Jump to content

ஜிகாதி மனைவி திரும்ப UK அரசு அனுமதிக்குமா?


Nathamuni

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ISIS Women: wish to return to London

IS தீவிரவாதிகளினால், மூளைச்சலவை செய்யப்பட்டு, நன்கு படிக்கக் கூடிய  15 வயது மாணவி சிரியாவுக்கு, ஓடிப் போனார்.

அங்கே ஒரு ஜிகாதியை மணந்து கொண்ட அவர் 2 பிள்ளைகளுக்கு தாயானார். பிறந்த இரண்டு குழந்தைகளும் தகுந்த மருத்துவ வசதி இன்றி இறந்து விட்டதால், இனி பிறக்க இருக்கும் பிள்ளையை சிறந்த மருத்துவ வசதி கொண்ட பிரிட்டனுக்கு வந்து பெற்றுக்  கொள்ள விரும்புகிறார்.

இந்நிலையில் மூன்றாவது பிள்ளைக்கு தாயாக உள்ள நிலையில், IS படைகள் தமது பகுதிகளை இழந்து கொண்டிருக்கும் நிலையில் மிக குறுகிய பகுதியில் சிரிய படைகளினால் சுத்தி வளைக்கப் பட்டு உள்ள நிலையில், அவரது கணவர், சிரிய படைகளிடம் சரணடைந்து விட்டார்.

இந்த 19 வயது பெண், பிறக்க இருக்கும் குழந்தைக்கு மருத்துவ வசதி வேண்டியும், தான்  பிறந்த பிரித்தானியாவுக்கு திரும்பி வர விரும்புகிறார். இலண்டனில் இருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஷமீமா பேகம், கதிஜா சுல்தானா, அமைரா அபாஸ் ஆகிய மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர், துருக்கி சென்ற அவர்கள் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்தனர்.

அவர் இங்கு பிறந்தவர் ஆயினும், அவரது தாய், தந்தையர் பங்களாதேஸ் நாட்டுக் காரர்கள்.

சிரியாவில் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணி பெண் லண்டன் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.

இவர் இறந்திருக்கலாம் என்று கருதப் பட்ட நிலையில், தீடீரென ஒரு பத்திரிகை பேட்டி மூலம் இவர் உயிருடன் இருப்பதும், இங்கே வர விரும்பும் கோரிக்கையும் எழுந்துள்ளது. இவருடன் போன இரு பெண்கள் நிலை தெரியவில்லை.

ஆனால் இது பிரிட்டனில் மிகப் பெரிய வாதப், பிரதி வாதங்களையும், சட்டப்  பிரச்சினைகளையும் உண்டாக்கி உள்ளது.

அந்த பேட்டியில் இவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவோ, அது தவறு என்று சொல்லவோ இல்லை. இவரது மனதில் என்ன உள்ளது என்று தெரியாத நிலையில், எவ்வாறு வெளியில் விட முடியும் என்கிறார் பாதுகாப்பு அமைச்சர். வந்தால் சிறை தான், வேறு வழி இல்லை என்கிறார் அவர்.

நாட்டின், இஸ்லாமிய உள்துறை அமைச்சரான ஜாவித், தனது அதிகாரம் அனைத்தையும் பயன்படுத்தி அவர் வருவதை தடுப்பேன் என்கிறார். பிரித்தானியாவில் பிறந்தவரை சட்டப்படி தடுக்க முடியாது. ஆயினும், பிரித்தானியாவின் வேறு, கடல்  முடிக்குரிய பகுதியில் வைத்திருக்க முடியும்.

அவரது உறவினர் , நாட்டின் மன நிலை சரியானது தான். அந்த பெண் செய்தது தவறு.... குழந்தைக்காகவாவது அவரை வர அனுமதியுங்கள் என்கிறார். வந்து கல்வியை தொடர வேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார்.

பிரிட்டனின் பத்திரிகைகள் சில நஞ்சைக் கக்குகின்றன.

போகும் போதே, நாட்டுக்கு துரோகம் செய்துதானே போனார். பிறகு எதுக்கு இங்கே வர வேண்டும் என்கிறது ஒன்று.

வேண்டுமானால், சட்டத்தினை மாத்தி, தாய், தந்தையரின், பங்களாதேஷுக்கு அனுப்ப வேண்டும் என ஒன்று எழுதுகிறது. பத்திரிகையில் பின்னூட்டம் எழுதுபவர்கள், வயித்தில் இருப்பது பிள்ளை தானோ அல்லது வெடிகுண்டோ என்று சோதித்தே உள்ளே விடுவதனால் விடுங்கள் என்கிறார்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டைக் குடியுரிமை இல்லாத ஒருவரை தன் ஒரேயொரு நாட்டுக்குத் திரும்பி வர தடை போட சர்வதேச சட்டம் விடாது. ஆனால், வந்தவுடன் பிடித்து நீண்ட காலம் சிறையில் போட வேண்டும் என்பதே என் கருத்து. இந்தப் பெண் பயங்கரவாதத்தை நாடிப் போய், படுகொலைகலைத் தான் செய்யாவிட்டாலும், செய்த ஒரு குழுவுடன் இருந்து, இப்போது தனக்கும் குழந்தைக்கும் நல்ல மருத்துவ வசதி வேண்டும் என்பதற்காக மட்டும் பிரிட்டன் வர முனைகிறது. இந்த hypocrisy ஐ ஏற்றுக் கொள்ளும் எந்த நாடும் தனி நபரும் இந்த உலகில் இருப்பதாக நான் நம்பவில்லை! அவர் இப்போது இருக்கும் அகதி முகாமே அவருக்கு சிறந்த உறைவிடம்! 

