Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் அதிகரிக்கும் வன்முறைக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவது பெரிய விடயமல்ல: முதலமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Jude said:

நீங்கள் எழுதியது எனது மூதாதையரின் மதமாற்றம் பற்றி. இதோ நீங்கள் எழுதியது:

எங்கள் மூதாதையரும் தமிழ் தான் பேசினார்கள். மொழி மாறவில்லை. எங்கள் மூதாதையர் மட்டுமல்ல உங்கள் மூதாதையரும் அற்ப சலுகைகுக்காக மதம் மாறியவர்கள் என்ற அடிப்படை அறிவில்லாதவர் நீங்களே.

நான் மிகத்தெளிவாகத்தானே எழுதியிருக்கிறேன் நாங்கள் அன்றிலிருந்து இன்றுவரை சிவனையே முதற்கடவுளாக வழிபடுகிறோம் என்று. விளங்கவில்லையா அல்லது விளங்காத மாதிரி நடிக்கிறீர்களா?

  • Replies 78
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Eppothum Thamizhan said:

நான் மிகத்தெளிவாகத்தானே எழுதியிருக்கிறேன் நாங்கள் அன்றிலிருந்து இன்றுவரை சிவனையே முதற்கடவுளாக வழிபடுகிறோம் என்று. விளங்கவில்லையா அல்லது விளங்காத மாதிரி நடிக்கிறீர்களா?

மற்றவர்களை முட்டாள்களாக நினைத்துக்கொண்டு எழுதக்கூடாது. பிள்ளையார் உங்கள் கடவுள் இல்லையா? பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

உங்கள் ஐயர்கள் உங்கள் பூசைகளை ஏன் சமஸ்கிரதத்தில்  செய்கிறார்கள்? இது வட இந்தியரின் மதம் என்பதால் தானே? உங்கள் மூதாதையர் மதம் மாறியதை மறைக்க நீங்கள் இந்த கேள்விகளுக்கு பதில் தராமல் சிவனை பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள். 

உங்களை தாழ்ந்த சாதி என்றும் பிராமனணனை உயர் சாதி என்றும் உங்கள் சமயம் சொல்லவில்லையா? நேர்மை இருந்தால் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

உங்கள் மதம் அந்நிய மதம். உங்கள் மூதாதையர் தங்கள் மதங்களை கைவிட்டு பிள்ளையாரையும், சரஸ்வதியையும் சமஸ்கிரத்ததையும் சாதி அடக்குமுறையையும் அற்ப சலுகைகளுக்காக ஏற்றுக்கொண்டதை நீங்கள் என்ன தான் தலை கீழாக நின்றாலும் மறைக்க முடியாது. மறுக்கவும் முடியாது. 

தென்னிந்திய தமிழர்களுக்கு வட இந்திய கடவுளான சிவனும் பார்வதியும் எப்படி கடவுலானார்கள் என்று கேட்கும் பகுத்தறிவு கூட இல்லாத உங்களுக்கு எப்படி தமிழர்கள் பௌத்தர்களாகவும் சமணர்களாகவும் இருந்து பின்னர் மதம் மாறியது புரியபோகிறது?

  1. தமிழ் மொழியின் ஐம்பெரும் காப்பியங்கள் எவை தெரியுமா? அவற்றில் தமிழரின் மதங்களாக அறியப்படுபவை எவை?
  2. தொல்காப்பிய காலத்து தமிழரின் மதம் என்ன ?
  3. பின்னர் தமிழர் எப்படி மதம் மாறினார்கள்?

கிளிப்பிள்ளை போல நாங்கள் அன்று தொட்டு சிவனை வழிபடுகிறோம் என்று வட இந்திய கடவுளையும், அந்த கடவுளுக்கு முன் உங்கள் தீண்டத்தகாத நிலையையும் திரும்ப திரும்ப பறை சாற்றாமல், உங்கள் முன்னோர்களின் வரலாற்றை அறியப்பாருங்கள். உங்கள் இனம் பற்றிய  அடிப்படை அறிவு வரும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Jude said:

மற்றவர்களை முட்டாள்களாக நினைத்துக்கொண்டு எழுதக்கூடாது. பிள்ளையார் உங்கள் கடவுள் இல்லையா? பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

உங்கள் ஐயர்கள் உங்கள் பூசைகளை ஏன் சமஸ்கிரதத்தில்  செய்கிறார்கள்? இது வட இந்தியரின் மதம் என்பதால் தானே? உங்கள் மூதாதையர் மதம் மாறியதை மறைக்க நீங்கள் இந்த கேள்விகளுக்கு பதில் தராமல் சிவனை பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள். 

உங்களை தாழ்ந்த சாதி என்றும் பிராமனணனை உயர் சாதி என்றும் உங்கள் சமயம் சொல்லவில்லையா? நேர்மை இருந்தால் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

உங்கள் மதம் அந்நிய மதம். உங்கள் மூதாதையர் தங்கள் மதங்களை கைவிட்டு பிள்ளையாரையும், சரஸ்வதியையும் சமஸ்கிரத்ததையும் சாதி அடக்குமுறையையும் அற்ப சலுகைகளுக்காக ஏற்றுக்கொண்டதை நீங்கள் என்ன தான் தலை கீழாக நின்றாலும் மறைக்க முடியாது. மறுக்கவும் முடியாது. 

தென்னிந்திய தமிழர்களுக்கு வட இந்திய கடவுளான சிவனும் பார்வதியும் எப்படி கடவுலானார்கள் என்று கேட்கும் பகுத்தறிவு கூட இல்லாத உங்களுக்கு எப்படி தமிழர்கள் பௌத்தர்களாகவும் சமணர்களாகவும் இருந்து பின்னர் மதம் மாறியது புரியபோகிறது?

  1. தமிழ் மொழியின் ஐம்பெரும் காப்பியங்கள் எவை தெரியுமா? அவற்றில் தமிழரின் மதங்களாக அறியப்படுபவை எவை?
  2. தொல்காப்பிய காலத்து தமிழரின் மதம் என்ன ?
  3. பின்னர் தமிழர் எப்படி மதம் மாறினார்கள்?

