Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் மக்கள் நிம்மதியாக வாழும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக இராணுவத்தளபதி தெரிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MG_4862-720x450.jpg

யாழ் மக்கள் நிம்மதியாக வாழும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக இராணுவத்தளபதி தெரிவிப்பு!

யாழ்.மாவட்ட மக்கள் நிம்மதியாக வாழும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ’30 வருடங்கள் துரதிஸ்டவசமாக இராணுவம் ஆயுதங்களை தாங்கி போராடவேண்டிய நிலை உருவானது. ஆனால் ஆயுதத்தால் பேச முனைந்தவர்களுடனேயே இராணுவம் போராட்டம் நடாத்தியது.

அது தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. போர் காலத்திலும், போருக்கு பின்னரும் தமிழ் மக்களுடன் இராணுவத்திற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை.

போர் காலத்தில் தமிழ் மக்கள் இன்னல்களை சந்தித்தார்கள் என்பது எமக்கு நன்றாக தெரியும். 30 வருடகால போரில் பல அழிவுகள் இடம்பெற்றதும் தெரியும். அவற்றை 9 வருடங்களில் மீட்டெடுக்க முடியாது.

ஆனால் இராணுவத்தால் முடிந்தளவு மீட்டுக் கொடுப்பதற்கு இராணுவம் முயற்சிக்கும். அந்த முயற்சியில் 100 வீதம் இராணுவம் முயற்சிக்கும். குறிப்பாக இராணுவம் வீடுகளை அமைத்துக் கொடுக்கிறது, மலசல கூடங்களை அமைத்துக் கொடுக்கிறது.

வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இதற்கும் மேலாக இராணுவத்தின் வசம் உள்ள காணிகளில் கூட அந்த காணிகளுக்கு சொந்தமான மக்களுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தென்னை மரங்களையும், பனை மரங்களையும் இராணுவம் நாட்டியிருக்கின்றது.

இதேபோல் கரையோர வள பாதுகாப்பு மற்றும் வனவள பாதுகாப்பு போன்றவற்றிலும் இராணுவம் தொடர்ச்சியாக அக்கறை காட்டி வருகின்றது. யாழ்.மாவட்ட மக்கள் நிம்மதியாக வாழும் நாளை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்’ என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/யாழ்-மக்கள்-நிம்மதியாக-வ/

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிட்டமல்ல‌......வாள் வெட்டு நடக்காதாம்....

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

MG_4862-720x450.jpg

யாழ் மக்கள் நிம்மதியாக வாழும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக இராணுவத்தளபதி தெரிவிப்பு!

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ’30 வருடங்கள் துரதிஸ்டவசமாக இராணுவம் ஆயுதங்களை தாங்கி போராடவேண்டிய நிலை உருவானது. ஆனால் ஆயுதத்தால் பேச முனைந்தவர்களுடனேயே இராணுவம் போராட்டம் நடாத்தியது.

ஆயுதத்தால் பேசுமுன்பு வாயால் பேசியவர்களின் வாய்களுக்கு இவர்கள் பால்சோறு ஊட்டிப் பாதுகாத்தனரா...??

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Paanch said:

ஆயுதத்தால் பேசுமுன்பு வாயால் பேசியவர்களின் வாய்களுக்கு இவர்கள் பால்சோறு ஊட்டிப் பாதுகாத்தனரா...??

பின்ன .....பால்சோறு மட்டுமே ,கவுண்கொண்டையும் சேர்த்து கொடுத்தவையளாம் .....எங்கன்ட ஆட்கள் தான் பால் காணாது,சீனி காணாது என்று சொல்லி துப்ப அவையளுக்கு கோபம் வந்திட்டாம் ....என எங்கன்ட டமிழ் சகோதரஜாக்கள் எழுதிகொண்டு திரியினம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Howlsnow.jpg

ஆடு நனையுதென்று ஓநாய் அழுததாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

 

Howlsnow.jpg

ஆடு நனையுதென்று ஓநாய் அழுததாம்.

அதுவும் சும்மா அழுகையல்ல ஒப்பாரி வைத்து அழுததாம்...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

யாழ் மக்கள் நிம்மதியாக வாழும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக இராணுவத்தளபதி தெரிவிப்பு!

