Jump to content

படலையில் ஒரு மணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

download.jpg

 

தண்ணிய குடியேன்டா நானும் எத்தின தடவையம்மா குடிச்சிட்டன் இந்த விக்கல் போகமாட்டேன் என்கிறது  இந்தா கொஞ்சம் சீனியை வாய்க்க போடு ம் தாங்கோ அப்பவும் நிக்காட்டி கொஞ்சம் நித்திரைய  கொள்ளு சரி சரி என கட்டிலில் சாய்ந்து படுக்க ஆரம்பித்தாலும் விக் இக் விக் என விக்கல் விடுவதாக இல்லை அப்படியே தலையணையை பிடித்து முகத்தை இறுக்கிய படி கண்களை மூட நித்திரை இறுக பிடித்துக்கொண்டது 

பல மணிநேரம் கழிந்த பிறகு எழுந்தேன் எல்லாம் இருட்டாக இருந்தது மின் ஆழியை அழுத்திய போது மின்சாரம் இருக்க வில்லை கும் இருட்டில் தட்டி   தடிவி  ஒரு சிமிழி விளக்கை கதவு மூலையில் இருந்து எடுத்து நேரத்தை பார்க்க நேரமோ நிற்காத மேகமாய் ஓடியோடி களைப்பில்லாத மூன்று கால் குதிரை போல மரதன் ஓடி இரவு பன்னிரண்டு முப்பதை காட்டியது மறைந்து போன விக்கலை நினைத்தேன் அது தொலைந்து போய்விட்டது சாப்பிடவும் இல்லை வயிறோ குடித்த தண்ணிரை இறைத்து விட்டு வந்து படு என மூளைக்கு கதவை திறந்து விட்டிருந்தது வெளியே போகவே தூரத்தில் மணி கட்டிய மாடுகள் ஊரை சல்லடை போட்டு தேடுதலில் இறங்கிருக்கும்  போல நாய்கள் நன்றியை வீட்டுக்கும் பகையை எதிரிக்கும் செலுத்திக்கொண்டிருப்பதில் தெரியவந்தது விளக்கு எரிவதை கண்டால் இந்த நேரத்தில் யாரோ எதோ அலுவல்களை பார்க்கிறான் என்று உள்ளே வந்து விடுவார்கள் என்று எண்ணி கடனை இறைத்து விட்டு எதிர்வீட்டில் ஏதும் மணியோசை கேச்கிறதா என காதை  விட்டு பார்த்தேன் எந்த சத்தமும் இல்லை மெதுவாக  வந்து மெல்ல அந்த சிமிழி விளைக்கை அணைத்து விட்டு தூங்க ஆரம்பிக்கிறேன் . வயிற்றில் இருந்த புழுக்களோ வயிற்றில் உணவில்லாமல் ஊளை இடுவது எனக்கு மட்டும் தெரியவே அணைந்த விளக்கோ என் அகத்தில் எரிய தொடங்குகிறது .

2009 யுத்தம் முடிவடைக்கிறது ஆர்ப்பரித்த கடல் போல போர் ஊரை சாம்பலாக்கி உயிர்களை காவு வாங்கி உடமைகளை உருக்குலைத்து உள்ளங்களை ஊமையாக்கி அங்கங்களை  கடன் வாங்கி தின்று  முடிந்து இருந்த வேளையது மழை ஓய்ந்தாலும் தூவானம் ஓயாத நிலையாக எனது ஊரில் தளம்பலிலிருந்தது  எங்கள் ஊருக்கு எந்தன் வீட்டுக்கு முன் உள்ள வீட்டில்  ஒரு குடும்பம் வருகிறது இடம்பெயர்ந்து அதை வீடு எனபதை விட ஒரு கொட்டில் போல இருக்கும் இருக்கலாம் வசிக்க முடியாது 

வந்தவர்கள் இருவரும் வயது போனவர்கள் வந்ததும் வீட்டை துப்பரவு செய்து வாசல்களை கூட்டி சுத்தமாக வைத்திருந்தார்கள் அடுத்த நாள் காலையில் அந்த வீட்டு வாசல் முன் படலையில் ஒரு மணி கட்டி தொங்க விட்டிருந்தார்கள் நானோ சிறுவயது 2009  எனக்கு 8 வயது மூன்றாம் வகுப்பு பள்ளி விட்டு வரும் போது அந்த மணியை ஆட்டிவிட்டு ஓடிவிடுவது வழமை அந்த மணி சத்ததிற்கெல்லாம் அந்த ஆச்சி ஓடி வந்து பார்ப்பாவு நானும் அந்த மணி ஆடு மாடுகள் உள்ளே வராமல் தடுக்கவே அந்த மணிகள் கட்டியிருக்கிறார் என நாள் தோறும் பாடசாலை விட்டு வரும் போது போகும் போது தட்டி விட்டு ஒளிந்து கொள்வது வழமை ஒரு நாள் என்னை பிடிக்க மனிசி ரெடியாக அதே நேரத்தில் எனக்கு பின்னால் ஒளிந்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது நானும் மணியை ஆட்டிவிட்டு ஓட எத்தனிக்கும் போது கையும் களவுமாக பிடித்து விட்டார் என்னை.

