Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச யுத்தக் குற்றச்செயல் விசாரணைகளில் இருந்து தப்பியதா இலங்கை?

Featured Replies

சர்வதேச யுத்தக் குற்றச்செயல் விசாரணைகளில் இருந்து தப்பியதா இலங்கை?

 
இலங்கையில் மிக நீண்ட காலமாக நீடித்து வந்த சிவில் யுத்தத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படுவதிலிருந்து இலங்கை தப்பித்துக் கொள்ளக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் எதிர்வரும் வாரத்தில் புதிய தீர்மானமொன்று நிறைவேற்றப்படவுள்ளது.

கலப்பு நீதிமன்றின் அடிப்படையில் சர்வதேச தலையீட்டுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னதாக உத்தேச தீர்மானத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும், கொழும்பு அரசாங்கம் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் வாரத்தில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படக் கூடிய சாத்தியமே அதிகளவில் காணப்படுகின்றது.

உள்ளக விசாரணைப் பொறிமுறைமையில் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு இருக்க வேண்டுமென புதிய தீர்மானத்தில் பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
37 ஆண்டுகளாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் இரண்டு தரப்புக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஒரு வார காலத்தில், புதிய உத்தேச தீர்மானம் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

நம்பகமான சுயாதீன விசாரணைகளை நடாத்த இலங்கை சட்டத்தில் போதியளவு வசதிகள் கிடையாது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதன் காரணமாகவே கலப்பு நீதிமன்றமொன்றின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென முன்னதாக யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும் வெளிநாட்டு தலையீட்டுடன் கூடிய விசாரணை நாட்டின் இறைமையை பாதிக்கும் என சிங்களப் பெரும்பான்மை சமூகம் கருதுகின்றது.

விசாரணை அறிக்கை ஆக்கபூர்வமான சில பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளதாக தமி;ழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு வெளிநாட்டு நிதியைப் பெற்றுக்கொள்ள தீர்மானத்தில் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சர்வதேச விசாரணைப் பொறிமுறைமையிலிருந்து இலங்கை தப்பித்துக் கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது என சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124279/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் உண்மை.

இலங்கை விசாரணைகள் கண்காணிப்புக்கு உள்ளாகும். அதேவேளை, இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வுக்கு ஏதுவான உள்நாடு நல்லெண்ண சூழலை உருவாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் உண்மை.

இலங்கை விசாரணைகள் கண்காணிப்புக்கு உள்ளாகும். அதேவேளை, இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வுக்கு ஏதுவான உள்நாடு நல்லெண்ண சூழலை உருவாக்கும்.

இது எங்களுக்குப் பிடிக்காதே! 

  • கருத்துக்கள உறவுகள்

"விசாரணை அறிக்கை ஆக்கபூர்வமான சில பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளதாக தமி;ழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு வெளிநாட்டு நிதியைப் பெற்றுக்கொள்ள தீர்மானத்தில் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது"

அனேகமாக எல்லாமே முடிந்துபோய்விட்டது கூட்டமைப்பின் கைங்கரியத்துடன்.

"அதேவேளை, இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வுக்கு ஏதுவான உள்நாடு நல்லெண்ண சூழலை உருவாக்கும்"

இது கிழவி சாமத்தியப்பட்ட கதை.

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு ஒன்று இதன்மூலம் கிடைக்குமாகவிருந்தால் மிக்கச்சந்தோசம், அப்படியான அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை சிங்களம் தரும் என்பதில் நம்பிக்கை இல்லை, 

ஆனால் சிறீலங்காவின்மீதான போர்குற்றம் அதற்கான காரணமான இனப்படுகொலை இதன் மூலகாரணமான பல தசாப்தமாக நடந்துவரும்  இனச்சுத்திகரிப்பு இவைக்கான அனைத்துத் தடையங்களும் காலங்காலமாக பத்திரப்படுத்தி வைக்கப்படும் என்றோ ஒரு நாள் எமக்கான சந்தர்ப்பம் வந்தேதீரும்.

  • கருத்துக்கள உறவுகள்

"விசாரணை அறிக்கை ஆக்கபூர்வமான சில பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளதாக தமி;ழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு வெளிநாட்டு நிதியைப் பெற்றுக்கொள்ள தீர்மானத்தில் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது"

அனேகமாக எல்லாமே முடிந்துபோய்விட்டது கூட்டமைப்பின் கைங்கரியத்துடன்.

"அதேவேளை, இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வுக்கு ஏதுவான உள்நாடு நல்லெண்ண சூழலை உருவாக்கும்"

இது கிழவி சாமத்தியப்பட்ட கதை.

