Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்தியாவுக்காக விசேட நீதிமன்றமா? ஏற்க முடியாதாம் ஞானசாரதேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வித்தியாவுக்காக விசேட நீதிமன்றமா? ஏற்க முடியாதாம் ஞானசாரதேரர்
d9daee0c4cbfc7309a4729f2246816e1.jpg

வடக்கில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கை விசாரிக்க விசேட நீதிமன்றம் எதுவும் தேவையில்லை. இதனை ஏற்கவும் முடியாது" என்று  பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

 
 
கிருலப்பனையில் அமைந்துள்ள அந்த அமைப்பின் தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
இந்தக் கொலையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆனால் விசேட நீதிமன்றம் ஊடாக விசாரணை நடத்துவதை ஏற்க முடியாது. இரத்தினபுரியின் கொட்டகதவில் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அப்போது விசேட நீதிமன்றங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை. வடக்கிற்கு ஒரு நீதியும் தெற்கிற்கு இன்னொரு நீதியும் அமுல்படுத்த முடியாது. முழு நாட்டுக்கும் ஒரே நீதியே இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=270534055028887462#sthash.5I5gU2O4.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கிற்கு ஒரு நீதியும் தெற்கிற்கு இன்னொரு நீதியும்
வடக்கிற்கு ஒரு கடவுள் தெற்கிற்கு ஒரு கடவுள் இருக்கும் பொழுது ஏன் நீதி மட்டும் அப்படி இருக்க முடியாது :D
  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக்குப் பக்கத்தில 7 கோடித் தமிழன் இருக்கிறான். தெற்குக்குப் பக்கத்தில இந்து சமுத்திரம் தான் இருக்குது. எனியும் தமிழன் சும்மா கிடப்பானுன்னு எதிர்பார்க்கக் கூடாது தேரர். 2002 நிலைமையை யோசிச்சுப் பார்க்கனும். வடக்கில் இருந்து ஓடவும் வழியில்லாமல்.. இந்தியாவிடம் நடுக்கிச் செத்ததை. தமிழன் அப்படி இல்லை. வீரம் மானம் என்று மண்ணோடு மடிந்தான். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்லிறதுக்கு 7 கோடி எண்டால் நல்லா இருக்கும். இப்படி ஒரு வன்முறை சொந்த இடத்துக் காடையர் கும்பலினால் நடாத்தப்பட்டது எண்டு 70 அல்ல 7 பேருக்குத் தெரியுமோ தெரியாது! தமிழன் மானம் ஆயுதங்களை மவுனிக்கிறம் எண்டு கெஞ்சி முடியாதவிடத்து தேநீர் வாங்கிக் குடித்து காப்பாற்றப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ எங்களை மீளுங்கோ என்று புலித் தலைமை கேட்கவில்லை. சந்திரிக்கா கெஞ்சினார். 40,000 படையை காப்பாத்துங்கோன்னு. புலிகள் மக்களையும் கடைநிலைப் போராளிகளையும் அரசியல் போராளிகளையும்..காக்கவே ஆயுத மெளனிப்பு.. சர்வதேச அணுசரணையுடன் கூடிய சரணடைவுக்கு முன் வந்தார்கள். அந்த நிலையில்.. அது தான் மனித உயிர்களைக் காக்க உதவும். சிங்களம் அதன் படையைக் காக்க கெஞ்சியது. புலிகள் மக்களைக் காக்க கெஞ்சினார்கள். அதுதான் வேறுபாடு. இருந்தும் மக்களை காக்க ஒருத்தரும் வரேல்ல. தமிழகம் மட்டுமே கொந்தளித்தது. கருணாநிதி என்ற வஞ்சகன் அதையும் அடக்குமுறை அதிகாரங்களால் அடக்கினார். எனி அப்படி ஒரு நிலையை தமிழகம் உருவாக்குமா.. அதனை நாம் தமிழரென நிமிரும் தமிழக மக்கள் அனுமதிப்பார்க்களா.. பொறுத்திருந்து பார்க்கலாம். :icon_idea:

ஐயோ எங்களை மீளுங்கோ என்று புலித் தலைமை கேட்கவில்லை. சந்திரிக்கா கெஞ்சினார். 40,000 படையை காப்பாத்துங்கோன்னு. புலிகள் மக்களையும் கடைநிலைப் போராளிகளையும் அரசியல் போராளிகளையும்..காக்கவே ஆயுத மெளனிப்பு.. சர்வதேச அணுசரணையுடன் கூடிய சரணடைவுக்கு முன் வந்தார்கள். அந்த நிலையில்.. அது தான் மனித உயிர்களைக் காக்க உதவும். சிங்களம் அதன் படையைக் காக்க கெஞ்சியது. புலிகள் மக்களைக் காக்க கெஞ்சினார்கள். அதுதான் வேறுபாடு. இருந்தும் மக்களை காக்க ஒருத்தரும் வரேல்ல. தமிழகம் மட்டுமே கொந்தளித்தது. கருணாநிதி என்ற வஞ்சகன் அதையும் அடக்குமுறை அதிகாரங்களால் அடக்கினார். எனி அப்படி ஒரு நிலையை தமிழகம் உருவாக்குமா.. அதனை நாம் தமிழரென நிமிரும் தமிழக மக்கள் அனுமதிப்பார்க்களா.. பொறுத்திருந்து பார்க்கலாம். :icon_idea:

 

 

o016r7.jpg

 

முடியல்ல சாமி

வித்தியா வன்புணர்வு ஒரு அனைத்துலக வியாபார முயற்சி – விடமாட்டோம் என்கிறது அரசாங்கம் MAY 29, 2015 | 2:51by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

rajitha-senaratne-300x200.jpgபுங்குடுதீவில் மாணவி வித்தியாவை வன்புணர்வுக்குட்படுத்தி, அந்தக் காட்சிகளை வெளிநாட்டுக்கு விற்கும் முயற்சியே நடந்துள்ளது என்றும், இதுகுறித்து சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன.

கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர்,

“மாணவி வித்தியா சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சாதாரண சம்பவமாக கணிக்க முடியாது.

நாட்டில் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ள பாலியல் வன்முறை சம்பவங்களைப் போன்று இதனை கருத முடியாது.

திட்டமிட்டு வெளிநாடுகளிலிருந்து வந்து மாணவியை சீரீழித்து அதனை ஒளிப்பதிவு செய்து அனைத்துலகத்துக்கு அனுப்பும் ஒரு வியாபார முயற்சியே நடந்தேறியுள்ளது.

இதற்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டியது அவசியம்.

முதலில் இந்தியாவில் இவ்வாறான திட்டமிட்ட வியாபாரம் இடம்பெற்றது. தற்போது இலங்கைக்கும் வந்துள்ளனர்.  இதனை சாதாரண விடயமாக கருதவே முடியாது.

இந்த விடயத்தில் அரசாங்கம் மிகவும் கவனமாக உயர்ந்த மட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்கும்.

இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை. இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தே தீருவோம்.” என்று தெரிவித்தார்.

முன்னதாக, மாணவி வித்தியா கொலை தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைக்கத் தேவையில்லை என்றும், அதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், பொது பலசேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேர்ர் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/05/29/news/6579

இப்போ வித்தியாவின் வ.பு கொலையயை அரச இயந்திரம் வெளி நாட்டுத்தமிழர் மீது திட்டமிட்டு திணிக்கப் பார்க்கின்றது.திரை மறைவில் ஒரு சக்தி இயங்குவதை யாராலும் மறுக்க முடியாது

 

  • கருத்துக்கள உறவுகள்

d9daee0c4cbfc7309a4729f2246816e1.jpg

 

இந்த, ஞானசார தேரரின்... மனைவியும், இரு வயது வந்த பெண் பிள்ளைகளும்... பிரான்ஸில் வசிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 அதைத்தான் தேரரே நாங்களும் சொல்லுறோம். தெற்கிலிருந்த கொள்ளை நோயெல்லாம் வடக்கிற்கு பரவிற்றெண்டு. ஆமா, நீதிமன்ற விசாரணை எண்டா ஏன் இந்தாள் இப்படி நடுங்குது? 

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமிக்கு வெளிநாடுகளால் கொடுக்கப்பட்ட பணம் புலிகளுக்கு போய் விடும் என்று பயம் காட்டி நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அவசர அவசரமாக அரசுக்கு சார்பாக முடிவு வழங்கப்பட்டு தமிழ் மக்களுக்கு எந்த பணமும் போகாமல் செய்தவர்கள் இதே இனவாத கூட்டம் தான் இன்றும் சிறப்பு நீதிமன்றம் தேவை இல்லை என்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.