Link to comment
Share on other sites

5 hours ago, Justin said:

இரட்டைக் குடியுரிமை இல்லாத ஒருவரை தன் ஒரேயொரு நாட்டுக்குத் திரும்பி வர தடை போட சர்வதேச சட்டம் விடாது. ஆனால், வந்தவுடன் பிடித்து நீண்ட காலம் சிறையில் போட வேண்டும் என்பதே என் கருத்து. இந்தப் பெண் பயங்கரவாதத்தை நாடிப் போய், படுகொலைகலைத் தான் செய்யாவிட்டாலும், செய்த ஒரு குழுவுடன் இருந்து, இப்போது தனக்கும் குழந்தைக்கும் நல்ல மருத்துவ வசதி வேண்டும் என்பதற்காக மட்டும் பிரிட்டன் வர முனைகிறது. இந்த hypocrisy ஐ ஏற்றுக் கொள்ளும் எந்த நாடும் தனி நபரும் இந்த உலகில் இருப்பதாக நான் நம்பவில்லை! அவர் இப்போது இருக்கும் அகதி முகாமே அவருக்கு சிறந்த உறைவிடம்! 

ISIS ஈராக்கில் சண்டை இடும்போது, அவர்கள் போராளிகள் என்ற நிலையில் இருந்தது பிரிட்டன்.

பிரிட்டனினதும் அதன் நேச நாடுகளினதும் நலன்களுக்கு எதிராக அவர்கள் மாறியபோது, அவர்கள் முழுதாக பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டனர்.

மேற்படி பெண், பிரிட்டனின் பார்வையில் - போராளியா அல்லது பயங்கரவாதியா என்று தெரியவில்லை.

இதை நீதிமன்றம் தீர்மானிக்கும்.

Link to comment
Share on other sites

1 minute ago, thulasie said:

ISIS ஈராக்கில் சண்டை இடும்போது, அவர்கள் போராளிகள் என்ற நிலையில் இருந்தது பிரிட்டன்.

பிரிட்டனினதும் அதன் நேச நாடுகளினதும் நலன்களுக்கு எதிராக அவர்கள் மாறியபோது, அவர்கள் முழுதாக பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டனர்.

மேற்படி பெண், பிரிட்டனின் பார்வையில் - போராளியா அல்லது பயங்கரவாதியா என்று தெரியவில்லை.

இதை நீதிமன்றம் தீர்மானிக்கும்.

நாடுகளின் அரசியல் பார்வையில் போராளிகளா,பயங்கரவாதிகளா  என்பது அவர்கள் நலனிற்கேற்ப மாறுபடலாம். ஆனால் மனித நீதியின் பார்வையில்  மதவெறியனாகி மதத்துக்காக வன்முறையில் இறங்குபவன்  பயங்கரவாதிதான். அதன்படி தற்போதய உலகில் முதலாவது இடத்தில்  முஸ்லீம் பயங்கரவாதிகளும்,பிராந்திய ரீதியில் இந்து பயங்கரவாதிகளும் உள்ளனர். 

Link to comment
Share on other sites

41 minutes ago, tulpen said:

நாடுகளின் அரசியல் பார்வையில் போராளிகளா,பயங்கரவாதிகளா  என்பது அவர்கள் நலனிற்கேற்ப மாறுபடலாம். ஆனால் மனித நீதியின் பார்வையில்  மதவெறியனாகி மதத்துக்காக வன்முறையில் இறங்குபவன்  பயங்கரவாதிதான். அதன்படி தற்போதய உலகில் முதலாவது இடத்தில்  முஸ்லீம் பயங்கரவாதிகளும்,பிராந்திய ரீதியில் இந்து பயங்கரவாதிகளும் உள்ளனர். 

 

 

இந்து பயங்கரவாதிகள் என்று என்னதான் சொன்னாலும், நமது அன்றைய நாடு இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக அவர்களை இந்தியா போஷிக்கிறது.

மியன்மாரில் பவுத்த பயங்கரவாதிகள் எப்படித்தான், பிற இன மக்களைக் கொன்று குவித்தாலும், அவர்களை அந்த அரசு பவுத்த பயங்கரவாதிகள் என்று ஒருபோதும் சொல்வதில்லை.

தமிழினத்திற்கு, பவுத்த இராணுவத்தால் என்னதான் கொடுமை இழைக்கப்பட்டாலும், அவர்களை பயங்கரவாதிகள் என்றோ போர்க்குற்றம் செய்தவர்கள் என்றோ  ஒருபோதும் கருதுவதில்லை.

முஸ்லீம் பயங்கரவாதிகள் என்னதான் குற்றம் செய்தாலும், அவர்களை முஸ்லீம் பயங்கரவாதிகள் என்று ஒருபோதும் எந்த ஒரு முஸ்லீம் நாடும் சொல்வதில்லை. 

மதத்திற்காக வன்முறையில் இறங்கினாலோ, அல்லது மதமற்ற கொள்கையில் இருந்துகொண்டு வன்முறையில் இறங்கினாலும், அதை ஆதரிக்க அல்லது எதிர்க்க நாடுகள் இருக்கும்போது, ஒருவரை பயங்கரவாதி என்றும், உரிமைப் போராளி என்றும் சொல்ல ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது.

இது அவரவர் நலன் சார்ந்ததாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

50 minutes ago, thulasie said:

 

 

இந்து பயங்கரவாதிகள் என்று என்னதான் சொன்னாலும், நமது அன்றைய நாடு இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக அவர்களை இந்தியா போஷிக்கிறது.

மியன்மாரில் பவுத்த பயங்கரவாதிகள் எப்படித்தான், பிற இன மக்களைக் கொன்று குவித்தாலும், அவர்களை அந்த அரசு பவுத்த பயங்கரவாதிகள் என்று ஒருபோதும் சொல்வதில்லை.

தமிழினத்திற்கு, பவுத்த இராணுவத்தால் என்னதான் கொடுமை இழைக்கப்பட்டாலும், அவர்களை பயங்கரவாதிகள் என்றோ போர்க்குற்றம் செய்தவர்கள் என்றோ  ஒருபோதும் கருதுவதில்லை.