அவர் வீட்டுக்குள் அழைத்து சென்றார் வாடா வடுவா உன்ற புடுக்கை இண்டைக்கு நான் வெட்டுற என்று சொல்லி இழுத்துக்கொண்டு போன அவ இரும் இவ்விடத்தில் இரும் என்றா நானும் உன்மையாகத்தான் அறுக்க போகிறாறோ என நினைத்து காற்சட்டை பைக்குள் இருந்து கையை எடுக்கல. அறுத்து விடுவாவோ என்ற பயத்தில 

 

தொடரும் ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ள போனவ நிறைய இனிப்புக்களையும் டொபியையும் இன்னும் சில பிஸ்கட்களையும் தந்தார் இனி அந்த மணியை ஆட்டக்கூடாது சரியா. ம்ம் உனக்கு சொக்கா வேணுமென்றால் இங்க வா அப்பச்சியும்  நானும் தான் இருக்கிறம். இங்க எங்கட பிள்ளை ஒன்றை தேடி வந்திருக்கிறம் இங்க சரியா ம்ம் வாங்கின அத்தனை இனிப்பு பொருட்களையும் சந்தோஷத்தில வீட்டுக்கு எடுத்து வந்தால். அம்மாவோ உனக்கு ஏது இவ்வளவு பொருட்கள் என கேட்டு காதை திருக அந்த எதிர்வீட்டு ஆச்சியோ ஓடி வந்து  நடந்ததை சொல்ல மீண்டும் அம்மா காதை திருகினா.

அந்த இனிப்பை வாங்கியற்கு அல்ல அந்த மணியை இனி தட்டுவையா என்று கேட்டு இல்ல இல்ல என்று  நானும் கத்த. விடுங்க பிள்ள சின்ன பொடியந்தானே என்ன தெரிய போகிறது என்று அந்த ஆச்சி  சொல்ல அம்மா காதிலிருந்து கையை எடுத்தா அன்று ஆரம்பமாகிறாது அம்மாக்களின் நட்பு. 

நானும் அவர் வீட்டுக்கு அடிக்கடி  செல்வேன் அந்த நேரம் எல்லாம் அந்த வீட்டுக்கார ஆச்சியின் கணவரோ இருக்கமாட்டார். இந்த ஆச்சியோ யாரையோ நினைத்து அழுதுகொண்டிருக்கும் நான் வீட்டுக்குள் போகும் போது சேலையால் கண்களை துடைத்து விட்டு ஓடி வா ராசா என்ன சாப்பிட்டயா நானும் சாப்பிட்டாலும் இல்லையென்பேன் ஏதாவது கள்ள தீன் கிடைக்குமே என்ற எண்ணத்தில்  உடனே கொதிக்க கொதிக்க பிளேன் டீயும் கடிக்க எதாவது தந்துவிட்டு என்னை தடவிகொண்டிருக்கும் அந்த கைகள் .

ஏன் டா நாங்க செத்தா கொள்ளி போடுவையா ? அடுப்பிலதானே ஓம் போடுவன் சிரித்த கிளவி அடுப்புக்கு இல்லையடா எனக்கும் அவருக்கும்.  ஏன்ஆச்சி உங்களுக்கு பிள்ளைகள் இல்லையாகண்களில்   நீர் கரை தேடி ஓடுவதை போல நிலத்தில் விழ ஆரம்பக்கிறது அழாதீங்க அழாதீங்க என்றேன் நான். அவவோ  என்ற பிள்ளையை  பிடிச்சிட்டு போயிட்டாங்கடா பொலிஸ்காரங்க  அவனைத்  தேடித்தான் இந்த ஊருக்கு வந்தன் ரெண்டு பெண்   வேற நாட்டுக்கு போயிட்டாங்க எந்த நாட்டில் இருக்கிறாங்கள் எங்கு இருக்கிறாங்கள் என்று தெரியல. நானும் என்ற கடைசி மகனை தேடி தேடி ஊர் ஊராக திரியுறோம் இன்னும் அவன் கிடைக்கல என்று அழுது முடித்தார்

அந்த படலை மணி அவனுக்குத்தான் கட்டியது வெளியே போகும் அப்பச்சி அவனை கூட்டிக்கொண்டு வரமாட்டாரா? என்ற ஏக்கத்தில் அந்த மணியோசை காதில் கேட்க காத்திருப்பேன் என்றார் அன்றிலிருந்து அந்த மணியை நான் தட்டுவதும் கிடையாது யாரையும் தட்ட விட்டதும்  கிடையாது .

