Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

.

மாமா யாழ்ப்பாணம் வரும் பொழுதெல்லாம் சோமரின்ட சோமசெட் காரை வாடகைக்கு அமர்த்தி கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு போய்விடுவேன்.கடிதத்தில் எந்த புகையிரதத்தில் எத்தனை மணிக்கு வருவார் என்று விபரமாய் எழுதுவார் .ஆங்கிலத்தில்தான் கடிதம் எழுதுவார் .எனக்கு நேரமும் நாளும் தெரிந்தால் காணும் மிகுதி எல்லாத்தையும் அம்மா வாசிப்பார்am,pmஎன்று போடுவார் அது அந்த காலத்தில் விளங்குவது கொஞ்சம் கஸ்டமாயிருக்கும் அம்மாவும் ஓவ்வொரு முறையும் விளங்கப்படுத்துவா ஆனால் அடுத்த முறை மறந்துவிடுவேன், ஒருமாதிரி அம்மாவிடம் திட்டை வாங்கி அறிந்து கொள்வேன்'

வருவதற்கு முதல் நாள் த‌ந்தியும் அடிப்பார்.அவர் வருகிறார் என்றால் எங்களுக்கு எல்லாம் பெரிய சந்தோசம் .எனக்கு மட்டுமல்ல சோமர் மற்றும் ச‌லவை தொழிலாளி,சிகை அலங்காரர் எல்லோரும் சந்தோசப்படுவினம். பரம்பரை பரம்பரையாக சிகை அலங்காரம் செய்பவ‌ர் மாமா வந்தவுடன் வீட்டை வருவார் முடி வெட்ட வேண்டிய‌ தேவையிருக்காது ஆனால் மாமா அவ‌ருக்கு பணம் கொடுப்பார் சிகை அலங்கார் போய் சிறிது நேரத்தில் சலவை தொழிலாளி வருவார் அவருக்கும் காசு கொடுப்பார்.

 வீட்டில் சமையல் விசேடமாக இருக்கும் அத்துடன் எனக்கும் கொஞ்சம் காசும் கையில் புரளும் கடைக்கு போய்வந்தால் மிகுதி சில்லறையை என்னை வைத்திருக்க சொல்லுவார்  .திரும்பி போகும் பொழுதும் காசு கொடுப்பார்.அந்த காலத்தில் 10 ரூபா பெரிய காசு.

வருடத்தில் ஒரு தடவை திருவண்ணாமலைக்கு சென்று வருவார் .கொழும்பில் பணிபுரிந்தாலும் பலாலி விமானநிலையம் மூலம்தான் திருச்சி செல்வார். திருவண்ணாமலையில் வாழ்ந்த ரமண மாகரிஷியின் பக்தன்.ரமண மகாரிஷியுடன் நேரடியாக உரையாடியுள்ளார் ஆத்மீகத்தில் அதிக ஈடுபாடுடையவர். இளம் வயதில் இந்தியா சென்று ஆத்மீக தேடலில் ஈடுபட்டவர். முதல்முத‌லாக விமானத்தை கண்டதும் அவரது புண்ணியத்தில் தான். அடுத்த நாள் பாடசாலைக்கு சென்று சகமாணவ‌ர்களுக்கு விமானத்தில் ஏறிஉள்ளே  பார்த்தானான் என்று கதை அடிக்க அவ‌ர்களும் நம்பிவிட்டார்கள்.சின்ன வயசில ந‌ல்லாய் கதை விடுவேன் அதுதான் இப்ப கதை கிறுக்க வசதியாக இருக்கிறது . அப்பொழுது என்னுடன் படித்தவ‌ர்கள் எல்லொரும் விமானத்தை வானத்தில் பார்த்திருந்தார்கள் ,நான் மட்டும் விமானநிலையத்தில பார்த்திருந்தேன். அந்த விமானநிலையம் சிவில் விமான நிலையமாகத்தான் இருந்தது.விமானபடையினரை கண்ட ஞாபகாமில்லை.

