Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் கள்ள கூட்டத்தின் காணி சுவீகரிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட கிழக்கில் புலம்பெயர் தமிழர்கள் காணிகளை வேண்டுவதனால் உண்டான பாதக விளைவுகளால் என் நண்பன் மிகவும் மன வேதனை கொண்டு என்னுடன் பகிர்ந்த விடயங்களை இங்கு எழுத விரும்புகிறேன்.

நானும் அவனும் ஒரே ஊர் தான். இராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக இப்பதான் விடுறாங்கள். விட்ட உடன் காணிக்காரன் வெளிநாட்டில் இருந்து வந்து திருத்தி போட்டு இன்னொரு வெளிநாட்டு காரனுக்கு நல்ல விலைக்கு வித்து போட்டு போறான். என் நண்பன் ஒரு ஆசிரியர். மேலதிக வருமானத்துக்கு வெங்காயம் மிளகாய் செய்யுறான். ஆனால் அவனிடம் போதிய காணி இல்லை. என்னிடம் கேட்டான் காணி வேண்டி குத்தகைக்கு தர முடியுமா என்று? எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

காணி வேண்டும் புலம் பெயர் ஆட்கள் யார் என்று பார்த்தால் புலத்தில் உருட்டு மாட்டு விளையாட்டுகள் செய்து காசு சேர்த்து போட்டு அதை என்ன செய்வது என்று தெரியாமல் தாய் தந்தை உறவுகள் பெயரில் காணி வீடு வேண்டி விருதுகள்.

இதனால் வட கிழக்கில் உள்ள சாதாரண குடிமகன் பாதிக்க படுகிறான் என்பதை புரியும் பக்குவம் இருக்குமா தெரியவில்லை.

வட கிழக்கின் எல்லை புற கனிகளை வேண்டி விடடால் பரவாயில்லை. சிங்கள குடியேற்றங்களை தடுக்க வாவது உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

M.P நீண்ட நாட்களின் பின் கண்டது சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

MP யர், ஒருபோதுமே மறுபக்கம் உள்ள பிரச்சனை பார்ப்பதில்லை.

உருட்டு மாட்டு வேலைகள் செய்பவர்கள் தான் காணி வீடு வாங்குகிறார்களா ? 

நீங்கள் உங்கள் நண்பருக்காக வாங்கிப் போட இஷடமில்லை.... ஏனெனில் நீங்கள் உருட்டு மாட்டு வேலைகள் செய்வதில்லை... அப்படித்தானே?

புலம் பெயர் தமிழர்கள் வாங்காவிடில், வேறு பலர் வாங்கிப் போட தயார் என்பது தெரியவில்லையா?

கிழக்கில் என்ன நடக்கிறது? பணத்துடன்... தமிழர் காணி கிடைக்குமா என்று ஒரு கூட்டம் அலைகிறதே.

முதலில் உங்கள் நபருக்கு உதவுங்கள். அது உதவி மட்டுமல்ல... அவ்வாறு செய்வதால்.... காணிகள் தமிழர்கள் மத்தியில் மட்டுமே இருக்கும்.

குறித்து வைத்துக் கொள்ளுங்கள். சிங்கள குடியேட்டம்... சிறப்பாக நடக்கட்டும்.

பாதுகாப்பாக உணரும் போது... திரும்பி வரக்கூடிய, புலம் பெயர் தமிழர்களிடம் பணத்தினை வாங்கிக் கொண்டு, முறையான உறுதியுடன் வித்து விட்டு போவார்கள்.

பணம்... பேசும்.

கொள்ளுப்பிட்டி முதல் மொரட்டுவ வரை நிகழ்ந்தது.... நிகழ்கிறது.

அனைத்துக்கும் முதல் தெளிவாக சிந்திக்க பழக வேண்டும் MP தம்பி.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, MEERA said:

M.P நீண்ட நாட்களின் பின் கண்டது சந்தோசம்.

