Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரை மனிதர்களாக இன்னும் எத்தனை காலம் வாழப்போகின்றோம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1
அரை மனிதர்களாக இன்னும்
எத்தனை காலம் வாழப்போகின்றோம்?

அனைத்துலகப்பெண்கள்நாள்
ஆண்டுதோறும் சிறப்பாக,
உலகெங்கும் கொண்டாடப்பட,
அழுவதே நாளாந்த வாழ்வாகிப்போன
அவலம் சுமக்கும் பெண்கள் உலகம் 
ஒன்று உள்ளது என்பது
எத்தனை பேருக்கு தெரியும்? 

உறவுகள் தொலைத்தவர் துயரை
எத்தனைபேரால் புரிந்திட முடியும்?
இழப்புக்கள் தரும் வலிகளோடு
அனுதினமும் போராடி போராடி,
அழுவதைத்தவிர வழியே இல்லாமல்
அல்லாடி அல்லாடி அவலம் சுமக்கும்
எங்கள் தாயகப்பெண்கள் நிலை
எத்தனை பேருக்கு தெரியும்?

வாழ இடமின்றி தத்தளித்து தவித்து
உயிரே போனாலும் சரி 
எம் நிலம் மீட்க
எமக்காக நாமே போராடுவோம் என
தனித்து நின்று போராடும்
எங்கள் மண்ணின் பெண்கள்
அன்றாடம் படும் அவலங்கள்
எத்தனை பேரால் உணரப்படும்.
உயிர்ப்பயம் இருந்த போர்க்காலங்களில்
உரிமையுள்ளவர்களாக தலைநிமிர்ந்து
துணிவுடன் செயற்பட்ட எம் பெண்கள்
கூனிக்குறுகி வாழும் கொடுமைக்குள்
சிக்குண்டு தவிக்கும் அவலநிலை இன்று.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி
அனுதினமும் கண்ணீருடன் போராடும் 
எம் பெண்களுக்கு நீதி கிடைக்காமல் 
நீளும் பயணங்கள் தொடர்கின்றன
சொந்த நிலத்தில் வாழ முடியாமல்
தங்கள் நிலத்துக்காக தாமே போராடும்
முடிவுடன் அறப்போராட்டங்கள் தொடர்கின்றன

நாளும் நாளும் போராடும் நிலையில்
அன்றாட வாழ்வினை நடத்திட வழியில்லை
ஆனாலும் அயராது போராடும் அவலநிலை
யாருக்கு புரியும் இவர்கள் உள்ளக்குமுறல்?
இவர்கள் மனவலிகளை எவரால் உணரமுடியும்
 

அச்சமே வாழ்வாக ஆதரவில்லா சூழலில்
நித்தம் நடுநடுங்கி வாழும் அவலம் எம்மண்ணில்.
எத்திக்கிலிருந்து எவன் வந்து தங்கள் அன்பு
பிள்ளைகளை பிடித்து செல்வானோ என
தத்தளிக்கும் சோகம் நாளும் தொடரும் கொடுமை.

பள்ளிக்கு சென்று பாடம் படிக்க விரும்பும்
தங்கள் பிள்ளைகளின் எண்ணம் ஈடேற
வழியே இல்லையா என அன்னையர்கள்
ஏங்கி தவிக்கும் அவலம்.

உறவுகளை பறிகொடுத்துவிட்டு
உள்ளம் உடைந்து உருக்குலைந்து
நடைப்பிணமாக வாழும் கொடுமை.
இதுதான் எம் மண்ணில் இன்றைய
மக்களின்  அவல வாழ்நிலை.

புதினத்தாள்களிலும் இணையத்தளங்களிலும்
வெற்று சேதிகளாக இவற்றை படித்துவிட்டு
அடுத்த பக்கத்துக்கு நகரும் 
அரை மனிதர்களாக இன்னும்
எத்தனை காலம் வாழப்போகின்றோம்?

உலகே உனக்கு கண்ணில்லையா
என கேள்விகள் கேட்க எமக்கு தெரிகின்றது.
உணரவேண்டியவர்கள்,புரியவேண்டியவர்கள்
எமக்குள் எண்ணில்லாதோர் என்பதை
எண்ணிட ஏன் மறந்தோம் நாம்?

பட்டால்தான் வலிகள் புரியும் என்பது
மானிடநேயம் புரியாதவர் சொல்லும் வார்த்தை.
சின்னத்திரைகளிலும்,வெள்ளித்திரைகளிலும்
அழுது வடிக்கும் நடிகர்களை பார்த்து
கண்ணீர் சொரிய முடிகின்ற 
எம்மவர்கள் பலருக்கு
உண்மை மனிதர்களின் துயரம்
எப்படி புரியாமல் போனது? 

