Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள மாணவர்கள் கழிவறைக்கு செல்லக் கூட விக்னேஸ்வரன் நீர் வழங்கவில்லை - கம்மன்பில

Featured Replies

சிங்கள மாணவர்கள் கழிவறைக்கு செல்லக் கூட விக்னேஸ்வரன் நீர் வழங்கவில்லை - கம்மன்பில

சிங்கள மாணவர்கள் கழிவறைக்கு செல்லக் கூட விக்னேஸ்வரன் நீர் வழங்கவில்லை - கம்மன்பில

 

 
 
 
வடக்கு முதல்வர் கடும்போக்குவாதி எனவும், இரட்டைகுளம் சிங்களப் பாடசாலை மாணவர்கள் கழிப்பறைக்கு செல்லக் கூட தண்ணீர் கொடுக்கவில்லை எனவும், வீட்டில் இருந்தே அவர்கள் தண்ணீர் எடுத்துச் செல்வதாக தன்னிடம் கூறியதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மேலும், பிரபாகரனை விட சம்பந்தனைப் பார்த்தே பயப்பட வேண்டும் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்படுத்தப்பட்டால் நோர்வே அரசாங்கம், பகிரங்கமாக ஆயுதங்களை வழங்க வாய்ப்புள்ளதாகவும் கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=97701

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் மற்றவர்களை விடவும் உயர்ந்த நாகரீகமானவர்கள் என்றுதானே நீங்களும் பெருமை கொள்கிறீர்கள். அத்தனை நாகரீகமுள்ள மக்களின் கழிப்பறையில் தண்ணீர் இராது. பேப்பர்தான் இருக்கும். முதல்வர் விக்னேசுவரன் அதனை வழங்கியிருப்பார் கண்விழித்துப் பாருங்கள். :grin: :103_point_down:


Bildergebnis für toilet paper

  • தொடங்கியவர்

பிரபாகரனை விட சம்பந்தன் ஆபத்தானவர்

 

பிரபாகரனை  விட சம்பந்தன் ஆபத்தானவர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை  விடவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆபத்தானவர் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

வடக்கு முதலமைச்சர் ஒர் கடும்போக்குவாதிஇ இரட்டைக்குளம் சிங்கள பாடசாலையின் பிள்ளைகள் கழிப்பறை செல்வதற்குக்கூட நீரைப் பெற்றுக்கொடுக்க விக்னேஸ்வரன் மறுக்கின்றார்.

பிள்ளைகள் வீடுகளிலிருந்து நீர் கொண்டு வருவதாகக் கூறுகின்றனர். வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும்இ சம்பந்தன் ஆபத்தானவர்.

உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் லாம்புஇ குடம் விளையாட்டே நடைபெறும்.

(முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் தேர்தலை ஒத்தி வைப்பதற்காக லாம்பு மற்றும் குடம் சின்னங்களைக் கொண்ட சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அதில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வெற்றியீட்டியது) லாம்பிற்கு கூடுதல் வாக்கு அளிக்கப்பட்டால் நாடு பிளவடைவதனை தடுக்க முடியாது.

உத்தேச அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்டால் தமிழ்இ சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் நல்லிணக்கம் நீடிக்காது.

அண்மையில் ஸ்பெய்ன் மக்கள் எதிர்நோக்கிய அனுபவங்களை இலங்கையும் எதிர்நோக்க நேரிடும்.

ஒருமித்த நாடு என்ற பதம் ஒருமைப்படுத்திய நாடு என்ற தமிழ் அர்த்தத்தை கொண்டதாகும்.

சமஸ்டியை வழங்கினால் பின்னர் சமஸ்டி வழங்கப்பட்ட பகுதி விரும்பினால் மட்டுமே மீளவும் இணைந்து கொள்ள முடியும்.

உத்தேச அரசியல் அமைப்பு அமுல்படுத்தப்பட்டால் நோர்வே அரசாங்கம் நேரடியாகவே மாகாணங்களுக்கு ஆயுதங்களை வழங்கக்கூடிய பின்னணி உருவாகும் என உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.

http://www.samakalam.com/செய்திகள்/பிரபாகரனை-விட-சம்பந்தன்/

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

சிங்கள மாணவர்கள் கழிவறைக்கு செல்லக் கூட விக்னேஸ்வரன் நீர் வழங்கவில்லை - கம்மன்பில

சிங்கள மாணவர்கள் கழிவறைக்கு செல்லக் கூட விக்னேஸ்வரன் நீர் வழங்கவில்லை - கம்மன்பில

 

 
 
 
வடக்கு முதல்வர் கடும்போக்குவாதி எனவும், இரட்டைகுளம் சிங்களப் பாடசாலை மாணவர்கள் கழிப்பறைக்கு செல்லக் கூட தண்ணீர் கொடுக்கவில்லை எனவும், வீட்டில் இருந்தே அவர்கள் தண்ணீர் எடுத்துச் செல்வதாக தன்னிடம் கூறியதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மேலும், பிரபாகரனை விட சம்பந்தனைப் பார்த்தே பயப்பட வேண்டும் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்படுத்தப்பட்டால் நோர்வே அரசாங்கம், பகிரங்கமாக ஆயுதங்களை வழங்க வாய்ப்புள்ளதாகவும் கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=97701

என்னப்பா இது..