தம்பி வாரது ஏதாவது முறைப்பாட்டோடதான் வாரது   

தம்பி சொல்வது உன்மையும் தான் கன பேர் வித்துப்போட்டுகிறார்கள்  ஏனென்றால் நாங்கள் இனி வரப்போவ்வதில்லையே என்ற காரணத்தினால் என்னவோ அல்லது சுற்றுலாவுக்கு வந்து போகலாம் அப்போது  உல்லாச விடுதிகளில் தங்கிவிட்டு போகலாம் என்று நினைக்கிறார்களோ

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, முனிவர் ஜீ said:

தம்பி வாரது ஏதாவது முறைப்பாட்டோடதான் வாரது   

தம்பி சொல்வது உன்மையும் தான் கன பேர் வித்துப்போட்டுகிறார்கள்  ஏனென்றால் நாங்கள் இனி வரப்போவ்வதில்லையே என்ற காரணத்தினால் என்னவோ அல்லது சுற்றுலாவுக்கு வந்து போகலாம் அப்போது  உல்லாச விடுதிகளில் தங்கிவிட்டு போகலாம் என்று நினைக்கிறார்களோ

 

முனிவர்,

விசயத்தை சரியா விளங்கேயில்லை போல கிடக்குது.

அவர் விக்கிறதை பத்தி கதைக்கேல்ல... வாங்கிறதை பத்தி தான் கதைக்கிறார் கண்டியாலோ...

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

முனிவர்,

விசயத்தை சரியா விளங்கேயில்லை போல கிடக்குது.

அவர் விக்கிறதை பத்தி கதைக்கேல்ல... வாங்கிறதை பத்தி தான் கதைக்கிறார் கண்டியாலோ...

ம் விளங்கினது நான் சொன்னதும் கனபேர் வித்து விட்டு செல்கின்றனர்   அதிகமான விலைக்கு  அதை வாங்க முடியாமல் உள்ளூர் வாசிகளும் அதை வாங்குபவர்கள்  செல்வந்தர்களே அவர்கள் அதை வாங்கி கோட்டல்கள் மாபெரும்கடைதொகுதியை கட்டிவிடுகிறார்கள் பாஸ்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, முனிவர் ஜீ said:

ம் விளங்கினது நான் சொன்னதும் கனபேர் வித்து விட்டு செல்கின்றனர்   அதிகமான விலைக்கு  அதை வாங்க முடியாமல் உள்ளூர் வாசிகளும் அதை வாங்குபவர்கள்  செல்வந்தர்களே அவர்கள் அதை வாங்கி கோட்டல்கள் மாபெரும்கடைதொகுதியை கட்டிவிடுகிறார்கள் பாஸ்

 

அதைத்தான் சொல்லுகிறேன்....

அவ்வாறு விற்கும் காணிகளை, புலம் பெயர் தமிழர் வாங்கக் கூடாது என்றால் யார் வாங்க வேண்டும் என்று MP சொல்கிறார் என்பதே நம்ம கேள்வி....

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

அதைத்தான் சொல்லுகிறேன்....

அவ்வாறு விற்கும் காணிகளை, புலம் பெயர் தமிழர் வாங்கக் கூடாது என்றால் யார் வாங்க வேண்டும் என்று MP சொல்கிறார் என்பதே நம்ம கேள்வி....

வாங்கலாம் நாதா மீண்டும் அந்த நிலத்தில் பயிர் செய்ய அவர்கள்  விரும்புவதில்லையே பிற தொழில் தொடங்க நினைப்பதால் நிலம் அற்று போவதாக இருக்கலாம் அல்லவா எல்லா இடங்களிலும் பயிர் செய்ய முடியாது அல்லவா 

  • கருத்துக்கள உறவுகள்

நயினாதீவு நாக விகாரையில் கடந்த முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு பிக்கு இருந்தார், 

(இதுக்குப்பிறகு நான் கூறும் விடையம் கொஞ்சம் மனதுக்குக் கோவம் வரும் எனத் தெரியும் ஆனால் அதையும் சீணணிக்க வேண்டும்) 

அந்த ஊரின் எங்கட பொம்பிளையோட கொஞ்சம் தொடர்பு பிறகென்ன நாகவிகாரையைச் சுற்றியுள்ள பொருளாதார ரீதியில் சிரமம் உள்ள சிலருக்கு அவர்களது காணியை அறுதியாக வைத்துக் காசு கொடுத்து, விகாரையின் அருகில் உள்ள காணிகளை எல்லாம் வளைச்சுப்போட்டுட்டார் அதுக்கு அந்தப்பொம்பிள்ளைதான் துணையாக இருந்தது எனக்கேள்வி,

கொஞ்சம் மாற்றி யோசிச்சுப்பாருங்கோவன்.

