Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொரண்டோவில் இசைஞானி அவர்கள்

Featured Replies

எங்களிடம் உள்ள திறமைகளையறியா ஒருவித நோயாழிகள் நாங்கள், இந்த நோயை அடுத்ததலைமுறையிலுள்ள மிகப்பெரிய அறிவாளிகளிடத்தில் வெற்றிகரமாக பரப்பியுள்ளோம், மொத்தத்தில் எல்லாம் வல்ல அடிமைக்கூட்டம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, Knowthyself said:

எங்களிடம் உள்ள திறமைகளையறியா ஒருவித நோயாழிகள் நாங்கள், இந்த நோயை அடுத்ததலைமுறையிலுள்ள மிகப்பெரிய அறிவாளிகளிடத்தில் வெற்றிகரமாக பரப்பியுள்ளோம், மொத்தத்தில் எல்லாம் வல்ல அடிமைக்கூட்டம்

அமெரிக்கா இங்கிலாந்து போல் உலகளாவிய மட்டத்தில் இசைத்துறையில் இந்தியாவும் முதலிடத்தில் நிற்கின்றது. அதற்காக அவர்களுக்கு மதிப்புற்குரிய வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎09‎/‎04‎/‎2018 at 5:38 PM, sivakumaran said:

சிட்னியில் இருக்கும் பலருக்கு தெரிந்த விடயம் இது. வேணுமென்றால் உங்களுக்கு தெரிந்தவர்களுடன் கேட்டுப்பாருங்கள்.  பணம் இளையராசாவிடம் இருப்பதினால் , அவரைப் பகைப்பதினால் பணத்தினை மீளப் பெற முடியாது என்பதினால் ஊடகங்களுக்கு கதிர் இச்செய்தியினைக் கொண்டு செல்லவில்லை. மிகுதி 25000ம் தந்து நிகழ்ச்சியை நடாத்த வேண்டும் என்று இளையராசாவின் வேண்டுகோல்.  கதிரின் இறப்பின் போது சிட்னியில் உள்ள இன்பத் தமிழ் வானொலியில் பலர் கருத்துக்களைப் பகிர்ந்தார்கள். தமிழக கலைஞர்களும் தங்களது கருத்துக்களைச் சொன்னார்கள்.  கங்க அமரன், தானும் எஸ் பி பியும் குறைந்த காசுக்கு கதிருக்காக நிகழ்ச்சியை செய்யத்தயாராக இருப்பதாகவும் சொன்னார்.  இப்பொழுது முகநூல் பெரிய ஊடகமாக இருக்கிறது. கதிருக்கு தெரிந்தவர்களில் சிலருக்கு 2000க்கு மேற்பட்ட தமிழக முகநூல் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த முகனூல் காரர்கள் பெரும்பாலும் புகழ்விரும்பிகள்.  அரசியல், இசை என எழுதி பலரை வாசகர்களாக வைத்திருக்கிறார்கள். தங்களுக்குப் பிடிக்காத கருத்துக்களை நீக்கிவிடுவார்கள். இளையராசாவைப் பற்றி புகழ்ந்து எழுதி வாசகர்களைக் கூட்டிக்கொண்டே இருக்கிறார்கள் . அவற்றைக் குறைக்க விரும்ப மாட்டார்கள்.  இந்திய இராணுவத்தினால் பாதிக்கப்பட்ட இவர்கள் , இந்திய இராணுவத்தினைப் பற்றியும் எழுத மாட்டார்கள் . எனென்றால் இந்திய வாசகர்களின் வெறுப்புக்களை ஏன் இழக்கவேண்டும் என்பதே.      இளையராசா சிட்னிக்கு இவ்வருடம்  வரவுள்ளதாக  இணையத்தில் செய்தி பார்த்தேன்.   இளையராசாவின் இசை எனக்குப்பிடிக்கும். ஆனால் இளையராசா என்ற மனிதரை  நான், எனது நண்பன் அமரர் கதிருக்காக  வெறுக்கிறேன். 

 

நீங்கள் கூட உங்கள் நண்பர் பணக் கஸ்த்தில் இருக்கும் போது உதவாமல் அவர் செத்த் பிறகு இதில வந்து புலம்பிக் கொண்டுi இருக்கீறீங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓ  இன்னுமா இதை பற்றி கதைத்துக் கொண்டு  இருக்கிறீர்கள் ???
இசுலாமிய  பிரியாணியாம் , ஹான்ஸ் சிம்மராம், தாய்லாந்தில் சில்மிஷமாம் ...

