Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முடிந்தது வாக்களிப்பு – தமிழர் பகுதிகளில் மந்தமான வாக்குப்பதிவு

Featured Replies

முடிந்தது வாக்களிப்பு – தமிழர் பகுதிகளில் மந்தமான வாக்குப்பதிவு

AUG 17, 2015by கி.தவசீலன்in செய்திகள்

polling (1)சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 4 மணியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு, மாலை 4 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளதையடுத்து, வாக்குப் பெட்டிகளை முத்திரையிட்டு, அவற்றை வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில், நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் வடக்கு. கிழக்கில் தமிழர் பகுதிகளில் வாக்களிப்பு மந்தமாகவே இருந்த்தாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வாக்களிப்பு முடிவடைந்த போது, எத்தனை வீதமான வாக்களிப்பு இடம்பெற்றது என்பது பற்றிய புள்ளிவிபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

எனினும், மாவட்டத் தேர்தல் செயலகங்களின் தகவல்கள் பலவும் முன்னுக்குப் பின் முரணாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

polling (1)polling

polling (2)polling (3)polling (4)polling (5)polling (6)polling (8)

எவ்வாறாயினும், யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை போன்ற மாவட்டங்களில், சுமார் 60 வீதம் வரையான வாக்காளர்களே வாக்களித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை காலையில் சுறுசுறுப்பாக வாக்களிப்பு இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தில் 50 வீதம் வரையான வாக்குகளே பதிவாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, வாக்கு எண்ணும் நிலையங்களில் அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன், வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அருகில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகளை ஏற்றிய வாகனங்கள், அங்கு வரத் தொடங்கியுள்ளதாகவும் தெகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய வாக்களிப்பு பொதுவாக மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திக் கிடைத்துள்ள தகவல்களின் படி, மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்குகளின் வீதம்-

  • அம்பாறை  65%
  • மாத்தளை  65%
  • கம்பகா    70%-78%
  • வவுனியா  61%
  • காலி  70%
  • அனுராதபுர  65%-70%
  • பதுளை    65%-70%
  • இரத்தினபுரி  72%
  • கேகாலை  70%
  • மாத்தறை  70%
  • முல்லைத்தீவு   71%
  • யாழ்ப்பாணம் 60%
  • திருகோணமலை 75%
  • குருநாகல  65%
  • அம்பாந்தோட்டை    70%
  • http://www.puthinappalakai.net/2015/08/17/news/8750

முடிந்தது வாக்களிப்பு – தமிழர் பகுதிகளில் மந்தமான வாக்குப்பதிவு

AUG 17, 2015

by கி.தவசீலன்in செய்திகள்

 

,

தமிழ் பகுதிகளில் 60 வீதம் அல்லது அதற்கு மேல் பதிவாகி இருக்கு. இந்த நிலையில் வாக்களிப்பு மந்தமாக இருக்கு என்று செய்தி போடுகின்றனர்... எங்க போய் தலையை முட்டுவது

தயவு செய்து உங்கள் கணனியில் தலையை முட்டவேண்டாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மற்றைய மாவட்டங்களிலும் பார்க்க யாழ்ப்பாணத்தில் தான் குறைவான வாக்குப் பதிவு நடந்திருக்கிறது. என்ன காரணம் ?

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் பகுதிகளில் 60 வீதம் அல்லது அதற்கு மேல் பதிவாகி இருக்கு. இந்த நிலையில் வாக்களிப்பு மந்தமாக இருக்கு என்று செய்தி போடுகின்றனர்... எங்க போய் தலையை முட்டுவது

தமிழ் இணைய ஊடகங்களின் செய்தி பார்த்துத் தலையை முட்டினால் நம் தலை தான் வெடிக்கும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

மற்றைய மாவட்டங்களிலும் பார்க்க யாழ்ப்பாணத்தில் தான் குறைவான வாக்குப் பதிவு நடந்திருக்கிறது. என்ன காரணம் ?

நேற்று முதல் நாள்.... தமிழரசு கட்சி வைத்த குண்டால், சனம் பயந்து வாக்குப் போடப் போகாமல் இருந்திட்டுதோ....
இதை தான், சொந்தச் செலவிலை... தனக்கு, சூனியம் வைக்கிறது என்டு சொல்லுறது.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பகுதிகளில் 60 வீதம் அல்லது அதற்கு மேல் பதிவாகி இருக்கு. இந்த நிலையில் வாக்களிப்பு மந்தமாக இருக்கு என்று செய்தி போடுகின்றனர்... எங்க போய் தலையை முட்டுவது

மற்றைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது

ஐனாதிபதித்தேர்தலுடன் ஒப்பிடும் போது

தமிழர் பகுதிகள் அத்தனையும் குறைவாகவே உள்ளன

 

இரண்டு காரணங்களிலிருக்கலாம்

100 நாட்கள் திட்டத்தில் ஏமாற்றப்பட்டமை

இராமன் ஆண்டாலென்ன? ராமன் ஆண்டாலென்ன? 

பொதுவாக மக்கள் ஒரு மாற்றத்தினை விரும்பும் போது அதிகமாகவும், மாற்றத்தினை விரும்பாத போது குறைவாகவும் வாக்களிப்பர். மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற விருப்பில் சனாதிபதித் தேர்தலில் அதிகளவு தமிழ் மக்கள் வாக்களித்து இருப்பார்

60 வீதம் என்பது பொதுவாக நல்லதொரு எண்ணிக்கை என்றே கருதுவர். கனடா போன்ற நாடுகளில் கூட 60 இல் இருந்து 65 வரைக்குமே இருப்பது வழமை

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக மக்கள் ஒரு மாற்றத்தினை விரும்பும் போது அதிகமாகவும், மாற்றத்தினை விரும்பாத போது குறைவாகவும் வாக்களிப்பர். மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற விருப்பில் சனாதிபதித் தேர்தலில் அதிகளவு தமிழ் மக்கள் வாக்களித்து இருப்பார்

60 வீதம் என்பது பொதுவாக நல்லதொரு எண்ணிக்கை என்றே கருதுவர். கனடா போன்ற நாடுகளில் கூட 60 இல் இருந்து 65 வரைக்குமே இருப்பது வழமை

ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு சொல்லித்தான் மக்கள் வாக்குப் போட்டார்கள் என்ற கூற்றில் உண்மை இல்லைப் போல் தெரிகிறது. மக்கள் முடிவெடுத்தார்கள் மாற்றினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

2010 பாராளுமன்ற தேர்தலில் 24% இப்போ 60.

இது

1) கூட்டமைப்பின் நடவடிக்கை மீது ஏற்பட்ட நம்பிக்கை

2) முண்ணணி மக்களை பெருமளவில் வெளியே கொண்டு வந்துளது.

 

சில மணிகளில் தெரிந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாக்களிப்பு வீதம் குறைவு என்று சொல்வதற்க்கு வாய்ப்பில்லை. 2 015 ஜனாதிபதி தேர்தலைவிடக்குறைவு. 2010 நாடாளுமன்ற வீதத்தைவிட மிக அதிகம். திருகோணமலை அம்பாறை மாவட்டங்களுக்கு வெளியில் கூட்டமைப்புக்கு திரான போட்டி தீவிரப்படவில்லை. கூட்டமைப்புக்கு எதிரான போட்டி தீவிரமாகியிருந்தால் இன்னும் சூடு பிடித்திருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.