Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் முஸ்லிம் மதத்துக்கு மாறிய மகனை கத்தியால் தாக்கிய தந்தை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறிய மகன் மீது கத்தியால் வெட்டி காயப்படுத்தி தனது கோபத்தினை வெளிப்படுத்திய சம்பவம் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் நேற்று முன்நாள் இடம்பெற்று உள்ளது. 

முதுகு மற்றும் கைகளில் படுகாயம் அடைந்த நிலையில் மகன் யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

யாழ்ப்பாணம் பிறவுண் வீதி கலட்டிச் சந்தியைச் சேர்ந்த பிரபாகரன் பிரதீபன் (வயது 28) தற்போது அப்துல்லா என்று அழைக்கப்படும் இளைஞரே சிகிச்சை பெற்று வருகின்றார். 

சம்பவம் தொடர்பாக பிரதீபன் தெரிவித்தவை வருமாறு:

யாழ். நகரில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றேன். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி நான்கு வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் மதத்துக்கு மாறினேன். அத்துடன், எனது பெயரையும் அப்துல்லா என மாற்றினேன்.

முஸ்லிம்களின் குரான் நூலை படித்தேன். அதில் கூறப்பட்டுள்ள போதனைகள் என்னை மிகவும் கவர்ந்து இருந்தன. அவற்றின் மீது நம்பிக்கை கொண்டேன்.

அதனால், எனது தந்தை என் மீது கடும் கோபம் கொண்டு இருந்தார். நேற்று முன்நாள் புதன்கிழமை இரவு 7 மணி அளவில் வீட்டுக்குச் சென்று இருந்தேன்.

என்னைக் கண்டதும் தந்தை ஆத்திரம் அடைந்து என்னை கத்தியால் கடுமையாக தாக்கினார்.

யாழ். மருத்துவமனைக்கு நேற்று முன்நாள் பின்னிரவு வந்தேன். எனினும் காவல் கடமையில் ஈடுபட்டு இருந்த பணியாளர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. 

இரவில் அனுமதிக்கப்பபட்டால் விடுதியில் தங்கியிருந்து மட்டுமே சிகிச்சை பெற முடியும். மருந்து கட்ட வேண்டுமாயின் நாளை (நேற்று) காலை வர வேண்டும் என்று கூறி பாதுகாப்பு பணியாளர்கள் என்னை திருப்பி அனுப்பி விட்டனர்.

நான் மீண்டும் நேற்று காலை மருத்துவமனைக்கு வந்த போது 24 ஆம் விடுதியில் அனுமதித்து விட்டார்கள் என்றார்.

பிரதீபனுக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர். அவர்களில் மூத்த சகோதரிகள் இருவர் திருமணம் ஆகி விட்டனர். இளைய சகோதரிக்கு திருமணம் ஆகவில்லை.

தனது மகன் இவ்வாறு நடந்து கொள்வவது தமக்கு கஷ்டமாக உள்ளது என்று தாயார் கண் கலங்கியவாறு தெரிவித்தார்.

நன்றி: "காலைக்கதிர்" நாளேடு 

  • Replies 65
  • Views 6.7k
  • Created
  • Last Reply

யாழ்பாண்த்திலேயே இந்த நிலை என்றால் போரால் பாதிக்கபட்ட வன்னியில் என்ன நிலையாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

அதை விட  இப்பொழுது தமிழரது சொத்துக்களை பெரும் பணம் கொடுத்தும் வாங்க தொடங்கி உள்ளார்களாம். இதற்காக பல தமிழ் முகவர்களையும் வைத்துள்ளார்களாம், இவர்கள் என்ன செய்வார்கள் என்றால் தாங்கள் வாங்குவது போல் வாங்கி அதை மீண்டும் முஸ்லிம்களுக்கு விற்கிறார்களாம்.

அவர்கள் கிழக்கை முடித்து விட்டு இப்பொழுது வடக்கில் வேர் ஊன்றி விட்டார்கள் , இதை தடுக்கும் ஆற்றல் மிகுந்த புலம்பெயர் சமூகம்  எதுவும் செய்யாமல் காட்போர்டில் தமிழ் ஈழ கனவு கண்டு கொண்டு  திரிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் பெரும் பகுதி காணிகளை முஸ்லிம் சமூகத்தினர் தமிழர்களை தமது கைக்கூலிகளாக அமர்த்தி வாங்கி வருகின்றனர். இதனை பகிரங்கமாகவே முஸ்லிம் சமூகத்தினர் முகநூலில் குறிப்பிட்டு உள்ளனர். வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தின் பின்பகுதி காணிகளைக் கூட அடிமட்ட விலைக்கு வாங்கி இருப்பதாக அங்குள்ள தமிழ் மக்களே கவலையுடன் தெரிவித்து இருக்கின்றனர்.