எனது வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு காணியும் அதனுடன் சேர்ந்த பழைய வீடும் கொழும்பில் இருக்கும் ஒரு தமிழ்ப் பெண்மணிக்குச் சொந்தம் அப்பெண்மணி இன்னுமொரு முஸ்லீமுக்குச் சொந்தம் குடும்பத்தை இட்டுட்டு அவருடன் குடித்தனம் செய்யுறா, காணி விலைக்கு வந்தது கொஞ்சம் இல்லை கனக்க விலை கொடுத்துத்தான்  நான் வாங்கினேன் இல்லையே எதிர்காலத்தில் எனது வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பள்ளிவாசல் வரக்கூடிய சந்தர்ப்பமும் இருக்கும். அதுக்கு அடுத்தகாணி கிட்டத்தட்ட நூறு பரப்பு அதன் உரிமையாளர் கொழும்பில் இருக்கினம் அவர்களது சம்பந்த பகுதியில் ஒருவர் முஸ்லீம் பெண்ணை கலியானம் செய்திருக்கிறார் ஐந்து பரப்புக் காணிக்குள் பள்ளிவாசல் வருவதைத் தடுத்தாயிற்று இப்பொ நூறு பரப்பில பள்ளிவாசலும் ஐ எஸ் எஸ் சின் முகாமும் வரப்போகுது என்ன செய்யுறது எண்டு யோசிக்கிறன்.

ஆனால் எம்பி என்னடாவெண்டால் புலம்பெயர் தமிழர் தோழில எம்ம்ப் எம்ம்பி குதிக்கிறார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் கள்ளர் வாங்கிறது இருக்கட்டும்.. சிங்களவங்கள் வாங்கிறாங்களே.. அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்...??! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

அதைத்தான் சொல்லுகிறேன்....

அவ்வாறு விற்கும் காணிகளை, புலம் பெயர் தமிழர் வாங்கக் கூடாது என்றால் யார் வாங்க வேண்டும் என்று MP சொல்கிறார் என்பதே நம்ம கேள்வி....

உள்ளூரிலேயே பலர் வாங்க இருக்கினம். வாங்கி அதை பயன்படுத்தி தாங்களும் கொஞ்சம் பயன் பெற்று மற்றவர்களுக்கும் வேலை கொடுத்து வாழ வைக்க விரும்பினம். கள்ள காட் போட்டு காசு எடுத்த தமிழன் காசை என்ன செய்வது என்று தெரியாமல் வேண்டி விடுவதால் என்ன பயன். அதுகும் வேர்வை சிந்தி உழைத்தால் காசின் அருமை தெரியும். நியாய விலைக்கு வாங்க முயற்சிப்பான். சும்மா வந்த காசுதானே. விற்பவன் கேட்கும் விலையை அள்ளி கொடுத்தால் காணி விலை கூரையை பிய்த்து கொண்டு போகாமல் என்ன செய்யும்

