக்குள் இருக்கும் அத்தனையும் யூகே, யூஎஸ் யூனிகள்தான்.

http://www.forbes.com/sites/susanadams/2014/10/01/the-worlds-top-universities-2014/

ஜேர்மனி, இத்தாலி, நோர்வே, டென்மார்க் சொர்க்கம் என்று புழகித்தள்ளினாலும், மேல்படிப்புக்கு தம் பிள்ளைகளை ஏன் லண்டனுக்கு எங்க புலம்பெயர்ஸ் அனுப்புறவை எண்டு தெரியூதே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

ஜேர்மனி, இத்தாலி, நோர்வே, டென்மார்க் சொர்க்கம் என்று புழகித்தள்ளினாலும், மேல்படிப்புக்கு தம் பிள்ளைகளை ஏன் லண்டனுக்கு எங்க புலம்பெயர்ஸ் அனுப்புறவை எண்டு தெரியூதே :)

 

மற்றைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து... மேற்படிப்புக்கு, லண்டனுக்கு  அனுப்புவர்களை பற்றி, நான் இதுவரை கேள்விப்படவில்லை.

இந்தியா, சீனா போன்ற நாடுகளிருந்து லண்டனுக்கு மேற்படிப்பு படிக்க வருபவர்களை வைத்து... தவறான கருத்தை கொண்டுள்ளீர்கள், கோசான்.

இங்குள்ள சில பல்கலைக் கழகங்களில், ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்க்காக.. ஒரு வருடம் ஆங்கில நாடு ஒன்றிற்கு சென்று கல்வி கற்க அனுமதிப்பார்கள். அதுகும் அந்த மாணவனின் தனிப்பட்ட விருப்பம்.

அதனை, நினைத்து... லண்டன் கனவில் இருக்கின்றீர்கள் போலுள்ளது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஏன் சிறீயண்ணா.. ஜேர்மனி.. பிரான்ஸ்.. டென்மார்க்.. சுவிஸ்.. நோர்வே என்றிருக்கிற எங்கட ஆக்கள்.. லண்டனுக்கு ஓடி வருகினம்.

 

1. பெனிபிட் எடுக்கிறது ஈசி என்று வருகினம்.. (பழமைவாதக் கட்சி அரசு அதனை கடினமாக்கிடும்.)

 

2. பிள்ளைகளின் படிப்பு.. இங்கிலீசுப்பீசில இருக்கனுமாம் என்றினம்.

 

3. மற்றைய நாடுகளில் உயர்கல்வி வாய்ப்பு எளிதாக அமையாதாம். பிரித்தானியாவில்.. ஓரளவு பாஸானாலும் யுனி போகலாமாம்.

 

இப்படி அடுக்கினமே... நீங்க என்னடான்னா.. இப்படிச் சொல்லுறீங்க.

 

அதில அண்மையில் ஒருத்தர் டச் சிற்றிசன்சிப்பை விட்டிட்டு.. யுகே பீ ஆருக்கு அப்பிளை பண்ணுறார். ஏனென்று கேட்டால்.. யுகே ஈயுல இருந்து வெளில வந்திட்டாலும்.. என்று முன்னேர்ப்பாடாம். முடியல்லடா சாமி. எம்மவர் கூத்துக்களுக்கு அளவே இல்லாமல் போச்சுது. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ நான் ஜேர்மன் காரரையோ, டச்சு காரரையோ இதர சுதேசிகளைச் சொல்லவில்லை.

நெடுக்குச் சொல்லுவது போல் ஈயூ சிட்டிசன் சிப் கிடச்சதும் யூகேயுக்கு படை எடுக்கிற முன்னாள் சொறிலங்கன்சைத்தான் சொன்னேன்.

யூகே பி ஆர் எடுப்பதற்கு டச்சு சிட்டிசன் சிப்பை கைவிடத்தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூகே பி ஆர் எடுப்பதற்கு டச்சு சிட்டிசன் சிப்பை கைவிடத்தேவையில்லை.