கலைஞன் போட்ட கருத்த  உள்வாங்கினால் இவ்ளோ தேவையே வராதே !!
அட போங்கப்பு... போய் பொழப்பாப் பாருங்க...    

  • கருத்துக்கள உறவுகள்

பலாப்பழம் வாங்கினால் அதன் சுளையை சாப்பிட வேணும். தோலை எறிந்துவிட வேண்டும். tw_blush:

அதே வகையில், இளையராஜா என்றால் அவரது இசையை ரசிக்கின்றார்கள். அவரது நற்குணங்களுக்காக அவரை யாரும் ரசிக்கவில்லை. tw_astonished:

இளையராஜாவும் பல வகைகளில் முன்பு ஏமாற்றப்பட்டவர். அந்த வகையில் முன்பணமாக அதிகம் கேட்டிருக்க வாய்ப்பு உள்ளது. எல்லாமே Demand and Supply அடிப்படையிலானது. அந்த நிபந்தனை சரிவராவிட்டால் ஒரு வியாபாரி அதற்கு ஒத்துக்கொள்ள கூடாது. வியாபாரத்தையும், சுய விருப்பங்களையும் கலந்து குழப்பிக்கொள்ளக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் தான் கொஞ்சம் கேட்டுப்  பாருங்களேன்...
மனிதர்களை குறிப்பாக தமிழர்களை; இசை எப்படியெல்லாம் கட்டுப்போட்டு வைத்திருக்கிறது!!
எப்படியெல்லாம் விதம் விதமாக ஆர்த்மார்தமாக இந்த இசையை உள் வாங்கியுள்ளார்.
ரூபுத் தேரா மஸ்தான ...பியாருமேரா தீவானா ..
மேரே சப்புநோக்கி ராணி கபூ ஆயேகித்து ...
இப்படியான ஹிந்தி பாட்டுக்களை மட்டுமே கேட்டு, உச்சிக்கொட்டி மெய்சிலிர்த்தவர்கள் 
தமிழ்மேல் , தமிழிசை மேல் காதல் கொள்ள வைத்தவர் இசைஞானி இளையராஜா.
அவர்  மனதில் எம் எஸ் விஸ்வநாதன் நிரந்தர இடத்தை பிடித்தும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

சசி கனகாலத்திற்குப் பிறகு ஒன்றரை மணித்தியாலம் ஒரே இடத்தில் என்னை இருத்தி வைத்துவிட்டீர்கள். நன்றி சசி இணைப்பிற்கு. இசை என்னை வசீகரிப்பதும் அதற்குள் நான் அடிமைப்படுவதும் மாற்ற முடியாது போல இருக்கு........

  • கருத்துக்கள உறவுகள்
அந்த இனிமையான இளமையான பொற்காலத்தை எம் கண்முன் எடுத்துவந்த சசிவர்ணனுக்கு நன்றிகள்.
அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே...இசை எம்மைக் கட்டிப்போட்டு விட்டது. பகிர்வுக்கு நன்றிகள்
  • கருத்துக்கள உறவுகள்

இசை  என்பது இதயங்களைக் கட்டிப்போடும் ஒரு வசிய மருந்து ..  இசையமைப்பாளர்களுக்கு இறைவன் கொடுத்த வரம் . இசை யமைப்பாளரும் ஒரு மனிதன். குறை நிறை தன்னிடம் திறமை உள்ளது என்ற கர்வம் ..ஆணவம்  இருக்கலாம் . அதற்காக இசையை  குறைத்து எடை   போடக்   கூடாது.  எங்கு திறமை உள்ளது அதை மதிக்க கற்றுக்கொள்ளனும். இளைய ராஜா இசையில் ஒரு ஞானி . அவருக்குள் இறைவனின் அற்புதம் வெளிப்படுகிறது.  நீண்ட நாட்களுக்குப்பின் நல்ல  இனிய நினைவுகளை மீட்க  தந்த பகிர்வுக்கு நன்றி சசி வர்ணம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இளையராஜாவின் அடிமட்ட ரசிகன்.
தமிழக உறவுகள் ரசிக்க தவறியதை ஈழத்தமிழன் ரசித்து உச்சத்திற்கே கொண்டு சென்ற  படமும் பாடலும்....

