Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க - இலங்கை இருதரப்புப் பேச்சு பெப்ரவரியில் வாஷிங்டனில் ஆரம்பம்!- அமெ. உயரதிகாரி ஷனோன் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்க - இலங்கை இருதரப்புப் பேச்சு பெப்ரவரியில் வாஷிங்டனில் ஆரம்பம்!- அமெ. உயரதிகாரி ஷனோன் அறிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 15 டிசெம்பர் 2015, 01:29.36 AM GMT ]
usa-shanon.jpg
இலங்கை அமெரிக்கா அரசுகளுக்கு இடையிலான இரு தரப்பு கூட்டுப் பேச்சு அடுத்த வருடம் பெப்ரவரியில் வாஷிங்டனில் ஆரம்பமாகவுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகர் தோமஸ் ஷனோன் தெரிவித்தார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்நிலைப் பதவிகளில் ஒன்றான அரசியல் விவகாரங்களுக்கான கீழ்நிலைச் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்கவுள்ள ஷனோன், உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தார். இவர் கையோடு வெளிவவகார அமைச்சர் மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சில் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை வாய்ப்புகள் நிறைந்த சுபீட்சத்தை நோக்கிய பயணம் செய்து கொண்டுள்ள நேரத்தில் நான் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளமையானது மகிழ்ச்சியளிக்கின்றது. இலங்கை சுபீட்சத்துடன் சந்தர்ப்பங்களுடன் முன்னோக்கிச் செல்கின்ற நேரத்திலேயே நான் எனது முதலாவது விஜயத்தை இலங்கைக்கு மேற்கொண்டுள்ளேன்.

இலங்கையில் நீண்ட கால சமாதானத்துக்கும் சுபீட்சத்துக்கும் இட்டுச் செல்வதற்கான பாதையை நாட்டின் தலைவர்களும், மக்களும் இணைந்து செயலாற்றி வருகின்றமையை வரவேற்கின்றோம்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நான் ஆக்கபூர்வமான பேச்சுகளில் ஈடுபட்டேன். அமெரிக்கா இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி குறிப்பிட்டது போன்று இலங்கையுடன் அமெரிக்கா இணைந்து நிற்பதற்குத் தேவையான வழிவகைகளையும் ஆராய்ந்தோம்.

எமது கைகோர்ப்பை மேலும் மேம்படுத்துவதற்காக உறுதிமிக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் ஆராய்ந்தோம்.

இலங்கை அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று ரீதியாகக் காணப்படும் பரிமாற்றங்களை வலுப்படுத்துவது, எமக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது, ஒத்துழைப்புக்களை தீவிரப்படுத்துவது தொடர்பாக இரு அரசுகளுக்கும் இடையில் கூட்டுப் பேச்சை ஆரம்பிப்பது தொடர்பாக கடந்த மே மாதம் அமெரிக்கா இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் அறிவித்திருந்தார்.

அதற்கமைய, இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது கூட்டுப் பேச்சு எதிர்வரும் 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வாஷிங்டனில் ஆரம்பமாகவுள்ளது என்பதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றேன் என்றார்.

http://www.tamilwin.com/show-RUmtzCSZSWluzD.html

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் 2016 இலங்கைக்கு அந்த மாதிரி இருக்கும் போல. நாட்டு மக்களுக்கு நன்மைகள் பல கிடைக்கவிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வாலி  இது சீனாவை இலங்கையிலிருந்து புறம் தள்ளும் நோக்கமே. இதில் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. கிடைத்தால் சந்தோசம்தான். நம்பிக்கை தானே வாழ்க்கை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

வாலி  இது சீனாவை இலங்கையிலிருந்து புறம் தள்ளும் நோக்கமே. இதில் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. கிடைத்தால் சந்தோசம்தான். நம்பிக்கை தானே வாழ்க்கை.

