Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனி போர் வந்தால், பாகிஸ்தானை 4 துண்டாக.... இந்தியா உடைக்கும்.... சு.சுவாமி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

02-subramanya-swami-600-jpg.jpg

இனி போர் வந்தால், பாகிஸ்தானை 4 துண்டாக.... இந்தியா, உடைக்கும்.... சொல்வது சு.சுவாமி.
டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா யுத்தத்தை பிரகடனப்படுத்தாது; ஆனால் இந்த முறை யுத்தம் நடந்தால் பாகிஸ்தானை இந்தியா 4 நாடுகளாக பிளவுபடுத்திவிடும் என்று பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் கனரக ஆயுதங்களுடன் பாகிஸ்தான் தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் இந்தியாவுக்குதான் பேரிழப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீப் மிரட்டல் விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் இந்த மிரட்டல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: பாகிஸ்தானிடம் எந்த ஒரு வலிமையும் இல்லை. அது விரக்தியடைந்து போய் பலவீனமானதாக இருக்கிறது. அங்கே இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒரு பொம்மை அரசுதான்.

பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவுடன் யுத்தத்தை நடத்த விரும்பினால் நாமும் அதற்கு தயார்தான். ஆனால் நாம் எந்த ஒரு நாட்டுடனும் போர் பிரகடனத்தை வெளியிட்டதில்லை. நம்மை பிறநாடுகள்தான் போரில் வலிந்து தள்ளியிருக்கின்றன.

ஏற்கெனவே நடந்த ஒரு யுத்தத்தில் பாகிஸ்தான் 2 நாடுகளாக பிளவுபடுத்தப்பட்டது. இனி ஒரு முறை இந்தியாவுடன் பாகிஸ்தான் யுத்தம் நடத்தினால் அந்த நாடு 4 நாடுகளாக பிளவுபடுத்தப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

நன்றி தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் என்ன கிரீம் கிராக்கர் பிஸ்கட்டா.. சு.சாமி நினைக்கிற மாதிரி உடைக்க. பாகிஸ்தானின் நாலு அணுகுண்டு வீழ்ந்தால் தெரியும்.. சு.சாமியின் பார்ப்பர்ன கூட்டம் பூலோகத்தை விட்டு பூண்டோடு அழியும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

பதிலுக்கு இந்தியாவை 24 துண்டா உடைப்பாங்கள்............. ஐ.எஸ்.ஐ யினர்

  • கருத்துக்கள உறவுகள்

பதிலுக்கு இந்தியாவை 24 துண்டா உடைப்பாங்கள்............. ஐ.எஸ்.ஐ யினர்

இந்தியா 24 துண்டுகளாக உடைந்தால்.... அதில் சில துண்டுகள் சிறீலங்காவை 2 துண்டுகளாக உடைக்கலாம்.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

 இனி போர் வந்தால், பாகிஸ்தானை 4 துண்டாக.... இந்தியா உடைக்கும்.... சு.சுவாமி.

 

சும்மா  சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது

ஏதோ நீங்க சொல்லிக்கொண்டிருக்க அவன் முந்தினாலும் நாம் நினைப்பது நடக்கும்..

இந்தியா 24 துண்டுகளாக உடைந்தால்.... அதில் சில துண்டுகள் சிறீலங்காவை 2 துண்டுகளாக உடைக்கலாம்.:rolleyes:

இந்தியா உடையாமல் தமிழருக்கு விமோசனமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகளின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் காலம் ஒன்று மீண்டும் உருவாகலாம்......

பாகிஸ்தான் உடையுதோ இல்லையோ கிந்திய துண்டு துண்டாக உடையவேண்டும்.  அப்பதான் தமிழருக்கு விடிவு கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏஞ்சாமி,

சும்மா டமாசா ?

'முடிஞ்சா பண்ணிப்பார்', அப்படீன்னு பாக்கியள் சொல்லப் போகினமே... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்ரமணிக்கு தேவையில்லாத வேலை.......பேசாமல் ஈழத்தமிழரைப் பற்றி புறணிபாடிக்கொண்டிருந்தாலே காணும். 00030.gif

  • கருத்துக்கள உறவுகள்

கிரேக்க, ரோம, மங்கோலிய, மொகலாய, சீன, பிரித்தானிய பேரரசுகள் உடைய காரணம் அவை வன்முறையால் கட்டி அமைக்கப் பட்டவை.