 

யூகே பி ஆர் எடுக்க டச் சிற்றிசன் சிப்பை கைவிடத் தேவையில்லை.. (அப்படி எங்கும் கைவிட வேண்டும் என்று எழுதப்படவில்லை) அதற்கு வழங்கி வந்த முக்கியத்துவத்தை விட்டிட்டு.. பிரிட்டனில் நிரந்தரக் குடியிருப்பை தேடுவதையே குறிப்பிட்டுள்ளோம். அதுவும் ஆளுக்கு 1000 பவுன்கள் வரை கட்டி.. இந்தப் பீ ஆர் எதற்கு..??! பீ ஆருக்கு அப்புறம் பிரிட்டன் பிரஜா உரிமைக்கும் அலைவார்களோ என்னவோ.?! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்தப் படிப்பு சம்பந்தமாய் சில விடயங்கலில் பல சந்தேகங்கள் உண்டு...!

 

இந்த பிரான்ஸ் , ஜெர்மனிகளில் கொலீஜ் தரத்தில் படிக்கும் மாணவர்களில் கொஞ்சம் படிப்பு குறைவான மாணவர்கள் ஒரு தொழிற்கல்வி சம்பந்தமாய் படித்து ( மேசன் , மெக்கானிக் , எலட்ரீசியன், காசியர் போன்ற) இரண்டு வருடங்களிலரொரு சான்ற்தழ் பெற்று வேலைக்குப் போய் விடுகினம்... அவர்களை விடுவம்...!

 

அதற்குமேலே யுனிவசிட்டிக்குப் போகும் மாணவர்கள் : எனது உத்தேசமான கணக்குகள்.

 

--  ஜெனரல் டாக்டர் படிக்க  குறைந்தது 8 வருடங்களுக்கு மேல். ( தனியான உறுப்புகளின் மருத்துவத்துக்கு  ஓரிரு வருடங்கள் கூடலாம்.).

 

--  பொறியியலாளர்  ___________  5 ல் இருந்து 7 வரை.

 

--  நர்ஸ்  ___________________  4 ல் இருந்து  7 வரை

 

--  பார்மஸியன்  ___________  4 ல் இருந்து  6 வரை.

 

--  infermier . ( வீடுகளுக்கு போய் ஊசி போடுதல் போன்றபல)  ______ 3 ல் இருந்து 6 வரை.

 

இவை போன்ற இன்னும் பல   சுமார் 5  வருடங்களுக்கு மேல் படிக்க வேண்டும்.

 

-- ஆனால்... இவற்றைப்  படிக்க சிரமப்படும் பிள்ளைகள் லன்டனுக்கு போய்  2 , 3 வருடங்களில் சில சான்றிதழ்களைப் பெற்று விடுகின்றார்கள்  அல்லது புளுடா விடுகிறார்களோ தெரியாது.

 

நான் இந்த பிரான்ஸ் ஜெர்மனில் அனுபவப் பட்டவரை ஆங்கிலத்தைப் பேசி அடுத்த தெருவுக்குக் கூட வழி கேட்டுப் போக முடியாது. இங்கு படிக்கும் பிள்ளைகளும் அந்தந்த நாட்டு மொழியைத் தவிர ஆங்கிலத்தையொ , ஸ்பானிஷ்சையொ 2 வது 3 வது மொழியாகப் படிப்பார்கள். அவை சும்மா ஒரு மொழி அறிமுகமாக இருக்குமேயொழிய இங்கிலாந்தில் ஒரு யுனியில் ஒரிரு வருடத்தில் பட்டம் பெறும் அளவுக்கு இருப்பது சந்தேகமே...!( இலங்கை , இந்தியாவில் படித்து வருபவர்களை நான் குறிப்பிடவில்லை.)

 

இப்ப எனது பிரச்சனை ; இந்நாடுகளில் பிள்ளைகளை யுனியில் 5 , 6 வருடங்கள் படிக்க வைக்கிற நான் முட்டாளா...!

 

5 , 6 வருடங்கள் மினக்கட்டுப் படிக்கிற எனது பிள்ளைகள் மொக்குகளா...!

 

அல்லது  இந்நாடுகளின் கல்விமுறைகளில் ஏதாவது குறைபாடா...!

 

ஒரே குழப்பமாய்க் கிடக்கு...! :huh:  :)

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா.. சுவிஸ் போன்ற நாடுகளில் சித்தியடையத் தவறியவர்கள் கூட இங்கிலாந்தில் முறையாக கல்வி கற்று முதல் வகுப்பில் சித்தி பெற்று பட்டம் பெற்றுள்ளனர்.