உண்மையில் புலம்பெயர் சமூகத்தினர் இதில் அதீத விழிப்புணர்வு நிலையில் இருந்து செயற்பட்டு இவற்றை தடுக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் இருந்து வெறும் வெற்று முழக்கங்களை எழுப்பிக் கொண்டு இருந்தால் எமது நிலங்கள் மிகவும் குறுகிய அளவில் வருவதனை தவிர்க்கவே முடியாது. இந்த விடயத்தில் கருணா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையினை சாடிக் கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

கிழக்கில் தமிழர்களிடம் இருந்து காணிகளை கொள்வனவு செய்வதற்கு மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் உறவுகள் மற்றும் அங்கு உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் பாரிய அளவில் நிதி உதவி புரிந்து வருவதாக கிழக்கில் உள்ள நண்பர்கள் மிகவும் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்திலும் முஸ்லிம் சமூகத்தினர் ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டே வருகின்றனர். அங்கே உள்ளவர்களுக்கு அதன் தாற்பரியம் தற்போது தெரியவில்லை. மிகவும் அண்மித்தவுடன் அல்லது அவர்களுக்கு சுடலை ஞானம் பிறந்த பின்னரே கூக்குரல் போடுவார்கள்.

எமது தமிழ் சமூகம் தற்போது மிகவும் சோம்பேறித்தனமான சமூகமாகவே மாறிவிட்டது. முன் ஒரு காலத்தில் கல்வி, விவசாயம், வர்த்தகம், கடல்தொழில் உள்ளிட்ட எந்தத் துறையிலும் மிகவும் ஈடுபாட்டுடன் செயற்படுவார்கள். 

தற்போதும் வெளிநாட்டு மோகம் காரணமாக தாமும் அங்கு கிளம்ப வேண்டும் என்கின்ற தாகமும் அங்குள்ளவர்களுக்கு எந்தவொரு தொழில் முனைப்புக்களிலும் ஈடுபடுகின்ற ஆர்வமோ, தொழிலுக்கு சென்று உழைக்க வேண்டும் என்கின்ற ஆர்வமோ இல்லை என்றே கூற வேண்டும். 

வடக்கு-கிழக்கில் வாழ்ந்து வரும் இளைய தலைமுறையினருக்கு அரசியல் தெளிவு என்பது வெறும் பூச்சியம் என்பதனை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். 

இளையோர்களை அரசியலுக்குள் உள்நுழைப்பதற்கான வேலைத் திட்டங்களோ அல்லது அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்கின்ற சிந்தனையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சரி அதன் பங்காளிக் கட்சிகளாக இருக்கக் கூடியவர்களுக்கோ எள்ளளவும் ஆர்வம் இல்லை என்பது மிகவும் கவலைக்கு உரியது.

Edited by nirmalan

7 minutes ago, nirmalan said:

கிழக்கு மாகாணத்தில் பெரும் பகுதி காணிகளை முஸ்லிம் சமூகத்தினர் தமிழர்களை தமது கைக்கூலிகளாக அமர்த்தி வாங்கி வருகின்றனர். இதனை பகிரங்கமாகவே முஸ்லிம் சமூகத்தினர் முகநூலில் குறிப்பிட்டு உள்ளனர். வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தின் பின்பகுதி காணிகளைக் கூட அடிமட்ட விலைக்கு வாங்கி இருப்பதாக அங்குள்ள தமிழ் மக்களே கவலையுடன் தெரிவித்து இருக்கின்றனர்.

