Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சர் ஓரங்கட்டப்படுகின்றாரா? தமிழரசுக்கட்சியின் சதி ஆரம்பம்!!

Featured Replies

வடமாகாண முதலமைச்சர் தமிழரசுக்கட்சியின் தலைமையினால் அச்சுறுத்தப்பட்டு மௌனிக்கப்பட்டுள்ளதாக  உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையினில் முதலமைச்சரினை அவசரமாக சந்தித்த தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன்,சரவணபவன் தரப்பு அவருடன் காரசாமான விவாதத்தினை நடத்தியுள்ளது.

ஒரு சந்தர்ப்பத்தினில் முதலமைச்சர் பதவி நான் தந்த பிச்சையென மாவைசேனாதிராசா சொல்லிவிட சீற்றமுற்ற முதலமைச்சர் நான் கதிரை கட்டிப்பிடித்து கொண்டிருக்கும் ஆள் அல்ல ராஜினாமா செய்துவிட்டு போய்விடுவேனென பதிலளித்துள்ளார்.கூட வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே முதலமைச்சரினை சாந்தப்படுத்தியுள்ளனர்.பதிவு இணைய செய்தி

இதனிடையே முதலமைச்சர் விவகாரத்தினில் உள்கட்சி முரண்பாடுகளை கடந்து மற்றைய கட்சிகளும் மாவை சேனாதிராசா பக்கம் நிற்பதாக கூறப்படுகின்றது.குறிப்பாக ரணில் அரசிடம் நிதி பெற்ற விடயத்தை முதலமைச்சர் போட்டுடைத்தமையால் தர்மசங்கடத்திற்குள்ளாகியுள்ள பிற கட்சி தலைவர்களும் மாவையை தூண்டிவிட்டதாக தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.பதிவு இணைய செய்தி

அரசிடம் நிதி பெற்றமை தொடர்பினில் முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கு விளக்கம் கோரி மாவை.சேனாதிராசா அனுப்பிய கடிதத்திற்கான பதில் மாவையை சென்றடைய முன்னதாகவே ஊடகங்களை சென்றடைந்திருந்தது.இதனால் மாவை கடும் சீற்றங்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.நேரடியாக முதலமைச்சரினை சந்தித்த வேளை இதனை மாவை பிரஸ்தாபித்துள்ளார்.எனினும் எதனையும் வெளிப்படை தன்மையுடன் செய்ய முற்படும் விக்கினேஸ்வரன் இதில் இரகசியமென எதுவுமில்லையென வாதிட்டுள்ளார்.பதிவு இணைய செய்தி

இத்தகைய வாதத்தினை தொடர்ந்தே முதலமைச்சரினை ஓரங்கட்டும் நடவடிக்கையினை இத்தரப்புக்கள் ஆரம்பித்திருப்பதாகவும் வடமாகாண அமைச்சர்கள் கூட முதலமைச்சரிற்கு தோள் கொடுக்க தயாராக இல்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.பதிவு இணைய செய்தி

இந்நிலையினில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பின் எவரையும் ஆதரிக்காத  முடிவினை முதலமைச்சர் எடுக்கலாமெனவும் ஒதுங்கியிருந்து வேடிக்கை மட்டும் பார்க்க அவர் விரும்பவதாகவும் நெருங்கியவட்டாரங்கள் கூறுகின்றன. ஆனாலும் முதலமைச்சரது ஆதரவை பெற்றால் மட்டுமே வெற்றியினை தக்க வைக்க முடியுமென சில தரப்புக்கள் வலியுறுத்தி வருவதுடன் அவை தொடர்ந்தும் அவருடன் உறவை பேணவும் முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பதிவு http://www.pathivu.com/news/41045/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முதல்வரே எதிர்காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவராக வரவேண்டும்.

அப்ப சங்கு தான் இந்த முறை மாவைக்கு ... 