யாழ்ப்பாணம் வந்தால் செல்வச்சன்ன‌நிதிக்கும் எங்களை அழைத்து செல்வார் .சோமரின்ட சோமசெட்டில் குறைந்தது பத்து பேராவது போவோம்.அநேகமான நேரங்களில் எனது பயணம் அம்மாவின் மடியில்தான். இப்ப இருப்பது போன்று அப்பொழுது வான் வசதிகள் இல்லை தட்டிவானை வாடகைக்கு  பிடித்து கொண்டு போகமுடியாது . தொண்டமனாறு வான் கதவுகளை கண்டவுடன் மனதில் ஒரு சந்தோசம்  கோவில் வரப்போகின்றது கடலை வாங்கி சாப்பிடலாம் . ஆனந்தா ஆச்சிரமத்தில் ருசியான சைவ  உணவை மதியம் உண்ணலாம் என்ற மற்ற மகிழ்ச்சி ஆகும். சின்ன ஆட்கள் நாங்கள் முதலில் காரிலிருந்து இறங்கினால் தான் பெரியவர்களிறங்க முடியும் .நாங்கள் இறங்கி முதலில் குளத்தை நோக்கி ஓடுவோம் கால் கழுவுவதற்கு ,அம்மா பின்னே நின்று கத்துவார்கள் ஓடாயதயப்பு கவனம் கவ‌னமென்று அவர்கள் வந்து கால் கழுவுவதற்கு முன்பே நாங்கள் காலை கழுவிட்டு கோவிலை நோக்கி ஒடுவோம் காலில் மணல்  பதியும் கோவில் வாசலில் போய் இரண்டு கால்களையும் ஒரு தட்டு தட்டி போட்டு உள்ளே செல்வோம்.

கோவிலை சுற்றி கும்பிட்டு முடிய அம்மாவிடம் போய் கடலைக்கு காசு கேற்பேன். இருடா ,சாமி கும்பிட்டு முடிய நான் வந்து வாங்கிதாறன் என்பார். முகத்தை தொங்கப்போட்டபடி நிற்பதை பார்த்த மாமா கூப்பிடு ஒரு ரூபா தருவார் சிறுவர்கள் நாங்கள் கடலைகடைப் பக்கம் ஒடி .பட்டானிக்கடலையும் ,கச்சான் கடலையும் வாங்கி சாப்பிடுவோம்.

மதியம்  அன்னதான‌த்திற்கு காசு கட்டுவதற்கு மாமா ஆனந்தா ஆச்சிர‌மத்திற்கு செல்வார் அவ‌ருடன் நானும் செல்வேன் மற்றவர்கள் சிலசமயம் எங்களுடன் வருவார்கள்.ஆனந்தா ஆச்சிரமத்தை நிர்வகித்து வந்த மயில்வாகனம் சுவாமிகளும் ரமண மரிஷியின் பக்தன் .இருவரும் ஒருவரை ஒருவர் கைகூப்பி வணங்கி சுகம் விசாரித்து கொள்வார்கள் என்னை தங்கையின் மகன் என சுவாமிகளுக்கு அறிமுகபடுத்துவார்.இருவரும் ரமணர் மற்றும் யோக சுவாமிகள் பற்றியும் இன்னும் பல சாமிகளை பற்றியும் பேசுவார்கள், நான் அங்கும் இங்கும் விடுப்பு பார்த்துகொண்டிருப்பேன். நூறு அல்லது நூற்றைம்பது ரூபாவை மேசை லாச்சில்  வைப்பார்  பத்து பேர் வந்திருக்கின்றோம் மதியம் வருவோம் என்று மாமா சொல்லுவார் .

புலிக்குட்டி,நரிக்குட்டி ,பூணைக்குட்டி ,ஆணைக்குட்டி,நாய்குட்டி என்று கதைத்தார்கள் என‌க்கு ஒன்றும் புரியவில்லை.கோவிலுக்கு திரும்பும் பொழுது மணல் சுடத்தொடங்கி விட்டது ஒட்டமும் நடையுமாக கோவிலை நோக்கி போகும் வழியில் இரு வெள்ளைக்காரர்கள் வேஸ்டியுடன் வந்து கொண்டிருந்தார்கள்.அதில் ஒருவர் மாமாவுக்கு அறிமுகமானவர் .மாமாவை தனது கூடிலுக்கு வரும்படி அழைத்தார்.நானும் அவ‌ர்களுக்கு பின்னால் சென்றேன்.

.

