Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.குடா நாட்டில் பெண்கள் இரவு 12 மணிக்கும் சுதந்திரமாக நடமாடும் காலம் வரும் வரையில் எனது நடவடிக்கைகள் தொடரும்- நீதிபதி இளஞ்செழியன்

Featured Replies

யாழ்.குடா நாட்டில் பெண்கள் இரவு 12 மணிக்கும் சுதந்திரமாக நடமாடும் காலம் வரும் வரையில் எனது நடவடிக்கைகள் தொடரும்- நீதிபதி இளஞ்செழியன்
 

(பாறுக் ஷிஹான்)

 

யாழ்.மாவட்­டத்தில் சட்ட ஒழுங்­குக்கு கட்­டுப்­பட்டு நடக்கும் சமு­தாயம் உரு­வாக வேண்டும். அந்த கட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு தான் இங்­குள்ள நீதிக்­கட்­ட­மைப்பு மற்றும் பொலிஸ் கட்­ட­மைப்பு இயங்கி வரு­கின்­றன.

 

குற்றம் செய்­ப­வர்­க­ளுக்கு தகுந்த தண்­டனை வழங்­கு­வதன் மூலமே தவ­றான வழியில் சென்று கொண்­டி­ருக்கும் சமூகம் ஒன்­றிணைந் திருத்த முடியும் என யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி மா. இளஞ்செழியன் தெரி­வித்தார்.

 

16820_DSC0121.jpg

 

சமூக சேவையில் நீண்ட காலம் ஈடு­பட்ட யாழ் மாவட்ட தேசோ­தய சபை உறுப்­பி­னர்­களை கௌர­விக்கும் நிகழ்வு  யாழ் சர்­வோ­தய மாவட்ட அலு­வ­ல­கத்தில் நடை­பெற்றபோது பிர­தம விருந்­தி­ன­ராக கலந்து கொண்ட நீதிபதி மேற்­கண்­ட­வாறு கூறினார்.

 

அவர் மேலும் தனது உரையில் ,யாழ்.மாவட்­டத்தின் கல்வி நிலை 1970 ஆம் ஆண்­ட­ளவில் உச்­சத்தில் காணப்­பட்­டது. நாட்டில் உள்ள அனைத்து பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் யாழ்.மாவட்ட மாண­வர்கள் காணப்­பட்­ட­னர்.

 

 ஆனால் இப்­போது யாழ்.மாவட்டம் கல்வி நிலையில் இரு­பத்­தி­யோராம் இடத்தில் உள்­ளது. நாம் 1970 ஆம் ஆண்­ட­ளவில் இருந்த கல்வி நிலையை மீள பெற வேண்டும்.இதற்­காக நாம் அனை­வரும் ஒன்று திரண்டு செயற்­பட வேண்டும். ஆசி­ரி­யர்கள் அதி­பர்கள், சமூ­கத்தில் உள்ள சேவை­யா­ளர்கள் ஒன்று திரள வேண்டும். 

 

கடந்த இரு வாரங்­க­ளாக யாழில் அமைதி நிலை ஏற்­பட்­டுள்­ளது. இந்த அமைதி நிலை தொடர்­வ­தற்கு நாம் தொடர்ந்தும் நட­வ­டிக்கை எடுப்போம்.

 

மேலும் தனியார் கல்வி நிலை­யங்­க­ளுக்கு செல்லும் மாணவிகள் தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாக இருங்கள். அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என்றார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=16820#sthash.w9GmcwfF.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

கனவு பலிக்க வாழ்த்துக்கள் நீதிபதி அவர்களே. அதுவும் ஒரு போர்க்குற்ற.. அரசின்.. இனப்படுகொலை இராணுவம்.. பொலிஸை.. அதிரடிப்படையை வைச்சுக் கொண்டு கனவு காண்கிறீர்கள். கனவு நனவான மாதிரித்தான். :rolleyes:

25 minutes ago, nedukkalapoovan said:

கனவு பலிக்க வாழ்த்துக்கள் நீதிபதி அவர்களே. அதுவும் ஒரு போர்க்குற்ற.. அரசின்.. இனப்படுகொலை இராணுவம்.. பொலிஸை.. அதிரடிப்படையை வைச்சுக் கொண்டு கனவு காண்கிறீர்கள். கனவு நனவான மாதிரித்தான். :rolleyes:

இராணுவம், போலிஸ், அதிரடிப்படை இருப்பதால்தான் அவர் அப்படிச் சொல்கிறார்.  இதில் எங்கே கனவு காணுவதற்கு?