 

இங்கிலாந்து கல்வி முறை இதுதான்..

 

மருத்துவம் - 5 வருடங்கள். (MBBS)

 

உயிரியல் மருத்துவம் - BSc (Hons) - 3 வருடங்கள் இதே தான்.. பிஏ.. பி காம் பட்டங்களுக்கும்., மேலும்.. MSci - 4 வருடங்கள்

 

தாதி கற்கை.. மருந்தகவியலாளர் கற்கை.. எல்லாமே பொதுவாக 3 வருடங்கள் தான். இவற்றில்.. MPham - 4 வருடங்கள்.

 

பல் மருத்துவம்..மிருக மருத்துவம் -  4 தொடக்கம் 5 வருடங்கள்.

 

பொறியியல் - BEng - 3 வருடங்கள். (MEng - 4 வருடங்கள்..)

 

பொதுவாக MSc - ஒரு கலண்டர் ஆண்டு.

 

PhD - 3 வருடங்கள்.

 

New route PhD - 4 வருடங்கள்.

 

மேலும்.. பிரான்ஸ்.. ஜேர்மனி.. சுவிஸ்.. நோர்வே.. டென்மார்க்.. கனடா.. அவுஸி.. அமெரிக்கா.. நியூசி இங்கெல்லாம் படித்துவிட்டு கடைசி 1 வருடத்தை மட்டும் இங்கிலாந்தில் வந்து படிச்சு பட்டம் பெறவும் வாய்ப்புள்ளது. exchange students என்று இவர்களை அழைப்பார்கள்.

 

(வருடம் - கல்வியாண்டு என்பது 2 கல்வித் தவணைகள். ஒவ்வொரு தவணையும் 12 - 13 வாரங்கள் தான். வருடத்தில்.. மிச்சம் 3 - 4 மாதங்கள் கும்மாளம் தான்). :D

 

இங்கிலாந்து பாடவிதானம்.. இன்ரென்சிவானது. ஆனால் பரீட்சைகள் ஒப்பீட்டளவில் இலகு. கடந்த ஆண்டில் இருந்து பல்கலைக்கழகப் பரீட்சைகளில் உயர் தரத்தைப் பேண தொழில் வழங்குனர்கள் நிற்பந்தித்ததை அடுத்து.. இப்போது கொஞ்சம் கடினமாக்கி உள்ளனர்.

 

இலங்கையிலும்.. இங்கிலாந்து போன்ற கற்றல் தான். ஆனால் அங்கு.. MSc இரண்டு வருடங்கள். இங்கு ஒரு கலண்டர் வருடம். இப்படி சின்ன சின்ன வேறுப்பாடுகள் உண்டு.

 

ஆனால் பாடவிதான அடிப்படையில்.. நாட்டுக்கு நாடு..பெரிய வேறுபாடுகள் இல்லை. நீண்ட காலம் கொஞ்சம் கொஞ்சமாகப் படிப்பதை.. இங்கிலாந்தில் செறிவாக்கி குறுகிய காலத்தில் படிப்பிக்கிறார்கள்.

 

மேலும் ஐரோப்பிய ஒன்றிய.. ஈ யு மற்றும் நோர்வே..சுவிஸ் பிரஜைகளுக்கு பிரித்தானிய மாணவர்களுக்கு ஒப்பான அனைத்து நிதி கடன் மற்றும் கட்டணச் சலுகைகளும் உண்டு.

 

இதே ஐரோப்பிய ஒன்றியம்.. மற்றும்.. EEA க்கு வெளியில் இருந்து வரும்.. மாணவர்களுக்கு கட்டணச் சலுகைகள் கிடையா. கல்விக் கடனும் கிடையாது. அவரவர் தங்கள் பணத்தில் அல்லது புலமைப்பரிசில் அல்லது சொந்த அரசாங்க செலவில் வந்து படிக்கலாம்.