கிளிப்பிள்ளை போல நாங்கள் அன்று தொட்டு சிவனை வழிபடுகிறோம் என்று வட இந்திய கடவுளையும், அந்த கடவுளுக்கு முன் உங்கள் தீண்டத்தகாத நிலையையும் திரும்ப திரும்ப பறை சாற்றாமல், உங்கள் முன்னோர்களின் வரலாற்றை அறியப்பாருங்கள். உங்கள் இனம் பற்றிய  அடிப்படை அறிவு வரும்.

 

 

எங்கள் முன்னோர்களும் உங்கள் முன்னோர்களும் போர்த்துக்கீசர் வருகைக்கு முன் யாரை வழிபாட்டிக்கொண்டிருந்தார்கள். எவனும் தான் மற்ற ஒருவனுக்கு அடிமையாக கீழ் சாதியாக இருக்க மதம் மாற மாட்டான். இந்து மதம் கஷ்டத்தில் இருக்கும் யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததை நான் எனது வாழ்நாளில் பார்க்கவும் இல்லை கேட்டதும் இல்லை ஆனால் கிறீஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இன்றும் அதை செய்வதை கண்முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Eppothum Thamizhan said:

எங்கள் முன்னோர்களும் உங்கள் முன்னோர்களும் போர்த்துக்கீசர் வருகைக்கு முன் யாரை வழிபாட்டிக்கொண்டிருந்தார்கள். 

எங்கள் முன்னோர்களும் உங்கள் முன்னோர்களும் வட இந்திய பிராமணர் வருகைக்கு முன் யாரை வழிபாட்டிக்கொண்டிருந்தார்கள்? உங்களுக்கு உங்கள் இனத்தில் வரலாறு தெரியவில்லையே?

55 minutes ago, Eppothum Thamizhan said:

எவனும் தான் மற்ற ஒருவனுக்கு அடிமையாக கீழ் சாதியாக இருக்க மதம் மாற மாட்டான். 

உங்கள் முன்னோர்கள் அற்ப சலுகைகளுக்காக  மதம் மாறி கீழ் சாதியாக மாறி இருக்கிறார்களே? அதனால் தானே பிராமணன் உயர்ந்த சாதியாகவும் நீங்கள் தீண்டத் தகாத சாதியாகவும் இந்துமத முறைப்படி அமைந்து இருக்கிறீர்கள்?

55 minutes ago, Eppothum Thamizhan said:

இந்து மதம் கஷ்டத்தில் இருக்கும் யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததை நான் எனது வாழ்நாளில் பார்க்கவும் இல்லை கேட்டதும் இல்லை. 

இந்து மதம் சாதி அடக்குமுறை மூலம் இந்துக்களை  கூலிகளாக  கஷ்டத்தில் வாழ கட்டாயப்படுத்தி இருப்பதை இந்து நாடுகளான இந்தியாவிலும் இலங்கையிலும் தினம் தினம் பார்த்து கொண்டு தானே இருக்கிறோம்? இதை பார்க்கும் எவரும் இந்து மதத்தை விட்டு ஓடுவார்களே தவிர இந்து சமய பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டார்கள்.

55 minutes ago, Eppothum Thamizhan said:

ஆனால் கிறீஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இன்றும் அதை செய்வதை கண்முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

எங்கே பார்க்கிறீர்கள்? கனவிலா? இது இந்து மத வெறியர்களின் மத வெறி கட்டுக்கதை. இந்து மத வெறியர்களின் அடக்குமுறை தாங்காமல் ஏழைகள்  கிறீஸ்தவர்களாகவும்  இஸ்லாமியர்களாகவும் பௌத்தர்களாகவும்  மாறி தப்பிக்கொள்வதை கண்டு அதானால் தமக்கு சேவகம் செய்ய கஷ்டப்பட்ட ஏழைகள் காணாமல் போய்விடும் என்று கருதி இந்து மத வெறியர்கள் கட்டிவிட்ட கட்டு கதைகளே "கட்டாய மத மாற்றம்" பற்றிய கதைகள். கிறீஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தமது மதத்தில் சேர்பவர்களுக்கு பெருமளவில் உதவி செய்கிறார்கள். அவர்களின் ஏழ்மையை போக்குகிறார்கள். இந்து மத வெறியர்கள் தான் வன்முறை மூலம் ஏழை இந்துக்களை கூலிகளாக கட்டாயப்படுத்தி வைத்து இருக்கிறார்கள். 

 

 

 

 

 

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

எங்கள் முன்னோர்களும் உங்கள் முன்னோர்களும் வட இந்திய பிராமணர் வருகைக்கு முன் யாரை வழிபாட்டிக்கொண்டிருந்தார்கள்? உங்களுக்கு உங்கள் இனத்தில் வரலாறு தெரியவில்லையே? உங்கள் முன்னோர்கள் அற்ப சலுகைகளுக்காக  மதம் மாறி கீழ் சாதியாக மாறி இருக்கிறார்களே? அதனால் தானே பிராமணன் உயர்ந்த சாதியாகவும் நீங்கள் தீண்டத் தகாத சாதியாகவும் இந்துமத முறைப்படி அமைந்து இருக்கிறீர்கள்?

இந்திய பண்பாட்டையும் இலங்கை பண்பாட்டையும் என் நீங்கள் குழப்பிக்கொள்கிறீர்கள்.எமது ஊரில் பிராமணர்கள் கோவிலில் பூஜை செய்வதால் அவர்களுக்கு மரியாதை செய்கிறோமே தவிர அவர்களை உயர்ந்த ஜாதியென நாங்கள் சொல்வதே இல்லையே. கோவில் பரிபாலன சபையில் இருப்பவர்கள் பிராமணர்கள் அல்லவே. அவர்களது சொற்படிதான் பிராமணர்களே செயற்படவேண்டும். நான் இலங்கை தமிழ் சைவர்களை பற்றியே எழுதினேன்.

 

இந்து மதம் சாதி அடக்குமுறை மூலம் இந்துக்களை  கூலிகளாக  கஷ்டத்தில் வாழ கட்டாயப்படுத்தி இருப்பதை இந்து நாடுகளான இந்தியாவிலும் இலங்கையிலும் தினம் தினம் பார்த்து கொண்டு தானே இருக்கிறோம்? இதை பார்க்கும் எவரும் இந்து மதத்தை விட்டு ஓடுவார்களே தவிர இந்து சமய பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டார்கள்.

என் கிறீஸ்தவர்கள் பனை ஏறுவதையும், கூலித்தொழில் செய்வதையும் மீன் பிடிப்பதையும் நம்மூரில் நீங்கள் பார்க்கவில்லையா. அவர்களும் கீழ் ஜாதியா?.

