Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'எனது முகம் அனைவருக்கும் பிடிக்கும் என்று இல்லைதானே' - வடமாகாண முதலமைச்சர்

Featured Replies

article_1447478279-cv.jpg

'எனது முகம் அனைவருக்கும் பிடிக்கும் என்று இல்லைத்தானே. ஒருவருக்கு என்னைப் பிடிக்கும் மற்றவருக்கு என்னைப் பிடிக்காது. இதுவே நியதி' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  கூறினார்.

வடமாகாண முதலமைச்சரை கட்சியிலிருந்து நீக்குமாறு, கட்சியின் தலைமையிடம் கோரியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அவுஸ்திரேலியாவில் கூறிய கருத்துத் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் தற்போது பதில் சொல்ல முடியாது. அதற்கான பதிலை நான் தாயார் செய்து விரைவில் அது தொடர்பில் அறிவிப்பேன் என்றார்.

http://www.tamilmirror.lk/159067/-%E0%AE

  • கருத்துக்கள உறவுகள்

நிமிர்ந்த நன்னடை,நேரிய பார்வை, பண்புள்ளவனின் அடையாளங்கள். குனிந்த தலை, கள்ளப்பார்வை, தடம் புரண்ட கதை, அடக்கியாளும் குணம்.......? 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தருக்கு பின்னான காலத்தை கணக்கு பண்ணியே சி வியை சுமந்திரன் ஓரங்கட்டப்பார்க்கிறார்.

முதல்வரே நீங்கள் சம்பந்தன் சுமந்திரன் போன்ற விஷக்கிருமிகளின் தோலை உரித்து அவர்களின் சுய உருவதை  மக்களுக்கு காட்டிவிடுவீர்கள் என்ற அச்சத்தில்  சில சம்பந்தன் சுமந்திரன் வால்பிடிகளுக்க்கே உங்களை இப்போது பிடிப்பதில்லை.

இன்றைய தினம் வடமராட்சியில் உள்ள ஓர் பிரபல பாடசாலை அதிபருடன் கதைத்தபோது சொன்னார், விக்கியரை பற்றி ...

..."இன்று வரை எந்த தமிழரசு கட்சி, தமிழ் காங்கரஸ் கட்சி சார்ந்த தலைவர்கள் சாதிக்காததை சாதித்திருக்கிறார். அவரின் கைகள் கட்டப்பட்டபடி இருதரப்பினாலும்(சிங்கள அரசு, தமிழரசுக்கட்சி)கட்டப்பட்டிருக்கின்றது! அவரின் முயற்சிகள் இரு தரப்பினாலும் தடுக்கப்படுகின்றது. ஒன்றுமே செய்ய விடுகிறார்களுமில்லை, அப்படி இருப்பினும் அவரின் சாதனை என்னவென்றால், எல்லா மக்களின் மனங்களையும் வென்று விட்டார், ..." .... 

... இல்லை, விரும்பின் சும் சோதித்துப் பார்க்கட்டும்!

Edited by no fire zone

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினம் நண்பர் யௌவனனுடன் கதைத்த போது சொன்னார் தமது தந்தையார் (முதல்வர் விக்கி) அரசியலில் தொடர்ந்து இருப்பதானால் தமிழரசுக் கட்சியில் மாத்திரமே இருப்பாரெனெவும், இரத்தக் கறைகள் படிந்த மற்றைய கட்சிகளுடன் இணையமாட்டரெனவும் குறிப்பாக கஜே கோஸ்டியில் இணைய வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்தார்! 

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியில் எல்லாம் சேர்க்கத் தேவையில்லை.
விக்கி ஐயாவைப்போல நல்ல தலைவர்களாக இருந்தால் அவர்களை அடையாளங்கண்டு  அவர்களுடன் சேர்ந்தே அரசியல் செய்யத் தயாரான நிலையில் தான் என்றும் நாங்கள் இருக்கின்றோம்.
தலைமைப் பதவிக்காக அடிபடும் அற்ப அரசியல்வாதிகள் நாங்கள் இல்லை.

54 minutes ago, வாலி said:

நேற்றைய தினம் நண்பர் யௌவனனுடன் கதைத்த போது சொன்னார் தமது தந்தையார் (முதல்வர் விக்கி) அரசியலில் தொடர்ந்து இருப்பதானால் தமிழரசுக் கட்சியில் மாத்திரமே இருப்பாரெனெவும், இரத்தக் கறைகள் படிந்த மற்றைய கட்சிகளுடன் இணையமாட்டரெனவும் குறிப்பாக கஜே கோஸ்டியில் இணைய வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்தார்! 