உண்மையில் புலம்பெயர் சமூகத்தினர் இதில் அதீத விழிப்புணர்வு நிலையில் இருந்து செயற்பட்டு இவற்றை தடுக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் இருந்து வெறும் வெற்று முழக்கங்களை எழுப்பிக் கொண்டு இருந்தால் எமது நிலங்கள் மிகவும் குறுகிய அளவில் வருவதனை தவிர்க்கவே முடியாது. இந்த விடயத்தில் கருணா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையினை சாடிக் கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

கிழக்கில் தமிழர்களிடம் இருந்து காணிகளை கொள்வனவு செய்வதற்கு மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் உறவுகள் மற்றும் அங்கு உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் பாரிய அளவில் நிதி உதவி புரிந்து வருவதாக கிழக்கில் உள்ள நண்பர்கள் மிகவும் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்திலும் முஸ்லிம் சமூகத்தினர் ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டே வருகின்றனர். அங்கே உள்ளவர்களுக்கு அதன் தாற்பரியம் தற்போது தெரியவில்லை. மிகவும் அண்மித்தவுடன் அல்லது அவர்களுக்கு சுடலை ஞானம் பிறந்த பின்னரே கூக்குரல் போடுவார்கள்.

எமது தமிழ் சமூகம் தற்போது மிகவும் சோம்பேறித்தனமான சமூகமாகவே மாறிவிட்டது. முன் ஒரு காலத்தில் கல்வி, விவசாயம், வர்த்தகம், கடல்தொழில் உள்ளிட்ட எந்தத் துறையிலும் மிகவும் ஈடுபாட்டுடன் செயற்படுவார்கள். 

தற்போதும் வெளிநாட்டு மோகம் காரணமாக தாமும் அங்கு கிளம்ப வேண்டும் என்கின்ற தாகமும் அங்குள்ளவர்களுக்கு எந்தவொரு தொழில் முனைப்புக்களிலும் ஈடுபடுகின்ற ஆர்வமோ, தொழிலுக்கு சென்று உழைக்க வேண்டும் என்கின்ற ஆர்வமோ இல்லை என்றே கூற வேண்டும். 

வடக்கு-கிழக்கில் வாழ்ந்து வரும் இளைய தலைமுறையினருக்கு அரசியல் தெளிவு என்பது வெறும் பூச்சியம் என்பதனை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். 

இளையோர்களை அரசியலுக்குள் உள்நுழைப்பதற்கான வேலைத் திட்டங்களோ அல்லது அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்கின்ற சிந்தனையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சரி அதன் பங்காளிக் கட்சிகளாக இருக்கக் கூடியவர்களோ எள்ளளவும் ஆர்வம் இல்லை என்பது மிகவும் கவலைக்கு உரியது.

யதார்த்தமான கருத்து, 

  • கருத்துக்கள உறவுகள்

ஆக அங்கும் ஆரம்பித்து விட்டது போல:35_thinking:

8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஆக அங்கும் ஆரம்பித்து விட்டது போல:35_thinking:

எப்போதே ஆரம்பித்து விட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் மதத்தை சேர்ந்த ஒருவர் சொன்னார் 2040 இல் உலகை ஆள போவது தங்கள் மதமே என்று. ஒரு காலத்தில் இந்து நாடாக இருந்த இந்தோனேசியா இப்போ இன்று அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடு. அதே போல் மலேசியா. இந்த வழியில் இலங்கை வருவது கடினம் அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Ahasthiyan said:

அவர்கள் மதத்தை சேர்ந்த ஒருவர் சொன்னார் 2040 இல் உலகை ஆள போவது தங்கள் மதமே என்று. ஒரு காலத்தில் இந்து நாடாக இருந்த இந்தோனேசியா இப்போ இன்று அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடு. அதே போல் மலேசியா. இந்த வழியில் இலங்கை வருவது கடினம் அல்ல.

உந்த விசயத்திலை ஐரோப்பாவே கதிகலங்கித்தான் நிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பெயர்கள் படையெடுப்புகளால் மாறி வந்தித்திருக்கின்றன, இவர்கள் ஆண்டால் ஸ்ரீ லங்கா என்ன பெயராக வரும்: லங்கஸ்தான்?

3 hours ago, Ahasthiyan said:

அவர்கள் மதத்தை சேர்ந்த ஒருவர் சொன்னார் 2040 இல் உலகை ஆள போவது தங்கள் மதமே என்று. ஒரு காலத்தில் இந்து நாடாக இருந்த இந்தோனேசியா இப்போ இன்று அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடு. அதே போல் மலேசியா. இந்த வழியில் இலங்கை வருவது கடினம் அல்ல.

ஆனால் அது நடந்தது வித்தியாசமான சூழலில், 600 ஆண்டுகளுக்கு முன்னர். ஆனால் இப்போது நடப்பதை தடுக்க  எம்மிடம் சகல வசதிகளும் உண்டு, ஆனால் நாம் தான் அதை தடுப்பதில்லை.....!!!!