கடற்கரையோரம் தென்னைமரங்களுக்கு நடுவே ஒரு சிறிய சீமேந்தால் கட்டப்பட்ட அறை ,சற்று உயரத்தில் அமைந்திருந்தது.ஆறு எழு படிகள் ஏறித்தான் உள்ளே செல்லகூடியதாக இருந்தது.உள்ளே பாய் ஒன்றும் சீமந்தால் கட்டப்பட்ட கட்டில் போன்ற ஒரு அமைப்பும் இருந்தது வெள்ளை வேஸ்டிகள் ,சால்வைகள் சிலதும் இருந்தன.மாமாவும் அவர்களும் ஆங்கிலத்தில் பேசத்தொடங்கினார்கள்.என்னத்தை பேசினார்கள் என்று ஒன்றும் புரியவில்லை ,அப்பதான் புரிந்து கொண்டேன் என்னுடன் வந்த மற்றைய சிறுவர்கள் எங்களுடன் இணைந்து கொள்ளாமைக்குறிய காரணத்தை.நான் அந்த வளவில் சுற்றிதிரிந்து அணிலை ஏறவிட்ட நாய் மாதிரி தென்னை மரங்களை சுற்றி விளையாடிகொண்டிருந்தேன்.

சன்னதியானின் மதிய பூஜைக்குறிய மணியோசை கேட்க மூவரும் தங்களது உரையாடலை முடித்துகொண்டார்கள் நானும் மாமாவும் கோவிலை நோக்கி சென்றோம் . உதுல தாடியுடன் இருப்பவரை  நாய்க்குட்டி சாமி அல்லது ஜெர்மன் சாமி என்று சொல்லுறவையல் ஜேர்மனியிலிருந்து வந்திருக்கிறார், மற்றவர் நரிக்குட்டிசாமி அவுஸ்ரெலியாவிலிருந்து வந்திருக்கின்றார் இப்ப திருவண்ணாமலையில் இருக்கின்றார் என மாமா சொல்லிகொண்டு வந்தார் .  நடக்க முடியாமல் மணல் சுடாக இருந்தது.மாமாவின் கதைகளை கேட்க கூடிய நிலையில் நான் இருக்கவில்லை மாமா கால் ச‌ரியாக சுடுகிறது நான் ஒடப்போறேன் என்று சொல்லி அவரின் பதிலுக்கு பார்த்து கொண்டிருக்காமல்  ஒரே ஒட்டத்தில கோவிலை போய் சேர்ந்தேன்.மாமா ஆறுதலாக நடந்துவந்தார்.

பூஜை முடிந்தவுடன் எல்லோருமாக ஆன‌ந்தா ஆச்சிரமம் நோக்கி நடக்கலானோம்  .மணல் சூடாக இருந்தது ஒட்டமும் நடையுமாக சென்று ஆச்சிரமத்தை அடைந்தோம் உள்ளே செல்ல முடியவில்லை, உண்மையிலயே அன்னதான‌ம் தேவைப்பட்டோர் பலர் அன்னதானத்திற்காக வெளியே காத்திருந்தார்கள் .மாமாவும் மற்ற பெரியவ‌ர்களும் வந்தவுடன் அவர்களுடைய உறவினர்கள் நாங்கள்  என அறிந்த நிர்வாகத்தினர் எங்களை உள்ளே அனுமதித்தனர் .மற்றவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை .

 

உள்ளே ஒரு மண்டபத்தில் மயில்வாகணம் சுவாமிகள் ,அங்கிருந்த சாமிபடங்களுக்கு கற்பூர ஆரத்தி செய்துவிட்டு எங்களை உள்ளே அமரும் படி சொன்னார் .வாழை இலை பாரிமாறப்பட்டது ஐந்தாறு மரக்கறியுடன் உணவு தரப்பட்டது. .வெள்ளைக்கார சாமிமாரும் எங்களுடன் உள்ளிருந்து உணவு உட்கொண்டனர். .சிறிது நேரத்தில் பலத்த கூக்குரலுடன் வெளியே நின்ற  அன்னதானம் தேவைப்பட்டோர் ஒடி வந்தார்கள் .அவ‌ர்களுக்கு வேறு இடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.எமக்கு கிடைத்த உணவும் ,உபசரிப்பும் அவர்களுக்கு கிடைத்திருக்குமா என்று எனக்கு இன்றும் சந்தேகமாயிருக்கு.

மீண்டும் கடலைக்கார ஆச்சியிடம் ஒரு ரூபாவுக்கு கடலை வாங்கி கொண்டு வீடு சென்றோம்.