முஸ்லீம் பயங்கரவாதிகள் என்னதான் குற்றம் செய்தாலும், அவர்களை முஸ்லீம் பயங்கரவாதிகள் என்று ஒருபோதும் எந்த ஒரு முஸ்லீம் நாடும் சொல்வதில்லை. 

மதத்திற்காக வன்முறையில் இறங்கினாலோ, அல்லது மதமற்ற கொள்கையில் இருந்துகொண்டு வன்முறையில் இறங்கினாலும், அதை ஆதரிக்க அல்லது எதிர்க்க நாடுகள் இருக்கும்போது, ஒருவரை பயங்கரவாதி என்றும், உரிமைப் போராளி என்றும் சொல்ல ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது.

இது அவரவர் நலன் சார்ந்ததாக இருக்கிறது.

ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் விடுதலைக்காக போரிட்ட ஈழத்தமிழர்களிர் மிகப்பெரும்பான்மையினர் இந்துக்களாக இருந்த போதும் இந்து மத  இந்தியர்கள் அதை ஆரம்பத்தில் இருந்தே எம்மை ஆதரிப்பது போல் நடித்துக் கொண்டு  ஈழத்தமிழரின் நியாயமான போராட்டத்திற்கு எதிராக எல்லா உதவியும் பெளத்த சிங்கள அரசுக்கு செய்தனர்.ஏனெனில் அவர்கள் நிறுவ விரும்புவது சமத்துவமான இந்து மதத்தை அல்ல.பார்ப்பன மேலாதிக்கத்தையும் வருணாசிரமத்தையும்  ஏற்றுக்கொண்ட இந்து அடிமைகளைத்தான். ஈழத்தமிழரை இந்துக்களாக பார்ததைவிட கீழ்ஜாதியினராகவே இந்தி ஆளும் வர்க்கத்தினர் பார்ததார்கள். 

ஈழத்தமிழர்கள் கிறிஸதவர்களாக இருந்து பக்கத்தில் இந்தியா போல ஒரு கிறிஸதவ நாடு இருந்திருந்தால் நிச்சயமாக எம்மை மதத்துக்காகவேனும் ஆதரித்து எமது நியாயபூர்வ உரிமைகளை பெற்றுத்  தந்திருப்பார்கள். ஆனால் இந்து மதத்தில் அவர்கள் கடவுளை விட தமது பார்பன மேலாண்மையை அதிகம் இரும்புவதால் அவர்கள் பூசை செய்யும்  கடவுளுக்கு கூட பயப்பட மாட்டார்கள். (ஏனென்றால் கடவுள் என்று ஒன்று இல்லை என்ற உண்மை அவர்களுக்கு தான் எம்மை விட  நன்றாக தெரியும்) 

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

ஏனெனில் அவர்கள் நிறுவ விரும்புவது சமத்துவமான இந்து மதத்தை அல்ல.பார்ப்பன மேலாதிக்கத்தையும் வருணாசிரமத்தையும்  ஏற்றுக்கொண்ட இந்து அடிமைகளைத்தான். ஈழத்தமிழரை இந்துக்களாக பார்ததைவிட கீழ்ஜாதியினராகவே இந்தி ஆளும் வர்க்கத்தினர் பார்ததார்கள். 

 

இந்து மதம் சமத்துவமான மதம் அல்ல என்று விளங்குகிறது - உங்கள் கருத்தைப் பார்க்கும்போது.

ஆக, நீங்கள் மதத்தை மாற்றுவது நல்லது என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

2 minutes ago, thulasie said:

இந்து மதம் சமத்துவமான மதம் அல்ல என்று விளங்குகிறது - உங்கள் கருத்தைப் பார்க்கும்போது.

ஆக, நீங்கள் மதத்தை மாற்றுவது நல்லது என்று நினைக்கிறேன்.

Thank you for your advice.

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:



ஈழத்தமிழர்கள் கிறிஸதவர்களாக இருந்து பக்கத்தில் இந்தியா போல ஒரு கிறிஸதவ நாடு இருந்திருந்தால் நிச்சயமாக எம்மை மதத்துக்காகவேனும் ஆதரித்து எமது நியாயபூர்வ உரிமைகளை பெற்றுத்  தந்திருப்பார்கள். 

 

இந்துப் பெரும்பான்மையைக் கொண்ட இந்தியா, ஈழப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்ற காரணத்தால், அவர்களை இப்போது பிராந்திய இந்துப் பயங்கரவாதிகள் என்று சொல்கிறீர்கள்.

ஒரு பேச்சுக்கு. கிறிஸ்தவர்களை இந்தியா பெரும்பான்மையைக் கொண்ட நாடாக இருந்து, ஈழத்தமிழர்களுக்கு உதவாமல் இருந்திருந்தால், அவர்களை கிறிஸ்தவப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவீர்களா?

எந்த மதம் பெரும்பான்மையாக கொண்டிருந்தாலும், அது தனது நலன் நாடித்தான் சிந்திக்கும்.

Link to comment
Share on other sites

3 minutes ago, thulasie said:

 

இந்துப் பெரும்பான்மையைக் கொண்ட இந்தியா, ஈழப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்ற காரணத்தால், அவர்களை இப்போது பிராந்திய இந்துப் பயங்கரவாதிகள் என்று சொல்கிறீர்கள்.

ஒரு பேச்சுக்கு. கிறிஸ்தவர்களை இந்தியா பெரும்பான்மையைக் கொண்ட நாடாக இருந்து, ஈழத்தமிழர்களுக்கு உதவாமல் இருந்திருந்தால், அவர்களை கிறிஸ்தவப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவீர்களா?

எந்த மதம் பெரும்பான்மையாக கொண்டிருந்தாலும், அது தனது நலன் நாடித்தான் சிந்திக்கும்.