 

ஆகா! அந்த வின்சர் தியேட்டரும்....நிறம் மாறத பூக்களும்...அந்த சென்ற் வாசமும்....கொள்ளை போகுதே....:love:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெல்பொட்டமும் சுருட்டி விட்ட தலை முடியும்....:cool:

On 15.4.2018 at 10:40 AM, Sasi_varnam said:

 

பல காலமாக நீயா நானா பார்ப்பதை நிறுத்தியிருந்தேன் - மறுபடியும் பார்த்தேன் இன்று

பகிர்வுக்கு நன்றி சசி.

உங்களுக்காக நன்றியுடன் சில பாடல்கள்

இளசு எப்பவுமே எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத மாற்றங்களை பாடலில் செய்வார். அப்படியே இந்த பாடல்களிலும் ஆண்/பெண் குரலை எதிர்பாராமல் சேர்த்திருப்பார் - அழகாக இருக்கும். இது ஒருகுட்டி உதாரணம்தான்.

இளசு தண்ணி அடிச்சா என்ன பிரியாணி திண்டா நமக்கென்ன - அற்புதமான அவரின் பாடல்களை மட்டுமே ரசிப்போம்.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

பல காலமாக நீயா நானா பார்ப்பதை நிறுத்தியிருந்தேன் - மறுபடியும் பார்த்தேன் இன்று

பகிர்வுக்கு நன்றி சசி.

உங்களுக்காக நன்றியுடன் சில பாடல்கள்

இளசு எப்பவுமே எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத மாற்றங்களை பாடலில் செய்வார். அப்படியே இந்த பாடல்களிலும் ஆண்/பெண் குரலை எதிர்பாராமல் சேர்த்திருப்பார் - அழகாக இருக்கும். இது ஒருகுட்டி உதாரணம்தான்.

இளசு தண்ணி அடிச்சா என்ன பிரியாணி திண்டா நமக்கென்ன - அற்புதமான அவரின் பாடல்களை மட்டுமே ரசிப்போம்.

 

 

 

 

ஜீவன் சிவாவை நிறைய நாட்களின் பின்னர் மனதுக்கு இதமான  திரி ஒன்றில் சந்திப்பதில் மகிழ்ச்சி!!
நலமாய் இருப்பீர்கள் என நம்புகிறேன். !!   

வல்வை அக்கா, கண்மணி அக்கா, நிலாமதி அக்கா எல்லோரையும் ஒருசேர இங்கே பார்ப்பதில் மகிழ்ச்சி.
கூடிய சீக்கிரம் கோடைக்கால ஒன்றுகூடலில் சந்திக்கலாம். தமிழ் இசை பற்றி நாங்களும் சேர்ந்து ஒரு நீயா? நானா? போல தர்க்கங்கள் இல்லாத மனம் திறந்து உரையாடலாம்.. :100_pray:
குசா அண்ணா உங்கள் அருமையான பதிவுக்கும் நன்றி.. :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

நான் இளையராஜாவின் அடிமட்ட ரசிகன்.
தமிழக உறவுகள் ரசிக்க தவறியதை ஈழத்தமிழன் ரசித்து உச்சத்திற்கே கொண்டு சென்ற  படமும் பாடலும்....

 

ஆகா! அந்த வின்சர் தியேட்டரும்....நிறம் மாறத பூக்களும்...அந்த சென்ற் வாசமும்....கொள்ளை போகுதே....:love:

நிறம் மாறாத பூக்கள் வின்சர் அரங்கில் ஓடிய வருடம் தான் எங்கள் புது வீட்டு "குடிப்பூரள்" நடந்தது. எங்கள் அப்பாவுக்கு  இந்த படத்தின் டைட்டில் கொஞ்சம் தகராரு எப்பவும் அதை "பூக்காத பூக்கள்" படம் என்று தான் சொல்லுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

சசி கொண்டு வந்து இணைக்கும் போது கூட பார்க்கவில்லை, 3 அக்காமாரும் எழுதினத்தைப் பார்த்த பிறகு தான் பார்த்தேன்...அழுகையே வந்து விட்ட்து.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.