இலங்கை அரசியலில் இருந்து சீனாவை புறந்தள்ளத்தான் தற்போதைய அரசாங்கமே கொண்டுவரப்பட்டது என எல்லோருமே அறிந்த விடயம்தானே. இங்கு தமிழ் மக்களுக்கு என்று தனியே கிடைக்க வாய்ப்பு இல்லை. இலங்கை மக்களுக்கு அமெரிக்காவின் சகவாசம் நன்மை பயக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

இலங்கை அரசியலில் இருந்து சீனாவை புறந்தள்ளத்தான் தற்போதைய அரசாங்கமே கொண்டுவரப்பட்டது என எல்லோருமே அறிந்த விடயம்தானே. இங்கு தமிழ் மக்களுக்கு என்று தனியே கிடைக்க வாய்ப்பு இல்லை. இலங்கை மக்களுக்கு அமெரிக்காவின் சகவாசம் நன்மை பயக்கும்.

அப்ப 2016இல் சிங்களவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்  என்று எழுதி இருக்கலாம் தானே??? அமெரிக்காவின் சகவாசத்தினால் நமை அடைந்த நாடுகளை விட அழிந்த, அடிபட்டுக்கொண்டு இருக்கின்ற நாடுகளின் பட்டியல் தான் அதிகம்.

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மக்கள் என்றால் சிங்களவரும் அடக்கம் தானே!<_< இனி இலங்கையில் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் இடமில்லை என இலங்கை அதிபர் கூறியதினை நினைவுபடுத்துகின்றேன். ஆனால் அமெரிக்காவின் சகவாசத்தால் மேம்பட்ட நாடுகளும் இருக்கின்றனவே! நல்லது நடக்கும் என்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, வாலி said:

இலங்கை மக்கள் என்றால் சிங்களவரும் அடக்கம் தானே!<_< இனி இலங்கையில் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் இடமில்லை என இலங்கை அதிபர் கூறியதினை நினைவுபடுத்துகின்றேன். ஆனால் அமெரிக்காவின் சகவாசத்தால் மேம்பட்ட நாடுகளும் இருக்கின்றனவே! நல்லது நடக்கும் என்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை! :rolleyes:

ஒவ்வொழு மனிதனுக்கும் நம்பிக்கைதான் வாழ்க்கை.......tw_thumbsup:
அது தமிழ்ச்சனத்துக்கு எவ்வளவு காலத்துக்கெண்டு நீங்கள் சொன்னியளெண்டால் இன்னும் நல்லாயிருக்கும். எனக்கு உந்த கூட்டணி கூட்டமைப்புகளிலை பெரிசாய் நம்பிக்கையில்லை கண்டியளோ...tw_thumbsdown:

  • கருத்துக்கள உறவுகள்

வாலி இனி இலங்கையில் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் இடமில்லை என இலங்கை அதிபர் கூறிய பின்பும்  போதுபல சேனா தலைவர் என்ன சொன்னவர்  எண்டு உங்களுக்கும்  தெரியும் தானே. அதெல்லாம் இலங்கை அதிபரின் காதில விழாதோ?? 

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்

இவைக்கு என்ன பிரச்சனை... ஓ சீனா வந்து போவது தானே. இதில எங்கடையள் சிலது சரி சந்தோசப்படுகுதுகளாம் ஏன்.! சிங்களவன் பெரிசா எலும்பு தூக்கி வீசுவானுன்னா. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றில்லை. ஆனால் கூட்டமைப்பின் குரல் எல்லோரினதும்  ஒருமித்த கருத்தாக இருக்க வேண்டுமே தவிர குறிப்பிட்ட ஓரிருவரின் கருத்தாக மட்டும் இருக்கக் கூடாது என்பதே எனது அவா!!