லண்டனில் கடை வைத்து இருப்பவன் 50% வீதம் கூட நல்லவன் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளிட்கு இன்னும் பழைய பெற்றோல் செட் மனேஜரின் மீது இருக்கும் கடுப்பு போகவில்லை போல 
மனேஜரும்  ஊரில ஒரு பெரிய காணி வாங்கிவிட்டார் போல கிடக்கு 
சரி இது எனது ஊரில் சமீபமாக நடந்தது ,பாண்டிருப்பு மருதமுனை எல்லையில் தமிழருக்கு சொந்தமான காணியொன்று 
இது பிரதான வீதியினை ஒட்டி இருந்ததால் விலை சூப்பர் ரகம் ( பிரதான வீதிக்கருகாமையில்  இருக்கும் காணிகள் அடிக்கணக்கிலேயே விற்கப்படும் பேர்ச்சஸ் கிடையாது ) 
இறுதியாக 8 மில்லியன் ரூபாய்க்கு விலை போனது. வாங்கியவர் இன்னுமொரு தமிழர் 
இரண்டு மாதத்தின் பின்னர் ஒரு டக்கர் சூப்பர் மார்கட் ஒன்று கட்டிமுடிக்கப்பட்டு கல்லாவில் முஸ்லிம் ஒருவர் குந்திக்கொண்டிருந்தார்.
விசாரித்து பார்த்ததில் 2 லகரத்தை வாங்கிக்கொண்டு எங்கடை ஊத்தை வாளி நடுவில் பினாமியாக நின்றிருக்கிறது .
இதற்க்கு என்ன சொல்ல வருகிறீர்கள் ...?  இதை விட புலம்பெயர் தமிழர்கள் சொத்தாக வாங்கி குவிப்பது எனக்கு  ஒன்றும் தப்பாக படவில்லை    
புலம் பெயர் தமிழர் மட்டும்தான் தப்பாக உழைக்கிறார்களா ....?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது தான் யதார்த்தம். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பார்கள். இது எனக்கும் உமக்கும் விலக்கல்ல. 

என்ன உப்பிடியான ஊத்தவாளிகள் எங்களின் எழுத்தை வாசித்து திருந்தட்டும். அவங்களுக்கும் மனசாட்சி உறுத்தட்டும்.

நீர் சொன்னது உண்மைதான். அதன் லண்டன் பெற்றோல் கடைக்காரன் வடமராட்சியில் தன் வயது போன பெற்றோர்கள் பெயரில் பெரிய அளவில் காணி வேண்டி குவித்து இருக்கான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் கள்ள தமிழா! நீ எப்படியும் உழை. சந்தோசமாக இரு. கூத்தடி. ஆனால் சாதாரண வியர்வை சிந்தும் நேர்மையான தமிழனின் வாழ்வில் பாதிப்பில்லாமல் இரு. 

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தமிழர்கள் நிலத்தை வாங்கி விடுவது காணிகள் மாற்று இனத்தவர்களின் கைக்கு செல்வதை தடுக்கலாம்.இதுவும் ஒரு வகை மண் மீட்ப்புத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, M.P said:

புலம் பெயர் கள்ள தமிழா! நீ எப்படியும் உழை. சந்தோசமாக இரு. கூத்தடி. ஆனால் சாதாரண வியர்வை சிந்தும் நேர்மையான தமிழனின் வாழ்வில் பாதிப்பில்லாமல் இரு. 

MP க்கு வேற ஏதோ பிரச்சணை.

யாழில் நண்பரது வீட்டுக்குப் பக்கத்தில் காணி விற்பணைக்கு வந்தது.....

இவர் கேட்டதிலும் பார்க்க, கூடுதலான தொகைக்கு தென்னிலங்கை பார்ட்டி கேட்டிருக்கிறது.

அவர் இங்குள்ள நண்பர்களை தொடர்பு கொண்டு காணியை, நிலைமையை பற்றி சொல்லி, இரு நண்பர்கள் சேர்ந்து அதை வாங்கி விட்டனர்.

அதில் மூன்று வீடு கட்டி, இரண்டை ஆகக் குறைவான வாடகைக்கு கஸ்டப்பட்ட இரு குடும்பத்துக்கும் கொடுத்து, ஒன்றை தாம் போகும் போது தங்கவும் வைத்துள்ளார்.

முக்கியமாக இருநண்பர்களும், வங்கியாளர்கள். 

இது சரியா, தவறா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி கடும் கோபத்தில் இருக்கிறார்  போல

  • கருத்துக்கள உறவுகள்
On 22/02/2017 at 6:54 AM, M.P said:

 

புலம் பெயர் கள்ள கூட்டத்தின் காணி சுவீகரிப்பு.

இதைத்தான்

மல்லாக்காக படுத்தபடி துப்புவது என்பது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, சுவைப்பிரியன் said:

புலம் பெயர் தமிழர்கள் நிலத்தை வாங்கி விடுவது காணிகள் மாற்று இனத்தவர்களின் கைக்கு செல்வதை தடுக்கலாம்.இதுவும் ஒரு வகை மண் மீட்ப்புத்தான்.

