Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் பயன்படுத்துவது நெய்யா... விலங்குகளின் கொழுப்பா? - எப்படி கண்டுபிடிப்பது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சைவமாக இருந்தாலும் சரி், அசைவமாக இருந்தாலும் சரி, நெய் ஒரு பொது உணவுப்பொருள். தென்னிந்திய உணவில் இரண்டறக் கலந்து விட்ட நெய், அண்மைக்காலமாக நம் வாழ்க்கையில் இருந்து மெள்ள மெள்ள விலகிப் போய்க் கொண்டிருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் பண்டிகைக் காலங்கள், விரத நாட்கள், சுப காரியங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 

பசு நெய்

ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு பசு மாடுகள் இருக்கும். வீட்டிலேயே வெண்ணெய் எடுத்து உருக்கிப் பயன்படுத்துவார்கள். வாசனையும் சுவையும் அவ்வளவு அற்புதமாக இருக்கும். மாடு இல்லாதவர்கள் இந்தத் தூய ஹோம் மேட் தயாரிப்பை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இப்போது மாடுகளே அற்றுப்போய் விட்டன. இபோதெல்லாம் நெய் விதவிதமாக பேக் செய்யப்பட்டு கடைகளில் விற்பனைக்கு வந்து விட்டது. 

எல்லா உணவுப் பொருட்களைப் போலவே, நெய்யிலும் ஏகப்பட்ட கலப்படங்கள் செய்யப்படுகின்றன. பொதுவாக கடைகளில் விற்பனை செய்யப்படும் நெய்யில் சேர்க்கப்படும் பொருட்களின் பட்டியலைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. எலும்புத் துகள்கள், ரசாயனங்கள், குரங்குக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு... போன்றவை சேர்க்கப்பட்டிருப்பது பல்வேறு கட்ட சோதனைகளில் தெரியவந்துள்ளன.

பெரும்பாலும் டப்பாக்களில்  'இது சுத்தமான பாலின் கொழுப்பு' (Milk fat) என்று குறிப்பிட்டிருப்பார்கள்.  ஆயுர்வேத மருத்துவப் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் கூட Milk fat என்று போட்டே விற்றுக்கொண்டிருக்கிறார்கள். நெய்க்கும், பாலின் கொழுப்புக்கும் வேறுபாடுகள் உண்டு. பாலில் இருந்து பெறப்படும் கொழுப்பு ஒருபோதும் நெய்யாகாது.

நெய்

முதலில் நெய் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்வோம்.

இதற்கு மிக முக்கிய மூலக்கூறு பால். அந்த பாலினை நன்றாகக் காய்ச்சி, பிறகு அதை ஆற வைத்து, அதில் ஒரு துளி தயிரைக் கலந்து ஆறு மணி நேரம் உறைய வைக்க வேண்டும். ஆறு மணி நேரத்துக்குப் பிறகு அதை எடுத்துப் பார்த்தால் முழுவதுமாக அந்த பால் தயிராக மாறியிருக்கும். அந்தத் தயிரில் சிறிது நீர்விட்டு நன்றாகக் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்து வந்துவிடும். அந்த வெண்ணெயை வாணலியில் இட்டுக் காய்ச்சினால் தனியாகப் பிரிந்து வரும். இதுவே உண்மையான முறை. இதற்குப் பதிலாக பாலிலிருந்து கிடைக்கும் கொழுப்பை நெய்யாக்குவது சரியான முறை அல்ல. 

பாலைத் தயிராக்கி தயிரை வெண்ணெயாக்கி அதை நெய்யாக்குவதுதான் சுத்தமானது. இதற்குத்தான் நோய் தீர்க்கும் மருத்துவக் குணங்கள் உண்டு. மாறாக நேரடியாக பாலிலிருந்து கிடைக்கும் கொழுப்பு நெய்யை உண்டால்  உடலால் அதனை ஜீரணிக்க முடியாது. கொழுப்பாகவே உடலில் சேர்த்து வைக்கும். அது தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும். 

சராசரியாக 40 லிட்டர் பாலைத் தயிராக்கி பிறகு அதிலிருந்து வெண்ணெயை எடுத்து நெய்யாக்கினால்  ஒருகிலோதான் கிடைக்கும். ஆனால், வணிகம் என்று வந்து விட்டால் இதில் பெரிய லாபம் இல்லை. அதனால், இயற்கையான எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் நேரடியாக பாலில் இருந்து கொழுப்பை எடுத்து அதோடு  பல ரசாயனங்கள் மற்றும் விலங்கு கொழுப்புகளைச் சேர்த்து விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள். 

கொழுப்பெடுத்தது போக, மிஞ்சும் பாலையும் வெவ்வேறு பெயர்களில் விற்பனை செய்து கிடைக்கும் வழிகளில் எல்லாம் லாபம் பார்க்கிறார்கள். 

