Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. நேற்றைய தினம் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு  வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
 
வேட்புமனு தாக்கலினைத் தொடர்ந்து காரைதீவில்,  அம்பாறை மாவட்ட தலைமை காரியாலயம்; திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர்  செல்வராசா கஜேந்திரன் , தேசிய அமைப்பாளர்- வி.மணிவண்ணன்(சட்டத்தரணி), மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் அம்­பாறை மாவட்ட அமைப்­பாளர் செல்­லையா இரா­சையா மேலும் பலரும் கலந்து கொண்டனர்.
 http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121735/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

11698527_1022294901156237_37693914053329

  • கருத்துக்கள உறவுகள்

11698527_1022294901156237_37693914053329

இது தான் நேர்மையான அரசியல்...

 

வாழ்த்துக்கள்.....

 

தமிழ் மக்களின் விடிவை விட தமது அபிலாசைகள் நிறைவேறுவதுதான் பலரின் கனவு .

ஜி ஜி பரம்பரையே தமிழ் மக்களிடம் சுருட்டிய பணத்தில் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட குரலுக்கு எதிராக செயற்படுபவர்கள் .ஜி ஜி யாழ்பாணத்தில் நாறி பின் குமார் கட்டுக்காசும் எடுக்காமல் அதைவிட நாறியவர் .பின்னர் கொழும்பில் இருந்து புலிவால் பிடித்து மாமனிதர் ஆனவர் .

கஜேந்திரகுமாரும் இதே வழியில் வாலை பிடித்து புலிகள் இருக்கும்வரை படம் காட்டினார்கள் .புலிகள் அழிய கூட்டமைப்பு செய்த முதல் உருப்படியான வேலை இவர்களை பிடித்து வெளியில் விட்டதுதான் .

கூட்டமைப்பு ஒன்றும் நேர்மையான அரசியல் கட்சி அல்ல .தனி நபர் முடிவுகளும் குத்து வெட்டுகளும் ஒழிவு மறைவு அரசியலும் என்று மூன்றாம் தர அரசியல் செய்பவர்கள் ஆனால் புலிகளின் அழிவின் பின் தமிழர் சார்பில் ஜனநாயக ரீதியில் தீர்வு வேண்டி சர்வதேசத்திடம் ஒரே குரலாக ஒலிக்க வேண்டிய தேவை ஒன்று இருந்தது .பலரும் எதிர்பார்த்ததும் அதுதான் ,

ஆனால் புலம்பெயர் புலிகளின் பிரதிநிதிகள் தமது இருப்பை நிலை நாட்ட தொடர்ந்தும் தமது அரசியலை தொடர்ந்தார்கள். கடைசி தாங்கள் ஒன்றாக இயங்கினாலும் பரவாயில்லை அவர்களுக்கிடையிலேயே பல பிரிவுகள் .அவர்களின் முதல் இலக்கு தங்களை முதன்மை படுத்தாத கூட்டமைபிற்கு கல்லெறிவதாகவே இருந்தது .அதன் ஒரு வெளிப்பாடுதான் குமார் பொன்னம்பலத்தை முன்னிலைப்படிதியதும் கூட்டமைப்பை கேவலமாக விமர்சனம் செய்ய தொடங்கியதும் ஆகும் .

கூட்டமைப்பு என்ன லேசனவர்களா நாட்டில் தமக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து பதிலுக்கு கல் ஏறிய தொடங்கினார்கள் .

இதுதான் இந்த ஆறுவருடங்களும் நடந்தது .இப்ப தேர்தல் அறிவிப்பு வர கல்லெறிகள் மாறிமாறி அந்த மாதிரி நடக்குது .

இவ்வளவு அழிவுகளுக்கு பின்பும் ஒன்று பட்டு போர் குற்றங்களுக்கு எதிரான விசாரணையை நடத்தவோ நாட்டில் ஒரு அரசியல் தீர்விற்காக போராடவோ எங்களால் முடியவில்லை .

ஆயுத போரட்டம் தொடங்கிய போது  போராட சென்ற மாற்று இயக்கத்தவர்களை  துரோகி ஆக்கி போராட்டத்தை கூறு போட்டவர்கள் 

இன்று அவர்களின்  புலம் பெயர்ந்த பிரதிநிதிகள் தான் நாட்டில் நாட்டில் நடக்கும் அரசியலையும் கூறு போட நிற்கின்றார்கள் .

