Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களைத் தலைமைதாங்க விக்னேஸ்வரனே சிறந்த தலைவர்- கருத்துக்கணிப்பு தெரிவிப்பு!

Featured Replies

625.200.560.350.160.300.053.800.300.160.

தாயகத்தில் தமிழ் மக்களை தலைமைதாங்கத் தகுதியான தலைவர் சி.வி. விக்னேஸ்வரனே என்று தெரிவித்துள்ளார்கள் IBC தமிழ் இணையத்தள வாசகர்கள்.

IBC தமிழ் இணையத்தளத்தில் கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்டுவந்த கருத்துக்கணிப்பிலேயே மக்கள் தமது விருப்பை இவ்வாறு வெளியிட்டுள்ளார்கள்.

தாயகத்தில் தமிழ் மக்களை தலைமைதாங்கத் தகுதியான தலைவர் யார் என்ற கேள்விக்கு:

48.09% வீதமானவர்கள் (27,720 வாக்குகள்) சி.வீ. விக்னேஸ்வரன் என்றும், 18.68% வீதமானவர்கள் (10,768 வாக்குகள்) இரா. சம்பந்தர் என்றும், 13.82% வீதமானவர்கள் (7,968 வாக்குகள்) கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் என்றும், 3.9% வீதமானவர்கள் (2,248 வாக்குகள்) டக்ளஸ் தேவானந்தா என்றும், 15.5% வீதமானவர்கள் இவர்களைத் தவிர வெறொருவர் என்றும் வாக்குப் பதிவு செய்திருக்கின்றார்கள்.

IBC தமிழ் மற்றும் லங்காசிறி இணையத் தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் இலங்கை, இந்தியா உட்பட 17 நாடுகளைச் சேர்ந்த 57,640 பேர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91

https://www.ibctamil.com/srilanka/80/112001

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இலங்கையில் இருந்து வாக்களித்தோர் எவ்வளவு வீதத்தினர் என்று தகவல் இருக்கிறதா? விக்னேஸ்வரன் அவர்கள் நல்லவர், ஆனால் நிர்வாகத்தை நடத்த இயலாதவர் என்று மாகாண சபையிலேயே பார்த்தோம்! பேசியும் எழுதியும் காலத்தை ஓட்ட நல்ல தலைவராக இருப்பார் என நினைக்கிறேன்! 

தமிழ் மக்கள் அவரை விட சிறந்த நிர்வாகி வேறு எவரும் இல்லை என அவர்களை அனுபவத்தில் கண்டுள்ளனர்.

தமிழின படுகொலைகாரர்களுக்கு ஓடி ஓடி முண்டு கொடுக்கும் சுமந்திரனையும், நீண்ட அரசியல் அனுபவம் உடைய சம்பந்தனையும் விட பல 1000 மடங்கு வினைத்திறன் / செயற்திறன் மிக்கவர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் என்பதை வலுவற்ற மாகாணசபையை மிகத் திறமையாக நிர்வகித்து நிரூபித்துள்ளார்.

போர்குற்றவாளிகளுக்கு ஓடி ஓடி முண்டு கொடுக்கும் சுமந்திரனும், சொறிலங்காவின் அரசும், சில மோசமான மதவெறியர்களும் அவருக்கு பல்வேறு பிரச்சினைகளை பல்வேறு வடிவங்களில் கொடுத்த போதும், அவற்றையெல்லாம் தாண்டி இலட்சியத்தில் மாறாமல் செயற்பட்டு வினைத்திறன் / செயற்திறன் மிக்கவர் தான் என்பதை சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் நிரூபித்துள்ளார்.

இன்று தமிழர்களிடம் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்றால் அதற்கு மூலகாரணம் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களே.

1 hour ago, Rajesh said:

தமிழ் மக்கள் அவரை விட சிறந்த நிர்வாகி வேறு எவரும் இல்லை என அவர்களை அனுபவத்தில் கண்டுள்ளனர்.

தமிழின படுகொலைகாரர்களுக்கு ஓடி ஓடி முண்டு கொடுக்கும் சுமந்திரனையும், நீண்ட அரசியல் அனுபவம் உடைய சம்பந்தனையும் விட பல 1000 மடங்கு வினைத்திறன் / செயற்திறன் மிக்கவர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் என்பதை வலுவற்ற மாகாணசபையை மிகத் திறமையாக நிர்வகித்து நிரூபித்துள்ளார்.

போர்குற்றவாளிகளுக்கு ஓடி ஓடி முண்டு கொடுக்கும் சுமந்திரனும், சொறிலங்காவின் அரசும், சில மோசமான மதவெறியர்களும் அவருக்கு பல்வேறு பிரச்சினைகளை பல்வேறு வடிவங்களில் கொடுத்த போதும், அவற்றையெல்லாம் தாண்டி இலட்சியத்தில் மாறாமல் செயற்பட்டு வினைத்திறன் / செயற்திறன் மிக்கவர் தான் என்பதை சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் நிரூபித்துள்ளார்.

இன்று தமிழர்களிடம் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்றால் அதற்கு மூலகாரணம் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களே.

ராஜேஷ்,

வடக்கு மாகாணசபை இலங்கையின் மாகாணசபைகளில் எந்தவிதமான வினைத்திறனும் அற்ற, உருப்படியாக எந்த ஒரு திட்டத்தினையும் செயற்படுத்தாத லஞ்சமும் ஊழலும் நிரம்பியவர்களை கொண்ட ஒரு மாகாணசபையாகவே இயங்கியது. விக்கினேஸ்வரன் வேண்டும் என்றால் நல்ல மனுசனாக இருக்கலாம், நேர்மையானவராகவும் தான் மனதில் நினைத்ததை வெளிப்படையாக சொல்லக் கூடிய தைரியம் உள்ளவராகவும் இருக்கலாம் , ஆனால் எந்த நிர்வாகத்திறனும் அற்ற ஒரு முதலமைச்சராகவே இயங்கியவர். கிழக்கு மாகாணசபையின் திட்டங்களுடனும் செயற்பாடுகளுடனும் ஒப்பிட்டால் வடக்கு மாகாணசபை செய்தது ஒன்றுமே இல்லை.

வடக்கு கிழக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதற்கு விக்கினேஸ்வரனின் வெற்று அறிக்கைகள்தான் காரணம் என்பதை நம்புவதற்கு தயார் இல்லை. மகிந்த இருதிருந்தால் இது நிகழ்ந்தே இருந்திராது என்பதற்கு அவர் பிரதமராக தற்காலிகமாக பதவியில் இருந்த மூன்று மாதங்களில் நிகழ்ந்த சம்பவங்களே நல்ல உதாரணங்கள். பல இடங்களில் மக்களால் நிகழ்த்தப்பட்ட தன்னிச்சையான போராட்டங்களும், சர்வதேச அழுத்தங்களும் முக்கியமாக ஜெனிவாவில் இடம்பெறும் /இடம்பெறப் போகும் இலங்கை தொடர்பான மனிதவுரிமை கூட்டங்கள் / பிரேரணைகளும் தான் காணி விடுவிப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.

