Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுன்னாகம் சம்பவம்: உரிமை கோரியது 'ஆவா' குழு

Featured Replies



சுன்னாகம் சம்பவம்: உரிமை கோரியது 'ஆவா' குழு
 

article_1477306044-1.jpgசுன்னாகம் சந்தைப் பகுதியில், முகமூடி அணிந்திருந்த நபர்களினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், இரு பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துக்கு 'ஆவா' குழு உரிமை கோரியுள்ளது.

மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் 'ஆவா' குழுவினரால் யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளிலேயே இவ்வாறு உரிமை கோரப்பட்டுள்ளது.

குறித்த சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர் நீத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆக்குகின்றோம்.

சுண்ணாகத்தில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு எம்மால் நடத்தப்பட்டதே. பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரத்துக்கு பதிலடியாக இடம்பெற்ற இச்சம்பவம், எம் இன சமூகத் துரோகிகளாக இயங்கும் தமிழ் பொலிஸாரை சிந்திக்க வைக்கும்.

யாழின் மிகப்பெரிய தலைப்பாக இன்று அனைவராலும் கருதப்படும் 'வாள்வெட்டுச் சம்பவங்கள்' சமூக கலாசார சீரழிவுகள் எனும் தலைப்பினுள் உள்ளடக்கம் என்றாலும் 'ஆவா' குழுவினால் இன்றளவும் மேற்கொள்ளப்படும் பெருமளவு வாள்வெட்டுக்கள் சமூகத்தில் காணப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகிறது.

பலதரப்பட்ட சமூக சீரழிவுகளுக்காக எம்மால் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. தமிழீழத்தின் கலாச்சார பூமி என அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தில் கலாசாரம் சீரழிந்து போவதை தமிழராக இருந்து எம்மால் அனுமதிக்க முடியாது.

யாழ். மக்களுக்கு கலாசாரம் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அந்தளவுக்கு யாழ் பல்கலைக்கழகமும் அதன் மாணவர்களும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவர்களுக்கு இன்று இழைக்கப்பட்ட இந்த துயரத்துக்கு சில சிங்கள பொலிஸார் துணை நின்றிருந்தாலும் முன்னின்று நடத்தியது தமிழ் பொலிஸாரே.

நீதிபதி இளஞ்செழியனின் கட்டளைக்கு அமைய, இந்தக் கொடூரத்தை இன்றுஇளைத்த உப-பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் உட்பட அவர் தலைமைக்கு உட்பட்டு, செயற்பட்ட அத்தனை தமிழ் பொலிஸாருக்கு தண்டனைகள் கால அமைவுக்கு ஏற்ப வழங்கியே தீர்ப்போம்.

இதற்கு முற்பட்ட காலங்களில் எங்களால் நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவங்களுக்குப் பின்னாலும் வலுவான சமூகத்தை சீரழிக்கும் காரணங்கள் இருந்துள்ளன. ஆனாலும், எமக்கு பெருமை தேவையில்லை. அவ்வாறு நாம் செயற்பட்டாலும் என்னவோ சமூகத்துக்குப் புறம்பான சமூகவிரோத குழுவாக எங்களை பொலிஸாரும் ஊடகங்களும் மக்கள் மத்தியில் வெளியிட்டனர்.

திருட்டு, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அடக்குவது போன்ற எங்களுடைய செயற்பாடுகளால் பாதுக்காப்பட்ட ஊர்கள் பல.

இனிவரும் காலம் முன்னையது போல் அல்லாமல் எங்களால் அரங்கேறும் சம்பவங்களுக்குரிய சரியான காரணங்களை தவறாமல் சமூம் மக்களுக்கு வெளிப்படுத்துவோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சுன்னாகம் சந்தைப் பகுதியில், கடையொன்றில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவத்தை முறியடிக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த இரு பொலிஸாரும் வாள்வெட்டில் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்த நிலையிலேயே ஆவா குழுவின் இந்த சுவரொட்டி வெளிவந்துள்ளது.article_1477305900-1.jpg

http://www.tamilmirror.lk/184620/ச-ன-ன-கம-சம-பவம-உர-ம-க-ர-யத-ஆவ-க-ழ-

இன்னும் அங்கு அடாவடி பண்ணும் குழுக்களின் பேரில் நாலு அறிக்கை இப்படி வரனும் 

  • தொடங்கியவர்

பொலிஸார் மீதான வாள் வெட்டு : 'ஆவா குழு'வால் விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரம் : விபரிக்கும் சிறுவன் (காணொளி இணைப்பு)

