Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முல்லைத்தீவில் ஆடைத் தொழிற்சாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி

Featured Replies

முல்லைத்தீவில் ஆடைத் தொழிற்சாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி
முல்லைத்தீவில் ஆடைத் தொழிற்சாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி
(இரண்டாம் இணைப்பு)
 
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்துள்ளார்.
 
'ஹைட்ராமணி' என்ற குறித்த ஆடைத் தொழிற்சாலையை திறந்து வைத்துள்ள ஜனாதிபதி, அங்குள்ள பணியாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளோடும் கலந்துரையாடியுள்ளார்.
 
மேலும், குறித்த நிகழ்வில் அண்மையில் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டவரான ஜெனீவனையும் அவரது குடும்பத்தினரையும் ஜனாதிபதி சந்தித்துள்ளார்.
 
அத்தோடு, இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொது மக்கள் போன்றோருக்கு கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் தெரிய வருகின்றது.
 
அத்தோடு, குறித்த ஜானதிபதியின் விஜயம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்ததோடு, முல்லைத்தீவில் பாதுகாப்புக்களும் பலப்படுத்தபப்ட்டு சில வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
 
                        m1.jpg
 
                        m2.jpg
 
                        m3.jpg
 
 
(முதலாம் இணைப்பு)
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஒன்றினை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்குப் பயணமாகியுள்ளார்.
 
குறித்த ஆடைத் தொழிற்சாலை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், குறித்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 
மேலும், இந்தநிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டதும் உடனடியாக கொழும்பு திரும்பவுள்ளார் என்றும் அங்குள்ள அரச அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

அதாரு, ரத்தின தேரரே பக்கத்தில?

கிழிஞ்சுது போ! :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தேசத்தில் ஆடைத்தொழிற்சாலைகள் என்பது சமூகச் சீரழிவின் முதல் என்று தான் சிங்கள மக்களாலேயே பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிங்கள இளம் பெண்களை அங்கு வேலைக்கு அனுப்ப சிங்கள மத்திய வர்க்கம்.. உயர் வர்க்கம் முன்வருவதில்லை. அந்தளவுக்கு அங்கு சமூகச் சீரழிவு நடக்கிறது.

அந்த திசையில் எமது சமூகத்தையும் இட்டுச் செல்ல அனுமதிக்க முடியாது என்பதை கவனத்தில் எடுத்து.. இந்த திட்டங்கள் மாகாண சபையின் பூரண கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டு.. எமது மக்களின் விழுமியங்கள் பாதிக்காத வகையில்.. பொருண்மிய மேம்பாட்டுக்கு இவை உதவ மாற்றி அமைத்தால் மட்டும் தான் இவற்றின் பயனை எம் மக்களுக்கு சமூக பாதிப்பின்றி கொண்டு செல்ல முடியும். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

சிங்கள தேசத்தில் ஆடைத்தொழிற்சாலைகள் என்பது சமூகச் சீரழிவின் முதல் என்று தான் சிங்கள மக்களாலேயே பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிங்கள இளம் பெண்களை அங்கு வேலைக்கு அனுப்ப சிங்கள மத்திய வர்க்கம்.. உயர் வர்க்கம் முன்வருவதில்லை. அந்தளவுக்கு அங்கு சமூகச் சீரழிவு நடக்கிறது.

அந்த திசையில் எமது சமூகத்தையும் இட்டுச் செல்ல அனுமதிக்க முடியாது என்பதை கவனத்தில் எடுத்து.. இந்த திட்டங்கள் மாகாண சபையின் பூரண கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டு.. எமது மக்களின் விழுமியங்கள் பாதிக்காத வகையில்.. பொருண்மிய மேம்பாட்டுக்கு இவை உதவ மாற்றி அமைத்தால் மட்டும் தான் இவற்றின் பயனை எம் மக்கள் சமூக பாதிப்பின்றி கொண்டு செல்ல முடியும். :rolleyes:

ஆம்.....