கவலைப்படாதீங்க ஆச்சி நான் இருக்கன், எங்க அம்மா இருக்காவு, அப்பா இருக்கிறார், என்ற அக்கா இருக்காவு இனி நீங்கள் எங்கவும் போக வேண்டாம் இந்த இந்த ஊரில் இருங்க எங்களோட  இருங்கள் நான் இருக்கிறன் சரியா அவர் கண்ணை துடைத்த என் கைகளை கொஞ்சி விடுகிறார் அப்பச்சியும் வருகிறார்.

என்ன அப்பச்சி அண்ணனை தேடுன நீங்களோ? ஓமடா உன்னைப்பத்தித்தான் மனிசி சொல்லிச்சி இண்டைக்குத்தான் பார்க்க முடிஞ்சிது.  என்ற அவர் சொக்கை திருகிவிட்டு உள்ளே சென்றார்  உள்ளே சென்ற அவர் மனிசியிடம் காதில் புறு புறுப்பது   எனக்கும் கேட்க மனிசியோ தேம்பி தேம்பி அழுவது எனக்கு சஞ்சலத்தை உண்டாக்க நாளை வருகிறேன் என நான் படலைக்கு கீழாக புகுந்து வெளியே வந்து விட்டேன் .

இப்படி நாள் தோறும் இருவரும் அடிக்கடி வீட்டை பூட்டிக்கொண்டுமனுக்கள் கொடுப்பது போட்டோவை காண்பித்தும் கேட்பதும் அவர்கள் நாளாந்த நடவடிக்கை ஆகிவிட்டது காலம் பதில் சொல்ல மறுத்தது !!!!

32452593_244747826289728_490025245429517

 இப்படி நாட்களும் வருடங்களும் கிழித்த கலண்டர்களும் வருடங்களை கணக்கிட்டது. இப்போ 2018 எனக்கு வயது 18 இருவரும் உள்ளே தினம் தினம் செத்து இருக்கிறார்கள் அவனை தேடி. கொடுக்காத கடிதங்கள் அல்ல பார்க்காத இடங்கள் இல்லை ஆனால் கொண்டு போனவர்களுக்கு மட்டுமே தெரியும் அவர்கள் என்ன ஆனார்கள் என்று.  மனிசியும்  என்னை அடிக்கடி கூப்பிட்டு என்னை மறந்திராதடா இல்லை ஆச்சி நான் மறக்க மாட்டன் என சொன்ன எனக்கு அடுத்த நாள் ஆச்சி படுக்கையிலே இறந்து போன செய்தி கேட்டு யாருக்குமே இந்த நிலை வரக்கூடாது இறைவா என இல்லாத கடவுளை வேண்டியவன் போல அந்த ஆச்சி  சொன்னது போலவே அவருக்கு  கொள்ளி வைக்க என்னைத்தான் கூப்பிட்டார்கள். அந்த அப்பச்சிக்கும் எங்கள்குடும்பத்துக்கும் இந்த செய்தியை தாங்க சக்தியில்லாமல் அங்கே கிடந்தோம் அழுதழுது.

ஒருவரை கொன்று விட்டால் நிம்மதியாக வாழ்ந்திடலாம் நினைப்போடு ஆனால் ஒருவரை கைதாக்கி கொண்டு போனவருக்கு   என்ன நடந்திருக்கும்! ஏது நடந்திருக்கும் ! என்று வாழ்வது  யாருக்கும் வரக்கூடாது என்ற நினைவுகள்  அந்த சிமிழி விளக்கின் ஒளியில்  அணைந்த நினைவுகள் அவை.

