Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’50 வருடங்களில் யாழ்ப்பாணம் பாலைவனமாகும்’

Featured Replies

’50 வருடங்களில் யாழ்ப்பாணம் பாலைவனமாகும்’
 

'வடக்கும் கிழக்கும், பாரியதொரு வரட்சிக்கு முகங்கொடுக்கவுள்ளன. இன்னும் 50 வருடங்களில், யாழ்ப்பாணம் ஒரு பாலைவனமாக மாறிவிடும். அந்தளவுக்கான அழிவுகள் இடம்பெற்றுள்ளன' என்று, நகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

'தாயகப் பூமி என்று கூறிக்கொண்டிருப்பவர்கள், முதலில் தாம் வாழும் பூமியைக் காத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும், அமைச்சில் இன்று (50) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/’50-வருடங்களில்-யாழ்ப்பாணம்-பாலைவனமாகும்’/175-197869

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த 50 வருடங்களின் பின்பு எண்ணை வரும் தொடர்ந்து ....யாழ் மக்கள் எண்ணைய் வியாபாரிகளாகி பெரிய பெரிய "ஷெக்காகி "விடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நிலத்தடி நீர் கூடிய விரைவில் சாக்கடை ஆகி, உப்பாகி கெட்டுப்போகும் என்பதுதான் எனது கணிப்பும். அதிகமாக பாறைகளை அகழ்ந்து எடுப்பது; நிலத்தடிநீரை அதிகமாக உறுஞ்சுதல்; நீரை நிலத்துக்குள் செல்லும் வழிகளை அடைத்தல் போன்றவற்றால் இது நிகழும். :unsure:

 

Basic Groundwater Hydrology (USGS 2004).JPG

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கூட்டாட்சியும் வேண்டாம் சமஸ்டியும் வேண்டாம் பிச்சை வேணாம் நாயைப்பிடி எண்டு தமிழன் ஓடிடுவான் எண்ட ஒரு நப்பாசையாயும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இசைக்கலைஞன் said:

நிலத்தடி நீர் கூடிய விரைவில் சாக்கடை ஆகி, உப்பாகி கெட்டுப்போகும் என்பதுதான் எனது கணிப்பும். அதிகமாக பாறைகளை அகழ்ந்து எடுப்பது; நிலத்தடிநீரை அதிகமாக உறுஞ்சுதல்; நீரை நிலத்துக்குள் செல்லும் வழிகளை அடைத்தல் போன்றவற்றால் இது நிகழும். :unsure:

 

Basic Groundwater Hydrology (USGS 2004).JPG

இதை எப்படி தடுக்கலாம் என்பது பற்றி கொஞ்சம் விளக்கமாக எழுதலாமே நன்பர உறவு ஆதவனின் பதிவுகளில் சிலது வந்தது தான்.நீங்களும் உங்கள் பங்கிற்க்கு எழுதலாம் தானே.நன்றி இசை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இசைக்கலைஞன் said:

நிலத்தடி நீர் கூடிய விரைவில் சாக்கடை ஆகி, உப்பாகி கெட்டுப்போகும் என்பதுதான் எனது கணிப்பும். அதிகமாக பாறைகளை அகழ்ந்து எடுப்பது; நிலத்தடிநீரை அதிகமாக உறுஞ்சுதல்; நீரை நிலத்துக்குள் செல்லும் வழிகளை அடைத்தல் போன்றவற்றால் இது நிகழும். :unsure:

 

Basic Groundwater Hydrology (USGS 2004).JPG

 

43 minutes ago, சுவைப்பிரியன் said:

இதை எப்படி தடுக்கலாம் என்பது பற்றி கொஞ்சம் விளக்கமாக எழுதலாமே நன்பர உறவு ஆதவனின் பதிவுகளில் சிலது வந்தது தான்.நீங்களும் உங்கள் பங்கிற்க்கு எழுதலாம் தானே.நன்றி இசை.

இதனைப் பற்றிய... தொழில் துறை சார்ந்த பதவியில் இருக்கும்.. இசைக்கலைஞனிடம் இருந்து,
அதிக தகவல்களை... எதிர் பார்க்கின்றோம்.  :)

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vanangaamudi said:

அப்ப கூட்டாட்சியும் வேண்டாம் சமஸ்டியும் வேண்டாம் பிச்சை வேணாம் நாயைப்பிடி எண்டு தமிழன் ஓடிடுவான் எண்ட ஒரு நப்பாசையாயும் இருக்கும்.

பாலைவனமாகும் இடத்தில் ஏன் உங்கடை ஆட்கள் குடியேருணம் (நாவல்குழி) அரச மரத்தை கண்டால் புத்தர் கடைபரப்பிறார்?

வடமாகாணமும், மலையகமும் அழியும் சாத்தியம் : அமைச்சர் சம்பிக்க

இலங்கையின் வடமாகாணமும், மலையகத்தின் பல பகுதிகளிலும் இயற்கை அனர்த்தத்தில் அழியும் சாத்தியம் உள்ளதாகவும் உடனடியாக மாற்று நடவடிக்கைகளை கையாள வேண்டும் எனவும் பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அடுத்த சில காலத்தில் இலங்கை பாரிய அனர்த்தங்களுக்கு முகன்கொடுப்பதை தடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

sampika.jpg

பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/20572

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Athavan CH said:

வடமாகாணமும், மலையகமும் அழியும் சாத்தியம் : அமைச்சர் சம்பிக்க

தமிழ்மக்களுக்கு சிங்களம் செய்துவரும் துரோகங்களுக்கான தண்டனையாகவும் இது இருக்கலாம் என்பதை சிங்களமக்களுக்கு உணர்த்தி அவர்களுடைய இனவாதப் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள விடாது, அவர்களை நல்வழில் ஆறுதல்படுத்தி உதவிகள் புரியாது, தமிழர் வாழும் பகுதிகள் அழியும் என்று கூறித் தன்னையும், தன்னினத்தையும் ஆறுதல்படுத்திக்கொள்ள சம்பிக்க முனைவதுபோல் தெரிகிறது.  

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஒரு அமைச்சர். முதலில் இவர் தென் பகுதியில் கடலரிப்பு காவு கொள்ளும் நிலங்களைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டும். சரியான திட்டமிடலற்ற.. நீர்த்தேங்களின் விளைவு தான் மலையக மண் சரிவுகளின் பின்னணி.. வடக்குக் கிழக்கில் விடுதலைப்புலிகளால்.. முன்னெடுக்கப்பட்ட சூழல் பாதுகாப்புத் திட்டங்களைக் கூட பயங்கரவாதக் கண்ணோட்டத்தில் பார்த்துச் சீரழிச்ச.. இந்த படு முட்டாள்கள் தான்.. இப்ப யாழ்ப்பாணத்தில் பல ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து இயற்கையை அழித்து விகாரை... இராணுவக் குடியிருப்புக்களை அமைப்பதில் தீவிரமாக உள்ளனர். இராணுவக் கழிவுகளைக் கொட்டி வருகின்றனர். அதைப் பற்றி இந்த அரைகுறைக்கு எங்க விளங்க இனவாதச் சிந்தனை இடமளிக்கப் போகிறது. :rolleyes:tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.