 

நம்மவர்கள் ஊரில் இருந்து மாணவர் விசாவை பயன்படுத்தி வந்து இப்போ அசைலம் அடிப்பது தான் அதிகம். அதனால் நம்மவர்களின் மாணவ விசாக்கள் கடுமையான பரிசீலனைக்குப் பின்னரே வழங்கப்படுகின்றன. இருந்தும் அசைலம் அடிக்கிறவை திருந்தல்ல. இதனால் நேர்மையாக கல்வி கற்க வருபவர்களுக்கு கடினம். :lol::icon_idea:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குழப்பமும் இல்லை சுவி.

யூகே யூனிவர்சிட்டிகள் ( எல்லாம் இல்லை) யூஎஸ் யூனிகள் இருக்கும் உலகத்தரத்துடன் ஒப்பிடும் போது ஐரோப்பிய அவுஸ்ரேலிய ஜப்பானிய யூனிகள் இல்லை. அதுக்காக அவை தரமற்றவை என்பதில்லை.

நீங்கள் சொல்லுவது போல் யூகே வருபவர்கள் இங்கேயுள்ள தரமான யூனிகளுக்கு போவதில்லை. சவுத்பாங், மெட்டிரோபோலுட்டன் அல்லது ஏதாவது தனியார் காலேஜ்ஜில் போய் எங்காத்துக்காரரும் கோர்ட்டுக்கு போறார் ரேஞ்சில் படித்து முடிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோச்சானின் கடைசிக் கருத்து முழுக்க முழுக்க.. தவறான கருத்து.

 

ஐரோப்பாவில் ஈயுவில் இருந்து வரும் தமிழ் பிள்ளைகள்.. இங்கிலாந்தில் சிறந்த பாடசாலைக் கல்வியைப் பெற்று.. நல்ல உயர் வகுப்பு பல்கலைக்கழகங்களில் படிக்க காண்கிறோம். அவர்களின் முயற்சியும் பெற்றோரின் முயற்சியும் அதில் இருக்குது. அதனை குறை சொல்ல முடியாது.

 

இங்கேயே கடனும் எடுத்துப் படிக்கிறார்கள். அவர்களுக்குள்ள உச்ச வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் படிப்பதில் சிரமப்பட்டாலும்.. பின்னர் நன்கு படிக்கக் காண்கிறோம். :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவா வாசிக்கப் பழகவும்.

இங்கே பள்ளிக்கு படிக்க வருபவரை நான் சொல்லவில்லை. பள்ளிப் படிப்பை ஐரொப்பாவில் முடித்து விட்டு இங்கே யூனிக்கு வருபவரையே சொன்னேன். சுவியும் அதைப் பற்றியே கேட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஏன் சிறீயண்ணா.. ஜேர்மனி.. பிரான்ஸ்.. டென்மார்க்.. சுவிஸ்.. நோர்வே என்றிருக்கிற எங்கட ஆக்கள்.. லண்டனுக்கு ஓடி வருகினம்.

 

1. பெனிபிட் எடுக்கிறது ஈசி என்று வருகினம்.. (பழமைவாதக் கட்சி அரசு அதனை கடினமாக்கிடும்.)

 

2. பிள்ளைகளின் படிப்பு.. இங்கிலீசுப்பீசில இருக்கனுமாம் என்றினம்.

 

3. மற்றைய நாடுகளில் உயர்கல்வி வாய்ப்பு எளிதாக அமையாதாம். பிரித்தானியாவில்.. ஓரளவு பாஸானாலும் யுனி போகலாமாம்.

 

இப்படி அடுக்கினமே... நீங்க என்னடான்னா.. இப்படிச் சொல்லுறீங்க.

 

அதில அண்மையில் ஒருத்தர் டச் சிற்றிசன்சிப்பை விட்டிட்டு.. யுகே பீ ஆருக்கு அப்பிளை பண்ணுறார். ஏனென்று கேட்டால்.. யுகே ஈயுல இருந்து வெளில வந்திட்டாலும்.. என்று முன்னேர்ப்பாடாம். முடியல்லடா சாமி. எம்மவர் கூத்துக்களுக்கு அளவே இல்லாமல் போச்சுது. :lol::D

 

