Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் இஸ்லாத்துக்கு மாறும் இளம் தமிழ் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2847_1456547515_PhototasticCollage-2016-

மட்டக்களப்பில் இஸ்லாத்துக்கு மாறும் இளம் தமிழ் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.

 

(கரும் புயல்)மட்டக்களப்பில் புனித இஸ்லாத்துக்கு மாறும் இளம் தமிழ் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக மட்டக்களப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்குக்காரணம் வறுமையே எனத்தெரியவருகின்றது. வறுமையின் நிமித்தம் காரணமாக கடைகளில் வேலை செய்யும் யுவதிகள் முஸ்லிம் இளைஞர்களை காதலிப்பதுடன் அவர்களை திருமணம் செய்து கொள்ள கட்டாயம் புனித இஸ்லாத்தை தழுவவேண்டியேற்படுவதாக அண்மையில் ஏறார் கடையொன்றில் வேலைசெய்துஇஸ்லாத்துக்கு மாறிய பன்குடாவெளியைச்சேர்ந்த 22 வயது யுவதியொருவர் தெரிவித்தார்.

அத்துடன் நாம் வறுமையிண் வாடுகின்றோம் எமது ஆலயங்களில் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன இச் சொத்தினை எம்மைப்போன்ற ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்தலாமே?

பள்ளிவாசல்கள் செய்யும் வேலையினை ஏன் எமது ஆலயங்கள் செய்யக்கூடாது என கேள்வி எழுப்புகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வகையான இந்து அமைப்புக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இவ்வாறான நடவடிக்கைகளை ஏன் இன்னும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் தாங்கள் தங்கள் குடும்பம் அறிக்கைகள் என்று ; இருக்காமல் மாதத்தில் ஒரு கிராமம் என்ற ரீதியில் மக்களின் வீடுகளுக்கு சென்று மக்களின் குறைநிறைகளை கேட்றியுங்கள் வாக்குகேட்டு வீடுவீடாக சென்ற உங்களுக்கு ஏன் மக்களின் குறைகளை கேட்க அவர்களின் வீட்டுக்கு செல்ல முடியாது.

தாங்கள் எடுக்கின் மாதாந்த வேதனம் அந்த மக்கள் தங்களுக்கு இட்ட ….. என்பதை யாரும் மறக்கக்கூடாது.எடுக்கின்ற ……. ஆவது நன்றி சொல்ல அந்தமக்களின் வீட்டுவாசலுக்கு தயவு செய்து செல்லுங்கள்.

நமது இளம் யுவதிகள் ஒரு நாளைக்கு எத்தனைபேர் வறுமை காரணமாக மட்டக்களப்பில் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்கள் என்ற தகவலையாவது மட்டக்களப்பு அரசியல் வாதிகளே தயவு செய்து அறிந்து வையுங்கள்.

http://www.battinaatham.com/description.php?art=2847

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகளோ அல்லது சமூக நிறுவனங்களோ வலுக்காட்டாயமாகவோ அல்லது பணத்தாசை காட்டியோ மாற்றுசமய மக்களை இஸ்லாமிய மார்க்கத்தினுள்ளே இழுத்துவரவில்லை.

 

மாறாக தம்முடைய சமயக்கோட்பாடுகள் மற்றும் சமூக, சமுதாய கட்டமைப்புக்களின் மீது அதிருப்தி கொண்ட அதிகமான இந்து, கிறிஸ்த்தவ மக்கள் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அவ்வாறானவர்கள் இஸ்லாமிய சமயத்தின் மீதும் முஸ்லிம் சமூகத்தைப்பற்றியும் கொண்ட சரியான புரிந்துணர்வின் காரணமாக இஸ்லாம் சமயத்தை தமது சுய விருப்பத்திற்கமைய தேர்ந்தெடுக்கின்றபோது அவர்களை வரவேற்கக்கூடிய பணியைத்தான் சமூக நிறுவனங்கள் மேற்கொண்டுவருகின்றன.