நாட்கள் கழிந்தன அப்பச்சியின் பெண் பிள்ளைகள் மட்டும் கன இடங்கள் தேடி கண்டு பிடித்து பேர பிள்ளைகளுடன் வரவே அப்பச்சியும் அளவிலா சந்தோஷத்தில் மகிழ்கிறார். ஒரு துன்பம் ஒரு இன்பம் இது வாழ்வியலின் பக்கம்.  அப்பச்சியும் தேடி   கொடுத்த அனைவரிடமும் அந்த வீட்டு முகவரியை மட்டும் என்னிடம் தந்து விட்டும் கடிதங்களோ  யாரும் தேடிக்கீடி வந்தாலோ என்னை தொடர்பு கொள்ளு மகன். என்று சொல்லி  கொள்ளி வைத்த கதையை மகள்களிடன் சொல்லி விட்டு அந்த நினைவுகளிலிருந்து நாடு விட்டு கடந்து சென்றுவிட்டார்.  நானோ அந்த படலை மணி சத்தம் கேட்காதோ ஆச்சியின் ஆத்தாமாவும் சாந்தி பெறாத என்ற நினைப்பில் தினம் தினம் படலையை நோக்கியவாறு பயணிக்கிறேன் .

யாவும் கற்பனை என்று சொல்ல முடியல     படங்கள் இணையத்தில் எடுத்தவை 

 

 

 

Link to comment
Share on other sites

சிறிய கதையாகினும் நல்லதொரு கதை.  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்களின் துயரம் கொடுமையானது. ஒவ்வொரு வேளை உண்ணும் போதும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் சாப்பிட்டு இருப்பார்களா என நினைத்து கவலைப்பட வைக்கும்.

தனி, எழுதும் போது முற்றுப் புள்ளிகள், கமா என்பனவற்றை அதற்கேற்ற இடங்களில் பயன்படுத்தலாமே. முற்றுப்புள்ளிகள் இல்லாமல் வாசிப்பது கொஞ்சம் கடினமாகவும் கதையின் ஆழத்தை உணர்வதற்கு இடைஞ்ச்சலாகவும் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வாடா வடுவா உன்ற புடுக்கை இண்டைக்கு நான் வெட்டுற என்று சொல்லி

நீண்ட நாளுக்குப் பின் கேட்கும் சம்பாசணை மிகவும் சிரிப்பாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யாவும் கற்பனை ன்று சொல்ல முடியல     படங்கள் இணையத்தில் எடுத்தவை 

உண்மை தான் கற்பனை என்று கடந்து செல்ல முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2018 at 8:21 PM, நிழலி said:

சிறிய கதையாகினும் நல்லதொரு கதை.  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்களின் துயரம் கொடுமையானது. ஒவ்வொரு வேளை உண்ணும் போதும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் சாப்பிட்டு இருப்பார்களா என நினைத்து கவலைப்பட வைக்கும்.

தனி, எழுதும் போது முற்றுப் புள்ளிகள், கமா என்பனவற்றை அதற்கேற்ற இடங்களில் பயன்படுத்தலாமே. முற்றுப்புள்ளிகள் இல்லாமல் வாசிப்பது கொஞ்சம் கடினமாகவும் கதையின் ஆழத்தை உணர்வதற்கு இடைஞ்ச்சலாகவும் இருக்கு.

நன்றி சில எண்ணங்களை கதையாக்க நினைக்கும் போது முற்றுப்புள்ளி கமாக்களை மறந்து அதை எழுதிவிட தோன்றும் அந்த நினைப்பில் அவைகளை மறந்து விடுகிறேன் இனி எதாவது எழுத நினைக்கையில் சரி பார்க்கிறேன் 

கருத்துக்கும் நன்றி இழந்தவர்களின் சோகங்களை சொல்ல  வார்த்தைகள் இல்லை 

On 8/9/2018 at 9:13 PM, ஈழப்பிரியன் said:

நீண்ட நாளுக்குப் பின் கேட்கும் சம்பாசணை மிகவும் சிரிப்பாக இருந்தது.

கிழக்கில் பேச்சு வழக்கில் இருக்கும் சிறு குழந்தைகளிடம் பெரியவர்கள் அன்பாக பேசிக்கொள்வது தான் இந்த சம்பாசணை 

 

On 8/9/2018 at 9:21 PM, ஈழப்பிரியன் said:

உண்மை தான் கற்பனை என்று கடந்து செல்ல முடியவில்லை.

ம்ம் நிட்சயமாக உண்மைதான் அண்ணை கருத்துக்கு மிக்க நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறப்பைவிட காணாமல் போவது மிகவும் கொடுமையானது. நம்பிக்கையும் அவநம்பிக்கையும் மாறிமாறி வாழ்வை அலைக்கழிக்கும். 

