Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சங்கரியுடன் இணைந்து சூரியன் சின்னத்தில் சுரேஷ் போட்டி

Featured Replies

சங்கரியுடன் இணைந்து சூரியன் சின்னத்தில் சுரேஷ் போட்டி

 

சங்கரியுடன் இணைந்து சூரியன் சின்னத்தில் சுரேஷ் போட்டி

 

 
சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியுடன் இணைந்து சூரியன் சின்னத்தில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய ஈ.பி.ஆர்.எல்.ப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எனினும், இரு கட்சிகளுக்கும் இடையிலான பொதுச் சின்னம் மற்றும் பெயர் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்பதாலேயே இந்த முடிவை சுரேஷ் பிரேமச்சந்திரன் எடுத்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சுரேஷ் பிரேமசந்திரன் இந்த தகவல்களை வௌியிட்டார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்களாக கருத வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

கிராமிய ரீதியாக அபிவிருத்திகளை மேற்கொள்ளக் கூடிய திட்டங்களை வகுப்பதற்காகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் உதவுகின்றன அன்று பாராளுமன்ற தேர்தல் போன்று தேசிய ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தாது என அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழரசு கட்சியின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலை பயன்படுத்தி தமது கொள்கைகளை பரப்பும் செயற்பாட்டில் ஈடுபடும் நிலை உள்ளது.

அவர்கள் வெற்றி பெறும் பட்சத்தில் அரசியல் சாசனம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட இடைக்கால அறிக்கையை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்ற நிலைப்பாட்டை நாட்டில் தோற்றுவிக்கக் கூடிய சாத்திப்பாடுகள் இருப்பதாக சுரேஷ்பிரேமசந்திரன் தெரிவித்தார்.

அந்த இடைக்கால அறிக்கையானது பிழையான வழிமுறைகளை கொண்டுள்ளது.

அதேவேளை, உள்ளுராட்சி மன்றங்கள் சார்ந்து நகரசபை, மாநகரசபை, பிரதேச சபை என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிக்கும் வகையிலான பொது எதிரணி ஒன்றை ஏற்படுத்துவது அவசியம்.

தமிழ் மக்களின் தேசிய கொள்கைகளை ஏற்றுக் கொண்டு கிராமிய அபிவிருத்திகளை முன்னெடுக்கக் கூடிய ஒரு தேர்தலுக்கு முகம் கொடுக்கும் வகையில் தாம் பரந்து பட்ட வகையில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=98067&mode=lead

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எந்த சின்னத்திலும் இணைந்து போட்டியிடலாம்... இனி எந்தகாலத்திலும் தமிழினம் எழுந்து நிற்க முடியாது என்பது முள்ளிவாய்க்காலோடு முடிவாயிட்டுது............ சங்கரி ஐயா...  முதுமை காரணமா சீக்கிரம் நீங்க இந்த பூமியை விட்டுபோகலாம்... போகும்போது சுரேஷயும் கூட்டி போங்க!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான லூசுகள் இருக்கும் வரை தமிழரசுக்கட்சிக்கு கொண்டாட்டம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, MEERA said:

இப்படியான லூசுகள் இருக்கும் வரை தமிழரசுக்கட்சிக்கு கொண்டாட்டம்

அப்பிடி சிம்பிளாய் சொல்லப்படாது கண்டியளோ. சிங்களவனுக்கு கொண்டாட்டம் எண்டு காட்டமாய் சொல்லணும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

நீங்கள் எந்த சின்னத்திலும் இணைந்து போட்டியிடலாம்... இனி எந்தகாலத்திலும் தமிழினம் எழுந்து நிற்க முடியாது என்பது முள்ளிவாய்க்காலோடு முடிவாயிட்டுது............ சங்கரி ஐயா...  முதுமை காரணமா சீக்கிரம் நீங்க இந்த பூமியை விட்டுபோகலாம்... போகும்போது சுரேஷயும் கூட்டி போங்க!

அப்போ சம்பந்தர் சாகா வரம் பெற்றவரோ??