மண்ணாங்கட்டி பினிபிட்......ஜேர்மன்காரன் குடுக்காததையே உங்கை குடுத்து தள்ளுறான்?
எங்கடையளுக்கு எப்பவும் தஸ்சுபுஸ்சு இங்கிலிஸ் மோகம்...அதாலை அள்ளுப்பப்படு வந்து குவிஞ்சுதுகள்......இப்ப என்ன செய்யினமாம்? கருவாட்டு கடையெண்டாலும் இங்கிலிசிலை கதைக்கினமாம். :D  :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே படித்துவிட்டு.. இங்கே கேம்பிரிச்ஜில் படிப்பவர்களும் உளர் மிஸட்ர் கோச்சான். முதலில் உலகத்தை சரிவர புரிந்து கொண்டு விட்டு கதையளக்க வேண்டும். அந்தந்த யுனியின் உட்புகுவை பெறுபேறுகளுக்கு அமைய அந்தந்த நாட்டு கல்வித் தகமை கொண்டோர் பிரித்தானியாவில் தாம் விரும்பும் யுனியில் கல்வி கற்க முடியும். அதுதான் இங்கு நிதர்சனம். அதைவிட்டு.. ஐரோப்பாவில் இருந்து வரும் மாணவர்களை வெறும் கடைநிலை யுனில தான் படிக்கப் போகினம் என்பது மக்களை தவறாக வழிநடத்தும்.. சுத்தப்பொய். :):lol:

 

இந்த இணைப்பு ஒன்றே போதும்.. பொய்யை சாட்சிப்படுத்த. :lol:

 

http://www.ucl.ac.uk/prospective-students/international

Link to comment
Share on other sites

ஜேர்மனியில் இருந்து கனடா யூனியிலும் exchange மாணவர்களாக வந்து படிக்கிறார்கள். வெள்ளைக்காரர் ஐந்துபேரை அண்மையில் சந்தித்துப் பழக வாய்ப்பு கிடைத்தது. ஜேர்மனியில் இல்லாதது என்ன அப்படி இங்கு இருக்கு என்று கேட்டேன். ஆச்சரியம்.. அவர்களுக்கும் ஆங்கில மோகம் உள்ளது. அழகாகவும் பேசுகிறார்கள். இங்கும் இரண்டு செமஸ்டர்கள் படித்தால் கனடாவிலும் செல்லுபடியாகக்கூடிய சான்றிதழ் கிடைக்குமாம்.. இங்கே வந்து தொழில் பெறும் ஆர்வம் அவர்களுள் ஒருவரிடம் இருந்தது. இக்கரைக்கு அக்கரைப்பச்சை என்று சொல்லி வைத்திருக்கிறேன்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யு சி எல்லின் இண்டர்நேசனல் சுடன்ஸ் பேஜை போட்டுட்டு ஐராப்பாவில் இருந்து பள்ளிப் படிப்பின் பின்வரும் தமிழ் பிள்ளையள் நல்ல யூனிக்குத்தான் போகீனம் என்று எப்படி வாதாடுகிறீர்கள்?

யூகேயில் இண்டர்நேச்னல் ஈயூ மாணவர்கள் நல்ல யூனியில் படிகிறார்களா இல்லையா என்பதல்லவே கேள்வி.

கேள்வி ஈயூவில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு யூகேயுக்கு யூனிக்கு வரும் தமிழ் மாணவ்ர்களை பற்றியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட ஞானசூனியங்களா.. அந்தப் பேஜில போய் நாட்டை எலியால் தொட்டு அழுத்தினால்... அந்தந்த நாட்டுக்குரிய மாணவர்களின் அனுமதிக்கு என்ன தேவைன்னு வரும். ஈயு ஒன்றும் செவ்வாயில் இல்லை. பூமியில் தான் உள்ளது. அது சர்வதேசத்துக்குள் அடங்கும். ஈயு மாணவர்களுக்கு கட்டண அடிப்படையில்.. உள்ளூர் மாணவர்களுக்குரிய சலுகைகள் உள்ளதே அன்றி அனுமதியில்.. அந்தந்த நாட்டுக்குரிய கல்விமுறைக்கு ஏற்ப கல்வித் தகமையே கோரப்படும். :lol:

 

மேலும்.. ஈயில இருந்து வாற தமிழ் மாணவர்களை கடைநிலை யுனிக்கு அனுப்பனும் என்ற ஒரு நடைமுறை பிரிட்டனில் எங்கும் இல்லை. :D  இன மொழி ரீதியாக அப்படி எல்லாம் நடந்து கொள்வதில்லை. அது சொறீலங்காவில் தான். குறித்த தகமைகள் உள்ள ஈயு தமிழ் மாணவர்கள் பிற ஈயு மாணவர்களைப் போலவே..நல்ல யுனிகளில் கல்வி கற்கின்றனர்.