இந்த வாக்கெடுப்பும் பெரும்பாலன புலம்பெயர் தமிழர்களை வைத்து  நடத்தப்பட்ட ஒன்று.  ஐபிசி ஒரு நேர்மையான ஊடகம் என்றால் இந்த கருத்துக்கணிப்பில் பங்கெடுத்தவர்களில் எத்தனை பேர் தாயகத்தில் இருந்து வாக்களித்தவர் என்ற எண்ணிக்கையையாவது தந்து இருக்கும். தாயகத் தமிழர்களின் தலைவிதியை தாம் மாற்றலாம் என கனவில் இன்னமும் இருக்கும் ஒரு சிறு சாரார் இப்படியான வாக்கெடுப்பிலாவது தமக்கு பிடித்த முடிவுகளை கண்டு இன்பமுறுவதை தவிர வேறு ஒன்றும் இப்படியான வாக்கெடுப்பால் நிகழப் போவது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தாயக தமிழர்களின் பெரும்பாலானோரின் பொருளாதார நிலை புலம்பெயர் தமிழர்களில்தான் தங்கியிருக்கிறது என்பது பலருக்கு தெரிவதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

தாயக தமிழர்களின் பெரும்பாலானோரின் பொருளாதார நிலை புலம்பெயர் தமிழர்களில்தான் தங்கியிருக்கிறது என்பது பலருக்கு தெரிவதில்லை 

தெரியும். ஆனால் அவர்களுக்கு என்ன முக்கியம் என்பதைத் தீர்மானிக்க புலம்பெயர் தமிழரின் பொருளாதார உதவி துருப்புச் சீட்டாகப் பயன்பட வேண்டுமா? இதை நாம் செய்தால், சிங்கள அரசுகள் வடக்கின் மீது காட்டிய மாற்றான் தாய் அணுகுமுறையை ஆதரிப்பது போலல்லவா முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

தெரியும். ஆனால் அவர்களுக்கு என்ன முக்கியம் என்பதைத் தீர்மானிக்க புலம்பெயர் தமிழரின் பொருளாதார உதவி துருப்புச் சீட்டாகப் பயன்பட வேண்டுமா? இதை நாம் செய்தால், சிங்கள அரசுகள் வடக்கின் மீது காட்டிய மாற்றான் தாய் அணுகுமுறையை ஆதரிப்பது போலல்லவா முடியும்?

ஒருவரின் நிர்வாகத்திறமை மற்றவர்களின் தலையீடுகள் இல்லாமல் சுயமாக முடிவெடுக்கும் உரிமை கிடைக்கும் பொழுதே வெளிப்படும். சம்பந்தர் இவ்வளவு  காலமும் இருந்து தமிழ் மக்களுக்கு என்னதான் செய்தார்? கொடுக்கப்பட்ட பெயர்களில்  விக்கி ஐயாவே எப்படியும் முதல் தெரிவு! சுமந்திரனையும் இதில் சேர்க்க சொல்கிறீர்களா? 

இதில் மாற்றான் தாய் அணுகுமுறையை எங்கே வருகிறது ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு சரியான தலைமையை வழங்கக் கூடியவர்கள் இப்போது எவருமே இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது, பெரும்பான்மையான தமிழர்களின் விருப்பைப் பெற்றவர்கள். 100% தமிழர்களின் விருப்பைப் பெற்றவர்கள் எப்போதுமே இருந்ததில்லை, ஏனென்றால் எமக்கான எதிரிகள் எமக்குள்ளேயேதான் இருந்தார்கள், இருக்கிறார்கள்.

அண்மைக் காலங்களில் பெரும்பாலான தமிழர்களை ஒருங்கிணைத்தவர் என்றால், தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தான். ஆனால், அவருக்குக் கூட எதிர்ப்பென்பது, தமிழர்களுக்குள்ளேயே கணிசமான அளவு இருந்தது, இன்றும் இருக்கிறது.

தமிழ்க் கூட்டமைப்பு மீதான பெரும்பாலான தமிழ் மக்களின் விருப்போ அல்லது தெரிவோ, அவர்கள் உள்ள அபிமானத்தினாலன்றி, வேறு சரியான தெரிவுகள் இல்லாமையும், தமிழரின் வாக்குகள் சிதறிவிடுதல் சிங்களப் பேரினவாதிகள் தமிழர் தாயகத்தில் காலூன்ற வழிவகுத்துவிடும் என்பதனாலுமே பெரும்பாலும் அமைந்துவிடுகிறது. காலம் காலமாக தமிழரசுக் கட்சி அல்லது ஆனந்த சங்கரிக்கு முன்னதான தமிழர் கூட்டணிக்கான கண்மூடித்தனமான ஆதரவு ஆகியவற்றாலும் வாக்குகள் கிடைக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

திரு. விக்கினேஸ்வரன் வட மாகாண முதல்வராக இருஃந்த சமயத்தில் முறைகேடுகளைத் தடுக்கவில்லை, அல்லது சரியான திட்டங்களை வகுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்தது. தலைமைத்துவம் வழங்கக்கூடிய தகுதி அவரிடம் இல்லை என்பது அவர்மேல் வைக்கப்பட்டும் இன்னொரு குற்றச்சாட்டு. ஆனால், மாகாணசபையின் அங்கத்தவர்களாக இருந்துகொண்டே அவரின் செயற்பாட்டிற்கு தொடர்ந்தும் குந்தகம் விளைவித்துக்கொண்டிருந்தவர்கள் யார்? அவர் பதவியிலிருந்த பொழுதுகூட அவரை விமர்சித்துக்கொண்டு, அவரின் மேல் அரசினூடாக அழுத்தங்களை பிரயோகித்தவர்கள் யார்? தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து அவரை ஓரங்கட்ட தொடர்ச்சியாக வேலைபார்த்தவர்கள் யார்? இன்று அவரை கையாலாகாதவர் என்று கூறுவது யார்? இவர்கள் எல்லோருமே ஒரே ஆட்கள்தான். தமக்கு எதிராக அரசியல் செய்கிறார், வரம்புமீறிச் செல்கிறார் என்று வெளிப்படையாகவே விமர்சித்து அவரின் செயற்பாட்டை முடக்கியவர்கள் தான் இன்று அவரை கையாலாகாதவர் ஆக்கியவர்கள். அவர் சுதந்திரமாக, தன்னிச்சையாக வேலை செய்ய விடுங்கள், உங்களின் கூலிகளைக் கொண்டு அவரை முடக்குவதை நிறுத்துங்கள், ஒரே கட்சியிலிருந்துகொண்டு விமர்சிப்பதை நிறுத்துங்கள், பிறகு அவர் கையாலாகாதவரா அல்லது தலைமை தாங்க முடியாதவரா என்பதைப் பார்க்கலாம்.  அவரது மாகாணசபையை உங்களின் உறுப்பினர்களைக் கொண்டு பலவீனமாக்கிவிட்டு, தலைமை தாங்க முடியாதவர், சொல்வீரர் என்று எப்படிக் கூறுகிறீர்கள்.

