Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நீண்டகாலமாக சிங்கள அரசு தமிழினத்தை ஏமாற்றி வருகின்றது"

Featured Replies

"நீண்டகாலமாக சிங்கள அரசு தமிழினத்தை ஏமாற்றி வருகின்றது"

 

 

“நீண்ட கால தமிழர் விடுதலை போராட்டம் ஆரம்ப காலத்தில் அஹிம்சை ரீதியில் முன்னெடுக்கப்பட்டு, தந்தை செல்வாவின் வழியில் வழி நடாத்தப்பட்டு, தலைவர் பிரபாகரன் வழியில் ஆயுதப் போராட்டமாக பரினமித்து தற்போது மீண்டும் அஹிம்சை ரீதியிலான ஒரு ஜனநாயக போராட்டத்தின் வழியில் வந்து நிற்கின்றோம் ” என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ். சிவமோகன் தெரிவித்தார்.

Local_News.jpg

மன்னார் நகர சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தழிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் சமகால அரசியல் கள நிலை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது,

“நீண்டகாலமாக சிங்கள அரசுகள் தமிழினத்தை ஏமாற்றி வருகின்ற  வரலாறுகள் நாங்கள் அறிந்தவையே துரதிஷ்டவசமாக எமக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் எமது தமிழ் மக்கள் இன்று நம்பிக்கையின்றி ஒரு விளிம்பில் சென்று கொண்டிருக்கின்றனர் என்பது நிதர்சனமே” என தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/25207

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பேசிட்டு.. அப்புறம் அவன் காலையே நக்கிக் கிட்டு கிடவுங்க... தருவான்.. தரமாட்டான் என்று கொண்டு காலத்தையும் சந்தர்ப்பங்களையும் தட்டிக் கழித்துக் கொண்டிருக்க வேண்டியான்.

முட்டாள் தமிழன். தானே தன் சொந்த இனத்தை ஏமாற்றுவதில் அரசியல் செய்கிறான். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எங்களிடம் கதைக்கவேண்டாம் வெளியில் வந்து கதைங்க ஏமாத்தும் சிங்களவன் வழிக்கு வருவான் இதத்தான் வைகோ இங்குவந்து செய்கிறார் இப்படி இவர் கதைக்கிறார் என்றால் சிங்களத்திடம் பெரிசா எதோ எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம் என்னவா இருக்கும் புது பஜிரோ ஜீப்ஆக இருக்குமோ ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

 என்னவா இருக்கும் புது பஜிரோ ஜீப்ஆக இருக்குமோ ?

பஜிரோவுக்கு நாலு சில்லு,சிறிலங்காவிலும் நாலு மதம் .பஜிரோ ஒடுவதற்கு எப்படி நாலு சில்லு தேவையோ அது போன்று சிறிலங்காவில் ஒற்றையாட்சி நடைபெறுவதற்கு நாலுமதம் முக்கியம் என்று சொலுவினம்...:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிகட்சியில் வைத்திய கலாநிதி இருந்தபோது, சிங்கள அரசு தமிழினத்தை ஏமாற்றி வருகின்றது என்ற உண்மையை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை...... தமிழரசுக் கட்சிக்கு வந்தபின்னரே அவருக்குப் புரியத் தொடங்கியுள்ளது. தமிழரசுக் கட்சிக்கும் அது இன்னமும் புரியவில்லை என்பது வேறொரு கட்சிக்கு இவர் தாவிய பின்னரே தெரியவரலாம். :shocked:   

6 hours ago, நவீனன் said:

நீண்டகாலமாக சிங்கள அரசு தமிழினத்தை ஏமாற்றி வருகின்றது

நீண்டகாலமாக தமிழினம் நாகரிகம், அகிம்சை, ஜனநாயகம், போன்ற போலி மாயைகளில் சிக்கி சிங்களவனிடம் ஏமாந்து வருகிறது.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுதல்கள் தொடரவே செய்யும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, Rajesh said:

நீண்டகாலமாக தமிழினம் நாகரிகம், அகிம்சை, ஜனநாயகம், போன்ற போலி மாயைகளில் சிக்கி சிங்களவனிடம் ஏமாந்து வருகிறது.

தமிழினம் என்றுமே சிங்களவனிடம் சிக்கவில்லை. தமிழ்மக்கள் அன்றும் இன்றும் விவரமாகத்தான் இருக்கின்றார்கள். தேர்தல் வாக்களிப்பிலும் சரி...அரசியல் வாக்களிப்பிலும் சரி இன்றும் நிதானமாகத்தான் இருக்கின்றார்கள். 

மக்கள் நம்பி வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிய அமீர் தொடக்கம் சுமந்தி வரைக்கும் செய்யும் துரோகத்தனம் தான் ஈழத்தமிழன் வரலாற்றை சந்தி சிரிக்க வைக்கின்றது.

இதில் இவர்களுக்கு மட்டும் என்று  பரம்பரை பரம்பரையாக வாக்குகள் வேறு இருக்கின்றது.:cool:

On 10/3/2017 at 5:23 AM, குமாரசாமி said:

தமிழினம் என்றுமே சிங்களவனிடம் சிக்கவில்லை. தமிழ்மக்கள் அன்றும் இன்றும் விவரமாகத்தான் இருக்கின்றார்கள். தேர்தல் வாக்களிப்பிலும் சரி...அரசியல் வாக்களிப்பிலும் சரி இன்றும் நிதானமாகத்தான் இருக்கின்றார்கள். 

மக்கள் நம்பி வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிய அமீர் தொடக்கம் சுமந்தி வரைக்கும் செய்யும் துரோகத்தனம் தான் ஈழத்தமிழன் வரலாற்றை சந்தி சிரிக்க வைக்கின்றது.

இதில் இவர்களுக்கு மட்டும் என்று  பரம்பரை பரம்பரையாக வாக்குகள் வேறு இருக்கின்றது.:cool:

தமிழ் மக்கள் யார் தம்மை ஏமாற்றுகிறார்கள் (உதாரணம் சம்பந்தன்) என்று தெரிந்தும் தொடர்ந்து அவர்களுக்கு வாக்களிப்பது தம்மைத் தாமே ஏமாறுவதற்கு சமன் என நினைக்கிறன்!

நீங்கள் சொல்வது உண்மையென்றால் அடுத்த தேர்தலில் தமிழரசுக்கட்சி முற்றாக தோற்கடிக்கப்படுவதுடன், கடும் பிரயத்தனம் செய்து தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றும் சம்பந்தன், சுமந்திரன், மாவை, சரவணபவன், துரைரத்தினம் போன்ற அனைவரும் முற்றாக தோற்கடிக்கப்படுவர்.

பொறுத்திருந்து பாப்பம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.