 மேலும் அவ்வாறு இஸ்லாமிய சமயத்தை தமது வாழ்வியல் நெறியாக ஏற்கின்ற மக்களுக்கு இஸ்லாம் சமயத்தை பற்றிய முறையான அடிப்படை கல்வி மற்றும் வழிபாட்டு முறைகளை கற்பிக்கவேண்டிய அவசியமான நிலைமை காணப்படுவதால் அதற்காக முஸ்லிம் தனவந்தர்கள் வழங்கக்கூடிய நிதிகளின் மூலமாக காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அதனை செயற்படுத்திவருகிறது.

 இது தவிர இஸ்லாமிய அமைப்புக்களோ தனிநபர்களோ இந்து, கிறிஸ்த்தவ மக்கள் வசிக்கக்கூடிய பிரதேசங்களுக்கு சென்று அங்கே சமயப்பிரச்சாரம் செய்வதோ, பணத்தாசை காட்டி அம்மக்களை மதமாற்றம் செய்வதோ எந்தவொரு இடத்திலும் இதுகாலவரை நடைபெற்றதாக பதிவுகள் இல்லை.

 அவ்வாறு கட்டாய மதமாற்றம் செய்யவேண்டிய யாதொரு தேவைப்பாடும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு கடுகளவும் கிடையாது. மேலும் இஸ்லாம் சமயமானது கட்டாய மதமாற்றத்தை கண்டிக்கக்கூடிய, எதிர்க்கக்கூடிய ஒரு சமயமாகவும் இருந்துவருகிறது. மாத்திரமன்றி கட்டாய மதமாற்றம் செய்யப்படுவர்களால் அந்த சமயங்களை சரியாக, முறையாகப்பின்பற்றி தமது வாழ்வியல்நெறியாக ஏற்று வாழவும் முடியாதென்பதும் நிதர்சனமான உண்மையாகும்.

 எனவே கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பை தளமாகக்கொண்டு இயங்கிவருகின்ற சில துவேசதார ஊடகங்கள் காத்தான்குடிவாழ் இஸ்லாமிய அமைப்புக்களும் அரசியல்வாதிகளும் வறுமை நிலையிலுள்ள மக்களிடம் பணத்தாசை காட்டி கட்டாய மதமாற்றம் செய்வதாக பரப்பி வருகின்ற செய்தி உண்மைக்குப்புறம்பானது. எதுவித அடிப்படையோ, ஆதாரமோ இல்லாதது என்பதை உரியவர்கள் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

 

http://www.vidiyalaithedi.com/

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களாக மாறின பிறகாவது அந்த மக்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கட்டும்.புலத்தில இருக்கிறவன் காசு அடிக்கிறதிலும்,பங்கு பிரிப்பதிலும்,பதுக்குவதிலும் பிசி.

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கு.. அடிபட்டால் என்ன அடிபடாட்டில் என்ன ஒத்தைக் காலைத் தூக்குவது போல இப்ப ஊரில நடக்கிற எல்லாத்துக்கும் காரணம்.. புகலிடத்தில் உள்ள காசும்.. காசடிக்கிறவனும்... தான் என்றாகிப் போச்சு.

ஏன் ஊரில கோவில் உண்டியல்கள் இல்லையோ... உடைச்சு பகிர்ந்தளிக்கிறது.

முஸ்லீம்களுக்கு சௌதி போன்ற நாடுகள் மத விரிவாக்கம்.. அதனுடன் கூடிய நில ஆக்கிரமிப்புக்கு நிதி உதவி வழங்குது. அவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால்.. எம் கோவில் உண்டியல்கள் ஏன் இதனைக் கவனிப்பதில்லை..????! :rolleyes:tw_warning:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாம் என்பது இன்று அடிப்படைவாதிகளால் கடத்தப்பட்டிருக்கிறது. இதன்பின்னால் பாரிய பணபலமும் இருக்கிறது. ஆகவே வறுமையைக் காரணம் காட்டி பல தமிழர்கள் மதமாற்றம் செய்யப்படுவது நடக்கிறது. ஆனால் இதற்கு மாற்றீடாக எம்மிடம் ஏதாவது முயற்சிகள் இருக்கிறதா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

 

ஒருவேளை உணவிற்கு ஏங்குபவர்களிடம் போய் அவர்களின் உடனடித் தேவைக்கு தீர்வொன்றை முன்வைக்காது மதமாற்றம் செய்யாதே என்று போதிப்பது எடுபடுமா என்று தெரியவில்லை.