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உள்ள இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் இராணுவம் என்பது நீதிபதிக்கும் தெரியும் ஆனால் அவரும் தன்னால் இயன்றதை செய்ய முயற்சிக்கிறார். பார்ப்போம்.

7 minutes ago, vanangaamudi said:

யாழில் உள்ள இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் இராணுவம் என்பது நீதிபதிக்கும் தெரியும் ஆனால் அவரும் தன்னால் இயன்றதை செய்ய முயற்சிக்கிறார். பார்ப்போம்.

நமது காவாலிகள் செய்யும் சேட்டைகளுக்கு எல்லாம் இராணுவமா பலி?

45 minutes ago, பெரியார் said:

 

1 hour ago, nedukkalapoovan said:

கனவு பலிக்க வாழ்த்துக்கள் நீதிபதி அவர்களே. அதுவும் ஒரு போர்க்குற்ற.. அரசின்.. இனப்படுகொலை இராணுவம்.. பொலிஸை.. அதிரடிப்படையை வைச்சுக் கொண்டு கனவு காண்கிறீர்கள். கனவு நனவான மாதிரித்தான். :rolleyes:

இராணுவம், போலிஸ், அதிரடிப்படை இருப்பதால்தான் அவர் அப்படிச் சொல்கிறார்.  இதில் எங்கே கனவு காணுவதற்கு?

 

 

6 minutes ago, பெரியார் said:

நமது காவாலிகள் செய்யும் சேட்டைகளுக்கு எல்லாம் இராணுவமா பலி?

புரியாத உலகம், புரிந்தால் யாராவது புரிய வையுங்கள். மறு அவதாரத்தில் ஒரு ... 

6 minutes ago, ஜீவன் சிவா said:

 

புரியாத உலகம், புரிந்தால் யாராவது புரிய வையுங்கள். மறு அவதாரத்தில் ஒரு ... 

ஜீவன், உங்களுக்கே புரிய வைக்கலாமே!

1 minute ago, பெரியார் said:

ஜீவன், உங்களுக்கே புரிய வைக்கலாமே!

எனக்கு இந்த உலகம் புதிது

1 minute ago, ஜீவன் சிவா said:

எனக்கு இந்த உலகம் புதிது

சேட்டைகள் செய்யும் காவாலிகள் நிறைந்த உலகமா?

  • கருத்துக்கள உறவுகள்

சேட்டைகள் செய்யும் காவாலித்தனம் ஒன்றும் பெரிய பாதகமில்லை இப்போது நாங்கள் காண்பது சமூக குற்றங்கள் அதைவிட மோசம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் இளஞ்செழியன்.. தொடருங்கள்.. குற்றவாழிகளுக்கு உரிய தன்டனை கொடுத்து நீதியை நிலைநாட்டுங்கள்.

40 minutes ago, vanangaamudi said:

சேட்டைகள் செய்யும் காவாலித்தனம் ஒன்றும் பெரிய பாதகமில்லை இப்போது நாங்கள் காண்பது சமூக குற்றங்கள் அதைவிட மோசம். 

 


சேட்டைகள் செய்யும் காவாலித்தனத்தை, சமூக குற்றங்களாக கருத மாட்டீர்களா?

அப்படியாயின், ஏன் காவாலிகள் நீதிமன்றங்களில் ஆஜராகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள.. முஸ்லீம்.. ஒட்டுக்குழுக் காவாலிகளையும் ரெளடிகளையும் கொலைக்கும்பல்களையும் குடு மாத்தையாக்களையும் பொம்பிளைப் பொறுக்கிகளையும்.. கொள்ளைக் கும்பல்களையும் கொண்டு கட்டியமைக்கப்பட்ட சிங்கள இராணுவ.. பொலிஸ்.. அதிரடிப்படை.. அமைப்புக்களைக் கொண்டு எப்படி ஒரு உருப்படியான சிவில் நிர்வாகத்தை.. சிவில் சமூகத்தைக் கட்டியமைக்க முடியும்.