சிறிய கதை ஆனாலும் நடப்பில் உள்ள அனுபவம் இப்படித்தான் காணாமல் போனவர்கள் பலரின் உறவுகளுக்கு உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2018 at 7:47 PM, கிருபன் said:

இறப்பைவிட காணாமல் போவது மிகவும் கொடுமையானது. நம்பிக்கையும் அவநம்பிக்கையும் மாறிமாறி வாழ்வை அலைக்கழிக்கும். 

சிறிய கதை ஆனாலும் நடப்பில் உள்ள அனுபவம் இப்படித்தான் காணாமல் போனவர்கள் பலரின் உறவுகளுக்கு உள்ளது.

ஓம் ஓம் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள் மனதில் இறக்கிவைக்க முடியாத மனபாரத்தில் கிருபன் tw_cold_sweat:

நன்றி கருத்துக்கு 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தனி படலையில் அடித்த மணி எம் மனங்களை கனக்க வைத்து விட்டது. இழப்பு என்பது எவராலும் ஏற்றுக்கொள்ள கஸ்ரமாக இருந்தாலும் நாளடைவில் மனம் ஏற்றுக்கொள்ளப் பழகி விடும். ஆனால் இப்படி வாழ்வா சாவா என்ற போராட்டத்துடன் வாழ்வது மிகவும் சிரமமான ஒன்று. இன்னும் எத்தனை ஆயிரம் உறவுகள் இப்படியான போராட்டத்துடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நல்லதொரு ஆக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கற்பனையானால் என்ன, இது போன்ற பல நிஜங்கள் எம் மனங்களை ஈரம் வற்றிய கல்லாக மாற்றி விட்டன.மனம் கனத்து நிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் தனி....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/14/2018 at 4:55 AM, Kavallur Kanmani said:

தனி படலையில் அடித்த மணி எம் மனங்களை கனக்க வைத்து விட்டது. இழப்பு என்பது எவராலும் ஏற்றுக்கொள்ள கஸ்ரமாக இருந்தாலும் நாளடைவில் மனம் ஏற்றுக்கொள்ளப் பழகி விடும். ஆனால் இப்படி வாழ்வா சாவா என்ற போராட்டத்துடன் வாழ்வது மிகவும் சிரமமான ஒன்று. இன்னும் எத்தனை ஆயிரம் உறவுகள் இப்படியான போராட்டத்துடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நல்லதொரு ஆக்கம்

நன்றி கண்மணி அக்கா 

 

19 hours ago, suvy said:

இதில் கற்பனையானால் என்ன, இது போன்ற பல நிஜங்கள் எம் மனங்களை ஈரம் வற்றிய கல்லாக மாற்றி விட்டன.மனம் கனத்து நிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் தனி....! 

நன்றி சுவி அண்ணன் மீண்டும் உங்களை நிரந்தரமாக ஊரில் இருக்க காணவும் ஆசை 

கல்லாகிறது மனது சில சம்பவங்களால் சாம்பலும் ஆகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் கனத்துப் போனது உங்கள் கதைவாசித்து. இறந்துவிட்டால் ஒரு துன்பம். இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் இருப்பது கொடுமையினுச்சம். இன்னும் எத்தனை பேர்கள் இப்படி????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/22/2018 at 2:04 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனம் கனத்துப் போனது உங்கள் கதைவாசித்து. இறந்துவிட்டால் ஒரு துன்பம். இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் இருப்பது கொடுமையினுச்சம். இன்னும் எத்தனை பேர்கள் இப்படி????

அது யாரும் அறியார் ........................