நெய்

ஆட்டுப்பால்,  எருமைப்பாலில் இருந்தும் இதைத் தயாரிக்கலாம். ஆனால் அதற்கு பெரிய மகத்துவம் இல்லை. நாட்டு மாடுகளின் நெய்யே நோய் தீர்க்கும் மருந்தாக இருக்கும். இதுமாதிரியான உண்மையான பொருள் வேண்டுமென்றால்,  நாமே வீட்டில் பசும்பால் வாங்கி காய்ச்சி, தயிராக்கி, கடைந்து வெண்ணெய் பெற்று நெய்யாக்கிப் பயன்படுத்தலாம். 

நாட்டு மாடுகள் குறைந்த அளவு பாலையே கொடுக்கும். திமில்கள், மாடலான கழுத்து, கொம்புகள் உள்ள நமது நாட்டுக்குச் சொந்தமான ரகங்களில் இருந்து பெறப்படும் நெய்க்கே அனைத்து மருத்துவக் குணங்களும் உண்டு. இதுதான் உடலின் செல்களுக்குள் எளிதாக ஊடுருவி தேவையான அனைத்துச் சத்துகளையும் வழங்கும். தேவையற்றக் கழிவுகளையும், உடல் நச்சுகளையும் வெளியேற்றும்.

இந்த நெய்யை நாள்தோறும் உட்கொண்டால் ஜீரண சக்தி மேம்படும், உடலின் வளர்சிதை மாற்றம் சீராகும். நரம்புகள், எலும்புகள் பலப்படும், மூளை வளர்ச்சிக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீராகும், உடல் பருமன் சீராகும், இதய நோய், மூட்டு வலி சீராகும். அனைவரும் எதிர்பார்க்கும் ஒமேகா சத்துகள் இதில் உள்ளது அதுமட்டுமல்லாமல் பல வைட்டமின்களும் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பும் இதில் அடங்கியுள்ளன.

http://www.vikatan.com/news/health/101906-how-to-identify-pure-ghee.html

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழரசு said:

நீங்கள் பயன்படுத்துவது நெய்யா... விலங்குகளின் கொழுப்பா? - எப்படி கண்டுபிடிப்பது?

சைவமாக இருந்தாலும் சரி், அசைவமாக இருந்தாலும் சரி, நெய் ஒரு பொது உணவுப்பொருள். தென்னிந்திய உணவில் இரண்டறக் கலந்து விட்ட நெய், அண்மைக்காலமாக நம் வாழ்க்கையில் இருந்து மெள்ள மெள்ள விலகிப் போய்க் கொண்டிருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் பண்டிகைக் காலங்கள், விரத நாட்கள், சுப காரியங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது....

....

....

http://www.vikatan.com/news/health/101906-how-to-identify-pure-ghee.html

 

எல்லாம் சரி..

நெய் அசலா..? கலப்படமா...? எப்படி கண்டு பிடிப்பது..?

அதற்கு பதிலைக் காணோம்.. tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ராசவன்னியன் said:

 

எல்லாம் சரி..

நெய் அசலா..? கலப்படமா...? எப்படி கண்டு பிடிப்பது..?

அதற்கு பதிலைக் காணோம்.. tw_angry:

அதைத்தான் நானும் தேடினன் விகடனும் பீலா விடுது.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ராசவன்னியன் said:

 

எல்லாம் சரி..

நெய் அசலா..? கலப்படமா...? எப்படி கண்டு பிடிப்பது..?

அதற்கு பதிலைக் காணோம்.. tw_angry:

தண்ணீரில் மிதந்தால் நெய்.

  • கருத்துக்கள உறவுகள்

நெய் இட்டு நம்ம தமிழர்கள் பெரிதாக சமைப்பதில்லை குறிப்பா கிழக்கில்  வெளிநாடுகளில் கூட இந்தியர்கள் வெறும் சோற்றில் நெய்யை ஊற்றி சப்பிடுவார்கள் அதைக்கண்டிருக்கிறேன்  எனக்கு அந்த மணம் பிடிக்காது 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நெய் இட்டு நம்ம தமிழர்கள் பெரிதாக சமைப்பதில்லை குறிப்பா கிழக்கில்  வெளிநாடுகளில் கூட இந்தியர்கள் வெறும் சோற்றில் நெய்யை ஊற்றி சப்பிடுவார்கள் அதைக்கண்டிருக்கிறேன்  எனக்கு அந்த மணம் பிடிக்காது 

மதுரை பகுதி கிராமங்களில் பசு வெண்ணையை அடுப்பில் உருக்கி நெய் காய்ச்சும்போது சிறிது முருங்கை இலைகளைப் போட்டு காய்ச்சுவார்கள்.. அதில் வெண்ணை உருகி நெய்யானதும், நெய்யை மட்டும் வடிகட்டி எடுத்துவிட்டு, மீதமுள்ள நெய்யில் வறுத்த முருங்கை இலைகளோடு சூடான சாதத்தை பிசைந்து சாப்பிட்டல் அதன் ருசியே தனி.. நான் சிறுவயதில் பலமு|றை சாப்பிட்டுள்ளேன்..!