மத அடிப்படையில் சிந்திப்பதையோ மத அடிப்படையில் ஆதரிப்பதையொ சரி என்று நான் கூறவில்லை. இந்து மதத்தில் அவர்கள் நம்பும் கடவுளை விட வருணாசிரமத்தில் தான் அதிக நம்பிக்கை வ்வைத்துள்ளார்கள் என்பதை விளக்குவதற்கான. உதாரணமாகவே அதைக குறிப்பிட்டிருந்தேன். முஸ்லிம் பயங்கரவாதிகள் மற்றைய மதத்தவர்களுக்கு எதிராக ஆயுத வன்முறை செய்கிறார்கள் என்றால் இந்துப் பயங்கரவாதிகள் மற்றைய மதத்தினரை விட தனது இந்து மதத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் மீது தான் அதிக சமூக வன்முறைகளைச் செய்கிறார்கள். 

Link to comment
Share on other sites

16 minutes ago, tulpen said:

முஸ்லிம் பயங்கரவாதிகள் மற்றைய மதத்தவர்களுக்கு எதிராக ஆயுத வன்முறை செய்கிறார்கள் என்றால் இந்துப் பயங்கரவாதிகள் மற்றைய மதத்தினரை விட தனது இந்து மதத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் மீது தான் அதிக சமூக வன்முறைகளைச் செய்கிறார்கள். 

நீங்கள் சொல்வது உண்மை.

முஸ்லீம் பயங்கரவாதிகள், பிற மத மக்களுக்குத்தான் ஆயுத வன்முறை செய்கிறார்கள்.

பவுத்த பயங்கரவாதிகள் கூட, பிற மத மக்களுத்தான் ஆயுத வன்முறை செய்கிறார்கள்.

கிறிஸ்தவ பயங்கரவாதிகள் கூட, பிற மத மக்களுக்குத்தான் ஆயுத வன்முறை செய்கிறார்கள்.

 இந்துப் பயங்கரவாதிகள் மற்றைய மதத்தினரை விட தனது இந்து மதத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் மீது தான் அதிக சமூக வன்முறைகளைச் செய்கிறார்கள். 

 இந்து மதத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் மீது  அதிக சமூக வன்முறைகளைச் செய்யும், இந்துப் பயங்கரவாதிகளின் கொடுமைகளில் இருந்து விடுபட, முஸ்லீம் , கிறிஸ்தவ அல்லது பவுத்த மதத்தில்  சேர்ந்து, உங்களுக்கு ஏற்படும் சமூக வன்முறைகளை இல்லாதொழிக்கலாம்.

ஏதாவதொன்றை தெரிவு செய்யுங்கள். 
 

Link to comment
Share on other sites

1 minute ago, thulasie said:

நீங்கள் சொல்வது உண்மை.

முஸ்லீம் பயங்கரவாதிகள், பிற மத மக்களுக்குத்தான் ஆயுத வன்முறை செய்கிறார்கள்.

பவுத்த பயங்கரவாதிகள் கூட, பிற மத மக்களுத்தான் ஆயுத வன்முறை செய்கிறார்கள்.

கிறிஸ்தவ பயங்கரவாதிகள் கூட, பிற மத மக்களுக்குத்தான் ஆயுத வன்முறை செய்கிறார்கள்.

 இந்துப் பயங்கரவாதிகள் மற்றைய மதத்தினரை விட தனது இந்து மதத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் மீது தான் அதிக சமூக வன்முறைகளைச் செய்கிறார்கள். 

 இந்து மதத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் மீது  அதிக சமூக வன்முறைகளைச் செய்யும், இந்துப் பயங்கரவாதிகளின் கொடுமைகளில் இருந்து, விடுபட, முஸ்லீம் , கிறிஸ்தவ அல்லது பவுத்த மதத்தில்  சேர்ந்து, உங்களுக்கு ஏற்படும் சமூக வன்முறைகளை இல்லாதொழிக்கலாம்.

ஏதாவதொன்றை தெரிவு செய்யுங்கள். 
 

என்ன multiple choice  பரீட்சை வைக்கின்றீர்களா?  கட்டாயம் நீங்கள் கூறிய தெரிவில் ஒன்றைத்தான் நான் தெரிவு செய்ய வேண்டுமா? 

Link to comment
Share on other sites

6 minutes ago, tulpen said:

என்ன multiple choice  பரீட்சை வைக்கின்றீர்களா?  கட்டாயம் நீங்கள் கூறிய தெரிவில் ஒன்றைத்தான் நான் தெரிவு செய்ய வேண்டுமா? 

அது உங்கள் தெரிவு.

இந்துப் பயங்கரவாதிகள், இந்து மதத்தை ஏற்ற இந்துக்களையே சமூக வன்முறைக்கு உட்படுத்துகிறார்கள் என்று நீங்கள்தான் சாட்சி சொன்னீர்கள்.

அதை நிவர்த்திக்க பரிகாரம் சொன்னேன்.

அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

4 minutes ago, thulasie said:

அது உங்கள் தெரிவு.

இந்துப் பயங்கரவாதிகள், இந்து மதத்தை ஏற்ற இந்துக்களையே சமூக வன்முறைக்கு உட்படுத்துகிறார்கள் என்று நீங்கள்தான் சாட்சி சொன்னீர்கள்.

அதை நிவர்த்திக்க பரிகாரம் சொன்னேன்.

அவ்வளவுதான்.

இது ஒரு கருத்துக்களம் இங்கு நாம்த எல்லோரும் எமது கருத்துக்களை தெரிவிக்கிறோமே தவிர யாரும்  யாரிடமும் பரிகாரம் யாசிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

10 minutes ago, tulpen said:

இது ஒரு கருத்துக்களம் இங்கு நாம்த எல்லோரும் எமது கருத்துக்களை தெரிவிக்கிறோமே தவிர யாரும்  யாரிடமும் பரிகாரம் யாசிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இந்துப் பயங்கரவாதிகள், இந்து மதத்தை ஏற்ற இந்துக்களையே சமூக வன்முறைக்கு உட்படுத்துகிறார்கள் என்று நீங்கள் ஆதங்கப்பட்டதை, எழுதி இருந்தீர்கள்.