நன்றி கருத்துக்கு சுமேரி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதலில் ஐபிஎல் எஃபெக்ட்; ரன் குவிப்புக்கு உதவிய மைதான 'ரகசியம்' பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் ஐபிஎல் டி20 போட்டியை பார்த்தபின் அதுபோன்று டி20 உலகக் கோப்பை இல்லையே என்று ரசிகர்களுக்கு இருந்த ஏக்கம் நேற்று மாறியது. பேட்டர்களின் ஆதிக்கம், சிக்ஸர்கள், பவுண்டரிகளை பறக்கவிடும் ஆட்டத்தைப் பார்த்த மனநிறைவு நேற்று ரசிகர்களுக்கு ஏற்பட்டது. பர்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுன் நகரில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் பி பிரிவில் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலியா அணி. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். வார்னர், ஹெட் அதிரடி தொடக்கம் இங்கிலாந்து அணி தனது டி20 வரலாற்றில் முதல்முறையாக சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து பந்துவீச்சைத் தொடங்கியது. ஆனால், காய்ந்துபோன பர்படாஸ் விக்கெட்டில் இந்த பந்துவீச்சு எடுபடவில்லை. மொயின் அலி வீசிய முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட், வார்னர் ஜோடி 3 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இருவருமே இடதுகை பேட்டர்கள் என்பதால், ஆப் ஸ்பின்னர் மொயின் அலியைப் பயன்படுத்தினர். ஆனால், 14 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே பந்துவீசிய அனுபவம் கொண்ட வில் ஜேக்ஸுக்கு பந்துவீச கேப்டன் பட்லர் வாய்ப்பளித்தார். ஆனால், ஜேக்ஸ் பந்துவீச்சை வெளுத்த வார்னர் 4 பந்துகளில் 3 பவுண்டரிகளை விளாசினார். அதன்பின் மார்க் உட் பந்துவீச வந்தபின், வார்னர், ஹெட் வெளுத்து வாங்கினர். குறிப்பாக குறைந்த தொலைவு கொண்ட ஸ்குயர் பவுண்டரி பகுதியில் 3 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் வார்னர் வெளுத்தார். வார்னர் அதிரடியாக ஆடி வந்த நிலையில் மொயின் அலி பந்துவீச்சில் தாழ்வாக வந்த பந்தை அடிக்க முற்பட்டபோது போல்ட் ஆகி 39 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு வார்னர்-ஹெட் ஜோடி 4.6 ஓவர்களில் 70 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் சேர்த்தனர். காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் பழைய வேகம், ஸ்விங் காணப்படவில்லை. தோள்பட்டை வலி காரணமாக பந்துவீச்சு ஆக்ஸனை மாற்றியதால், ஆர்ச்சரின் பந்துவீச்சின் வேகம் குறைந்துவிட்டது. இருப்பினும் பர்படாஸ் மைதானத்தில் ஹெட்டை கிளீன் போல்டாக்கி முதல் விக்கெட்டை ஆர்ச்சர் எடுத்தார். டி20 உலகக் கோப்பையில் பவர்ப்ளேயில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 74 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் மிட்ஷெல் மார்ஷ்(35), மேக்ஸ்வெல்(28), ஸ்டாய்னிஷ்(30) என நடுவரிசை பேட்டர்கள் விரைவாக ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால் 15 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் ஸ்டாய்னிஷ், டிம் டேவிட்(11) மேத்யூ வேட்(17) ஆகியோரின் கேமியோ 200 ரன்களைக் கடக்க உதவியது.   பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து பந்துவீச்சு படுமோசம் நடப்பு சாம்பியன் என்று சொல்லும் அளவுக்கு இங்கிலாந்து பந்துவீச்சு தரமானதாக இல்லை. 7 பந்துவீச்சாளர்களில் ஆர்ச்சர், லிவிங்ஸ்டன் தவிர மற்றவர்கள் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். அதிலும் மார்க் உட் பந்துவீச்சில் பந்து எந்தவிதமான ஸ்விங்கும் ஆகாமல் நேராக பேட்டரை நோக்கியே வந்தது அடித்து ஆட வசதியாக இருந்தது. அதேபோல கிறிஸ் ஜோர்டன், அடில் ரஷித் இருவரும் ரன்களை வாரி வழங்கினர். கட்டுக்கோப்புடன், லைன் லென்த்தில் இங்கிலாந்து பந்துவீசியிருந்தால், ஆஸ்திரேலியாவை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சால்ட், பட்லர் நம்பிக்கை சவாலான இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பட்லர்(42), பில் சால்ட்(37) இருவரும் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். குறிப்பாக