இத்து போன தமிழ் தேசியம் கதைக்க தான் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ பாவம் என்று அடைக்கலம் தந்த  நாட்டு மக்களையே கத்தியால் குத்தியும், கோடாரியால் வெட்டியும், கனரக வாகனங்களால் நசுக்கியும் , துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் கொலைவெறி தாண்டவமாடும் ஒரு மிருககூட்டத்தின் மார்க்கத்திற்கு தான் பெற்ற மகன் மாறியபோது, அவனை பெற்ற தந்தை கத்தியால் தாக்கியது தவறே அல்ல...அதொன்றும் வன்முறையல்ல...விழிப்புணர்வு!

உலகின் சனதொகை ஒரு பாரிய பிரச்சனையாக உலகநாடுகளின் முன் உருவெடுத்தபோது ..

உலகின் அதி கூடிய மக்கள் தொகை கொண்ட நாடுகளான இந்தியாவிலும் சீனாவிலும்...

இந்தியாவில் ...நாம் இருவர் நமகிருவர் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்...

சீனாவில் நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்கள்...

ஆனால் இந்த அரபு தேசத்தின் அடிவருடிகள் , குதிரையோடி பாஸ் பண்ணூறவன்போல உலகம் முழுவதும் அவர்களுக்கு அடைக்கலம் தந்த நாடுகளிலயே ஆளுக்கு பத்து பிள்ளைய பெத்துபோட்டு இஸ்லாம் வேகமாக வளருது, உலக மக்கள் எங்கள் மார்க்கத்தை தழுவுகிறார்கள் என்று சொல்வார்கள்...

 அடைக்கலம் தந்த நாடுகளின் பெண்களை சீண்டுவார்கள்,வாழ்வு தந்த மண்ணையே தமது சொந்தமாக்க நினைப்பார்கள்...

அவர்களையணைத்துபோக நினைக்கும் பிற சமூகங்களின் பன்சலயானாலும் சரி தேவலயங்களானாலும் சரி..பரந்தாமன் கோயிலானும் சரி...

எல்லாவற்றையும் அப்புறப்படுத்திவிட்டு அல்லாஹ் ஒருவனே தெய்வம் என்று சொல்லி பள்ளிவாசல்கள் கட்டியெழுப்புவார்கள்...

அடுத்தவனுக்கு ஆப்படிக்கணும் என்றே கட்டியெழுப்பபடும் எந்த மார்க்கமும் உயர்ந்ததல்ல...

கத்தியால் மகனை குத்தி எஞ்சிய தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அப்பாவுக்கு வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உந்த விசயத்திலை ஐரோப்பாவே கதிகலங்கித்தான் நிக்குது.

அதற்கு பிரதான காரணமே ஐரோப்பாவுக்கு விசுவாசமாக இருக்ககூடிய  பிற மதம் & நாடு சார்ந்த  அகதிகளை...இலங்கை உட்பட ...

கேஸ் ரிஜெக்ட் பண்ணி இரவோடு இரவாக அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பிட்டு... ...முஸ்லிம்களுக்கு அள்ளி அள்ளி விசாவை வாரி  வழங்கினார்கள்...அதன் எதிரொலிப்பே இது..

உப்பை தின்றவர்கள் தண்ணி குடிக்கபோகிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

அதற்கு பிரதான காரணமே ஐரோப்பாவுக்கு விசுவாசமாக இருக்ககூடிய  பிற மதம் & நாடு சார்ந்த  அகதிகளை...இலங்கை உட்பட ...

கேஸ் ரிஜெக்ட் பண்ணி இரவோடு இரவாக அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பிட்டு... ...முஸ்லிம்களுக்கு அள்ளி அள்ளி விசாவை வாரி  வழங்கினார்கள்...அதன் எதிரொலிப்பே இது..

உப்பை தின்றவர்கள் தண்ணி குடிக்கபோகிறார்கள்...

