Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயின் கணச்சூடு

Featured Replies

தாயின் கணச்சூடு 
-----------------------------

பரபரப்பான நகர வாழ்க்கை (நரக வாழ்க்கை )  ஆதவன்  அதிகாலையில் எல்லோரையும் உட்சாகபடுத்தும் வண்ணம் எழுகிறான் அவனுக்கென தன் கடமையை தவறாமல் செய்கிறான் என்று முணுமுணுத்தபடி 
என்   கடமைக்கு ஆயத்தம் ஆகினேன் நான் . என் பெயரும் ஆதவன் ......!

என்  குடும்பம் ஒரு அழகான அளவான குடும்பம். எல்லோருக்கும்   காலை நேரம் என்றால் நகர புறத்தில் வீடு ஒரு போர்களம் தான் எல்லாவற்றையும் கவனித்து விட்டு வேலைக்கு போகும் முன் மேல் மாடியில் இருக்கும் என் அம்மாவிடம் முகத்தை காட்டிவிட்டு வேலைக்கு செல்வதுதான் ஆதவனின் வழமையான செயல். அம்மா " பூரணம் " எண்பது வயதை தாண்டி  வாழ்க்கையின் இறுதியோடு போராடும் ஆத்மா ஜீவன். அப்பாவை இழந்து மூன்று வருடங்களாக அவரின் நினைவுகளோடு புலம்பிக்கு கொண்டு  வாழும் அன்பு ஜீவன் ஆதவனின் அம்மா பூரணம் .

ஒரு நாள்  அம்மா " மகன் ஆதவா உன்னிடம் ஒரு விடயம் கேட்பேன் " நீ கோபிக்கவும் கூடாது 
இல்லை என்று மறுக்கவும் கூடாது நான் ஒன்றை கேட்கவா ஆதாவா என்று தயக்கத்தோடு என்னிடம் கேட்டார் . சொல்லுங்கம்மா என்ன விடயம் என்று நான் கேட்க . நான் கொஞ்ச நாள் என் சொந்த ஊரில் 
போய் வாழனும் என்று ஆசையாய் இருக்கடா என்னை கொண்டுபோய் ஊரில் விடுவாயா ...?
அப்பாதான் சொந்த ஊரில் கண்ண மூடல்ல நானென்றாலும் அங்கே .....என்று இழுத்தபடி கேட்டார் 
அம்மா .....!!!

சும்மா இருங்க அம்மா அங்கு யார் இருக்கினும் உங்களை பார்க்க..? பராமரிக்க..? இங்கே எண்டாலும் என் 
மனைவி என் பிள்ளைகள் கவனிக்கினும் அங்கே யாரம்மா இருக்கினம் உங்களை பார்க்க ..? இருந்த 
சொந்தங்கள் எல்லாம் யுத்தத்தால் புலம்பெயர்ந்து எங்க இருக்குதல் எண்டே தெரியல்ல . எனக்கு தொழிலை விட்டுட்டு வரவும் முடியாது .எப்படியம்மா சாத்தியமாகும் ..? நீங்க அங்கே போய் இருக்க ...?
என்று சொல்லியபடி அம்மாவின் ஆசைக்கு முற்றுபுள்ளி வைத்து விடை பெற்றேன் .

இரவு தூக்கதுக்கு போய் துங்க முடியல்ல .....அம்மாவின் ஆசையில் ஒரு ஆத்மா திருப்தி இருப்பதை உணர்ந்தேன் . அம்மாவை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்தேன் . அடுத்த நாள் அம்மாவிடம் 
சென்று உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறேன் ஒருமாதம் பொறுங்கள் பாடசாலை லீவு விடட்டும் 
சின்னம்மாவிடம் கேட்டு ஒரு சில நாட்கள் ஊரில் இருந்துவிட்டு வாருங்கள் . நானும் உங்களை அடிக்கடி 
வந்து பார்கிறேன். உங்கள் சந்தோசம் தானே அம்மா என் சந்தோசம் என்றேன் . அம்மாவின் முகத்தில் 
அப்படி ஒரு சந்தோசம் . அதை பார்த்ததில் எனக்கோ அளவற்ற சந்தோசம் .

அம்மாவின் சந்தோசமும் எனது சந்தோசமும் அந்த ஒரு மாதம் கூட நிலைக்க வில்லை .

ஆம் அம்மாவுக்கு திடீரென பாரிசவாதம் ஏற்பட்டது .ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாத நிலைக்கு 
போய் விட்டார் . தூக்கி நிறுத்தி அவரை சுத்தம் செய்வதெலாம் நான் பெற்ற பாக்கியம் என்று கருதி 
அம்மாவின் அன்போடு வாழ்ந்து வந்தேன் . அவர் பேசுவதும் புரியாது .நாம் பேசுவதும் அவருக்கு 
புரியாது அந்த நிலைக்கு வந்து விட்டார் என் அம்மா .

