Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் திருடுவதற்காக புத்தளத்தில் இருந்து வந்த தாய், தந்தை, சிறுமி வசமாக மாட்டினர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓடும் பஸ்ஸில் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்ததை சேர்ந்த மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து அளவெட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணம் மற்றும் கைபேசி என்பன திருடப்பட்டுள்ளன. எதேச்சையாக குறித்த பெண் தனது கைப்பையினை பார்த்த போது நகை, பணம் கைபேசி என்பன திருட்டு போயுள்ளமை தெரியவந்தது.

ஓடும் பஸ்ஸில் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்ததை சேர்ந்த மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து அளவெட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணம் மற்றும் கைபேசி என்பன திருடப்பட்டுள்ளன. எதேச்சையாக குறித்த பெண் தனது கைப்பையினை பார்த்த போது நகை, பணம் கைபேசி என்பன திருட்டு போயுள்ளமை தெரியவந்தது.

   

இது தொடர்பில் சாரதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பஸ் சுன்னாகம் பஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டது. பொலிஸார் வரவழைக்கப்பட்டு பஸ்ஸில் இருந்த அனைவரும் சோதனையிடப்பட்டதில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் பொருட்களை திருடி தனது உடைக்குள் மறைத்து வைத்தமை தெரியவந்தது. பின்னர் குறித்த பெண்ணுடன் வந்த தாய் மற்றும் தகப்பனை கைது செய்து விசாரணை செய்ததில் இவர்கள் மூவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு சாவகச்சேரி பகுதியில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளதாகவும் இவர்கள் திருடுவதற்காகவே யாழ்ப்பாணம் வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=163034&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேலை வாய்ப்பு போல இருக்கு.:rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் திருவிழா காலத்தில் பெரியளவில் திருடி பணம் சம்பாதிக்கலாம் என்று நம்பி பெரிய எதிர்பார்ப்புடன் வந்தர்வர்களின் நோக்கம் கெட்டநேரத்துக்கு சுண்ணாகம் போலீசில் மாட்டினதால் பல பக்தகோடிகள் உடமைகளை நல்லூர் கந்தன் காப்பாற்றி இருக்கின்றார் என்றே எண்ண தோன்றுகின்றது 

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் கோவில் திருவிழாவில்.... வறுமை காரணமாக சங்கிலி திருடுபவர்களைக் கூட மன்னித்து விடலாம்.
ஆனால்..... புலம் பெயர் தேசத்தில். அண்மையில் நடந்த இரு வெவ்வேறு  கோவில் திருவிழாக்களில், 
சங்கிலிகள் திருடப் பட்டதை அறிந்து, மிகுந்த அதிர்ச்சியும்  மன வேதனையும் ஏற்பட்டது. 

Edited by தமிழ் சிறி

6 hours ago, தமிழ் சிறி said:

ஆனால்..... புலம் பெயர் தேசத்தில். அண்மையில் நடந்த இரு வெவ்வேறு  கோவில் திருவிழாக்களில், 
சங்கிலிகள் திருடப் பட்டதை அறிந்து, மிகுந்த அதிர்ச்சியும்  மன வேதனையும் ஏற்பட்டது. 

இதாவது பரவாயில்லை

ஐரோப்பாவில் உள்ள ஒரு நாட்டில் எனக்கு தெரிந்த ஒரு பூப்புனித நீராட்டு விழாவில் சமூகமளித்தவர்கள் கொடுத்த நன்கொடைகளையே லம்பா தூக்கிட்டானுவ + வீட்டுக்கு திரும்பி போய் பாத்தா அங்கேயும் இருந்த அத்தனையையும் தூக்கிட்டானுவ.

20 hours ago, தமிழரசு said:

நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு சாவகச்சேரி பகுதியில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளதாகவும் இவர்கள் திருடுவதற்காகவே யாழ்ப்பாணம் வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது வழமையான ஒன்றுதான். என்ன கொஞ்சம் முன்னரே வந்து விட்டார்கள் + சும்மா எதுக்கு இருப்பான் என்று முன்னரே  கையும் வைத்து விட்டார்கள். இங்கு வந்து நல்லூர் திருவிழா காலத்தில் வீடெடுத்து தங்கியிருந்து தொழில் பார்ப்பது ஒன்றும் புதியதில்லை. உழைத்து முன்னேற மறுக்கும் இக்கூட்டம் உள்ளே இருப்பதே சரி.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஜீவன் சிவா said:

இதாவது பரவாயில்லை

ஐரோப்பாவில் உள்ள ஒரு நாட்டில் எனக்கு தெரிந்த ஒரு பூப்புனித நீராட்டு விழாவில் சமூகமளித்தவர்கள் கொடுத்த நன்கொடைகளையே லம்பா தூக்கிட்டானுவ + வீட்டுக்கு திரும்பி போய் பாத்தா அங்கேயும் இருந்த அத்தனையையும் தூக்கிட்டானுவ.