 

  • தொடங்கியவர்
  • உதயசூரியனில் இணைந்து களமிறங்குவதே பலமானது- சுரேஸ்
உதயசூரியனில் இணைந்து களமிறங்குவதே பலமானது- சுரேஸ்
 
 

உதயசூரியனில் இணைந்து களமிறங்குவதே பலமானது- சுரேஸ்

 
 

உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் தேர்­தலை எதிர்­கொள்­வது என்ற எமது கருத்­துக்கு அகில இலங்கை தமிழ் காங்­கி­ரஸ் உடன்­ப­ட­வில்லை. இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சியைத் தோற்­க­டிப்­ப­தற்கு, ஆகக் குறைந்­தது அதன் வெற்­றி­யைக் குறைப்­ப­தற்கு பொது எதி­ரணி அவ­சி­யம் என்­பதை உணர்ந்து காங்­கி­ரஸ் செயற்­பட வேண்­டும்.

இவ்­வாறு கூறி­யுள்­ளார் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்­சி­யின் தலை­வர் சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரன். யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று அவர் நடத்­திய ஊடக சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே இவ்­வாறு குறிப்­பிட்­டார்.அவர் தெரி­வித்­தா­வது-,

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் கிரா­மிய மட்­டத் தேர்­தல். முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது கிடை­யாது. வடக்கு – கிழக்­கைப் பொறுத்­த­வ­ரை­யில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி இந்­தத் தேர்­தல் ஊடாக அர­ச­மைப்பு இடைக்­கால அறிக்­கைக்கு அங்­கீ­கா­ரத்­தைப் பெற முயல்­கின்­றது. ஒன்­று­மில்­லாத இடைக்­கால அறிக்­கையை ஏற்க முடி­யாது.

இந்த முயற்­சி­யைத் தோற்­க­டிப்­ப­தற்கு பொது எதி­ர­ணி­யின் அவ­சி­யம் உண­ரப்­பட்­டது. இதற்கு ஏற்­க­னவே மக்­கள் மத்­தி­யில் பிர­பல்­ய­மான, தந்தை செல்­வா­வால் உரு­வாக்­கப்­பட்ட உத­ய­சூ­ரி­யன் சின்­னம் பொருத்­த­மா­னது என்று பல தரப்­பா­லும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

 

அந்­தக் கருத்­தையே நாம் முன்­வைத்­தோம். எங்­கள் கருத்து காங்­கி­ர­ஸால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் பல கார­ணங்­க­ளைக் கூறி­யுள்­ளார். அந்­தக் கார­ணங்­கள் சரியா பிழையா என்று ஆராய வர­வில்லை.

பரந்­து­பட்டு எல்­லோ­ரை­யும் அணி திரட்­டு­வ­தற்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் போட்­டி­யி­டு­வதே பொருத்­த­மாக இருக்­கும். அதை உணர்ந்து காங்­கி­ரஸ் செயற்­ப­ட­வேண்­டும். காங்­கி­ர­ஸு­டன் எங்­க­ளுக்கு கொள்கை ரீதி­யில் எந்த முரண்­பா­டும் இல்லை. அவர்­க­ளு­டன் பேச்சு நடத்­து­வ­தற்கு இன்­ன­மும் சந்­தர்ப்­பம் இருக்­கின்­றது. இணைந்து போட்­டி­யி­டு­வது தொடர்­பில் ஆராய முடி­யும் – என்­றார்.

http://newuthayan.com/story/52463.html

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

அப்போ சம்பந்தர் சாகா வரம் பெற்றவரோ??

 

அவர் இப்போ மட்டும் உயிரோடையா இருக்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:
  • உதயசூரியனில் இணைந்து களமிறங்குவதே பலமானது- சுரேஸ்
உதயசூரியனில் இணைந்து களமிறங்குவதே பலமானது- சுரேஸ்
 
 

உதயசூரியனில் இணைந்து களமிறங்குவதே பலமானது- சுரேஸ்

Bildergebnis für cut tree limbs sitting on top

மிக மோசமான கயவர்கள் கையில் உதய சூரியன் சின்னம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.