Jump to content

ஆண்களுக்கு மட்டும்


Recommended Posts

ஆண்களுக்கு மட்டும்

சகோதரர்களே நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையாய் வருபவரிடம் எதிர்பார்க்கும் / எதிர்பார்த்த குணாதிசயங்கள் என்ன ?

பல இருந்தால் வரிசைப்படுத்திச் சொல்லுங்களேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடேங்கப்பா!!!! நல்ல கேள்வி.

என் பங்கிற்கு சொல்லி விடுகிறேன்

தமிழ் மொழிப் பற்று

ஆழமான கல்வி

என் உழைப்பில் வாழாமல் தன் சொந்தக் காலில் நிற்றல்

அன்பு நேர்மை, அஞ்சாமை, துணிவு

முக்கியமா செல்வி, கோலங்கள் அகல்யா ஆட்டுக்குட்டி போன்ற இழவுகளைப் பார்க்காமல் இருப்பது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இது வேறையா :icon_idea: சரி ஏதோ என் பங்குக்கு சொல்கிறேன்.

போதும் என்ற மனம். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூரிய வம்சம் திரைப் படத்தில் வரும் கதாநாயகியின் பாத்திரம் போல் ஒரு வாழ்க்கைத் துணை அமைந்தால் எங்களைப் போன்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்ய கடைசியில் சினிமா தான் கைகொடுத்து இருக்கு :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்ய கடைசியில் சினிமா தான் கைகொடுத்து இருக்கு :icon_idea:

பெண்ணுங்க எல்லாம் சினி ஸ்ரார் போல இருக்கிறதால...அவர் சினிமாவே தஞ்சம் என்று ஆகிட்டார் கடுப்பி அக்கா..என்ன செய்யலாம்..! :D

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ஆண்கள் பெண்களிடம் விரும்புவது

எந்தவொரு அழகான பெண்ணைக் கண்டாலும் பெரும்பான்மையான ஆண்களின் அடிமனதில் லேசான தடுமாற்றம் ஒன்று ஏற்படுவது உண்மையே..

ஆண்களைப் பொறுத்தவரையில் பெண்கள் குறித்த கருத்துக்களும் எதிர்பார்ப்புக்களும் வித்தியாசப்பட்டு வேறுபடுகிறது இருந்தாலும் பொதுவாக ஆண்கள் விரும்புவது..

அழகான விழியால் மொழி பேசுபவளாக

நீளமான கூந்தல் உடையவளாக

குடும்பத்தை காக்கும் குணம் உடையவளாக

இனிய குரல்வளம் உடையவளாக

இரக்க குணம் உடையவளாக

தன்னை மட்டும் நேசிப்பவளாக

நல்ல நிர்வாகியாக

நல்ல தாரமாக

நல்ல தாதியாக

நல்ல நண்பியாக

நகைச்சுவை உணர்வுள்ளவளாக

தன்னம்பிக்கை உள்ளவளாக

இப்படி அவர்கள் எதிர்பார்ப்பு நீண்டு கொண்டே போகின்றது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் பெண்களிடம் விரும்புவது

எந்தவொரு அழகான பெண்ணைக் கண்டாலும் பெரும்பான்மையான ஆண்களின் அடிமனதில் லேசான தடுமாற்றம் ஒன்று ஏற்படுவது உண்மையே..

ஆண்களைப் பொறுத்தவரையில் பெண்கள் குறித்த கருத்துக்களும் எதிர்பார்ப்புக்களும் வித்தியாசப்பட்டு வேறுபடுகிறது இருந்தாலும் பொதுவாக ஆண்கள் விரும்புவது..

1)அழகான விழியால் மொழி பேசுபவளாக

2)நீளமான கூந்தல் உடையவளாக

3குடும்பத்தை காக்கும் குணம் உடையவளாக

4)இனிய குரல்வளம் உடையவளாக

5)இரக்க குணம் உடையவளாக

6)தன்னை மட்டும் நேசிப்பவளாக

7)நல்ல நிர்வாகியாக

8)நல்ல தாரமாக

9)நல்ல தாதியாக

10)நல்ல நண்பியாக

11)நகைச்சுவை உணர்வுள்ளவளாக

12தன்னம்பிக்கை உள்ளவளாக

இப்படி அவர்கள் எதிர்பார்ப்பு நீண்டு கொண்டே போகின்றது. :lol:

மேலுள்ள அனைத்தும் ஒரு ஆண் சிங்கத்துக்கு நிறைவேற வேண்டுமானால் அவன் 12 பெண்களை அல்லவா திருமணம் முடிக்க வேண்டும். :lol:

Link to comment
Share on other sites

மேலுள்ள அனைத்தும் ஒரு ஆண் சிங்கத்துக்கு நிறைவேற வேண்டுமானால் அவன் 12 பெண்களை அல்லவா திருமணம் முடிக்க வேண்டும். :lol:
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சைதானே,ஏன் தெரியுமா? மனிதன் திருப்திப்பட்டிருந்தால் ஞானியாகியிருப்பானே.ஆகவே எந்தமனிதனின் எதிர்பார்ப்பும் நிறைவேறும்.அடுத்தகணம் அது போதாமல் இருக்கும்,அனால் அது வேறு இடத்தில் இருக்கிறது போலவும் தெரியும்.இதை அறிந்து தானோ என்னவோ பொருத்தம் பார்த்து இணைத்தார்கள்.ஆனால் அதையும் போலிக்குறிப்பு மோசடிகள் செய்து கெடுத்துவிட்டார்களே?
Link to comment
Share on other sites

மேலுள்ள அனைத்தும் ஒரு ஆண் சிங்கத்துக்கு நிறைவேற வேண்டுமானால் அவன் 12 பெண்களை அல்லவா திருமணம் முடிக்க வேண்டும். :lol:

ஹீம் என்ன குமாரசாமி ஒரு பெண்ணிடம் இவ்வளவு விடயமும் இருக்காது என்று சொல்லுகிறீர்களா?? சரி நம்ம யாழ்கள பெண்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம். என்னதான் இருந்தாலும் இன்றைய நாகரீக மாற்றத்தின் பயனாக பெண்களின் நிலைப்பாடுகளும் நடவடிக்கைகளும் மாற்றாத்திற்கு உட்பட்டுள்ளன. இதை பழமைவாதிகள் எதிர்க்கவும் புதுமைவிரும்பிகள் ஏற்கவும் செய்கின்றனர். இது காலத்தின் கட்டாயத்தால் தவிர்க்க முடியாததாகிவிட்டாலும் இந்த மாற்றத்தின் காரணமாக இருபாலாருமே கணிசமான அளவு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்பதுதான் உண்மை.

Link to comment
Share on other sites

மேலுள்ள அனைத்தும் ஒரு ஆண் சிங்கத்துக்கு நிறைவேற வேண்டுமானால் அவன் 12 பெண்களை அல்லவா திருமணம் முடிக்க வேண்டும். :lol:

இதெல்லாவற்றையும் ஒரு பெண்ணிடம் எதிர்பார்த்தால் இந்த ஜென்மத்தில் திருமணமே கிடையாது. சிலர் குணாதிசயங்களுடன் வரதட்சனையை வேறு எதிர்பார்க்கிறார்கள்.

Link to comment
Share on other sites

அடேங்கப்பா!!!! நல்ல கேள்வி.

என் பங்கிற்கு சொல்லி விடுகிறேன்

தமிழ் மொழிப் பற்று

ஆழமான கல்வி

என் உழைப்பில் வாழாமல் தன் சொந்தக் காலில் நிற்றல்

அன்பு நேர்மை, அஞ்சாமை, துணிவு

முக்கியமா செல்வி, கோலங்கள் அகல்யா ஆட்டுக்குட்டி போன்ற இழவுகளைப் பார்க்காமல் இருப்பது

:lol::D:D:D:D:D:lol::lol:

Link to comment
Share on other sites

ஒரு ஆய்வின் முடிவில முக்கியமா ஆண்கள் எதிர்பார்ப்பது அழகு என்று இருந்திச்சு இங்குள்ள ஆண்கள் ஒருவரும் அதைப்பற்றி சொன்ன மாதிரி தெரியலை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்களுக்கு மட்டும்

சகோதரர்களே நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையாய் வருபவரிடம் எதிர்பார்க்கும் / எதிர்பார்த்த குணாதிசயங்கள் என்ன ?