சில நாட்களில் அவர் கேட்கும் திறனையும் பார்க்கும் திறனையும் இழந்து விட்டார் . வைத்திய சாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படவே . நாட்கள் பல வைத்திய சாலையில் கழிந்து 
கொண்டே போயின . உற்றார் உறவினர் அயலவர் என்று பலர் வைத்திய சாலையில் அம்மாவை 
பார்ப்பதற்கு வந்து சென்றனர் . யார் வந்து செல்கிறார்கள் என்ன சொல்கிறார்கள் என்று எதுவுமே 
தெரியாத அந்த உச்ச கட்டத்தில் அம்மா வந்து விட்டார் . கண்கள் மூடிய நிலை தொடர்ந்தது .
யார் அருகில் சென்று தொட்டாலும் ஒரு உணர்வும் இல்லாத நிலையில் அம்மா .

வைத்தியர்கள் கைவிட்ட நிலை . ஒரு பேச்சு கூட பேசாத நிலை . அன்று நான் அம்மாவின் அருகில் சென்று அம்மாவின் கையை பிடிந்தேன் . அதுவரையும் மூடியிருந்த கண் .மெல்ல விலகியது .
அதுவரை பேசாமல் இருந்த உதடு அசைந்தது . அசையாமல் இருந்த கைகள் மெல்ல அசைந்தன .
நான் மெல்ல மேலும் அழுத்தினேன் . 

யாரது ..? ஆதவனா ...? என்று கேட்டுவிட்டு என் கையை இறுக்க அழுத்தியபடி கண்ணின் ஓரத்தில் 
சிறு துளி வர மீண்டும் கண்ணை மூடினார் அம்மா . அதன் பின் மீண்டும் திறக்கவே இல்லை .
எத்தனை உறவுகள் எத்தனை சொந்தங்கள் வந்தெல்லாம் என் அம்மாவை தொட்டபோது கண் திறக்காத 
அம்மா .ஒரு சொல் கூட பேசாத அம்மா . நான்  அம்மாவின் கையை பற்றிய போது எப்படி நான் ஆதவன் 
என்று கண்டு பிடித்தார் ...? அதுதான் தாய் . அதுதான் தொப்புள் கொடி உறவு  . ஒரு குழந்தை பிறந்தபோதும்  தாய் தூக்கும் போதும்  ஒரு கணச்சூடு ஏற்படும் .அந்த கணச்சூடுதான் தாயின் இறுதி காலம் வரை பிள்ளையோடு பிண்ணி பிணைந்திருக்கும் .அந்த கணச்சூடுதான் என்னை அம்மாவுக்கு உணரவைத்தது என்றுதான் சொல்வேன் .

அம்மாவின்   எல்லா ஆசையையும் நிறைவேற்றினாலும் அம்மாவின் இறுதி ஆசை தன் ஊரில் இறுதி 
மூச்சு போகவேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போனதை இட்டு வேதனை பட்டு கொண்டிருக்கிறேன் இந்த நிமிடம் வரை ...எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நிறைவேறாத ஆசை 
இருந்தே ஆகும் என்பது உண்மைதான் ....!!!

------------

திரு.இனியவன் அவர்கள் (சிறுகதை எண்.1) எழுதிய சிறுகதை  மூன்றாம்  இடத்தை பிடிப்பதோடு பரிசுத்தொகையான ரூ.1000 பெறுகிறார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

தமிழ் சேனை உலா தளம் நடார்த்திய போட்டியில் 
3ம் இடத்தை பெற்ற சிறுகதை

  • 2 weeks later...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள் இனியவன். உங்கள் படைப்புகளை யாழிலே மேலும் தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பரிசுத்தொகை பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ...யாழில் உங்கள் படைப்புக்கள் தொடர வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இது போலொரு துன்பத்தை சில மாதங்களின் முன் நானும் எனது தாயாரூடாக அனுபவித்திருந்தேன்...!

 

தொடர்ந்து எழுதுங்கள் இனியவன்...!!

  • கருத்துக்கள உறவுகள்

மனதை.. நெகிழ வைத்த கதை. இனியவன்.
எனது  பெற்ரோரையும்..... மூன்று மாத விசாவுடன் இங்கு வரவழைத்தேன்.
வந்த முதல் மாதம் சந்தோசமாக இருந்தார்கள்.....
பின்பு.... ஊர் போல் வராது.... தாங்கள் அங்கு போகப் போகின்றோம் என்று... ஆசைப் பட்டார்கள்.
 