இன்றுவரை, நாம் விரும்பியோ அல்லது வேறு தெரிவின்றியோ கூட்டமைப்பைத்தான் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். சர்வதேச அழுத்தங்களினால் அன்றி, சுமந்திரனாலோ அல்லது சம்மந்தராலோ இன்று சிறியளவில் நடைபெறும் காணி விடுவிப்புக்களும், கைதி விடுவிப்புக்களும் நடைபெறவில்லை. இதை அவர்களால் உரிமை கோரவும் முடியாது. ஒரு சில வருடங்கள் மட்டுமே வட மாகாண சபையை ஆட்சிசெய்த விக்கினேஸ்வரனின் தலைமைத்திறனை, அவரது செயற்திறனை கேள்விகேட்கும் நீங்கள், ஏன் இத்தனை வருடகாலம் தமிழர்களின் தலைமை என்று சொல்லிக்கொள்ளும் சம்மந்தரோ அல்லது சுமந்திரனோ என்ன செய்தார்கள் என்று கேட்கவில்லை? எங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம், சிங்களம் ஒருபோதுமே தமிழர்க்கு நீதியான தீர்வொன்றைத் தரப்போவதில்லையென்பது. புலிகள் இருந்த காலத்தில்க் கூட ஒரு நீதியான தீர்வை தரமறுத்த சிங்களம், இன்று உள்நாட்டில் எந்த அழுத்தமும் இல்லாத நிலையில், வெறும் சம்மந்தனுக்ககவும், சுமந்திரனுக்காகவும் ட்நீதியான தீர்வொன்றைத்தரும் என்று நம்புகிறீர்களா? யுத்தத்தில் முழுமையான வெற்றியைப் பெற்றுக்கொண்ட பின் அவர்கள் எதற்காகத் தமிழர்க்கு எதையுமே கொடுக்க வேண்டும்? ஆக, இன்று கிடைப்பதாகக் கூறப்படும் விடயங்களாகட்டும் (அதுகூட பிரிந்த வட கிழக்கு, ஒற்றையாட்சி, பெளத்தத்திற்கு முதலிடம், அதிகாரமற்ற காணிகள் என்று குற்றுயிராக்கப்பட்டு) அல்லது இதுவரை விடுவிக்கப்பட்ட காணிகளாகட்டும் எல்லாமுமே சர்வதேச அழுத்தங்களால் நடைபெறுகின்றன.காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாக கூட்டமைப்பு இவற்றிற்கு உரிமை கோருவது தவறு.

தாயகத்தில் விக்கினேஸ்வரனுக்கான தமிழர்களின் ஆதரவென்பது ஒருமுறை, மிகத்தெளிவாகக் காட்டப்பட்டு விட்டது. வட மாகாணத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் அவர்தான். அதுமட்டுமல்லாமல், பேரவை ஆரம்பிக்கும் நாட்களில் அவரது வீட்டிற்கு முன்பாகத் திரண்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் புலத்திலுருந்ஹ்டு போனவர்கள் கிடையாது. 

முடிந்தால், உதயன் போன்ற பத்திரிக்கை ஒன்றின் மூலமோ அல்லது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மூலமோ தமிழருக்குத் தலைமை தாங்கக் கூடியவர் யார் ந்பது தொடர்பாகக் கருத்துக் கணிப்பொன்றை நடத்திப் பார்க்கலாம். அப்போது தெரியும் மக்கள் ஆதரவு யாருக்கென்று.

Edited by ragunathan

On 1/8/2019 at 3:02 AM, Justin said:

இதில் இலங்கையில் இருந்து வாக்களித்தோர் எவ்வளவு வீதத்தினர் என்று தகவல் இருக்கிறதா? விக்னேஸ்வரன் அவர்கள் நல்லவர், ஆனால் நிர்வாகத்தை நடத்த இயலாதவர் என்று மாகாண சபையிலேயே பார்த்தோம்! பேசியும் எழுதியும் காலத்தை ஓட்ட நல்ல தலைவராக இருப்பார் என நினைக்கிறேன்! 

நீங்கள் எவ்வளவு தான் உங்கள் சுமந்திரனுக்கு முட்டு கொடுத்தாலும் உண்மை என்பது வேறு , சம்பந்தன் சுமந்திரன் தமிழர்களின் சாபம் . விக்னேஸ்வரன் தான் இப்ப உள்ள ஆண்மையான தலைவர் .

*********

Edited by நியானி
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பிரபாதாசன் said:

நீங்கள் எவ்வளவு தான் உங்கள் சுமந்திரனுக்கு முட்டு கொடுத்தாலும் உண்மை என்பது வேறு , சம்பந்தன் சுமந்திரன் தமிழர்களின் சாபம் . விக்னேஸ்வரன் தான் இப்ப உள்ள ஆண்மையான தலைவர் .

 

இந்தத் திரியில் எங்கே சுமந்திரனைப் பற்றி நான் பேசியிருக்கிறேன் என்று காட்டுங்கள்?நானும் உங்கள் போலவே ஒருவரை அவர் என்ன செய்தாலும் தலைவராக ஏற்றுக் கொள்வேன் என்ற விம்பம் வந்து விட்டது! நான் காரணமல்ல அதற்கு! நான் பார்ப்பது செய்லபாடுகளை, ஆளையல்ல! பல தடவை சொல்லி விட்டேன்! 

On 1/8/2019 at 10:24 PM, நிழலி said:

ராஜேஷ்,

வடக்கு மாகாணசபை இலங்கையின் மாகாணசபைகளில் எந்தவிதமான வினைத்திறனும் அற்ற, உருப்படியாக எந்த ஒரு திட்டத்தினையும் செயற்படுத்தாத லஞ்சமும் ஊழலும் நிரம்பியவர்களை கொண்ட ஒரு மாகாணசபையாகவே இயங்கியது. விக்கினேஸ்வரன் வேண்டும் என்றால் நல்ல மனுசனாக இருக்கலாம், நேர்மையானவராகவும் தான் மனதில் நினைத்ததை வெளிப்படையாக சொல்லக் கூடிய தைரியம் உள்ளவராகவும் இருக்கலாம் , ஆனால் எந்த நிர்வாகத்திறனும் அற்ற ஒரு முதலமைச்சராகவே இயங்கியவர். கிழக்கு மாகாணசபையின் திட்டங்களுடனும் செயற்பாடுகளுடனும் ஒப்பிட்டால் வடக்கு மாகாணசபை செய்தது ஒன்றுமே இல்லை.

வடக்கு கிழக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதற்கு விக்கினேஸ்வரனின் வெற்று அறிக்கைகள்தான் காரணம் என்பதை நம்புவதற்கு தயார் இல்லை. மகிந்த இருதிருந்தால் இது நிகழ்ந்தே இருந்திராது என்பதற்கு அவர் பிரதமராக தற்காலிகமாக பதவியில் இருந்த மூன்று மாதங்களில் நிகழ்ந்த சம்பவங்களே நல்ல உதாரணங்கள். பல இடங்களில் மக்களால் நிகழ்த்தப்பட்ட தன்னிச்சையான போராட்டங்களும், சர்வதேச அழுத்தங்களும் முக்கியமாக ஜெனிவாவில் இடம்பெறும் /இடம்பெறப் போகும் இலங்கை தொடர்பான மனிதவுரிமை கூட்டங்கள் / பிரேரணைகளும் தான் காணி விடுவிப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.

இந்த வாக்கெடுப்பும் பெரும்பாலன புலம்பெயர் தமிழர்களை வைத்து  நடத்தப்பட்ட ஒன்று.  ஐபிசி ஒரு நேர்மையான ஊடகம் என்றால் இந்த கருத்துக்கணிப்பில் பங்கெடுத்தவர்களில் எத்தனை பேர் தாயகத்தில் இருந்து வாக்களித்தவர் என்ற எண்ணிக்கையையாவது தந்து இருக்கும். தாயகத் தமிழர்களின் தலைவிதியை தாம் மாற்றலாம் என கனவில் இன்னமும் இருக்கும் ஒரு சிறு சாரார் இப்படியான வாக்கெடுப்பிலாவது தமக்கு பிடித்த முடிவுகளை கண்டு இன்பமுறுவதை தவிர வேறு ஒன்றும் இப்படியான வாக்கெடுப்பால் நிகழப் போவது இல்லை.