நானும் உங்களை போலத்தான் நினைத்தன் ஆனால் உள்ளே அதிகளவில்  வரவிட்டு பின்பு சட்டம்களை இறுக்கி கொண்டார்கள் பலகலாச்சார முறையை ஊக்கு விப்பதன் மூலம் அதிகளவில் நன்மையை இப்பவே இந்த அரசுகள் பெற தொடங்கி உள்ளன இது இன்னும் பத்து வருடம்களில் இன்னும் அதிகமாகும் .இங்குள்ள சிறுவயது முதல் சொல்லிகொடுக்கபடும் கல்வி முறை போன்றவை எதிர்கால இந்த நாட்டுக்கு ஒரு வித அடிமை முறை போன்ற மனிதர்களையே உற்பத்தி செய்கின்றன . இங்கு பிறந்த முஸ்லீம் பிள்ளைகள் யுனியில் ஐந்து முறை  தொழுவதை பெரும்பாலும் தவிர்த்து கொள்கிறர் கள் (மரு மக்களின் நண்பர்கள் முஸ்லிம்களே அவர்கள் நிறைய கதைகள் சொல்வார்கள் பெயரில் மாத்திம் முஸ்லீம்  இருக்கு மற்றபடி இங்குள்ள வெள்ளைகள் தோத்து விடுவினம் ) ஒரு சில ரை தவிர்ந்து இந்த நாட்டு மண்னின் குணம் அப்படியாக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Dash said:

அதை விட  இப்பொழுது தமிழரது சொத்துக்களை பெரும் பணம் கொடுத்தும் வாங்க தொடங்கி உள்ளார்களாம்.

தமிழர் எல்லாம் புலம் பெயர்ந்து கனடாவிலும் ஐரோப்பாவிலும் உள்ளவர்களுக்கு பெரும் பணத்தை கொடுத்தால் வன்னியில் உள்ளவர்களுக்கு பெரும் பணம் வேண்டாமா? அங்கே உள்ள மக்களுக்கும் பெரும் பணம் தேவை தானே? 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, valavan said:

ஐயோ பாவம் என்று அடைக்கலம் தந்த  நாட்டு மக்களையே கத்தியால் குத்தியும், கோடாரியால் வெட்டியும், கனரக வாகனங்களால் நசுக்கியும் , துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் கொலைவெறி தாண்டவமாடும் ஒரு மிருககூட்டத்தின் மார்க்கத்திற்கு தான் பெற்ற மகன் மாறியபோது, அவனை பெற்ற தந்தை கத்தியால் தாக்கியது தவறே அல்ல...அதொன்றும் வன்முறையல்ல...விழிப்புணர்வு!

........

கத்தியால் மகனை குத்தி எஞ்சிய தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அப்பாவுக்கு வாழ்த்துக்கள்...

ஐ.நா.வில் போர்க்குற்ற விசாரணை கேட்பவர்களுக்கு உங்கள் கருத்து பயன்படும். முஸ்லிம் நாடுகளின் ஆதரவும் கிடைக்கும். ஐ. நா.வின் மனித உரிமை ஆணையாளர், முன்னாள் ஐ.நா. செயலர் பலரும் முஸ்லிம்கள். அவர்களும் உங்கள் கருத்தை பார்த்ததும் போர்க்குற்ற விசாரணைக்கு பேராதரவு தருவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Jude said:

ஐ.நா.வில் போர்க்குற்ற விசாரணை கேட்பவர்களுக்கு உங்கள் கருத்து பயன்படும். முஸ்லிம் நாடுகளின் ஆதரவும் கிடைக்கும். ஐ. நா.வின் மனித உரிமை ஆணையாளர், முன்னாள் ஐ.நா. செயலர் பலரும் முஸ்லிம்கள். அவர்களும் உங்கள் கருத்தை பார்த்ததும் போர்க்குற்ற விசாரணைக்கு பேராதரவு தருவார்கள். 

அதான் போர் குற்ற விசாரணையே உங்களை போன்ற ஆட்கள் நீர்த்து போக பண்ணியாச்ச்சே பிறகென்ன இங்கு சரடு விடுறீங்க .....

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

அதான் போர் குற்ற விசாரணையே உங்களை போன்ற ஆட்கள் நீர்த்து போக பண்ணியாச்ச்சே பிறகென்ன இங்கு சரடு விடுறீங்க .....

உங்களை போன்ற ஆட்கள் தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக காட்டும் ஆதாரங்களை அள்ளி அள்ளி தர  எங்களை போன்ற வேறு என்ன செய்ய முடியும்? அனுபவியுங்கள் என்று விட்டு விட்டோம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


மேற்படி செய்தியினை படித்த பின்னர் கிழக்கில் உள்ள பல நண்பர்கள் அறியத்தந்த தகவல்கள் அதிர்ச்சி தருபவையாக இருக்கின்றன.

