Jump to content

என் இரு பயணங்கள்: ஒரு சிறு வரைவு - நிழலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

குருநகர் கழிய வந்த ஒரு பெரிய காணிகள் உள்ளடக்கிய பகுதியை இராணுவம் கையகப்படுத்தி இருந்தது. பொதுமக்களின் காணிகள் அவை. “இந்த --- மக்கள் என்னத்துக்கு இன்னும் இதை பிடிச்சு வைச்சிருக்கிறாங்கள்.. பாடையில போவார்” என மாமா தன் ஸ்ரைலில் திட்டிக் கொண்டு வந்தார்.

######ரவுனை சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்து மீண்டும் வீட்டை வருகின்றோம். இடையில் எனக்கு செவ்விளனி குடிக்க ஆசை ஆசையாக வருகின்றது. கனடாவுக்கு வந்த பின் செவ்விளனி குடிக்கவே இல்லை. அங்கு ரின்னில் அடைச்சு வரும் இளநீரை குடிப்பதை விட கோமியத்தை குடிக்கலாம்.

மாமா பழைய பூங்கா வீதிக்கருகில் இருக்கும் ஒரு இளநீர் சிறு கடையின் அருகில் காரை நிறுத்த இறங்கிக் குடிக்கின்றோம். மாமாவுக்கு டயபடீஸ் உச்சத்தில் இருந்து பல்லிளிச்சுக் கொண்டு இருந்தாலும் நான் இளநீர் வாங்கி குடிக்கும் போது ஆளால் தன் ஆசையை மட்டுப்படுத்த முடியவில்லை. ஆசை diabetes அறியாது என முன்னோர் சும்மாவா சொன்னார்கள்.

#####அப்ப தெரியவில்லை அந்த கைகுலுக்கல் தான் மாமாவினுடனான என் இறுதி கைகுலுக்கல் என்று. அந்த பிரியாவிடை மாமா எனக்கு சொல்லிய தன் இறுதி பிரியாவிடை என்றும்

வாசிப்பதற்கு, சுவராசியமாக....  உங்கள் பயணத்தை  எழுதியுள்ளீர்கள் நிழலி.  :)

உங்கள் மாமா பேசியதை, நீங்கள்  கோடிட்ட இடம்  மூலம் மறைத்துள்ளதை.... நான் நிரப்பி வாசித்த போது,
எனக்கு தலை விறைத்துப் போய் விட்டது.
:shocked: மாமன்.... மருமகனுக்கு முன் இந்தச்  சொல்லை பாவிக்கக் கூடாது. :grin:

இடையே நடந்துள்ள நிகழ்வுகளை, வாசிக்கும் போது... சிரிப்பாக இருந்தது.

கடைசியில்... மாமாவிடம் இருந்து விடை பெறும் நேரம் கைகுலுக்கிய வசனங்களை வாசித்த போது,
எமக்கும் சோகம் தொற்றிக் கொண்டது. 
tw_cry:

Link to comment
Share on other sites

  • Replies 139
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நிழலி said:

 

2r2n2bk.jpg

(இந்தப் பூவின் சரியான பெயர் என்ன? கோவிலின் வீதியில் இருந்தது. மிகவும் பரிச்சயமான பூ... ஆனால் பெயர் மறந்து விட்டது)

Bildergebnis für சிவலிங்கப் பூÄhnliches Foto

இதற்கு சிவலிங்கப் பூ  என்று பெயர். இந்தப் பூ, வித்தியாசமான நல்ல வாசம். 
ஆனைப் பந்தியடியில் உள்ள,  தனியார் மருத்துவ மனை ஒன்றில் இந்த மரம் இருந்தது. 
இப்போ உள்ளதோ... தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

 
அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் "
உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால்
உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான்.
பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய்
என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது
அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான்
சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா
வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா
என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான
உறவு என்றால் அது தாய்மாமா தான்.
எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே
வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொல்வடை.

- முக நூலில்  வாசித்தது.  
நிழலியின் பதிவுக்கு, பொருத்தமாக இருந்ததால் இணைத்துள்ளேன். -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-4-28 at 1:01 PM, நிழலி said:

பெண் மயிலின் குரலில் ஆண் மயில் தோகை விரிச்சாட நினைக்கும் போது விமானம் மேலே எழும்பி பறக்கின்றது

இன்னும் வருமோ? தொடருக்கு நன்றிகள் ....உங்களுடையை தொடரை வாசிக்க மீண்டும் ஒரு முறை எனக்கு ஊருக்கு போய்விட்டு வந்த உணர்வு...ஏற்பட்டது...