 

 

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துக்கு ஆவா குறூப் உரிமை கோரியுள்ளது.

fafaada.jpg

இது தொடர்பான விபரம் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் யாழ். இந்துக்கல்லூரிக்கு அருகில் இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் வீசப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

 

14793674_10205948342382392_938605217_n.j

CviJ5KQWIAAcIhi.jpg

http://www.virakesari.lk/article/12704

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
 
 

#யாழ்#உரும்பிராய் சந்தியில் இன்று திங்கட்கிழமை #இளைஞர் ஒருவர் மீது #பொலிசார் தாக்குதல். #Police #attacked #lka #sl

  • கருத்துக்கள உறவுகள்

வாள் வெட்டுக்கு இலக்கானவர்கள் தமிழ் போலீசார் அல்லவே. குற்றத்தை மறைத்து  வேறொரு பூச்சு அடிக்கினம். 

16 hours ago, satan said:

வாள் வெட்டுக்கு இலக்கானவர்கள் தமிழ் போலீசார் அல்லவே. குற்றத்தை மறைத்து  வேறொரு பூச்சு அடிக்கினம். 

ஆவா குழு, வித்தியா பாலியல் பலாத்காரக் குழு போன்ற சமூக விரோத குழுக்களுக்கு பின்னால் இயங்குபவர்கள் வேறுயாரும் இல்லை, சிங்கள-பௌத்த பாதுகாப்பு துறை பயங்கரவாதிகள் (சிங்கள-பௌத்த புலனாய்வுத்துறைப் பயங்கரவாதிகள், சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகள், சிங்கள-பௌத்த கடற்படைப் பயங்கரவாதிகள், சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகள், சிங்கள-பௌத்த விமானப்படைப் பயங்கரவாதிகள்) தான்.

வித்தியாவின் குடும்பத்துக்கு இராணுவப் பயங்கரவாதிகளின் குடியிருப்புக்களின் மத்தியில் வீடமைத்து கொடுத்ததன் மூலம் பல உண்மைகள் விளங்கியிருக்க வேண்டும். 

யாழில் போதைப்பொருள் பாவனையை பெருக்குவதில் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் மேற்படி பயங்கரவாதக் குழுக்கள், அவர்கள் வலையில் வீழ்ந்த சமூக விரோதக் குழுக்கள் மூலம் கடும் முயற்சியில் கடந்த 6-7 வருடங்களாக ஈடுபட்டு வருகின்றனர் .

யாழில் போதைப்பொருள் பாவனையை பெருக்குவதில் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் ஹிந்திய பயங்கரவாதிகள் பெரும் துணை நிற்கிறார்கள்.

ஆவா குழுவே முதல் அசிங்கம். அதையே முதல் அகற்றவேண்டியுள்ளது. 

31 minutes ago, சண்டமாருதன் said:

ஆவா குழுவே முதல் அசிங்கம். அதையே முதல் அகற்றவேண்டியுள்ளது. 

ஆவா குழு அகற்றப்பட வேண்டியது தான். மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் எப்போது யாழ் மண்ணில் இருந்து சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதம் அகற்றப்படுகிறதோ அன்றுடன் இந்தக் குழுவும் மறைந்து போகும். 

  • கருத்துக்கள உறவுகள்

உது.. உங்கடை ஆக்கள் தான் உங்களைச் சுட்டவை என்று சொல்ல.. நடத்திற வெட்டுக்குத்து. எங்கடை ஆக்களுக்கு துவக்கைக் கொடுத்து எங்களையே சுடுவிக்கிறது... வெட்டு விக்கிறது.. மண்டையன் குழு காலத்திற்கு முன்பிருந்தே.. எஜமானர்கள் நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

பிரச்சனை சுடுறவன் அல்ல. சுட துவக்கும்.. அதிகாரமும்.. சுடுறவனுக்கு பாதுகாப்பும்.. கவசமும் அளிக்கிற இனப்படுகொலை எஜமானர்கள் தான். சுடுறவன்.. சிங்களவனோ.. முஸ்லீமோ.. தமிழனோ.. எல்லாம் அவர்களின் கருவிகள். அவ்வளவே. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உவ்வளவு இராணுவமும் காவல் துறையும் இருந்தும் ஆவா குழுவும் இயங்குகிறது என்றால் புலிகளை போல் பல இயக்கங்களும் இயங்கலாம் தானே. இது நம்பும் படியாக உள்ளதா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.