விக்கியர், சிங்கள மாணவர் கக்கூசுக்கு போகேக்க, தண்ணி வாளி கொண்டு போய் வைக்கோணும் எண்டுறாரோ, இந்த பிக்காலியார்... 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

பிரபாகரனை விட சம்பந்தன் ஆபத்தானவர்

 

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை  விடவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆபத்தானவர் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

 

http://www.samakalam.com/செய்திகள்/பிரபாகரனை-விட-சம்பந்தன்/

 

இது ஒரு எதிர்மறை பரோபகாண்டா வியூகம்  Propanganda Tactics 

இறுதிப்போர் முள்ளிவாய்க்கால் படுகொலை எல்லா வற்றுக்கும் 
காரண கர்த்தாவும் பிள்ளையார் சுழிபோட்டு தொடக்கி வைத்தும் நோர்வே தான் 
இறுதிவரை புலிகளை தாக்குதல் நடத்தாது காத்திருக்க வைத்தும் 
பொய் உறுதிமொழிகளை வழங்கி வந்தும் நோர்வே தான் 

ஆனால் சமாதான காலத்தில் அப்ப அப்ப புலிகளுக்கு ரேடியோ 
கொடுக்கிறது ........ சயிக்கிள் திருத்த சாவி கொடுக்கிறது என்று 
சிங்கள மக்களிடம் பகைமையையும் எதிர்ப்பையும் சாம்பாதிக்கும் 
தருணம் தமிழ் மக்கள் மனதில் அது எதிர் மறையாக ஒரு விசுவாச 
போக்கை நோர்வே மீது உண்டு பண்ணி கொண்டு இருந்தது.

இவர்களின் இந்த எதிர்ப்பு நாடகம் என்பது ....
சம்மந்தன் எதோ ஹிரோ போல தமிழர் மத்தியில்  எதிர் மறையாக 
தமிழர் மனதில் ஒரு இடத்தை உருவாக்கும் ... இது ஒரு சைகொலோஜி tacticks.

சிங்கள சிறு பிள்ளைக்கும் தெரியும் சம்மந்தன்- சுமந்திரன் கூட்டு 
அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று. 
தமிழனை தாலியறுத்து நடு ரோட்டில் விட இதை விட ஒரு கூட்டு 
சிங்களவனுக்கு எப்போதும் கிடைக்காது. 
 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முதல்வர் சிங்கள மாணவர்களுக்கு கழிப்பறைக்கு தண்ணீர் கொண்டுபோவதற்குகூட விடாமல் தடுத்திருக்கார்னா, வடமாகாணத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கு என்பதே அர்த்தம்.... சிங்கள மக்களும்  சுதந்திரமாக கழிப்பறைக்கு தண்ணீர் கொண்டுபோகும் வகையில் இலங்கையின் அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்படணும்!

8 minutes ago, Maruthankerny said:

 

நடு ரோட்டில் விட இதை விட ஒரு கூட்டு 
சிங்களவனுக்கு எப்போதும் கிடைக்காது. 
 

அது தான் விட்டாச்சே!!!!!

புலிகளுக்கும்  கூட்டமைப்புக்கும் சம்பந்தம் இல்லை என ஞானப்பால் உண்டவர் கொக்கரித்தது உங்கள் காதில் விழவில்லையா?????

அதை விட சிங்களவனே இல்லாத திருகோணமலையில் அவர்களை குடியேற்ற உதவியது அவரது தந்தையார் ராஜவரோதயம் தானாம்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Dash said:

அது தான் விட்டாச்சே!!!!!

புலிகளுக்கும்  கூட்டமைப்புக்கும் சம்பந்தம் இல்லை என ஞானப்பால் உண்டவர் கொக்கரித்தது உங்கள் காதில் விழவில்லையா?????

அதை விட சிங்களவனே இல்லாத திருகோணமலையில் அவர்களை குடியேற்ற உதவியது அவரது தந்தையார் ராஜவரோதயம் தானாம்.

 

தமிழனின் பக்கபலம் இல்லாமல் சிங்களம் தனித்து நின்று செயல்பட்ட காரியங்கள் குறைவு.

57 minutes ago, குமாரசாமி said:

தமிழனின் பக்கபலம் இல்லாமல் சிங்களம் தனித்து நின்று செயல்பட்ட காரியங்கள் குறைவு.

பொன் ராமநாதன் கால்த்தில் இருந்து இதான் நிலை???

Edited by Dash

நல்ல காலம் கு** கழுவி விடேல்ல எண்டு சொல்லாமல் விட்டாரே கம்மன்பில ????????  

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

 சிங்கள மக்களை ஏமாற்றி, உசுப்பேத்தி காரியம் பாக்க உப்பிடியான லொள்ளுக்கதையளை அவிழ்த்து விடுகிறது. சொல்லுறவன் சொன்னாலும் கேக்கிறவனுக்கு மதி இருக்கவேணும். அது அவர்களுக்கு இல்லை, எதிர்த்து கேள்வி கேக்க மாட்டினம் என்று தெரிந்து கம்மன்பில கயிறு திரிக்கிறார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.