Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூரின் வீதியில் பிச்சை எடுத்த முன்னாள் போராளியை கடை அமைத்து முதலாளி ஆக்கி அழகு பார்த்தனர்..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லூரின் வீதியில் பிச்சை எடுத்த முன்னாள் போராளியை கடை அமைத்து முதலாளி ஆக்கி அழகு பார்த்தனர்...

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு எல்லோருக்கும் தெரியப்படுத்தி உதவி செய்வதற்கான ஒழுங்குகளை செய்தால்.......புலம்பெயர்ந்த தமிழர்கள் நிச்சயம் உதவிசெய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இப்படியான அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு எல்லோருக்கும் தெரியப்படுத்தி உதவி செய்வதற்கான ஒழுங்குகளை செய்தால்.......புலம்பெயர்ந்த தமிழர்கள் நிச்சயம் உதவிசெய்வார்கள்.

உண்மைதான் அண்ணா

இதை  விக்கி ஐயா  செய்வார் என  எதிர் பார்த்தோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, விசுகு said:

உண்மைதான் அண்ணா

இதை  விக்கி ஐயா  செய்வார் என  எதிர் பார்த்தோம்

 பாதிக்கப்பட்ட    எம்  மக்களுக்காக புலம்பெயர்ந்த மக்களின் நிரந்தர பங்களிப்பு என்றொரு கட்டமைப்பு உருவாகும் என நினைத்திருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:

உண்மைதான் அண்ணா

இதை  விக்கி ஐயா  செய்வார் என  எதிர் பார்த்தோம்

 

39 minutes ago, குமாரசாமி said:

 பாதிக்கப்பட்ட    எம்  மக்களுக்காக புலம்பெயர்ந்த மக்களின் நிரந்தர பங்களிப்பு என்றொரு கட்டமைப்பு உருவாகும் என நினைத்திருந்தேன்.

அவர் வெளிநாட்டு நிதியம் அமைக்க அரசு அனுமதியளிக்கவில்லை என கூறினார்கள்.

வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதியை பெற்று கொள்ள மாகாண அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசின் அனுமதியுடன் தான் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகின்றேன்.

ஆனாலும் கிழக்கு மாகாண சபை எப்படி அரபு நாடுகளில் இருந்து உதவிகளை தம் பிரதேதங்களுக்கு மாத்திரம் பெறுகின்றது என புரியவில்லை. ஏதேனும் ஒரு முறையின் மூலம் பெறுகின்றனர் என நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, நிழலி said:

வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதியை பெற்று கொள்ள மாகாண அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசின் அனுமதியுடன் தான் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகின்றேன்.

ஆனாலும் கிழக்கு மாகாண சபை எப்படி அரபு நாடுகளில் இருந்து உதவிகளை தம் பிரதேதங்களுக்கு மாத்திரம் பெறுகின்றது என புரியவில்லை. ஏதேனும் ஒரு முறையின் மூலம் பெறுகின்றனர் என நினைக்கின்றேன்.

அவர்கள் விடயத்தில் அவர்களது அரசியல் தலைவர்கள் ஆவன செய்கின்றார்கள். இதுதான் உண்மை.

வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதியை பெற்று கொள்ள மாகாண அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசின் அனுமதியுடன் தான் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகின்றேன்

 

இது தான் உண்மை. மாகாணசபைக்குரிய நிதி மத்திய அரசிடம் இருந்துதான் வரவேண்டும்.வெளிநாடுகளில் இருந்துநேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியாது. அதே போல் மாகாணசபையால் பெறப்பட்ட வருமானம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட வேண்டும். வெளிநாட்டு உதவிகள் NGO- அரசு சார்பற்ற நிறுவனங்கள் மூலம் சாத்தியமாகலாம் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

 பாதிக்கப்பட்ட    எம்  மக்களுக்காக புலம்பெயர்ந்த மக்களின் நிரந்தர பங்களிப்பு என்றொரு கட்டமைப்பு உருவாகும் என நினைத்திருந்தேன்.

 

20 hours ago, விசுகு said:

உண்மைதான் அண்ணா

இதை  விக்கி ஐயா  செய்வார் என  எதிர் பார்த்தோம்

என் விக்கியர் அல்லது சிங்கன் அல்லது கந்தன் தான் செய்ய வேண்டுமா , நாங்கள் செய்ய முடியாதா ?

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதியை பெற்று கொள்ள மாகாண அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசின் அனுமதியுடன் தான் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகின்றேன்.