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு ஒன்று இதன்மூலம் கிடைக்குமாகவிருந்தால் மிக்கச்சந்தோசம், அப்படியான அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை சிங்களம் தரும் என்பதில் நம்பிக்கை இல்லை, 

ஆனால் சிறீலங்காவின்மீதான போர்குற்றம் அதற்கான காரணமான இனப்படுகொலை இதன் மூலகாரணமான பல தசாப்தமாக நடந்துவரும்  இனச்சுத்திகரிப்பு இவைக்கான அனைத்துத் தடையங்களும் காலங்காலமாக பத்திரப்படுத்தி வைக்கப்படும் என்றோ ஒரு நாள் எமக்கான சந்தர்ப்பம் வந்தேதீரும்.

இதுதான் உண்மை.
 காலம் பதில் சொல்லும். எங்கள் காலத்தில் இல்லாவிட்டாலும், என்றோ ஒரு நாள், நீதி கிடைக்கும். சிங்களம் உள் நாட்டு விசாரணையை நீதியாக நடத்தும் என்றா எதிர் பார்க்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

//உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு வெளிநாட்டு நிதியைப் பெற்றுக்கொள்ள தீர்மானத்தில் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.//

அதாவது வெளிநாட்டு காசை வாங்கிக்கொண்டு உள்நாட்டில் கொட்டாவி விடலாம்.tw_blush:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

//உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு வெளிநாட்டு நிதியைப் பெற்றுக்கொள்ள தீர்மானத்தில் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.//

அதாவது வெளிநாட்டு காசை வாங்கிக்கொண்டு உள்நாட்டில் கொட்டாவி விடலாம்.tw_blush:

 

 

கொட்டாவி விடுவதற்கு ஒத்தாசையாக சம்பந்தர் இருப்பார்

இது எங்களுக்குப் பிடிக்காதே! 

ஓ உங்களுக்கு அது பிடிக்காதா? அதுக்கு நாம் என்ன செய்ய.

ஒன்று மட்டும் உண்மை.

இலங்கை விசாரணைகள் கண்காணிப்புக்கு உள்ளாகும். அதேவேளை, இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வுக்கு ஏதுவான உள்நாடு நல்லெண்ண சூழலை உருவாக்கும்.

இது எங்களுக்குப் பிடிக்காதே! 

... ஓ பிறந்த பால்குடிகள்! ... அதுதான் வரலாறு தெரியாது போல! ... நேரம் இருக்கும் போது .... வெள்ளைக்காரன் இலங்கையில் இருந்த கடைசிக்காலத்திலிருந்து ... வெளியேறியது முதல் .. 48 .. 58 .. 60களிலும் ... 77 ... 83 ... பின் தொடராக .. இன்றுவரை ... வரலாற்றை தடவுங்கள்!

... உள்நாட்டு நல்லெண்ண சூழ்நிலை

.... கிழித்தெறியப்பட்ட ஒப்பந்தங்கள்

..... மூன்றாம் தரப்பு மத்தியஸ்தங்கள் 

.... போன்றவற்றின் நல்லெண்ண சூழல் என்னவென்பது புரியும்! 

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை.... தப்ப வழிகாட்டியது, தமிழ் தேசிய கூத்தமைப்பு.
அதுக்கு.... அத்தி வாரம் போட்டது. ஒட்டுக் குழுக்கள்.

இதில்.... மாற்றுக் கருத்துக்கு, இடம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

... ஓ பிறந்த பால்குடிகள்! ... அதுதான் வரலாறு தெரியாது போல! ... நேரம் இருக்கும் போது .... வெள்ளைக்காரன் இலங்கையில் இருந்த கடைசிக்காலத்திலிருந்து ... வெளியேறியது முதல் .. 48 .. 58 .. 60களிலும் ... 77 ... 83 ... பின் தொடராக .. இன்றுவரை ... வரலாற்றை தடவுங்கள்!

... உள்நாட்டு நல்லெண்ண சூழ்நிலை

.... கிழித்தெறியப்பட்ட ஒப்பந்தங்கள்

..... மூன்றாம் தரப்பு மத்தியஸ்தங்கள் 

.... போன்றவற்றின் நல்லெண்ண சூழல் என்னவென்பது புரியும்! 

 

 

ஐயா, புரிகிறது.

ஆனால், நாங்கள், 'கோரி' அடைந்தது எதுவும் இல்லை. 

அவர்கள், 'கோரியதை மறுத்து' தாமாவது உயர்ந்ததும் இல்லை.