இது வழமையான ஒன்றுதான். என்ன கொஞ்சம் முன்னரே வந்து விட்டார்கள் + சும்மா எதுக்கு இருப்பான் என்று முன்னரே  கையும் வைத்து விட்டார்கள். இங்கு வந்து நல்லூர் திருவிழா காலத்தில் வீடெடுத்து தங்கியிருந்து தொழில் பார்ப்பது ஒன்றும் புதியதில்லை. உழைத்து முன்னேற மறுக்கும் இக்கூட்டம் உள்ளே இருப்பதே சரி.

இது மிகவும் வெட்கித்   தலைகுனிய  வேண்டிய செயலாக உள்ளது.
அந்தச் சாமத்திய வீட் டுக்கறார்  அழைப்பு கொடுத்த..... அவரின் உறவினர்கள், அல்லது நண்பர்கள் தான்... திருடியிருக்க வேண்டும்.
வெளிநாட்டில்  எவ்வளவோ வசதி இருந்தும், சில  ஆட்களின் குணம் ஏன் இப்படி குறுக்கால் போகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

கனபேரின்ட சமர் வெக்கேசன் இந்த திருட்டு கும்மபலால் கேன்சலாக போகிறது :rolleyes:

வாங்கோ ஆனால் நகைகள் பொருட்கள் மிக பத்திரமாக வைத்து கொள்ளுங்கள்  இங்கே யானைத்திருடர்களே இருக்கிறார்கள் 

நல்லூர் திருவிழா களை கட்டும் போல் இருக்கிறது tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

இது மிகவும் வெட்கித்   தலைகுனிய  வேண்டிய செயலாக உள்ளது.
அந்தச் சாமத்திய வீட் டுக்கறார்  அழைப்பு கொடுத்த..... அவரின் உறவினர்கள், அல்லது நண்பர்கள் தான்... திருடியிருக்க வேண்டும்.
வெளிநாட்டில்  எவ்வளவோ வசதி இருந்தும், சில  ஆட்களின் குணம் ஏன் இப்படி குறுக்கால் போகின்றது. 

 கூடப்பிறந்த குணம் மாறாது. "மாறாதய்யா மாறாது, மனமும், குணமும் மாறாது."

On 6/8/2016 at 9:46 PM, தமிழரசு said:

பின்னர் குறித்த பெண்ணுடன் வந்த தாய் மற்றும் தகப்பனை கைது செய்து விசாரணை செய்ததில் இவர்கள் மூவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்

இவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தங்கள் பாரம்பரிய தொழிலை தொடர நினைக்கிறார்கள்! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, போல் said:

இவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தங்கள் பாரம்பரிய தொழிலை தொடர நினைக்கிறார்கள்! 

பழைய பித்தளை பாத்திரம் எண்டு கூவுற சத்தம் கேட்டாலே படலையை இழுத்து மூடின ஊர் என்ரை ஊர்.....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 8.8.2016 at 4:45 AM, satan said:

 கூடப்பிறந்த குணம் மாறாது. "மாறாதய்யா மாறாது, மனமும், குணமும் மாறாது."

மாற்றம் ஒன்றே மாறாதது. ஊரில் இருக்கும்போது ஒரு பொருளை நிலத்தில் கண்டெடுத்தால் அதனை என்னுடையதாக்கிக் கொள்வதில் மனம் எந்தக் கூச்சமும் கொள்வதில்லை. யேர்மனியில் வந்து வாழப்பழகிய பின்பு, கண்டெடுத்த பொருளை அதற்குரியவரைக் கண்டுபிடித்து ஒப்படைப்பதில்... முடியாவிட்டால் காவல்துறையில் ஒப்படைப்பதில் மனம் ஆனந்தம் கொள்கிறது. :)

  • கருத்துக்கள உறவுகள்

புத்தளத்திலிருந்து யாழுக்கு வந்து  திருடுகிறார்கள் என்றால்

யாழ் வளமாக இருக்கிறது

எம்மவர்கள் ஆடம்பரமாக வாழ்கிறார்கள்  அல்லது காட்டுகிறார்கள் என்று தானே அர்த்தம்...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் திருவிழா தொடங்கியதும் கடனை திரும்பித்தருவதாக கடன் வாங்கியவருக்கு வாக்கு கொடுத்திருப்பார்போல .... அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு சுன்னாகம் போலீசார் ஆப்பு வைத்துவிடடார்கள்.

