Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துபாய் நாட்டு இளவரசி கடல் வழியாக படகில் இந்தியாவிற்கு தப்பியோட்டம் : காரணம் இதுவா?

Featured Replies

துபாய் நாட்டு இளவரசி கடல் வழியாக படகில் இந்தியாவிற்கு தப்பியோட்டம் : காரணம் இதுவா?

 

 
 

துபாய் நாட்டு இளவரசி இந்தியாவிற்கு கடல் வழியாக படகில்  தப்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாய் பிரதமர் சேக் முகமது பின் ரசீது அல் மக்தூமின் மகளும், துபாய் நாட்டின் இளவரசியுமான சேகா லத்தீபா மலை ஏறுவது, குதிரையேற்றம், செயற்கை இறக்கையை கட்டிக்கொண்டு வானில் பறப்பது போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வமுடையவர்.

New_Layout__3_.jpg

ஆனாலும் பிரதமர் சேக் முகமது தனது மகளை கட்டுப்படுத்தி வீட்டுக்காவலில் வைத்துள்ளார்.

சுதந்திரமாய் வாழ விரும்பிய சேகாவிற்கு இது பிடிக்கவில்லை. எனவே துபாய் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அவர் முடிவு செய்து,  இந்தியாவை தேர்வு செய்து இளவரசி சேகா கடந்த 4ஆம் திகதி தனது நண்பர் ஒருவருடன் ஒரு படகில் ஏறி கடல் வழியாக இந்திய கடல் பகுதியில் நுழைந்துள்ளார்.

 

இதை மோப்பம் பிடித்த இந்திய கடலோரக் காவல்படை சேகாவை கோவா அருகே மடக்கிப் பிடித்து, சேகாவையும் அவரது நண்பரையும் ஐக்கிய அரபு தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடல் வழியாக வந்த சேகாவை மர்ம நபர்கள் 4 பேர் கடத்தி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

http://www.virakesari.lk/article/32087

  • கருத்துக்கள உறவுகள்

ஆ..... அரண்மனை கிளி tw_anguished:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

இதை மோப்பம் பிடித்த இந்திய கடலோரக் காவல்படை சேகாவை கோவா அருகே மடக்கிப் பிடித்து, சேகாவையும் அவரது நண்பரையும் ஐக்கிய அரபு தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்

இந்த வேலை செய்ததை விடவும்....இந்தியக் கடற்படை கடலில் புதைந்து செத்திருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

இந்த வேலை செய்ததை விடவும்....இந்தியக் கடற்படை கடலில் புதைந்து செத்திருக்கலாம்!

துபாய் குறுக்கு சந்தில் இருக்கும் நம்ம வன்னியன் சார் மேலதிக விளக்கம் தருவார் ஏன் நினைக்கிறன்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

துபாய் குறுக்கு சந்தில் இருக்கும் நம்ம வன்னியன் சார் மேலதிக விளக்கம் தருவார் ஏன் நினைக்கிறன்?

இம்மாதிரியான செய்திகள் இங்கே வெளியே வராது.

அனைத்து ஊடகங்களும் அரசின் இறுக்கமான கண்காணிப்பில் உள்ளவை.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாட்டை சிங்கபூர்ராக மாற்ற பல் முயற்சிகள் நடந்து வருகின்றது....உல்லாசபயணிகள் வரலாம் ஆனால் அங்கு இருப்பவர்கள் சுதந்திரமாக இருக்க கூடாதாம்....இன்னும் 30 வருடங்களின் பின்பு அது மத்திய கிழக்கு நாட்டின் சிங்கப்பூர்...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா காட்டிக்கொடுக்கும் அல்லது கூட்டி..........
இதைத்தவிர இந்தியாவால் எதுவும் செய்யமுடியாது.

காவிரி மேலாண்மைவாரியம் அமைப்பதிலிருந்து மத்திய அரசு பின்வாங்கியிருக்கின்றது 
எடுபிடி மற்றும் பன்னீர் ஆகியோர் காவிரி விடையத்தைக் ´நடுவண் அரசே கவனிக்கட்டும் என பத்திரம் எழுதிக்கொடுத்திட்டதாக இப்போது செய்திகள் வருகின்றது.

இவ்விடையத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் எந்தக்கவலையும் இல்லாது  கம்மென்டு கிடக்குது.

 கடந்தகலங்களில் எம்மால் முன்னெடுக்கப்படும் எந்த ஒரு நிகழ்சிகளிலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழ்நாட்டின் உறவுகள் காத்திரமான பங்களிப்பை வழங்காதது கவனிக்கவேண்டியதே ஆனால் அவர்கள் எது எப்படி இருப்பினும் தமிழ்நாட்டுக்குத் திரும்பவும் போகவேண்டிய கட்டாயமுள்ளவர்கள் புலம்பெயர் தேசங்களில் எம்முடன் அவர்கள் ஒன்றுகூடுவதால் தாயகத்தில் அச்சுறுத்தலுக்கு அவர்கள் ஆளாகலாம்.

அதற்காக நாம் அவர்களை அம்போ என விட்டுவிட முடியாது 

காத்திரமான காவேரிக்கு ஆதரவான போராட்டங்களை புலம்பெயர்தேசங்களில் முன்னெடுப்பது ஈழத்தமிழர்களான எமக்குக் காலத்தின் கட்டாயம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

இந்தியா காட்டிக்கொடுக்கும் அல்லது கூட்டி..........
இதைத்தவிர இந்தியாவால் எதுவும் செய்யமுடியாது.

