Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியப்பட்டியலில் ஶ்ரீரங்காவிற்கு இடமில்லை! அங்கஜன் உள்வாங்கப்பட்டார்!

Featured Replies

தேசியப்பட்டியலில் ஶ்ரீரங்காவிற்கு இடமில்லை! அங்கஜன் உள்வாங்கப்பட்டார்!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சரத் அமுனுகம, 
டிலான் பெரேரா, 
விஜித் விஜிதமுனி சொய்சா, 
எஸ்.பி. திஸாநாயக்க, 
மகிந்த சமரசிங்க, 
லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, 
திலங்க சுமதிபால, 
அங்கஜன் ராமநாதன், 
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, 
மலித் ஜயதிலக்க, 
பைசர் முஸ்தபா, 
ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 12 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் 11 பேர் முன்னாள் அமைச்சர்களாவர்.

ஏற்கனவே தேர்தல் ஆணையாளரிடம் வழங்கப்பட்டிருந்த தேசியப்பட்டிலில் இடம்பெற்றிருந்த 
ஜே. ஸ்ரீரங்கா, 
ஜீ.எல். பீரிஸ், 
டியூ. குணசேகர, 
திஸ்ஸ விதாரண, 
திஸ்ஸ அத்தநாயக்க, 
ரொஜினோல்ட் குரே, 
ஜீவன் குமாரதுங்க, 
டிரான் அலஸ், 
பிரபா கணேசன், 
பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, 
பிரியசிறி விஜேநாயக்க, ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மேலும் பேராசிரியர் மொஹமட் ஹூசைன் ரிஸ்மி செரீப், 
ஷிரால் லக்திலக்க, 
பேராசிரியர் கொல்வின் குணரத்ன, 
பேராசிரியர் கபில குணசேகர, 
கலாநிதி பீ.ஏ. ரத்னபால, 
கருப்பையா கணேசமூர்த்தி, 
லெஸ்லி தேவேந்திர, 
சோமவீர சந்திரசிறி, 
எம்.எஸ். உதுமா லெப்பை, 
ஜயந்த வீரசிங்க, 
எம்.எப்.எம். முஸ்ஸாமில், 
கெவிந்து குமாரதுங்க ஆகியோரது பெயர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த பட்டியலில் ஏ.எச்.எம். பௌசி, சரத் அமுனுகம, பைஸர் முஸ்தபா ஆகியோர் இடம்பெற்றிருந்ததுடன் அவர்கள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரையின் பெயரிலேயெ அங்கஜன் ராமநாதனுக்கு தேசியப்பட்டியலில் இடம்வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

http://www.tamil.srilankamirror.com/news/item/4059-2015-08-21-12-09-30

  • கருத்துக்கள உறவுகள்

அங்கஜன்: ...ம்...

மைத்திரியின் வடக்குக்கான நல்ல எண்ணம் மிக்க முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியான பொடியாம் ஆள்? யாருக்காவது இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் இணைத்து விடுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல். ஸ்ரீ ரங்காவை விட, அங்கஞன்... பரவாயில்லை ரகம்.

எப்படியான பொடியாம் ஆள்? யாருக்காவது இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் இணைத்து விடுங்கள்!

எதிர்க்கட்சி ஆக்கள் மீது ரவுடித்தனத்தினை ஏவுவது, தன் தந்தையுடன் இணைத்து சண்டித்தனம் செய்வது என்று ஆள் மிக நல்ல மனுஷன்.

மகிந்த இருக்கும் வரைக்கும், சனாதிபதித்தேர்தல் வரைக்கும் மகிந்தவுக்கு பின்னால் திரிந்தவர். மைத்திரி வென்றவுடன் உடனடியாக அவரை ஆதரித்து அவர் பின்னால் திரிகின்றவர்

கஜேந்திரன் கோஷ்டி யாழ்ப்பாண மக்களுக்கு செய்த உதவி இவரை தெரிந்தெடுக்கும் வண்ணம் வாக்குகளை பிரிச்சது மட்டும் தான்

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சி ஆக்கள் மீது ரவுடித்தனத்தினை ஏவுவது, தன் தந்தையுடன் இணைத்து சண்டித்தனம் செய்வது என்று ஆள் மிக நல்ல மனுஷன்.

