Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாக்­கு­று­தி­யி­லி­ருந்து பின்­வாங்­காது அரசு! :சம்­பந்­தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்­பந்­தன் நம்­பிக்கை: பன்­னாட்­டுச் சமூ­கம் உன்­னிப்­பாக அவ­தா­னித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது என­வும் சுட்­டிக்­காட்டு

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அரசு புதிய அர­ச­மைப்­பைக் கொண்டு வந்தே தீரும். பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு அளித்த வாக்­கு­று­தி­யி­லி­ருந்து இந்த அரசு பின்­வாங்­காது என்ற நம்­பிக்கை எமக்கு இருக்­கின்­றது. இவ்­வாறு தெரி­வித்­தார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்­தன்.

மகா­நா­யக்க தேரர்­கள் மற்­றும் சிங்­கள புத்­தி­ஜீ­வி­கள் ஆகி­யோ­ரின் எதிர்ப்­பை­ய­டுத்து புதிய அர­ச­மைப்­பைக் கொண்­டு­வ­ரும் முயற்­சி­யில் இருந்து அரசு பின்­வாங்­கு­கின்­றது என்று நேற்று வெளி­யான செய்­தி­கள் தொடர்­பில் கருத்­துத் தெரி­விக்­கும்­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஒரு நல்ல காரி­யம் நடக்க இருக்­கின்­ற­தெ­னில் அதைக் குழப்­பி­ய­டிக்க சில கும்­பல்­க­ளும் இருக்­கும். அந்­தக் கும்­பல்­க­ளின் வதந்­திக் கருத்­துக்­களை எவ­ரும் நம்­பக்­கூ­டாது. உண்­மையை நிலையை நாம் புரிந்­து­கொள்ள வேண்­டும். இந்த அரசு மீண்­டும் ஆட்­சி­ய­மைக்க நாம் வெளி­யில் இருந்து அதா­வது எதிர்க்­கட்சி வரி­சை­யில் அமர்ந்­து­கொண்டு ஆத­ர­வ­ளித்­தோம். பல கோரிக்­கை­களை அர­சி­டம் நாம் முன்­வைத்­தி­ருந்­தோம். அதில் முக்­கி­ய­மா­ன­து­தான் இந்­தப் புதிய அர­ச­மைப்பு. இதைக் கொண்டு வரு­வ­தில் அரசு உறு­தி­யாக உள்­ளது. அதற்­கான நட­வ­டிக்­கை­க­ளில் அரசு இறங்­கி­யுள்­ளது. நம்­பிக்­கை­யு­டன் நாம் பய­ணிக்க வேண்­டும். அதைக் குழப்­பி­ய­டிக்­கும் விதத்­தில் எவ­ரும் செயற்­ப­டக்­கூ­டாது

புதிய அர­ச­மைப்­புக்­கான நிபு­ணர்­கள் மற்­றும் சட்ட வல்­லு­நர்­க­ளின் உத்­தேச வரை­வுத் திட்­டத்தை தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அர­ச­மைப்பு நிர்­ண­ய­ச­பை­யான நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பித்­து­விட்­டார். இதை நிறை­வேற்­று­வ­தற்­கான பணி­களை அவர் தலை­மை­யி­லான அரசு முன்­னெ­டுக்­கும். நாமும் எம்­மா­லான சகல ஒத்­து­ழைப்­பு­க­ளை­யும் வழங்­கு­வோம்.

புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் இலங்­கை­யில் நடக்­கும் ஒவ்­வொரு காரி­யங்­க­ளை­யும் பன்­னாட்­டுச் சமூ­கம் உன்­னிப்­பாக அவ­தா­னித்­துக் கொண்­டி­ருக்­கின்­றது – என்­றார்.

https://newuthayan.com/story/11/வாக்­கு­று­தி­யி­லி­ருந்து-பின்­வாங்­காது-அரசு.html

22 hours ago, பிழம்பு said:

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அரசு புதிய அர­ச­மைப்­பைக் கொண்டு வந்தே தீரும். பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு அளித்த வாக்­கு­று­தி­யி­லி­ருந்து இந்த அரசு பின்­வாங்­காது என்ற நம்­பிக்கை எமக்கு இருக்­கின்­றது.