யாழ்.மாவட்ட மக்கள் நிம்மதியாக வாழும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

யாழ் மக்கள் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதாக அங்கிருந்து யாழுக்கு வரும் விற்பன்னர்கள் அறிக்கை விடும்போது நீங்கள் அவர்களுடைய நிம்மதி எப்போது வரும் என எதிர்பார்க்கின்றீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஓரளவு நிம்மதியாக வாழ்கிறார்கள் ஆனால் இலங்கை கொந்தளித்துதான் இருக்க வேண்டும் என்று சிலர் இன்னும் நினைக்கிறார்கள் அவர்களுக்கு என்ன லாபமோ என்ன:27_sunglasses::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் எல்லா ஆக்கிரமிப்பாளனதும்.. இனப்படுகொலையானதும்.. பொதுக்குணம். 

அதாவது உரிமை கேட்கும் மக்கள் மீது எல்லா விதமான அழுத்தங்களையும் அடக்குமுறைகளையும் பிரயோகித்து.. அவர்களை துன்பத்தின் அவலத்தின் உச்சியில் நிறுத்தி விட்டு.. பின் அவர்களை அடிமைகளாக்கி கொஞ்ச வசதிகளை செய்து கொடுத்து.. அதில்.. பிரமிக்க வைச்சே.. தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வது.

எப்போது நிராயுதபாணிகளான தமிழ் மக்கள் மீது இதே சிங்கள இராணுவமும் காடைகளும் வன்முறைகளை அடக்குமுறைகளை கலவரங்களை.. இனப்படுகொலைகளை கட்டவிழ்த்து விட்டார்களோ.. அதன் போதே தமிழ் மக்கள் தற்காக்க ஆயுதம் தூக்கினார்கள்.. தமது உரிமைகளை மீட்கப் போராடினார்கள் என்ற உண்மையை.. போராடிய மக்களில் ஒரு தொகுதியிடம் மறக்கச் செய்தது கூட.. இந்த ஆக்கிரமிப்பாளனின் வெற்றியே.

இன்று அந்த மக்கள் தமக்குள் தெளிவுபடுத்தலுக்கு முதலில் போராட செய்யப்பட்டுள்ளார்கள். மிகவும் திட்டமிட்ட..  மிக மோசமான அடக்குமுறையாளர்கள் என்றால்.. அது சொறீலங்கா அரசும்.. அதன் ஏவல் இயந்திரமுமான.. சொறீலங்கா இராணுவப் பயங்கரவாதிகளுமே ஆவர். 

இங்கு யாருமே இலங்கைத் தீவு பற்றி எரியனும் என்று விரும்பவில்லை. ஆனால்.. அங்கு வாழும் மக்களுக்கு அவரவர் உரிமைகள் கிடைத்து அவரவர் தாமே தம்மை ஆளும் தகுதியோடு நீடித்து அமைதியாகவும்.. தாம் விரும்பிய வடிவில்.. அபிவிருத்திகளைக் கண்டும் வாழனும் என்பதே விருப்பு.

அதற்கு தடையாக உள்ள சிங்கள இனவெறி பேரினவாத அரசுகளினதும்.. அவற்றின் ஏவல் கூலிகளுமான.. சொறீலங்கா முப்படைகளும் காவல்துறையும்.. தமிழர் தாயக மண்ணில் இருந்து முற்றாக வெளியேறும் நாளில் அனுபவிக்கப்படும்.. அமைதியே நிரந்தரமானதாக.. முழு நிம்மதியானதாக இருக்க முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஓரளவு நிம்மதியாக வாழ்கிறார்கள் ஆனால் இலங்கை கொந்தளித்துதான் இருக்க வேண்டும் என்று சிலர் இன்னும் நினைக்கிறார்கள் அவர்களுக்கு என்ன லாபமோ என்ன:27_sunglasses::unsure:

நான் யாழ் மக்கள்  நிம்மதியாக வாழ்கின்றார்களா என்பதையே சுட்டிக் காட்டி எழுதினேன்.

நீங்கள் இலங்கை கொந்தளிப்பதைப்பற்றி அக்கறையாக இருப்பது தெரிகின்றது .?   

  • கருத்துக்கள உறவுகள்

நேேரம் பார்த்து வலை வீசுகிறார்  விழுமா மீன்கள்?

On 11/8/2018 at 10:18 AM, தமிழ் சிறி said:

யாழ் மக்கள் நிம்மதியாக வாழும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக இராணுவத்தளபதி தெரிவிப்பு!

ஒரு சிங்கள-பௌத்த பயங்கரவாதியின் ஊளையிடல்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.