காவிரி மேலாண்மைவாரியம் அமைப்பதிலிருந்து மத்திய அரசு பின்வாங்கியிருக்கின்றது 
எடுபிடி மற்றும் பன்னீர் ஆகியோர் காவிரி விடையத்தைக் ´நடுவண் அரசே கவனிக்கட்டும் என பத்திரம் எழுதிக்கொடுத்திட்டதாக இப்போது செய்திகள் வருகின்றது.

இவ்விடையத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் எந்தக்கவலையும் இல்லாது  கம்மென்டு கிடக்குது.

 கடந்தகலங்களில் எம்மால் முன்னெடுக்கப்படும் எந்த ஒரு நிகழ்சிகளிலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழ்நாட்டின் உறவுகள் காத்திரமான பங்களிப்பை வழங்காதது கவனிக்கவேண்டியதே ஆனால் அவர்கள் எது எப்படி இருப்பினும் தமிழ்நாட்டுக்குத் திரும்பவும் போகவேண்டிய கட்டாயமுள்ளவர்கள் புலம்பெயர் தேசங்களில் எம்முடன் அவர்கள் ஒன்றுகூடுவதால் தாயகத்தில் அச்சுறுத்தலுக்கு அவர்கள் ஆளாகலாம்.

அதற்காக நாம் அவர்களை அம்போ என விட்டுவிட முடியாது 

காத்திரமான காவேரிக்கு ஆதரவான போராட்டங்களை புலம்பெயர்தேசங்களில் முன்னெடுப்பது ஈழத்தமிழர்களான எமக்குக் காலத்தின் கட்டாயம்.

எங்களுடன் நின்று அவர்கள் சவுண்டு விட்டாலே காணும் q பிராஞ் காரன் அவர்கள் திரும்பும்போது லாடம் கட்டிவிடுவான்கள் , இல்லை நாங்கள் போய் கொடி பிடித்தாலும் கதை கந்தல் தான்   அகண்ட ஈழம் என்று பீலா விட்டு  ராணுவம் உள் இறங்கிவிடும் . காசுக்கு ஒட்டு விற்ப்பது   எவ்வளவு பாதகம் என்பதை இன்னும் அவர்கள் உணரவில்லை முதலில் அதை சரிப்படுத்தனும் .

  • 1 month later...
  • தொடங்கியவர்

காணாமல் போன துபாய் இளவரசி எங்கே? தகவல் வெளியிட வலியுறுத்தல்

காணாமல் போன துபாய் இளவரசி ஷேய்கா லாட்டீஃபாபடத்தின் காப்புரிமைSHEIKHA LATIFA Image captionகாணாமல் போன துபாய் இளவரசி ஷேய்கா லாட்டீஃபா

காணாமல் போன துபாய் இளவரசி எங்கே என்ற தகவலை வெளியிட வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகளை ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

எமிரேட்ஸ் ஆட்சியாளர் ஷேக் மொஹமத் பின் ராஷித் அல் மக்டூமின் மகளான ஷேய்கா லத்தீஃபா, சுதந்திரமான வாழ்க்கை வாழ வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், லத்தீஃபா பயணம் செய்த ஆடம்பரப் படகு இந்தியா அருகே தடுத்து நிறுத்தப்பட்டு, அவர் மீண்டும் துபாய் திருப்பி அனுப்பப்பட்டதாக நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர். அப்போதில் இருந்தே அவரைக் காணவில்லை.

சட்டரீதியான காரணங்களால், இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று துபாய் அதிகாரிகள் கூறினர்.

வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது லத்தீஃபா பிடிப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் நாட்டின் உளவாளி ஒருவர் மற்றும் ஃபின்லாந்தின் தற்காப்புக் கலை பயிற்றுநர் ஒருவரின் உதவி லத்தீஃபாவுக்கு கிடைத்துள்ளதாக பிபிசி நியூஸ் நைட் புலனாய்வு கூறுகிறது.

துபாய் அதிகாரிகள் அவரின் இருப்பிடத்தை வெளிப்படுத்தி, அவரது சட்ட அந்தஸ்தை தெளிவுப்படுத்த வேண்டும் என்று ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.

"அவர் எங்கு உள்ளார் என்பதை வெளிப்படுத்தவில்லை என்றால், அவர் நிர்ப்பந்தத்தின்பேரில் காணாமல் போயிருப்பதாகவே ஆகும்" என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

"தன் குடும்பத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் இருந்து தப்பித்து செல்ல விரும்புவதாக லத்தீஃபா, தமது தோழிகளிடம் கூறியுள்ளார். அவர் காணாமல் போய் இரண்டு மாதங்கள் ஆவதால், அவர் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது."

கடந்த மார்ச் 4ஆம் தேதியன்று இந்தியாவின் கடற்கரையில் இருந்து 80 கிலோ மீட்டருக்குள் லாட்டீஃபா இடைமறிக்கப்பட்டார் என்று பிரிட்டனில் இருந்து செயல்படும் ''டீடெயின்ட் இன் துபாய்' என்ற அமைப்பு கூறியுள்ளது.

அவர் காணாமல் போனது குறித்து வெவ்வேறு விஷயங்களை சொல்லும் அனைவரும் ஏற்கனவே குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்று பிபிசியிடம் பேசிய துபாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://www.bbc.com/tamil/global-44021269

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.