என் பதிலை பரிகாரமாகவோ, அறிவுரையாகவோ, அல்லது பயனற்றதாகவோ ஆக்கிக்கொள்வதை யார் தலையீடு செய்யப்போகிறார்?

எது எப்படியோ, நீங்கள் அறிவுரையாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.

***Thank you for your advice***

Link to comment
Share on other sites

யூதர்களை கொன்றொழித்தது ஹிட்லர், 

ஷியாக்களை கொன்றொழித்தது சதாம்,

பயங்கர வாதிகளை, பயங்கரவாதிகள் என்ற வட்டத்திற்குள் மட்டும் கொண்டு வரும் வரையில் பயங்கரவாதம் ஒழியாது...

அது வரை இது போல் சாதி மதம் என்று மட்டும் பிதற்றி கொண்டிருக்கலாம்...

Link to comment
Share on other sites

6 minutes ago, thulasie said:

இந்துப் பயங்கரவாதிகள், இந்து மதத்தை ஏற்ற இந்துக்களையே சமூக வன்முறைக்கு உட்படுத்துகிறார்கள் என்று நீங்கள் ஆதங்கப்பட்டதை, எழுதி இருந்தீர்கள்.

என் பதிலை பரிகாரமாகவோ, அறிவுரையாகவோ, அல்லது பயனற்றதாகவோ ஆக்கிக்கொள்வதை யார் தலையீடு செய்யப்போகிறார்?

எது எப்படியோ, நீங்கள் அறிவுரையாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.

***Thank you for your advice***

என்னை இந்து மதத்தில் இருந்து மதம் மாறுமாறு கூறிய உங்கள் அட்வைஸ்ககு நன்றி கூறினேன். அது சரி இந்துப்பயங்கரவாதிகளை விமர்சித்தால்  உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? அவர்களுக்காகவக்காலத்து வாங்குகின்றீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ இனி மேல் திரும்பி வரேலாது...பிரிட்டிஸ் சிட்டிசனை திரும்ப எடுத்தாச்சாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இவ இனி மேல் திரும்பி வரேலாது...பிரிட்டிஸ் சிட்டிசனை திரும்ப எடுத்தாச்சாம் 

Full Home Office letter

The Home Office letter read: “Dear Mrs Begum. Please find enclosed papers that relate to a decision taken by the Home Secretary to deprive your daughter, Shamima Begum, of her British citizenship.

“In light of the circumstances of your daughter, the notice of the Home Secretary’s decision has been served on file today (19th February), and the order removing her British citizenship has subsequently been made. Copies of each are included with this letter.

“If you are in contact with our daughter, or are able to establish contact with her shortly, I would be very grateful if you could ensure the Home Secretary’s decision is brought to her attention, along with her right of appeal to the Special Immigration Appeals Commission, that arises as a result of the service of the notice of intention to deprive her.

“The relevant appeal forms and guidance notes are also included with this letter in case you do have opportunity to relay these to your daughter.

“If you are aware that your daughter has instructed a lawyer that you would like me to also send the enclosed papers to, then please do let me know and I shall arrange for this to happen.”

https://www.express.co.uk/news/uk/1089584/Shamima-Begum-letter-citizenship-full-home-office-letter-isis-bride-stripped-british

வெள்ளையள் .... செய்தால் இனவெறி என்று சொல்வார்கள்...

இப்ப உள்ளூர் செயலாளர் (அமைச்சர்) சஜித் ஜாவிட்...

அவ்வளவு தான்...

வெள்ளைகள் செய்ய தயங்கும் வேலைகளை இவர் இலகுவாக செய்வதை அவர்கள் ரசிப்பார்கள்.

இருந்தாலும்... இதுபோல மீடியா கவனம் கூடிய விடயங்களில் இந்த வகை முடிவை எடுக்காவிடில்..... அங்கே போன ஆண், பெண் அனைவருமே... வரலாம் என நினைப்பார்கள். வந்து சிறையில் இருந்தாலும், இங்கே சந்தோசமாக இருக்கலாம் என வருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Nathamuni said:

Full Home Office letter

The Home Office letter read: “Dear Mrs Begum. Please find enclosed papers that relate to a decision taken by the Home Secretary to deprive your daughter, Shamima Begum, of her British citizenship.

“In light of the circumstances of your daughter, the notice of the Home Secretary’s decision has been served on file today (19th February), and the order removing her British citizenship has subsequently been made. Copies of each are included with this letter.

“If you are in contact with our daughter, or are able to establish contact with her shortly, I would be very grateful if you could ensure the Home Secretary’s decision is brought to her attention, along with her right of appeal to the Special Immigration Appeals Commission, that arises as a result of the service of the notice of intention to deprive her.

“The relevant appeal forms and guidance notes are also included with this letter in case you do have opportunity to relay these to your daughter.

“If you are aware that your daughter has instructed a lawyer that you would like me to also send the enclosed papers to, then please do let me know and I shall arrange for this to happen.”

https://www.express.co.uk/news/uk/1089584/Shamima-Begum-letter-citizenship-full-home-office-letter-isis-bride-stripped-british

வெள்ளையள் .... செய்தால் இனவெறி என்று சொல்வார்கள்...

இப்ப உள்ளூர் செயலாளர் (அமைச்சர்) சஜித் ஜாவிட்...

அவ்வளவு தான்...

வெள்ளைகள் செய்ய தயங்கும் வேலைகளை இவர் இலகுவாக செய்வதை அவர்கள் ரசிப்பார்கள்.

இருந்தாலும்... இதுபோல மீடியா கவனம் கூடிய விடயங்களில் இந்த வகை முடிவை எடுக்காவிடில்..... அங்கே போன ஆண், பெண் அனைவருமே... வரலாம் என நினைப்பார்கள். வந்து சிறையில் இருந்தாலும், இங்கே சந்தோசமாக இருக்கலாம் என வருவார்கள்.