முதலில் அவரை சுதந்திரமாக வேலை பார்க்க விடடார்களா ? இந்த சுமந்திரன் தான் எல்லாத்திக்கும் பின்னணி .
முதலில் அவரை தூக்கி எறிந்தாள் தான் தமிழனுக்கு விடிவு வரும் 

3 minutes ago, Justin said:

இந்தத் திரியில் எங்கே சுமந்திரனைப் பற்றி நான் பேசியிருக்கிறேன் என்று காட்டுங்கள்?நானும் உங்கள் போலவே ஒருவரை அவர் என்ன செய்தாலும் தலைவராக ஏற்றுக் கொள்வேன் என்ற விம்பம் வந்து விட்டது! நான் காரணமல்ல அதற்கு! நான் பார்ப்பது செய்லபாடுகளை, ஆளையல்ல! பல தடவை சொல்லி விட்டேன்! 

விக்கினேஸ்வரனை சுதந்திரமாக செயல்பட விடாமல் ஏன் சுமந்திரன் குறுக்கவே  நின்றார் ? சொல்ல முடியுமா

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பிரபாதாசன் said:

முதலில் அவரை சுதந்திரமாக வேலை பார்க்க விடடார்களா ? இந்த சுமந்திரன் தான் எல்லாத்திக்கும் பின்னணி .
முதலில் அவரை தூக்கி எறிந்தாள் தான் தமிழனுக்கு விடிவு வரும் 

விக்கினேஸ்வரனை சுதந்திரமாக செயல்பட விடாமல் ஏன் சுமந்திரன் குறுக்கவே  நின்றார் ? சொல்ல முடியுமா

குதிரைக்கு முன்னால் வண்டில் பூட்டும் ஆட்களுடன் நேரம் விரயமாக்க நான் விரும்பவில்லை! ஒருவர் மீது காழ்ப்புணர்வு வைத்துக் கொண்டு பிறகு காரணங்கள் தேடும் வேலையை செய்யாதீர்கள்: உங்களுக்கு ஹோம் வேர்க் ஒன்று: முதல் அமைச்சரின் எந்த அபிவிருந்தி நடவடிக்கையில் யார் குறுக்கே நின்றார்கள் என்ற பட்டியலுடன் வாருங்கள் முதலில்! அது வந்தவுடன் பேசலாம்! நீங்களே இன்னொரு திரியில் எழுதியதோ அல்லது ஐ.பி.சி போன்ற "அபிப்பிராயத்தை செய்தியாக்கும்" ஊடகத்தின் செய்தியோ ஆதாரமாகக் காட்ட முடியாது! அது வரை என் பதிலை ஒத்தி வைக்கிறேன்!  

Just now, Justin said:

குதிரைக்கு முன்னால் வண்டில் பூட்டும் ஆட்களுடன் நேரம் விரயமாக்க நான் விரும்பவில்லை! ஒருவர் மீது காழ்ப்புணர்வு வைத்துக் கொண்டு பிறகு காரணங்கள் தேடும் வேலையை செய்யாதீர்கள்: உங்களுக்கு ஹோம் வேர்க் ஒன்று: முதல் அமைச்சரின் எந்த அபிவிருந்தி நடவடிக்கையில் யார் குறுக்கே நின்றார்கள் என்ற பட்டியலுடன் வாருங்கள் முதலில்! அது வந்தவுடன் பேசலாம்! நீங்களே இன்னொரு திரியில் எழுதியதோ அல்லது ஐ.பி.சி போன்ற "அபிப்பிராயத்தை செய்தியாக்கும்" ஊடகத்தின் செய்தியோ ஆதாரமாகக் காட்ட முடியாது! அது வரை என் பதிலை ஒத்தி வைக்கிறேன்!  

கண்ட கண்ட தமிழின விரோதிகளை ஆதரிக்கும் உங்களை போன்றவர் அல்ல நான் . ஒரு பெரும் தலைவனை அன்பால் ஆராதிப்பவன் ... கஞ்சா விக்குகின்ற  பொறுக்கிகளை ஆதரிப்பவன் அல்ல

28 minutes ago, ragunathan said:

 

திரு. விக்கினேஸ்வரன் வட மாகாண முதல்வராக இருஃந்த சமயத்தில் முறைகேடுகளைத் தடுக்கவில்லை, அல்லது சரியான திட்டங்களை வகுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்தது. தலைமைத்துவம் வழங்கக்கூடிய தகுதி அவரிடம் இல்லை என்பது அவர்மேல் வைக்கப்பட்டும் இன்னொரு குற்றச்சாட்டு. ஆனால், மாகாணசபையின் அங்கத்தவர்களாக இருந்துகொண்டே அவரின் செயற்பாட்டிற்கு தொடர்ந்தும் குந்தகம் விளைவித்துக்கொண்டிருந்தவர்கள் யார்? அவர் பதவியிலிருந்த பொழுதுகூட அவரை விமர்சித்துக்கொண்டு, அவரின் மேல் அரசினூடாக அழுத்தங்களை பிரயோகித்தவர்கள் யார்? தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து அவரை ஓரங்கட்ட தொடர்ச்சியாக வேலைபார்த்தவர்கள் யார்? இன்று அவரை கையாலாகாதவர் என்று கூறுவது யார்? இவர்கள் எல்லோருமே ஒரே ஆட்கள்தான். தமக்கு எதிராக அரசியல் செய்கிறார், வரம்புமீறிச் செல்கிறார் என்று வெளிப்படையாகவே விமர்சித்து அவரின் செயற்பாட்டை முடக்கியவர்கள் தான் இன்று அவரை கையாலாகாதவர் ஆக்கியவர்கள். அவர் சுதந்திரமாக, தன்னிச்சையாக வேலை செய்ய விடுங்கள், உங்களின் கூலிகளைக் கொண்டு அவரை முடக்குவதை நிறுத்துங்கள், ஒரே கட்சியிலிருந்துகொண்டு விமர்சிப்பதை நிறுத்துங்கள், பிறகு அவர் கையாலாகாதவரா அல்லது தலைமை தாங்க முடியாதவரா என்பதைப் பார்க்கலாம்.  அவரது மாகாணசபையை உங்களின் உறுப்பினர்களைக் கொண்டு பலவீனமாக்கிவிட்டு, தலைமை தாங்க முடியாதவர், சொல்வீரர் என்று எப்படிக் கூறுகிறீர்கள்.

 

என்ன சொல்ல வருகின்றிர்கள் ரகு?

விக்கி அவர்கள் மாகாணசபையை நடத்த மாகாண சபைக்குள்ளேயே எதிர்ப்பு இருந்தமையால் அவரால் சரியாக இயங்க முடியவில்லை என்றா? அல்லது தன் கட்சிக்குள்ளும் தன் மாகாணசபைக்குள்ளும் எதிர்ப்புகள் வந்ததால் அவரது நிர்வாக திறமை மழுங்கடிக்கப்பட்டு விட்டது என்றா?
தன் கட்சிக்குள்ளும், மாகாணசபைக்குள்ளும் வந்த எதிர்ப்பைக் கூட சமாளிக்க முடியாமல் எந்த வினத்திறனும் இன்றி அவர் ஆட்சி செய்தமையால் தான் அவரை ஒரு கையாலாகத / தலைமைத்துவ பண்பு எதுவுமற்ற ஒருவர் என்று கூறுகின்றம். தன் கட்சிக்குள்ளும் மாகாசபைக்குள்ளும் வரும் எதிர்ப்பையே சமாளிக்க முடியாத ஒருவர் எப்படி பெளத்த பேரினவாத அரசின் எதிர்ப்பை சமாளித்து தமிழ் மக்களுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்க முடியும்? அவ்வாறு முடியாதமையால் தான் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது மோசமான விளைவை கொடுக்கும் என்று நம்புகின்றோம்.

