Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் இல்லை! சுமந்திரன் அதிரடி கருத்து

Featured Replies

அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் இல்லை! சுமந்திரன் அதிரடி கருத்து

 

அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

2 வருடங்கள் மட்டுமே வடமாகாண முதலமைச்சராக இருப்பேன் எனவும், பின்னர் மாவை சேனாதிராஜா முதலமைச்சராக இருக்கவேண்டும் என்றும் கூறிய ஒருவரை 5 வருடங்கள் முதலமைச்சராக இருக்க வைத்திருக்கிறோம். இனியும் அவரை கஸ்டப்படுத்த கூடாது.

 

 

ஆகவே அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டர் என கூறியுள்ளார்.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை 2013ஆம் ஆண்டு முதலமைச்சர் வேட்பாளராக அழைத்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு முதலமைச்சர் ஒரு நிபந்தனையை விதித்திருந்தார்.

2 வருடங்கள் மட்டுமே முதலமைச்சராக இருப்பேன் என்றும் அதன் பின்னர் தம்பி மாவை சேனாதிராஜா முதலமைச்சராக இருக்கவேண்டும் என்பதே அந்த நிபந்தனை என்றும் அவர் கூறியுள்ளார்.

பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேசிய போது 2 வருடங்கள் என கூறுவது பொருத்தமற்றது என கூறியிருந்தார்.

இதற்கு நான் மட்டுமல்ல பலர் சாட்சியாக இருக்கிறார்கள். இவ்வாறு 2 வருடங்கள் மட்டுமே முதலமைச்சராக இருப்பேன் என கூறிய ஒருவரை 5 வருடங்கள் முதலமைச்சராக இருக்க வைத்து விட்டோம்.

அவரை இனியும் கஸ்டப்படுத்த கூடாது. ஆகவேதான் அடுத்த மாகாணசபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக சீ.வி.விக்னேஷ்வரன் நிறுத்தப்படமாட்டார் என நான் கூறியது உண்மையே என சுமந்திரன் கூறியுள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/179247?ref=home-latest

 

  • தொடங்கியவர்

 

 

கூட்டமைப்பின் அழுத்தம் தொடரும்: சுமந்திரன் திட்டவட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

 

 

மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது மகாவலி அதிகாரசபையின் அமைச்சராக உள்ள ஜனாதிபதி மேற்படி திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெற இருந்த மகாவலி அதிகாரசபையின் கூட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/179254?ref=home-latest

 
  • கருத்துக்கள உறவுகள்

 இந்த முதலமைச்சர் கதிரைக்கு  சுமந்திரனும்,  மாவையும்  அடிக்கிற  லூட்டி தாங்க முடியவில்லை. கரட்டி ஓணான்கள், காவடி தூக்கிகளெல்லாம்  முதல்வர் கதிரைக்கு பொருத்தந்தானா? யாராவது எடுத்துச் சொல்லுங்கப்பா.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நவீனன் said:

அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் இல்லை! சுமந்திரன் அதிரடி கருத்து

அடுத்த மாகாணசபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக சீ.வி.விக்னேஷ்வரன் நிறுத்தப்படமாட்டார்.

சுமந்திரனின் அதிரடிக் கருத்தையும், கூற்றையும் மறுப்பதற்கில்லை. சீ.வி. விக்னேசுவரன் அவர்களை நிறுத்தினாலும்...! அதனை அவர் ஏற்றுக்கொள்வாரோ தெரியவில்லை.!! அவர் நின்றாலும், நிற்காவிட்டாலும்... சுமந்திரன் என்னும் பெயரில் உள்ள சுரன் என்ற மூன்றெழுத்தும் இனிமேல் தமிழ் மக்களிடம் நிலைத்து நிற்காது என்பதில் சந்தேகம் இல்லை.!!    

வடமாகாண முதலமைச்சர் யார் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள். அதை எந்தவொரு கட்சியைச் சேர்ந்த கைக்கூலிகளோ, ஒட்டுண்ணிகளோ முடிவுசெய்ய முடியாது! 

33 minutes ago, போல் said:

வடமாகாண முதலமைச்சர் யார் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள். அதை எந்தவொரு கட்சியைச் சேர்ந்த கைக்கூலிகளோ, ஒட்டுண்ணிகளோ முடிவுசெய்ய முடியாது! 

இன நல்லினக்க்ம் என்ற பெயரில் முஸ்லிம் ஒருவருக்கு வழங்கினாலும் வழங்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

பக்கா பிளான் பண்ணிட்டாங்கள் போல் 

  • கருத்துக்கள உறவுகள்
விக்கிக்கு திரும்பவும் பதவி   கொடுத்தால் போல என்னத்தை கிழிக்கப் போறார்.<_<
 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:
விக்கிக்கு திரும்பவும் பதவி   கொடுத்தால் போல என்னத்தை கிழிக்கப் போறார்.<_<
 
 

நம்ம கட்சி எதிர்கட்சியாக இருந்தே ஒரு கடதாசியும் கிழிக்கலதானே ஓடியாந்ததற்கு நன்றி  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் அரசில் பிரதி அமைச்சராக இருந்தவர் என்னத்தை கிழித்தார்? 

1 hour ago, ரதி said:
விக்கிக்கு திரும்பவும் பதவி   கொடுத்தால் போல என்னத்தை கிழிக்கப் போறார்.<_<
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதில என்ன அதிரடி இருக்குது. உவரின் அங்கலாய்ப்பு இது. உவருக்கும் ஐயா விக்னேஸவரனுக்கும் இடையே முரண்பாடு கிட்டத்தட்ட 5 வருசமாகவே தான் இருக்குது.