எனினும் ஒப்பீட்டளவில், தழிழர், முஸ்லிம் மக்களிலும் பார்க்க சிங்களவரிடையே வறிய மக்கள் அதிகம்.

அரசியல் ஸ்திர தன்மை வரும் போது புலம் பெயர் முதலீடுகள் இப்பகுதிக்கு வரலாம்.

அதுவரை இவை உதவட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, nedukkalapoovan said:

சிங்கள தேசத்தில் ஆடைத்தொழிற்சாலைகள் என்பது சமூகச் சீரழிவின் முதல் என்று தான் சிங்கள மக்களாலேயே பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிங்கள இளம் பெண்களை அங்கு வேலைக்கு அனுப்ப சிங்கள மத்திய வர்க்கம்.. உயர் வர்க்கம் முன்வருவதில்லை. அந்தளவுக்கு அங்கு சமூகச் சீரழிவு நடக்கிறது.

அந்த திசையில் எமது சமூகத்தையும் இட்டுச் செல்ல அனுமதிக்க முடியாது என்பதை கவனத்தில் எடுத்து.. இந்த திட்டங்கள் மாகாண சபையின் பூரண கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டு.. எமது மக்களின் விழுமியங்கள் பாதிக்காத வகையில்.. பொருண்மிய மேம்பாட்டுக்கு இவை உதவ மாற்றி அமைத்தால் மட்டும் தான் இவற்றின் பயனை எம் மக்கள் சமூக பாதிப்பின்றி கொண்டு செல்ல முடியும். :rolleyes:

புலம்  பெயர் மக்களின் தாமதமே இப்படியான வரவுகளுக்கு காரணம்...

இனியாவது

தாயகத்தின் மற்றய பகுதிகளிலாவது.....??

Edited by விசுகு

1 hour ago, விசுகு said:

 

புலம்  பெயர் மக்களின் தாமதமே இப்படியான வரவுகளுக்கு காரணம்...

இனியாவது

தாயகத்தின் மற்றய பகுதிகளிலாவது.....??

புலம்பெயர் மக்கள் நிறைய செய்ய முடியும். ஆனால் அதை செய்வதும் இல்லை, அதே போல் அக்கறையும் இல்லை.

உதாரணமாக தமிழ் கடைகளில் விற்கப்படும்  பரோட்டா, மிளகாய் தூள், மா, எண்ணெய் போன்ரவை எல்லாம், இந்தியாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது அல்லது தென் இலங்கை. இதை என் வடபகுதியில் செய்ய முடியாது ?

அதை விட எமது தமிழர்களால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கு  support service நிறவனங்களை கூட எமது பகுதியல் வைக்கலாம்.

Edited by Dash

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, நவீனன் said:

குறித்த நிகழ்வில் அண்மையில் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டவரான ஜெனீவனையும் அவரது குடும்பத்தினரையும் ஜனாதிபதி சந்தித்துள்ளார்

மைத்திரி நல்லவர்.

  • தொடங்கியவர்
முல்லைத்தீவில் ஆடை தொழிற்சாலை; ஜனாதிபதி மைத்திரிபால திறந்துவைத்தார்
2016-01-25 08:09:56

14389_mullaitivu-1.jpg

 

(சுதத் சில்வா)

 

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து ஊழியர்களுடன் உரையாடிய போது பிடித்த படம்.  

 

143894.jpg

14389_mullaitivu-2.jpg

 

14389_mullaitivu-3.jpg

             

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=14389#sthash.MA4RoufW.dpuf
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Dash said:

புலம்பெயர் மக்கள் நிறைய செய்ய முடியும். ஆனால் அதை செய்வதும் இல்லை, அதே போல் அக்கறையும் இல்லை.

உதாரணமாக தமிழ் கடைகளில் விற்கப்படும்  பரோட்டா, மிளகாய் தூள், மா, எண்ணெய் போன்ரவை எல்லாம், இந்தியாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது அல்லது தென் இலங்கை. இதை என் வடபகுதியில் செய்ய முடியாது ?