 

எங்கே பார்க்கிறீர்கள்? கனவிலா?

 போய் வன்னியிலும் மன்னாரிலும் கேட்டுப்பாருங்கள் புரியும்.ஏன் நான் இப்போது வசிக்கும் தென்ஆப்பிரிக்காவிலும் தினம்தினம் பார்க்கிறேன்.

கிறீஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தமது மதத்தில் சேர்பவர்களுக்கு பெருமளவில் உதவி செய்கிறார்கள். அவர்களின் ஏழ்மையை போக்குகிறார்கள்.

இதைத்தான் எதிர்பார்த்தேன். இதைத்தான் தவிச்ச முயல் அடிப்பது என்பதும் அற்பங்களைக்காட்டி மதம் மாற்றம் செய்வதென்றும் குறிப்பிட்டேன்.அதைத்தான் உங்கள் முன்னோர்கள் செய்தார்கள். இப்போ நீங்கள் செய்கிறீர்கள்.இன்னொருவன் வந்து இதைவிட கூடிய சலுகைகள் தருகிறேன் என்றால் அவனது மதத்திற்கு மாறி விடுவீர்கள். இதற்க்கு வேறு  பெயர் இருக்கிறது!!!

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்


விக்கி பிடியாவில் வெள்ளாளர் தான் பிராமணரை விட உயர்ந்த சாதி என்று போட்டு இருக்காமே!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

கிறீஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தமது மதத்தில் சேர்பவர்களுக்கு பெருமளவில் உதவி செய்கிறார்கள். அவர்களின் ஏழ்மையை போக்குகிறார்கள்.

இதைத்தான் எதிர்பார்த்தேன். இதைத்தான் தவிச்ச முயல் அடிப்பது என்பதும் அற்பங்களைக்காட்டி மதம் மாற்றம் செய்வதென்றும் குறிப்பிட்டேன்.அதைத்தான் உங்கள் முன்னோர்கள் செய்தார்கள். இப்போ நீங்கள் செய்கிறீர்கள்.இன்னொருவன் வந்து இதைவிட கூடிய சலுகைகள் தருகிறேன் என்றால் அவனது மதத்திற்கு மாறி விடுவீர்கள். இதற்க்கு வேறு  பெயர் இருக்கிறது!!!

 

இந்துக்கள் ஏழைகளை கஷ்டப்படுத்தி அவர்களிடம் உள்ளதையும் பறிக்கிறார்கள். கிறீஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பௌத்தர்கள் அந்த ஏழைகளை அரவணைத்து அவர்களின் ஏழ்மையை போக்குகிறார்கள். ஏழை இந்துக்கள் மதம் மாறுவது அவர்களை உங்கள் அடக்குமுறையில் இருந்து பாதுகாக்கிறது. இந்துக்கள் உள்ளதையும் பறிக்கிறார்கள். கிறீஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பௌத்தர்கள்  உதவி செய்து ஏழ்மையை போக்குகிறார்கள். நீங்கள் ஏழைகளை மேலும் வாட்டி வேலை வாங்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுக்கு உதவுபவர்களும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அல்லது என்ன பெயர் சொல்லி அழைக்கிறீர்கள் என்பதை பற்றி அக்கறை படப் போவதில்லை. ஏழைகளும், அடக்குமுறைக்கு அடிமைப்பட்டவர்களும் இந்து சமயத்தை விட்டு ஓடுவது மேலும் அதிகரிக்குமே அன்றி என்றும் குறையப் போவதில்லை.

விடுதலை போராளிகளை உலகம் பயங்கரவாதிகள் என்று அழைத்தது. அவரவர் தமது பாதிப்புகளை வைத்து தான் மற்றவர்களை பெயர் கொண்டு அழைப்பார்கள். இந்து மதத்தவரையும் உலகம் இந்து மத செயற்பாடுகளை வைத்து அவதூறான பெயர் கொண்டு அழைக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:


விக்கி பிடியாவில் வெள்ளாளர் தான் பிராமணரை விட உயர்ந்த சாதி என்று போட்டு இருக்காமே!

விக்கிபீடியாவில் அப்படி எதுவும் இல்லை. ஆங்கில விக்கிபீடியாவிலும் இல்லை, தமிழ் வைக்கிபெடியாவிலும் இல்லை.
ஆனால் வெள்ளாளர் எப்படி மற்றவர்களை சாதி முறையால் அடக்கி ஆக்கிரமித்தார்கள் என்றும், விடுதலை புலிகள் காலத்தில் வெள்ளாளரின் இந்த ஆக்கிரம்ப்பு எப்படி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் இருக்கிறது.

https://ta.wikipedia.org/wiki/வேளாளர்

https://en.wikipedia.org/wiki/Vellalar

https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Vellalar

இந்து சமயத்தில் பிராமணரே தெய்வ குலம் -  மற்றவர் எல்லாம் கீழ்ச்சாதி - தீண்டப்படாதவர்கள்.

 

அவனவன் பிறப்பு சமயத்தை + சாதியை நிர்ணயிக்கின்றது.

அவனது நடத்தை + குணம் அவனை சமுதாயத்தில் நிர்ணயிக்கின்றது

அவனது நம்பிக்கை + சமயம் அவன் விருப்பம்

அதுக்குள் நீங்கள் ஏனப்பா குத்தி முறியிறீங்கள்  

கொஞ்சமாவது தனிமனித சுதந்திரத்தை அனுமதியுங்கப்பா 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/14/2018 at 7:53 PM, ஜீவன் சிவா said:

 

அவனது நம்பிக்கை + சமயம் அவன் விருப்பம்

 

தெய்வ நம்பிக்கையால் தாமே விரும்பி மதம் மாறுபவர்களை நான் விமர்சிக்கவில்லையே.கஷ்டத்திலும் விரக்தியின் விளிம்பில் இருக்கும் அப்பாவிகளை ஆசை வார்த்தை காட்டி அற்பங்களை கொடுத்து மதம் மாற்றுவத்தைத்தான் வேண்டாம் என்கிறேன்.இதைத்தான் சரணாகதிப்பிரியர் சரியென்று குத்தி முறிகிறார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7/13/2018 at 9:20 PM, Jude said:

இந்துக்கள் ஏழைகளை கஷ்டப்படுத்தி அவர்களிடம் உள்ளதையும் பறிக்கிறார்கள்.

கிறீஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பௌத்தர்கள் அந்த ஏழைகளை அரவணைத்து அவர்களின் ஏழ்மையை போக்குகிறார்கள்.

உங்கடை "போக்குகின்றார்கள்" எண்ட கணக்கை கூட்டி கழிச்சு பாத்தால்.....
இத்தடிக்கும் முஸ்லீம் கிறிஸ்தவ பௌத்த நாடுகளிலை பஞ்சமே இருக்கக்கூடாது எல்லோ???tw_tounge:

அது சரி நல்ல குணம் படைச்ச  பௌத்த நாட்டிலைதானே ஈழத்தமிழனும் வாழுறான்.....அங்கை ஏன் பௌத்த பிக்குகள் தமிழனுக்கு அடிப்படை உரிமைகள் குடுக்கவே கூடாது என்று போர்க்கொடி தூக்குகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

உங்கடை "போக்குகின்றார்கள்" எண்ட கணக்கை கூட்டி கழிச்சு பாத்தால்.....
இத்தடிக்கும் முஸ்லீம் கிறிஸ்தவ பௌத்த நாடுகளிலை பஞ்சமே இருக்கக்கூடாது எல்லோ???tw_tounge:

வறட்சியால் நாடு முழுவதும் பஞ்சம் வந்தால் யார் யாருக்கு எதை கொடுக்க முடியும்? மற்ற நாடுகளில் உள்ள முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், பௌiத்தர்களும் தாம் வாழும் நாடுகளில் உள்ள தமது மத மக்களிடம் சேர்க்க கூடியவற்றை சேர்த்து பஞ்சத்தால் வாடுபவர்களின் நாடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கிறார்கள். இப்படி உதவி செய்வதால் தான் "செஞ்சிலுவை" சங்கம் போன்றவை கிறிஸ்தவ சமயத்தின் பின்னணியில் உருவானது. இந்து சமயம் இப்படி மற்ற இந்துக்களுக்கு உதவ சர்வதேச அளவில் என்றும் முயற்சித்தது இல்லை. குறிப்பாக இலங்கையில் இந்துக்கள் கொல்லப்பட்ட போது அங்கே பல ஆண்டுகளாக செயற்பட்டட உதவி நிறுவனம் "செஞ்சிலுவை" சங்கம். இந்து அமைப்புகள் எவையும் ஏன் என்றும் கேட்கவில்லை - மாடு கொல்லப்படுவதை மட்டும் நிறுத்துமாறு போராட்டம் செய்கிறார்கள்.

அது சரி நல்ல குணம் படைச்ச  பௌத்த நாட்டிலைதானே ஈழத்தமிழனும் வாழுறான்.....அங்கை ஏன் பௌத்த பிக்குகள் தமிழனுக்கு அடிப்படை உரிமைகள் குடுக்கவே கூடாது என்று போர்க்கொடி தூக்குகின்றார்கள்?

பௌத்த மதத்தை பின்பற்றும்  ஈழத்தமிழருக்கு தேவையான எல்லா உதவிகளையும் பௌத்த பிக்குகள் செய்கிறார்களே? இந்துக்களுக்கு இந்து மத அமைப்புகளே உதவவில்லை - பிறகு ஏன் பௌத்தர்கள் உதவ வேண்டும்? இந்து மதம் உதவில்லை என்று தெரிந்தும் பிடிவாதமாக இந்துவாக இருப்பேன் அல்லது இறந்து போவேன் என்பவர்களை பற்றி மற்ற மதத்தவர் ஏன் கவலை பட வேண்டும்? இந்துக்கள் கேட்பது அடிப்படை உரிமைகள் அல்ல - பௌத்தர்களுக்கே இல்லாத விசேட உரிமைகள். அது பௌத்தர்களை பாதிக்கும் என்று பயந்து அவர்கள் எதிர்க்கிறார்கள்.

 

 

 

 

On 7/18/2018 at 9:38 PM, Eppothum Thamizhan said:

தெய்வ நம்பிக்கையால் தாமே விரும்பி மதம் மாறுபவர்களை நான் விமர்சிக்கவில்லையே.கஷ்டத்திலும் விரக்தியின் விளிம்பில் இருக்கும் அப்பாவிகளை ஆசை வார்த்தை காட்டி அற்பங்களை கொடுத்து மதம் மாற்றுவத்தைத்தான் வேண்டாம் என்கிறேன்.இதைத்தான் சரணாகதிப்பிரியர் சரியென்று குத்தி முறிகிறார்?

அவர்கள் ஆசை வார்த்தைகாட்டி ஏமாற்றவில்லை. அவர்களுக்கு அன்றாட தேவையான உணவு + உடை + இருப்பிடம் அத்தியாவசியமானது. அரசியல் வாதிகள் (இயக்கங்களும்தான்) ஆசை வார்த்தை காட்டி அலைக்கழித்து ஒன்றுமே இல்லாமல் வாழும் மக்களைப் பார்த்து இந்த கேள்வியை வெட்கமில்லாமல் கேட்கவும் ஒரு துணிவு வேண்டும் - பரவாயில்லை அந்த மக்களுக்கு இதை அறிந்து கொள்ள கணணியும் இல்லை அதற்க்கு வசதியும் இல்லை. உங்களுக்கு துணிவு இருக்கு 

கேளுங்கள் + கேட்டு கொண்டே இருங்கள் - அவர்களின் செவிகளுக்கு உங்கள் கேள்வி விழப்போவதே இல்லை.

இது எல்லாம் அவர்களுக்கு போய் சேராது என்ற நம்பிக்கைதானே உங்கள் துணிவு.

கேளுங்கள் ஆனால் உங்கள் சரணாகதிப்பிரியரிடம் கேளுங்கள்.

 

மக்கள் பாவம் - அவர்கள் பலிக்கடாக்கள்

 

 

உண்மையில் இந்து மத்ததை விட அதன் வரணாசிரம கோட்பாடுகளை பாதுகாப்பதிலியே பிராமணர்கள் அதீத சிரத்தை எடுக்கிறார்கள். கடவுள் சிவன் எல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம். அதில பல உண்மை வரலாறுகள் கூட மறைக்கப்பட்டுள்ளது.சிதம்பரம்  கோவிலுக்குள்  அனுமதிக்க மறுத்து நந்தன் என்ற தாழ்ததப்பட்ட  சாதி மனிதனை கோவில் வாசலில. தீயிட்டு எரித்து கொலை செய்துவிட்ட சம பவத்தை சிவனுடன் ஜோதியில் கலந்து விட்ட நந்தனார் என்று வரலாற்றை மாற்றிய கதையையும் நம்பியவர்கள் நாம்.