ஆனால் அமெரிக்காவும் இந்தியாவும் அப்படியில்லை. இவை உணர்வுபூர்வ பேரரசுகள் ( அகாலிகளை, கஸ்மீரை வடகிழக்கு இந்தியாவை தவிர்த்துப் பார்த்தால்).

இந்தியாவில் இருந்து கஸ்மீரி, பஞ்சாபி, வடகிழக்கு காரர் பிரிந்து போனாலும் தமிழகம் இந்தியாவில் தொங்கி கொண்டே இருக்கும்.

ஏனென்றால் அவர்கள் எப்போதோ இதயத்தால் ஹிந்தியாவுடன் இணைந்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கிரேக்க, ரோம, மங்கோலிய, மொகலாய, சீன, பிரித்தானிய பேரரசுகள் உடைய காரணம் அவை வன்முறையால் கட்டி அமைக்கப் பட்டவை.

ஆனால் அமெரிக்காவும் இந்தியாவும் அப்படியில்லை. இவை உணர்வுபூர்வ பேரரசுகள் ( அகாலிகளை, கஸ்மீரை வடகிழக்கு இந்தியாவை தவிர்த்துப் பார்த்தால்).

இந்தியாவில் இருந்து கஸ்மீரி, பஞ்சாபி, வடகிழக்கு காரர் பிரிந்து போனாலும் தமிழகம் இந்தியாவில் தொங்கி கொண்டே இருக்கும்.

ஏனென்றால் அவர்கள் எப்போதோ இதயத்தால் ஹிந்தியாவுடன் இணைந்து விட்டார்கள்.

ஆ..ப்படியா....

பேரரசுகள் எப்போதுமே வன்முறையில் உருவானவை தானே. 

இந்தியாவும், அமெரிக்காவும் பிரித்தானியாவால் உருவானவை அல்லவா?

என்ன வகையில் உணர்வு பூர்வம் என்று சொல்கிறீர்கள்!

கிழக்கு, மேற்கு ஜேர்மனி இணைவு உணர்வு பூர்வமானது.

சோவியத் இணைவு, சிதறல் ..??

உக்ரேனின், ரஸ்ய மொழிப் பகுதி, ரஸ்யாவுடன் அண்மையில் மீள் இணைவு.... எந்தவகை?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிரேக்க, ரோம, மங்கோலிய, மொகலாய, சீன, பிரித்தானிய பேரரசுகள் உடைய காரணம் அவை வன்முறையால் கட்டி அமைக்கப் பட்டவை.

 இதே வன்முறை கட்டமைப்புதான் எமக்கும் வேண்டாம் என்று சொல்கின்றோம்.:innocent:

 

சிங்களவனுக்கு பின்பக்கம் எப்படியாவது கழுவி ஆனந்தமடைபவர்களை அவர்கள் வழியில் பட்டு தெளியட்டும் என்று விட்டு விட்டோம்.tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

பிரித்தானியர்கள் அமெரிக்காவை கட்டி அமைக்கவில்லை. அவர்கள் திட்டுத்திட்டாக காலனிகளைத்தான் அமைத்தார்கள். 

பிரித்தானியாவுக்கு எதிரான சுதந்திரப் போர் அமெரிக்கா என்ற நாட்டையும் அமெரிக்கன் என்ற ஆன்ம அடையாளத்தையும் உருவாக்கியது.

அதேபோல் இந்தியாவை பிரிட்ஸ் அமைத்தாலும் அங்கேயும் சுதந்திர போர் தொட்டு அடுத்து வந்த 60 ஆண்டுகளில் இந்தியன் என்ற படிமம் மிக கடுமையாக வேறூன்ற செய்யப் பட்டுளது.

இன்னும் இன்னும் ஊட்டி வளர்க்கப் படுகிறது.  அம்பேத்கார் உருவாக்கிய இந்தியன் யூனியன் என்ற அரைச் சமஸ்டி அரசமைப்பை, படிப் படியாக யூனியன் எனும் பதத்தை மறைத்து இந்தியா எனும் ஒற்றை நிகராட்ட்சியாக மாற்றிவிட்டார்கள்.