காவாலிகளை தான்  உருவாக்க முடியும் காவாலிகளால். 

நீதிபதி.. நீதிமன்றில் வாசிப்பதை.. அமுல்படுத்த சரியான ஆட்களே.. இல்லை. இதில......  இதனை புரிந்து கொண்டு செயற்பட்டால் அன்றி.. நீதிபதி கனவு மட்டும் தான் காண முடியும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சட்டப்படி எல்லாத்தையும் வெல்ல‌லாம் என்று சொல்லுறார் பொறுத்திருந்து பார்ப்போம்......ஐயாவுக்கும் பிரேதேச தடிப்பு இருக்கு போல தெரியுது:rolleyes: ,யாழ்ப்பாணத்தான் பிறப்பால் குற்றவாளியில்லை என்று சொல்லுறார்.....

  • கருத்துக்கள உறவுகள்

லுசு மனிசன்.பேசாமல் ஏதாவது ஒரு வெளி நாட்டுக்கு போகாமல் தாயகத்தில் நின்று தன்னால் ஆனதை செய்கிறார்.இவருக்கு இது வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

உவர் வெளிநாட்டுக்கு வந்திருந்தால்.. தமிழ் கடையில் நின்று கொண்டு அசைலக் கேஸ் பார்த்துக் கொண்டிருப்பார். அது தெரிஞ்சு தான் அவர் அங்க நின்றிட்டார்.. குறைஞ்சது மாவட்ட நீதியரசரா இருக்கிறாரில்ல. அதே பெரிய காரியம். ஆளுனர்கள் போல உதையும் சிங்கள.. ஆமிக்காரனையோ.. இல்ல முஸ்லீம் ஊர்காவல் படையையோ... இல்ல ஒட்டுக்குழுக்களையோ வைச்சு நிரப்பி இருந்தால்.... உலகத்திக்கு காட்ட ஏதாவது ஒப்புக்குச் செய்யுறான் சிங்களவன். அதைத் தவிர.............................................. அங்க வேற எதுவும் சாத்தியமில்லை. tw_blush:

சிங்கள  காவாலிகள்  என  சொல்லி  சொல்லி  எங்கட  காவாலிகள்  செய்தது  எல்லாம்  நாங்க  மறைச்சு  மறைச்சு  தான்  இன்று  இப்படி  வளர்த்து  நிக்கிறது  மரமாக  ,ஆகவே  முதலில்  எங்கட  காவாலிகளை  திருத்த  வேணும்  பிறகு  சிங்கள  காவாலிகள்  பற்றி   வகுப்பு  எடுக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லைப் பெரிசு. எல்லா பிள்ளையளையும் உத்தமபுத்திரர்களா வளர்த்தெடுக்கமுடியுமா என்பது தெரியேல்லை. இண்டைக்கு காவாலித்தனத்தை எந்த கண்ணோட்டத்திலை பார்க்கிறம் என்பது தெரியலை ஆனால் ஒரளவுக்கு சமுகத்திலை எல்லாரும் ஏதோ ஒரு முறையிலை செய்ததான் எல்லாரும் அந்தக்காலத்திலை கூவில்லை கள்ளடிக்கிறதை ஒருபகுதி காவாலித்தனம் எண்டவை இன்னுஞ்சிலர் அது வயதுச் சேட்டை எண்டும் சொல்றவை. ஆனால் தண்டனைக்குரிய குற்றமா யாரும் அதைச் சொல்ல நான் கேட்டதில்லை. இப்படியே ரோட்டிலை நின்டு இளசுகளுக்கு பகிடி விடுறது லெற்றர் குடுக்கிறது எண்டு அடுக்கிக்கொண்டே போகலாம். இளையோரின்ரை நடத்தையாலை சமுக சீரழிவும் அமைதிக்கும் பங்கமும் வருதுதெண்டால் அங்கை ஏதோ பிழையிருக்கு எண்டு நான் நம்பிறன்.