Link to comment
Share on other sites

On ‎4‎/‎13‎/‎2017 at 2:20 PM, தமிழ் சிறி said:

நீங்கள் சந்தன மாதா கோவில் என்று, குறிப்பிடுவது,
கொழும்புத்துறை...  அந்தோனியார், கோவிலையா?
அல்பிரட்  துரையப்பா..... வீடு  எல்லாம், அந்தப்  பகுதிக்குள் தானே... வருகின்றது.
அங்கு... ஒருவர், இசைக்கு....  பிரபலமாக இருந்தவர்.... 
"றீகல் ----  என நினைக்கின்றேன் 

 

இல்லை தமிழ் சிறி. இது கொழும்புத்துறை வீதியில் இருக்கும் ஒரே ஒரு மாதா கோவில். பெயருக்கு ஏற்றவாறு சந்தன நிறத்தில் வர்ணம் பூசி இருப்பார்கள். இந்திய ஏவல் படைகள் தமிழர் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு படுகொலைகளை நிகழ்த்தும் போது இங்கு தான் தஞ்சம் அடைந்து இருந்தோம். 

இசைக்கு பிரபலமானவரை பற்றி அறிந்து இருக்கவில்லை .

உங்களுக்கு பாண்டியந்தாழ்வு எனும் இடம் பற்றித் தெரியுமா?

On ‎4‎/‎13‎/‎2017 at 2:28 PM, Maruthankerny said:

கொஞ்சம் நெருங்கி வாறீங்கள் ..........
பாண்டியன்தாழ்வு பேக்கரி 
அருகாக ... எனது செருப்பும் கொஞ்சம் தேய்ந்து இருக்கிறது.

 

மிகவும் நெருங்கி விட்டீர்கள்  மருது

 

On ‎4‎/‎13‎/‎2017 at 3:22 PM, ஈழப்பிரியன் said:

காதல் எனும் நோயினால் ரொம்பவும் நொந்திருக்கிறீர்கள் போல.

 

On ‎4‎/‎13‎/‎2017 at 5:17 PM, புங்கையூரன் said:

புல்லை மேய்ந்த ஒரு மாடு.....ஆறுதலாக இரை மீட்டுவது போல நகர்கின்றது உங்கள் வர்ணனை!

மீண்டும், மீண்டும் இரை மீட்டுவதைத் தவிர....பசுமைப் புல்வெளியை இழந்து....வெறும் கோதுமை வெளிகளில் மேய்ந்து கொண்டு திரிகிறோம் என்பதை நினைக்க வலி தான் மிஞ்சுகின்றது!

எனினும் பசுமைப் புல்வெளிகள் எமது கனவுகளாகவே எப்போதும் இருக்கப் போகின்றன!

மீண்டும் அங்கு சென்று வாழ்ந்தாலும்...அந்தப் புல்வெளிகளை நிரந்தரமாகத் தொலைத்த நினைவு தான் மிஞ்சப்போகின்றது!

அந்த நினைவுகள்...ஒரு காலப் பெட்டகத்தினுள் புதைக்கப் பட்டு விட்டன!

தொடருங்கள் நிழலி!

கனவுகளை பசுமை புல் வெளிகளாக ஆக்க ஊரில் உள்ள மக்களுடன் இணைந்து இன்னும் அதிகமாக உழைக்க வேண்டிய காலம் இது. இல்லாவிடின் வெறூம் பாலை நிலமாகவே எம் கனவுகளும் அதை சுமந்த மண்ணும் மேனியரும் ஆகிவிடுவர்.

பின்னூட்டத்துக்கு நன்றி புங்கை

On ‎4‎/‎15‎/‎2017 at 1:02 PM, nochchi said:

மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள்.

நன்றி நொச்சி. அடிக்கடி எழுதுங்கள்

On ‎4‎/‎15‎/‎2017 at 5:50 PM, Sasi_varnam said:

 

அதே யாழ்ப்பாணத்தில் இருக்கும் சொந்தங்கள், அயலவர்கள் இப்படி எதுவுமே நடக்கவில்லை என்பதை போல இருப்பதை பார்க்க... எண்ணத்தை சொல்ல.

