Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மழைக்காலம் துவங்கும் - ராஜன் விஷ்வா

Featured Replies

12549026_10205698755653779_8192344968966

 

மழைக்காலம் துவங்கும்

மேய்ச்சல் நிலங்களை
புற்கள் போர்த்தியிருக்கும்

எல்லாம் எரிந்த சாம்பலிலிருந்து
மூங்கில் துளிர்க்கும்

நொண்டி நாய் தங்க நிறகுட்டிகள்
நான்கை ஈனும்

நீண்ட குரலெடுத்து பாடும்
ஒற்றை வால்க்குருவி கூடடைந்திருக்கும்

வண்ணத்து பூச்சியொன்றின்
நிறங்கள் குலைந்திருக்கும்

தூறல் நின்றபின்
வெளிக்கிடும் தவளைக்காக
நீர்ப்பாம்பு கரையை பார்த்திருக்கும்

குயவனின் கனவுகளுக்குள்
தலைபிரட்டை நீந்த கற்றிருக்கும்

சம்பா நாற்று நீரில் மிதந்திருக்கும்
பெருங்கிழவன் உளம் விளைந்திருக்கும்

செப்பனிடாத கூரைவழியோடும் மழையருவி
சிலந்தியின் பின்னலில்

சன்னல்களை வரைந்திருக்கும்

 

விட்டில் பூச்சியின் சிறகில்

விடிந்த பின்னும்  ஒளிர்ந்தபடி

விளக்கு மரங்கள் 

 

செம்படவனின் தோணிக்குள் தங்கமீன்

புதுநீர்பரப்பை கண்டதாய் சிலாகித்திருக்கும

மீண்டுமொரு மழைக்காலம் இப்படியான
ஏதாவதொன்றை பிரசவிக்கும்

புலரா இரவில் பெய்யும்
பெருமழையில் நடந்தபடி நான்
நனைந்து கொண்டிருப்பேன்...

 

-ராஜன் விஷ்வா

Edited by ராஜன் விஷ்வா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமை. வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்... சுப்பர்...! நல்லதொரு மழைக்காலம்...!

கடைசியில் எனக்கு இப்படித் தோன்றியது:

புலரா இரவில் பெய்யும்

சாரலில் நனைந்தபடி நான்

நடந்து கொண்டிருப்பேன்....!  :)

  • கருத்துக்கள உறவுகள்

தூவானம் பட்டு துளிர்த்தது மனம் ஓடி விளையாடும் ஓடைகள் கண்டு உயிர் வந்தது உழவனுக்கு ஒரு பிடி உலகுக்கென்று......... சோறு??

  • கருத்துக்கள உறவுகள்

அருமை, ராஜன் விஷ்வா...!

மழையில் நனைந்த அனுபவம் ஏற்பட்டது...!

ஒரு கவிதையின் கருக்கட்டலும்.. அதன் பிரசவத்தின் வலியும் ஒரு தாயின் வலியைப் போலத் தான்...! 

நமது ஊரின் மழைக்காலத்து வாசனையை நுகர்ந்து நீண்ட காலமாகி விட்டது..! சிவப்புக் கம்பளப் பூச்சிகளுக்காகவும்...ஆங்காங்கே ஓடித்திரியும் மஞ்சள் பொட்டுகள் வைத்த கருநிற வண்டுகளுக்காகவும் ஏங்கி நிற்கிறது மனசு! 

அத்துடன் மழைக்காலத்து இரவுகள் தரும் வசந்த காலத்து நினைவுகளும் வந்து போகின்றன!

 

உடலைப்  பிரிந்த சேலைத் தாவணிகள்....

ஊடல் முனகல்களால் தூக்கம் கலையும்!

 

விடி விளக்குளின் வெளிச்ச நாக்குகள்,

மெல்லத் தங்களை உள்ளிழுத்துக்  கொள்ளும்!

 

நனைத்த முற்றங்களின் பாதிக் கோலங்களை...

கூந்தலின் ஈரம் மெல்லக் கலைக்கும்!

 

இன்னுமொரு ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ராஜன் விஷ்வா கவிதை எழுதினால் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்த்தேன்!

அதன் விளைவு தான் எனது வரிகள்!

தொடர்ந்தும் கவியுங்கள்.. விஷ்வா!

,

 

 

Edited by புங்கையூரன்
கூகிள் தமிழ் எழுத்துப் பிழை..!

சுப்பர் கவிதை. 80 களில் நான் சிறுவனாக இருந்தபோது அனுபவித்த மழைக்காலத்தை அனுபவிப்பது போல இருக்குது. ஆனால் இப்பொது அப்பிடியான மழையும் இல்லை அனுபவிக்க நேரமும் இல்லை.

  • தொடங்கியவர்

நன்றி சேயோன், சுவி, முனிவர்ஜீ :)

 

நீங்கள் எழுதியது இன்னும் சிறப்பாக உள்ளது சுவி அண்ணா.. சாரலில் தானே நனைய முடியும்.. 