எப்ப பார்த்தாலும் தலைப்புக்கு தேவையில்லாமல் கஜேயை இழுக்கிறீங்க. உங்களுக்கும் கஜேக்கும் ஏதாவது கடன் பிரச்ச்சனை இருக்கிறதா? அல்லது கஜே உங்கள் பரம்பரை பகையாளியா? ஏனென்றால் இந்த களத்தில் தேவையில்லாம் கஜேயை பற்றி நீங்கள் இழுத்து இழுத்து வம்பு பண்ணியது மிகவும் அதிகம். அதனால் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் இருந்து வந்தவரை எதற்கு முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கின்றனர் என இதே யாழ். கருத்துக் களத்தில் கத்திய தே(சூ)சியக் குஞ்சுகள் தற்போது விக்கினேஸ்வரன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவது வரவேற்கக் கூடியது.

மக்கள் முன்பாக விக்கினேஸ்வரன் அவர்கள் இருப்பதனால்தான் மக்களின் பிரச்சினைகளை அறிந்து வைத்து இருக்கின்றார். விக்கினேஸ்வரன் தொடர்ந்தும் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

விக்கினேஸ்வரன் அவர்களும் சில வேளைகளில் உணர்ச்சிவசப்பட்டு அறிக்கைகளை விடுகின்றார். அதனை அவர் தவிர்ப்பது நல்லது. சிலவற்றை ஆராயாமலேயே அறிக்கைகளை வெளியிட்டு அவரே மனம் வருந்திய சம்பவங்கள் நிறைய உண்டு. இது அவருடன் தொடர்பில் இருக்கின்றவர் கூறியது.

அவரது அறிக்கைகளை யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்து- பின்னர் வாசித்து வருகின்றார். இதில்தான் விக்கினேஸ்வரன் அவர்கள் தவறு விடுகின்றார். 

எடுப்பார் பிள்கைளின் கைப்பாவையாக விக்கினேஸ்வரன் அவர்கள் மாறிவிடக் கூடாது என்பதுதான் எனது கவலை.

என்ன இருந்தாலும் அவர் பிரேமானந்தாவை தொடர்ந்து வழிப்படுவதுதான் எனக்கு இடிக்கின்றது. (அவர் யாரை வழிபட வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட விருப்பம். எனினும் பல குற்றச் செயல்களை புரிந்தவரை இவர் வழிபடுவதுதான் முரணாக இருக்கின்றது.)

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரனுக்கும் சுமேந்திரனுக்கும் உள்ள முரண்பாடு அரசியலில் தனிப்பட்ட நலன் சார்ந்தது. அண்மையில் சுமேந்திரனின் பேட்டி ஒன்று கேட்டேன். அதில் உண்மையான காரணம் புலப்பட்டது. தமிழ் தேசிய உணர்வாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் விக்னேஸ்வரனை அரசியலுக்கு கொண்டு வந்து முதலைச்சராக்குவதில் சுமேந்திரன் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்திருக்கிறார். அந்த தேர்தலுக்கு நிதி சேர்க்க சுமேந்திரன் கனடா வந்து போனார்.

ஆனால் தேசிய பட்டியலில் இருந்த சுமேந்திரன் இந்த முறை யாழ்ப்பாண தேர்தலில் நின்ற போது விக்னேஸ்வரன் அவருக்கு ஆதரவளிக்காது ஸ்ரீதரன் மற்றும் கஜேந்திரன் போன்றோரை ஆதரிக்கும் கருத்துக்களை வெளியிட்டார். மேலும் கனடா சென்று நிதி சேகரிக்க மறுத்து தன்னால் பயணம் செய்ய முடியாது என்றார். பின்னர் அமெரிக்கா வந்து நின்ற போதும் கனடா செல்ல மறுத்தார். இது தனிப்பட்ட அளவில் சுமேந்திரனின் அரசியல் வாழ்வை அழிக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டதாக சுமேந்திரன் கருதுகிறார் என்றே தெரிகிறது. இந்த முரண்பாட்டால் மக்களுக்கே பெரும் பாதிப்பு ஏற்பட இருக்கிறது.

 

2 hours ago, nirmalan said:

அவரது அறிக்கைகளை யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்து- பின்னர் வாசித்து வருகின்றார். இதில்தான் விக்கினேஸ்வரன் அவர்கள் தவறு விடுகின்றார். 

எடுப்பார் பிள்கைளின் கைப்பாவையாக விக்கினேஸ்வரன் அவர்கள் மாறிவிடக் கூடாது என்பதுதான் எனது கவலை.