ஏன், என்று கேட்ட போது....
தாங்கள்... தங்களது வயதினை ஒத்த.... அயலவரை, நண்பர்களை, உறவினர்களை பிரிந்து இருப்பது தங்களுக்கு.... மிகுந்த மன வேதனையாகவும், வீட்டில் வளர்த்த ஆடு, மாடு, நாய், பூனை, கோழிகள்...... தங்களை தேடும் என்று சொன்னார்கள்.

 

அப்பா... அதிரடியாக, தான் செத்தாலும்.. தன் உடலை கோம்பையன் மயானத்தில் தான் எரிக்க வேண்டும்,

என்று சொல்லி என்னை பயப் படுத்தி விட்டார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கதை கற்பனையா உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் பலருக்கு இப்படி நடந்திருக்கும் என்றுதான் நினைக்கின்றேன்.

எல்லோருக்கும் பிறந்து வளர்ந்த பூமியில்தான் இறுதிக்காலத்தில் வாழவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் போரினால் இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்தவர்கள் பலர் தமது இறுதிக்காலத்தை சொந்த ஊரில் கழிக்காமலேயே மரணத்தையும் தழுவிக்கொள்கின்றார்கள்.

தாயை ஒருமுறை தாயகத்திற்கு கூட்டி சென்றிருக்கலாம்.... நல்ல படைப்பு... :)

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு படைப்பு வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • தொடங்கியவர்

நன்றாக எழுதி இருக்கிறீர்கள் இனியவன். உங்கள் படைப்புகளை யாழிலே மேலும் தாருங்கள்.

நிச்சயம் தொடர்வேன் 

பரிசுத்தொகை பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ...யாழில் உங்கள் படைப்புக்கள் தொடர வாழ்த்துக்கள்

நிச்சயம் தொடர்வேன் 

இது போலொரு துன்பத்தை சில மாதங்களின் முன் நானும் எனது தாயாரூடாக அனுபவித்திருந்தேன்...!

 

தொடர்ந்து எழுதுங்கள் இனியவன்...!!

நிச்சயம் இது அதிகம் பேருக்கு ஏற்படும் 
தவிர்க்க முடியாத துன்பம் 

மனதை.. நெகிழ வைத்த கதை. இனியவன்.

எனது  பெற்ரோரையும்..... மூன்று மாத விசாவுடன் இங்கு வரவழைத்தேன்.

வந்த முதல் மாதம் சந்தோசமாக இருந்தார்கள்.....

பின்பு.... ஊர் போல் வராது.... தாங்கள் அங்கு போகப் போகின்றோம் என்று... ஆசைப் பட்டார்கள்.

 

ஏன், என்று கேட்ட போது....

தாங்கள்... தங்களது வயதினை ஒத்த.... அயலவரை, நண்பர்களை, உறவினர்களை பிரிந்து இருப்பது தங்களுக்கு.... மிகுந்த மன வேதனையாகவும், வீட்டில் வளர்த்த ஆடு, மாடு, நாய், பூனை, கோழிகள்...... தங்களை தேடும் என்று சொன்னார்கள்.

 

அப்பா... அதிரடியாக, தான் செத்தாலும்.. தன் உடலை கோம்பையன் மயானத்தில் தான் எரிக்க வேண்டும்,

என்று சொல்லி என்னை பயப் படுத்தி விட்டார்.

உண்மை அவரவருக்கு சொந்த பூமி சொர்க்க வாசல் 

கதை கற்பனையா உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் பலருக்கு இப்படி நடந்திருக்கும் என்றுதான் நினைக்கின்றேன்.

எல்லோருக்கும் பிறந்து வளர்ந்த பூமியில்தான் இறுதிக்காலத்தில் வாழவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் போரினால் இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்தவர்கள் பலர் தமது இறுதிக்காலத்தை சொந்த ஊரில் கழிக்காமலேயே மரணத்தையும் தழுவிக்கொள்கின்றார்கள்.

உண்மை அவரவருக்கு சொந்த பூமி சொர்க்க வாசல் 

தாயை ஒருமுறை தாயகத்திற்கு கூட்டி சென்றிருக்கலாம்.... நல்ல படைப்பு... :)

அப்போதைய சூழலில் முடியவில்லை 
இப்போவரை வதைக்குது 

நல்லதொரு படைப்பு வாழ்த்துக்கள் தொடருங்கள்

நிச்சயம் தொடரும் 
உறவுகள் அனைவருக்கும் நன்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.