அத்துடன் விக்கியர் தான் முதன் முதலில் தான் இருக்கும் கட்சியின் முடிவுகளுக்கு எதிராக விமர்சித்து தான் தோன்றித்தனமாக செயற்பட்டவர். மகிந்தவை வீட்டுக்க அனுப்புவதற்காக 2015 இல் தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவெடுத்து மகிந்தவை எதிர்க்கும் போது, தேர்தலுக்கு முதல் நாள் தான் தோன்றித்தனமாக மகிந்தவுக்கும் கஜேந்திரகுமார் அணிக்கும் சார்பான அறிக்கை ஒன்றை விட்டவர்.  இதே யாழில் விக்கியரின் இந்த செயல்பாட்டை நான் விமர்சிக்கும் போது கிருபன் கூட 'நிழலி தமிழ் தேசிய கூட்டமைப்பை நேரடியாக ஆதரிப்பதால் யாழ் இணையமும் அவர்களை ஆதரிக்கின்றதா' என கேட்டு இருந்தார்.

இன்றுவரைக்கும் விக்கியரை நான் மகிந்த ஆதரவு ஆளாகவே பார்க்கின்றேன். இதற்கு  பலர் சொல்லியும் கேட்காமல் அவர் மகிந்தவுக்கு முன் சத்தியப்பிரமாணம் செய்ததில் இருந்து மகிந்த இருக்கும் வரைக்கும் வடக்கு கிழக்கு இணைப்பு/ அதிகாரம் என்பன பற்றி வாயே திறக்காமல் இருந்தது வரைக்கும் நான் அவதானித்த விடயங்கள்.

 

 

Quote

தாயகத்தில் விக்கினேஸ்வரனுக்கான தமிழர்களின் ஆதரவென்பது ஒருமுறை, மிகத்தெளிவாகக் காட்டப்பட்டு விட்டது. வட மாகாணத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் அவர்தான். அதுமட்டுமல்லாமல், பேரவை ஆரம்பிக்கும் நாட்களில் அவரது வீட்டிற்கு முன்பாகத் திரண்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் புலத்திலுருந்ஹ்டு போனவர்கள் கிடையாது. 

தான் தனித்து ஒரு கட்சியை ஆரம்பித்து கடைசியில் பேரவைக்கும் ஆப்பு வைத்ததும் விக்கியர் தான்

26 minutes ago, பிரபாதாசன் said:

முதலில் அவரை சுதந்திரமாக வேலை பார்க்க விடடார்களா ? இந்த சுமந்திரன் தான் எல்லாத்திக்கும் பின்னணி .
முதலில் அவரை தூக்கி எறிந்தாள் தான் தமிழனுக்கு விடிவு வரும் 

விக்கினேஸ்வரனை சுதந்திரமாக செயல்பட விடாமல் ஏன் சுமந்திரன் குறுக்கவே  நின்றார் ? சொல்ல முடியுமா

பிரபாதாசன், நான் ரகுவுக்கு சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும். நீங்கள் சொல்லும் சுமந்திரனை கூட சமாளிக்க முடியாமல் மாகாசபையை வினைத்திறன் அறவே அற்ற ஒன்றாக நிர்வகித்த விக்கியர் எப்படி பெளத்த பேரினவாத சிங்கள அரசுகளுக்கு எதிராக தமிழர்களுக்கு தலைமை தாங்க முடியும்? சுமந்திரனை சமாளிக்க முடியாமைதான் அவரின் மோசமான வினைத்திறன் அற்ற மாகாசபை ஆட்சிக்கு காரணம் என்று சொல்வதன் மூலம் நீங்களும் அவருக்கு தலைமைத்துவ பண்பும் நிர்வாகத் திறமையும் இல்லாத ஒருவர் என்பதை உறுதி செய்கின்றீர்கள்.

14 minutes ago, நிழலி said:

என்ன சொல்ல வருகின்றிர்கள் ரகு?

விக்கி அவர்கள் மாகாணசபையை நடத்த மாகாண சபைக்குள்ளேயே எதிர்ப்பு இருந்தமையால் அவரால் சரியாக இயங்க முடியவில்லை என்றா? அல்லது தன் கட்சிக்குள்ளும் தன் மாகாணசபைக்குள்ளும் எதிர்ப்புகள் வந்ததால் அவரது நிர்வாக திறமை மழுங்கடிக்கப்பட்டு விட்டது என்றா?
தன் கட்சிக்குள்ளும், மாகாணசபைக்குள்ளும் வந்த எதிர்ப்பைக் கூட சமாளிக்க முடியாமல் எந்த வினத்திறனும் இன்றி அவர் ஆட்சி செய்தமையால் தான் அவரை ஒரு கையாலாகத / தலைமைத்துவ பண்பு எதுவுமற்ற ஒருவர் என்று கூறுகின்றம். தன் கட்சிக்குள்ளும் மாகாசபைக்குள்ளும் வரும் எதிர்ப்பையே சமாளிக்க முடியாத ஒருவர் எப்படி பெளத்த பேரினவாத அரசின் எதிர்ப்பை சமாளித்து தமிழ் மக்களுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்க முடியும்? அவ்வாறு முடியாதமையால் தான் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது மோசமான விளைவை கொடுக்கும் என்று நம்புகின்றோம்.

அத்துடன் விக்கியர் தான் முதன் முதலில் தான் இருக்கும் கட்சியின் முடிவுகளுக்கு எதிராக விமர்சித்து தான் தோன்றித்தனமாக செயற்பட்டவர். மகிந்தவை வீட்டுக்க அனுப்புவதற்காக 2015 இல் தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவெடுத்து மகிந்தவை எதிர்க்கும் போது, தேர்தலுக்கு முதல் நாள் தான் தோன்றித்தனமாக மகிந்தவுக்கும் கஜேந்திரகுமார் அணிக்கும் சார்பான அறிக்கை ஒன்றை விட்டவர்.  இதே யாழில் விக்கியரின் இந்த செயல்பாட்டை நான் விமர்சிக்கும் போது கிருபன் கூட 'நிழலி தமிழ் தேசிய கூட்டமைப்பை நேரடியாக ஆதரிப்பதால் யாழ் இணையமும் அவர்களை ஆதரிக்கின்றதா' என கேட்டு இருந்தார்.

இன்றுவரைக்கும் விக்கியரை நான் மகிந்த ஆதரவு ஆளாகவே பார்க்கின்றேன். இதற்கு  பலர் சொல்லியும் கேட்காமல் அவர் மகிந்தவுக்கு முன் சத்தியப்பிரமாணம் செய்ததில் இருந்து மகிந்த இருக்கும் வரைக்கும் வடக்கு கிழக்கு இணைப்பு/ அதிகாரம் என்பன பற்றி வாயே திறக்காமல் இருந்தது வரைக்கும் நான் அவதானித்த விடயங்கள்.