எமது இனத்திற்கு கிடைத்த சாபமே இவர்கள் தான் .

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா, ஜனநாயகமாகத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகள் மக்களுக்குப் பிடித்தால் அவர்கள் தெரிவு செய்வார்கள், இல்லாவிட்டால் கட்டுக்காசும் இல்லாமல் செய்வார்கள். அவர்களின் கொள்கைகளில் உள்ள சரி பிழைகளைப் பற்றிக் கதைக்காமல் கஜேந்திரகுமாரின் பாட்டன் பிழை என்பதால், அவரது பேரனும் பிழை என்று அறிவிலித்தனமான விவாதத்தை வைக்கின்றீர்கள்.

முதலாவது ஜி ஜி என்ற பெயர் இல்லாமல் குமாரும் இல்லை கஜேந்திரகுமாரும் இல்லை கிருபன் .ஸ்டாலின் பிழை விட்டால் கருணாநிதியின் பெயரை இழுப்பதில் தவறு இல்லை .

ஜனநாயக தேர்தலில் யாரும் யாரும் போட்டியிடலாம் யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் இன்று கனடாவில் புலிகளின் பிரதிநிதிகள் கஜேந்திரகுமாரை முன்னிறுத்தி கூட்டமைப்பை பலமற்றதாக மற்ற அரும்பாடு படுகின்றார்கள் .இது கஜேந்திரகுமாரில் அவர்களுக்கு இருக்கும் விருப்பால் அல்ல தமது சொல்லுக்கு கூட்டமைப்பு ஆடாததால் அவர்கள் எடுத்த முடிவு .

என்னன்றாலும் நடந்து தொலைக்கட்டும் என்று கண்ணை மூடிக்கொண்டிரும் நிலைதான் நாம் இன்று இருக்கும் இந்த நிலைக்கு காரணம் கிருபன் .

இவர்கள் மூவரும் ஒரே கட்சிதான் என்பது கிருபனுக்கு தெரியாதோ என்னவோ ?

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தர்மலிங்கத்தை பற்றி., சித்தாத்தனை பற்றி மட்டும் நாங்கள் கதைக்க கூடாது என்ன? பாருங்கள் அண்ணையின் இரட்டை வேடத்தை.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் தமிழர்களுக்கு வரும் தலைவர்கள் எல்லோருமே தவறானவர்களாகவே உள்ளனர். 

யாழ்களத்தில் தேடுங்கள் தவறென்றால் என்னவென்றே தெரியாத சில நல்ல தலைவர்கள் உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கஜேந்திரகுமாரும் இதே வழியில் வாலை பிடித்து புலிகள் இருக்கும்வரை படம் காட்டினார்கள் .புலிகள் அழிய கூட்டமைப்பு செய்த முதல் உருப்படியான வேலை இவர்களை பிடித்து வெளியில் விட்டதுதான் .

கஜேந்திரகுமார் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டாரா? சரியான தகவல் தெரியாவிட்டால் யாரிடமும் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் அர்ஜுன் அண்ணா.

 

முதலாவது ஜி ஜி என்ற பெயர் இல்லாமல் குமாரும் இல்லை கஜேந்திரகுமாரும் இல்லை கிருபன் .ஸ்டாலின் பிழை விட்டால் கருணாநிதியின் பெயரை இழுப்பதில் தவறு இல்லை .

ஜனநாயக தேர்தலில் யாரும் யாரும் போட்டியிடலாம் யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் இன்று கனடாவில் புலிகளின் பிரதிநிதிகள் கஜேந்திரகுமாரை முன்னிறுத்தி கூட்டமைப்பை பலமற்றதாக மற்ற அரும்பாடு படுகின்றார்கள் .இது கஜேந்திரகுமாரில் அவர்களுக்கு இருக்கும் விருப்பால் அல்ல தமது சொல்லுக்கு கூட்டமைப்பு ஆடாததால் அவர்கள் எடுத்த முடிவு .

