Jump to content

ஐயோ அம்மா! ஏன் என் பிள்ளைக்கு பித்து பிடிச்சிடுச்சு


Recommended Posts

நோர்வே தமிழ் சங்கத்தின் இந்த நாடகம் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளின் வருங்காலத்தையும் அதனால் பெற்றொர் படபோகும் வேதனையையும் மிகவும் அற்புதமாக எடுத்து காட்டுது. இதற்கு என்ன உங்களின் தீர்வு என்பதை இங்கு பதிவுசெய்தால் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும். 

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு, சுகிர்தா அக்கா கலக்கிறா

மேடைக்கு கீள குறுக்கால மறுக்கால ஒருத்தரும் போகேல, ஆனால் வீடியோவ அங்கையும் இங்கையும் ஆட்டுறது பெரிசா குறையவில்லை

நாடகம்; பெரிசா நடிக்கவிலலை ஆனா நல்லா கதைச்சிருக்கினம், ஊத்த சொற்களை தவிர்த்திருக்கலாம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிப்பு அருமை.மன்மதன் அங்கிள் கூட்டணி போல் இவர்களும் நடிப்பில் பிரகாசிப்பார்கள். இவர்கள் நடிப்பில் செயற்கைத்தனம் இல்லாமல் இயல்பாக இருப்பது ரசிக்கக்கூடியதாக இருக்கு.அதுவே இவர்களின் வெற்றி.

Link to comment
Share on other sites

பத்தைக்குள்ள ஒரு சோடி பாம்பிருந்தாலும் பதினோரு பேரை கூட்டிக்கொண்டு போய் காட்டுற சனம் எங்கட சனம் - அந்தபாவம்தான் எனக்கு உங்களை கட்டி வைச்சிருக்கு. - பிடித்திருந்தது. 

மகள் நோர்வேஜிய மொழியிலே உரையாடி இருந்தாலும் அவை யதார்த்தத்தை பிரதிபலிப்பதாகவும் இருந்த்தது.  அதுவும் அந்த லங்கர் என்ற சொல்லை கேட்கும் போது மகளின் ஞாபகம் வருவதை தவிர்க்கி முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி,
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு வயிறு குலுங்க சிரிக்கவைத்த ஒரு நாடகம்.
அருமையான நகைச்சுவை கொண்ட வசனங்கள், யதார்த்தமான வெளிப்பாடு.

"வெள்ளைக்காரன் கொம்ப்பியூட்டரை கண்டு பிடிச்சான் 
எங்கடவங்கள் அதில சாதியை கொண்டு போய் சொருகீட்டாங்கள்" Punch !!tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்..சா அந்தமாதிரி இயற்கையாய் இருக்குது.........நடிப்பு எண்டே சொல்லேலாது. அதுசரி இப்ப உங்கை எல்லா வீடுகளிலையும் நடக்கிற பிரச்சனைதானே. நடிக்கவே தேவையில்லை......tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு லண்டன் வாழ் தமிழர்கள் மீது ஏனோ ஒரு காண்டு. அது இதிலும் பிரதிபலிக்கிறது. tw_blush:

Link to comment
Share on other sites

13 hours ago, குமாரசாமி said:

ச்..சா அந்தமாதிரி இயற்கையாய் இருக்குது.........நடிப்பு எண்டே சொல்லேலாது. அதுசரி இப்ப உங்கை எல்லா வீடுகளிலையும் நடக்கிற பிரச்சனைதானே. நடிக்கவே தேவையில்லை......tw_thumbsup:

நல்லா சொன்னீங்கள்.

எங்கட ஆட்கள் அதிகமா புலத்துக்கு வந்தது 90 க்கு பிறகு. அவர்களின் பிள்ளைகள் இப்பதான் கல்யாணம் கட்டும் வயதில் இருப்பார்கள். ஆகவே பெற்றோர்கள் இந்த பிரச்சனைய இப்பதான் எதிர் நோக்குவார்கள். நான் கதைச்ச ஒரு குடும்பம் இந்த பிரச்சனைய இப்ப எதிர்நோக்குது. அவர்களின் கருத்து பொடியன் ஒரு இந்திய அல்லது இலங்கை பேட்டைய கொண்டுவந்தால் சந்தோசமா கட்டிவைக்க தயார் என்றினம்.