 

கவிதைக்கெல்லாம் பதில் போடுறீங்க தனி மடலனுப்பினால் ஒன்றும் அனுப்புவதில்லை.... உங்களதும், சர்வேயரின் நினைவுகளை கிளறி விட்டதே இந்த கவிதை அதன் இலக்கை அடைந்துவிட்டதாக மனம் உணருகிறது... எப்போதும் போல உங்களன்பிற்கு எனது வணக்கங்கள் புங்கை அண்ணா.. :)

 

உங்கள் முன் நான் கத்துக்குட்டி தான் என்றைக்கும்.. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ராசா

கவிதையை வாசித்தபோது

தொலைத்த மண்ணும்

வாழ்க்கையும் கண்முன் வந்து கண்கள் இருண்டன...

ஒரு விதத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்

ஒருவித பொறாமை தான் வருகிறது...

தொடருங்கள்

வாழ்க வளமுடன்..

On 2016-01-29 at 4:35 AM, ராஜன் விஷ்வா said:

 

 

 

வண்ணத்து பூச்சியொன்றின்
நிறங்கள் குலைந்திருக்கும்

தூறல் நின்றபின்
வெளிக்கிடும் தவளைக்காக
நீர்ப்பாம்பு கரையை பார்த்திருக்கும்

 

 

-ராஜன் விஷ்வா

அருமை விஷ்வா... மழையையும் இயற்கையையும் லயிக்கும் மனசால் மட்டுமே இப்படி கவிதை எழுத முடியும்!

  • கருத்துக்கள உறவுகள்

பொருள் கொஞ்சம் இடிச்சுது, அதுதான்....!

பெருமழையில் யாரும் நடப்பார்களா, ஒன்றில் குடையுடன் போவினம் அல்லது ஓடிப் போவினம்.... எப்படியோ மிகவும் அருமையான கவிதை அதில் சந்தேகமில்லை....! (குறை நினைக்க வேண்டாம்....!).  :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 மழைக்கால கவிதை அருமையாக இருக்கின்றது விஷ்வா

கவிதை அருமை

  • தொடங்கியவர்
On 1/30/2016 at 11:11 PM, விசுகு said:

நன்றி ராசா

கவிதையை வாசித்தபோது

தொலைத்த மண்ணும்

வாழ்க்கையும் கண்முன் வந்து கண்கள் இருண்டன...

ஒரு விதத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்

ஒருவித பொறாமை தான் வருகிறது...

தொடருங்கள்

வாழ்க வளமுடன்..

மிக்க நன்றி அண்ணா... மழை எல்லா ஊரிலும் தானே பெய்யுது கவலையை விடுங்கள்.. மழையில் மழழையாய் மாறி மகிழ்ந்து இருங்கள்.  :)

On 1/30/2016 at 11:46 PM, நிழலி said:

அருமை விஷ்வா... மழையையும் இயற்கையையும் லயிக்கும் மனசால் மட்டுமே இப்படி கவிதை எழுத முடியும்!

நன்றி சகோ வாழ்த்திற்கு :)

On 1/30/2016 at 0:12 AM, suvy said:

பொருள் கொஞ்சம் இடிச்சுது, அதுதான்....!

பெருமழையில் யாரும் நடப்பார்களா, ஒன்றில் குடையுடன் போவினம் அல்லது ஓடிப் போவினம்.... எப்படியோ மிகவும் அருமையான கவிதை அதில் சந்தேகமில்லை....! (குறை நினைக்க வேண்டாம்....!).  :)

உங்களது குறைகள் என்னை மேருகூட்டத்தானே, மகிழ்வே என்றும்  :)

நன்றி கு.சா மாமா... விகடகவி அண்ணா :)

கவிஞரே உங்கள் கவிதையில் ஈசல்களுக்கும் சிறு இடம் கொடுப்பீர்களா? உங்கள் கவிதையை வாசித்தபோது ஈசலின் நினைவு வந்தது. கரையான் புற்றில் இருக்கும் கரையான்கள் ஈசலாகி??? பின்னர் மின்குமிழ்களில் மோதி தற்கொலை செய்யும் காட்சிகள் நினைவில் வருகின்றன.

  • தொடங்கியவர்
On Friday, February 05, 2016 at 3:57 AM, கலைஞன் said:

கவிஞரே உங்கள் கவிதையில் ஈசல்களுக்கும் சிறு இடம் கொடுப்பீர்களா? உங்கள் கவிதையை வாசித்தபோது ஈசலின் நினைவு வந்தது. கரையான் புற்றில் இருக்கும் கரையான்கள் ஈசலாகி??? பின்னர் மின்குமிழ்களில் மோதி தற்கொலை செய்யும் காட்சிகள் நினைவில் வருகின்றன.

Aa

ஆகா மறந்தேவிட்டேன்.. 

 

விளக்கு மரங்களின் வெளிச்சத்தை

இறந்த பின்னுன் ஈசல் ஒளிர்ப்பதாய் எழுதியுள்ளேன். 

 

நன்றி அண்ணா கருத்திற்கும் பச்சை புள்ளிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.