Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா சிங்களவருக்கே சொந்தம்; தமிழருக்கு உரிமையில்லை – என்கிறது சிங்கள அமைப்பு

Featured Replies

சிறிலங்கா சிங்களவருக்கே சொந்தம்; தமிழருக்கு உரிமையில்லை – என்கிறது சிங்கள அமைப்பு MAY 21, 2015 | 3:37by புதினப்பணிமனைin செய்திகள்

Flag-sinhala-300x200.jpgசிறிலங்கா சிங்களவருக்குரிய நாடு என்பதால், தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவம் நீக்கப்பட்ட சிங்களக்கொடியே நாட்டின் தேசியக்கொடியாகப் பயன்படுத்தவேண்டும் என்று சுவர்ண ஹங்ச பதனம என்ற சிங்கள அடிப்படைவாத அமைப்பின் தலைவர் கால்லகே புண்ணியவர்தன தெரிவித்தார்.

கொழும்பில், நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், “சிங்களவர்கள் ஒருபோதும் இலங்கையர்களாக அடையாளப்படுத்தப்பட கூடாது. சிங்களவர் என்ற பெயரிலேயே அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

ஏனையோர் சிறுபான்மையினத்தவராகவே அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

ஆங்கிலேயரிடம் இருந்து சிறிலங்கா சுதந்திரம் அடைந்தபோது, இந்த நாட்டில் தமிழருக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறியே சிங்களவர்களிடம் நாட்டை ஒப்படைத்தனர்.

அதனால் சிங்களவர்களின் தேசியக்கொடியையும், தேசிய கீதத்தையும் நாட்டில் வேறு எந்த இனத்திற்கும் வழங்குவதை எம்மால் அனுமதிக்க முடியாது.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது சிங்களவர்களை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் கொடிகளை ஏந்திக் கொண்டிருந்தமையிலும் எவ்வித தவறும் இல்லை.

நாட்டின் தேசியக்கொடி சிங்களவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக மட்டுமே அமைய வேண்டும்.

தமிழ், முஸ்லிம் இனங்கள் மட்டுமின்றி வேறு எந்த இனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையக் கூடாது.

தமிழ், முஸ்லிம், சிங்களவர் என்ற மூன்று இனத்தவரையும் ஒன்றிணைத்து சிங்களவர் என அடையாளப்படுத்தக் கூடாது.

சிங்கள மக்களை சிங்களவர் என்றும் ஏனைய இனத்தவரை சிறுபான்மையினர் என்றுமே அடையாளப்படுத்த வேண்டும்.

இன்று அரசாங்கம் நாட்டின் சிங்கள மக்களின் உரிமையை பாதுகாப்பதில்லை.

இந்தநிலை தொடர்ந்தால் தமிழர் சிங்கள புத்தாண்டைத் தமதாக்கிக் கொண்டது போன்று நாட்டையும் தமதாக்கிக் கொண்டு பெரும்பான்மையாகவும் தன்னை அடையாளப்படுத்தி கொள்வர்.

13 ஆவது திருத்தத்தில் நாட்டின் அரசியல் தலைமைகள் செய்த பிழையினாலேயே தமிழர்கள் தமது உரிமைகள் என்ற பெயரில் நாட்டை கோருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/05/21/news/6388

வார்த்தையால் உதிர்த்தபின்பும் பின்னால் செல்வது கையால் ஆகாத்தனம்

 

இவர் மாத்திரம் வெளிப்படையாக பேசுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
சொன்னால் நம்ப மாட்டீர்கள் இந்த திரியில் இருக்கும் செய்தியை வாசித்து விட்டு அதில் சம்பந்தப்பட்டவருடைய 
பெயரை கூகிளில் சும்மா தட்டிப்பார்த்தேன் "கால்லகே புண்ணியவர்தன " என்ற பெயரே அது.
 