இரு பகுதியுமே, காயங்களை தடவியபடி, முட்டாள்தனங்கள் குறித்த கவலையுடன் அடுத்தது என்ன என்று தவிக்கும் நிலை.

இங்கே தான் நல்லெண்ணம் உருவாகும் சாத்தியம். அதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கும் புறச்சூழல்.

சூரியன் மறையா சாம்ராஜ்யம் என்று மார்தட்டிய பிரிட்டனை, கிற்லர் எனும் பறச்சூழல் தடுமாற வைத்தது. இரண்டாவது உலக யுத்தம் இல்லாவிடில் பல நாடுகள் இனனும் பிரிட்டனின் பிடியில்...

சோழர் காலத்தில், சிங்களவர் அடிமைப்படுத்தப் பட்டார்கள், நாயக்கர் காலத்தில் கண்டி அரசு நம்வசம் போன்ற எவ்வகையிலும், இன்று, உதவா, பழைய வரலாறையும், நீங்கள் குறிப்பிட்ட சிங்கள -தமிழ் கசப்பான வரலாறுகளையும், ஒருபக்கம் வைத்து, இன்றைய சந்தர்ப்பத்தை மட்டும் பார்ப்போம்.

யுத்தம், எம்மைப் போலவே, அவர்களையும் மோசமாக பாதித்த வகையில், 'மறுத்து' ஒன்றாக சீரழிவதா, 'பகிர்ந்து' சேர்ந்தே உயர்வதா என்று சிந்திக்கும் அறிவு சிங்களவர்களுக்கு இதன் பின்னரும் இல்லாவிடில் அவர்களது எதிர்கால இழப்பு மிக, மிக, அதிகமாக இருக்கும்.

இன்றைய சர்வதேச நிலைப்பாட்டினால், சிங்களம் பழைய சேட்டையை விட்டால், அந்நிலையில், தமிழர் தனிநாடு கூட கிடைக்கலாம்.

Edited by Nathamuni

விடுமுறைக்கு போட்டு வந்து இனி நாட்டில யாரை யுத்தத்திற்கு தள்ளலாம் என்று யோசிக்கின்றார் போல .

  • கருத்துக்கள உறவுகள்

விடுமுறைக்கு போட்டு வந்து இனி நாட்டில யாரை யுத்தத்திற்கு தள்ளலாம் என்று யோசிக்கின்றார் போல .

அப்படிச் சொல்லாதீர்கள் அர்ஜுன். மற்ற இனத்தில்... இல்லாத ஒரு பொது விடயத்தில் பயணிக்கும் தன்மை... எம் இனத்தில், காலம் காலமாகவே கிடையாது. இது... அடுத்த சந்ததியில் ஆவது வர வேண்டும் என்பது எனது, நப்பாசை. இது... நடக்குமா... என்பது கேள்விக் குறி.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிச் சொல்லாதீர்கள் அர்ஜுன். மற்ற இனத்தில்... இல்லாத ஒரு பொது விடயத்தில் பயணிக்கும் தன்மை... எம் இனத்தில், காலம் காலமாகவே கிடையாது. இது... அடுத்த சந்ததியில் ஆவது வர வேண்டும் என்பது எனது, நப்பாசை. இது... நடக்குமா... என்பது கேள்விக் குறி.

அட நீங்க வேற,

குஸ்புவின் கால் முட்டி உடைந்த கவலை அர்சுன் அண்ணாவிற்கு... :grin:

அப்படிச் சொல்லாதீர்கள் அர்ஜுன். மற்ற இனத்தில்... இல்லாத ஒரு பொது விடயத்தில் பயணிக்கும் தன்மை... எம் இனத்தில், காலம் காலமாகவே கிடையாது. இது... அடுத்த சந்ததியில் ஆவது வர வேண்டும் என்பது எனது, நப்பாசை. இது... நடக்குமா... என்பது கேள்விக் குறி.

மக்களால் தெரிவுசெய்யபட்ட கூட்டமைப்பை இந்த வாங்கு வாங்கும் தாங்கள் எப்படி பொதுவிடயத்தில் ஒன்றாக பயணிப்பதை எதிர்பார்க்கலாம் .

அவர்கள்  என்ன செய்ய போகின்றார்கள் என்று தெரியாமலே  அவர்களை திட்டவும் உடைக்கவும் தான் பல முயலுகின்றார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் தெரிவுசெய்யபட்ட கூட்டமைப்பை இந்த வாங்கு வாங்கும் தாங்கள் எப்படி பொதுவிடயத்தில் ஒன்றாக பயணிப்பதை எதிர்பார்க்கலாம் .