 

 

தான் தனித்து ஒரு கட்சியை ஆரம்பித்து கடைசியில் பேரவைக்கும் ஆப்பு வைத்ததும் விக்கியர் தான்

பிரபாதாசன், நான் ரகுவுக்கு சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும். நீங்கள் சொல்லும் சுமந்திரனை கூட சமாளிக்க முடியாமல் மாகாசபையை வினைத்திறன் அறவே அற்ற ஒன்றாக நிர்வகித்த விக்கியர் எப்படி பெளத்த பேரினவாத சிங்கள அரசுகளுக்கு எதிராக தமிழர்களுக்கு தலைமை தாங்க முடியும்? சுமந்திரனை சமாளிக்க முடியாமைதான் அவரின் மோசமான வினைத்திறன் அற்ற மாகாசபை ஆட்சிக்கு காரணம் என்று சொல்வதன் மூலம் நீங்களும் அவருக்கு தலைமைத்துவ பண்பும் நிர்வாகத் திறமையும் இல்லாத ஒருவர் என்பதை உறுதி செய்கின்றீர்கள்.

இப்ப உள்ள கூட்டமைப்பினை காட்டிலும் விக்னேஸ்வரன் சில விடயங்களை வெளிப்படையாக மக்களுக்கு சொன்னார் அதாவது மாகாணசபையில் உள்ள குறைபாடுகளையும் அதனால் எங்களுக்கு சிங்களம் போட்ட சிக்கல்களையும் தெளிவாக சொன்னார். வடக்கு கிழக்கு இணைப்பை வேண்டி அதில் உறுதியான கருத்துடன் இப்பவும் உள்ளார். 

அவரை இயங்க விடாமல் ரவுடிகள் மாதிரி தினமும் தடை போட்ட  சுமந்திரனை என்ன சொல்வது . இவர் ரணிலின் கையாளாக இருந்து மாகாணசபையை இயங்க முடியாதவாறு இருந்தார் .

சுமந்திரன் தனி ஆளாக வந்திருந்தாள் இவரை சுலபமாக வெட்டி இருக்கலாம் அனால் அவர் ஒரு பெரிய நரியின் கையாளாக இருப்பதே சிக்கலாக அமைந்தது .

8 minutes ago, பிரபாதாசன் said:

இப்ப உள்ள கூட்டமைப்பினை காட்டிலும் விக்னேஸ்வரன் சில விடயங்களை வெளிப்படையாக மக்களுக்கு சொன்னார் அதாவது மாகாணசபையில் உள்ள குறைபாடுகளையும் அதனால் எங்களுக்கு சிங்களம் போட்ட சிக்கல்களையும் தெளிவாக சொன்னார். வடக்கு கிழக்கு இணைப்பை வேண்டி அதில் உறுதியான கருத்துடன் இப்பவும் உள்ளார். 

 

அவர் எல்லாவற்றையும் சொல்வதிலும் அறிக்கை விடுவதிலும் ஒன்றுக்குமே உதவாத பிரேரணைகளை  சபையில் நிறைவேற்றுவதிலுமே வல்லவராக இருந்தார். இவற்றுக்கு அப்பால் ஒரு அடியைத்தானும் அவர் எடுத்து வைக்கவில்லை. போரால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட, பேரினவாதத்தால் வஞ்சிக்கப்பட்ட ஒரு இனத்துக்கு வெறும் அறிக்கைகளும் பிரேரணைகளும் போதுமானவை அல்ல.

Quote

சுமந்திரன் தனி ஆளாக வந்திருந்தாள் இவரை சுலபமாக வெட்டி இருக்கலாம் அனால் அவர் ஒரு பெரிய நரியின் கையாளாக இருப்பதே சிக்கலாக அமைந்தது .

நரியின் கையாளையே  சமாளிக்க முடியாதவர் நரியையும் நரியுடன் இருக்கும் பெரும் பேரினவாத கூட்டத்தையும் எப்படி சமாளித்து அவர் அறிக்கைகளில்  கூறும் வடக்கு கிழக்கு இணைப்பு போன்ற கடுமையான விடயங்களை சாதிக்கப் போகின்றார்?

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றப் பதவியையும், அரசின் மறைமுக ஆதரவினையும் கொண்டே கூட்டமைப்பு தலைமையினால் விக்கினேஸ்வரன் ஓரம்கட்டப்பட்டார் என்பது எனது வாதம். தனது மாகாணசபையில் உறுப்பினர்களின் தயவு இல்லாதபொழுது, அவரால் எவ்வாறு செயற்பட முடிந்திருக்கும்? அவரின் தலைமையை ஏற்பதில்லை என்று உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் ஆதவுடன் கூச்சலிடும்பொழுது அவர் தலைமை தாங்குவது எப்படி?  மகிந்தவின் முன்னால் அவர் பதவிப்பிரமானம் செய்துகொண்டார் என்பதால் அவரை மகிந்தவின் ஆள் என்று நீங்கள் நினைப்பது சரியா என்று தெரியவில்லை. அவரது பதவியேற்பு நிகழ்வுகூட மிகவும் இறுக்கமான சூழ்நிலையில்தான் நடந்ததாக எனக்கு நினைவு.  இப்படிப் பார்த்தால் விக்கி மட்டுமல்லாமல், இன்று பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரித்துக்கொண்டிருக்கும் அனைத்துத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றில் மகிந்தவினதோ, மைத்திரியினதோ  அல்லது ரணிலினதோ ஆட்களாகத்தான் இருக்கவேண்டும். என்னைப்பொறுத்தவரை மகிந்தவுக்கும், மைத்திரியிக்கும் ரணிலுக்குமிடையே அதிக வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. 

சிங்கக்கொடியசைத்து மகிழ்ந்த சம்பந்தர் ஐயாவை விடவா விக்கியர் தவறானவர்? 

கஜேந்திரக்குமாரை விக்கியர் ஆதரிப்பது ஏன் தவறென்கிறீர்கள்? கஜேந்திரக்குமார் கூட்டமைப்பிற்கு எதிராக அரசியல் செய்தார் என்பதை விட அவரில் என்ன தவறு கண்டீர்கள்? அவர் எப்படி மகிந்தவிற்கு வேலை பார்க்கிறார் என்று சொல்கிறீர்கள்? இன்று விக்கியருக்கு நடந்ததுதானே அன்று கஜேந்திரக்குமார், அனந்தி, பத்மினி, கஜேந்திரன் ஆகியோருக்கு நடந்தது? 

விக்கியர் மகிந்தவுக்கு ஆதரவாக விட்ட அறிக்கையினை இங்கே இணைக்க முடியுமா? அதை மீண்டும் ஒருமுறை படிக்க விரும்புகிறேன். 

மகிந்த அதிகாரத்திலிருக்கும்பொழுது, ராணுவத்தளபதியாகவிருந்த சரத் பொன்சேக்காவை ஆதரிப்பதென்று கூட்டமைப்பு எடுத்த முடிவும், மகிந்த சனாதிபதியாக இருந்தபோது, உதவி சனாதிபதியாகவும், உதவி பாதுகாப்பமைச்சராகவும் இருந்த மைத்திரியை ஆதரிப்பதென்று கூட்டமைப்பு எடுத்த முடிவும் எமக்குச் சரியாகப் படுமாக இருந்தால், மகிந்தவின் முன்னால், அரசின் தலைவர் என்கிற ரீதிய்ல் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டதையும் சரியென்றுதானே கொள்ளவேண்டும்? 

மகிந்த அதிகாரத்திலிருக்கும்போதும், எதிர்க்கட்சியிலிருக்கும்போதும் விக்கியர் தருணத்திற்கேற்றவாறு பேசுவதாக நான் நினைக்கவில்லை. நடந்த போர்க்குற்றங்கள் பற்றித் தொடர்ந்தும் அவர் பேசிவருகிறார். இது மைந்த ஆட்சியிலிருந்தாலென்ன, இல்லாவிட்டலென்ன மகிந்தவைப் பாதிக்கத்தான் செய்யும். 