நிர்மலன் எனக்குத் தெரிந்தவரை சிவி அவர்கள் தானேதான் உரைகளை எழுதுகின்றார். அது மட்டுமின்றி ஆவணப்படுத்தியும் வைத்துள்ளார். அவர் தான் எங்கு, எதை, எப்போது பேசினேன் என்பதை ஞாபகத்தில் வைத்திருப்பதற்காக செய்வது. இப்பழக்கமானது அவரது அரசியல் பிரவேசத்தின் பின்னரே தொடங்கப்பட்டது. அரசியல் சார்பற்ற சந்திப்புகளில் இவரது பேச்சுவன்மையைக் காணலாம். 

3 hours ago, nirmalan said:

கொழும்பில் இருந்து வந்தவரை எதற்கு முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கின்றனர் என இதே யாழ். கருத்துக் களத்தில் கத்திய தே(சூ)சியக் குஞ்சுகள் தற்போது விக்கினேஸ்வரன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவது வரவேற்கக் கூடியது.

நிர்மலன் அண்ணா ... இது புதிய விடயமல்ல .. கூத்தமைப்பை புலிகள் ஆரம்பித்தபோது, பழையனவற்றை மறந்து, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ என பலதுகளை அரவணைத்தபோதும் புலத்தில் பலர் ... நீங்கள் கூறும் சூ க்கள் ... எதிர்த்தார்கள்தான், பின்பு அவர்களின் செயற்பாடுகளால் ஏற்றுக்கொண்டோம்.

அதே போன்றுதான் விக்கியரும் .. கொழும்பு வாழ்க்கை என்று பலதை யோசித்தோம்! ஆனால் இன்று அவர் எம்மக்களில் ஒருவராகி விட்டார்! காலா காலமாக ஏமாற்ரிய தமிழரசு அரசியல் தலைவர்களிடமிருந்து வேறுபட்டார்! இன்று வடக்கில் ஒவ்வொரு வீட்டு மக்களின் மனங்களில்! எம் மக்களுக்காக மக்களோடு மக்களாக வாழும் அவரை நாம் ஏற்றுகொள்வதில் என்ன தயக்கம்!

உங்களுக்கு தெரியாததா? புதிய தேசியத்தலைவராக/புலிகளின் தலைவராக ஒருவர் 2008 முள்ளிவாய்க்கால் அழிவுகள் நடந்து முடியுமுன் முடிசூட முற்பட இங்கு யாழிலும் சிலர் விசில்கள் அடித்து கொண்டாடவில்லையா? பின் யமனுக்கே ஆட்டையை போடுபவன் என புரிந்ததும் தூக்கி எறியவில்லையா?

... புரியுங்கள் ... சூ க்கள் ... விபரமானவர்கள்!

2 hours ago, Jude said:

ஆனால் தேசிய பட்டியலில் இருந்த சுமேந்திரன் இந்த முறை யாழ்ப்பாண தேர்தலில் நின்ற போது விக்னேஸ்வரன் அவருக்கு ஆதரவளிக்காது ஸ்ரீதரன் மற்றும் கஜேந்திரன் போன்றோரை ஆதரிக்கும் கருத்துக்களை வெளியிட்டார். மேலும் கனடா சென்று நிதி சேகரிக்க மறுத்து தன்னால் பயணம் செய்ய முடியாது என்றார். பின்னர் அமெரிக்கா வந்து நின்ற போதும் கனடா செல்ல மறுத்தார். இது தனிப்பட்ட அளவில் சுமேந்திரனின் அரசியல் வாழ்வை அழிக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டதாக சுமேந்திரன் கருதுகிறார் என்றே தெரிகிறது. இந்த முரண்பாட்டால் மக்களுக்கே பெரும் பாதிப்பு ஏற்பட இருக்கிறது.

 

நண்றாக சொல்கிறீர்கள்.  இங்கே புலிகளுக்கு நிதி சேர்த்தவர்களையும்  உதவியவர்களையும் கேவலப்படுத்தியவர்களுக்காக எந்த முகத்தோடை  விக்கியர் வந்து நிதி கேட்பார்.  

சரி புலம் பெயர்தவை விக்கியரின் முகத்துக்காக காசு கொடுப்பார்கள்  தனக்காக இல்லாவிட்டாலும் எண்ற நரித்தனம் சுமந்திரனுக்கு இருந்து இருக்கலாம்.  ஆனால் இதை விக்கியர் புரிந்து கொள்ளாமலா இருந்து இருப்பார்.?

புலம்பெயர்ந்தவர்கள் அரசயல் செய்ய கூடாது கேக்கும் போது வீசி எறியும் இயந்திரமாக வைத்திருந்தால் தான் இப்ப  கூட்டமைப்புக்கு கல்லா கட்டும் போல.?  

இப்ப விளங்குங்குது  கூட்டமைப்புக்கு ஏன் கனபேர் குத்தி முறிகினம்  எண்டதும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.