பெளத்த, சமண ஏடுகளை தீவைத்து கொளுத்திவிட்டு அனல் வாதத்தில வென்றதாகவும், ஆற்றில. வீசிவிட்டு புனல் வாதத்தில் வென்று இந்து சமயத்தை காத்ததாகவும் கதை விட்டதை அப்படியே நம்பி சமய பாடத்தில் படித்தவர்கள் நாம்  

அதே போல ஆங்கிலேய திருநெல்வேலி மாவட்ட கலெக்ரராக இருந்த ஆஷ் துரை அங்கு வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களை சமமாக  நடத்தியதை, அவர்களுக்கு  ஆதரவாக இருந்ததை பொறுக்காமல் ஆஷ் துரையை 1911 ஜூன் 17 ல் வாஞ்சி நாத ஐயர் என்ற பிராமணன் மணியாச்சி ரயில் நிலையத்தில்  சுட்டு கொன்றதை அப்படியே மாற்றி  ஆங்கில ஆட்சிக்கு எதிராக போரிட்ட வாஞ்சிநாதன் என்று அவனை தியாகி ஆக்கிய வரலாறும்  நடந்தது. வாஞ்சி நாதனின் சட்டைப் பையில் இருந்து எடுத்த கடிதத்தில் ஸனாதன தர்மத்தை காத்து கோ மாமிசம் தின்னும் ஆங்கிலேயரை விரட்டுவோம் என்று குறிப்பிட்டதே அதற்கு சான்று. 

இவ்வாறு  பல வரலாற்று புரட்டுக்கள் நடைபெற்றிருப்பதால் தமிழரின் முன்னோர் உண்மையில் என்ன சமயத்தை பின்பற்றினார்கள் என்பதை அறிவது கடினமான காரியம் தான். ஆனால் மக்களிடையே மேல் சாதி கீழ சாதி என்ற வர்ணாசிரம கோட்பாட்டை புகுத்தியது இந்து மதம் தான். 

 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
On 7/18/2018 at 11:13 PM, Jude said:

 

 இந்து மதம் உதவில்லை என்று தெரிந்தும் பிடிவாதமாக இந்துவாக இருப்பேன் அல்லது இறந்து போவேன் என்பவர்களை பற்றி மற்ற மதத்தவர் ஏன் கவலை பட வேண்டும்? 

 

வறுமையில் எம்மினம் உதவவில்லை என்றால் போராடி வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்காமல், உதவிக்கரம் நீட்டும் மாற்றினத்தானிடம் அற்பங்களுக்காக பெற்ற தாயையும் கட்டிய மனைவியையும் கூட  கூட்டிக்கொடுக்க தயாராக உள்ள உங்கள் தாராள மனப்பான்மை வியக்க வைக்கிறது!!

  • கருத்துக்கள உறவுகள்
On 7/20/2018 at 9:50 PM, ஜீவன் சிவா said:

அவர்கள் ஆசை வார்த்தைகாட்டி ஏமாற்றவில்லை. அவர்களுக்கு அன்றாட தேவையான உணவு + உடை + இருப்பிடம் அத்தியாவசியமானது. அரசியல் வாதிகள் (இயக்கங்களும்தான்) ஆசை வார்த்தை காட்டி அலைக்கழித்து ஒன்றுமே இல்லாமல் வாழும் மக்களைப் பார்த்து இந்த கேள்வியை வெட்கமில்லாமல் கேட்கவும் ஒரு துணிவு வேண்டும் -

 

 

எவ்வித பிரதி பலன்களையும் பார்க்காமல் செய்வதே உதவி. எனது மதத்திற்ற்கு மாறு உனக்கு எல்லா சலுகைகளும் உதவியும் செய்கிறேன் என்பது சுத்த ஏமாற்றுவேலை.இது கூட புரியவில்லை என்றால் தர்க்கிப்பதில் பயனில்லை.சலுகைக்காகவும் அற்பங்களுக்காகவும் மதம் மாறிக்கொண்டே இருங்கள்.இன்னும் கூடத்தருகிறேன் என்று வேறெல்லாம் கேட்பான் அதையும் கொடுத்து இன்பமாக இருங்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
On 7/19/2018 at 7:13 AM, Jude said:

வறட்சியால் நாடு முழுவதும் பஞ்சம் வந்தால் யார் யாருக்கு எதை கொடுக்க முடியும்? மற்ற நாடுகளில் உள்ள முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், பௌiத்தர்களும் தாம் வாழும் நாடுகளில் உள்ள தமது மத மக்களிடம் சேர்க்க கூடியவற்றை சேர்த்து பஞ்சத்தால் வாடுபவர்களின் நாடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கிறார்கள். இப்படி உதவி செய்வதால் தான் "செஞ்சிலுவை" சங்கம் போன்றவை கிறிஸ்தவ சமயத்தின் பின்னணியில் உருவானது. இந்து சமயம் இப்படி மற்ற இந்துக்களுக்கு உதவ சர்வதேச அளவில் என்றும் முயற்சித்தது இல்லை. குறிப்பாக இலங்கையில் இந்துக்கள் கொல்லப்பட்ட போது அங்கே பல ஆண்டுகளாக செயற்பட்டட உதவி நிறுவனம் "செஞ்சிலுவை" சங்கம். இந்து அமைப்புகள் எவையும் ஏன் என்றும் கேட்கவில்லை - மாடு கொல்லப்படுவதை மட்டும் நிறுத்துமாறு போராட்டம் செய்கிறார்கள்.

பௌத்த மதத்தை பின்பற்றும்  ஈழத்தமிழருக்கு தேவையான எல்லா உதவிகளையும் பௌத்த பிக்குகள் செய்கிறார்களே? இந்துக்களுக்கு இந்து மத அமைப்புகளே உதவவில்லை - பிறகு ஏன் பௌத்தர்கள் உதவ வேண்டும்? இந்து மதம் உதவில்லை என்று தெரிந்தும் பிடிவாதமாக இந்துவாக இருப்பேன் அல்லது இறந்து போவேன் என்பவர்களை பற்றி மற்ற மதத்தவர் ஏன் கவலை பட வேண்டும்? இந்துக்கள் கேட்பது அடிப்படை உரிமைகள் அல்ல - பௌத்தர்களுக்கே இல்லாத விசேட உரிமைகள். அது பௌத்தர்களை பாதிக்கும் என்று பயந்து அவர்கள் எதிர்க்கிறார்கள்.