உடனடியாக கிடைத்த விடயம் ஒரு தொகுதி ஸ்ரீ லங்கா இராணுவத்தினரின் பெயர், விலாசம், அடையாள அட்டை எண்கள், அவர்கள் படித்த பாடசாலைகள், மற்றும் எதோ ஒரு தேர்வில் அவர்கள் பெற்ற புள்ளிகள் என அனைத்தும் இரகசியமாக பேணப்படும் தகவல்கள் அடங்கிய ஒரு எக்ஸ்செல் கோர்ப்பு ....
6076 இராணுவ சிப்பாய்களின் பிரத்தியேக தகவல்கள்...
இதில் எத்தினை பேர் போர் குற்றதில் நேரடியாக ஈடுபட்டார்களோ?  :o  :o  :o  :o  :unsure:  :unsure:  :unsure:
  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் தமிழர்களும்  சொல்கிறார்கள்..

 

எங்கள் தேசம் தமிழீழம் என்று..

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிங்களவர் அப்படி பேசுகிறார் என்பதால் அத்தனை சிங்களவர்களையும் அதில் அடக்கக்கூடாது 
ஒரு இராணுவத்தினன்  போர் குற்றம் செய்தால் முழு ராணுவமும் போர் குற்ற இராணுவமா ....?
புத்த பெருமான் தமிழுக்கு செய்த தொண்டுகள் எத்தனை ...? எனவே எல்லா தமிழர்களும் புத்தனையும் தமது கடவுளாக வணங்க வேண்டும் ...... இப்படி செய்து  எங்கடை சிங்கள எஜமான்களை குளிர்வித்து ...பின் கதவு முன் கதவு சம் சும்களுடன் ஒரு சீரிய பாதையை அமைத்து மனித உரிமை அமைப்புகளையும் எமது பாதையில் சேர்த்து எமக்கான தீர்வினை அடையவேண்டும் 

அதை விட்டு சும்மா காட்டு தர்பார் கோஷ்ட்டிகளுடன் சேர்ந்து நேரத்தை வீணடிக்க கூடாது  :lol:  :lol: 

சொல்லிட்டோம்ல ...தீர்வு சொல்லிட்டோம்ல 

புண்ணியவர்தனவின் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை அல்ல. இலங்கை அரசியல் யாப்பின் ஆரம்பத்தில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சிங்களமே தேசிய மொழியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த உண்மை சம்பந்தன் சுமந்தி கோஸ்டிக்கு எப்பவோ தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உண்மை சம்பந்தன் சுமந்தி கோஸ்டிக்கு எப்பவோ தெரியும்.

 

அன்ட் தமிழ்மாறன் கோஸ்டிக்கும்

எனக்கு ஒரு சந்தேகம், சிங்களவங்க ஆரிர்களா? 

 

எனக்கு அப்பிடி படலியே..

 

சிங்களம் என்னமோ ஆரியகலப்புத்தான் அதுல சந்தேகம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம், சிங்களவங்க ஆரிர்களா?

எனக்கு அப்பிடி படலியே..

சிங்களம் என்னமோ ஆரியகலப்புத்தான் அதுல சந்தேகம் இல்லை.

சிங்கள எழுத்துருவுக்கும், தென்னிந்திய எழுத்துருக்களுக்கும் ஒற்றுமைகள் உள்ளன.

திருவள்ளுவர் எழுதிய எழுத்துருவில் நம்மால் திருக்குறளை வாசிக்க முடியாதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பட்ட இனவாதக்கூச்சல் அப்பாவிச்சிங்கள மக்களை உசுப்பேற்றுதோ இல்லை தமிழ் இனவாதிகளை நல்லா உசுப்பேத்துது :)

காய்ஞ்சு போய் கிடந்த வாய்களுக்கு புண்ணியவர்தன அவல் போட்டுப்போயுள்ளார் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிப் பட்ட இனவாதக்கூச்சல் அப்பாவிச்சிங்கள மக்களை உசுப்பேற்றுதோ இல்லை தமிழ் இனவாதிகளை நல்லா உசுப்பேத்துது :)

காய்ஞ்சு போய் கிடந்த வாய்களுக்கு புண்ணியவர்தன அவல் போட்டுப்போயுள்ளார் :)

 

இதயத்தாலை இணையிற சிந்தனைகள் இரத்தத்திலை ஊறினவைக்கு என்னெண்டு தமிழன் எண்ட உணர்ச்சி எப்பிடி வரும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.