எது எப்புடியோ... உந்த அச்சுறுத்தலுக்கு பயந்து மௌனிதிருக்கிறார் என்பது பேய் கதை

விக்கி ஐயா தான் கூட்டமைப்பு தலைமைக்கு சரியான ஆழ்

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி தமிழரசுக் கட்சி சார்ந்தவரல்ல. ஏலவே இதனை அவர் குறிப்பிட்டிருக்கிறார். மாவை இவர்கள் மீது செல்வாக்குச் செய்யத்தக்க அளவுக்கு அரசியல் பலம் பொருந்திய ஒரு தலைவரும் அல்ல. !!

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையா என்று இன்னும் தெரியவில்லை 
ஆனால் உண்மையாக இருப்பின் இந்த முறை கூத்தமைப்பிட்கு ஓட ஓட செருப்படி விழும்  
....பார்த்துக்கொண்டு தான் வருகிறோம் 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் தலைமைக்கான போட்டி இப்போதே ஆரம்பித்து விட்டது.
சம்பந்தர் தனது ராஜதந்திரச் செயற்பாட்டினால் எப்படியும் விக்கினேஸ்வரனை ஓரங்கட்ட வைத்து விடுவார்.

சதியும் இல்லை சொதியும் இல்லை, உந்த அடிமட்ட ஊடகம் கிளப்பும் புளரிதான் இது. 

இதைபற்றி தாயக தமிழ் ஊடகங்கள் பிரசுரிக்காததை உந்த ஊடகம் பிரசுரிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பொய்செய்தி போட ஒரு ஊடகம். அதைப் பொய் என்று தெரிந்தும் சொல்ல திராணியில்லாமல் கருத்தெழு சில மேல்மக்கள் :)

மிரட்டலுக்கு பயந்து அரசியல் செய்ய விக்கி ஒன்றும் மாவை இல்லை.

மிரட்டி அரசியல் செய்விக்க மாவயும் ஒன்றும் பிரபா இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியான செய்திகள் எழுதிறதை விட மாமா வேலை செய்து உழைக்கலாம்.

இப்பிடி கட்டுக்கதை விட்டு கூட்டமைப்புக்குள் பிளவு கொண்டுவரவேண்டும் என்பதே உந்த பத்திரிகைகளின் நோக்கம். கூட்டமைப்பு பிளவுபட்டால் தமது ஆதரவு தரப்புக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதற்காக இப்படி கேவலமான ஒரு பிரச்சாரத்தை இந்த ஓணான் ஊடகம் செய்கிறது.

அன்னக்காவடிகளை கழட்டி விடும் நோக்கிலேயே விக்கியாரையும் சம்பந்தர் கொனந்தார், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தான் தீர்வு ஏன்பதில் விக்கியார் இன்னும் விலகியதாக இல்லை.

கட்சியரசியலோ, நாடாளுமன்ற கனவோ எதுவுமே இல்லை என்று விக்கியார் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டார். அதுமாத்திரம் இல்ல இமுடிந்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் புலம்பெயர் அமைப்புகள் விக்கியாரோடு தொடர்பை ஏற்படுத்தட்டும் பார்ப்போம்.

அநேகமான அமைப்புக்களை அவர் திண்டவே மாட்டார் என்பது எனது கருத்து.

 

 

 

Edited by Sooravali

வாலுகளின் ஒரே நோக்கம் தங்களால் முடியாமல் போனதால் இனி எவர் எது செய்தாலும் அதை சிதைப்பதுதான் .

கூட்டமைப்பை  உடைக்க அவர்கள் எடுக்கும் பிரயத்தனங்களில் ஒன்று தான் ஊடகங்களில் சிறு விடயங்களை ஊதி பெருப்பிப்பது .கூட்டமைப்பிற்குள் பிரச்னை இல்லாமல் இல்லை ஆனால் இங்கிருந்து கொண்டு அதன் அடுத்த தலைவர் தொடக்கம் அவர்கள் செய்ய வேண்டியது என்ன என்று தாங்கள் தீர்மானிக்க முயல்வது .