நான் சொல்லும் காவாலித்தனம், தமிழனின் வாள்வெட்டைப் பற்றியது.

9 hours ago, nedukkalapoovan said:

உவர் வெளிநாட்டுக்கு வந்திருந்தால்.. தமிழ் கடையில் நின்று கொண்டு அசைலக் கேஸ் பார்த்துக் கொண்டிருப்பார். அது தெரிஞ்சு தான் அவர் அங்க நின்றிட்டார்.. குறைஞ்சது மாவட்ட நீதியரசரா இருக்கிறாரில்ல. அதே பெரிய காரியம். ஆளுனர்கள் போல உதையும் சிங்கள.. ஆமிக்காரனையோ.. இல்ல முஸ்லீம் ஊர்காவல் படையையோ... இல்ல ஒட்டுக்குழுக்களையோ வைச்சு நிரப்பி இருந்தால்.... உலகத்திக்கு காட்ட ஏதாவது ஒப்புக்குச் செய்யுறான் சிங்களவன். அதைத் தவிர.............................................. அங்க வேற எதுவும் சாத்தியமில்லை. tw_blush:

 

11 hours ago, nedukkalapoovan said:

சிங்கள.. முஸ்லீம்.. ஒட்டுக்குழுக் காவாலிகளையும் ரெளடிகளையும் கொலைக்கும்பல்களையும் குடு மாத்தையாக்களையும் பொம்பிளைப் பொறுக்கிகளையும்.. கொள்ளைக் கும்பல்களையும் கொண்டு கட்டியமைக்கப்பட்ட சிங்கள இராணுவ.. பொலிஸ்.. அதிரடிப்படை.. அமைப்புக்களைக் கொண்டு எப்படி ஒரு உருப்படியான சிவில் நிர்வாகத்தை.. சிவில் சமூகத்தைக் கட்டியமைக்க முடியும்.

 

சிறி லங்காவின் இராணுவம் மற்றும் போலீசில், மும்மதத்தவர்களும் இருக்கிறார்கள்.

போதாக் குறைக்கு,  புலியில் இருந்த பெண் போராளிகளும் சிறி லங்கா இராணுவத்துடன் இணைந்து, பணியாற்றுகிறார்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெரியார் said:

சிறி லங்காவின் இராணுவம் மற்றும் போலீசில், மும்மதத்தவர்களும் இருக்கிறார்கள்.

போதாக் குறைக்கு,  புலியில் இருந்த பெண் போராளிகளும் சிறி லங்கா இராணுவத்துடன் இணைந்து, பணியாற்றுகிறார்கள்.
 

சொறீலங்கா இராணுவத்தில் பொலிஸில்.. சிங்கள பெளத்த காவாலிகளை விட மற்றைக் காவாலிகள் எத்தனை சதவீதம் உள்ளனர். ஓட்டுக்குழு.. முஸ்லீம் ஊர்காவல் படைக் காவாலிகள் நீங்கலாக...??!

முன்னாள்.. புலிப் பெண் போராளிகள்.. பாலியஸ் துஸ்பிரயோகங்கள்.. பிற நெருக்குவாரங்களோடு.. சிங்கள இராணுவத் தேவைகளுக்காக சிங்கள இராணுவத்தில் கொத்தடிமைகளாக கட்டாயப்படுத்தி இணைக்கப்பட்டுள்ளார்களே தவிர.. அவர்கள் இணைந்து பணியாற்றவில்லை.

அந்த முன்னாள் போராளிகளை சுதந்திரமாக ஊடகங்கள் முன் தோன்றி கருத்துச் சொல்ல அனுமதிக்கட்டும் பார்க்கலாம்.. சொறீலங்கா இனப்படுகொலை.. காவாலி இராணுவமும் இதர முப்படைகளும். tw_blush:

4 hours ago, nedukkalapoovan said:

 சிங்கள இராணுவத் தேவைகளுக்காக சிங்கள இராணுவத்தில் கொத்தடிமைகளாக கட்டாயப்படுத்தி இணைக்கப்பட்டுள்ளார்களே தவிர.. அவர்கள் இணைந்து பணியாற்றவில்லை.