 

இவர் கோச்சான் தெரியாமல்.. இதுக்க தலையை விட்டிட்டு தன்னைத் தானே பேயனாக்கிட்டு இருக்கிறார். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

நான் இந்த பிரான்ஸ் ஜெர்மனில் அனுபவப் பட்டவரை ஆங்கிலத்தைப் பேசி அடுத்த தெருவுக்குக் கூட வழி கேட்டுப் போக முடியாது. இங்கு படிக்கும் பிள்ளைகளும் அந்தந்த நாட்டு மொழியைத் தவிர ஆங்கிலத்தையொ , ஸ்பானிஷ்சையொ 2 வது 3 வது மொழியாகப் படிப்பார்கள். அவை சும்மா ஒரு மொழி அறிமுகமாக இருக்குமேயொழிய இங்கிலாந்தில் ஒரு யுனியில் ஒரிரு வருடத்தில் பட்டம் பெறும் அளவுக்கு இருப்பது சந்தேகமே...!( இலங்கை , இந்தியாவில் படித்து வருபவர்களை நான் குறிப்பிடவில்லை.)

-----

 

ஜேர்மனியில் இருந்து கனடா யூனியிலும் exchange மாணவர்களாக வந்து படிக்கிறார்கள். வெள்ளைக்காரர் ஐந்துபேரை அண்மையில் சந்தித்துப் பழக வாய்ப்பு கிடைத்தது. ஜேர்மனியில் இல்லாதது என்ன அப்படி இங்கு இருக்கு என்று கேட்டேன். ஆச்சரியம்.. அவர்களுக்கும் ஆங்கில மோகம் உள்ளது. அழகாகவும் பேசுகிறார்கள். இங்கும் இரண்டு செமஸ்டர்கள் படித்தால் கனடாவிலும் செல்லுபடியாகக்கூடிய சான்றிதழ் கிடைக்குமாம்.. இங்கே வந்து தொழில் பெறும் ஆர்வம் அவர்களுள் ஒருவரிடம் இருந்தது. இக்கரைக்கு அக்கரைப்பச்சை என்று சொல்லி வைத்திருக்கிறேன்.. :lol:

 

இசை... மேலே சுவி, குறிப்பிட்டுள்ள மாதிரி,

பாடசாலை தரத்தில், எட்டு வருடங்கள் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக படித்த மாணவரால்... அடுத்த தெருவுக்கு கூட வழி காட்டுவது சிரமம் :D.

 

அந்த ஆங்கிலக் கல்வி, ஆங்கில நாட்டுக்கு சுற்றுலா செல்லும் செல்லும் போது..."தபால் கந்தோர் எங்கை இருக்கு" ,  "அடுத்த ரயில் எப்ப வரும்", "இந்த ஹோட்டேலுக்கு.. எப்படி போவது?" போன்றவற்றை கேட்க மட்டுமே... பிரயோசனப் படும். :lol:

 

ஆனால்.... சில பல்கலைக்கழக பாடத்திட்டங்களுக்கு, சரளமான.... ஆங்கில அறிவு கூடுதலாக கை கொடுக்கும்.

பல்கலைக் கழகத்தால்... வெளியேறும் போது கூட, சுலபமாக வேலை எடுப்பதற்கு இலகுவானது.

அத்துடன் எட்டு வருடம் படித்த ஆங்கிலத்தை, மேலும் விருத்தி செய்ய... பல்கலைக் கழகங்களில் கொடுக்கப் படும் இந்தச் சலுகைகையை.... சில மாணவர்கள், பிரயோசனப் படுத்துகின்றார்கள் :).