அங்கும் வெறுப்பும் சலிப்பும் இருக்கத்தான் செய்யுது.
எந்த இனமும் கொடுக்காத அளவுக்கு அவர்கள் விலை கொடுத்து இருக்கின்றார்கள். அதனால் அவர்கள் ஒரு விடயத்தில் உறுதியாக இருக்கின்றார்கள் மீண்டும் தம்மை பலிக்கடாக்கள் ஆக்கும், தம் வாழ்வை நாசமாக்க கூடிய எந்த போராட்டத்துக்கும் ஆதரவு கொடுப்பதில்லை என்று. இது பற்றி இறுதியிலும் எழுத நினைத்து இருக்கின்றேன்

Link to comment
Share on other sites

On ‎4‎/‎20‎/‎2017 at 4:01 PM, shanthy said:

இன்றுதான் நிழலி உங்கள் பதிவை முழுவதும் படித்து முடித்தேன். என்ன சொல்ல ? உங்கள் எழுத்தோடு சோ;ந்து பயணிக்கிறேன். பல இடங்களின் விபரிப்பு 90களில் உலவிய நினைவுகளை மீட்கிறது. காலம் எத்தனை கொடியது? நீண்ட நாளின் பின் வாசித்த அருமையான பதிவு.

நன்றி சாந்தி. அடிக்கடி யாழ் பக்கமும் வாருங்கோ

On ‎4‎/‎27‎/‎2017 at 11:42 PM, தமிழ் சிறி said:

வாசிப்பதற்கு, சுவராசியமாக....  உங்கள் பயணத்தை  எழுதியுள்ளீர்கள் நிழலி.  :)

உங்கள் மாமா பேசியதை, நீங்கள்  கோடிட்ட இடம்  மூலம் மறைத்துள்ளதை.... நான் நிரப்பி வாசித்த போது,
எனக்கு தலை விறைத்துப் போய் விட்டது.
:shocked: மாமன்.... மருமகனுக்கு முன் இந்தச்  சொல்லை பாவிக்கக் கூடாது. :grin:

 

ஹா ஹா ஹா ... ஆள் அப்படித்தான் ... ஒரு கட்டத்தின் பின் ஒரு நல்ல நண்பராக ஆகிவிட்டதால் சம்பிரதாயமான முறைகள் எல்லாம் மறைந்து விட்டது. மாமாவுடன் கதைத்ததில் இங்கு பகிர்வது 10 வீதம் கூட இல்லை :grin:

On ‎4‎/‎27‎/‎2017 at 11:50 PM, தமிழ் சிறி said:

Bildergebnis für சிவலிங்கப் பூÄhnliches Foto

இதற்கு சிவலிங்கப் பூ  என்று பெயர். இந்தப் பூ, வித்தியாசமான நல்ல வாசம். 
ஆனைப் பந்தியடியில் உள்ள,  தனியார் மருத்துவ மனை ஒன்றில் இந்த மரம் இருந்தது. 
இப்போ உள்ளதோ... தெரியவில்லை.

மிக்க நன்றி தமிழ் சிறி. எப்படி இந்தப் பெயரை மறந்து போனேன் என்று தெரியவில்லை

On ‎4‎/‎29‎/‎2017 at 0:58 AM, putthan said:

இன்னும் வருமோ? தொடருக்கு நன்றிகள் ....உங்களுடையை தொடரை வாசிக்க மீண்டும் ஒரு முறை எனக்கு ஊருக்கு போய்விட்டு வந்த உணர்வு...ஏற்பட்டது...

ஓம் வரும்... .அடுத்த வராத்தின் பின் அதிகம் நேரம் கிடைக்கும் என்பதால் வேகமாக எழுதி முடிக்கலாம் என நினைக்கின்றேன். கடனாவில் 10 வருஷம் என்ற ஒரு தொடரையும் எழுத நினைத்து இருப்பதால் இதை கெதியன எழுதி முடிக்க வேண்டும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பழகிய பரிச்சயமான இடங்கள், பக்கத்தில் கொழும்புத்துறை,  துண்டி எல்லாம் சொல்லி வேலையில்லை ....! பாசையூர் அந்தோனியார் அயலில் இருக்கும் சிலர் இங்கேயும் எனது அயலவர்களாக இருக்கின்றனர்..... நிறைய ஞ<பகங்கள் வந்து போகின்றன.அருமையாக எழுதிக் கொண்டு வருகின்றீர்கள் நிழலி ...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த கதையை வாசிச்சுக் கொண்டு போகேக்குள்ள தான் எதற்கு மோகன்,நிழலியை மட்டுவாக நியமித்தார் என்டு விளங்கிச்சு:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3.5.2017 at 8:58 PM, நிழலி said:

இல்லை தமிழ் சிறி. இது கொழும்புத்துறை வீதியில் இருக்கும் ஒரே ஒரு மாதா கோவில். பெயருக்கு ஏற்றவாறு சந்தன நிறத்தில் வர்ணம் பூசி இருப்பார்கள். இந்திய ஏவல் படைகள் தமிழர் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு படுகொலைகளை நிகழ்த்தும் போது இங்கு தான் தஞ்சம் அடைந்து இருந்தோம். 