இதை உடையாது விடக் கூடாது என்பதால்தான் எங்கள் போராட்டத்தையும் நாசம் பண்ணினார்கள்.

இது உடையணும் என்பது எம் விருப்பாய் இருப்பினும். சாத்தியமா என்பது தெரியவில்லை.

குசா,

நான் சொன்னது பல குழுக்கள் சேர்ந்திருக்கும் பேரரசுகளுக்கே பொருந்தும். எம்மைப் போல் 72% & 12% சமன் பாடுகளுக்கு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

பிரித்தானியர்கள் அமெரிக்காவை கட்டி அமைக்கவில்லை. அவர்கள் திட்டுத்திட்டாக காலனிகளைத்தான் அமைத்தார்கள். 

பிரித்தானியாவுக்கு எதிரான சுதந்திரப் போர் அமெரிக்கா என்ற நாட்டையும் அமெரிக்கன் என்ற ஆன்ம அடையாளத்தையும் உருவாக்கியது.

அதேபோல் இந்தியாவை பிரிட்ஸ் அமைத்தாலும் அங்கேயும் சுதந்திர போர் தொட்டு அடுத்து வந்த 60 ஆண்டுகளில் இந்தியன் என்ற படிமம் மிக கடுமையாக வேறூன்ற செய்யப் பட்டுளது.

இன்னும் இன்னும் ஊட்டி வளர்க்கப் படுகிறது.  அம்பேத்கார் உருவாக்கிய இந்தியன் யூனியன் என்ற அரைச் சமஸ்டி அரசமைப்பை, படிப் படியாக யூனியன் எனும் பதத்தை மறைத்து இந்தியா எனும் ஒற்றை நிகராட்ட்சியாக மாற்றிவிட்டார்கள்.

இதை உடையாது விடக் கூடாது என்பதால்தான் எங்கள் போராட்டத்தையும் நாசம் பண்ணினார்கள்.

இது உடையணும் என்பது எம் விருப்பாய் இருப்பினும். சாத்தியமா என்பது தெரியவில்லை.

குசா,

நான் சொன்னது பல குழுக்கள் சேர்ந்திருக்கும் பேரரசுகளுக்கே பொருந்தும். எம்மைப் போல் 72% & 12% சமன் பாடுகளுக்கு அல்ல.

அமரிக்காவில் உண்மையிலேயே நடந்தது மதப் போர் என்பதே சுவாரசியமானது. வேகமாகப் பரவிய புரடஸ்தாந்து மதத்தின் பிடியில் இருந்து தப்ப, அமெரிக்கா சென்றோடிய, ஸ்காட்டிஷ், ஐரிஷ், வேலிஷ் கத்தோலிக்கர்கள், அங்கேயும் வந்து அட்டகாசம் பண்ணிய புரடஸ்தாந்து ஆங்கில மன்னரின் ராணுவத்துக்கு எதிராக நடத்திய போர், சுதந்திரப் போராகியது. 

இந்தியாவில் கூட காந்தி, மக்களை (சபர்மதி ஆசிரமத்தின் ஊடாக) இந்து என்ற மதத்தின் ஊடாகவே முழு இந்தியாவினையும் சுதந்திர போராட்டத்தில் இணைத்தார். 85% இந்துக்களாக இருப்பதால் இந்த இணைவு சாத்தியமாகியது.

இந்த இணைவில் தான், தமிழகத்தின் சகல உள்ளூர் நம்பிக்கைகளும் (சுடலை மாடன் , கருப்பன் ) இந்து என்ற பெரும் சோதியில் ஐக்கியமாகியது.

இன்னும் ஆழமாக பார்த்தல், சீமான் இந்த, இந்து மதம் வேறு, சைவ மதம் வேறு என்று, முருகன் முப்பாட்டன் என்று போவதைப் பாருங்கள்.

அதே வேளை இங்கே நாம் வசதிக்காக இந்துக்கள் என்று சொன்னாலும், தாயக்கத்தில், சைவ நெறி என்பதே படித்தோம். சைவம் என்பதே மதமாக சொன்னோம். சொல்கிறோம். இந்த வட இந்திய இந்து அலை எம்மைப் பாதிக்க வில்லை என்பதே உண்மை.