ஆனாலும் கிழக்கு மாகாண சபை எப்படி அரபு நாடுகளில் இருந்து உதவிகளை தம் பிரதேதங்களுக்கு மாத்திரம் பெறுகின்றது என புரியவில்லை. ஏதேனும் ஒரு முறையின் மூலம் பெறுகின்றனர் என நினைக்கின்றேன்.

மத்திய கிழக்கின் தூதுவர்கள் நேரடியாக அந்தந்த பகுதிகளுக்கு வருகிறார்கள் பார்வையிடுகிறார்கள் அவர்களின் தூதரகம் ஊடாகவும் நேரடியாக மறைமுகமாக பல வழிகளிலும் வந்து சேர்கிறது பள்ளிவாசல்கள் புணரமைப்பு, வீடுகள் புணரமைப்பில் , குழாய்க்கிணறு அமைத்துக்கொடுத்தல், மத்திய கிழக்கில் நேரடி தொழில் வாய்ப்பு இப்படி நிறைய வழிகளில் ஆனால் நம்ம பக்கம் அப்படி எதுவும் இல்லை 

சிங்கள அரசு ஏதாவது பார்த்தும் பாராமலும் செய்தால்தான் உண்டு 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மத்திய கிழக்கில் நிறைய ஊர் சங்கங்கள் உண்டு. இங்கு இவர்களது அரசியல்வாதிகள் அடிக்கடி வருவார்கள். அதுபோல் இங்கிருக்கும் மெளலவிகலும் அரபியில் பேசி உதவிகள் பெற்று தாங்கள் பகுதிகளை அபிவிருத்தி அடைய செய்கின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சாமானியன் said:

என் விக்கியர் அல்லது சிங்கன் அல்லது கந்தன் தான் செய்ய வேண்டுமா , நாங்கள் செய்ய முடியாதா ?

அவர் எம்மைப்போல் சாமானிய சிங்கள்  கந்தன்  அல்ல

ஒரு  மாநிலத்தின் அதுவும் அழிக்கப்பட்ட  ஒரு  மாநிலத்தின் தலைவர்

மனமுண்டானால்  இடமில்லையா  என்ன??

1 hour ago, colomban said:

இங்கு மத்திய கிழக்கில் நிறைய ஊர் சங்கங்கள் உண்டு. இங்கு இவர்களது அரசியல்வாதிகள் அடிக்கடி வருவார்கள். அதுபோல் இங்கிருக்கும் மெளலவிகலும் அரபியில் பேசி உதவிகள் பெற்று தாங்கள் பகுதிகளை அபிவிருத்தி அடைய செய்கின்றார்கள். 

 

சாமானியனின்  கேள்விக்கும்  மேலே  எழுதிய பலருக்கும்  ( மாநில முதல்வரால் முடியாது அதிகாரமில்லை  என்பவர்களுக்கும்)  கொழும்பானின்  இந்த  பதிலில்  பதிலுண்டு

இதற்கு  ஊர்ச்சங்க  தலைவராக  இருந்த  நானே  சாட்சி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அவர் எம்மைப்போல் சாமானிய சிங்கள்  கந்தன்  அல்ல

ஒரு  மாநிலத்தின் அதுவும் அழிக்கப்பட்ட  ஒரு  மாநிலத்தின் தலைவர்

மனமுண்டானால்  இடமில்லையா  என்ன??

 

நாம் என்று குறிப்பிட்டது சகல படர்க்கைகளையும்  தவிர்ந்த தன்மையையும் முன்னிலையுமே

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சாமானியன் said:

நாம் என்று குறிப்பிட்டது சகல படர்க்கைகளையும்  தவிர்ந்த தன்மையையும் முன்னிலையுமே

 

செயல்களால்  கிடைத்த அனுபவமும்

தோல்விகளும் தான்  அடுத்த  கட்டங்களை  தீர்மானிக்கின்றன

எனது செயல்களால்  கிடைத்த அனுபவங்களினதும் 

தோல்விகளினதும் அடிப்படையில்

சிறிது  சிறிதாக

அல்லது  தனி  நபர்களாக  செய்பவை  தோல்வி  தருகின்றன

அல்லது தவறான எண்ணங்களை  விதைக்கின்றன

இதன்  மூலம் வேறு  ஒரு தீமையும்  சேர்கிறது

உதவும்  நெஞ்சங்களை புண்படுத்தி ஒதுங்க  வைக்கிறது

 

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.