Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணம் சிங்களவர்களுக்கே சொந்தம்!

Featured Replies

யாழ்ப்பாணம் சிங்களவர்களுக்கே சொந்தம்!

சிங்களவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான யாழ்ப்பாணத்தை யுத்தத்திற்குப் பின்னர் மீண்டும் பெற்றுக்கொள்ளும் முயற்சியிலேயே சிங்கள மாணவர்கள் யாழ்பாணத்திற்கு தற்போது செல்கின்றார்கள் என சிரேஷ்ட விரிவுரையாளர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார்.

நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் சிங்கள மாணவர்கள் சிங்களத்தையும் பௌத்தத்தையும் மனதில் வைத்துக்கொண்டே செயற்படுகின்றனர். அங்கு செல்லும் மாணவர்களின் முகநூலைப் பார்த்தால் இதனைப் புரிந்துகொள்ளமுடியும்.

இவர்களின் இத்தகைய செயற்பாடுகள் சரியா தவறா என விவாதிக்கத் தேவையில்லை. தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களின் வருகையினால் அவர்கள் தமது கலாச்சாரத்தை முடக்கவே வருகின்றனர் என எண்ணிக்கொள்கின்றனர்.

சிங்கள மாணவர்கள் பிரச்சினைகளுக்குரிய பிரதேசத்திற்கு சென்று வசிப்பதில் முறையாக தீர்மானங்கள் கலந்துரையாடல்கள் நடைபெறவேண்டும் என்னைப்பொறுத்த வரையிலும் இது இலகுவில் தீர்க்கப்படக்கூடிய விடயமல்ல எனவும் சிரேஷ்ட விரிவுரையாளர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=36814

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் சிங்கள பெளத்தர்களுக்கு சொந்தம்.. இலங்கைத் தீவு இலங்கேஸ்வரன் என்ற.. இராவணனாகிய சிவ பக்தனுக்கு சொந்தம். தமிழ் மாணவர்கள் இலங்கை பூராவும் போய் கல்வி கற்கவும் குடி இருக்கவும் முழு உரிமை உடையவர்கள். அவர்களின் நாட்டில் சிங்களவர்கள் சகபாடிகளாக இருக்கலாம்.. ஆட்சியில் இருக்கக் கூடாது. இதுவும் இலகுவில் பேசித் தீர்க்கக் கூடிய விடயமல்ல. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது சும்மா தண்ணியப் போட்டு அலம்பறை பண்ணிணாலும் நியூஸ் ஆக்கிறாங்கப்பா tw_anguished:

  • கருத்துக்கள உறவுகள்
சிங்களவர்களுக்கும் பெளத்தர்களுக்கும் உரிய யாழ்ப்பாணத்தை  மீண்டும் பெற்றுகொள்ளும் நோக்கிலேயே சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாணத்திற்கு தற்போது செல்கின்றார்கள் என சிரேஷ்ட விரிவுரையாளர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார்.நேற்று மாத்தறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சிங்களவர்களுக்கும் பெளத்தர்களுக்கும் உரிய யாழ்ப்பாணத்தை மீண்டும் பெற்றுகொள்ளும் நோக்கிலேயே சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாணத்திற்கு தற்போது செல்கின்றார்கள் என சிரேஷ்ட விரிவுரையாளர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார்.நேற்று மாத்தறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

   

யாழ்பாணத்திற்கு செல்லும் சிங்கள மாணவர்கள் பௌத்தத்தையும் சிங்களத்தையும் மனதில் வைத்துக்கொண்டே தமது செயற்பாடுகளை செய்து வருகின்றனர். அவர்களின் முகநூல் பக்கங்களைப் பார்த்தாலே இது தெரிந்து விடும். மேலும், இவர்களின் இத்தகைய செயற்பாடுகள் சரியா தவறா என விவாதிக்க தேவையில்லை. தமிழ்மாணவர்கள் சிங்கள மாணவர்களின் வருகையின் காரணமாக அவர்கள் தமது கலாச்சாரத்தினை முடக்கும் நோக்கிலேயே வருவதாக எண்ணிக்கொள்கின்றனர்.

இவ்வாறான மனநிலைகொண்ட மாணவர்களை யாழ்பாணத்திற்கு அனுப்புவது என்பது இலகுவில் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினை இல்லை. சிங்கள மக்கள் ஜப்பானுக்கு சென்று வசிப்பது போன்றல்ல யாழ்ப்பாணத்திற்கு சென்று வசிப்பது. சிங்கள மாணவர்கள் பிரச்சினைகளுக்குரிய பிரதேசத்திற்கு சென்று வசிப்பதில் முறையாக தீர்மானங்கள் கலந்துரையாடல்கள் நடைபெறவேண்டும் என்னைப்பொறுத்த வரையிலும் இது இலகுவில் தீர்க்கப்படக்கூடிய விடயமல்ல எனவும் சிரேஷ்ட விரிவுரையாளர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=163042&category=TamilNews&language=tamil

விரைவில் முஸ்லிம்களுக்கு சொந்தம்???

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Dash said:

விரைவில் முஸ்லிம்களுக்கு சொந்தம்???

முழு இலங்கையுமே....:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

முழு இலங்கையுமே....:unsure:

இதில என்ன சந்தேகம்:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வேற என்னத்தை எதிர்பார்க்க முடியும் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் இல்லாத தேசத்தில் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Athavan CH said:

சிங்களவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான யாழ்ப்பாணத்தை யுத்தத்திற்குப் பின்னர் மீண்டும் பெற்றுக்கொள்ளும் முயற்சியிலேயே சிங்கள மாணவர்கள் யாழ்பாணத்திற்கு தற்போது செல்கின்றார்கள்

தூக்கிட்டு போய்யா.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Quote

 

யாழ்ப்பாணம் சிங்களவர்களுக்கே சொந்தம்!

 

16.gif

படத்திலை இருக்கிறவையை கேட்டாலும் ஓமெண்டுதான் சொல்லுவினம்.

 
59 minutes ago, குமாரசாமி said:

 

16.gif

படத்திலை இருக்கிறவையை கேட்டாலும் ஓமெண்டுதான் சொல்லுவினம்.

 

சிங்கள ஊடகத்தில் யாழ்ப்பாணம் சிங்களவனுக்கு சொந்தம்,

தமிழ் ஊடகத்தில் யாழ்ப்பாணம் சிங்களவனுக்கு சொந்தம் இல்லை என்று சொல்ல முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை நடந்தாலும் நடக்கலாம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.