Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தியது யாழ். பல்கலைக்கழகம்

Featured Replies

புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தியது யாழ். பல்கலைக்கழகம்
 
 
 

article_1456464636-JaffnaUni.jpg-குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தாடி வளர்த்தல் மற்றும் மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் புடவை அணிதல் ஆகிய கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் விரும்பினால் மாத்திரம் அவற்றைப் பின்பற்றலாம் எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு, இன்று வெள்ளிக்க்கிழமை (26) முதல் நடைமுறைக்கு வருவதாக, கலைப் பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமாரனை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகின.

கல்விசார் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள், விரிவுரை மண்டபங்களுக்கு டெனிம் ஜீன்ஸ் மற்றும் டிசேட் அணிந்து வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தாடியுடன் விரிவுரைகளுக்கு வருவதும் தடை செய்யப்படுவதாகவும், மாணவிகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புடவை அணிந்து விரிவுரைகளுக்கு வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்ததுடன், இவை பேரவையில் எடுக்கப்பட்ட முடிவாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், பேரவையில் அவ்வாறு ஒரு முடிவு எடுக்கப்படவில்லையெனவும், இவ்வாறான ஆடைக்கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் கலைப்பீடாதிபதியுடன் இன்று வெள்ளிக்கிழமை (26) தமிழ்மிரர் தொடர்புகொண்டு கேட்டபொழுது, 'விதிமுறைகள் மாணவர்களை துன்புறுத்துவதாக இருக்கக்கூடாது. நாங்கள் கட்டாயமாக எந்த அறிவித்தலையும் விடவில்லை. இவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என்று, பேரவையில் கூறினோம். அதிலும் தாடியுடன் மாணவர்கள் விரிவுரைகளுக்கு வருவது அவர்களின் தனிப்பட்ட விடயம். அதில் நாங்கள் தலையிடமுடியாது' என்றார்.

'மாணவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள் என்றில்லை. நடைமுறைகளால் மாணவர்கள் துன்புறுத்தப்படக்கூடாது. ஆடைகள் தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. கட்டாயப்படுத்துவது எங்கள் நோக்கமில்லை.

முஸ்லிம் மாணவிகள் தங்கள் கலாசாரத்தை பேணுவதை வரவேற்கின்றோம். மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் கருத்துக்களை கூறினோம். அதனைச் சிந்திக்கக் கோரினோம். இந்த நடைமுறைகளை பேணுவதற்கு மாணவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்' என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/166932/%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B4-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE-#sthash.NT1bKb2F.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கருத்துகள மேதைகளின் கருத்துக்களுக்கு கிடைத்த‌ மாபெரும் வெற்றி.....:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

யாழ் கருத்துகள மேதைகளின் கருத்துக்களுக்கு கிடைத்த‌ மாபெரும் வெற்றி.....:rolleyes:

 

1 hour ago, putthan said:

யாழ் கருத்துகள மேதைகளின் கருத்துக்களுக்கு கிடைத்த‌ மாபெரும் வெற்றி.....:rolleyes:

ஏதோ எம்மால முடிஞ்சது.:D:

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, putthan said:

யாழ் கருத்துகள மேதைகளின் கருத்துக்களுக்கு கிடைத்த‌ மாபெரும் வெற்றி.....:rolleyes:

நன்றி புத்தன் அவர்களே!!

'நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்'.:(

நான் புல்லானாலும் யாழ்களத்தில் புல்லானேன்.:) 

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தி அரசரட்ணத்தின் மீது இருந்த நம்பிக்கையால் இந்தக் காட்டு விதிகள் அமல்படுத்தப் படாமல் போகும் என்ற நம்பிக்கை இருந்தது. அது போலவே நடந்திருக்கிறது.

ஆனாலும், கலாச்சாரம் காத்தல், உடை நிர்ணயித்தல் அது இது என்று தலிபான் கணக்காக சிலர் மற்றத் திரியில் பிளந்து கட்டியது சிரிப்பை வரவழைத்தது. அவர்களுக்கு விளங்காத விடயம் இது தான்: பல்கலை என்பது ரியூஷன் கொட்டில் மாதிரி தரவுகளை விழுங்கிப் போட்டு வாந்தி எடுக்கும் ஒரு இடமல்ல! அது மாணவர்களுக்கு வித்தியாசமான ஒரு வாழ்க்கை முறையை அறிமுகம் செய்யும் இடம்! அங்கே உடையில் கூட சுதந்திரம் இல்லையென்றானால் அங்கிருந்து பட்டம் பெற்று வருவோரும் கசப்புணர்வும் பிற்போக்குத் தனமும் கொண்ட சமூகத் தலைவர்களாக வெளி வருவார்கள். சிறிலங்காவின் எந்தப் பல்கலையும் அப்படிப் பட்ட பிற்போக்குத் தனத்திற்குள் விழாது என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது! :) 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி... முற்போக்குத்தனம் என்பது வெறும் ஜோடியிலும், தாடியிலும் பார்ப்பதல்ல.
மாணவர்களுக்கு தன் சுய ஒழுக்கம் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலே போதும்.