மகிந்த இருக்கும் வரைக்கும், சனாதிபதித்தேர்தல் வரைக்கும் மகிந்தவுக்கு பின்னால் திரிந்தவர். மைத்திரி வென்றவுடன் உடனடியாக அவரை ஆதரித்து அவர் பின்னால் திரிகின்றவர்

###### #######

மகிந்த இருக்கும் போதே.... மைத்திரியுடன், அங்கஞனின் தொடர்பு இருந்தது.
ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் வரையும், மகிந்தவும்... மைத்திரியும் நண்பர்கள்.
முதல் நாள் இரவு வரையும்... இரண்டு பேரும் சேர்ந்து, ஒரே.. மேசையில் இருந்து... இடியப்பமும் சொதியும் சாப்பிட்டவர்கள் நிழலி.:grin:
அடுத்த நாள்... தான், மகிந்தவுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.sWhatever4

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த இருக்கும் போதே.... மைத்திரியுடன், அங்கஞனின் தொடர்பு இருந்தது.
ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் வரையும், மகிந்தவும்... மைத்திரியும் நண்பர்கள்.
முதல் நாள் இரவு வரையும்... இரண்டு பேரும் சேர்ந்து, ஒரே.. மேசையில் இருந்து... இடியப்பமும் சொதியும் சாப்பிட்டவர்கள் நிழலி.:grin:
அடுத்த நாள்... தான், மகிந்தவுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.sWhatever4

சிறியர் கொப்பு இழக்கக் கூடாது, பாருங்கோ.

இடியப்பமும் சொதியும் இல்லை. ஆப்பம்.. பாலப்பம், முட்டை ஆப்பம்...

மகிந்தர் ஊர் முழுக்க புலப்பிப் புலப்பித் தான் தோத்தார். சாகும் வரைக்கும் ஆள் உதை மறவாது.. ஆப்பத் துரோகம். :(

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கருணா கும்மான்.. பிள்ளையான் உம்மான்.. இனிய பாரதி இம்மான்.. எல்லாம்.. என்னாச்சினம்...?! டக்கி அங்கிளின் ஆக்களுக்கும் ஒன்னுமில்லையா..???! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

 

சிறியர் கொப்பு இழக்கக் கூடாது, பாருங்கோ.

இடியப்பமும் சொதியும் இல்லை. ஆப்பம்.. பாலப்பம், முட்டை ஆப்பம்...

மகிந்தர் ஊர் முழுக்க புலப்பிப் புலப்பித் தான் தோத்தார். சாகும் வரைக்கும் ஆள் உதை மறவாது.. ஆப்பத் துரோகம். :(

நாத முனியர், முதல் நாள்.... மகிந்தவும், மைத்திரியும் ஒன்றாக அமர்ந்து...  இராப் போசனம் உண்டதில், என்ன பரிமாறினார்கள் என்பது மறந்தது உண்மை தான்.
இதே போல..... சந்திரிக்கா, ஜனாதிபதியாக  இருக்கும் போது... அவரின் தாயார் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவும் உயிருடன் இருந்த தருணத்தில், சந்திரிக்காவின் தம்பி அனுரா.... முதல் நாள் இரவு மூவரும் ஒரே மேசையில் இருந்து தோசை சாப்பிட்டவர்கள்.
அடுத்த நாள்.... அனுரா, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்ததை... நினைத்து, சந்திரிக்கா பல காலம் புலம்பிக் கொண்டு திரிந்தவ....
சிங்கள் அரசியல் வாதிகளுக்கு, இரவுச் சாப்பாட்டுக்கு ஆரையும் கூப்பிட்டால்,  அடுத்த நாள்... அதிர்ச்சி வைத்தியம் கிடைக்கும் என்பது உண்மை போலுள்ளது.
அதுகும்... ஜானாதிபதி பதவியில் இருந்து கொண்டு, யாரையும்... சாப்பிட கூப்பிடப் படாது.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

அங்கஜன் 2013 வடமாகாண சபை தேர்தலில் 10,034 வாக்குகளை பெற்று மாகாண சபை உறுப்பினராக இருக்கிறார் இதற்கும் அவர்கள் தான் காரணமா? 

எதிர்க்கட்சி ஆக்கள் மீது ரவுடித்தனத்தினை ஏவுவது, தன் தந்தையுடன் இணைத்து சண்டித்தனம் செய்வது என்று ஆள் மிக நல்ல மனுஷன்.

மகிந்த இருக்கும் வரைக்கும், சனாதிபதித்தேர்தல் வரைக்கும் மகிந்தவுக்கு பின்னால் திரிந்தவர். மைத்திரி வென்றவுடன் உடனடியாக அவரை ஆதரித்து அவர் பின்னால் திரிகின்றவர்

கஜேந்திரன் கோஷ்டி யாழ்ப்பாண மக்களுக்கு செய்த உதவி இவரை தெரிந்தெடுக்கும் வண்ணம் வாக்குகளை பிரிச்சது மட்டும் தான்

அங்கஜன் 2013 வடமாகாண சபை தேர்தலில் 10,034 வாக்குகளை பெற்று மாகாண சபை உறுப்பினராக இருக்கிறார் இதற்கும் அவர்கள் தான் காரணமா? 