புலிகள் இல்லை என்பதையும் தங்களுக்கு எதுவித குரலும் இல்லை என்பதையும் மறந்து விடுகின்றார்கள் .பாவங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரேயொரு மடிக்கணணியோடு ஒரு குட்டிச் சுவரில் உட்கார்ந்திருந்து தனி ஒருவரே பல பெயர்களில் செய்தி பிரசுரிக்கும் தமிழ் ஊடகத் துறையின் அவல நிலை இது தான்! எதையும் எழுதலாம்! பொறுப்புக் கிடையாது, ஆதாரம் அவசியமில்லை, liability கிடையாது!. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியில் உள்ளது உண்மையா இல்லையா என்பது பிரச்சனையா?
அல்லது கூட்டமைப்பின் ஒற்றுமை சிறிது சிறிதாக கலைகின்றது என்று கவலையா ?

கூட்டமைப்பின் கூத்துக்கள் பல வெளிவராமலே மூடி மறைக்கப்படும் வேளையில் விக்கினேஸ்வரன் போன்றவர்களால் வெளிவருவதும் பலருக்குப் பிரச்சனையாகத்தான் இருக்கும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியில் உள்ளது உண்மையா இல்லையா என்பது பிரச்சனையா?
அல்லது கூட்டமைப்பின் ஒற்றுமை சிறிது சிறிதாக கலைகின்றது என்று கவலையா ?

கூட்டமைப்பின் கூத்துக்கள் பல வெளிவராமலே மூடி மறைக்கப்படும் வேளையில் விக்கினேஸ்வரன் போன்றவர்களால் வெளிவருவதும் பலருக்குப் பிரச்சனையாகத்தான் இருக்கும் :lol:

வாத்தியார், கவலை ஒற்றுமை குலைகிறதே என்றல்ல! உண்மையா பொய்யா என்று உறுதி செய்ய முடியாத செய்திகளால் ஒற்றுமை இருந்தாலும் குலைந்து விடும் என்பதே கவலை!

மற்ற படி ஒரு ஜனநாயக அமைப்பில் ஒருவரோடு ஒருவர் கருத்துகளால் முரண்படுதல் தவறல்ல! ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இந்த கருத்து வேற்றுமைகள் அமைப்புக்கு ஆரோக்கியமானது தான்.

இப்பிடியான செய்திகள் எழுதிறதை விட மாமா வேலை செய்து உழைக்கலாம்.

வாலுகளின் ஒரே நோக்கம் தங்களால் முடியாமல் போனதால் இனி எவர் எது செய்தாலும் அதை சிதைப்பதுதான் .

கூட்டமைப்பை  உடைக்க அவர்கள் எடுக்கும் பிரயத்தனங்களில் ஒன்று தான் ஊடகங்களில் சிறு விடயங்களை ஊதி பெருப்பிப்பது .கூட்டமைப்பிற்குள் பிரச்னை இல்லாமல் இல்லை ஆனால் இங்கிருந்து கொண்டு அதன் அடுத்த தலைவர் தொடக்கம் அவர்கள் செய்ய வேண்டியது என்ன என்று தாங்கள் தீர்மானிக்க முயல்வது .

புலிகள் இல்லை என்பதையும் தங்களுக்கு எதுவித குரலும் இல்லை என்பதையும் மறந்து விடுகின்றார்கள் .பாவங்கள் .

இப்படி பொய்செய்தி போட ஒரு ஊடகம். அதைப் பொய் என்று தெரிந்தும் சொல்ல திராணியில்லாமல் கருத்தெழு சில மேல்மக்கள் :)

மிரட்டலுக்கு பயந்து அரசியல் செய்ய விக்கி ஒன்றும் மாவை இல்லை.

மிரட்டி அரசியல் செய்விக்க மாவயும் ஒன்றும் பிரபா இல்லை.

அய்யோ, அய்யய்யோ, வெளிநாடுகளுக்கு குத்திகளோடு சேர்த்து எறியப்பட்ட சோத்துப்பாசல்களில் இருந்து கிளம்பும் கொசுத்தொல்லைகள் தாங்கவே முடியலைப்பா!

