Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடுத்த தைப்பொங்கலுக்குமுன் அனைத்துபிரச்சினைகளுக்கும் தீர்வு-ராஜித

Featured Replies

அடுத்த தைப்பொங்கலுக்குமுன் அனைத்துபிரச்சினைகளுக்கும் தீர்வு-ராஜித
 
 
அடுத்த தைப்பொங்கலுக்குமுன் அனைத்துபிரச்சினைகளுக்கும் தீர்வு-ராஜித
நாட்டில் தற்போது நிலவும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அடுத்த 2018 ஆம் ஆண்டு காலப்பகுதிகுள் தீர்வு கிடைக்கும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
 
பேலியகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தைப்பொங்கல் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
மேலும் இந்த ஆண்டு கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையினை விட அடுத்த வருடம் மிகவும் விமர்சையாக கொண்டாட முடிவெடுத்துள்ளதாக அவர் கூறினார்.
 
அந்த நிகழ்வானது கொண்டாடப்படும் பொழுது நாட்டில் இருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைத்துவிடும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

http://onlineuthayan.com/news/22686

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சம் தீபாவளிக்கு முன்னர் தீர்வை பெற்று தந்தடுவாரே,

நீங்க என்ன செய்யப்போறீங்க.. என்ன செய்யப்போறீங்க..... 

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரே எங்கட பிரச்சனைக்கும் 
ஏதும் தீர்வு வருமா ?

ஹிருனிகாவுடன் ஏதும் பேசி கேசி புத்திமதி சொன்னீர்களா ? 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

எங்கட சம் தீபாவளிக்கு முன்னர் தீர்வை பெற்று தந்தடுவாரே,

நீங்க என்ன செய்யப்போறீங்க.. என்ன செய்யப்போறீங்க..... 

நீங்க பகல் கனவு காணுறீங்க

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

நீங்க பகல் கனவு காணுறீங்க

முனிவர் என்ன நடந்தது? பகிடியாக நக்கலுக்கு எழுதியதையும் சீரியசாக எடுக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

முனிவர் என்ன நடந்தது? பகிடியாக நக்கலுக்கு எழுதியதையும் சீரியசாக எடுக்கிறீர்கள்.

நானோ சீரியசாகி என்ன நடக்க போகிறது மீரா  தீர்வை தந்தாலும்  அவர்கள்  விட மாட்டார்கள்  போல் உள்ளது  நான் கோபப்பட்டதே இல்லை tw_blush::113_tongue:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

நானோ சீரியசாகி என்ன நடக்க போகிறது மீரா  தீர்வை தந்தாலும்  அவர்கள்  விட மாட்டார்கள்  போல் உள்ளது  நான் கோபப்பட்டதே இல்லை tw_blush::113_tongue:tw_blush:

உண்மை முனி. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

உண்மை முனி. 

ஆள் சொல்ல மாட்டேன் சில அரசியல் வாதிகள் (தமிழ்)  பணத்தின் பின் செல்வது தெரிந்து கொண்டேன் ஆதான் கொஞ்சம் சூடாகிவிட்டேன்   

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி எல்லா பிரச்னையும் தீரும், அரசியல்வாதியென்றாலும் வெடி விடுறதுக்கு அளவில்லையோ?

15 hours ago, நவீனன் said:

அடுத்த தைப்பொங்கலுக்குமுன் அனைத்துபிரச்சினைகளுக்கும் தீர்வு-ராஜித

ஏன் இவர் அடுத்த தைப்பொங்கலுக்கு முதல் சிங்கள-பௌத்தர்களை கப்பலில் ஏற்றி அவர்கள் வந்த இடத்திற்கே அனுப்பப்போறாரோ? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, நவீனன் said:

நாட்டில் தற்போது நிலவும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அடுத்த 2018 ஆம் ஆண்டு காலப்பகுதிகுள் தீர்வு கிடைக்கும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் நுளம்புக்கு மருந்து ,  மலத்தியோன் அடிக்கிறதை பற்றி கதைக்கிறார் போலை கிடக்கு..:grin:

  • தொடங்கியவர்

இவ்வாண்டு தேசிய பிரச்சினைக்கு உறுதியான தீர்வு காணப்படும்

11-malayalam-films-served-as-refuge-says-gouthami-d661d20c0737cb31d789bd7ec56811ccf6439694.jpg

 

சர்வதேசத்தை திருப்திப்படுத்தி தீர்மானம் எடுக்க முடியாது என்கிறார் ராஜித
(ஆர்.யசி)

தேசிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்­து­ வ­ரு­கின்­றது. இந்த ஆண்டு இறு­திக்குள் தேசிய பிரச்­சி­னை­க­ளுக்கு உறு­தி­யான தீர்வு எட்­டப்­படும். ஆனால் சர்வ­தே­சத்தை திருப்­திப்­ப­டுத்த எம்மால் தீர்­மா­னங்­களை எடுக்க முடி­யாது என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

நல்­லி­ணக்கப் பொறி­முறை செய­ல­ணியின் அறிக்­கை­யை முழு­மை­யாக நடை­மு­றை­ப்ப­டுத்­து­வது தொடர்பில் அர­சாங்கம்  இன்னும் உறு­தி­யான தீர்­மானம் எடுக்­க­வில்லை அது குறித்து அர­சாங்கம் ஆராயும் எனவும் அவர் குறிப்­பிட்டார்  

