Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அருட்தந்தை இறந்த இடத்தை தேடிச் சென்ற மௌலவி! அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த மனதை உருக்கும் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அருட்தந்தை இறந்த இடத்தை தேடிச் சென்ற மௌலவி! அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த மனதை உருக்கும் சம்பவம்

Report us Sujitha Sri 25 minutes ago

தமிழர்களுக்கும், ஏழை குழந்தைகளுக்கும் அளப்பறிய சேவைகளை ஆற்றிய அருட்தந்தை செற்றிக் ஜூட் ஒக்கர்ஸின் பிரிவு ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் பெரும் இழப்பாக மாறியுள்ளது.

இந்த நிலையில் அருட்தந்தையை ஒரு முறை மாத்திரமே சந்தித்த மௌலவி இல்யாஸின் செயல் இலங்கையிலுள்ள அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மௌலவி கடந்த 21ஆம் திகதி தன் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு புனித மரியாள் பேராலயத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது அருட் தந்தையின் இறுதி சடங்குகள் நிறைவேற்றப்படுவதை கண்டு அதில் தாமும் கலந்து கொண்டு பிரேத பெட்டியை சுமந்திருக்கிறார்.

இதன் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓஸானம் (விசேட தேவையுடைய குழந்தைகளை பராமரிக்கும் இடம்) நிலையத்திற்கு நேரடியாக மௌலவி ஏ.ஜே.எம்.இயாஸ் சென்று அருட் தந்தையின் பிரிவினால் வாடும் அங்குள்ள குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

அத்துடன், அருட்தந்தையை பாம்பு தீண்டிய இடத்தினையும் பார்வையிட்டிருந்தார். (மின்சார கம்பத்திற்கு அருகில் அருட் தந்தை நின்று கொண்டிருந்த போது அந்த கம்பத்தில் இருந்த பாம்பொன்றே அருட் தந்தையை தீண்டியிருந்தது.)

இன, மத, மொழி பேதங்கள் கடந்து அருட் தந்தையின் இழப்பானது பலரது மனதிலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் அருட்தந்தை பாம்புக்கடிக்கு இலக்காகி வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில் பெரும் திரளான மக்களின் ஒன்று கூடலுடனும், ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீரோடும் அருட்தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதேவேளை இந்த சம்பவமானது இன, மத, பேதங்களை கடந்த மனிதம் இந்த உலகில் காணப்படுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/community/01/202491?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அருட் தந்தை அனைத்து மக்களுக்கும் உதவியவர் என்று நினைக்கிறன்...நிறைய மக்கள் அவரது இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு இருந்தனர்...நல்லவர்கள் எல்லாம் சீக்கீரம் இறந்து போகிறார்கள்...ஆத்மா சாந்தியடையட்டும் 😭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருட்தந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும்.

21 minutes ago, ரதி said:

நல்லவர்கள் எல்லாம் சீக்கீரம் இறந்து போகிறார்கள்.

அதென்றால் உண்மைதான்...:(

  • கருத்துக்கள உறவுகள்

மனிதம் இடைக்கிடை தன்னை அடையாளம் காட்டிக்கொள்வதால் தான் .... இந்த உலகம் .,, இன்னும் உயிர்.வாழக்கூடிய இடமாக உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

நல்லவர்கள் எல்லாம் சீக்கீரம் இறந்து போகிறார்கள்...

 

12 hours ago, குமாரசாமி said:

அதென்றால் உண்மைதான்...:(

மற்றவர்களிலும் பார்க்க அதிகமாக தம்மை நேசிப்பவர்கள் நீண்ட காலம் வாழும் சாத்தியம் கூட. அவர்களில் நீங்களும் நாங்களும் ஒரு சிலர்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் மதங்களைக் கடந்து வாழ்பவர்கள்.....! 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான ஒரு இஸ்லாமியர்

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் நாங்கள் வளர்ப்பதிலே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, Jude said:

 

மற்றவர்களிலும் பார்க்க அதிகமாக தம்மை நேசிப்பவர்கள் நீண்ட காலம் வாழும் சாத்தியம் கூட. அவர்களில் நீங்களும் நாங்களும் ஒரு சிலர்.

கிண்ட வெளிக்கிடுறீங்கள்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 12/24/2018 at 12:09 PM, ரதி said:

நல்லவர்கள் எல்லாம் சீக்கீரம் இறந்து போகிறார்கள்...ஆத்மா சாந்தியடையட்டும் 😭

 

On 12/24/2018 at 12:31 PM, குமாரசாமி said:

அதென்றால் உண்மைதான்...:(

 

14 hours ago, Jude said:

 

மற்றவர்களிலும் பார்க்க அதிகமாக தம்மை நேசிப்பவர்கள் நீண்ட காலம் வாழும் சாத்தியம் கூட. அவர்களில் நீங்களும் நாங்களும் ஒரு சிலர்.

 

1 hour ago, குமாரசாமி said:

கிண்ட வெளிக்கிடுறீங்கள்? :cool:

கிண்டாமல் விட்டால் மறைந்து இருப்பது தெரிய வராதே!

நீண்டகால ஆயுளின் இரகசியத்தை சொன்னவுடன் நீங்கள் கொஞ்சம் ஆதங்கப்படுவதில் நியாயம் உண்டு தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, Jude said:

கிண்டாமல் விட்டால் மறைந்து இருப்பது தெரிய வராதே!

நீண்டகால ஆயுளின் இரகசியத்தை சொன்னவுடன் நீங்கள் கொஞ்சம் ஆதங்கப்படுவதில் நியாயம் உண்டு தான்.

மாவோ சேதுங் , ஸ்ராலின் , பிடல் காஸ்ரோ போன்றோர்..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.