அவுசிலும் இது தான்நிலைமை...!

கூழுக்கும் ஆசை.....மீசைக்கும் ஆசை என்றால் இது தான் முடிவு......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இவர் கொன்றது 900 பேர்... பாலியல் பலாத்காரம் செய்த சிறுமிகள் மட்டும் 50.

யுத்தம் செய்து கலைத்துப் போனவர்களுக்கு.... வயித்துப் பசியையும் போக்க உணவை உன்பது போல, சதைப் பசியையும் போக்க, பெண்களை பலாத்கார செய்ய தமக்கு, இஸ்லாம் அனுமதிக்கிறது என்ற தவறான விசயத்தை  பரப்பி.... ஒரு நல்ல மதத்தினை இழிவு செய்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

Full Home Office letter

The Home Office letter read: “Dear Mrs Begum. Please find enclosed papers that relate to a decision taken by the Home Secretary to deprive your daughter, Shamima Begum, of her British citizenship.

“In light of the circumstances of your daughter, the notice of the Home Secretary’s decision has been served on file today (19th February), and the order removing her British citizenship has subsequently been made. Copies of each are included with this letter.

“If you are in contact with our daughter, or are able to establish contact with her shortly, I would be very grateful if you could ensure the Home Secretary’s decision is brought to her attention, along with her right of appeal to the Special Immigration Appeals Commission, that arises as a result of the service of the notice of intention to deprive her.

“The relevant appeal forms and guidance notes are also included with this letter in case you do have opportunity to relay these to your daughter.

“If you are aware that your daughter has instructed a lawyer that you would like me to also send the enclosed papers to, then please do let me know and I shall arrange for this to happen.”

https://www.express.co.uk/news/uk/1089584/Shamima-Begum-letter-citizenship-full-home-office-letter-isis-bride-stripped-british

வெள்ளையள் .... செய்தால் இனவெறி என்று சொல்வார்கள்...

இப்ப உள்ளூர் செயலாளர் (அமைச்சர்) சஜித் ஜாவிட்...

அவ்வளவு தான்...

வெள்ளைகள் செய்ய தயங்கும் வேலைகளை இவர் இலகுவாக செய்வதை அவர்கள் ரசிப்பார்கள்.

இருந்தாலும்... இதுபோல மீடியா கவனம் கூடிய விடயங்களில் இந்த வகை முடிவை எடுக்காவிடில்..... அங்கே போன ஆண், பெண் அனைவருமே... வரலாம் என நினைப்பார்கள். வந்து சிறையில் இருந்தாலும், இங்கே சந்தோசமாக இருக்கலாம் என வருவார்கள்.

பிரிட்டிஷ் சட்டம் என்னவோ தெரியாது. ஆனால், இரண்டாவது குடியுரிமை இல்லாத ஒருவரை நாடற்றவராக ஆக்கும் வகையில் குடியுரிமையை ரத்து செய்வது சர்வதேச சட்டத்திற்கு முரணாணது என நினைக்கிறேன். கணவரின்  நெதர்லாந்துக்குத் தான் இனித் தலையிடியோ தெரியாது.

ஆனால் இது மற்றைய கேஸ்களுக்கு ஒரு முன்னோடித் தீர்ப்பாக இருக்கும் வகையில் பிரிட்டனால் இறுதி வரை உறுதி செய்யப் படவேண்டும். இந்தப் பெண் போன்றவர்கள் மீண்டும் சாதாரண மக்களுடன் வந்து கலக்க விடவே கூடாது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

பிரிட்டிஷ் சட்டம் என்னவோ தெரியாது. ஆனால், இரண்டாவது குடியுரிமை இல்லாத ஒருவரை நாடற்றவராக ஆக்கும் வகையில் குடியுரிமையை ரத்து செய்வது சர்வதேச சட்டத்திற்கு முரணாணது என நினைக்கிறேன். கணவரின்  நெதர்லாந்துக்குத் தான் இனித் தலையிடியோ தெரியாது.

ஆனால் இது மற்றைய கேஸ்களுக்கு ஒரு முன்னோடித் தீர்ப்பாக இருக்கும் வகையில் பிரிட்டனால் இறுதி வரை உறுதி செய்யப் படவேண்டும். இந்தப் பெண் போன்றவர்கள் மீண்டும் சாதாரண மக்களுடன் வந்து கலக்க விடவே கூடாது! 

அவர் இங்கே பிறந்தவர் என்பதால் அவரது குடியுரிமையை புடுங்க முடியாது. இது நீதிமன்று செல்லும். அதை தெரிந்தே மேன்முறையீடு செய்ய முடியும் என்று சொல்லி உள்ளனர். அதுவும் குடிவரவு குழு ஒன்றுக்கு...

இது முடிந்து, இமிகிரேஷன் கோர்ட், உயர் நீதிமன்று, உச்ச நீதிமன்று என்று போய் வருவத்துக்கு இடையே, காலம் ஓடிவிட, இந்த பெண்ணின் மகன், ஜிகாதியாய் போய்விடுவார்.

நீதிமன்றில் தோல்வி அடையும் நிலை என்றால் (இன்றய சட்டப்படி தோல்விதான் அடையும்), பாராளுமன்று சட்டத்தையே மாத்த முடியும் (supporting the course of enemy of the state and the nation) . சட்டத்துக்கு ஆதரவு தராத MP அடுத்தமுறை மக்களால் தெரிவு செய்யப்பட மாட்டார். 

அந்தளவுக்கு மக்கள் எதிர்ப்பு உள்ளது. இவர் உள்ளே வந்தால், அமைதியாக கொஞ்ச நாள் இருந்து பின்னர், பல பெண்களை கிளப்பி, வேறு எங்கும் IS புதிதாக கிளம்பினால் போகத்தான் செய்வார், பின்னர், அங்கும் தோல்வியாயின் மீண்டும் வருவார், என்கின்றனர்.