இறுதியாக, "சுமந்திரனைக் கூடச் சமாளிக்க முடியாத விக்கியர்" என்ற உங்களின் கருத்திலிருந்தே யார் பிரச்சினைக்குக் காரணம் என்பது தெளிவாகிறது நண்பரே ! 

52 minutes ago, ragunathan said:

பாராளுமன்றப் பதவியையும், அரசின் மறைமுக ஆதரவினையும் கொண்டே கூட்டமைப்பு தலைமையினால் விக்கினேஸ்வரன் ஓரம்கட்டப்பட்டார் என்பது எனது வாதம். தனது மாகாணசபையில் உறுப்பினர்களின் தயவு இல்லாதபொழுது, அவரால் எவ்வாறு செயற்பட முடிந்திருக்கும்? அவரின் தலைமையை ஏற்பதில்லை என்று உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் ஆதவுடன் கூச்சலிடும்பொழுது அவர் தலைமை தாங்குவது எப்படி?  மகிந்தவின் முன்னால் அவர் பதவிப்பிரமானம் செய்துகொண்டார் என்பதால் அவரை மகிந்தவின் ஆள் என்று நீங்கள் நினைப்பது சரியா என்று தெரியவில்லை. அவரது பதவியேற்பு நிகழ்வுகூட மிகவும் இறுக்கமான சூழ்நிலையில்தான் நடந்ததாக எனக்கு நினைவு.  இப்படிப் பார்த்தால் விக்கி மட்டுமல்லாமல், இன்று பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரித்துக்கொண்டிருக்கும் அனைத்துத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றில் மகிந்தவினதோ, மைத்திரியினதோ  அல்லது ரணிலினதோ ஆட்களாகத்தான் இருக்கவேண்டும். என்னைப்பொறுத்தவரை மகிந்தவுக்கும், மைத்திரியிக்கும் ரணிலுக்குமிடையே அதிக வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. 

சிங்கக்கொடியசைத்து மகிழ்ந்த சம்பந்தர் ஐயாவை விடவா விக்கியர் தவறானவர்? 

கஜேந்திரக்குமாரை விக்கியர் ஆதரிப்பது ஏன் தவறென்கிறீர்கள்? கஜேந்திரக்குமார் கூட்டமைப்பிற்கு எதிராக அரசியல் செய்தார் என்பதை விட அவரில் என்ன தவறு கண்டீர்கள்? அவர் எப்படி மகிந்தவிற்கு வேலை பார்க்கிறார் என்று சொல்கிறீர்கள்? இன்று விக்கியருக்கு நடந்ததுதானே அன்று கஜேந்திரக்குமார், அனந்தி, பத்மினி, கஜேந்திரன் ஆகியோருக்கு நடந்தது? 

விக்கியர் மகிந்தவுக்கு ஆதரவாக விட்ட அறிக்கையினை இங்கே இணைக்க முடியுமா? அதை மீண்டும் ஒருமுறை படிக்க விரும்புகிறேன். 

மகிந்த அதிகாரத்திலிருக்கும்பொழுது, ராணுவத்தளபதியாகவிருந்த சரத் பொன்சேக்காவை ஆதரிப்பதென்று கூட்டமைப்பு எடுத்த முடிவும், மகிந்த சனாதிபதியாக இருந்தபோது, உதவி சனாதிபதியாகவும், உதவி பாதுகாப்பமைச்சராகவும் இருந்த மைத்திரியை ஆதரிப்பதென்று கூட்டமைப்பு எடுத்த முடிவும் எமக்குச் சரியாகப் படுமாக இருந்தால், மகிந்தவின் முன்னால், அரசின் தலைவர் என்கிற ரீதிய்ல் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டதையும் சரியென்றுதானே கொள்ளவேண்டும்? 

மகிந்த அதிகாரத்திலிருக்கும்போதும், எதிர்க்கட்சியிலிருக்கும்போதும் விக்கியர் தருணத்திற்கேற்றவாறு பேசுவதாக நான் நினைக்கவில்லை. நடந்த போர்க்குற்றங்கள் பற்றித் தொடர்ந்தும் அவர் பேசிவருகிறார். இது மைந்த ஆட்சியிலிருந்தாலென்ன, இல்லாவிட்டலென்ன மகிந்தவைப் பாதிக்கத்தான் செய்யும். 

 

விக்கியர் தவறானவர் என்று எங்கும் சொல்லவில்லை. என் முதல் பதிலிலேயே நேர்மையானவராகவும், மனதில் உள்ளதை அப்படியே சொல்லும் தைரியமான்வர் என்று குறிப்பிட்டும் உள்ளேன். அதே நேரத்தில் அவர் தலைமைத்துவ பண்பு அறவே அற்ற ஒருவர். அத்துடன் நிர்வாகத் திறனும் கொஞ்சம் கூட இல்லாதவர் என்பது தான் என்  அவர் பற்றிய அவதானம். அத்துடன் அவர் மகிந்தவின் அனுதாபியாக காட்டக் கூடிய விதமாகவே 2015 தேர்தல் வரைக்கும் தன்னை வெளிப்படுத்தி இருந்தார் (இதற்கு வாசுவின் சம்பந்தியாக அவர் இருப்பது காரணம் ஆக இருக்காது என நம்புகின்றேன்)

மகிந்தவை ஆதரியுங்கள் என்று அவர் நேரிடையாக அறிக்கையில் கேட்கவில்லை. ஆனால் 2015 தேர்தலில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் எதிராக ,தேர்தலுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஒரு அறிக்கை விட்டு இருந்தார். கூகிளில் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. யாழ் இணையத்திலும் அது உள்ளது. நேரம் கிடைக்கும் போது கண்ணில் பட்டால் இணைக்கின்றேன்

கஜேந்திரகுமாரை ஆதரிப்பது தவறு என்று என் பதிலில் நான் குறிப்பிடவும் இல்லை. கஜேந்திர குமாரின் பெயரினைக் கூட நான் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நீங்கள் இதை எழுதியதற்காக குறிப்பிட விரும்பும் விடயம்: விக்கியர் கஜேந்திரகுமாரை ஆதரிப்பதாக இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி ஆதரித்து இருக்கலாம். அவர் இன்று விலகியது போன்று அன்றே விலகி ஆதரித்து இருக்கலாம். த.தே.கூ வில் இருந்து கொண்டே இன்னொரு கட்சிக்கு ஆதரித்தது சரியான நேர்மையான விடயமா ரகு? சரி, அப்படி விலகின பிறகு கூட அவர் கஜேந்திரகுமாருடன் இணையாமல் தனித்து கட்சி அமைத்தது ஏனென்றும் புரியவில்லை.

விக்கியர், போர்க் குற்றம்,வடக்கு கிழக்கு இணைப்பு போன்றவற்றை மகிந்த இருக்கும் வரைக்கும் பேசவில்லை. அவர் தமிழக தலைவர்களை  விமர்சித்து கொண்டு இருந்த காலம் அது. ரணில் ஆட்சியமைத்த பின் தான் அவர் இவை பற்றி பேச தொடங்கியிருந்தார்.