இசைக்கு பிரபலமானவரை பற்றி அறிந்து இருக்கவில்லை .

உங்களுக்கு பாண்டியந்தாழ்வு எனும் இடம் பற்றித் தெரியுமா?

நிழலி,  ஊரில்... "பாண்டியன் தாழ்வு" என்ற பெயரை கேள்விப்  பட்டுள்ளேன். 
அந்த இடம் எந்த ஊருக்கு அருகில் உள்ளது என்று சரியாக நினைவு வரவில்லை.
எனது கணிப்பின்படி.... ஈச்ச மோட் டைக்கு அருகில் இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்மையில்  மாமா உறவு  உறவையும் தாண்டிச்செல்லும் உறவுதான் அது அடுத்த நண்பன் போல  ஒரு உறவு தொடரட்டும் தொடர் நிழலி 

Link to comment
Share on other sites

மீண்டும் சென்னை

இருப்பது இன்னும் 5 தினங்கள் தான். ஐந்தாம் நாள் இரவு 10 மணிக்கு மீண்டும் ரொரன்டோ நோக்கி பயணம் செய்யவேண்டும் என்பதால் ஏலுமான அளவுக்கு அக்கா குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க நினைக்கின்றேன்

செவ்வாய் காலை 10 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து வீட்டை வந்த பின் அன்று முழுதும் ஓரளவுக்கு ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டு இரவு சிறிது வெளியே சென்று வர நாள் முடிகின்றது.

அடுத்த நாள் செப். 23 அன்று முதலில் சென்னையில் உள்ள முதலைப் பண்ணைக்கு செல்கின்றோம். திரும்பிப் பார்க்கும் இடமெல்லாம் முதலைகள் முதலைகள் முதலைகள்.

வாயை பிளந்த படி சில முதலைகள், வாயை மூடிக் கொண்டு சிலது, சிவனே என்று தண்ணிக்குள் மூழ்கிக் கொண்டு இன்னும் சில, எதைப் பற்றியும் யோசிக்காமல் ஒரு மூலைக்குள் சுருண்டுக் கொண்டு சில…. சில இடங்களில் கப் என்று அடிக்கும் சேற்று நாற்றத்தினை விட குறை சொல்ல எதுவுமில்லை. இவ்வளவு முதலைகளுக்கும் எங்கிருந்து எப்படி சாப்பாடு போடுகினமோ தெரியாது.

 

fjfbj7.jpg

அங்கு இரண்டு மணித்தியாலங்கள் செலவழித்தபின் மாமல்லபுரம் செல்கின்றோம்.

இந்திய சஞ்சிகைகள் மற்றும் கட்டுரைகளில் மாமல்லபுரம் பற்றி வாசித்து வாசித்து அதை பார்ப்பது ஒரு பெருங்கனவாக இருந்தது எனக்கு. பல்லவ அரசர்களின் வழி வந்த நரசிம்மவர்மனால் 1300 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட கடற்கரை கோவிலை ஒட்டி எழுப்பப்பட்ட சிலைகள் பற்றிய பிரம்மிப்பான கதைகளை கேட்டு இருக்கின்றேன். புலிக் குகை, அர்ச்சுனன் தபசு போன்றவற்றை வாசித்து வாசித்து அது பற்றி மனதில் எழுந்த பிம்பங்கள் ஏராளம்.

ஆனால் மாமல்லபுரம் போனபின் அங்கு அதை தமிழ்நாட்டு அரசு அதை பேணும் முறையை கண்டபின் என் கனவு உடையத் தொடங்குகின்றது.