1972 ஆம் ஆண்டுகளுக்கு  முன்பு உள்ளூர் இளைஞர்கள் சில‌ர் ஆத்மீக தேடலில் தங்களது வாழ்க்கையை கொண்டு செல்ல பலர் வெளிமாவட்டங்களுக்கு வேலைதேடிச் சென்று தங்களது வாழ்க்கையை வளப்படுத்தி கொண்டனர்.

பிரித்தானியாவிலிருந்து சாந்த சுவாமிகள் என அழைக்கப்பட்ட சோல்பரியின் மகன் 1955 இல் யோக சுவாமிகளின் சிஷ்சராகவும், Gauribala என்ற ஜெர்மன் சுவாமிகள் சன்னதியிலும் ,அவுஸ்ரேலியாவிலிருந்து பூனைக்குட்டி என்று அழைக்கப்பட்ட‌  Adrian Snodgrass (Punaikutti)இன்னும் பலர் யாழை நோக்கி ஆத்மீக தேடலுக்காக வ‌ந்து சிலர் அந்த மண்ணிலயே சமாதியானார்கள்.

நாங்கள் அவ‌ர்களின் நாட்டுக்கு பொருளாதார தேடலுக்காக வந்து எம்மை வளப்படுத்திகொண்டோம். எம்மில் சிலர் நாட்டுக்காக போராடி த‌ம‌து வாழ்க்கையை தொலைத்தனர்.

இதை எழுதகாரணம் அண்மையில் சிட்னிக்கு விஜயம் செய்த ஆறு திருமுருகன் அவர்கள் சாந்த சுவாமிகளை பற்றி கூறினார் ,அந்த சாந்த சுவாமிகள் நான் சிறு வயதில் கண்ட சோல்பரியின் கன் என்பதை கூகுள் மூலம் அறிந்து கொண்டேன் .அவரின் படங்களை பார்க்கும் பொழுது அவருடன் எனைய சாமிகளின் படங்களையும் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.அவர்களையும் நான் சிறுவயதில் செல்வசன்னிதியில் கண்ட ஞாபகம் வரவே இதை எழுதினேன்....எனது மாமாவும் இப்பொழுது இல்லை அந்த சாமிமார்களும் இல்லை.. அடுத்த முறை மட்டக்களப்பு/ செங்கலடியில்  எனது வீட்டிற்கு அருகாண்மையில் இருந்த சிவதொண்டன் நிலையத்தில் வாழ்ந்த சாந்த சுவாமிகள் பற்றி சிறு கிறுக்கல் .....

யாழ்ப்பாணம் ,இந்த மண் ஒவ்வொரு கால கட்டத்தில ஒவ்வொரு துறையில் பிரபலமடைந்திருக்கின்றது.ஒருகாலகட்டத்தில் ஆத்மீக தேடலுக்கு ,இன்னொரு காலத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள் அதிகமாக கொண்டமையால்,பிறகு போராளிகளையும் போராட்ட தலைவர்களையும் உண்டாக்க்கிய மண் என்ற பெருமையும் தற்சமயம் என்னத்திற்க்கு பெயர் போகின்றது என்பதை நீங்களே ஊகித்து கொள்ளுங்கள்.

ஆத்மீக தேடலுக்காக மேற்கத்தையினர்,கல்வி தேடலுக்காக சிங்களவர்கள் ,முஸ்லிம்கள்,புலித்தேடலுக்காக இந்தியர்கள்,ஆயுத தேடலுக்காக சர்வதேசத்துடன் சிங்கள இராணுவம்....

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்,நீங்கள் கதையா?,கட்டுரையா எழுதினீர்கள் என எனக்கு சந்தேகமாய் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி புத்தன்....! அன்னதானக் கந்தன் அமுதுடன் ஞானத்தையும் வழங்கும்  வள்ளல் அதில் எள்ளளவும் சந்தேகமில்லை....!!

10 hours ago, putthan said:

மாமா யாழ்ப்பாணம் வரும் பொழுதெல்லாம் சோமரின்ட சோமசெட் காரை........