2 hours ago, nedukkalapoovan said:

உந்த ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு லண்டன் வாழ் தமிழர்கள் மீது ஏனோ ஒரு காண்டு. அது இதிலும் பிரதிபலிக்கிறது. tw_blush:

ஐரோப்பிய வாழ் தமிழ் பிள்ளைகள் நல்லா தமிழ் கதைப்பினம். அப்படியே எங்கள் கலாசாரமும் தெரியும். உங்க லண்டனில் பிள்ளைகளுக்கு தமிழும் தெரியாது. எங்கள் கலாசாரமும் தெரியாது. நோர்வேய விட உங்க லண்டனில் தான் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறான். நீர் என்ன நினைக்கிறீர்.

இறுதியில் தமிழும் போய் எங்கள் கலாசாரமும் போகுது. இதுக்குதான் அப்ப சந்திரிக்கா தமிழனை வெளிநாடு போக வைச்சவள். இங்க பிள்ளைகள் கொண்டு வரும் மேலைத்தேய கலாசாரத்தை விட சிங்களவன் கலாசாரம் எவ்வளவோ மேல்.

நாங்கள் தமிழர் பெரியவர் காலில் கூட விழுவதில்லை. ஆனால் சிங்களவன் சிம்பிளா பெரியவர் காலில் விழுவான். எனக்கு என் பெடியன் ஒரு சிங்களத்த கட்டினால் கூட பரவாயில்ல. உந்த சீன, வெள்ளை, அல்லது காப்பிலிய கொண்டுவந்தால் பிள்ளைய கை கழுவி விட வேண்டியது தான். பிள்ளை இல்லாமல் என்ன பிற்கால வாழ்க்கை. நரகம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஊர்த் தமிழிலில், நல்ல குரலுடன்... நடித்துள்ளார்கள். Smiley
"ஐயோ...இவருக்கு,  பிறக் கத்தியாலும்... தேங்காய் வெட்ட தெரியாது, உங்களையே வெட்டப் போறார்" Smiley
"சோடிப் பாம்பு , போட்ட சோகம் தான்.... உங்களிட்டை வந்து, மாட்டுப் பட்டது"
"ஏன் பாருங்கோ.... உங்கடை பிள்ளையை உங்கடை வீட்டோடை கேட்டிருந்தால்,  பிரச்சினை முடிஞ்சிருக்கும் எல்லே......"
"அவன்... வளந்திட்டான்...." 
"பிடரியை.... பொத்தி போட்டுடுவான்,  பயம், + இங்கை ஒரு இளிச்ச வாய் இருக்கு, இங்கை கொண்டு வாறீங்கள்"  Smiley

அருமையான வசனம், அருமையான நடிப்பு.  அந்த நாடக நடிகர்களுக்கு பாராட்டுக்கள். Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, M.P said:

ஐரோப்பிய வாழ் தமிழ் பிள்ளைகள் நல்லா தமிழ் கதைப்பினம். அப்படியே எங்கள் கலாசாரமும் தெரியும். உங்க லண்டனில் பிள்ளைகளுக்கு தமிழும் தெரியாது. எங்கள் கலாசாரமும் தெரியாது. நோர்வேய விட உங்க லண்டனில் தான் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறான். 

ஐரோப்பாவில் மற்றைய நாடுகளில் பிள்ளைகள் தமிழ் கதைக்க முக்கிய காரணம்.. அந்தந்த நாட்டு பாசைகள் தாய் தகப்பனுக்கு பெரிசா வராதது தான். வீட்டில் தமிழ் தான் கட்டாயம் கதைக்க வேண்டிய சூழல். மற்றும்படி.. அங்கின உள்ளவையும் ஆங்கிலத்தில் கதைக்கிறது என்றால்.. ஒரு கெத்தாத்தான் பார்க்கினம்.

இங்கிலாந்தில்...  ஏதோ தெரிஞ்ச ஆங்கிலத்தை வைச்சு சமாளிச்சிடுவினம். மேலும் இங்கிலாந்திலும் ஊரில் இருந்து கிராமங்களில் வாழ்ந்துவிட்டு இங்கு குடிவந்தோர்.. குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் தமிழ் நல்லாக் கதைப்பினம். நகர்ப்புற இடம்பெயரிகள் தான்.. ஆங்கிலத்தில் முழுதாக மூழ்கி இருக்கிறார்கள். அதில பாதி பந்தா.