 

நான் கடந்த வரம் நடந்து முடிந்த தேர்தலில் கிடைக்கப்பட்ட வாக்குகளின் சதவிகிதத்தினை வைத்துக் கொண்டு கதைக்கின்றேன். எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழ் தேசிய கட்சிகளின் வாக்குகள் பிரிந்தமையால் தான் சிங்கள தேசியக் கட்சிகளில் இருந்து ஒருவர்  வெல்ல முடிந்தது. வடக்கில் சிங்கள கட்சி ஒன்றின் பிரதிநிதி தெரிவு செய்யப்படுவது சாத்தியமாயிற்று. இன்னொருவர் (அங்கஜன்) தேசியப் பட்டியலில் வர முடிகின்றது (சுதந்திர கூட்டமைப்பு  5.76 சத விகிதம் பெற்றமையால் )

வடக்கு மாகாண சபையின் 38 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற  தேர்தலில் வடக்கில் இருந்து 16  உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படும் போது விகிதாசார முறையில் 14 விகிதம் (அதுவும் ஈபிடிபியும் இணைந்து பெற்றது) பெற்றவர்களில் இருவர் தெரிந்தெடுப்பது சாத்தியமாகா இருந்தது. ஆனால் வெறுமனே 7 பேரை தெரிவு செய்யும் தேர்தலில் இரண்டு சிங்கள தேசியக் கட்சிகளும் கணிசமான அளவு வாக்கு விகிதங்களை பெறாக்கூடியதாக இருந்தது வாக்குகளை பிரித்தமையாலேயே

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கில் கூட்டமைப்பை தவிர வேறொரு கட்சியும் இனி போட்டியிடக் கூடாது என்கிறீர்களா? 

 

நான் கடந்த வரம் நடந்து முடிந்த தேர்தலில் கிடைக்கப்பட்ட வாக்குகளின் சதவிகிதத்தினை வைத்துக் கொண்டு கதைக்கின்றேன். எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழ் தேசிய கட்சிகளின் வாக்குகள் பிரிந்தமையால் தான் சிங்கள தேசியக் கட்சிகளில் இருந்து ஒருவர்  வெல்ல முடிந்தது. வடக்கில் சிங்கள கட்சி ஒன்றின் பிரதிநிதி தெரிவு செய்யப்படுவது சாத்தியமாயிற்று. இன்னொருவர் (அங்கஜன்) தேசியப் பட்டியலில் வர முடிகின்றது (சுதந்திர கூட்டமைப்பு  5.76 சத விகிதம் பெற்றமையால் )

வடக்கு மாகாண சபையின் 38 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற  தேர்தலில் வடக்கில் இருந்து 16  உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படும் போது விகிதாசார முறையில் 14 விகிதம் (அதுவும் ஈபிடிபியும் இணைந்து பெற்றது) பெற்றவர்களில் இருவர் தெரிந்தெடுப்பது சாத்தியமாகா இருந்தது. ஆனால் வெறுமனே 7 பேரை தெரிவு செய்யும் தேர்தலில் இரண்டு சிங்கள தேசியக் கட்சிகளும் கணிசமான அளவு வாக்கு விகிதங்களை பெறாக்கூடியதாக இருந்தது வாக்குகளை பிரித்தமையாலேயே

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கில் கூட்டமைப்பை தவிர வேறொரு கட்சியும் இனி போட்டியிடக் கூடாது என்கிறீர்களா? 

நியாயமான.... கேள்வி. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

 

நான் கடந்த வரம் நடந்து முடிந்த தேர்தலில் கிடைக்கப்பட்ட வாக்குகளின் சதவிகிதத்தினை வைத்துக் கொண்டு கதைக்கின்றேன். எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழ் தேசிய கட்சிகளின் வாக்குகள் பிரிந்தமையால் தான் சிங்கள தேசியக் கட்சிகளில் இருந்து ஒருவர்  வெல்ல முடிந்தது. வடக்கில் சிங்கள கட்சி ஒன்றின் பிரதிநிதி தெரிவு செய்யப்படுவது சாத்தியமாயிற்று. இன்னொருவர் (அங்கஜன்) தேசியப் பட்டியலில் வர முடிகின்றது (சுதந்திர கூட்டமைப்பு  5.76 சத விகிதம் பெற்றமையால் )

 

யாழ் மாவட்டத்தில் வெற்றிலையும் வீணையும் சேர்ந்து 2010 இல் எடுத்த வாக்குக்கள் கிட்டத்தட்ட 47.000.
இந்த முறை வீணை தனியே 30.000 வெற்றிலை தனியே 17.000
ஆக மொத்தம் வீணைக்கும் வெற்றிலைக்கும் யாழ் மாவட்டத்தில் உள்ள வாக்கு வங்கி இது தான்.

