Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதவிகிடைத்ததால் அரசியலுக்கு வந்தவன் நானல்ல! விக்கி மீது மாவை கடும்கோபம்!!

Featured Replies

பதவிகிடைத்ததால்  அரசியலுக்கு வந்தவன் நானல்ல! விக்கி மீது மாவை கடும்கோபம்!!

முதலமைச்சர் அவர்கள் நேற்றைய காலைக்கதிர் நிகழ்வில் தெரிவித்த கருத்து தனது மனதைப் பாதித்துவிட்டதாகத் தெரிவித்த மாவை சேனாதிராஜா பதவிகிடைத்தால்தான் நாங்கள் அரசியலில் ஈடுபடுகிறோம் என்ற வரலாறு எமக்கு இல்லை என்றார்.

இன்று (06-11-2016) தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிக் கிளைத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் மேலும் தெரிவித்தாவது,

முதலமைச்சர் செல்லும் இடங்களில் எல்லாம் எனது முதல்வர் பதவியை தான் தட்டிப்பறித்துவிட்டேன் என சங்கடப்படுவதாக சொல்லிவருகின்றார். அப்படி சொல்வதன் மூலம் அவர் என்னை வேதனைப்படுத்துகின்றார்.நான் நினைத்திருந்தால் முதல்வர் பதவியில் இருந்திருக்கமுடியும். நான்தான் நிற்கபோகின்றேன் என சொல்லியிருந்தால் அதனை ஒருவரும் தடுத்திருக்கமாட்டார்கள். ஆனால் நான் ஒருவரிடமும் வாய் திறந்து முதல்வர் பதவிக்கு வரப்போகிறேன்  என்று எப்போதும் சொன்னதில்லை.

ஆனந்தசங்கரி அவர்கள் நான்தான் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானர் என தொலைபேசியில் அழைத்துச்சொன்னார். நான் அந்தப் பதவியை ஏற்கவேண்டும்  என்றார். கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் அனைத்தும் நானே முதல்வராக வேண்டும் என்று விரும்பினார்கள். சுமந்திரன் அவர்கள் என்னைச் சம்மதம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். முதலமைச்சர் வேட்பாளராக விக்கினேஸ்வரன் அவர்கள் தெரிவான பின்பும் நீங்கள்தான் எங்களுடைய முதல்வர் என்று அனைத்துக் கட்சிகளும் கூறினர். அதுதான் எனக்குப் பெருமை.

சம்பந்தன் அவர்கள் திருமலையில் வழக்கறிஞராக இருந்தபோது நாங்கள் ஒரு கிராமத்தை குடியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது  எமது இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கில் திரு.சம்பந்தன் அவர்கள்தான் எங்களுக்காக வாதாடினார். அப்போது நான் சம்பந்தனிடம் கேட்டேன் நீங்கள் எங்கள் கட்சிக்கு வரவேண்டும். தந்தை செல்வாவிடம் அமிர்தலிங்கத்திடமும் சம்பந்தன் அவர்களை எங்கள் கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும் என்று சொன்னவன் நான். பதவி இருந்தால்தான்  எங்களை அரசியலுக்கு அர்ப்பணிப்போம் என்று இருந்தவன் அல்ல நான்.

எமது தலைவர் சம்பந்தன் அவர்கள் சொன்னார் நீங்கள்தானே எனக்கு விக்கினேஸ்வரனை அறிமுகப்படுத்தினீர்கள் என்று. ஏதோ நான் விரும்பியிருந்ததொன்றை தான் தட்டிப்பறித்தாகக் கூறுகிறார். எங்களைப்பற்றி அவர் அப்படி உச்சரிக்கக் கூடாது. உச்சரிக்கத் தேவையில்லை.

நான் போராட் வழியில் வந்தவன். பதவிகளுக்கு என்றுமே ஆசைப்பட்டவனல்ல. தந்தை செல்வா மறைந்த பின்பு காங்கேசன் துறைத் தொகுதியில் நான் நிற்கவேண்டும் என அமிர்தலிங்கம் விரும்பினார் ஆனால் நான் அமிர்தலிங்கம்தான் அங்கு நிற்கவேண்டும் என்று கூறி அவரைப் போட்டியிட வைத்தோம். நான் பதினொரு தடவைகள்  சிறைசென்று ஏழு வருடங்கள் சிறையில் கழித்துள்ளேன். எனக்கு உடம்பு முழுவதும் தழும்புகள் இருக்கின்றன என்றார்.