உறவுகளின் இழப்பின் வலிகளை 
உணர முயல்வோம்.
தவித்து துடிக்கும் அவர்களுக்கு
தோள்கொடுத்து துணைநின்று
வலிமை அளிக்க நாம் உள்ளோம் என
வாக்கு கொடுப்போம்.
அவர்கள் வாழ்வின் விடிவுக்காக
உறுதியுடன் உழைப்போம் என
உரத்து சொல்வோம்,செயற்படுவோம்

மந்தாகினி

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி.....மந்தாகினி!

வலிகள்...இரணங்கள், இரத்தங்கள், பிரிவுகள், ஏமாற்றங்கள். வன்புணர்வுகள்.....அவலங்கள் என எமது வாழ்க்கைக் காலம் முழுவதும்.கழிந்து விடுமோ  என்ற பயம் தான் இப்போது பெரிதாக உள்ளது!

எமது கிழக்கு வெளிக்கப் போகின்ற வேளைகளிலெல்லாம்...எங்கிருந்தோ வருகின்ற வால் வெள்ளியைப் போல...அனுமானின் வாலாக..எமக்கிடையே ஒரு தேசம் வந்து குறுக்கே படுத்துக் கொள்ளும்!

எல்லாவற்றையும் குழப்பியடித்து விட்டு...மீண்டும் எமது கிழக்கு வெளிக்கும் வரை....தனது வாலை மீண்டும் சுருட்டிக் கொள்ளும்!

குடி மக்களுக்கு...முறையான கழிப்பிட வசதிகள் கூட இல்லை..!

ஆனால் சந்திரனையும், செவ்வாயையும்...நாற வைக்க....இப்போதே ஆயத்தங்கள் நடக்கின்றது!

ஒரு நாள் விடியும் எனும் நம்பிக்கை சுமந்து...பயணிப்போம்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, manthahini said:

1
அரை மனிதர்களாக இன்னும்
எத்தனை காலம் வாழப்போகின்றோம்?

------

உறவுகளை பறிகொடுத்துவிட்டு
உள்ளம் உடைந்து உருக்குலைந்து
நடைப்பிணமாக வாழும் கொடுமை.
இதுதான் எம் மண்ணில் இன்றைய
மக்களின்  அவல வாழ்நிலை.

புதினத்தாள்களிலும் இணையத்தளங்களிலும்
வெற்று சேதிகளாக இவற்றை படித்துவிட்டு
அடுத்த பக்கத்துக்கு நகரும் 
அரை மனிதர்களாக இன்னும்
எத்தனை காலம் வாழப்போகின்றோம்?

உலகே உனக்கு கண்ணில்லையா
என கேள்விகள் கேட்க எமக்கு தெரிகின்றது.
உணரவேண்டியவர்கள்,புரியவேண்டியவர்கள்
எமக்குள் எண்ணில்லாதோர் என்பதை
எண்ணிட ஏன் மறந்தோம் நாம்?

பட்டால்தான் வலிகள் புரியும் என்பது
மானிடநேயம் புரியாதவர் சொல்லும் வார்த்தை.
சின்னத்திரைகளிலும்,வெள்ளித்திரைகளிலும்
அழுது வடிக்கும் நடிகர்களை பார்த்து
கண்ணீர் சொரிய முடிகின்ற 
எம்மவர்கள் பலருக்கு
உண்மை மனிதர்களின் துயரம்
எப்படி புரியாமல் போனது? 

உறவுகளின் இழப்பின் வலிகளை 
உணர முயல்வோம்.
தவித்து துடிக்கும் அவர்களுக்கு
தோள்கொடுத்து துணைநின்று
வலிமை அளிக்க நாம் உள்ளோம் என
வாக்கு கொடுப்போம்.
அவர்கள் வாழ்வின் விடிவுக்காக
உறுதியுடன் உழைப்போம் என
உரத்து சொல்வோம்,செயற்படுவோம்

மந்தாகினி.

நியாயமான ஆதங்கம்.... மந்தாகினி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

கவிதைக்கு நன்றி.....மந்தாகினி!

வலிகள்...இரணங்கள், இரத்தங்கள், பிரிவுகள், ஏமாற்றங்கள். வன்புணர்வுகள்.....அவலங்கள் என எமது வாழ்க்கைக் காலம் முழுவதும்.கழிந்து விடுமோ  என்ற பயம் தான் இப்போது பெரிதாக உள்ளது!

எமது கிழக்கு வெளிக்கப் போகின்ற வேளைகளிலெல்லாம்...எங்கிருந்தோ வருகின்ற வால் வெள்ளியைப் போல...அனுமானின் வாலாக..எமக்கிடையே ஒரு தேசம் வந்து குறுக்கே படுத்துக் கொள்ளும்!

எல்லாவற்றையும் குழப்பியடித்து விட்டு...மீண்டும் எமது கிழக்கு வெளிக்கும் வரை....தனது வாலை மீண்டும் சுருட்டிக் கொள்ளும்!