பல இருந்தால் வரிசைப்படுத்திச் சொல்லுங்களேன்

காத்திரமான விடயம், எல்லோரும் அலசுங்கோ!!!!!!!!!!!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆய்வின் முடிவில முக்கியமா ஆண்கள் எதிர்பார்ப்பது அழகு என்று இருந்திச்சு இங்குள்ள ஆண்கள் ஒருவரும் அதைப்பற்றி சொன்ன மாதிரி தெரியலை. :lol:

என்னைப்பொறுத்தவரைக்கும் ஆணுக்கோ பெண்ணுக்கோ மனம் அழகாக இருந்தால் அதுவே போதுமானது.எரிச்சல்,பொறாமை,போட்டி,நயவஞ்

Link to comment
Share on other sites

என்னைப்பொறுத்தவரைக்கும் ஆணுக்கோ பெண்ணுக்கோ மனம் அழகாக இருந்தால் அதுவே போதுமானது.எரிச்சல்,பொறாமை,போட்டி,நயவஞ்
Link to comment
Share on other sites

பணக்காரி தேவையில்லை

பகட்டுகளும் தேவையில்லை

பல்கலை சென்றுபெற்ற

பட்டமும் தேவையில்லை

பதியாகப் பாவித்துப்

பணிந்திடவும் தேவையில்லை

எஜமானாய்ப் பாவித்து

எனக்குழைக்கத் தேவையில்லை

இன்பமோ துன்பமோ

இணையாகப் பகிர்ந்து கொள்ளும்

உற்றநண்பன் போன்றதொரு

உறுதுணையைத் தேடுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

yarl matrimony ஒன்றைத் தொடங்கச் சொல்லுங்கள் பலருக்கு பேருதவியாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கிட ஆட்களின் திருமணம் இருக்கிறதே உலக மகா விசித்திரம்?

ஒரு ஆணுக்கு சம்பளம் இல்லாமல் காலம் முழுவதும் சமைச்சுப்போட மனைவி என்ற பெயரில் ஒரு வேலைக்காரி. ஒரு பெண்ணுக்கு வாழ் நாள் முழுவதும் சம்பாதிச்சுக் கொண்டு வந்து கொட்டுறதுக்கு கணவன் என்ற பெயரில் ஒரு வேலைக்காரன். திருமணமே ஒரு முதலாளித்துவக் கட்டமைப்பு.

கல்யாணம் தெய்வீகமானது என்ற சொல்லில் இருந்தே கல்யாணமும் பொய் தெய்வீகமும் பொய் என்பதை உணரலாம்.

திருமணம் முடிக்காமல் உண்மையான காதலுடன் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் முறை எவ்வளவோ மேலானது. திருவள்ளுவர் கூட வாழ்க்கைத் துணைநலம், இல்வாழ்க்கை போன்ற சொற்களைத்தான் பயன் படுத்துகிறார்.

அன்பும் அறமும்தான் ஆணும் பெண்ணும் இல்வாழ்வதற்கு தேவையான இருபெரும் காரணிகள்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது (குறள் 45)

Link to comment
Share on other sites

எங்கிட ஆட்களின் திருமணம் இருக்கிறதே உலக மகா விசித்திரம்?

ஒரு ஆணுக்கு சம்பளம் இல்லாமல் காலம் முழுவதும் சமைச்சுப்போட மனைவி என்ற பெயரில் ஒரு வேலைக்காரி. ஒரு பெண்ணுக்கு வாழ் நாள் முழுவதும் சம்பாதிச்சுக் கொண்டு வந்து கொட்டுறதுக்கு கணவன் என்ற பெயரில் ஒரு வேலைக்காரன். திருமணமே ஒரு முதலாளித்துவக் கட்டமைப்பு.

கல்யாணம் தெய்வீகமானது என்ற சொல்லில் இருந்தே கல்யாணமும் பொய் தெய்வீகமும் பொய் என்பதை உணரலாம்.

திருமணம் முடிக்காமல் உண்மையான காதலுடன் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் முறை எவ்வளவோ மேலானது. திருவள்ளுவர் கூட வாழ்க்கைத் துணைநலம், இல்வாழ்க்கை போன்ற சொற்களைத்தான் பயன் படுத்துகிறார்.