ஹேசல்வுட், ஸ்டார்க் இருவரின் பந்துவீச்சையும் சால்ட், பட்லர் வெளுத்துக் கட்டினர். ஸ்டார்க் பந்துவீச்சில் 106 மீட்டர் சிக்ஸரை சால்ட் அடித்தபோது, கொல்கத்தா அணியின் சக வீரரான சால்ட்டைப் பார்த்து ஸ்டார்க் சிரித்துக்கொண்டே சென்றார். வழக்கமாக இங்கிலாந்து-ஆஸ்திரேலிய வீரர்கள் முறைத்துக் கொள்ளும் சூழலில் ஐபிஎல் தொடர் இரு நாட்டுவீரர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டார்க் வீசிய 7வது ஓவரில் பட்லர், சால்ட் சேர்ந்து 19 ரன்கள் சேர்த்தனர். இருவரையும் பிரிக்க ஆடம் ஸம்பா கொண்டுவரப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES திருப்புமுனை ஓவர்கள் ஸம்பா வீசிய முதல் ஓவரில் சால்ட் தாழ்வாக வந்த பந்தை அடிக்க முற்பட்டு போல்டாகி வெளியேறினார். ஸம்பாவின் 2வது ஓவரில் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முற்பட்டு கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆடம் ஸம்பா எடுத்த 2 விக்கெட்டுகள்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். இந்த விக்கெட்டுகளுக்குப்பின் ஆட்டமே தலைகீழாக மாறியது. விக்கெட் சரிவு இருவரும் ஆட்டமிழந்தபின் இங்கிலாந்து பேட்டிங் வரிசையே ஆட்டம் கண்டது. பேர்ஸ்டோ 13 பந்துகளை வீணாக்கி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மொயின் அலி 3 சிக்ஸர்களை மேக்ஸ்வெல் ஓவரில் வெளுத்து 25 ரன்களில் கேமியோவுடன் பெவிலியன் திரும்பினார். லிவிங்ஸ்டன்(15), ஜேக்ஸ்(10) இருவருமே நடுப்பகுதியில் நிலைத்து ஆட தவறிவிட்டனர். ஹாரி ப்ரூக்(20), ஜோர்டன்(1) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES யாரும் அரைசதம் அடிக்கவில்லை டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியதிலிருந்து 200 அதற்கு மேலான ரன்கள் சேர்க்கப்பட்ட முதல் போட்டி இதுதான். அது மட்டுமல்லாமல் பவர்ப்ளேயில் அதிகபட்சமாக வார்னர், ஹெட் சேர்ந்து 74 ரன்கள் சேர்த்த முதல் ஆட்டமும் இதுதான். ஆஸ்திரேலிய அணியில் எந்த பேட்டரும் அரைசதம் அடிக்கவில்லை. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லர், பில் சால்ட் கூட்டணியைப் பிரித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய சுழற்பந்துவீ்ச்சாளர் ஆடம் ஸம்பா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   ரன் குவிப்புக்கு உதவிய மைதான 'ரகசியம்' கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தின் அமைப்பு ஆஸ்திரேலிய அணி 200 ரன்கள் சேர்க்க பெரிதும் உதவியது. மைதானத்தின் அமைப்பை தெரிந்து கொண்ட ஆஸ்திரேலிய பேட்டர்கள் அதை தங்களின் ரன் குவிப்புக்கு சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். அதாவது இந்த மைதானத்தின் ஒருபுறம் ஸ்குயர் பவுண்டரி அளவு மற்றொரு புற பவுண்டரி அளவைவிட 9 மீட்டர் குறைவாக 58 மீட்டர் அளவுடையது. இதனால் குறைந்த தொலைவுள்ள பக்கத்தில் பவுண்டரி, சிக்ஸர் அடிப்பது பேட்டர்களுக்கு எளிதாக இருக்கும் என்பதால், இரு அணியின் பேட்டர்களும் அந்தப்பகுதியை குறிவைத்தனர். இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் வில் ஜேக்ஸ் தொடக்கத்திலேயே பந்துவீச, அதை சரியாகப் பயன்படுத்தி வார்னர் 3 சிக்ஸர்களை சிறிய ஸ்குயர் பவுண்டரி பகுதியில் விளாசினார். மார்க் உட் வீசிய ஓவரையும் வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் இதே பகுதியில் 22 ரன்களைக் குவித்தனர். இதே பாணியைக் கடைபிடித்த இங்கிலாந்து வீரர்கள் ஜாஸ் பட்லர், பில் சால்ட் இருவரும் துவக்கத்தில் ஆஸ்திரேலியப் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஸ்டார்க் ஓவரில் 3 சிக்ஸர்களை பட்லரும், சால்ட்டும் பறக்கவிட்டு, மைதானத்தின் சூரிய ஒளித் தகட்டை உடைத்தனர். பவர்ப்ளேயில் 54 ரன்களை இங்கிலாந்து எட்டுவதற்கு மைதானத்தின் பவுண்டரி எல்லைக்கான தூரம் குறைவான பகுதியும் உதவியது. பட்லர், சால்ட் ஜோடி 73 ரன்கள் எடுத்தது. இருவரையும் தனது