அம்பாறையில் உள்ள முஸ்லிம் தனியார் கல்வி நிலையங்களுக்கு சனி, ஞாயிறு கிழமைகளில் யாழில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து பாடம் கற்பிக்கின்றனராம். ஆனால், அங்கே தமிழ்ப் பிள்ளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக அம்பாறை வாழ் நண்பர்கள் தெரியப்படுத்தி இருக்கின்றனர்.

அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி, ஓட்டமாவடி பகுதிகளில் உள்ள ஆடை தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் தொழில் புரியும் தமிழ் இளைய வயது பெண்களை தொடர்ந்தும்  உங்களுக்கு தொழில் வேண்டுமாயின் தமது மதத்தில் இணைந்து தமது ஆண்களை திருமணம் புரியுமாறு கட்டாயப்படுத்தி வருவதாக அப்பகுதி நண்பர்கள் வேதனையோடு தெரிவித்து இருக்கின்றனர்.

பெண்களை கட்டாயப்படுத்தி மதத்தில் இணைக்கும் செயலை புளொட் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் இது தொடர்பில் விழிப்புணர்வு செயற்பாடுகளில் துரிதமாக செயற்பட்டாலும் பிற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் கவலை கொண்டதாக தெரியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

இதில பகிடி என்ன என்றால் முஸ்லிம்கள் தமிழர்களின் காணிகளை கையகப்படுத்துகின்றார்கள் என சொல்லும் சிலர் ஒரு காலத்தில் முஸ்லிம்களுக்காக இந்த களத்திலயே குரல் கொடுத்தவர்கள்....

 லங்கஸ்தான் உருவாகப்போகின்றது என்றால் அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது....

1 hour ago, putthan said:

இதில பகிடி என்ன என்றால் முஸ்லிம்கள் தமிழர்களின் காணிகளை கையகப்படுத்துகின்றார்கள் என சொல்லும் சிலர் ஒரு காலத்தில் முஸ்லிம்களுக்காக இந்த களத்திலயே குரல் கொடுத்தவர்கள்....

 லங்கஸ்தான் உருவாகப்போகின்றது என்றால் அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது....

இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் என நான் 7-8 வருடங்களுக்கு முன்னர் எச்சரித்த போது எவரும் எனது கருத்தை கணக்கெடுக்கவில்லை,இப்பொழுது அதன் பிரதி பலன்களை அனுபவிக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Jude said:

ஐ.நா.வில் போர்க்குற்ற விசாரணை கேட்பவர்களுக்கு உங்கள் கருத்து பயன்படும். முஸ்லிம் நாடுகளின் ஆதரவும் கிடைக்கும். ஐ. நா.வின் மனித உரிமை ஆணையாளர், முன்னாள் ஐ.நா. செயலர் பலரும் முஸ்லிம்கள். அவர்களும் உங்கள் கருத்தை பார்த்ததும் போர்க்குற்ற விசாரணைக்கு பேராதரவு தருவார்கள். 

முதலில் உங்கள் வாழ்நாளில் உங்களால் முடிந்தால் இலங்கை முஸ்லிம்களை  தமிழர்கள்மீது போர் குற்றம் புரியப்பட்டது என்று ஒரு வரி சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம், அதுக்கப்புறம் உலக முஸ்லிம்நாடுகளின் ஆதரவை எண்ணி கனவு காணலாம்.

ஐநா செயலர்  முன்னாளோ/இந்நாளோ,ஐநாவின் மனித உரிமை ஆணையாளரோ  முஸ்லீமாக இருந்தால் அவர் ஒரு முஸ்லிம் என்ற உணர்வுடனேயா ஐநா நடவடிக்கைகளில் ஈடுபடுவார்?

அல்லது ஒரு முஸ்லிமாக அவர்களின் பதவிகளை கையாள ஐநாதான் அனுமதிக்குமா?

நீங்கள் சொல்லும் ஐநாவின் உயர்பதவிகளில் இருந்த முஸ்லிம்கள், சிரியாவிலும் ரோஹிங்கியா ,முஸ்லீம்களுக்கும் ஏற்பட்ட மனித உரிமைமீறல்களை எவ்வாறு ஒரு முஸ்லீமாக அந்த பிரச்சனைகளை தீர்த்து வைத்தார்கள் என்று இருவரி எழுதுங்கள் வாசித்து பயன்பெற ஆவல்.