மக்களை இப்படி தானே இத்தனை வருடங்களா ஏமாத்தி வாறீங்க!

தைக்கு முதல்ல, வருஷப்பிறப்புக்கு முதல்ல, தீபாவளிக்கு முதல்ல என்டு ஒவ்வொரு வருஷமும் நிறைய கேட்டாச்சு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/17/2019 at 5:44 PM, பிழம்பு said:

சம்­பந்­தன் நம்­பிக்கை: பன்­னாட்­டுச் சமூ­கம் உன்­னிப்­பாக அவ­தா­னித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது என­வும் சுட்­டிக்­காட்டு

உதைத்தான்  அப்பத்தையான் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கமும் சொல்லிக்கொண்டு திரிஞ்சவர். :(

 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன்,  தன்னுடைய பதவியையே காப்பாத்த  வக்கில்லை.
இப்ப,  அரசாங்கத்துக்கு... , புடுங்க  வந்திட்டார்...  

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்பிற்குரிய சம்பந்தன் ஐயா தன் மதிப்பை இழப்பது இது போன்ற புறுபுறுப்புகளால் தான்! கம்முன்னு இருந்தா அடுத்த தேர்தலில் ஜம்முன்னு வெற்றி பெறலாம்.😃

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Rajesh said:

மக்களை இப்படி தானே இத்தனை வருடங்களா ஏமாத்தி வாறீங்க!

தைக்கு முதல்ல, வருஷப்பிறப்புக்கு முதல்ல, தீபாவளிக்கு முதல்ல என்டு ஒவ்வொரு வருஷமும் நிறைய கேட்டாச்சு!

இந்து மக்கள் கடைப்பிடிக்கும் 56 திருநாட்களில் 3 திருநாட்களைத்தானே சொல்லியிருக்கிறார்..... மிகுதி 53 திருநாட்களையும் கூறியபின் அனைத்தும் நிறைவேறும். கவலை வேண்டாம்.🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/17/2019 at 5:44 PM, பிழம்பு said:

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அரசு புதிய அர­ச­மைப்­பைக் கொண்டு வந்தே தீரும். பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு அளித்த வாக்­கு­று­தி­யி­லி­ருந்து இந்த அரசு பின்­வாங்­காது என்ற நம்­பிக்கை எமக்கு இருக்­கின்­றது

தமிழன் அழிந்து செல்வது  இந்த குருட்டு நம்பிக்கையினால் தானே

1 hour ago, Paanch said:

இந்து மக்கள் கடைப்பிடிக்கும் 56 திருநாட்களில் 3 திருநாட்களைத்தானே சொல்லியிருக்கிறார்..... மிகுதி 53 திருநாட்களையும் கூறியபின் அனைத்தும் நிறைவேறும். கவலை வேண்டாம்.🤣

 

ஆயிரக்கணக்கான வருடங்களாக இது போன்ற அர்த்தமற்ற மூடத்தனமான பண்டிகைகளை வைத்து மக்களை சிந்தித்து முன்னேற விடாமல் தடுத்தபோது அமைதியாக  இருந்ததுடன் இன்றைய அறிவியல் வளர்ச்சி அடைந்த காலத்திலும்  இதை நம்பி வேலையை விட்டுவிட்டு இதை கொண்டாடும் மூடர்களாக நாம் இருப்பதை பார்ததுவிட்டு இந்த மூடர்களை நானும் ஏமாற்றினால் என்ன என்று சம்பந்தர் நினைத்ததில் தவறில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, tulpen said:

ஆயிரக்கணக்கான வருடங்களாக இது போன்ற அர்த்தமற்ற மூடத்தனமான பண்டிகைகளை வைத்து மக்களை சிந்தித்து முன்னேற விடாமல் தடுத்தபோது அமைதியாக  இருந்ததுடன் இன்றைய அறிவியல் வளர்ச்சி அடைந்த காலத்திலும்  இதை நம்பி வேலையை விட்டுவிட்டு இதை கொண்டாடும் மூடர்களாக நாம் இருப்பதை பார்ததுவிட்டு இந்த மூடர்களை நானும் ஏமாற்றினால் என்ன என்று சம்பந்தர் நினைத்ததில் தவறில்லை. 