ஆகவே இது சாத்தியப்படாது. 

ஜிகாதி கணவர், தூக்கு அல்லது சூட்டு தண்டனையில் இருந்து தப்புவது கடினம்....

சாத்திய  படுமாயின், இயலுமான வரை, மிகவும் இலகுவில் முடியாது என்று ஜிகாதிகாரர்களுக்கு புரிய வைக்கப்படும். உண்மையில் பல பிரிட்டனில் இருந்து போன ஆண் ஜிகாதிகள் , இந்த பெண்ணை வைத்து நூல் விட்டுப் பார்கினறனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெண்ணின் தாய் இன்னும் பங்களாதேஷ் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். ஆகவே இவருக்கு பங்களாதேஷ் நாட்டு குடியுரிமை கிடைக்க வழி உள்ளது என்கிறது பிரித்தானிய உள்துறை அமைச்சகம்.

பெண்ணோ, தனது கணவர், மதம் மாறிய டச்சுக் காரர். ஆகவே தனக்கும், அவரது பிள்ளைக்கும் டச்சு குடியுரிமை கிடைக்கும் என நம்புவதாக சொல்கிறார்.

ஆயினும், பிரித்தானியாவின் நிலைப்பாட்டினை தான், நெதர்லாந்தும் எடுக்கும் சாத்தியம் உள்ளது.

இதேபோல கடந்த வருடம் நடந்த நிகழ்வில், சிரியா  போன இன்னுமொரு பங்களாதேஷ் வம்சாவளி காரர், பிரிட்டிஷ் குடியுரிமை பறிக்கப் பட்டார். 

அவரை பங்களாதேஷ் ஏற்றுக் கொண்டு, அவர் வந்ததும் தூக்கி உள்ள போட்டு விட்டது. இது பிரித்தானிய ராஜதந்திர வேலை.

அதேபோல் தான் இந்த பெண்ணுக்கும் நடக்க சாத்தியம் உள்ளது.  அட நாம என்ன பண்ணினாலும், மீண்டும் ஜாலியா உள்ள வந்திரலாம் என்கிற எண்ணமே வரக் கூடாது என்பதில் அரசும், அதிகாரிகளும் கவனமாக உள்ளனர். 

குறைந்த பட்சம், தாயும், மகனும் பங்களாதேஷில், தங்கி இருக்கக் கூடிய விசாவாவது வாங்கி கொடுத்து அனுப்பி விடுவார்கள்.