ஆனால் ஐ தே க வின் வாக்குகள் 12.000 இலிருந்து இந்த முறை 20.000ஆயிரத்திற்கு கூடியிருகின்றது.
காரணம் 2010 இல் டக்லஸ் இன் அடாவடித்தனத்தால் ஐ தே க ஆதரவாளர்கள் பலர் வாக்களிக்கவில்லை.இந்த முறை துணிவாக வாக்களிக்க சென்றார்கள்

சைக்கிள் 16,000 வாக்குக்களைப் பெற்றதால் தான் வீணையும் யானையும் வெற்றிலையும் பாராள மன்றம் செல்கின்றனர் என்பது சரியான வாதமாகத் தெரியவில்லை.வாக்குரிமை இருந்தும் வாக்களிப்பில் பங்கு கொள்ளாமல் விட்டவர்களால்(கவனிக்க  சுமார் 120000 வாக்குக்கள் ...இவர்கள் ஒன்று கூட்டமைப்பு அல்லது சைக்கிள் ஆதரவாளர்களாகத்தான் இருக்க முடியும் ) தான் இந்த நிலை வந்ததென்றால் ஏற்றுக்கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு... சைக்கிள் காத்துப் போட்டுது, என்று..... கூவிக் கொண்டு திரியினம்.
அது, தனது.... வரலாற்றுக் கடமையை... பதிவு செய்துள்ளது.
இதே... சோம்பேறித் தனத்துடனும், ஒரு தூரப் பார்வையும் இல்லாமல்... தமிழ் தேசியக் கூட்டமைப்பு நகருமானால்....
அவர்களுக்கு... அடுத்த, வைத்தியம் கொடுக்கவும்.... கஜேந்திரகுமார் வருவார்.
ஆறு... வாக்குகளால், ஆறாம் இடத்தை, இழந்ததை.... நினைவில் கொள்ள வேண்டும்... கூத்தமைப்பார்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு... சைக்கிள் காத்துப் போட்டுது, என்று..... கூவிக் கொண்டு திரியினம்.
அது, தனது.... வரலாற்றுக் கடமையை... பதிவு செய்துள்ளது.
இதே... சோம்பேறித் தனத்துடனும், ஒரு தூரப் பார்வையும் இல்லாமல்... தமிழ் தேசியக் கூட்டமைப்பு நகருமானால்....
அவர்களுக்கு... அடுத்த, வைத்தியம் கொடுக்கவும்.... கஜேந்திரகுமார் வருவார்.
ஆறு... வாக்குகளால், ஆறாம் இடத்தை, இழந்ததை.... நினைவில் கொள்ள வேண்டும்... கூத்தமைப்பார்.:grin:

 

தேப்பனைப் போல தேர்தல் எண்டோன, வீறு கொண்டு, எடுறா, வண்டியை, விடுறா யாழ்ப்பாணத்துக்கு எண்டுறதும், பிறகு அடுத்த தேர்தல் வரும்வரை படுத்துக் கிடப்பதும் கரை சேர்க்காது.

டக்கியர், விஜயகலா வெல்லுவதன் காரணம், அவர்கள் முடிந்த அளவு ஒரு சில பேருக்கு செய்த வேலைகளும், உதவிகளும்.

களத்தில் இறங்கி வேலை செய்தால் தான் அடுத்த தேர்தல் வெல்ல முடியும். :(

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அங்கயன் நல்லவரா கெட்டவரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் தேசியப் பட்டியல் மூலம் யாழ்ப்பானத்துக்கு மேலும் ஒரு எம்பி கிடைத்து இருக்கிறார். இதுவும் நல்லதொரு சமிக்கையே. அங்கயனின் செயற்பாடுகள் குறித்தே வருங்காலங்களில் கருத்து எழுத முடியும். அங்கயன் கூட்டமைப்புடன் இணைந்து தமிழர் நலன் சார்ந்து செயற்படுவாராயின் மிகவும் நல்லதே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.