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு இன்று பெயரளவில் தான் கூட்டா இருக்குது. சம் சும் கும்பல் அதனைச் சுக்குநூறாக்கிட்டுது. புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பை சமாளிக்க எல்லாரும் கூட்டமைப்பில் இருப்பதாக காட்டிக்கொண்டிருக்கினம். சிங்களவனுக்கும் அமெரிக்கனுக்கும் இந்தியனுக்கும் இவைட உண்மை நிலை தெரியும். எனி இவையை நாய்க்கும் மதிக்கமாட்டான். சிங்களவனுக்கு போடுற எலும்புகள் மிச்சம். அவன் நினைச்சதை செய்வான்.

இப்ப அமெரிக்க எஜமானன் தாராளமாக உள்ள வரும் வகையில்.. சில ஏற்பாடுகள் நடக்கின்றன. மனித உரிமை மேம்படுகிறது. ஜனநாயகம் உச்சமடைகிறது.. இன ஐக்கியம் உச்சாரக் கொப்பை அடைகிறது.. இனவாதம் இல்லாமல் போகிறது எல்லாம். இவை எல்லாம் அடையாள அளவில் தான். ஆனால் நடவடிக்கைகள் இவை எல்லாம் தலைகீழாக நடந்து கொண்டிருக்கும். சிங்களவனுக்கு புலிகளை தவிர வேறு யாரையும் சமாளிப்பதில் எப்போதும் சிக்கல் இருந்ததில்லை. அதனால் தான் புலி அழிப்பு அவனுக்கு முக்கியமாப்பட்டது. எங்கடையள் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல்.. இப்ப நக்கிழந்து அலையுதுகள். இதுதான் இவை புலி அழிப்புக்கு வால்பிடிச்சு கண்ட மிச்சம். இப்ப அமெரிக்கனுக்கும் சிங்களவனுக்கும் அழைப்பில்லாமல் வால் பிடிக்கினம்.. நக்க ஏதாவது போடுவானுன்னு. சிலதுக்கு அந்தக் கவலையே இல்லை... ஏனென்னா அதுங்க ஏலவே அங்க தான் நக்கிக்கிட்டுக் கிடக்குதுங்க. tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஒவ்வொழு மனிதனுக்கும் நம்பிக்கைதான் வாழ்க்கை.......tw_thumbsup:
அது தமிழ்ச்சனத்துக்கு எவ்வளவு காலத்துக்கெண்டு நீங்கள் சொன்னியளெண்டால் இன்னும் நல்லாயிருக்கும். எனக்கு உந்த கூட்டணி கூட்டமைப்புகளிலை பெரிசாய் நம்பிக்கையில்லை கண்டியளோ...tw_thumbsdown:

கட்டாயம் சொல்லத்தான் வேணும். பொறுங்க வாறன் கணக்குப் பார்க்கிறன். 

2009-1976+1=34

ஒரு 34 வருசம் எண்டு வச்சுக்கொள்ளங்கையன். <_<

1 hour ago, Eppothum Thamizhan said:

வாலி இனி இலங்கையில் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் இடமில்லை என இலங்கை அதிபர் கூறிய பின்பும்  போதுபல சேனா தலைவர் என்ன சொன்னவர்  எண்டு உங்களுக்கும்  தெரியும் தானே. அதெல்லாம் இலங்கை அதிபரின் காதில விழாதோ?? 

இல்லை எனக்குத் தெரியாது. என்ன சொன்னவர்?

  • கருத்துக்கள உறவுகள்

77 தேர்த்தல் விஞ்ஞாபனத்திலும் நிறைய வாக்குறுதிகளை கூட்டமைப்பு அள்ளி வீசியதாமே. தமிழீழம் உட்பட.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாலி said:

 

இல்லை எனக்குத் தெரியாது. என்ன சொன்னவர்?

நக்கல். ம்ம் . இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானது மற்றவர்களெல்லாம் வந்தேறு குடிகள் என்று சொன்னவர் எண்டு வாசிச்ச ஞாபகம். ஒருவேளை அது கனவோ???

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நான் உண்மையில் நக்கலடிக்கவில்லை. அந்த செய்தி கண்ணில் படவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

 அமெரிக்காவில இருந்தும் ஏதாவது நல்லது வருமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.