 

இதுவரைக்கும் எவ்வளவு உழைத்திருப்பார்கள் யாழ் மக்களிடம் இருந்து 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

புத்தளத்திலிருந்து யாழுக்கு வந்து  திருடுகிறார்கள் என்றால்

யாழ் வளமாக இருக்கிறது

எம்மவர்கள் ஆடம்பரமாக வாழ்கிறார்கள்  அல்லது காட்டுகிறார்கள் என்று தானே அர்த்தம்...

 

நாங்கள் இடம்பெயர்ந்து வன்னி சென்றபோது சும்மா கொளுத்திய தேங்காய்மட்டை, தென்னோலையை  அறாவிலைக்கு எங்களுக்கு விற்றார்கள். எங்கள் பெண்கள் சந்தைக்கு போய் கூடிய விலையில் காய்கறி வாங்கினார்கள். அதற்கு அங்குள்ளவர்கள் சொன்னார்கள் இங்கு பெண்கள் யாரும் சந்தைக்கு போவதில்லை. 50 ரூபாயில் எம்மவர்கள் வீட்டுக்குத் தேவையானவற்றை எல்லாம் வாங்கி வந்தார்கள். இப்போ யாழ்ப்பாணத்துப் பெண்கள் பாய்க்கைத் தூக்கிக்கொண்டு சந்தைக்கு போவதால் எல்லாம் விலை. என்று எம் காதுப்படவே  பேசினார்கள். தம் பொருளை எமக்கு  விக்கும்போது போது தெரியாதது வாங்கும்போது மட்டும் யாழ்ப்பாணத்தார் பணக்காரர் வாங்குகினம், நாங்கள் என்ன செய்வது என்றார்கள்.கொழும்புக்கு பெயர்ந்த போது சின்ன தகரக்கொட்டிலுகளுக்கெல்லாம் லட்ஷக்கணக்கில் அட்வான்ஸ், பல ஆயிரம் வாடகை. அங்கும் யாழ்ப்பாணத்தார் வந்ததால வீட்டு வாடகை, மீன், மரக்கறி விலை ஏறி விட்டது என்றார்கள். இந்தியாவுக்குப் போயும் இதே நிலை. காய் விக்கிற பெண் சொல்லுறாவாம் நீ வாங்காவிட்டா போம்மா, அங்கால சிலோன் அம்மா சொன்ன விலை தந்து வேண்டும் என்று. உண்மையில் எல்லாவற்றையும் இழந்து வந்தவர்களிடம் உள்ளத்தையும் புடுங்கினார்கள்.  அனுபவித்தவர்கள் விலை பேச முடியாமல் ஊமைகளாய், இருந்ததையும் மறு பேச்சின்றி கொடுத்துவிட்டு  அனுபவித்த  துயரம்  சொல்லி மாளாது. எல்லாரும் பணக்காரர் இல்லை. வாயைக்கட்டி, வயித்தைக்கட்டி வளமாய் வாழப் பழகியதால் அப்படி ஒரு பெயர். 

  • கருத்துக்கள உறவுகள்

சிலோனை இந்தியர்கள் அண்ணாந்து பார்த்த காலம் ஒன்று உண்டு. குறிப்பாக மலையாளிகள் பலர் சொந்தமண்ணில் சோற்றுக்கு வழியின்றிக் கள்ளத்தோணியில் சிலோனுக்கு வந்திறங்கினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Paanch said:

சிலோனை இந்தியர்கள் அண்ணாந்து பார்த்த காலம் ஒன்று உண்டு. குறிப்பாக மலையாளிகள் பலர் சொந்தமண்ணில் சோற்றுக்கு வழியின்றிக் கள்ளத்தோணியில் சிலோனுக்கு வந்திறங்கினார்கள்.

அன்று  வந்தவர்களுக்கு இடம் கொடுத்ததால் இன்று நாமே அழிந்தும் போனோம்.துணைக்கு வந்து அழித்தும் விட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, satan said:

எல்லாரும் பணக்காரர் இல்லை. வாயைக்கட்டி, வயித்தைக்கட்டி வளமாய் வாழப் பழகியதால் அப்படி ஒரு பெயர். 

1705482731.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.