குன்று ஒன்றில் ஏறி சற்று நடக்கும் போதே மனிதக் கழிவுகள் எம்மை வரவேற்கின்றன. பன்றிகள் ஒரு ஓரத்தில் இருந்து ஓடி ஓடி வருகின்றன. குப்பைகளும் அசுத்தங்களும் நிறைந்து கிடக்கின்றன.  இலங்கை அரசு சிகிரியா குகை ஓவியங்களை பாதுக்காக்க எடுக்கும் முயற்சிகளில் 10 வீதம் கூட இங்கில்லை. பென்னம் பெரும் வரலாற்று பொக்கிசம் பொறுப்பற்ற மனிதர்களின் நிர்வாகத்தால் பொலிவிழந்து செல்கின்றது. தமிழர்களின் நாகரீகம் தமிழர்களாலேயே அழிக்கப்படுகின்றன.

ஆனால் இவற்றையும் மீறி அங்குள்ள சில சிற்பங்கள் தாம் இருக்கும் சூழ்நிலையை மீறி தம் வரலாற்றை உரக்க மூச்சிறைத்து சொல்ல விளைகின்றன. சிற்பங்கள் செதுக்கிய சிற்பிகளின் பாதங்களில் ஒட்டிய மண் துகள்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அழுது புரள்வதாக எனக்கு தோன்றுகின்றது.

vdz90y.jpg

aymy5j.jpg

 

அங்கு சில மணித்தியாலம் செலவழித்த பின் மீண்டும் வீடு திரும்பும் போது மாலையாகி விட்டது.

அடுத்த நாள் செப் 24 மனைவியின் தங்கையின் வீட்டில்….மச்சினிச்சியின் வீட்டில் விருந்து. அவர் வீட்டை எதிர்த்து ஒரு தமிழ் நாட்டு பொடியனை கட்டியதால் உறவுகளால் ஓரளவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தார். தொப்புள் கொடி உறவு தன் வம்சத்திற்கு தொப்புள் கொடிக்குரிய குழந்தைகளை கொடுப்பதை எம் சமூகம் இன்னமும் மறுத்துக் கொண்டு தான் இருக்கின்றது.

தமிழ்நாட்டு மதிய விருந்தென்பது வித்தியாசமானது போலும். மச்சம் (அசைவம்) என்றால் முழுக்க முழுக்க மச்சம் தான். எனக்காக வஞ்சிர மீன் பொரியல், காடை பறவை முழுப் பொரியல், கோழிப் பொரியல், கோழி இறைச்சி, முட்டை, மட்டன் பிரியாணி, சிக்கன் புரியாணி என்று விருந்து களை கட்டியது. சாப்பாட்டு ராமனான என்னாலேயே முழுமையாக சாப்பிட முடியாதளாவுக்கு எக்கச்சக்க உணவு. திரும்பி பார்க்கும் போது என் மகன் எல்லாவற்றையும் ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு இருந்தான்.

அவர்களுடன் விடை பெற்று வீடு வந்த பின் வாய் நம நமக்குது.

தமிழ்நாட்டுக்கு வந்த பின் இன்னும் உள்ளூர் சரக்கை அடிக்கவில்லை என்று மனசு அழுதது. முக்கியமாக டாஸ்மாஸ் கடை ஒன்றுக்காகவது செல்ல வேண்டும் என்று நான் ஆசைப்பட நரேஸ் அண்ணார் இரவு கூட்டிக் கொண்டு சென்றார். அங்கு ஒரு உள்ளூர் பிரண்டி வாங்கிக் கொண்டு வந்து இரவு அடிச்சுப் பார்த்தோம். குறை சொல்ல ஒன்றும் இல்லை, நன்றாக இருந்தது.

2l8c08l.jpg

(டாஸ்மாஸ் இற்கு முன்பாக)

 

செப் 25.

சென்னைக்கு பயணம் திட்டமிடும் போதே நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என திட்டமிட்டு இருந்தேன். ஆனால் சரியான புத்தகக் கடை எதுவென தெரியவில்லை.

காலச்சுவடு வெளியீடுகளை வாங்குவம் என்று அவர்கள் அலுவலகம் எங்கிருக்கு என்று அவர்களின் இணையத்தளம் சென்று முகவரி பார்த்து அங்கு போனால் அந்த அலுவலகத்தினை காலி பண்ணிப் போய் கன நாளாகுது என்று சொன்னார்கள்.  பிறகு ஓவ்வொருவரிடமும் கேட்டு கேட்டு அவர்களின் தற்போதைய விலாசம் கண்டு பிடிச்சு போக வெறுத்தே போய்விட்டது. புத்தகங்கள் பற்றிய எந்த அறிவும் இல்லாத ஒரு பெண் அங்கிருந்தார்.