அவர்கள்  என்ன செய்ய போகின்றார்கள் என்று தெரியாமலே  அவர்களை திட்டவும் உடைக்கவும் தான் பல முயலுகின்றார்கள் 

மக்களுக்காக... போராடிய, புலிகளை விமர்சிக்கும் உங்களுக்கு, 
இந்தக் கேள்வி கேட்கும்... அருகதை உள்ளதா? அர்ஜுன்.

மக்களுக்காக... போராடிய, புலிகளை விமர்சிக்கும் உங்களுக்கு, 
இந்தக் கேள்வி கேட்கும்... அருகதை உள்ளதா? அர்ஜுன்.

போராட்டம் பிழையாக மாறியதால் வந்த விமர்சனம் அது .

உங்கள் சொல் கேளாமல் எங்கள் சொல் கேட்டிருந்தால் புலிகளும் அழிந்திருக்கமாட்டார்கள் அநியாயமாக் இவ்வளவு மக்களும் அழிந்திருக்கமாட்டார்கள் .

அங்கு என்ன நடக்கின்றது என்று தெரியாமல் துதி பாடியவர்கள் தான் அதிகம் .

குறிப்பாக போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தது தனது சொந்த வாழ்வை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் .

விடுமுறைக்கு போட்டு வந்து இனி நாட்டில யாரை யுத்தத்திற்கு தள்ளலாம் என்று யோசிக்கின்றார் போல .

... நான் இனி கொலிடே போறதென்றால் .. ஒரு பாங்கை அல்லவோ சுற்றி வர வேண்டும்! 

 

ஐயா, புரிகிறது.

ஆனால், நாங்கள், 'கோரி' அடைந்தது எதுவும் இல்லை. 

அவர்கள், 'கோரியதை மறுத்து' தாமாவது உயர்ந்ததும் இல்லை.

இரு பகுதியுமே, காயங்களை தடவியபடி, முட்டாள்தனங்கள் குறித்த கவலையுடன் அடுத்தது என்ன என்று தவிக்கும் நிலை.

இங்கே தான் நல்லெண்ணம் உருவாகும் சாத்தியம். அதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கும் புறச்சூழல்.

சூரியன் மறையா சாம்ராஜ்யம் என்று மார்தட்டிய பிரிட்டனை, கிற்லர் எனும் பறச்சூழல் தடுமாற வைத்தது. இரண்டாவது உலக யுத்தம் இல்லாவிடில் பல நாடுகள் இனனும் பிரிட்டனின் பிடியில்...

சோழர் காலத்தில், சிங்களவர் அடிமைப்படுத்தப் பட்டார்கள், நாயக்கர் காலத்தில் கண்டி அரசு நம்வசம் போன்ற எவ்வகையிலும், இன்று, உதவா, பழைய வரலாறையும், நீங்கள் குறிப்பிட்ட சிங்கள -தமிழ் கசப்பான வரலாறுகளையும், ஒருபக்கம் வைத்து, இன்றைய சந்தர்ப்பத்தை மட்டும் பார்ப்போம்.

யுத்தம், எம்மைப் போலவே, அவர்களையும் மோசமாக பாதித்த வகையில், 'மறுத்து' ஒன்றாக சீரழிவதா, 'பகிர்ந்து' சேர்ந்தே உயர்வதா என்று சிந்திக்கும் அறிவு சிங்களவர்களுக்கு இதன் பின்னரும் இல்லாவிடில் அவர்களது எதிர்கால இழப்பு மிக, மிக, அதிகமாக இருக்கும்.

.

அண்ணா, எழுத எல்லாம் நல்லாக இருக்கும் நிஜத்தில் எல்லாம் பூ!

... இஸ்ரேல்-பலஸ்தீனம், இங்கிலாந்து-அயர்லாந்து, இந்தியா-காஷ்மீர்-பாகிஸ்தான், சூடான் -தென் சூடான், ... எழுதிக் கொண்டே போகலாம் ... உதுகளுக்கெல்லாம் பிடுங்காத உலகம் இலங்கையிலா??

எல்லாவற்ருக்கும் மேல் இந்தியா - அமெரிக்கா, சீனா அரசியல் எப்பவும் சிறிலங்கா பக்கம்!

...

இறுதியாக சர்வதேசத்தை நோக்கி விட்ட சத்தத்தை கூட ... இன்று தமிழர் தரப்பைக் கொண்டு அமுக்கப்படுகிறது!

 

இன்றைய சர்வதேச நிலைப்பாட்டினால், சிங்களம் பழைய சேட்டையை விட்டால், அந்நிலையில், தமிழர் தனிநாடு கூட கிடைக்கலாம்

நல்ல நகைச்சுவை!