http://thuliyam.com/?p=47237

  • கருத்துக்கள உறவுகள்

image.png

  • கருத்துக்கள உறவுகள்

 விக்கியர் ஒன்றும் தானாக அதை சொல்லவில்லை. உங்கட சிலதுகள் மாவையர்தான் முதல்வர் பதவிக்கு தகுந்தவர், இப்ப வந்த சிலர் அதி மேதாவித்தனம் செய்கிறார்கள், பதவி ஆசை பிடித்தவர்கள் என்று சொல்லி முதலமைச்சர் செய்யும் ஒவ்வோர்  நல்ல காரியங்களை எல்லாம் விமர்சிக்கேக்க உதை சொல்லியிருக்கலாமே. இப்ப ஏதோ சந்நியாசி மாதிரி முதலமைச்சரை கோவிக்கிறார். உங்களுக்கு தேவைப்பட்ட போது நல்லவராக  தெரிந்தவர், இப்போ உங்கள் தேவை தீர்ந்தவுடன் பதவி ஆசை பிடித்தவர் என்று வாய்க்கு வந்தபடி தீட்டித் தீர்ப்பது. உதொன்றும் உங்களுக்கு புதிதில்லை. நல்லவர்களைக் கண்டால் உங்களுக்கு பிடிக்காது. உண்மையான பதவி ஆசை பிடித்ததை கமக்கட்டுக்கை வைச்சுக்கொண்டு மற்றவரை விமர்சிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் வற்புறுத்தி கேட்டு தானே விக்கினேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராக ஒப்புக்கொண்டார். பதவியை கொடுத்து விட்டு பிறகு நான் தான் விட்டுக்கொடுத்தேன் என்ற பாணியில் கூட்டம் வைத்து பேசுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. விமர்சனங்களை ஏற்க  சனநாயக சிங்கங்களுக்கு முடியாமல் உள்ளது. மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை கொடுப்பதில் முதன்மையானவர்கள் இவர்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தல் வரத்தானே போகுது அப்போது உங்கள் வாய் வீரத்தைக் காட்டுங்கள் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Quote

 

பதவிகிடைத்ததால் அரசியலுக்கு வந்தவன் நானல்ல! விக்கி மீது மாவை கடும்கோபம்!!

 

 

ma..maa_zpsw03q4oo8.jpg

 

On 6/11/2016 at 5:16 PM, Athavan CH said:

நாங்கள் ஒரு கிராமத்தை குடியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது  எமது இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போதிருந்தே மாவை மற்றவர்களை (இளைஞர்களை) ஏவி அரசியல் செய்து பிழைத்தவர் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.


மேலும் முதல்வர் பதவிக்கு மாவை அலைந்ததை ஊருக்கு மறைக்க முடியாது. இவரை ஆனந்தசங்கரி போன்றவர்கள் தான் முதல்வராக்க முனைவர்.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியரால் தான் முதல் அமைச்சர் பதவி முக்கியத்துவம் அடைந்தது.

டேவிட் கேமரூன் முதல் பான் கி மூன் வரை, மாவையினை சந்திக்க வந்திருக்க மாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏதோ ..சி.வி அவர்களை தனிகட்சி தொடங்க கொம்பு சீவி விடுகிறார்கள் போல கிடக்கு..!!

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி நீங்கள் சொல்வது உண்மை தான்.ஆனால்,இவர்களை சந்திச்ச தன் மூலம் விக்கியர் தமிழ் மக்களுக்கு என்னத்தை பெற்றுக் கொடுத்தார்?

  • கருத்துக்கள உறவுகள்

 விக்கியர் வராமல் இருந்திருந்தால் தெரிந்திருக்கும் உவர்களின் பொட்டுக்கேடு, இப்ப ஏத்தி விட்ட ஏணியை உதைச்சு விழுத்த முயற்சி செய்யினம்.

அறுபது வருடமாய் தேரோட்டினவை  என்னத்தை பெற்றுக்கொடுத்தவை? தமிழினத்தை ஆயுதம் ஏந்த வைத்து அழித்ததுதான் மிச்சம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

5 minutes ago, satan said:

 விக்கியர் வராமல் இருந்திருந்தால் தெரிந்திருக்கும் உவர்களின் பொட்டுக்கேடு, இப்ப ஏத்தி விட்ட ஏணியை உதைச்சு விழுத்த முயற்சி செய்யினம்.

அறுபது வருடமாய் தேரோட்டினவை  என்னத்தை பெற்றுக்கொடுத்தவை? தமிழினத்தை ஆயுதம் ஏந்த வைத்து அழித்ததுதான் மிச்சம்.

கனக்க செய்திட்டினமெண்டு இஞ்சை ஒராள் காட்டுக்கத்து கத்தினது கேக்கேல்லையே???

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.