அடுத்தடுத்த ஓவர்களில் ஆடம் ஸம்பா வெளியேற்றியபின். இங்கிலாந்து பேட்டிங் வரிசையே ஆட்டம் கண்ட, அடுத்த 92 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது. குறிப்பாக நடுவரிசை பேட்டர்கள் யாரும் ஆஸ்திரேலியப் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES "பாடங்களைக் கற்றுக்கொண்டோம்" வெற்றிக்குப் பின் ஆஸ்திரேலிய கேப்டன் மிட்ஷெல் மார்ஷ் கூறுகையில் “ சிறந்த ஆட்டம், அனைத்து தரப்பிலும் சிறப்பாகச் செயல்பட்டோம். பவர்ப்ளேதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தது. முதல் போட்டியில் பல பாடங்களைக் கற்றுக்கொண்டோம். பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்தனர், அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். கம்மின்ஸ் சிறப்பாகப் பந்துவீசினார். அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களிடம் இருந்து கட்டுக்கோப்பான பந்துவீச்சும், ஓவர்களும் தேவை என்பதை நிரூபித்தார். இந்த சூழலை, காலநிலையை, காற்று அடிக்கும் திசையை பார்த்துவிட்டோம். இனி அதற்கு ஏற்றாற்போல் எங்களை மாற்றுவோம். தொடர்ந்து வெற்றிகளைப் பெற முயல்வோம்” எனத் தெரிவித்தார்.   இங்கிலாந்துக்குச் சிக்கல் ஆஸ்திரேலிய அணி தனது வெற்றி மூலம் சூப்பர்-8 சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. ஆனால், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை சிக்கலில் கோர்த்துவிட்டுள்ளது. தற்போது 2 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா வலுவாக முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், இங்கிலாந்து அணிக்கு முதல் போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளி கிடைத்தது. இந்த ஆட்டத்தில் தோல்வியால் 2 போட்டிகளில் ஒரு புள்ளியுடன் இருக்கிறது. 2வது இடத்தில் 3 புள்ளிகளுடன் ஸ்காட்லாந்து இருக்கிறது. ஆதலால், இனிவரும் இரு ஆட்டங்களிலும் இங்கிலாந்து அணி கட்டாயம் வென்று நிகர ரன்ரேட்டை உயர்த்த வேண்டும். அதேசமயம், ஸ்காட்லாந்து அணி அடுத்துவரும் இரு போட்டிகளிலும் தோற்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் இங்கிலாந்து அணி லீக் சுற்றோடு நடையைக் கட்ட வேண்டியதிருக்கும். https://www.bbc.com/tamil/articles/ce441vxgddwo
    • செந்தமிழன் சீமான் அண்ணா தமிழகத்தில் தனக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கமட்டும் காத்திருக்கின்றார்!   இந்திய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அத்தனை மக்களுக்கும் நினைவு வணக்கம்!
    • பழைய பாண்டவர் அணி நினைவில் வந்து  துலைக்குது.  தமிழக அரசியலில் வைகோ போன இடமெல்லாம் விளங்கும்! 😂
    • அண்ணாமலை உண்மையில் தனக்கென்று தலைவருக்குண்டான தகுதியோ செல்வாக்கோ இல்லாத நபர் என்று தான் போட்டியிட்ட கோவை தெகுதியில் நிருபித்திருக்கிறார். அண்ணாமலை பெற்றது மிகப்பெரிய தோல்வி அந்த தொகுதியில் ஏற்கனவே கோவை தொகுயில் 2014 ல் பாசக தனித்து போட்டியிட்டது 2014 நிலவரம் பதிவான வாக்குகள் -1159192 ராதாகிருஷ்ணன் பாசக -389701 அதிமுக -431717 திமுக -217083 காங்கிரஸ் -56902 2024 பதிவான வாக்குகள் 1366177 பாசக -450132 திமுக -568200 அதிமுக -236490 நாதக-82657 இப்போது புரிகிறதா ஏற்கனவே மிக வலுவான வாக்கு வங்கி உள்ள இடத்திலேயே புதிய வாக்காளர் இரண்டு லட்சம் சேர்த்து கூட அண்ணாமலையால் இந்த தொகுதியில் தலைவர் என்ற முறையில் செயிக்க முடியவில்லை வாக்கு வங்கியையும் உயர்த்த முடியவில்லை. ஆனால் தான் போலி தலைவர் என்ற உண்மை தெரிந்தும் தன்னால் பாசக வளர்ந்து வாக்கு வங்கி உயர்ந்து விட்டது என்று பிம்பத்தை கட்டமைக்க முயல்கிறார். இதே போல் தான் நாகர்கோவில் கன்னியாகுமரி தொகுதிகளும். இவரை தலைவர் என்று ஒரு அறிவிலி கூட்டம் நம்பிகொண்டிருக்கிறது          
    • மேற்கிந்தியத் தீவுகள் 144 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள்  173/5 உகண்டா  39/10
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.