அன்பும் அறமும்தான் ஆணும் பெண்ணும் இல்வாழ்வதற்கு தேவையான இருபெரும் காரணிகள்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது (குறள் 45)

இளங்கோ.. நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது. ஆனால் காலம் மாறிக்கொண்டு வருகுது. பெரும்பாலும் வெளிநாடுகளில் பெண்களின் பொருளாதார சுதந்திரத்துக்கு வழி இருக்கு. ஆண்களுக்கும் தமிழ் சாப்பாட்டுக் கடைகள் இருக்கே..! :icon_idea:

திருமணக் கட்டமைப்பு என்பது என்னைப்பொறுத்த மட்டில் இன்றியமையாதது. அது ஒரு இல்லறப் பொறுப்புணர்வுக்கு வழிகோலும். இவ்வாறானவை இல்லையென்றால் கூடல்களும் பிரிவுகளும் மிகுந்து கடைசியில் ஒரு வீட்டில் 10 இனிசியல்களுடன் பிள்ளைகள் இருப்பார்கள். :icon_idea:

பெரும்பாலும் இல்லற வேற்றுமைகளுக்கு சிறுசிறு காரணங்களே அடிப்படையாக இருக்கும். ஒரு சமூகப் பொறுப்பு இருக்கும்போது விட்டுக்கொடுத்துச் செல்ல எத்தனிப்போம். ஒரு பொறுப்பு மண்ணாங்கட்டியும் இல்லாட்டில் அடுத்த சைட்தான்.. ஜல்சாதான்.. :icon_idea:

Link to comment
Share on other sites

என்னைப்பொறுத்தவரைக்கும் ஆணுக்கோ பெண்ணுக்கோ மனம் அழகாக இருந்தால் அதுவே போதுமானது.எரிச்சல்,பொறாமை,போட்டி,நயவஞ்
Link to comment
Share on other sites

ஒரு ஆய்வின் முடிவில முக்கியமா ஆண்கள் எதிர்பார்ப்பது அழகு என்று இருந்திச்சு இங்குள்ள ஆண்கள் ஒருவரும் அதைப்பற்றி சொன்ன மாதிரி தெரியலை. :icon_idea:

ரசிகை,

ஒரு பெட்டையை முதல்ல பார்த்த உடனே அவளின்ர குணமெல்லாம் எங்களுக்கு எப்பிடித் தெரியும்? அதனாலதான் நாங்கள் ஒரு ரோக் போட வெளிக்கிடுறது முதல்ல. ஆனால் அவையள் தாங்கள் ஐஸ்வரியா ராய்க்குத் தங்கச்சி போல சிலுப்பிக்கொண்டு போவினம். வேற வழியில்லாமல் நாங்கள் புற அழகைப் பார்த்து ரூட் பொடுறது. ஆய்வீல அதுதானே வெளீல வரும்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணம் ஏன் வந்தது??????????

தொல்காப்பியத்தில் விளக்கம் இருக்கிறது. ஏமாற்றங்கள் வருவதைத் தடுப்பதே அதற்கு முக்கிய காரணம்

உண்மையான அன்பும் காதலும் இருந்தால் ஏமாற்றங்கள் வர வாய்ப்பில்லை. அந்த ஏமாற்றங்கள் வர வாய்ப் பில்லாதபோது திருமணமும் தேவையற்றதாகிறது. திருமணம் ஒரு தனி உடைமையை நிறுவும் ஆதிக்கக் கட்டமைப்பு. பல குடும்பங்களில் ஆண் முதலாளி, ஒரு சில குடும்பங்களில் பெண் முதலாளி. சமுக அந்தஸ்து என்ற போலித்தனத்தைக் கட்டிக்காக்க போலி வாழ்க்கை வாழ்கின்றனர்.

பாரதி கூறியதைப் போல் விட்டு விடுதலையாகி நிற்போம் சிட்டுக்குருவியைப் போலே!

Link to comment
Share on other sites

ஆண்களும் பெண்களும் தாமாகவே தமது வாழ்க்கைத்துணையைத் தெரிந்தெடுக்கும் காலம் வரும்போது சில ஆண்களும் சில பெண்களும் தமக்கு எவருமே கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள் என்று எண்ணுகிறீர்களா. அதுதான் நடக்காது. எல்லா ஆண்களும் எல்லா பெண்களும் இறுதியில் ஏதோ ஒருவகையில் தமது துணைகளைத் தேர்ந்தெடுக்கக்தான் செய்வார்கள்.

இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் ஒவ்வொருவரதும் எதிர்பார்ப்புகள் எதுவாயிருந்தாலும் அது ஒரு நியதியாயிருக்கமுடியாது. வாழ்க்கைத்துணை பற்றிய ஒவ்வொருவரதும் எதிர்பார்ப்புகளும் வேறுபட்டவை அத்துடன் சமயம் வரும்போது எதிர்பார்புகள் தளர்த்தப்படுகின்றன அல்லது மாற்றியமைக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை. மேற்குறிப்பிட்ட இரண்டாவது வகையினருக்கு பெற்றோரால் வாழ்க்கைத் துணை நிச்சயம் செய்யப்படும்போது அது மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா! ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கு இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பகுதி) பிரதி செயலாளர் மிச்சேல் சங் இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். மிச்சேல் சங்கின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையவே சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்குகிறது. சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல் என்பவற்றை தடுப்பது உள்ளிட்ட இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதற்கட்டமாக இந்த விமானம் வழங்கப்படுவதாக மிச்சேல் சங் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380118
    • ரஷ்ய எல்லை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட 68 யுக்ரேனிய ஏவுகணைகள். யுக்ரேன் வான்பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரைவுபடுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது யுக்ரேனுக்கான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார் ரஷ்ய படையினரின் வான் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதனால் அவசரமாக தமக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக யுக்ரென் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்னை முன்வைத்திருந்தார் இந்த நிலையில் யுக்ரேனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான ராணுவ உதவியில் 6 பில்லியன் பெறுமதியான வான்பாதுகாப்பு உதவித்தொகை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது இதேவேளை யுக்ரேனில் ரஷ்யா இன்று அதிகாலை பாரிய விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் கார்கிவ் நகரில் உள்ள வைத்தியசாலை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ரஷ்ய எல்லை பகுதியில் சுமார் 68 யுக்ரேனிய ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1380087
    • எனக்கும் இதே கொள்கை தான், மற்றும் சொந்த இடம் சாவகச்சேரி தான் என்பதால் நீங்கள் சொல்லும் தகவல் உண்மை என இத்தால் அறிவிக்கப்படுகின்றது 🥹
    • இந்தியா மட்டுமா காரணம் ? சீனா, பாகிஸ்தான் , ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் காரணமில்லையா?   செப்டம்பர் 11 தாக்குதல் ,  நீண்டகால சமாதான பேச்சுவார்த்தை,  கருணா பிரிவு, தொழில்நுட்ப வளர்ச்சி , குடும்பத்தில் இருந்து ஒருவர் கட்டாயமாக சேர்தல் ( இதில் பல எதிரானவர்களும் இயக்கத்தில் ஊடுருவினார்கள்), காட்டி கொடுப்பு …… 2004 - 2009 காங்கிரஸ் கூட்டணியில் 16 தொகுதியில் திமுக வென்றிருந்தது. அந்த 16 பேரும் ஆதரவை விழக்கியிருந்தால் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா?  பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வென்ற 6 பெறும் ,  தமிழகத்தில்  இரு கம்னியூஸ்ட் காட்சிகளிலும் இருந்து வென்ற 4 பேரும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தார்கள். திமுக , காங்கிரஸ் ஆதரவை விலக்கினால் பாட்டாளி கட்சியும் ஆதரவை நீக்குமா?  இதே கூட்டணியில் இருந்த மதிமுக (4 வேட்பாளர்கள்) 2006 இல் ஆதரவை விலக்கியிருந்தது. அப்படி திமுக, காங்கிரசுக்கு ஆதரவை 2009 ஆரம்பத்தில்விலக்கபூபோவதாக சொன்னால்  ( வன்னியை மெல்ல மெல்லமாக சிங்களப்படைகள் 2009 சனவரியில் இருந்து கைப்பற்றியது) , 3 மாதத்தில் தேர்தல் வருகுதுதானே என்பதினால் காங்கிரஸ் தனது இலங்கைக்கு எதிராக செயல்பட்டிருக்குமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.