உலகின் மனித உரிமைமீறல்களுக்கு முஸ்லீம்நாடுகள் குரல்கொடுக்குமா?

உலகமே முஸ்லீம்நாடுகளில் இடம்பெறும் மனித உரிமைமீறல்களுக்காக தினம் தினம் அழுத்தங்கள்,ஆயுதங்கள்,என பிரயோகிப்பதும்

அவர்கள் சண்டையால், அகதிகள் நுழைவால் தீட்டிய மரத்தில் கூர்பார்க்கும் செயல்போன்று உள்ளே வந்தவர்களின் செயலால் சொந்த மக்களையே தினம் தினம் இஸ்லாமியமதவெறிக்கு பலிகொடுத்து திக்குமுக்காடி கிடக்கிறது அமெரிக்க ஐரோப்பிய தேசங்கள். 

நீங்கள் என்னடா என்றால் இஸ்லாமிய தேசங்களும், இஸ்லாமிய உயர்பதவியில் உள்ளவர்களும் இலங்கையில் எமக்கிழைக்கப்பட்ட போர்குற்றங்களுக்கு குரல் கொடுப்பது நம்மால் தடைப்பட வாய்ப்பிருக்கிறதென்று அந்த பழியைகூட எம்மவர்கள்மேலேயே திருப்பி அவர்களுக்கு மனித சிஹாமணிகள் பட்டம் கொடுக்க வலுவான வாய்ப்பு தேடுகிறீர்கள். உங்களின் நகைச்சுவை உணர்வு பிரமிக்கதக்கது ஐயா.

 தமக்குள் தாம் ஒருவருக்கொருவர் எதிரியாக இருந்தாலும் ஈரான்,பாகிஸ்தான்,பங்களாதேசம், சவுதி உட்பட ஈழதமிழர்களின் அழிவில் அனைத்து இஸ்லாமியநாடுகளுக்கும் பங்கிருந்தன,நேரடி பங்களிப்பும் இருந்தன

சரி அதைதான் விடலாம் அரசுகளுக்கு அரசு ஆதரவு வழங்கியதென்று,

ஆனால் ஈழபோராட்ட ஆரம்பகாலத்திலிருந்து அனைத்து இயக்கங்களுமே நியாபடுத்திய,அனுதாபத்துடன் நோக்கிய, தமது மானசீக ஆதரவை வழங்கிய, இன்னும் ஒருபடிமேலேபோய் சில உறுப்பினர்கள் நேரடியாகவே அங்கு சென்று பயிற்சியும் பெற்று திரும்பிய, எமதுபோராட்டத்தையும் நியாயத்தையும் உலகிலேயே அனைவரையும்விட ஓரளவு அறிந்தவர்களுமாக இருந்த,எம்மைபோலவே ஒரு ஆதிக்க சக்திக்கெதிராக சொந்த மண்ணிலேயே அடக்குமுறைகளை அனுபவித்த/அனுபவித்துகொண்டிருக்கும்  பாலஸ்தீனம் எனும் அரசு எமக்கு பண்ணியது................

இலங்கையின் இறுதி இனவொழிப்பு நடந்துமுடிந்ததும், முதலில் இலங்கைக்கு வாழ்த்து சொல்பவர்களின் வரிசையில் நின்றதே!,

அவர்களின் அந்த வாழ்த்துக்களுக்கு காரணம் எம்மைபற்றி ஏதும் அறிந்திருக்கவில்லை என்பதல்ல, அவர்கள் இஸ்லாமியர்கள் அப்படித்தான் பண்ணுவார்கள்.

சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீர் கண்ட இடத்தில் காலை கழுவிக்கொள்ளும்  அவர்கள் எந்தக்காலமும் திருந்தபோவதும் இல்லை எமக்காய் குரல்கொடுக்கபோவதும் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
On 7/27/2018 at 7:40 AM, valavan said:

ஐயோ பாவம் என்று அடைக்கலம் தந்த  நாட்டு மக்களையே கத்தியால் குத்தியும், கோடாரியால் வெட்டியும், கனரக வாகனங்களால் நசுக்கியும் , துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் கொலைவெறி தாண்டவமாடும் ஒரு மிருககூட்டத்தின் மார்க்கத்திற்கு தான் பெற்ற மகன் மாறியபோது, அவனை பெற்ற தந்தை கத்தியால் தாக்கியது தவறே அல்ல...அதொன்றும் வன்முறையல்ல...விழிப்புணர்வு!