குடி மக்களுக்கு...முறையான கழிப்பிட வசதிகள் கூட இல்லை..!

ஆனால் சந்திரனையும், செவ்வாயையும்...நாற வைக்க....இப்போதே ஆயத்தங்கள் நடக்கின்றது!

ஒரு நாள் விடியும் எனும் நம்பிக்கை சுமந்து...பயணிப்போம்!

 

உண்மை. எங்கள் மக்கள் அனுபவிக்கும் துயரம் ஒன்றல்ல.இரண்டல்ல. ஓராயிரம். பொருளாதாரப்பிரச்சன.சமூகப்பரச்சனை.உடல்வலிகள்>உளவலிகள். இப்படி எத்தனையோ. இதற்கெல்லாம் தீர்வு ஒன்றுதான்.

 

5 hours ago, தமிழ் சிறி said:

நியாயமான ஆதங்கம்.... மந்தாகினி.

ஆம். எமது உறவுகளின் வலிகளை எல்லோரும் புரிந்து கொள்ளவில்லையே என்ற வேதனை

  • கருத்துக்கள உறவுகள்

நாளும் நாளும் போராடும் நிலையில்
அன்றாட வாழ்வினை நடத்திட வழியில்லை
ஆனாலும் அயராது போராடும் அவலநிலை
யாருக்கு புரியும் இவர்கள் உள்ளக்குமுறல்?
இவர்கள் மனவலிகளை எவரால் உணரமுடியும்

அன்னையர் தினத்தில் அழகான கவிதை ....! நன்றி சகோதரி .....!

  • கருத்துக்கள உறவுகள்

வலி மிகுந்த வலிகள்  சூப்பர் 

  • கருத்துக்கள உறவுகள்

வலி சுமந்த கவிதை வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2017 at 3:43 AM, தமிழ் சிறி said:

நியாயமான ஆதங்கம்.... மந்தாகினி.

 

23 hours ago, suvy said:

நாளும் நாளும் போராடும் நிலையில்
அன்றாட வாழ்வினை நடத்திட வழியில்லை
ஆனாலும் அயராது போராடும் அவலநிலை
யாருக்கு புரியும் இவர்கள் உள்ளக்குமுறல்?
இவர்கள் மனவலிகளை எவரால் உணரமுடியும்

அன்னையர் தினத்தில் அழகான கவிதை ....! நன்றி சகோதரி .....!

வேதனைகள் இப்படி எழுத வைக்கின்றது. நன்றி

22 hours ago, முனிவர் ஜீ said:

வலி மிகுந்த வலிகள்  சூப்பர் 

வலிகளின் வரிகள். நன்றி

19 hours ago, Kavallur Kanmani said:

வலி சுமந்த கவிதை வாழ்த்துக்கள்

 

19 hours ago, Kavallur Kanmani said:

வலி சுமந்த கவிதை வாழ்த்துக்கள்

நன்றி

Edited by manthahini

  • கருத்துக்கள உறவுகள்

மந்தாகினி வாழ்வு என்பது வலியாகச் சபிக்கப்பட்டிருக்கிறது. நல்ல தீர்வுக்காக ஏங்கிறது மனம். மானுட நேசிப்பு என்பது பொய்மைகளால் சூழப்பட்டுள்ளது. அதனைத் தேடினால் விரக்திதான் மிஞ்சும். தொடர்ந்து எழுதுங்கள் தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் நம்பிக்கைதானே எல்லாம்...

  • கருத்துக்கள உறவுகள்
Quote

புதினத்தாள்களிலும் இணையத்தளங்களிலும்
வெற்று சேதிகளாக இவற்றை படித்துவிட்டு
அடுத்த பக்கத்துக்கு நகரும் 
அரை மனிதர்களாக இன்னும்
எத்தனை காலம் வாழப்போகின்றோம்?

எட்டு வருடங்களாக வெறும் சேதிகளாகப் படித்து அப்பால் நகர்ந்துகொண்டுதான் பலர் வாழ்கின்றார்கள்.

தற்போது தமிழ்நாட்டு அரசியலும், சினிமாக்காரர்களின் ருவிற்றர் திருகுதாளங்களும் சாதாரணர்களான எங்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கின்றது.

அத்தோடு தமிழ் அரசியல் தலைமைகளும் சுயநலத்துடனே செயற்படுகின்றார்கள் என்பதை கேப்பாபுலவு காணி விடுவிப்பில் நடந்துகொண்ட முறை காட்டுகின்றது.

விரைவில் கால் மனிதர்களாகிப் பின்னர் மனிதமற்ற இயந்திரங்களாக மாறவும் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள்.என்றோ ஒரு நாள் விடிவு வரும்

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு தலைவன் வரவுக்காக காத்திருப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.