ஊரில் உள்ளவன் வாழ்வாதாரத்துக்கு விவசாயம் செய்ய காணி வேண்ட முடியாமல் திண்டாடும் போது எப்படி அந்த காணிகள் மற்ற இனத்துக்கு போகும். 

அதுதான் நான் சொல்லுறன் எல்லை புற காணிகளை வேண்டி விட்டால் பாதுகாக்கப்படலாம்

14 hours ago, Nathamuni said:

MP க்கு வேற ஏதோ பிரச்சணை.

யாழில் நண்பரது வீட்டுக்குப் பக்கத்தில் காணி விற்பணைக்கு வந்தது.....

இவர் கேட்டதிலும் பார்க்க, கூடுதலான தொகைக்கு தென்னிலங்கை பார்ட்டி கேட்டிருக்கிறது.

அவர் இங்குள்ள நண்பர்களை தொடர்பு கொண்டு காணியை, நிலைமையை பற்றி சொல்லி, இரு நண்பர்கள் சேர்ந்து அதை வாங்கி விட்டனர்.

அதில் மூன்று வீடு கட்டி, இரண்டை ஆகக் குறைவான வாடகைக்கு கஸ்டப்பட்ட இரு குடும்பத்துக்கும் கொடுத்து, ஒன்றை தாம் போகும் போது தங்கவும் வைத்துள்ளார்.

முக்கியமாக இருநண்பர்களும், வங்கியாளர்கள். 

இது சரியா, தவறா?

நல்லவர்களும் எங்கள் புலம் பெயர் சமுதாயத்தில் இருக்கிறார்கள் என்பதை ஏற்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, M.P said:

ஊரில் உள்ளவன் வாழ்வாதாரத்துக்கு விவசாயம் செய்ய காணி வேண்ட முடியாமல் திண்டாடும் போது எப்படி அந்த காணிகள் மற்ற இனத்துக்கு போகும். 

மற்ற இனத்துக்காரன் அதிக விலை கொடுத்து வாங்க இருக்கிறார்களே,

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, MEERA said:

மற்ற இனத்துக்காரன் அதிக விலை கொடுத்து வாங்க இருக்கிறார்களே,

லாஜிக் இல்லாமல் கதைப்பதால், MP நமது சங்கத்தின் உறுப்பினராக, அரசியல் புகுந்து, பாராளுமன்றம் போகவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். :grin:

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

லாஜிக் இல்லாமல் கதைப்பதால், MP நமது சங்கத்தின் உறுப்பினராக, அரசியல் புகுந்து, பாராளுமன்றம் போகவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். :grin:

 

என்ற வோட்டை அதற்கு போடுறன் நாதா tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 23/02/2017 at 5:16 AM, Nathamuni said:

அதைத்தான் சொல்லுகிறேன்....

அவ்வாறு விற்கும் காணிகளை, புலம் பெயர் தமிழர் வாங்கக் கூடாது என்றால் யார் வாங்க வேண்டும் என்று MP சொல்கிறார் என்பதே நம்ம கேள்வி....

முஸ்லிம் சகோதர்கள்,சிங்கள சகோதரர்கள் வாங்கி ஐக்கிய இலங்கையை உருவாக்க உதவலாம்..என்று சொல்லுகின்றார்

  • கருத்துக்கள உறவுகள்
On 24/02/2017 at 10:48 AM, M.P said:

ஊரில் உள்ளவன் வாழ்வாதாரத்துக்கு விவசாயம் செய்ய காணி வேண்ட முடியாமல் திண்டாடும் போது எப்படி அந்த காணிகள் மற்ற இனத்துக்கு போகும். 

அதுதான் நான் சொல்லுறன் எல்லை புற காணிகளை வேண்டி விட்டால் பாதுகாக்கப்படலாம்

நல்லவர்களும் எங்கள் புலம் பெயர் சமுதாயத்தில் இருக்கிறார்கள் என்பதை ஏற்கிறேன்

இனி ஏன் எங்களுக்கு எல்லை ? நாங்கள் தானே ஐக்கியமாகிவிட்டோம்.....சிறிலங்காவுக்குள் புலம்பெயர்ந்த கள்ள கோஸ்டி தமிழன் உள்ளே வராமல் தடுக்க எல்லை போடவேண்டும் tw_anguished:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.