 

பிரான்ஸ், ஜேர்மன் பல்கலைக் கழகங்களில் படித்து, நேரடியாக உள்ளூரிலேயே... வேலை கிடைப்பவர்கள், காலக் கிரமத்தில் தாம், பாடசாலையில் படித்த ஆங்கிலத்தை மறந்து விடுவார்கள் என்பதாலும், பிறகு ஆங்கிலத்தை  கற்க நேரம் கிடைக்காது.... என்பதனையும் யோசித்தே... அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா நாடுகளுக்கு சென்று ஆங்கிலத்தில் கல்வி கற்பதுடன், அங்குள்ள கல்வி முறைகளையும், வேலை செய்யும் முறைகளையும் அறிய விரும்புகின்றார்கள்.

 

இதனை, நீங்கள் ஆங்கில மோகம் என்று நினைத்து..... தற் பெருமை கொண்டால், "வீ காண்ட் டூ.... எனி திங்" :icon_idea:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான், அவதானித்த வரையில்.....
நோர்வே மாணவர்கள்... ஜேர்மன், பிரான்ஸ் மாணவர்களை விட அதிக ஆங்கில அறிவு உள்ளவர்களாக உள்ளார்கள்.
காரணத்தை விசாரித்த போது.... அவர்களும், தாய் மொழியான... நோர்வேஜியன் பாசையில் தான் கல்வி கற்கிறார்கள், இரண்டாவது பாடமாகத்தான் ஆங்கிலம் பயில்கிறார்கள்.

 

ஆனால்... அவர்களது தொலைக்காட்சிகளில்...  இங்கிலாந்து, அமெரிக்க படங்களை மொழி மாற்றம் செய்யாமல்.. ஆங்கிலத்திலேயே... ஒளிபரப்பி "சப் டைட்டல் ஆக" படத்தின் கீழே... நோர்வே எழுத்துக்களை ஓட விடுகின்றார்கள்.  "ஹரி பொட்டர்" போன்ற  படங்களை பார்க்கும் சிறுவர்கள், படத்தை பார்க்கும் ஆவலாலும்.. இளவயதில் மொழியை கற்பது சுலபம் என்பதாலும், ஆங்கிலத்தை அதன் உச்சரிப்புடன் கற்க தேர்ச்சி பெற்று விடுகின்றார்கள்.

 