அதை விட எமது தமிழர்களால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கு  support service நிறவனங்களை கூட எமது பகுதியல் வைக்கலாம்.

உதவி செய்பவர்கள் பலர் உண்டு.அண்மையில் ஒரு விரிவுரையாளரை சந்தித்தேன் அவர் கிளிநோச்சி பொறியியல் பீடத்திற்கு பல உதவிகளை செய்கின்றார்....மேலும் விபரம் தேவையென்றால் கிளிநொச்சி பொறியீயல் பீட மாணவர்களுடன் தொடர்பு கொண்டு அறியவும்....

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:
முல்லைத்தீவில் ஆடை தொழிற்சாலை; ஜனாதிபதி மைத்திரிபால திறந்துவைத்தார்
2016-01-25 08:09:56

14389_mullaitivu-1.jpg

 

(சுதத் சில்வா)

 

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் புதிதாக அமைக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து ஊழியர்களுடன் உரையாடிய போது பிடித்த படம்.  

 

143894.jpg

14389_mullaitivu-2.jpg

 

14389_mullaitivu-3.jpg

 

இத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு என்பது வரவேற்கக்கூடியதே...

இதில் அரசியல் இல்லாது

முழுமையாக அங்கு வாழும் மக்களுக்கு அது பயன்படணும்

உயர் பதவிகளிலிருந்து அனைத்திலும் அவர்களுக்கே வேலை வாய்ப்புக்களை வளங்கணும்

இல்லையென்றால் சீரளிவுகள் தொடரத்தான் வாய்ப்புக்கள் அதிகம்..

 

  • கருத்துக்கள உறவுகள்

இதை நான் வரவேற்கிறேன் ஏனெனில் இங்கே உள்ள  மக்களின் வாழ்வாதாரம் பின் தங்கிய நிலையில்  உள்ளது  இதில் வேலை கிடைத்து தங்களின் குடும்ப வருமானத்தை பெருக்கி சந்தோசமாக வாழட்டுமே

கிழக்கில் அம்பாறையில் அமைந்துள்ள  ஆடை தொழிற்சாலையில் பல நூறு பெண்கள் வேலை செய்கிறார்கள் அவர்கள் நிறைய பேர் தன் கணவனை யுத்தத்தால் இழந்தவர்களும் மற்றும்  வேலை கிடைக்காமல் குடும்பத்தில் வாழும் பெண்களும் அந்த தொழில் சாலைக்கு சொந்த காரர் தயா கமகே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, முனிவர் ஜீ said:

இதை நான் வரவேற்கிறேன் ஏனெனில் இங்கே உள்ள  மக்களின் வாழ்வாதாரம் பின் தங்கிய நிலையில்  உள்ளது  இதில் வேலை கிடைத்து தங்களின் குடும்ப வருமானத்தை பெருக்கி சந்தோசமாக வாழட்டுமே

கிழக்கில் அம்பாறையில் அமைந்துள்ள  ஆடை தொழிற்சாலையில் பல நூறு பெண்கள் வேலை செய்கிறார்கள் அவர்கள் நிறைய பேர் தன் கணவனை யுத்தத்தால் இழந்தவர்களும் மற்றும்  வேலை கிடைக்காமல் குடும்பத்தில் வாழும் பெண்களும் அந்த தொழில் சாலைக்கு சொந்த காரர் தயா கமகே. 

எனது மனப்போக்கும் உங்களதைப் போலவே!

ஆனால் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அரசியல் விளையாட்டுக்கள் விளையாடாத வரைக்கும்......எமது கலாச்சாரங்களை அழிக்காத வரைக்கும் சந்தோசம்.

அவர்கள் எமக்காக சிலுவை தூக்க வேண்டாம். அவர்கள் அழியாமல் இருக்க வேண்டும் என்ற ஆதங்கம் மட்டுமே என்னிடம் இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.