பிரச்சனை என்ன என்றால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி தான் தான் என்ற தோறணையில்.. சுமந்திரன் என்ற அரைவேக்காடு அரசியல் செய்ய வெளிக்கிட்டிருப்பது தான். இது தமிழ் மக்களைப் பொறுத்த வரை எச்சரிக்கையோடு பார்க்கப்பட வேண்டிய விடயம். கடுமையான கண்காணிப்புக்குள் இவர் வைக்கப்பட வேண்டிய விடயம். tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நிராகரிப்பின் மூலம் முதலமைச்சரை நிர்மூலமாக்கி விடலாம் என்று இந்தக் கொள்ளைக் கூட்டம் கனவு காண்கிறது. ஆனால் இந்த கூட்டமைப்பு என்கிற தடைக்கல்லில் இருந்து  விலகி சுதந்திரமாக மக்களுக்கு சேவை செய்ய முடியும். உண்மை, நீதி, நேர்மையாய் வாழ்பவர்களுக்கு உலகில் எந்த இடம் என்பதற்கு முதலமைச்சர் தக்க எடுத்துக்காட்டு.இவர்கள் அளவுக்கு முதலமைச்சர் கீழிறங்காமல் இந்தக்கொள்ளைக் கூட்டத்தை விட்டு விலகி இருப்பதே முதல்வருக்கு மரியாதை. அவர் எந்த நல்ல முயற்சியை எடுத்தாலும் ஊளையிட்டு தடைகளை ஏற்படுத்தி, அவரை விமர்சித்து தனிமைப்படுத்தி தங்களையும், தங்களது ஊழல்களையும் மூடி மறைப்பதிலேயே காலத்தை செலவழிக்குதுகள். புழுக்களுக்கு சாக்கடையை விட்டு வரவோ, மாற்றி அமைப்பதிலோ விருப்பம் இருக்காது.  அவர்களுக்கு மக்களையும், மானத்தையும் விற்றுப் பிழைக்க  வேறு கதியில்லை. தான் எந்த குப்பனை கொண்டு வந்தாலும் மக்கள் வாக்குப் போடுவார்கள் என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டுது தறுதலை. முதல்வர் அரசியலுக்கு வரமுதல் என்னத்தை வெட்டிக் கிழிச்சுப் போட்டினம்? இனி அவரை விரட்டிப்போட்டு என்னத்தை பெரிசாய் கிழிக்கப் போகினம்?? தங்கட பேராசை  மூட்டையையும், வயித்தையும் நிரப்ப சிங்களவனிட்டை கைக்கூலி வாங்க முடியும்.  

  • கருத்துக்கள உறவுகள்

2013 வடக்குத் தேர்தல் சமயத்தில், சம்பந்தன் ஐயா இவ்வாறு சொன்னார் - 

“சாதாரணமான ஒரு மாகாண சபை எனின், முதலமைச்சர் வேட்பாளராக நான் சேனாதியை நிறுத்தியிருக்கலாம்… ஆனால், வடக்கு மாகாண சபை முக்கியத்துவம் மிக்கது. அதற்கு முதலமைச்சராக வருகின்றவர் சர்வதேசத் தலைவர்களோடு சமதையாக உட்கார்ந்து பேச வல்லவராக இருக்க வேண்டும்.

உண்மையில், முதலமைச்சர் வேட்பாளராக நான் சுமந்திரனையே நிறுத்த விரும்பினேன்... ஆனால், அரசியலுக்குப் புதியவராக அவர் இருப்பதனால், அவர் இன்னும் சற்று அனுபவத்தினைப் பெறவேண்டியுள்ளது. அதுவரையில், அரசியல் தீர்வினத் தேடும் முயற்சிகளில் அவர் எனக்கு உறுதுணையாக இருப்பார்.”

  • கருத்துக்கள உறவுகள்

பதவி ஆசை பிடித்த மாவை, சுமந்திரன் ஒரு உண்மையை புரிந்து கொள்ளவேண்டும். மாவை முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமானவராக இருந்திருந்தால் விக்கினேஸ்வரனை ஏன் அரசியலுக்கு கூட்டி வந்தீர்கள்? மாவையர் தகுதி உள்ளவராக இருக்க மக்கள் எப்படி முதல்வரை நிராகரிக்காமல்அவருக்கு   கூடுதல் வாக்களித்தார்கள்? அப்போ கட்சியை சரிவில் இருந்து  நிமிர வைக்க தேவைப்பட்டவர் இப்போ நிராகரிக்கப்படுகிறார். காரணம்  பதவி ஆசை, சுகம். சுமந்திரனில பழியைப்போட்டு விட்டு காத்திருக்குது மாவை, பதவி அனுபவிக்க. இந்த சாதாரண உண்மையை விளங்கிக்கொள்ள முடியாத மாவை இந்தப்பதவியை அடைய மக்கள்  சம்மதிப்பார்களா? ஈ.பி. டி பிக்கு வாக்களிக்க விரும்பாமல் இவர்களுக்கு வாக்குப் போட்ட  மக்களை ஈ. பி. டி. பிகே வாக்குப்போடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அல்லது புது கட்சியை மக்கள் தெரிவு செய்ய தூண்டி இருக்கிறது இவர்களின் செயற்பாடு. இதை ராஜதந்திரம் என்று மாவையும், சம்பந்தனும், சுமந்திரனும் மாறி, மாறி தங்கள் தோளை தட்டிக்கொள்ள வேண்டியதுதான். ஈ. பி. டி. பியின் ஆதரவு வேண்டி ஆட்சி அமைக்கிற அளவுக்கு தரங்கெட்டு நிக்குதுகள். அதில் இருந்து விடுபடுகிற வழியைப் பாக்காமல்  சவால் விடுகுதுகள் . அற நனைஞ்சவனுக்கு கூதல் என்ன, காய்ச்சல் என்ன? எல்லாம் ஒன்றுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.