ஆனாலும் வெள்ளிக்கிழமைகளில் எங்கள் பெண்களை காட்டுன்(cotton) சாரியிலும், தலையில் பூவுடனும் பார்க்கும் பாக்கியமே பாக்கியம். 

Edited by Sasi_varnam

3 hours ago, Justin said:

வசந்தி அரசரட்ணத்தின் மீது இருந்த நம்பிக்கையால் இந்தக் காட்டு விதிகள் அமல்படுத்தப் படாமல் போகும் என்ற நம்பிக்கை இருந்தது. அது போலவே நடந்திருக்கிறது.

ஆனாலும், கலாச்சாரம் காத்தல், உடை நிர்ணயித்தல் அது இது என்று தலிபான் கணக்காக சிலர் மற்றத் திரியில் பிளந்து கட்டியது சிரிப்பை வரவழைத்தது. அவர்களுக்கு விளங்காத விடயம் இது தான்: பல்கலை என்பது ரியூஷன் கொட்டில் மாதிரி தரவுகளை விழுங்கிப் போட்டு வாந்தி எடுக்கும் ஒரு இடமல்ல! அது மாணவர்களுக்கு வித்தியாசமான ஒரு வாழ்க்கை முறையை அறிமுகம் செய்யும் இடம்! அங்கே உடையில் கூட சுதந்திரம் இல்லையென்றானால் அங்கிருந்து பட்டம் பெற்று வருவோரும் கசப்புணர்வும் பிற்போக்குத் தனமும் கொண்ட சமூகத் தலைவர்களாக வெளி வருவார்கள். சிறிலங்காவின் எந்தப் பல்கலையும் அப்படிப் பட்ட பிற்போக்குத் தனத்திற்குள் விழாது என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது! :) 

Super Comment Justin.

  • கருத்துக்கள உறவுகள்

 

இது தான் யாழ் பல்கலைக்கழக குழப்பகர நிர்வாகத்தின் இன்றைய நிலை.. பாட்டும் நானே.. பாவமும் நானே. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Justin said:

வசந்தி அரசரட்ணத்தின் மீது இருந்த நம்பிக்கையால் இந்தக் காட்டு விதிகள் அமல்படுத்தப் படாமல் போகும் என்ற நம்பிக்கை இருந்தது. அது போலவே நடந்திருக்கிறது.

ஆனாலும், கலாச்சாரம் காத்தல், உடை நிர்ணயித்தல் அது இது என்று தலிபான் கணக்காக சிலர் மற்றத் திரியில் பிளந்து கட்டியது சிரிப்பை வரவழைத்தது. அவர்களுக்கு விளங்காத விடயம் இது தான்: பல்கலை என்பது ரியூஷன் கொட்டில் மாதிரி தரவுகளை விழுங்கிப் போட்டு வாந்தி எடுக்கும் ஒரு இடமல்ல! அது மாணவர்களுக்கு வித்தியாசமான ஒரு வாழ்க்கை முறையை அறிமுகம் செய்யும் இடம்! அங்கே உடையில் கூட சுதந்திரம் இல்லையென்றானால் அங்கிருந்து பட்டம் பெற்று வருவோரும் கசப்புணர்வும் பிற்போக்குத் தனமும் கொண்ட சமூகத் தலைவர்களாக வெளி வருவார்கள். சிறிலங்காவின் எந்தப் பல்கலையும் அப்படிப் பட்ட பிற்போக்குத் தனத்திற்குள் விழாது என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது! :) 

கசப்புணர்வு பிற்போக்குத்தனம் பற்றி சிந்திப்பவர்கள்......கல்லூரி / மகாவித்தியாலய சீருடைகளிலும் கொஞ்ச கரிசனையை காட்டவேண்டும். அல்லது நான் தவறாக சொல்லி விட்டேனா? :)

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

கசப்புணர்வு பிற்போக்குத்தனம் பற்றி சிந்திப்பவர்கள்......கல்லூரி / மகாவித்தியாலய சீருடைகளிலும் கொஞ்ச கரிசனையை காட்டவேண்டும். அல்லது நான் தவறாக சொல்லி விட்டேனா? :)

மனிதனுக்கு ஆறிலிருந்து பதினெட்டு வயது வரைக்கும் இருக்கக் கூடிய நிலைக்கும், 23 (அது தான் பல்கலையினுள் நுழையும் அனேக மாணவர்களின் வயது!) வயதின் நிலைக்கும் உள்ள வித்தியாசம் தெரியாவிட்டால் இப்படிப் பட்ட தவறுகள் நிகழும் கு.சா! மேலேயே சொல்லி விட்டேன், ஏன் பல்கலை என்பது பள்ளிக்கூடத்தை விட வித்தியாசமெண்டு.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.