 

 

 

 

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....இதுக்கு விளக்கம் கொடுத்து விவாதித்து ......

2 hours ago, Eppothum Thamizhan said:

வறுமையில் எம்மினம் உதவவில்லை என்றால் போராடி வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்காமல், உதவிக்கரம் நீட்டும் மாற்றினத்தானிடம் அற்பங்களுக்காக பெற்ற தாயையும் கட்டிய மனைவியையும் கூட  கூட்டிக்கொடுக்க தயாராக உள்ள உங்கள் தாராள மனப்பான்மை வியக்க வைக்கிறது!!

பெற்ற தாயையும், மனைவியையும் மதங்கள் என்ற களவாணி திருட்டு கும்பல்களுடன்(அது எந்த மதமாக இருந்தாலும்)ஒப்பிடும் உங்கள் ஒப்பீடு தவறானது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

பெற்ற தாயையும், மனைவியையும் மதங்கள் என்ற களவாணி திருட்டு கும்பல்களுடன்(அது எந்த மதமாக இருந்தாலும்)ஒப்பிடும் உங்கள் ஒப்பீடு தவறானது. 

பெற்ற தாயையும், மனைவியையும் நான் திருட்டு கும்பலுடன் ஒப்பிடவில்லை. அற்பங்களுக்காக மதமாற்றத்தை சரியென விவாதிப்பவர்கள் இதைக்கூட செய்ய பின்நிற்க மாட்டார்களென்றுதான் கூறியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் அடிக்கடி மதம் மாறிக் கொண்டு இருப்பார்கள் ...யாருக்கும் எதையும் கொடுத்து மதம் மாற்ற வேண்டிய தேவை இந்து மதத்திற்கு இல்லை 

துலபன் இந்தியாவில் தான் பிராமணர்களை தூக்கி தலையில் வைக்கிறது எங்கட ஊர்ல அப்படி இல்லை என்பது உங்களுக்கு நன்றாய்த் தெரியும் 

//வடக்கில் அதிகரிக்கும் வன்முறையை  எப்படி கட்டுப்படுத்துவது// என்று தொடங்கின தலையங்கம் இந்து மதத்தை தாக்குவது வந்து நிற்குது 

 


 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தங்கள் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் அடிக்கடி மதம் மாறிக் கொண்டு இருப்பார்கள் ...யாருக்கும் எதையும் கொடுத்து மதம் மாற்ற வேண்டிய தேவை இந்து மதத்திற்கு இல்லை 

துலபன் இந்தியாவில் தான் பிராமணர்களை தூக்கி தலையில் வைக்கிறது எங்கட ஊர்ல அப்படி இல்லை என்பது உங்களுக்கு நன்றாய்த் தெரியும் 

//வடக்கில் அதிகரிக்கும் வன்முறையை  எப்படி கட்டுப்படுத்துவது// என்று தொடங்கின தலையங்கம் இந்து மதத்தை தாக்குவது வந்து நிற்குது 

 


 

ஆரிய பார்ப்பானால் திணிக்கப்பட்ட இந்து மதம்தான் இன்று ஈழத்திலும் 
ஆதிக்கம் செலுத்துகிறது. 
இந்தியாவில் யாரும் பிராமணரை தூக்கி தலையில் வைக்கவில்லை 
அவர்கள் தமது பெண்களை ஆங்கிலேயருக்கு கூட்டி கொடுத்து. ஆளுமைகளை 
கைப்பற்றி மற்றோரை அடிமை படுத்தி மூளை சலவை செய்தார்கள்.

ஈழத்துக்கு இது ஆறுமுகநாவலாரால் இறக்குமதி செய்யப்பட கொஞ்சம் தாமதம் 
ஆகியதால் பிரமாண ஆதிக்கம் வளர வாய்ப்பு இருக்கவில்லையே தவிர 
சாக்கடை இந்துமதம்.
எமது முன்னோரின் இரவு பகல் உழைப்பில் உருவான சைவ மதத்தை 
அப்படியே துடைத்து அழித்தது என்பதுதானே நிதர்சனம்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தங்கள் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் அடிக்கடி மதம் மாறிக் கொண்டு இருப்பார்கள் ...யாருக்கும் எதையும் கொடுத்து மதம் மாற்ற வேண்டிய தேவை இந்து மதத்திற்கு இல்லை 

துலபன் இந்தியாவில் தான் பிராமணர்களை தூக்கி தலையில் வைக்கிறது எங்கட ஊர்ல அப்படி இல்லை என்பது உங்களுக்கு நன்றாய்த் தெரியும் 

//வடக்கில் அதிகரிக்கும் வன்முறையை  எப்படி கட்டுப்படுத்துவது// என்று தொடங்கின தலையங்கம் இந்து மதத்தை தாக்குவது வந்து நிற்குது 

 


 

 

வன்முறைக்கு அடிப்படையே 
இந்த சாக்கடை இந்து மதம்தான்.

ஈழ தமிழனை ...........
ஈழ தமிழர் என்ற வடடத்துக்குள் வர விடாமல் தடுப்பது எது?

சாதியை கட்டிக்காத்து பிரிவினைகளை உருவாக்கி 
ஊர் சண்டைகள் வாள்வெட்டுக்கள் அனைத்தையும் சீரும் சிறப்புமாக 
செய்து வருவது எது?

இந்திய இராணுவ காலத்தில் ஈப்பி புளொட் ஈஎன்டிஎல்வ் போன்ற துரோக 
குழுக்களால் நடத்தப்ட்ட 80 வீதமான கொலைகள் யாவும் 75-85 வரை நடந்த 
சாதி மோதல்கள்களின் பழிவாங்கல்கள் என்பதை ...... கொலை செய்தவர்களை 
தெரிந்தவர்கள் நன்கு அறிவார்கள். 