மற்றும்படி.. காதல்....  திருமணம் என்பது எமது சமூகத்தில் ஒரு சமூக வியாபாரம். அது இப்ப.. ஆடம்பர வியாபாரமாகிக் கொண்டு வருகுது. அதில இப்படி நடப்பது எல்லா இடமும் தான். ஐரோப்பாவில் என்று மட்டுமில்லை. tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

11 minutes ago, nedukkalapoovan said:

மற்றும்படி.. காதல்....  திருமணம் என்பது எமது சமூகத்தில் ஒரு சமூக வியாபாரம். அது இப்ப.. ஆடம்பர வியாபாரமாகிக் கொண்டு வருகுது. அதில இப்படி நடப்பது எல்லா இடமும் தான். ஐரோப்பாவில் என்று மட்டுமில்லை. tw_blush::rolleyes:

சிறப்பாக சொன்னீர்கள். இந்த நாடகத்தில் புரோக்கர் சொல்லுறார் இப்ப பிள்ளை மட்டும் படிச்சால் போதாது. பெற்றோர் என்ன படிச்சது எண்டும் கேக்கினமாம். இது பாருங்கோ பெரும் வேடிக்கையாய் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, M.P said:

இந்த நாடகத்தில் புரோக்கர் சொல்லுறார் இப்ப பிள்ளை மட்டும் படிச்சால் போதாது. பெற்றோர் என்ன படிச்சது எண்டும் கேக்கினமாம். இது பாருங்கோ பெரும் வேடிக்கையாய் இருக்கு.

படிச்சு பாஸ் பண்ணாத ஆட்கள் பாடு திண்டாட்டம் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

ஐரோப்பாவில் மற்றைய நாடுகளில் பிள்ளைகள் தமிழ் கதைக்க முக்கிய காரணம்.. அந்தந்த நாட்டு பாசைகள் தாய் தகப்பனுக்கு பெரிசா வராதது தான். வீட்டில் தமிழ் தான் கட்டாயம் கதைக்க வேண்டிய சூழல். மற்றும்படி.. அங்கின உள்ளவையும் ஆங்கிலத்தில் கதைக்கிறது என்றால்.. ஒரு கெத்தாத்தான் பார்க்கினம்.

என்ன நெடுக்கர்!  அவிட்டு விடுறதுக்கு இன்னும் இருக்கோ?  இல்லை இவ்வளவும் தானோ? எதோ எல்லார்ரை வீடு வாசல் எல்லாம் தெரிஞ்ச மாதிரி எழுதுறியள்!!!! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

என்ன நெடுக்கர்!  அவிட்டு விடுறதுக்கு இன்னும் இருக்கோ?  இல்லை இவ்வளவும் தானோ? எதோ எல்லார்ரை வீடு வாசல் எல்லாம் தெரிஞ்ச மாதிரி எழுதுறியள்!!!! :rolleyes:

இது.. நிறைய அவதானிச்சதில் வந்த பொது அறிவு... அண்ணே. tw_blush:

Link to comment
Share on other sites

நான் இதை ஆமோதிக்கிறன். 

ஊரில் ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட ஆங்கிலம் பேசும் தேசம் வந்தவுடன் தங்களின் கொச்சை ஆங்கிலத்தில் பிள்ளைகளுடன் கதைக்கிறவே.  பிறகு எப்படி பிள்ளைகள் தமிழ் கதைக்கும். எங்கள் பிள்ளைகள் வெள்ளைமாதிரி ஆங்கிலம் கதைத்தாலும் வெள்ளைக்காரன் எங்களை இந்தியன் என பொதுபடதான் சொல்லுவான். 

கடையில் தமிழ் ஆக்களின் சில ஆங்கிலம் எனக்கு UK வந்த ஆரம்பத்தில் விளங்கவில்லை. உதாரணம்:
யு கமிங், என?
யு டேக் பெட்ரோல், என?
இது சரியோ பிழையோ எனக்கு தெரியாது. ஏனெனில் எனக்கும் ஆங்கிலம் முழுவதுமாக தெரியாது. ஆனால் இந்த "என" என்பதை என்னுடன் ஆபீஸ்ல் வேலை பார்த்த ஒருவரும் பாவித்ததில்ல. யாரவது இதற்கு விளக்கம் தாங்கோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, M.P said:

யு கமிங், என?
யு டேக் பெட்ரோல், என?