என்னன்றாலும் நடந்து தொலைக்கட்டும் என்று கண்ணை மூடிக்கொண்டிரும் நிலைதான் நாம் இன்று இருக்கும் இந்த நிலைக்கு காரணம் கிருபன் .

இவர்கள் மூவரும் ஒரே கட்சிதான் என்பது கிருபனுக்கு தெரியாதோ என்னவோ ?

கஜேந்திரகுமார் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டாரா? சரியான தகவல் தெரியாவிட்டால் யாரிடமும் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் அர்ஜுன் அண்ணா.

 

எது எப்புடியோ, எனக்கு தெரிந்தமட்டில் கஜேந்திரகுமார் அப்பன், முப்பாட்டன் மூலம் அரசியலுக்கு வந்தவர், வரும்போது அவருக்கு ஒழுங்கா தமிழ் தெரியாது, கூட்டிக்கொண்டு வந்த விநாயகமூர்த்தி ஐயாவுக்கே ஆப்பு வைத்தவர், ஆகையால் அண்ணன் அவர்களை இழுப்பதில் தப்பில்லை, அதே போல கூடமைப்பில் உள்ள வெறுப்பால்தான் பலரும் கஜேந்திரகுமாரை ஆதரிக்கிறார்கள் என்பது 100% உண்மை. 

உந்த தமிழ் தேசிய முன்னணியில் உள்ள அனைவரையும் நன்றாக தெரியும், இவர்கள் செல்லாக்காசுகள், யாழ்பாணத்தில் உள்ள இளைஞ்ஞர்களுக்கு இவர்களைபற்டி நன்றாகதெரியும் 

ஏன் அண்மையில் ஒருவாரத்திட்கு முன் S.கஜேந்திரனை அவரது ஊரில்(துன்னாலையில்) இருந்தே துரத்திவிட்டார்கள்

தமிழ்தேசிய முன்னணி எப்பபார்த்தாலும் கூட்டமைப்பை குறைகூறுவதிலே குறியாக இருக்கின்றது, இந்த பிழைப்புதேவையா?

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுன் அண்ணா எவ்வளவு காலமாக கூட்டமைப்பின் ஆதரவாளர்??????புலிகள் கூட்டமைப்பை உருவாக்கும் பொழுதும் அதன் ஆதரவாளரா?  அல்லது புலிகளின் பின் சம்பந்தர் சுமத்திரனைக் கொண்டு வந்து தமிழ்த்தேசியக் கொள்கைக்கு விரோதமாக செயற்பட்டு சிங்கக் கொடியைத் தூக்கிய பின்னரான ஆதரவாளரா?கஜேந்திரகுமாரை நுட்டமைப்பு வெளியேற்றவில்லை. கூட்டமைப்பு அது ஆரம்பிக்கப்பட்ட நோக்கிலிருந்து விலகிச் சென்ற போது அதன் சில தலைவர்களது கொள்கை பிடிக்காமல் அவராகவே வெளியேறியவர்.அவர் வெளியேறாமல் கூட்டமைப்புக்குள் இருந்திருந்திருந்தால் சுமத்திரன் என்ற ஒருவர் உள்ளே வந்திருக்'க மாட்டார்.கூட்டமைப்பின் ஒரு தவிர்க்க முடியாத தலைவராக இருந்திருப்பார்.ஒற்றுயைப்பற்றி இனிப் பாடம் எடுத்துப் பயனில்லை. ஒரு இடம் வென்றாலும் எனது ஆதரவு ததேமக்கள் முன்னணிக்கே .கஜேந்திரகுமாரும் நகூட்டமைப்பின் ஆரம்ப கால உறுப்பினர் என்பதும் சம்பந்தருக்கு எவ்வளவு உரிமை இருக்கே அதே அளவு உரிமை கஜேந்திரகுமாருக்கும் இருக்கிறது.சம்சும் வெளியேறி கூட்டமைப்பு தனது பாதையில் சரி கொள்கை வழி நடக்குமாயின் கஜேந்திரகுமார் இணைவதற்கு தடையில்லை.

சில விடயங்களை உற்று நோக்கினால் கஜேந்திரகுமார் நேர்மையான அரசியல்வாதியாக இருக்கலாம். அவரது வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். 

ஆனால் வென்றபின் மக்களை மறந்திடாதீங்கோ!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.