15 வயது சிறு பெண்ணாக செய்த பெரும் தவறு. பொதுவாக பிரித்தானியர்கள் நியாயமாக சிந்திப்பவர்கள். ஆயினும் இந்தப் பெண் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை என்பதே பயம். மேலும், போகும்போது ஜீன்ஸ், டீ ஷர்ட் போட்டிருக்கும் பெண், இப்போது, அணிந்திருக்கும் பர்தா உடை வேறு, அவர்கள் பயத்துக்கு உரம் சேர்க்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IPL 2024 கிண்ணத்தை சுவீகரித்தது கொல்கத்தா நைட்ரைடஸ் Published By: VISHNU 26 MAY, 2024 | 10:46 PM   இந்தியன் பிறீமியர் லீக் 2024 இருபது 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் அரங்கில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமானது. கிண்ணத்தை தன்வசப்படுத்து நோக்கில் இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதியதில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணி கிண்ணத்தை சுவீகரித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து, 18.3 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றது. 114 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடஸ் அணி, 10.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட்ரைடஸ் அணி சார்பாக Venkatesh Iyer ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும், Rahmanullah Gurbaz 39 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வழி வகுத்தனர். https://www.virakesari.lk/article/184561
    • துயரமான பதிவு. ஆழ்ந்த இரங்கல்கள்!
    • விள‌ம்ப‌ர‌ நிறுவ‌னங்க‌ள் கோவிக்க‌ போகினம் ஹா ஹா😁...........................................  
    • மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடமாகாணம் மேம்படுத்தப்படும் - ஜனாதிபதி  Published By: VISHNU   26 MAY, 2024 | 07:08 PM 2017ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது வடமாகாண சுகாதார சேவையை மேம்படுத்தவதற்காக தன்னால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இன்று மக்களிடம் கையளிக்க முடிந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நவீன வைத்தியசாலைகளுடன் கூடிய சுகாதார வசதிகளை வடக்கு மாகாணம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மேல் மாகாணத்தைப் போன்று மேம்பட்ட சுகாதார சேவைகளைக் கொண்ட மாகாணமாக வடக்கின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை இன்று (26) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.  நெதர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவுடன் 4500 மில்லியன் ரூபா செலவில் இந்த மருத்துவ சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது  வட மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் என்பதோடு மனநல மறுவாழ்வுப் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, ஆய்வுகூடம், கதிரியக்கப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நெதர்லாந்துத் தூதுவர் பொனி ஹோபேக் அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார். மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது: இந்த மருத்துவப் பிரிவை இன்று திறந்து வைக்கும் போது இதன் பின்னணியைக் குறிப்பிட வேண்டும். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், யுத்தம் காரணமாக வடமாகாணத்தில் தடைப்பட்ட சேவைகளை மீளமைப்பதற்கான அடிப்படைப் பணிகளை அப்போதைய அரசாங்கம் ஆரம்பித்தது. முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்தப் பிரிவுகள் அனைத்தின் முன்னேற்றத்துக்கு, இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கிணங்க, வடமாகாணத்தில் சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்காக புதிய மருத்துவப் பிரிவுகளை நிறுவுவதற்கு பிரதமர் என்ற ரீதியில் நெதர்லாந்து அரசாங்கத்துடன் கலந்துரையாடினேன். அப்போது வடமாகாண சபையில் இருந்த சுகாதார அமைச்சரும், முன்னாள் முதலமைச்சரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். யுத்தத்திற்கு முன்னர், கொழும்புக்கு அடுத்தபடியாக சிறந்த சுகாதார சேவையைக் கொண்ட பிரதேசமாக யாழ்ப்பாணம் திகழ்ந்தது. மேல்மாகாணம் அபிவிருத்தியடைந்த நிலையில் தென் மாகாணமும் மத்திய மாகாணமும் அபிவிருத்தியடைந்தன. வடக்கு மாகாணத்தை மீண்டும் அந்த நிலைக்கு கொண்டு வருவதே எனது நோக்கமாகும். அதனால்தான் இந்த மருத்துவமனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு  மேம்படுத்தப்படுகிறது. அத்துடன், 2017ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கும், அதற்கு தேவையான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் நான் பிரதமராக இருந்து பணத்தை ஒதுக்கினேன். இன்று இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் இந்தப் பணிகள் உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என்று பணித்தேன். இப்போது வடக்கு மாகாணத்தில் நவீன மருத்துவமனைகள் உள்ளன. யாழ்ப்பாண வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்ற தீர்மானித்தோம். மேலும் மன்னார் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யப்படும் அதே வேளை வவுனியா வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றுவதுடன் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்று வழங்கப்படும். ராகம வைத்தியசாலைக்குப் பிறகு இந்த நவீன இயந்திரங்களைக் கொண்ட ஒரே வைத்தியசாலை மாங்குளம் வைத்தியசாலை என்பது குறிப்பிடத் தக்கது. யுத்தம் காரணமாக அங்கவீனமடைந்தவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராகம வைத்தியசாலை ஸ்தாபிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்களுக்கு ராகம வைத்தியசாலை போன்ற நவீன வைத்தியசாலையை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். வடமாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 04 வைத்தியசாலை பிரிவுகளில் உள்ள உபகரணங்கள் இலங்கையில் உள்ள பல வைத்தியசாலைகளில் இல்லை. இந்த சாதனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு மருத்துவமனை நிர்வாகமும், மருத்துவமனை முகாமைத்துவமும் முயற்சி எடுக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தின் சிறப்பான நிலை காரணமாக கியூபா சுகாதார சேவைகளில் முன்னணியில் உள்ளது. எனவே, மருத்துவமனை நிர்வாகத்தையும் முகாமைத்துவத்தையும் உயர் நிலைக்கு கொண்டு வர பாடுபட வேண்டும். அதற்கு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆசிய அபிவிருத்தி நிதியத்தில் இருந்தும் நிதி ஒதுக்கீடு பெறலாம். இந்தச் செயற்பாடுகள் அனைத்தினூடாகவும் நாட்டில் நம்பிக்கையான சுகாதார சேவையை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம் என்பதையும் கூற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்: நெதர்லாந்து அரசாங்கத்தின்  நிதி உதவியுடன் நான்காயிரத்து ஐநூறு மில்லியன் ரூபா செலவில் மாங்குளம் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் இப்பிரதேச மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு பெரும் உதவியாக உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறான வசதிகளை வழங்கி சேவையாற்றிய நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நாடு பல சவால்களை எதிர்நோக்கியிருந்த வேளையில் ஜனாதிபதி அச்சமின்றி முன் வந்து அந்த சவால்களில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக நாட்டைக் பொறுப்பேற்றார். இந்த நாடு அப்போது இருந்த நிலையை மக்கள் மறக்கவில்லை என்று நான் நம்புகிறேன். அந்த நிலையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக ஜனாதிபதி தன்னை அர்ப்பணித்தார். அதன் பலனை இந்நாட்டு மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்தில் செலவிடும் மூன்றாவது நாள் இன்று. இந்த மூன்று நாட்களாக வடமாகாணத்திற்கு விஜயம் செய்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் கண்டு அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இன்று அவரால் திறந்து வைக்கப்படும் இந்த மருத்துவ மறுவாழ்வு சிகிச்சை மற்றும் மனநல மேம்பாட்டு மையம் ‘டிரைவ்’ திட்டத்தின் கீழ் திறக்கப்படும் மூன்றாவது மருத்துவமனையாகும். வடமாகாண சுகாதார சேவையில் இது ஒரு மைல் கல்லாக மாறும் என்பது உறுதி. ஜனாதிபதியின் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் ஊக்கம் காரணமாக இந்த திட்டம் யதார்த்தமாகிறது. 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக இருந்த போது வடமாகாணத்திற்கு இத்திட்டத்தை பெற்றுக் கொடுத்திருந்தார். இன்று மாங்குளம் வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்ட மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதுடன் அதன் மூலம் அவர் சுகாதாரத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். சுகாதாரத் துறை மாத்திரமின்றி  அனைத்து துறைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் எஸ். நோகராதலிங்கம்: இந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை. இன்று இந்த மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனைய மருத்துவமனைகளுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்தால், இப்பகுதி மக்கள் முழுமையாக பயன்பெறுவார்கள். இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலதான்: இந்தப் பிரிவு  இந்த வன்னி மாவட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமமாகும். இதற்காக முயற்சித்த அனைவருக்கும், குறிப்பாக எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வட மாகாணத்துக்கே  ஒரு பெரும் வளமாக இதனைப் பெற்றிருக்கின்றோம். இந்த வளம் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த வைத்தியசாலை மிகச் சிறப்பாக நடைபெற அவசியமான அனைத்து வளங்களையும் நீங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் நான் முன்வைக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோபேக் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/184556
    • வெள்ளிக் கிழ‌மை ராஜ‌ஸ்தான் கூட‌ ந‌ட‌ந்த‌ விளையாட்டு போல் அவுஸ் க‌ப்ட‌ன் நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்து அதிக‌ ர‌ன்ஸ் அடிக்க‌ முடியாம‌ போய் விட்ட‌து   போர‌ போக்கை பார்த்தால் விளையாட்டு 12ஓவ‌ருக்கை முடிந்து விடும் போல் இருக்கு.....................................................
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.