  • கருத்துக்கள உறவுகள்

... நான் இனி கொலிடே போறதென்றால் .. ஒரு பாங்கை அல்லவோ சுற்றி வர வேண்டும்! 

இல்லாவிடில்..... கூட்டாக லொத்தர் விளையாடி...  650 ஆயிரம் கனேடியன் டொலர் பரிசு கிடைத்து...
"புலி... ஏவறை" விட்டுக் கொண்டு இருக்க வேண்டும்.:)

  • கருத்துக்கள உறவுகள்
அண்ணா, எழுத எல்லாம் நல்லாக இருக்கும் நிஜத்தில் எல்லாம் பூ!

... இஸ்ரேல்-பலஸ்தீனம், இங்கிலாந்து-அயர்லாந்து, இந்தியா-காஷ்மீர்-பாகிஸ்தான், சூடான் -தென் சூடான், ... எழுதிக் கொண்டே போகலாம் ... உதுகளுக்கெல்லாம் பிடுங்காத உலகம் இலங்கையிலா??

எல்லாவற்ருக்கும் மேல் இந்தியா - அமெரிக்கா, சீனா அரசியல் எப்பவும் சிறிலங்கா பக்கம்!

...

இறுதியாக சர்வதேசத்தை நோக்கி விட்ட சத்தத்தை கூட ... இன்று தமிழர் தரப்பைக் கொண்டு அமுக்கப்படுகிறது!

 

நல்ல நகைச்சுவை!

 

மிகவும் நொந்து போய் அதீத நம்பிக்கையீனத்தில் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

ஆனால், எதுவுமே நிரந்தரமில்லை என்பது உலக நியதி. 

காலம் மாறும்,கோலமும் மாறும்.

நான் முன்பே சொல்லி இருக்கிறேன், வாசித்தீர்களோ தெரியவில்லை.

ஆசியாவில், ஹாங்காங்கை இழந்த பின்னர், வேறு ஒரு 'நம்பிக்கையான'  பொருளாதார தளம் தேடும் மேற்குலகுக்கு  சிங்களைதினை விட, தமது நாடுகளின் குடியுரிமை வைத்திருக்கும், தமிழர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள். மத்திய கிழக்கில் இஸ்ரேலின் மேற்குலக விசுவாசம் போல என்று எடுத்துக் கொள்ளலாம்.

அந்தப் பகுதியில், சிறிய இலங்கை தீவுதான், அவர்களுக்கு பாதுகாப்பானது, நம்பிக்கைக்கு உரியது. சுலபமாகக் கையாளப் படக் கூடியது. முக்கியமாக, இலங்கை முஸ்லிம்கள், இலவச கல்வி முறைமையினால், படிப்பறிவு கொண்ட, அடிப்படை வாதத்தினால் இலகுவாக கவரப் பட முடியாத வர்களாக இருப்பதும் அவர்களுக்கு வாய்ப்பானது.

நாம் நினைப்பது போல அல்லாது, இந்தியாவின் கையை விட்டு இந்த பிரச்சனை, மேற்கே போய், பல்லாண்டுகள் ஆகி விட்டன. ஆயினும் இறுதி யுத்தம், இந்தியா நடத்தியது என்றே பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

மேற்கு நாடுகள், முக்கியமாக, அமெரிக்க, பிரிட்டிஷ் திட்டத்தின் ஒரு பகுதி தான், புலிகள் களத்தில் இருந்து நீக்கப்பட்டமை. அவர்களது திட்டத்தின் படி, புலிகளை அழிக்க செயல் பட்டவர்களை விசாரித்து தண்டனை தருவர் என்று நாம், நினைத்தால், அது நமது முட்டாள் தனம்.

இங்கே வாழும் எம்மவர் எதிர்ப்பு வரும் என்பதாலும், எதிர்கால நல்லெண்ணம் முக்கியம் என்பதாலும், சீனத்து ஆயுதங்களை வாங்கி சண்டை இட வைத்தார்கள். பாகிஸ்தான் ஊடாக தேவையான தமது ஆயுதங்களை கொடுத்தார்கள். 

இந்த நிலைப்பாடினை விளங்கி  அரசியல் செய்ய வேண்டும்.

இரு பகுதியுமே, ஆட்டு விக்கப்படுகின்றன. இரு பகுதியுமே நன்மை அடைந்தால் நன்று. 

இங்கே பழைய விடயங்கள் மறக்கப்படும். மறக்க முடியாவிடில், என்ன செய்ய முடியும்?

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.