சில கிழமைகளுக்கு முன்னுக்கு சுரேசு, சிவாசிலிங்கம் என பலதுகள் இரகசிய பேச்சுவார்த்தை, ஒப்பந்தங்கள் என  கூக்குரலிட்டத்தள்ளியது. சரி அதை உதுகளின் பாசையில் "தமிழரசுக்கட்சி கணக்கில் எடுப்பதில்லை" என விடுவோம்.

ஒண்டிரண்டு நாளுக்கு முன் தான்

1) கூத்தமைப்பு எம்பிகள் ரணிலுடன் டீல் போட்டு (என்ன டீல் என்பதின் உண்மைகளை இவர்கள் அவிழ்ப்பார்களா?) பணம் பெறுகிறார்கள் என்று விக்கி கத்தினார்.

2) ஐயோ அப்படியொன்றுமில்லை, விக்கிக்கு கேட்கிறமாதிரி கேட்டு ஓர் பட்டோலை அனுப்பப்போகிறோம் என அன்று இரத்திலகங்கள் தடவிய மாவை!

ஆமா, உது குத்துப்பாட்டின் உச்சமாக ஊடகங்களுக்கு வந்ததில்லையோ? விட்டால் விடுகிறீர்கள்?

நேற்று ஆனந்தியை மாவை மிரட்ட முற்பட்டது தெரியாதோ? ஆனால் மிரட்டவும் ஓர் கட்ஸ் வேணும்.

சரி உதுகள் கிடக்கட்டும், நேற்று மட்டும் கொழும்பிலை மகிந்த/சந்திரிக்கா கூட்டோடு தேடித்தேடி ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் போன்றோரெல்லாம் போடப்படும் போது விசிலடித்தீர்கள். இன்றோ கூட்டமைப்பை உடைக்க முற்படுகிறோமாம்?

இறுதியாக அங்கு அரசியலுக்கு அப்பால், மாமா வேலையும் செய்கிறார்கள், வாலி அவர்களே!  கடந்த வாரம் தான் மாமாவாக பினவாசல் இரகசியமாக லண்டன் வந்து பரகசியமாக கிழிந்தபடி போனது தெரியாதோ?

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு எம்பிகள் சுடப்பட்ட போது நாங்கள் யார் விசிலடித்தோம்?

சும்மா வாயில வந்ததை எல்லாம் எழுதுவதா?

புலத்தில் தாம் புலியிடம் அடித்த காசை வச்சு கொண்டு என்ன செய்வதெண்டு தெரியாம ஊடக பாலியல் தொழில் செய்யும் இது போன்ற ஊடகங்களை மாமா எண்டாமல் பின்ன என்ன ஒபாமா எண்டா சொல்ல முடியும்.

ஊரில் போய் ஒரு இலவச பேப்பர் தன்னும் அடிச்சுப் பாருங்கோ. சுவிஸ் குமாருக்கு விழந்தத்தை போல் 100 மடங்கு விழும்.

"ஆடு நனையுதாம் எண்டு ஓநாயோ ஒப்பாரி வச்சு அழுததாம்"

அய்யகோ, யாரிடம் சொல்லி அழ, நெஞ்சு நோகுது. நெருப்பு, தேனி, ஈ, பீ, கக்கூசு அது இது ரிபிசி என்று என்று போட்டு விசிலடித்து தள்ளியது கனநாட்கள் இல்லை! ஆமா உதுகள் உழைச்ச காசில் தானே நடாத்தினீர்கள்? 

சுவிஸ் குமார், சுவிஸ் ரஞ்சன், மட்டுமல்ல லண்டன் கனடா ஜேர்மனி, பிரான்ஸ் என்று பல மாகமாணிக்கங்கள் தொடர்ச்சியாக அங்கு சென்று புணர்வாழ்வு, அரசியல், புணருத்தாரணம் என்று உதைத்தானாம் செய்கிறார்களாம்.