பிரான்ஸ், ஜேர்மன் போன்ற நாடுகளில்,  எந்த ஆங்கிலப் படமும் அந்த நாட்டு மொழியின் படியே மொழிமாற்றம் செய்து திரையிடுவதால்... மாணவர்கள் ஆங்கிலத்தில்.. "வீக்".  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மேலும் தொடருங்கள் வாசிக்க காத்திருக்கிறோம். நிலாமதி அக்கா
    • "இப்பொது Neanderthals (Homo neanderthalensis) இன் மரபணு இப்போதுள்ள மனித வர்க்கத்தில் 2 - 2.5% இருக்கிறது என்பது பின்னைய முடிவு" ஆம் , அது சரி , ஏனென்றால்,     Though Modern humans and Neanderthals lived in separate regions evolving along separate evolutionary lineages for hundreds of thousands of years, Neanderthals are still our closest currently known relative. Because of that evolutionary proximity, despite being recognized as different species, it is still possible that members of our two species exchanged genetic information. This exchange of DNA is called introgression, or interbreeding. Neanderthal-Homo sapiens interbreeding Neanderthals are known to contribute up to 1-4% of the genomes of non-African modern humans, depending on what region of the word your ancestors come from, and modern humans who lived about 40,000 years ago have been found to have up to 6-9% Neanderthal DNA (Fu et al., 2015).  ............................................................... "சிங்கமும், மனிதனும் species அடிப்படை யில் மிக தொலைவு என்பதால் சாத்திய கூறுகள் மிக, மிக  குறைவு என்பதே இப்பொது நம்ப கூடியது" ஆம், அது முற்றிலும் சரியான வாதம்  ................................................................... "மகாவம்சம்  சிங்கம் என்ற சொல்லை மிருகத்தை குறிக்க பயன்படுத்தியதா அல்லது அந்த தன்மை மனிதன் (போன்ற) குறிக்க பயன்படுத்தியதா. " கட்டாயம் சிங்கத்தைக் [மிருகத்தைக்] குறிக்கத்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது தெளிவாக அங்கு தெரிகிறது  ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ]  "மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக்கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது ....  அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali]. [the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ...  love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ...  took her  upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.]   "வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது" [he came towards her with waving tail and ears laid back]   என்ற வரி தெளிவாக மிருகம் என்று சொல்லுகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை  ..................................................................... மகாவம்சம் அத்தக்கதா [Aṭṭhakathā - Buddhist Commentarial Literature / The word aṭṭhakathā is a general term, meaning exposition of the sense (aṭṭha = attha, Skt. artha), explanation, commentary.] Buddhist monks of Mahavihara, maintained this historical record of the Sri Lankan history starting from 3rd century B.C., some what similar to a modern day diary. These records were combined and compiled into a single document in the 5th century CE by Buddhist monk Mahathera Mahanama. There is evidence as per Wilhelm Geiger, there was another compilation prior to this known as “Mahavamsa Atthakatha” and Mahathera Mahanama relied on this text. Earlier document known as “Dipavamsa” also come down to us which is much simpler and contain less information than Mahavamsa, probably compiled using previously mentioned “Mahavamsa Atthakatha”?   ........................................... "சிங்களத்தில் இருந்த அத்தக்கதாவை  புத்தகோச பாளியில் எழுதிவிட்டு, சிங்கள மூலத்தை எரித்து விட்டததாகவும், ஏனெனில் சிங்களம் தெய்வ மொழி இல்லை என்றும் கருதப்படுகிறது' It is observed two groups of people in the 5th century A.D. – Hindus, speaking Tamil and the converts (Buddhists) speaking the new language (Sinhala).  There is a popular here say, emerged from the Later Burmese Biographical Text Buddhaghosuppatti ( perhaps as early as the 15th century) that Buddhaghosa Thera burnt ancient Sihala Atthakathas after he translated them into  Pali, introducing the Mula Bhasha [first language, primary language; epithet for Pali, the liturgical language of Theravada Buddhism. /  பாளி மொழியை வழிபாட்டு அல்லது தெய்வீக மொழியாக தேரவாத பௌத்தத்தில் கருதப்படுகிறது]  Please note that The Buddhaghosuppatti, a later biographical text, is generally regarded by Western scholars as being legend rather than history. So the text is not very reliable. Also It is not stated in Culavamsa [The Cūḷavaṃsa is a continuation of the Mahavamsa. But unlike the Mahavamsa it was written by different authors at different periods. / இதுவும்  பாளி மொழியில் தான் எழுதப்பட்டது / கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது] that he burned the scriptures , Though it contains the main account of Buddhaghosa’s life. ஆகவே உண்மையில் அவர் எரித்தாரா என்பதும் ஒரு கேள்விக்குறியே? Tradition regarding the Aṭṭhakathā [Buddhist Commentarial Literature by L. R. Goonesekere, BPS / Buddhist Publication Society, Kandy • Sri Lanka] The Ceylonese tradition regarding the aṭṭhakathā is that they were composed (in Pali, it is to be presumed) at the First Council (Saṅgīti) and rehearsed at the two following Councils. They were introduced to Ceylon by Mahinda who also, it is said, translated them into Sinhala. The earliest record of this tradition is contained in the introduction in Buddhaghosa’s commentaries. [“For explaining the meaning, the Commentary was originally recited by the 500 Masters (i.e. the Arahats assembled at the First Council) and was later rehearsed (at the two following Councils). Then it was brought to the island of the Sinhalese by the great Mahinda, the master (of Dhamma), and was rendered into the Sinhala language for the benefit of the island dwellers.”] It recurs in the accounts of Buddhaghosa contained in the Mahāvaṃsa  and the Saddhammasaṅgaha.  According to the Dīpavaṃsa  and the Mahāvaṃsa,  the commentaries (the Sinhala version, it is to be inferred) were put into writing in Ceylon along with the Pali canon in the reign of Vaṭṭagāmaṇī Abhaya in the first century B. C. The Mahāvaṃsa,  and Saddhammasaṅgaha  further state that, at the time of Buddhaghosa, the aṭṭhakathā (the original Pali) had disappeared in India. It is not known how far this statement was correct, but the original Pali aṭṭhakathā were not recorded in writing and no trace of them exists today. As will be seen, the Sinhala aṭṭhakathā put into writing in Vaṭṭagāmaṇī Abhaya’s time have also disappeared.
    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.