 

எதுவாக இருந்தாலும், நடப்பது நல்லதற்கல்ல. இது தமிழர் தாயகத்தின் அளவையும், இருப்பையும் குறைக்கக் கூடியது என்பதுமட்டும் தெளிவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை எங்கடைசனம் ஜெகோவா யேசு அழைக்கிறார் எண்டு அங்கை இஞ்சை அலையேல்லையே!!!! அதுமாதிரி அங்கையும் கூத்து நடக்குது......என்னத்தைக்காட்டி மயக்கினாங்களோ ஆருக்குத்தெரியும்? 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை எங்கடைசனம் ஜெகோவா யேசு அழைக்கிறார் எண்டு அங்கை இஞ்சை அலையேல்லையே!!!! அதுமாதிரி அங்கையும் கூத்து நடக்குது......என்னத்தைக்காட்டி மயக்கினாங்களோ ஆருக்குத்தெரியும்? 

 

கு.சா,

 

நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். ஜெகோவாவின் சாட்சிகளென்று கிறீஸ்த்தவ மதப் பிரிவுகளும் மதமாற்றம் செய்கின்றன. நானும் ஒரு கிறீஸ்த்தவனாக இருந்தபோதும், இப்படியானவர்களின் மதமாற்ற முயற்சிகளை வெறுக்கிறேன். எனது மூதாதையர்கள் எதற்காக மதம் மாறினார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் பிறக்கும்போது நான் கத்தோலிக்கன் என்று சொன்னார்கள், அதனால் அப்படியே இருக்கிறேன். அது சரியா தவறா என்று ஒருபோது எண்ணிப் பார்த்ததில்லை.

 

என்னைப் பொறுத்தவரையில் நான் தமிழன், அதற்குப் பிறகுதான் மீதமெல்லாம். நான் தமிழன் என்று அடையாளப் படுத்தப்படுவதைத்தான் விரும்புகிறேன். என்னுள் இருக்கும் கலாச்சாரமும், பழக்க வழக்கங்களும், சம்பிரதாயங்களும், தமிழரின் பாரம்பரியங்கள், ஆகவே என்னைத் தமிழிலிருந்து பிரித்துப் பார்க்க நான் ஒருபோது எத்தனித்ததில்லை. அப்படி வேறுபடுத்தினால் எனது அடையாளத்தை நான் தொலைத்தவன் ஆகிவிடுவேன் என்கிற நியாயமான பயம் எனக்கிருக்கிறது.

தமிழன் என்கிற அடிப்படியில் இந்துவாகிய உங்களுக்கும், கத்தோலிக்கத்தைப் பின்பற்றும் எனக்கும் எந்த வேறுபாடும் இருப்பதாக நான் ஒருபோதும் நினைக்கவில்லை. எமது இருவரினதும் ஒரே குறிக்கோள், எமது தாயகத்தின் விடுதலையும், தமிழ் மொழி அதன் கலாச்சாரத்தின் நிலையான இருப்புமாகத்தான் இருக்குமென்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

ஆனால், இஸ்லாம் என்று வரும்போது, அவர்கள எம்மிலிமிருந்து தனிப்பட்டவர்களாக, அந்நியப்பட்டவர்களாக, மதம்சார்ந்து தம்மை முன்னிலைப் படுத்துபவர்களாக இருக்கிறார்கள். இது எமது தாயக, மொழி, கலாச்சார இருப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.