சிரியாவில் அதே மதம் தான், உலெகென்கிலும் இருக்கும் இஸ்லாமியரை இணைத்தது. 

மதம் அத்தனை சக்தி மிக்கது.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

 

அமரிக்காவில் உண்மையிலேயே நடந்தது மதப் போர் என்பதே சுவாரசியமானது. வேகமாகப் பரவிய புரடஸ்தாந்து மதத்தின் பிடியில் இருந்து தப்ப, அமெரிக்கா சென்றோடிய, ஸ்காட்டிஷ், ஐரிஷ், வேலிஷ் கத்தோலிக்கர்கள், அங்கேயும் வந்து அட்டகாசம் பண்ணிய புரடஸ்தாந்து ஆங்கில மன்னரின் ராணுவத்துக்கு எதிராக நடத்திய போர், சுதந்திரப் போராகியது. 

இந்தியாவில் கூட காந்தி, மக்களை (சபர்மதி ஆசிரமத்தின் ஊடாக) இந்து என்ற மதத்தின் ஊடாகவே முழு இந்தியாவினையும் சுதந்திர போராட்டத்தில் இணைத்தார். 85% இந்துக்களாக இருப்பதால் இந்த இணைவு சாத்தியமாகியது.

இந்த இணைவில் தான், தமிழகத்தின் சகல உள்ளூர் நம்பிக்கைகளும் (சுடலை மாடன் , கருப்பன் ) இந்து என்ற பெரும் சோதியில் ஐக்கியமாகியது.

இன்னும் ஆழமாக பார்த்தல், சீமான் இந்த, இந்து மதம் வேறு, சைவ மதம் வேறு என்று, முருகன் முப்பாட்டன் என்று போவதைப் பாருங்கள்.

அதே வேளை இங்கே நாம் வசதிக்காக இந்துக்கள் என்று சொன்னாலும், தாயக்கத்தில், சைவ நெறி என்பதே படித்தோம். சைவம் என்பதே மதமாக சொன்னோம். சொல்கிறோம். இந்த வட இந்திய இந்து அலை எம்மைப் பாதிக்க வில்லை என்பதே உண்மை.

சிரியாவில் அதே மதம் தான், உலெகென்கிலும் இருக்கும் இஸ்லாமியரை இணைத்தது. 

மதம் அத்தனை சக்தி மிக்கது.:rolleyes:

எப்பிடி சார் இப்பிடி?! அத்தனையும் அருமை..! சீமானின் இந்த அரசியலை விளங்கிக் கொண்டால் முருகன் பித்தலாட்டம் என்கிற விமர்சனங்கள் எழ வாய்ப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடி சார் இப்பிடி?! அத்தனையும் அருமை..! சீமானின் இந்த அரசியலை விளங்கிக் கொண்டால் முருகன் பித்தலாட்டம் என்கிற விமர்சனங்கள் எழ வாய்ப்பில்லை.

நன்றி இசை அதனைத் தான் வேறு ஒரு திரியில் சொன்னேன்.

சீமான் ஒரு strategy உடன் முன்னேறுகிறார். திராவிடம் எனும் பெயரில் மதத்துக்கு எதிரான நிலைப் பாட்டில், எல்லோரும் சாதி அரசியல் செய்யும் போது அவர் சாதி அரசியலுக்கு வெளியே, திராவிடத்தை எதிர்த்து, மத அரசியலுக்குள் போகின்றார்.

இது மார்கெட்டிங் துறையில், gurella marketing போன்றது. பல வழிகளில் முயன்று, சந்தைக்கு சரியெனப் படும் முறையினை தேர்ந்தெடுப்பது.

அவருக்கு சிறப்பான ஆலோசனைகள் கிடைகின்றன போல் தெரிகின்றது.

அவரது பயணத்தினை ரசிப்புடன் கவனிப்பதை விடுத்து, நமது ஈழப் பிரச்சனையினை அவருடன் போட்டு குழப்புவது கவலை தருகின்றது. (பிரித்தானிய கமொரோன் கூட இங்குள்ள தமிழ் வாக்குகளுக்காக யாழ் சென்றார், விக்கியரை சந்தித்தார். தேர்தல் முடிந்து விக்கி லண்டன் வந்த போது  சந்திக்கவில்லை )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.