இதெல்லாம் லண்டன் சிலாங்க் (slang). லண்டனுக்கு வெளி இடங்களில் வசிக்கும் வெள்ளைகள் இப்படிக் கதைப்பதில்லை. tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனது ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் வர அனுமதியளிக்காததால் சங்கடத்தில் அமெரிக்கா ! அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு : அரசாங்கத்தின் தீர்மானத்தால் கடும் அதிருப்தியில் வொஷிங்டன் அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்புக்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளதால், அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த ஆய்வுகப்பலில், பல்கலைக்கழக மாணவர்களே வருகைத் தருவதாகவும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவுமே அனுமதி கோரியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை கடல் பரப்புக்குள் ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்க கப்பல் வரவில்லை எனவும், எரிபொருள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும், அதற்கான அனுமதியை மறுத்துள்ள இலங்கை அரசாங்கம், எந்தவொரு பிற நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கும் இனி இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது. மேலும், எந்தவொரு ஆய்வு கப்பலையும் இலங்கை கடற்பரப்பிற்குள் இனி அனுமதிக்கப் போவதில்லை என்ற கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு அமையவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பதிலளித்துள்ளது. இதேவேளை, சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கும் தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டிய இலங்கை அரசாங்கம், எந்தவொரு நாட்டின் ஆய்வுகளுக்கும் இனி இலங்கைக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த கப்பலின் தேவைகளை, சர்வதேச கற்பரப்பிற்குள் சென்று பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனிடையே குறித்த அமெரிக்க ஆய்வுக் கப்பல், சென்னை துறைமுகத்துக்குள் செல்ல அனுமதி கோரப்பட்டுள்ள போதிலும் அங்கும் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380126
    • நாகப்பட்டினத்திலிருந்து – காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்! தமிழ்நாடு – நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல், மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அங்கு மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், மே மாதம் 11 ஆம் திகதி நாகை மாவட்டத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபடவுள்ளது. அதன்படி, மே மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு நாளும் கப்பல் சேவைகள் நாகையிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகையை சென்றடையும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த கப்பல் சேவையில், இரு வழிப் பயணத்துக்காக அண்ணளவாக 34 ஆயிரத்து 200 ரூபா அறவிடப்படவுள்ளதுடன் ஒவ்வொரு பயணியும் தம்முடன் 20 கிலோ வீதம் 3 பொதிகளை எடுத்துச் செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1380121
    • இங்கு பல்கலைக்கழகம் ஒன்றில் வேலை செய்யும் கோயம்புத்தூர்காரார் ஒருவரை சிலவருடங்களுக்கு முன்பு ஏன் தமிழகத்தில் ஊழல் செய்யும் திமுக அதிமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள் என்று கேட்டேன். திமுக, அதிமுக ஊழல் செய்தாலும் மக்களுக்கு ஓரளவு நலத்திட்டங்கள்செய்கிறார்கள். ஆனால் தேசிய கட்சிகள் தமிழகத்தை கண்டு கொள்வதில்லை என்றார். பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் சாதிக்கட்சிகள்.  தேதிமுகவுக்கு கொள்கையே இல்லை என்றார். இன்னுமொருவருடன்  கதைக்கும்போது திமுகவை வேண்டாதபோது அதிமுகவுக்கும் , அதிமுகவை வேண்டாதபோது திமுகவுக்கும் நடுநிலையானவர்கள் சிலர் வாக்களிக்கிறார்கள் என்றார்.  தமிழகத்தில் வறுமை கோட்டின் கீழ் இருப்பவர்கள் அதிகம். இவர்களுக்கு தேர்தல் நேரத்தில் பெரியகட்சிகள் பணம் குடுத்து கவருவார்கள் ( திருமங்கலம், R K நகர் தேர்தல் முடிவுகள்). ஒவ்வொரு தொகுதியிலும் , தொகுதியில் அதிக மக்கள் வாழும் சாதிக்காரரை வேட்பாளராக தேர்வு செய்வார்கள்.  தலித் சாதியினர் வன்னியருக்கு , வன்னியர் தலித்துக்கும் வாக்களிக்க மாட்டார்கள்.  சில தொகுதிகளில் சில வேட்பாளருக்கு தனிப்பட்ட செல்வாக்கு.  திமுக , அதிமுக்வுக்குள்ள நிரந்தரவாக்குகள், கட்சியில் தனக்கு போட்டியாளரை வேட்பாளராக தலைமை தெரிவு செய்ததினால் வேட்பாளரை விழுத்த சதி திட்டம் உட்பட பல காரணங்கள் ஒருவரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது.   இப்பொழுது தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை அதிகம். இதனால் அவர்கள் மோடியை தோற்கடிக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். எம் ஜீ ஆர், ஜெயலலிதா மாதிரி பிரபல்யமான தலைவராக ஏடப்பாடி இல்லாதது, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்திருப்பது திமுகவுக்கு சாதகம். 
    • ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள்  கூறாவிட்டாலும் அது தானே உண்மை.   மேற்கண்ட  இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை  உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.  ஆனால்,  தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை  ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை  அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர்.  நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி,  எச்சரிக்கும் தொனியில்,  “ஈழநாடே வாயை மூடு”  என்று,   அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.   நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.   உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.   நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள்.  இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.  உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று  இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு  அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம்.  மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.   இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.