இந்த உங்கள் வாதம் தான் போர்க்குற்றங்கள் பற்றிய சிங்களவரின் வாதமும். இதோ போர்க்குற்றங்கள் பற்றிய  சிங்களவரின் வாதம்:

"காட்டுப்புறத்தில் குடியேறிய ஏழை மக்களையே குடியேற்ற  கிராமங்களில் கத்தியால் குத்தியும், கோடாரியால் வெட்டியும்,  , துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் கொலைவெறி தாண்டவமாடிய ஒரு மிருககூட்டத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்த மக்களை கொலைசெய்வதில்  தவறே அல்ல...அதொன்றும் வன்முறை யல்ல...விழிப்புணர்வு!"

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, valavan said:

இலங்கையின் இறுதி இனவொழிப்பு நடந்துமுடிந்ததும், முதலில் இலங்கைக்கு வாழ்த்து சொல்பவர்களின் வரிசையில் நின்றதே!,

அவர்களின் அந்த வாழ்த்துக்களுக்கு காரணம் எம்மைபற்றி ஏதும் அறிந்திருக்கவில்லை என்பதல்ல, அவர்கள் இஸ்லாமியர்கள் அப்படித்தான் பண்ணுவார்கள்.

இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறிய மகனை கத்தியால் குத்தியதை நீங்கள் ஆதரிப்பதற்கு காரணம் முஸ்லிம்கள் எங்களுக்கு உதவாதது தான் என்றால் எங்கள் மக்களை முன்னின்று அழித்து ஒழித்த இந்தியாவின் இந்து மதத்தில் தொடர்ந்தும் இருப்பவர்களை என்ன செய்ய போகிறீர்கள்? நீங்களே எம்மை அழித்த இந்து மதத்தில் தானே தொடர்ந்தும் இருக்கிறீர்கள்? உங்கள் இந்துமத வெறியை மறைக்க ஏன் மாண்டு போன தமிழ் மக்களின் சோகத்தை பயன்படுத்துகிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/28/2018 at 4:22 PM, Dash said:

இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் என நான் 7-8 வருடங்களுக்கு முன்னர் எச்சரித்த போது எவரும் எனது கருத்தை கணக்கெடுக்கவில்லை,இப்பொழுது அதன் பிரதி பலன்களை அனுபவிக்கிறோம்.

இப்படித்தான் சிங்களவன் பிடிக்கிறான் என்று தொடங்கி கடைசியில் அவன் நிலத்தை அக்கிரமிப்பதை எம்மால் தடுக்க முடியாமல் போய்விட்டது....
இனி முஸ்லிம்கள் என்று வெளிக்கிட்டு என்னத்தை காணப்போகின்றோம்,
ஒரு இனம் தனித்து ஒரு மாகாணத்தில் பெரும்பான்மையாக இருக்ககூடாது என்பதற்காக  முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் வடபகுதியில் குடியேற்றுவதில் அரசு முக்கிய கவனம் செலுத்துகின்றது...
 

  • கருத்துக்கள உறவுகள்

 அட சும்மாயிருங்கப்பா ...இப்பதானே சீனன் உள்ளவந்திருக்கிறான் , ஏற்க்கனவே முஸ்லிம்களின் வளர்ச்சி சிங்களவனின் கண்ணை நன்றாக உறுத்திவிட்டது , ஆட்டம் சூடுபிடிக்க கொஞ்சம் கால அவகாசம் வேண்டாமோ ....எல்லாத்தையும் விட எங்கடை சட்டாம்பிகளை நினைக்கத்தான் கொஞ்சம் பயமாயிருக்கு, உவிங்களுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வலிக்கும் முன் வலிக்குது ,இழவெடுத்ததுகள் நம்மை கடைசியாக எதுக்குள்ளையும் கோர்த்துவிட்டுவிடுவினம் . மதம்  மாறுகிறவன் மாறட்டும் அது அவனது விருப்பம் ஆனால் மாத்தி வச்ச பெயரை ஏன் மாற்றினோம் என்று நொந்து தொப்பியை கழற்றி காட்சட்டைக்குள் மறைக்கும் காலம் தூரத்திலில்லை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.