Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலநாள் திருட்டில் ஈடுபட்ட நபர் 61 ஆடுகளுடன் சிக்கினார்

Featured Replies

பலநாள் திருட்டில் ஈடுபட்ட நபர் 61  ஆடுகளுடன் சிக்கினார்

 

கிளிநொச்சிப்பகுதியிலிருந்து ஆவணங்கள் அற்ற முறையில் ஆடுகளை கடத்திச் சென்றபோது வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் வைத்து இன்று அதிகாலை 61 ஆடுகளுடன் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

us-foreign-affairs-minister-mike.jpg

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

 

கிளிநொச்சியிலிருந்து எவ்வித ஆவணங்களும் அற்ற நிலையில் அளவிற்கு அதிகமாக 61 ஆடுகளை மீன்கள் எடுத்துச் செல்லப்படும் கூலர் ரக வாகனத்தில் கடத்திச் சென்றபோது வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் வைத்து பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.

DSC_1041.JPG

இந்நிலையில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஆடுகளுடன் குறித்த வாகனச்சாரதியையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் புத்தளத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரென பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆடுகளுடுன் தன்னையும் விடுதலைசெய்யுமாறு குறித்த சாரதி தமக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

DSC_1036.JPG

எனினும் இவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளை பல நாட்களாக மேற்கொண்டு வந்துள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/33472

நம்ம ஶ்ரீறீதரன் பா.உ தப்பீட்டார் தானே. நன்றி கடவுளே.

ஆட்டை போட்டவன் எல்லாம் பிடிபடுகிறான் ஆட்டையை போட்டவன் எல்லாம் தப்புகிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

களவு செய்தால் பிடிபட கூடாது 
அப்படி பிடிபட்டால்  ..... இவ்வாறு 
பெரிய செய்தி வாற மாதிரி பிடி படணும்.

  • கருத்துக்கள உறவுகள்

வறுமை தாண்டவம் ஆடும் கிளிநொச்சியில் பலபேரின் பெரிய மூலதனமே கால்நடைகள்தான்.

61 ஆடுகள் காணாமல் போகும்வரை யாரும் பொலிஸில் புகார் செய்யவில்லையா?

அல்லது பிடிபட்டவர் ஒரே இரவில் இவ்வளவு ஆட்டையும் பிடிக்ககூடிய தொழில் நுட்ப வல்லுனரோ தெரியல.

லஞ்சம் கொடுத்தும் வாங்காத இலங்கை பொலிஸ்ச நினைச்சால் ஒரே குழப்பமாயிருக்கு.

ஒருவேளை ஆடு கடத்தியவருக்கும் காவல்துறைக்கும் முன்விரோதம் இருந்திருக்குமோ?

உரியவர்களிடம் ஒப்படைச்சுவிடுங்க ஐயா , அது வெறும் ஆடுகள் அல்ல,

நீங்கள் போனாபோகுது எண்டு மிச்சம் மீதியாய் உயிரோட விட்டு வைச்சிருக்கிற பலபேரோட வயித்து பிழைப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடுகள் களவு போனதாக செய்தியில்லை.....ஒவ்வொரு ஆட்டுக்கும் வாங்கின ரிசீட் கேக்கினம் போலை கிடக்கு...:rolleyes:

யாழில் ஒரு நோஞ்சான் கிடாய் ஆட்டின் விலை 30ஆயிரத்துக்கு மேல் போகும் .

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நவீனன் said:

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் புத்தளத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரென பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்பட்டிருந்தால் இப்படி தலையங்கத்துடன் செய்தி வந்திருக்கும்....

ஆடு கட‌த்திய யாழ்ப்பாண தமிழர் கைதுtw_tounge:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

ஆடுகள் களவு போனதாக செய்தியில்லை.....ஒவ்வொரு ஆட்டுக்கும் வாங்கின ரிசீட் கேக்கினம் போலை கிடக்கு...:rolleyes:

கிட்டத்தட்ட இது தான் உண்மை.அங்கு உள்ள ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு கால் நடைகளை கொன்டு செல்வதென்றால் கால்நடை அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டம் தான் இப்படி கடத்தலுக்கான காரனம்.அப்படி அனுமதி பெறுவதென்றால் விற்பவர் தனது கால்நடைகளுக்கு ள தடுப்ப ஊசிகள் போட்டதற்கான அத்தாட்டசிகள் காட்ட வேண்டும்.மற்றும் கால்நடைகளை கொண்டு செல்பவர் அந்த வாணத்தின் இட வசதி உட்பட சில விடையங்களை நிருபிக்க வேண்டும்.இரண்டு முன்று ஆடுகள் வளர்க்கும் ஒருவர் இப்படியான மருத்தவங்கள் செய்வதில்லை.இந்த மாதிரிச்சட்டம் கால் நடைகளின் தொற்று நோய்கள் மற்ற மாவட்டங்களக்கு பரவாமல் இருப்தற்காக என்ற நல்ல நோக்கம் இருந்தாலும் பலருக்கு தங்கள் ஆடுகளை நல்ல விலைக்கு விற்பதற்கு சிரமமாக இருக்கும்.அதனால்தான் இந்தக்கடத்தல் முறையை நாடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎15‎/‎2018 at 10:20 AM, நவீனன் said:

பலநாள் திருட்டில் ஈடுபட்ட நபர் 61  ஆடுகளுடன் சிக்கினார்

DSC_1036.JPG

கள்வனைப் படம்பிடித்துக் காட்டி அவன் இனத்தைக் கேவலப்படுத்தாமல், ஆட்டின் பசிக்குக் குழை போடும் காருண்ய மூர்த்தியான காவற்துறையைப் படம்பிடித்துப் போட்ட வீரகேசரிக்கு ஒரு பாராட்டு. :grin:Bildergebnis für வாழ்த்து

  

Edited by Paanch

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.