 

அவர்கள் இராணுவத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள். 

கட்டாயப்படுத்தி யாரும் இராணுவத்தில் இணைக்கப்படுவதில்லை.  அவர்கள் அப்படி சேர்ந்ததுமில்லை.

5 hours ago, nedukkalapoovan said:

 

அந்த முன்னாள் போராளிகளை சுதந்திரமாக ஊடகங்கள் முன் தோன்றி கருத்துச் சொல்ல அனுமதிக்கட்டும் பார்க்கலாம்.. 

பல ஊடகங்களில் சுதந்திரமாக கருத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

நீங்கள் பார்க்காவிட்டால், அது உங்கள் பிழை.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெரியார் said:

 

 

சிறி லங்காவின் இராணுவம் மற்றும் போலீசில், மும்மதத்தவர்களும் இருக்கிறார்கள்.

போதாக் குறைக்கு,  புலியில் இருந்த பெண் போராளிகளும் சிறி லங்கா இராணுவத்துடன் இணைந்து, பணியாற்றுகிறார்கள்.
 

நீங்கள் கூறுவது போன்று மும்மதத்தவர்களிலும் உண்டு .சிறிலங்காவில் நாலு மதத்தை பின்பற்றுபவ‌ர்கள் வாழ்கின்றார்கள்.   பெளத்தர்கள் ,கிறிஸ்தவர்கள்,முஸ்லீம்கள் உண்டு இந்துக்கள் மிகவும் குறைவு,பொலிஸில் இருந்தாலும் முப்படைகளில் இல்லை என்றே சொல்ல வேண்டும்....

2 minutes ago, putthan said:

நீங்கள் கூறுவது போன்று மும்மதத்தவர்களிலும் உண்டு .சிறிலங்காவில் நாலு மதத்தை பின்பற்றுபவ‌ர்கள் வாழ்கின்றார்கள்.   பெளத்தர்கள் ,கிறிஸ்தவர்கள்,முஸ்லீம்கள் உண்டு இந்துக்கள் மிகவும் குறைவு,பொலிஸில் இருந்தாலும் முப்படைகளில் இல்லை என்றே சொல்ல வேண்டும்....

கொழும்பில் இருக்கும் இராணுவ முகாமிற்கு சென்று பாருங்கள்.

உயர்  பதவிகளிலும் இந்துக்கள் இருக்கிறார்கள்.

தற்போது புலிப் போராளிகளும் இராணுவத்தில் பணியாற்றுகிறார்கள்.

புலி போராளிகள் இந்துக்கள் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

.

9 minutes ago, பெரியார் said:

கொழும்பில் இருக்கும் இராணுவ முகாமிற்கு சென்று பாருங்கள்.

உயர்  பதவிகளிலும் இந்துக்கள் இருக்கிறார்கள்.

தற்போது புலிப் போராளிகளும் இராணுவத்தில் பணியாற்றுகிறார்கள்.

புலி போராளிகள் இந்துக்கள் இல்லையா?

முப்படைகளிலும்,பொலிஸிலும் ஆட்சேர்ப்பு நடத்தும் பொழுது அவர்களது பின்புலம் பற்றி விசாரணைசெய்துதான் எடுக்கவேண்டும் அதுதான் வழமையாக எல்லா நாடுகளிலும் பின்பற்றும் முறை .ஏற்கனவே பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட புலி உறுப்பினர்களை என்ன காரணத்துக்காக இராணுவத்தில் சேர்த்துள்ளார்கள் என்பது பரமரகசியமல்ல....

பத்திரிகைகளில் பெயர் வந்ததாக நான் அறிய‌வில்லை,வரும் பெயர்கள் யாவும் சிங்கள பெள‌த்த கிறிஸ்தவ பெயர்கள் தான்..கப்டன் தரத்திலும் அதற்கு மேல்  உள்ள தமிழ் அதிகாரிகளின் பத்து பெயரை உங்களால் தரமுடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.