அடிப்படையில் நாம் தமிழர்கள், சைவமும், கத்தோலிக்கமும் பிறகு வந்தவை. உங்களுக்கு அதில் சந்தேகம் வேண்டாம்.

5 minutes ago, ragunathan said:

 

கு.சா,

 

நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். ஜெகோவாவின் சாட்சிகளென்று கிறீஸ்த்தவ மதப் பிரிவுகளும் மதமாற்றம் செய்கின்றன. நானும் ஒரு கிறீஸ்த்தவனாக இருந்தபோதும், இப்படியானவர்களின் மதமாற்ற முயற்சிகளை வெறுக்கிறேன். எனது மூதாதையர்கள் எதற்காக மதம் மாறினார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் பிறக்கும்போது நான் கத்தோலிக்கன் என்று சொன்னார்கள், அதனால் அப்படியே இருக்கிறேன். அது சரியா தவறா என்று ஒருபோது எண்ணிப் பார்த்ததில்லை.

 

என்னைப் பொறுத்தவரையில் நான் தமிழன், அதற்குப் பிறகுதான் மீதமெல்லாம். நான் தமிழன் என்று அடையாளப் படுத்தப்படுவதைத்தான் விரும்புகிறேன். என்னுள் இருக்கும் கலாச்சாரமும், பழக்க வழக்கங்களும், சம்பிரதாயங்களும், தமிழரின் பாரம்பரியங்கள், ஆகவே என்னைத் தமிழிலிருந்து பிரித்துப் பார்க்க நான் ஒருபோது எத்தனித்ததில்லை. அப்படி வேறுபடுத்தினால் எனது அடையாளத்தை நான் தொலைத்தவன் ஆகிவிடுவேன் என்கிற நியாயமான பயம் எனக்கிருக்கிறது.

தமிழன் என்கிற அடிப்படியில் இந்துவாகிய உங்களுக்கும், கத்தோலிக்கத்தைப் பின்பற்றும் எனக்கும் எந்த வேறுபாடும் இருப்பதாக நான் ஒருபோதும் நினைக்கவில்லை. எமது இருவரினதும் ஒரே குறிக்கோள், எமது தாயகத்தின் விடுதலையும், தமிழ் மொழி அதன் கலாச்சாரத்தின் நிலையான இருப்புமாகத்தான் இருக்குமென்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

ஆனால், இஸ்லாம் என்று வரும்போது, அவர்கள எம்மிலிமிருந்து தனிப்பட்டவர்களாக, அந்நியப்பட்டவர்களாக, மதம்சார்ந்து தம்மை முன்னிலைப் படுத்துபவர்களாக இருக்கிறார்கள். இது எமது தாயக, மொழி, கலாச்சார இருப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.

அடிப்படையில் நாம் தமிழர்கள், சைவமும், கத்தோலிக்கமும் பிறகு வந்தவை. உங்களுக்கு அதில் சந்தேகம் வேண்டாம்.

மிகவும் சரியான கூற்று , ஆனால் இது விளங்காமல் எங்கட அரசியல் சூனியங்க்கள் தேங்கா பூ புட்டு, கொத்து ரொட்டி இறைச்சி என்றெல்லாம் முஸ்லிமுடன் உறவாட முயர்சிக்கீனம்.

அத்துடன் ஜெய்ஹூவா சாட்ச்சியங்க்களை வெறுக்கும் கத்தோலிக்கர்களை தான் நானும் கண்டிருக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ragunathan said:

 

ஆனால், இஸ்லாம் என்று வரும்போது, அவர்கள எம்மிலிமிருந்து தனிப்பட்டவர்களாக, அந்நியப்பட்டவர்களாக, மதம்சார்ந்து தம்மை முன்னிலைப் படுத்துபவர்களாக இருக்கிறார்கள். இது எமது தாயக, மொழி, கலாச்சார இருப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.

 

அருமையான கருத்து ரகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.