தேடல்

ஏதாவது எழுத ஆசை - நித்திரை வருகுது 3:25. நேரம் கிடைக்கும்போது எழுதுகின்றேன் கௌதமரே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

புத்தன்,நீங்கள் கதையா?,கட்டுரையா எழுதினீர்கள் என எனக்கு சந்தேகமாய் இருக்கு

கட்டுரை பாதி,கதை பாதி சேர்ந்த கலவை:rolleyes: .....எனக்கும் அந்த சந்தேகம் வந்தது இருந்தாலும் எண்ணத்தை கிறுக்கிவிடுவோம் என்று கிறுக்கிவிட்டேன்.வ‌ருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் 

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

கட்டுரை பாதி,கதை பாதி சேர்ந்த கலவை:rolleyes: .....எனக்கும் அந்த சந்தேகம் வந்தது இருந்தாலும் எண்ணத்தை கிறுக்கிவிடுவோம் என்று கிறுக்கிவிட்டேன்.வ‌ருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் 

இதிலென்ன சந்தேகம், கட்டுமில்லை கதையுமில்லை = நிஜம் இட்டுக் கட்டிய கட்டுக்கதை....தட்ஸ் ஆல்....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலத்தில் ஆஷ்ரமம் குருகுலம்  என்பன மனிதனை முளு நிறைவாக உண்டாக்கியதில் ஒன்று ?

தேடலில் தொலைந்து போன ஞாபகத்தில் உங்கள் ஆக்கம்??

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்மீகத் தேடலில் புத்தனின் கிறுக்கலால் நானும் தேடிப் பார்த்தேன்
நன்றி புத்தர்

Archival photo of German Swami Gauribala

Archival 1960 photo of German Swami Gauribala (at right) with followers including Sandaswami (Lord Soubury's son, far left) and Narikutti Swami of Australia.Archival 1960 photo of German Swami Gauribala (at right) with followers including Sandaswami (Lord Soubury's son, far left) and Narikutti Swami of Australia.

Archival 1960 photo of German Swami Gauribala (at right) with followers including Sandaswami (Lord Soubury's son, far left) and Narikutti Swami of Australia. Archival 1960 photo of German Swami Gauribala (at right) with followers including Sandaswami (Lord Soubury's son, far left) and Narikutti Swami of Australia.

Image result for Gauribala

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன் நீங்கள் ஒரு மார்க்கமாய்த்தான் இந்த கதையை எழுதியிருக்கிறியள். tw_thumbsup:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 07/06/2016 at 6:32 AM, suvy said:

பகிர்வுக்கு நன்றி புத்தன்....! அன்னதானக் கந்தன் அமுதுடன் ஞானத்தையும் வழங்கும்  வள்ளல் அதில் எள்ளளவும் சந்தேகமில்லை....!!

அத்துடன் வறுமையில் உள்ள முதியோரின் "முதியோர் இல்லம் "...பலர் அங்கேயே படுத்து உறங்குகிறார்கள்

On 07/06/2016 at 7:59 AM, ஜீவன் சிவா said:

தேடல்

ஏதாவது எழுத ஆசை - நித்திரை வருகுது 3:25. நேரம் கிடைக்கும்போது எழுதுகின்றேன் கௌதமரே

வருகைக்கு நன்றிகள் எங்க ஒன்றையும் எழுத காணவில்லை?

On 08/06/2016 at 1:53 AM, முனிவர் ஜீ said:

அந்தக் காலத்தில் ஆஷ்ரமம் குருகுலம்  என்பன மனிதனை முளு நிறைவாக உண்டாக்கியதில் ஒன்று ?

தேடலில் தொலைந்து போன ஞாபகத்தில் உங்கள் ஆக்கம்??

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ....ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு தேடலில் மனித வாழ்க்கை நகர்கின்றது

On 08/06/2016 at 2:31 AM, வாத்தியார் said:

ஆன்மீகத் தேடலில் புத்தனின் கிறுக்கலால் நானும் தேடிப் பார்த்தேன்
நன்றி புத்தர்

Archival photo of German Swami Gauribala

Archival 1960 photo of German Swami Gauribala (at right) with followers including Sandaswami (Lord Soubury's son, far left) and Narikutti Swami of Australia.Archival 1960 photo of German Swami Gauribala (at right) with followers including Sandaswami (Lord Soubury's son, far left) and Narikutti Swami of Australia.

Archival 1960 photo of German Swami Gauribala (at right) with followers including Sandaswami (Lord Soubury's son, far left) and Narikutti Swami of Australia. Archival 1960 photo of German Swami Gauribala (at right) with followers including Sandaswami (Lord Soubury's son, far left) and Narikutti Swami of Australia.

Image result for Gauribala

வருகைக்கும் படம் இணைத்தமைக்கு நன்றிகள் .....நான் படம் இணைக்க முயச்சித்தேன் முடியவில்லை மீண்டும் நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.