நீங்கள் சொன்னவாறு மகிந்த / ரணில் / மைத்திரி மற்றும் இனி வரக்கூடிய சஜித் / கரு / நவீன் திசனாயக்கா போன்றோரில் எவர் வந்தால் என்ன. சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழ் மக்களை அடக்கி தன் மேலாதிக்கத்தை நிறுவத்தான் போகின்றது என்பதை நானும் அறிவேன். அத்துடன் அதைப் பற்றி என் பதில்களில் குறிப்பிட்டும் வருகின்றேன். ஆனால் இந்த திரி, விக்கியரின் தலைமைத்துவம் பற்றிய திரி. அதை ஒட்டித்தான் என் கருத்துகள்.

Quote

இறுதியாக, "சுமந்திரனைக் கூடச் சமாளிக்க முடியாத விக்கியர்" என்ற உங்களின் கருத்திலிருந்தே யார் பிரச்சினைக்குக் காரணம் என்பது தெளிவாகிறது நண்பரே ! 

என்ன சொல்ல வருகின்றீர்கள் என புரியவில்லை நண்பரே.

-----------------------------------------

இறுதியாக உங்களிடம் ஒரு கேள்வியுடன் நிறுத்திக் கொள்கின்றேன்.

விக்கியரை தமிழர்களுக்கு தலைமை தாங்குவதற்கான தலைமைத்துவப் பண்பும், நிர்வாகத் திறனும், தன் கட்சி உறுப்பினர்களையும், தன்னுடன் இயங்க கூடிய ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களையும் அரவணைத்து செல்லக் கூடிய, பெளத்த பேரினவாதத்தினை எதிர்த்து ஆக்கபூர்வமாக செயற்படக் கூடிய ஒரு 'தலைவர்' ஆக ஏற்கின்றீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் இறுதியாகக் கூறியது இதைத்தான்.

"சுமந்திரனையே சமாளிக்க முடியாத விக்கியர், எப்படிச் சிங்களவரைச் சமாளிக்கப் போகிறார்" எனும் உங்களின் கேள்வியைத்தான்.

இந்தக் கேள்வியில் நீங்கள் யாரைத் தவறானவர் என்று குறிப்பிடுகிறீர்கள்? விக்கியருக்குத் தலையிடியைக் கொடுக்கும் சுமந்திரனையா அல்லது அவரைச் சமாளிக்கத் திணறும் விக்கியையா? 

நீங்கள் சுமந்திரனைத்தான் தவறானவர் என்று குறிப்பிடுகிறீர்கள் என்று நான் எடுத்துக்கொள்ளலாமா? 

இப்போது புரிகிறதா உங்களுக்கு ? 

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக்கேட்டால்

மேலே தேர்வுக்காக  தெரிவு  செய்யப்பட்ட  எவருமில்லை (வேண்டுமானால்  ஆலோசகர்களாக  இருக்கலாம்)

புதியவர்

எந்த  அமைப்பு கட்சியிலும் இல்லாதவர்

அடி  மட்டத்திலிருந்து

மக்களுக்காக  சேவை  செய்து

அவர்களால் தெரிவு  செய்யப்பட்ட

ஒரு அடுத்த  தலைமுறையை  சேர்ந்தவர்  வரணும்

  • கருத்துக்கள உறவுகள்

அதுபற்றி எனக்குத் தெரியவில்லை,

ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் தெரியும். எத்தனையோ பேருக்கு எத்தனையோ முறை நாம் சந்தர்ப்பம் கொடுத்துக்கொண்டுதானே இருக்கிறோம். விக்கியருக்கும் ஒருமுறை கொடுத்துப் பார்க்கலாம், என்ன குறைந்துவிடப்போகிறது.

23 minutes ago, ragunathan said:

நான் இறுதியாகக் கூறியது இதைத்தான்.

"சுமந்திரனையே சமாளிக்க முடியாத விக்கியர், எப்படிச் சிங்களவரைச் சமாளிக்கப் போகிறார்" எனும் உங்களின் கேள்வியைத்தான்.

இந்தக் கேள்வியில் நீங்கள் யாரைத் தவறானவர் என்று குறிப்பிடுகிறீர்கள்? விக்கியருக்குத் தலையிடியைக் கொடுக்கும் சுமந்திரனையா அல்லது அவரைச் சமாளிக்கத் திணறும் விக்கியையா? 

நீங்கள் சுமந்திரனைத்தான் தவறானவர் என்று குறிப்பிடுகிறீர்கள் என்று நான் எடுத்துக்கொள்ளலாமா? 

இப்போது புரிகிறதா உங்களுக்கு ? 

அது பிரபாதாசனுக்கு சுமந்திரன் விக்கியரை தடுக்கின்றார் என்று சொன்னதுக்கு போட்ட பதில்.

சுமந்திரனை பற்றி என்னைக் கேட்டால்; சுமந்திரனின் சில நடவடிக்கைகள் எனக்கு பிடிக்கின்றது (அரசியல் தீர்வு திட்டம் தயாரிக்க கொஞ்சமாவது முனைப்பு காட்டுவது, மனதில் பட்டவற்றை தேர்தல் வாக்குகள் பற்றி எண்ணாமல் கதைப்பது போன்றவை )

ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் சக கட்சிகளை கூட எதிரியாக்கி ஒற்றுமையை குலைத்த ஒருவர். உட் கட்சி சனனாயகத்தை கூட நிராகரிக்கும் ஒருவர் தமிழ் அரசியலில் முதன்மை பெறும் சூழ்நிலை உருவாகியதை வெறுக்கின்றேன். முற்றிலும் சிங்கள அரசுகளை நம்பி தோற்றுப் போகப் போகும் தமிழர்களில் இறுதியாக தோற்கப் போகின்றவர் சுமந்திரன்.

-----

என்னைப் பொறுத்தவரைக்கும் விக்கியர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வெடுத்து தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்பில் தொடர்ந்து மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். மக்களை அணி திரட்டி முன் செல்லக் கூடியவர்களை இனம் கண்டு அவர்களை மக்கள் முன் நிறுத்தும் அமைப்பு ஒன்றில் அவரது பங்களிப்பு இருக்குமானால் அதுவே அவர் தமிழ் மக்களுக்கு ஆற்றும் சிறந்த பணி ஆக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ragunathan said:

அதுபற்றி எனக்குத் தெரியவில்லை,

ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் தெரியும். எத்தனையோ பேருக்கு எத்தனையோ முறை நாம் சந்தர்ப்பம் கொடுத்துக்கொண்டுதானே இருக்கிறோம். விக்கியருக்கும் ஒருமுறை கொடுத்துப் பார்க்கலாம், என்ன குறைந்துவிடப்போகிறது.

விக்கியருக்கான சந்தர்ப்பம் முடிந்து விட்டது ரகு...

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

விக்கியருக்கான சந்தர்ப்பம் முடிந்து விட்டது ரகு...

 

சரி, விடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ragunathan said:

சரி, விடுங்கள்

நான்

மாவையா  விக்கியரா என்ற  நிலை  வந்தபோது

விக்கியரையே  விரும்பினேன்

அவரிடம்  எதிர்பார்த்தது

வடகிழக்கு  அபிவிருத்தி

தாயகம்  புலத்துக்கிடையிலான ஒன்றிணைந்த பலத்தை கட்டியெழுப்புதல்

சிறீலங்காவுடன் மோதல் தவிர்ப்பு..

இதைத்தவிர மாவீரருக்கான அஞ்சலியைக்கூட நான்  அவரிடம்  எதிர்பார்க்கவில்லை

ஆனால் .......????

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.