வந்த இடத்தில் இன துவேஷத்துக்கு முகம் கொடுத்த 
புலம்பெயர் தமிழர்களை போல் 
நாட்டுக்காக ஈழத்தில் ஒன்றுகூட மறுக்கிறார்கள்
புலம்பெயர்ந்தவர்கள் பிழைப்புக்காக சாதியை கைவிட்டு 
கோப்பை கரண்டியை கையில் எடுத்து கழுவி துடைக்க துடங்கியவுடன் 
வெளிக்கு சாதியில் (வேறு எந்த தகுதியும் இல்லாதவர்கள்) ஊறி இருக்கிறார்களே 
தவிர சொந்த மன சாட்ச்சிக்காவது கொஞ்சம் தலைகுனிவை கொண்டுள்ளார்கள். 

ஈழத்தில் இதற்கு சந்தர்ப்பம் கிடைக்காததால் அங்குள்ளவர்கள் 
மனோ நிலை கொஞ்சம் வித்தியாசமானது.  

14 hours ago, ரதி said:

தங்கள் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் அடிக்கடி மதம் மாறிக் கொண்டு இருப்பார்கள் ...யாருக்கும் எதையும் கொடுத்து மதம் மாற்ற வேண்டிய தேவை இந்து மதத்திற்கு இல்லை 

துலபன் இந்தியாவில் தான் பிராமணர்களை தூக்கி தலையில் வைக்கிறது எங்கட ஊர்ல அப்படி இல்லை என்பது உங்களுக்கு நன்றாய்த் தெரியும் 

//வடக்கில் அதிகரிக்கும் வன்முறையை  எப்படி கட்டுப்படுத்துவது// என்று தொடங்கின தலையங்கம் இந்து மதத்தை தாக்குவது வந்து நிற்குது 

 


 

ரதி உலகில். வாழும் எல்லா மக்களும் ஆண்டவனின் குழந்தைகள்  என்றால் கோவில் அர்ச்சகராக அந்த எல்லாக் குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை . ஏன்?  ஈழத்தமிழரிடையே  அரத்தமற்ற மூடப்பழக்கவகளை மத்த்தின் பெயரால் புகுத்தி அவர்களை  அறிவு பூர்வமாக  சிந்திக்க விடாமல் தடுப்பது யார்? ஆன்மீகத்தை அப்படியே தமது வருமானத்தை பெருக்கிக்கொள்ள மட்டும் யன்படுத்துவது யார்? புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஒரு கோவில் கூட  ஆன்மீகம்  இல்லாமல் இருப்பது  ஏன்?  

ஒரு இந்து எப்படி வாழவேண்டும. என்று கூறும் இந்து சமய புனித நூல் மனுதர்மம் கூறுவதை பாருங்கள் 

பிராமணன்‌ தொழிலைச் சூத்திரன் செய்தாலும் சூத்திரன் பிராமண ஜாதியாகமாட்டான். ஏனென்றால், அவனுக்கு பிராமண ஜாதித் தொழிலில் அதிகாரம் இல்லை அல்லவா? சூத்திரன் தொழிலைப் பிராமணன் செய்தாலும் பிராமணன் சூத்திர ஜாதியாகமாட்டான். ஏனென்றால் அவன் ஈனத் தொழில் செய்தாலும் அவன் ஜாதி உயர்ந்ததல்லவா? இப்படியே இந்த விஷயங்களை பிரம்மாவும் நிச்சயம் செய்திருக்கிறார்.
 (மனு அத்.10. சுலோ.73)

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இந்துமதத்தை மட்டுமே சாடுவதால் எதுவுமே மாறிவிடப்போவதில்லை. வெளியே தெரியாவிட்டாலும் கூட கத்தோலிக்க மதத்திலும் கூட வெறித்தனமான சாதி வேறுபாட்டுப் பிரிவினைகளும் அடாவடித்தனங்களும் இருக்கின்றன. ஜூட் சொல்லாவிட்டாலும் கூட, கத்தோலிக்கன் என்கிற வகையில் எனக்கு இம்மதத்திலுள்ள குறைபாடுகள் நன்கே தெரியும்.
குறைந்த சாதி என்பதற்காக தேவாலயங்களின் சில பகுதிகளுக்கு செல்லவிடாமல் மறுக்கப்பட்டவர்கள், வருடாந்த சுற்றுப் பிரகாரங்களில் குறைந்த சாதியைச் சேர்ந்தவர்கள் சுருவங்களைத் தூக்குவதையோ, கிட்டே வருவதையோ கடுமையாகத் தடுத்த சந்தர்ப்பங்கள், ஒரு குருவானவர் கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர் என்பதற்காகவே பலர் முன்பாக அவரது சாதியைச் சொல்லி, "நீ சொல்லும் பிரசங்கத்தை நான் ஏன் கேட்கவேண்டும்?" என்று தேவாலயத்துக்கே வராமல் விட்ட பலர், உயர் சாதிப் பெண்ணை ஒரு கீழ்சாதி ஆண் முடித்தான் என்பதற்காகவே அவர்களது குடும்பத்தையே தேவாலயங்களுக்கு வரமுடியாமல்ப் பண்ணிய பலர்...இப்படி இந்துமதத்திற்கு எந்த விதத்திலும் சளைக்காது சாதிவெறியைக் காட்டியவர்கள் இங்கும் இருக்கிறார்கள்.

ஆனால் ஒரேயொரு வித்தியாசம் என்னவெனில், கத்தோலிக்கத்தில், எந்தச் சாதியினராக இருந்தாலும், அவர்கள் குருவானவராக வரமுடியும். வெளிப்படையாக இல்லாமல், மறைமுகமாக தடைகள் பல வந்தாலும் கூட, பலர் குருவானவர்களாக வருகிறார்கள். இந்துமதத்தில் இது இன்னும் இல்லை.

இந்துக்களின் சாதி வேற்றுமைதான் பலர் வேற்று மதங்களுக்கு மாறுவதற்கான காரணம் என்பது ஓரளவிற்குச் சரியாகப் பட்டாலும், அவர்கள் புதிதாகச் சேரும் மதங்களிலும் சாதி வேற்றுமைகள் இருக்கிறதே?

இங்கு ஒரு அன்பர் குறிப்பிட்டதுபோல, வடக்கில் இடம்பெறும் கலாசாரச் சீரழிவுகளுக்கான கருத்துப் பகிர்வு, இன்று தமிழர்களிடையே உள்ள மதங்களை நான் பெரிது, நீ பெரிது என்று ஒப்பீட்டு வாதாடுமளவிற்கு வந்துவிட்டது தேவையற்றது.