நான் சைவ சமயத்தோடு ஒட்டி வாழ்பவன். பெரும்பாலும் அது இயற்கையை வழிபடும் சமயம்.

திங்கள் செவ்வாய் வியாழன் வெள்ளி சனி ஆகிய நாட்களில்   நான்    மாமிசம் சாப்பிடுவதில்லை.

அன்று மத ரீதியாக புலால் உண்பது கூடாது என்றார்கள். இன்று விஞ்ஞான/சுகாதார ரீதியாக அதிக மாமிசம் உடல் நலத்திற்கு கேடு என்கிறார்கள்.

அதை விட மாமிசம் சாப்பிட்டால் புற்றுநோய் வரும் எனவும் பயமுறுத்துகின்றார்கள்.

இதுபற்றி தங்கள் கருத்து என்ன?

Edited by குமாரசாமி
நான் என்ற சொல் இணைக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரின் கருத்துப்பற்றி நானும் எனது கருத்தைப் பதியலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவது, சம்பந்தருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இன்றுள்ள தெரிவுகளென்ன? 2009 இல் கொடூரமான இனக்கொலையொன்றின் மூலம் எம்மக்களில் குறைந்தது 150,000 பேரைக் கொன்ற மகிந்த எனும் மேற்குலகிற்கெதிரான போர்க்குற்றவாளியை ஆதரிப்பது. ஆனால் தமிழ் மக்கள் இதனை ஒருபோது ஆதரிக்கப்போவதில்லையென்பதுடன், வருகிற தேர்தல்களில் கூட்டமைப்பின் வெற்றியை இம்முடிவு பெரிதும் பாதிக்கும். அடுத்ததாக, மகிந்தவை ஆட்சியில் தொடர்ந்தும் வைத்திருக்க முடிந்தால், மேற்குலகு தமிழர் மீதான போர்க்குற்ற விசாரணைகளைத் தூக்கிப் பிடிக்கும், இது ஒருவேளை எமக்கு சாதமாக அமையக்கூடும் என்பதும் ஓரளவிற்குச் சாத்தியம்.

அவர்களுக்கு முன்னுள்ள அடுத்த தெரிவு மேற்குலகிற்குச் சார்பான ரணிலை ஆதரிப்பது. இதுசம்பந்தரின் முடிவு என்பதற்கப்பால், அவர்மீது இந்திய மேற்குலக அழுத்ததினால் ஏற்படுத்தப்பட்ட முடிவென்பதுதான் உண்மை. ஒருவகையில் நாம் பகடைக் காய்களாக பாவிக்கப்பட்டிருக்கிறோம். போர்க்குற்ற விசாரணைகளுக்கான மேற்குலக அழுத்ததை ரணிலை ஆதரிப்பதன் மூலம் நாம் இழந்திருந்தாலும்கூட, சம்பந்தர் உற்பட எமக்கு வேறுவழிகளில்லை. 

ஆக, தன்மேல் சுமத்தப்பட்ட , ரணிலை ஆதரிப்பதென்கிற முடிவை சம்பந்தர் விரும்பியோ அல்லது வெறுப்புடனோ ஆதரித்தாகவேண்டிய நிலையில் அவர் இன்று இருக்கிறார். தாம் தொடர்ந்தும் ரணிலுக்கு ஆதரவளித்து வருவதற்கான காரணத்தை அவர் ஏதோ ஒரு காரணத்தைக் காட்டியாவது சொல்லவேண்டும். இதற்காக அவருக்குக் கிடைத்திருக்கும் காரணம் தீர்விற்கான அரசியல் யாப்புத் திருத்தம். 

அரசியல் யாப்புத் திருத்தம்  வெற்றியளிக்கும்  என்கிற கட்டாய நம்பிக்கையில் அவர் இருக்கிறார். 

தான் நம்புவதை தமிழ் மக்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். 

எமக்கும் அதைவிட இப்போதைக்கு வேறு வழியில்லை. ஏனெனில் எமது அரசியலைக் கொண்டு நடத்த எமக்கிருந்த பலம் 2009 மேயுடன் இல்லாமல் போய்விட்டதே!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.