சடுதியாக காற்று அங்கு மாறி வீசின கையோடு(முன்பும் காற்று இடைக்கிடை மாறுகிரது தெரியாதோ) சுவிஸ் குமார் தர்ம அடி. பிடித்துக் கொடுத்தும், தப்பியதும் கொழும்பு அனுப்பப்பட்டதும், பதிவுகளே இல்லாது செய்யப்பட்டதும், அங்கு மக்கள் செய்த போராட்டத்தின் பின் தான் மீண்டும் கம்பி எண்ணுகிறாரே ஒழிய, அங்கு பெரிய மாற்றம் ஒன்றும் நடைபெறாததையே காட்டுகிறது.

Edited by no fire zone

  • கருத்துக்கள உறவுகள்

 

வாத்தியார், கவலை ஒற்றுமை குலைகிறதே என்றல்ல! உண்மையா பொய்யா என்று உறுதி செய்ய முடியாத செய்திகளால் ஒற்றுமை இருந்தாலும் குலைந்து விடும் என்பதே கவலை!

மற்ற படி ஒரு ஜனநாயக அமைப்பில் ஒருவரோடு ஒருவர் கருத்துகளால் முரண்படுதல் தவறல்ல! ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இந்த கருத்து வேற்றுமைகள் அமைப்புக்கு ஆரோக்கியமானது தான்.

இல்லாத ஒற்றுமை கலைந்தென்ன குலைந்தென்ன  ஆகப்போகின்றது.
இப்படியான செய்திகளால் கலகம் பிறந்தால் சிலவேளைகளில் நியாகங்கள் கிடைக்கலாம்:)

மாவையரும் சில கிருமிகளும் செய்த கள்ளத்தனத்தை விக்கி ஐயா அவர்கள் சரியான நேரத்தில் கொண்டு வந்தார் .. ரணில் கூட்டமைப்பை உடைக்க நிற்கின்றார் என்ற விடயம் தெரியாமலா மாவை மற்றும் சம்பந்தன் அவர்கள் இருக்கின்றார்கள் ...60 வருட அரசியல் மேதாவிகளா இவர்கள் ? 

இதற்குள் புலிகளுடன் உங்களுக்கு என்ன காச்சல் ... ஏன் தேவை இல்லாத இடத்தில் அவர்களை ... கோசன் , அர்ஜுன் , வாலி இவர்களிக்கு சிங்களம் மாதிரி புலிகள் இல்லாவிட்டால் யாழ் களத்தில் எழுதுவது கூட கஷ்டம் ...

அப்பட்டமான கள்ளம் செய்கின்றார்கள் மாவயரும் இன்னும் சிலரும் .. இவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் கொஞ்சம் இங்க .... 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத ஒற்றுமை கலைந்தென்ன குலைந்தென்ன  ஆகப்போகின்றது.
இப்படியான செய்திகளால் கலகம் பிறந்தால் சிலவேளைகளில் நியாகங்கள் கிடைக்கலாம்:)

வாத்தியண்ணை ...சின்ன மாற்றம் 
இப்படியான செய்திகளால் கலகம் பிறந்தால் சிலவேளைகளில் கள்ளர்கள் பிடிபடலாம் (மாவை அம்பிட்டது போல )

மும்மூர்த்திகளும் கூத்தமைபிட்குள் கூத்து நடக்குது என்று ஏற்றுகொள்கிறார்கள் ....ஆனால் வெளியே சொல்ல கௌரவம் இடம் கொடுக்குதில்லை 
அதற்காக அரசியல் சாணக்கியம் , மூலோபாய சதுரங்கம் என்று கண்டதெல்லாம் எடுத்து விடுகினம் .....நரிக்கு சாயம் வெளுத்துதானே ஆகவேண்டும் 
 

செய்தியில் உள்ளது உண்மையா இல்லையா என்பது பிரச்சனையா?
அல்லது கூட்டமைப்பின் ஒற்றுமை சிறிது சிறிதாக கலைகின்றது என்று கவலையா ?

கூட்டமைப்பின் கூத்துக்கள் பல வெளிவராமலே மூடி மறைக்கப்படும் வேளையில் விக்கினேஸ்வரன் போன்றவர்களால் வெளிவருவதும் பலருக்குப் பிரச்சனையாகத்தான் இருக்கும் :lol:

அப்படி என்னத்தை வெளியில் கொண்டுவந்தவர் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.