பின் அங்கிருந்து குமரன் பதிப்பகம் செல்கின்றேன். சென்னை மக்கள் அன்பானவர்கள் என்று காட்டிய இன்னொரு நிகழ்வு அங்கு நடக்கின்றது. நான் கேட்ட புத்தகங்கள் இல்லை என்று அங்கிருந்தவர் சொல்கின்றார். சொன்னது மட்டுமன்று New book land இற்கு call பண்ணி கேட்கின்றார். ஆனால் எமக்கு அந்த புத்தகக் கடை எங்கிருக்கின்றது என்பது தெரியாது எங்கின்றோம். அவர் குமரன் பதிப்பகத்தை பூட்டி விட்டு எம்முடன்  வெளியே வந்து ஆட்டோ ஒன்றை தானே பிடித்து தந்து சாரதிக்கு விலாட்சத்தையும் சொல்லி அனுப்புகின்றார்

சென்னை மக்கள் அன்பானவர்கள்!

 

New book land இல் புத்தகங்கள் வாங்கிய பின் வீடு செல்கின்றோம். இரவு அக்கா குடும்பத்துடன் நேரம் போகின்றது,

 

289xvg0.jpg

(வாங்கிய புத்தகங்களின் ஒரு தொகுதி)

செப் 26:

காலையில் என் சித்தப்பா கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்திருக்கின்றார் என அறிய முடிகின்றது.

பகலில் மீண்டும் சுலோச்சனாவிடம் போய் பெருங்கால் நண்டு வாங்கி சமைத்து உண்டபின் சித்தப்பாவை கண்டு கன காலம் என்பதால் மாலை 5 மணிக்கு அவரை காண செல்கின்றோம். இரவு 10 மணிக்கு விமான நிலையத்தில் நிற்க வேண்டும்,

இடையில் அவர் இருக்கும் இடத்துக்கு செல்ல தாமதமாகின்றது. மிக மோசமான வாகன நெரிசல். நரேஸ் அண்ணா வழியில் ஒரு ஸ்கூட்டரில் போனவரிடம் விலாசம் சொல்லி எப்படி சீக்கிரமாக போவது என்று கேட்க அந்த மனுசர் “நான் காட்டுறன்” என்று சொல்லி எம் காருக்கு முன்னால் சென்று வழி காட்டுகின்றார். யார் என்றே தெரியாத எமக்காக நேரம் மினக்கெட்டு வழி காட்டும் இந்த அன்பான மனுசர் யார் என்றே தெரியாது

சித்தப்பாவை சந்தித்து வீட்டை வந்து மீண்டும் விமான நிலையம் செல்கின்றோம். நேரம் மிகக் குறைவாக இருக்கின்றது.

அக்காவின் கண்களை பார்க்கும் துணிச்சல் இல்லாமல் போய்ட்டு வருகின்றோம் என சொல்லி வரும் கண்ணீரை காட்டாமல் விடை பெறுகின்றோம்.

இந்த நாட்களில் என் மகன் அக்காவின் குடும்பத்துடன் இனி இல்லை அளவுக்கு கலந்து விட்டான். கனடா தாண்டி இங்கேயும் ஒரு கங்கை இருக்கும் என்பதை புரிந்து கொண்டான்

 

காலம் 6 மாதங்களுக்குள் மீண்டும் சந்திக்க வைக்கின்றது என்பதை அறியாமல் இன்னும் 2 வருடங்களில் சந்திப்பம் என்று சொல்லி விடை பெறுகின்றேன்.

 

பயணம் 1 நிறைவடைகின்றது

பயணம் 2 இனி தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

2l8c08l.jpg

அடப்  பாவி.... இந்த பயணத்தில் "டாஸ்மாக்கையும்" விட்டு வைக்கவில்லையா? :grin:
தள்ளு முள்ளு படாமல்.... சரக்கு, வாங்க  கூடியதாக இருந்ததா? :D:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎09‎/‎05‎/‎2017 at 2:52 AM, நிழலி said:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2l8c08l.jpg

 

 

குடிக்கேக்கு முதலே குடிகாரன் மாதிரி தான் இருக்கு:rolleyes:...உங்கட கதையை தொடருங்ககோ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பயணம் 2 இனி தொடரும்

 

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நிழலி,தொடர் கட்டுரை மிகவும் நன்றாக போகின்றது.....! tw_blush:

Link to comment
Share on other sites

  • 1 month later...

மாசம் இரண்டு முடியப்போகுது,  மனிசன் எழுதி முடிச்சிருக்கும் எண்டு வந்து பார்த்தா போட்டது போட்டபடியே கிடக்குது. இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.