வடக்கில் இடம்பெறும் சமூக விரோதச் செயற்பாடுகளுக்குப் பிண்ணனியில் அதிகார சக்திகள் இருக்கலாம், தனிப்பட்ட குழுக்களாகக்கூட இயங்கலாம். ஆனால் கட்டுப்படுத்தப்படுவது காலத்தின் தேவையானது.

ஆகவே விக்னேஸ்வரன் அவர்கள் சொன்னதுபோல, முழுமையான அதிகாரம் தமிழர்களின் கைகளில் வருமிடத்து, சமூகத்தின் தீய சக்திகளை அடக்குவதென்பது இலகுவானது. எமக்கு அதிகாரம் இல்லாமலும், அதிகாரத்தில் இன்றிருப்பவர்களுக்கு சமூக சீர்கேடுகளை இல்லாதொழிப்பதற்கான தேவையோ, கரிசணையோ இல்லாமலிருப்பதும் எமது சாபக்கேடே ஒழிய வேறில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ragunathan said:

இங்கே இந்துமதத்தை மட்டுமே சாடுவதால் எதுவுமே மாறிவிடப்போவதில்லை. வெளியே தெரியாவிட்டாலும் கூட கத்தோலிக்க மதத்திலும் கூட வெறித்தனமான சாதி வேறுபாட்டுப் பிரிவினைகளும் அடாவடித்தனங்களும் இருக்கின்றன. ஜூட் சொல்லாவிட்டாலும் கூட, கத்தோலிக்கன் என்கிற வகையில் எனக்கு இம்மதத்திலுள்ள குறைபாடுகள் நன்கே தெரியும்.
குறைந்த சாதி என்பதற்காக தேவாலயங்களின் சில பகுதிகளுக்கு செல்லவிடாமல் மறுக்கப்பட்டவர்கள், வருடாந்த சுற்றுப் பிரகாரங்களில் குறைந்த சாதியைச் சேர்ந்தவர்கள் சுருவங்களைத் தூக்குவதையோ, கிட்டே வருவதையோ கடுமையாகத் தடுத்த சந்தர்ப்பங்கள், ஒரு குருவானவர் கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர் என்பதற்காகவே பலர் முன்பாக அவரது சாதியைச் சொல்லி, "நீ சொல்லும் பிரசங்கத்தை நான் ஏன் கேட்கவேண்டும்?" என்று தேவாலயத்துக்கே வராமல் விட்ட பலர், உயர் சாதிப் பெண்ணை ஒரு கீழ்சாதி ஆண் முடித்தான் என்பதற்காகவே அவர்களது குடும்பத்தையே தேவாலயங்களுக்கு வரமுடியாமல்ப் பண்ணிய பலர்...இப்படி இந்துமதத்திற்கு எந்த விதத்திலும் சளைக்காது சாதிவெறியைக் காட்டியவர்கள் இங்கும் இருக்கிறார்கள்.

ஆனால் ஒரேயொரு வித்தியாசம் என்னவெனில், கத்தோலிக்கத்தில், எந்தச் சாதியினராக இருந்தாலும், அவர்கள் குருவானவராக வரமுடியும். வெளிப்படையாக இல்லாமல், மறைமுகமாக தடைகள் பல வந்தாலும் கூட, பலர் குருவானவர்களாக வருகிறார்கள். இந்துமதத்தில் இது இன்னும் இல்லை.

இந்துக்களின் சாதி வேற்றுமைதான் பலர் வேற்று மதங்களுக்கு மாறுவதற்கான காரணம் என்பது ஓரளவிற்குச் சரியாகப் பட்டாலும், அவர்கள் புதிதாகச் சேரும் மதங்களிலும் சாதி வேற்றுமைகள் இருக்கிறதே?

இங்கு ஒரு அன்பர் குறிப்பிட்டதுபோல, வடக்கில் இடம்பெறும் கலாசாரச் சீரழிவுகளுக்கான கருத்துப் பகிர்வு, இன்று தமிழர்களிடையே உள்ள மதங்களை நான் பெரிது, நீ பெரிது என்று ஒப்பீட்டு வாதாடுமளவிற்கு வந்துவிட்டது தேவையற்றது.

வடக்கில் இடம்பெறும் சமூக விரோதச் செயற்பாடுகளுக்குப் பிண்ணனியில் அதிகார சக்திகள் இருக்கலாம், தனிப்பட்ட குழுக்களாகக்கூட இயங்கலாம். ஆனால் கட்டுப்படுத்தப்படுவது காலத்தின் தேவையானது.

ஆகவே விக்னேஸ்வரன் அவர்கள் சொன்னதுபோல, முழுமையான அதிகாரம் தமிழர்களின் கைகளில் வருமிடத்து, சமூகத்தின் தீய சக்திகளை அடக்குவதென்பது இலகுவானது. எமக்கு அதிகாரம் இல்லாமலும், அதிகாரத்தில் இன்றிருப்பவர்களுக்கு சமூக சீர்கேடுகளை இல்லாதொழிப்பதற்கான தேவையோ, கரிசணையோ இல்லாமலிருப்பதும் எமது சாபக்கேடே ஒழிய வேறில்லை.

கிறிஸ்த்தவ மதம்போல் உலகில் மற்ற எந்த மதமும் 
இந்த அளவில் மக்களை கொல்லவில்லை 
இன்றைய உலகிலும் கிறிஸ்தவ நாடுகள்தான் படு மோசமான 
படுகொலைகளைகளை பின் நின்று செய்து வருகின்றன. 

எமது மக்களின் சீரழிவு என்று வரும்போதுதான் 
இந்துமதம் முன்னுறுத்த படுகிறது. 

மற்றைய படி எல்லா மதமும் மனிதனை ஏய்த்து பிழைக்க தான்.
அனைத்தையும் துறவுங்கள் என்று சொன்ன புத்தனுக்கு கோடி செலவில் கோவில்.
துண்டு வேட்டியுடன் பிறரிடம் அன்பு செலுத்துங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள் 
என்ற ஜேசுவின் இன்றைய பிரதிநிதிகளான வத்திக்கானில் பெறுமதி கோடி கோடி டாலர்.
இந்திய கோவில்களின் உண்டியல் சாமிகளின் கணக்கு அது வேற கதை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.