அதே போல் புதிதாக கன்று ஈன்றவுடன் சுரக்கும் பசும்பாலை சுண்டக் காய்ச்சினால் பால் திரண்டு பதமாக வரும்..திரட்டுப்பாலை 'கடம்பு' என சொல்வார்கள்..அதுவும் சுவையாக இருக்கும். அண்டை வீடுகளுக்கும் பகிர்ந்து கொடுத்தனுப்புவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ராசவன்னியன் said:

மதுரை பகுதி கிராமங்களில் பசு வெண்ணையை அடுப்பில் உருக்கி நெய் காய்ச்சும்போது சிறிது முருங்கை இலைகளைப் போட்டு காய்ச்சுவார்கள்.. அதில் வெண்ணை உருகி நெய்யானதும், நெய்யை மட்டும் வடிகட்டி எடுத்துவிட்டு, மீதமுள்ள நெய்யில் வறுத்த முருங்கை இலைகளோடு சூடான சாதத்தை பிசைந்து சாப்பிட்டல் அதன் ருசியே தனி.. நான் சிறுவயதில் பலமு|றை சாப்பிட்டுள்ளேன்..!

அதே போல் புதிதாக கன்று ஈன்றவுடன் சுரக்கும் பசும்பாலை சுண்டக் காய்ச்சினால் பால் திரண்டு பதமாக வரும்..திரட்டுப்பாலை 'கடம்பு' என சொல்வார்கள்..அதுவும் சுவையாக இருக்கும். அண்டை வீடுகளுக்கும் பகிர்ந்து கொடுத்தனுப்புவார்கள்.

இங்கு கிடைக்கும் எந்த பட்டர் என்றாலும் பரவாயில்லை அதனை உருக்கும்போது முருங்கை இலையையும் சேர்த்து உருக்கினால் நல்ல வாசனை வரும் சுவையும் நன்றாக இருக்கும். 

அப்பு (அம்மையா) வீட்டில் பல பசுமாடுகள் இருந்ததினால் அடிக்கடி கடும்பு பால் கிடைக்கும் சிறு வயதில் நானும் சாப்பிட்டிருக்கின்றேன் எனக்கும் அதன் சுவை நன்கு தெரியும் ராசவன்னியன். 

அப்படியானால் அனேகமாக எல்லா கடவுள் சிலைகளுக்கும் பண்டிக்கொழுப்பும் எலும்பும் கலந்துதான் நெய் அபிசேகம் செய்யப்பட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையான நெய் வாங்கிறதெண்டால் ஒரு மாட்டுப்பண்ணை வைச்சிருக்கிறவரிட்டைதான் போகோணும் கண்டியளோ!
மற்றும் படி இப்ப எல்லாத்திலையும் கலப்படம். சின்ன வயதிலை முருகனுக்கு நெய்விளக்கு ஏற்றின ஞாபகம் இப்பவும் இருக்கு....விரத நாட்களிலை சோற்றோடை பருப்பு கீரை நெய்யும் விட்டு சாப்பிட்டால் ........ ஒரு சந்தோசம் இனிமை குளிர்ச்சி உடம்பில் தெரியும்.
 

  • கருத்துக்கள உறவுகள்

வெஜிடபிள் நெய்யும் கடைகளில் கிடைக்கிறது , அது கூட வாங்கிப் பயன்படுத்தலாம்.....!

Image associée

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
52 minutes ago, suvy said:

வெஜிடபிள் நெய்யும் கடைகளில் கிடைக்கிறது , அது கூட வாங்கிப் பயன்படுத்தலாம்.....!

Image associée

உது பூந்திலட்டுக்கு சரிவராது....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உண்மையான நெய் வாங்கிறதெண்டால் ஒரு மாட்டுப்பண்ணை வைச்சிருக்கிறவரிட்டைதான் போகோணும் கண்டியளோ!
மற்றும் படி இப்ப எல்லாத்திலையும் கலப்படம். சின்ன வயதிலை முருகனுக்கு நெய்விளக்கு ஏற்றின ஞாபகம் இப்பவும் இருக்கு....விரத நாட்களிலை சோற்றோடை பருப்பு கீரை நெய்யும் விட்டு சாப்பிட்டால் ........ ஒரு சந்தோசம் இனிமை குளிர்ச்சி உடம்பில் தெரியும்.

குமாரசாமி அண்ணை  சொல்வதுதான் சரி.
இப்போது.... எதிலும் கலப்படம் என்னும் போது...
"சூப்பர் மார்க்கெட்டில்... சுத்தமான நெய்"   தேடுவது, வீண் வேலை.:D:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.