நல்­லி­ணக்க பொறி­மு­றைக்­கான கலந்­தாய்வு செய­ல­ணியின் அறிக்­கையை நிரா­க­ரிக்­காது அர­சாங்கம் முழு­மை­யாக நடை­மு­றை­ப­டுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் சர்­வ­தேச மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­ப­கமும் வலி­யு­றுத்­தி­யுள்ள நிலையில் இலங்­கையின் சில அர­சியல் கட்­சிகள் எதிர்ப்­பையும் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளன. இவ்விடயம் குறித்து அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில் ,

நல்­லி­ணக்க பொறி­மு­றைக்­கான கலந்­தாய்வு செய­ல­ணியின் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலையில் அறிக்­கையின் கோரிக்­கைகள் தொடர்பில் அர­சாங்கம் இன்னும் உறு­தி­யான தீர்­மானம் எடுக்­க­வில்லை.அறிக்­கையின் பரிந்­து­ரைகள் தொடர்பில் இன்னும் கலந்­தாய்­வுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அதேபோல் இந்த அறிக்­கையின் முன்­மொ­ழி­வுகள் தொடர்பில் அர­சாங்கம் ஆரா­ய­வேண்டும். நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க சகல தரப்­பையும் திருப்­திப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை கையாள வேண்டும்.தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­ப­டு­வது அவ­சி­ய­மான ஒன்­றா­கவே நாம் கரு­து­கின்றோம். இந்த ஆண்­டுக்குள் முக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு எட்டும் முயற்­சி­களில் அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது.வடக்கு கிழக்கில் காணி­களை பூர­ண­மாக விடு­வித்தல், தொழில் வாய்ப்­பு­களை உரு­வாக்­குதல், அபி­வி­ருத்தி நகர்­வு­களின் மூலம் வடக்கு கிழக்கு மக்­களின் பொரு­ளா­தார பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்த தீர்­வு­களை ஏற்­ப­டுத்தல் மீள் குடி­யேற்றம் உள்­ளிட்ட பிரச்­சி­னை­களை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

எனினும் சர்­வ­தேச நாடு­களின் அல்­லது புலம்­பெ­யர்ந்து வாழும் புலி­க­ளுக்கு ஏற்ற வகையில் எம்மால் தீர்­மா­னங்­களை எடுக்க முடி­யாது. புலி­களின் நோக்­கமும் அவர்­களின் திட்­டமும் குறு­கியதொன்­றாகும். நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தி அதன் மூலம் அவர்­களின் ஒரு­சில இலக்­கு­களை நிறை­வேற்ற அவர்கள் சர்­வ­தேச அரங்கில் இருந்து கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர் .ஆனால் அர­சாங்கம் என்ற ரீதியில் நாம் மக்கள் கட்­ட­மைப்பின் அடிப்­ப­டையில் செயற்­பட வேண்டும். மக்­களின் எதிர்­பார்ப்பு என்­னவோ அதை முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­டங்­களை நாம் கையாள வேண்டும்.தமிழ் மக்­க­ளுக்கு தீர்வு அவ­சியம்.அர­சியல் தீர்வு அமை­ய­பெறும் நிலையை அது சிங்­கள மக்­க­ளாலும் ஏற்­று­கொள்­ளக்­கூ­டிய வகையில் அமை­யப்­பெற்ற வேண்டும். அதன் அடிப்படையில் தான் நல்­லி­ணக்க செய­ல­ணியின் அறிக்­கையும் அமைய வேண்டும்.

அதி­காரப் பகிர்வு தொடர்பில் அர­சாங்கம் அக்­கறை காட்­டு­கின்­றது ஆனால் யுத்த குற்ற விசா­ர­ணைகள் மற்றும் சர்­வ­தேச விசா­ர­ணை­களில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் சர்­வ­தேச தரப்பின் நிலைப்­பாட்டை விடவும் மாறு­பட்ட ஒன்­றா­கவே உள்­ளது.யுத்­தத்தை வெற்­றி­கொள்ள நாம் எடுத்த முயற்­சி­களில் தவ­றுகள் இருப்பின் அவற்றை உள்­நாட்டு விசா­ர­ணை­களின் மூல­மாக கையாள முடியும். எனினும் இரா­ணு­வத்தை தண்­டித்து புலி­களை திருப்­ப­திப்­ப­டுத்த இட­ம­ளிக்க முடி­யாது.

தேசிய பாது­காப்பு மற்றும் இலங்கை மக்­களை காப்­பாற்றும் நகர்­வு­களில் அர­சாங்­கதின் நட­வ­டிக்­கை­களை எவ­ராலும் மாற்­றி­ய­மைக்க முடி­யாது. மனித உரி­மை­களை பாது­காக்­கவும் வடக்கு கிழக்கில் நடக்கும் அடக்­கு­முறை சூழலை கட்­டுப்­ப­டுத்­தவும் சர்­வ­தேச மனித உரி­மைகள் ஆணை­யகம் எமக்கு வலி­யு­றுத்­தி­யுள்­ளது. அந்த விட­யங்­களில் நாம் சரி­யாக செயற்­படு வரு­கின்றோம்.ஆனால் புலி­களை நியா­யப்­ப­டுத்­தவோ அல்­லது நாட்டை பிரித்­துக்­கொ­டுக்­கவோ எனவும் எமக்கு கட்­ட­ளை­யிட முடி­யாது.

அர­சியல் ரீதியில் தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள வடக்கில் தமிழர் பிரதிநிதிகளும் தெற்கில் சிங்கள பிரதிநிதிகளும் கருத்துக்களை முன்வைக்கலாம். அவை மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றத்தை சென்றடைவதற்கே தவிர உண்மையான கருத்துக்கள் அல்ல.தேசிய ரீதியில் சகல மக்களையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் வரவேண்டும். அப்போதுதான் அனைவரும் எதிர்பார்க்கும் நல்லிணக்கத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-16#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.