Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

100 வீதம் சித்தியடைந்த- வேம்படி மாணவிகள்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

இலங்கை ரீதியாக வடமாகாணம் 
கிட்டதட்ட இறுதி இடத்தில் இருக்கிறதே ?

கடந்த பத்து வருடமாக போர் இல்லை 
ஏழ்மை காரணமாக இருக்குமா?
அல்லது சிங்கள அரசு சதியாக இருக்குமா?

மாத்தறை கொழும்பையும் மிஞ்சி நிற்கிறது 

வன்னியில் வறுமையால் கல்வியில் கீழ் மட்டத்திற்கு போயிட்டுது என்று சொன்னால் நம்பலாம் யாழ்ப்பாணத்தில் வறுமையா?...அளவுக்கு மிஞ்சிய பணம்,ஜூட் சொன்ன மாதிரி வெளிநாட்டு பணம்,இணையங்களின் வளர்ச்சி,தொலைபேசி,மு.புத்தகம் அதில குந்திட்டு இருக்கிறது,கண்ட,கண்ட  குப்பைகளை பார்த்து கெட்டுப் போறது,,,சிறு வயதிலேயே ஆண் /பெண் நண்பர்களை தேடிக் கொள்வது,மதுபானம்,போதைவஸ்து எல்லாவற்றையும் விட ஒருத்தருக்கும் பயமில்லாமை...கஷ்டப்பட்டு படிக்காமல் இலகுவாய் எப்படி பணம் சம்பாதிப்பது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

வன்னியில் வறுமையால் கல்வியில் கீழ் மட்டத்திற்கு போயிட்டுது என்று சொன்னால் நம்பலாம் யாழ்ப்பாணத்தில் வறுமையா?...அளவுக்கு மிஞ்சிய பணம்,ஜூட் சொன்ன மாதிரி வெளிநாட்டு பணம்,இணையங்களின் வளர்ச்சி,தொலைபேசி,மு.புத்தகம் அதில குந்திட்டு இருக்கிறது,கண்ட,கண்ட  குப்பைகளை பார்த்து கெட்டுப் போறது,,,சிறு வயதிலேயே ஆண் /பெண் நண்பர்களை தேடிக் கொள்வது,மதுபானம்,போதைவஸ்து எல்லாவற்றையும் விட ஒருத்தருக்கும் பயமில்லாமை...கஷ்டப்பட்டு படிக்காமல் இலகுவாய் எப்படி பணம் சம்பாதிப்பது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்  

சரியாச்சொன்னியள். நூற்றுக்கு நூறுவீதம் உண்மை..  அந்தக்காலத்திலை நாங்கள் நடந்து போய் படிச்ச பள்ளிக்கூடங்களுக்கும் இப்ப இருக்கிறவைக்கு ஸ்கூட்டி வேணுமாமெல்லே.ஒழுங்காய் படிச்சாலும் பரவாயில்லை......அப்பவெல்லாம் நான் தான் பெரிய காவாலியாக்குமெண்டு நினைச்சன்....ஆனால் இப்ப இருக்கிறவையை பார்க்க எனக்கே தலைசுத்துது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, suvy said:

அது பொடியளின் பாதுகாப்பிற்காக பெண்கள் பாயாமல் கட்டினது என்று நினைக்கிறன்......!  🙂

அட்ரா....அட்ரா.....சிங்கம் மாத்தி யோசிக்குது....tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

யாழ்ப்பாணத்தில் வறுமையா?

ஓர் பிரதேசத்தில், பொருளாதாரம் ஒரே தன்மையான பிரதேசத்தில், பிழைக்கும் அளவிற்கு வருமானம் இருந்தால், அந்த வருமானத்தை பெறுபவர்கள் வறுமையின் விளிம்பில் இருப்பவர்கள்.


இதன் காரணமாகவே, யாழ்பாசனத்திலும், கொழும்பிலும், வன்னியிலும், வளர்ந்த லண்டன் போன்ற   நகரங்களிலும்   வறுமையின் விளிம்பில் இருக்கும் சனத்தொகை உள்ளது.

ஆனால், லண்டன், யாழ்பாணத்திலும், கொழும்பிலும், வன்னியிலும் உள்ள வறுமையின் தன்மை வேறு வேறானவை.

கடந்த ஒரு தசாப்தமாக வடபகுதியில் - குறிப்பாக யாழ்ப்பாணத்தில் துரிதமாக ஏற்படும் சமூக மாற்றம் அங்குள்ள மாணவர்களின் கல்வித்தரத்தையும் பாதித்துள்ளது. நீர்வேலியான் குறிப்பிட்டது போல போதைவஸ்துப் பாவனை, திறமையான மாணவர்களின் வெளியேற்றம், இன்னும் ஒரு பக்கம் வறுமையின் காரணமாக கல்வியைத் தொடரமுடியாத நிலை ஒரு பகுதியினரையும், மறுபக்கம் மிதமிஞ்சிய வெளிநாட்டுப் பணம் இன்னும் பல மாணவர்களின் கல்வியார்வத்தையும் பாதிக்கின்றன.

இணையதளப் பாவனைக்கான வசதி, அதிகரித்த கணிணிப் பாவனை என்பன அங்கு கற்றலுக்கான புதிய வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். எனினும் அதையும் மீறி, முகநூல் போன்ற சமூக வலைதளங்களின் மிதமிஞ்சிய பாவனையும் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தும் திறனை அதிகளவு குறைக்கின்றது. 

இவ்வாறு திடீர் சமூகமாற்றத்தால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்புகள் இன்னும் பல. அவற்றையெல்லாம் அங்குள்ள பெற்றோரும், ஆசிரியர்களும், வழிகாட்டிகளும் எவ்வளவு தூரம் புரிந்து கொண்டுள்ளனர் என்றும் தெரியவில்லை. பாடசாலைக்கு வெளியே மாணவரைப் பாதிக்கும் இவ்வாறான காரணிகள் பலவற்றை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை ஆராய்ந்து தகுந்த செயற்பாடுகளை முன்னெடுப்பது பயனுள்ளதாக அமையும். பெற்றோர், ஆசிரியர், மாணவர் மத்தியில் இது பற்றிய விழிப்புணர்வு அவசியம்.  

இவை எல்லாவற்றையும் விட மாணவர்கள் தாம் விரும்பிய துறையைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் நிலை இப்போதாவது தோன்றியுள்ளதா எனத் தெரியாது.🤔 பெற்றோர் அந்த சுதந்திரத்தைக் கொடுப்பது மட்டுமல்ல, இந்த விடயத்தில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குவதும் அவசியம். 

இவையெல்லாம் கூட்டாகச் சேர்ந்து இந்தப் 'புள்ளி'விவரங்களை முன்னேற்ற உதவலாம்! 🙂

(தனிப்பட்ட ரீதியில் எனக்குப் புள்ளிவிபரம் மீதான ஆர்வம் குன்றிவிட்டது; மாணவரின் உண்மையான வளர்ச்சியை அளவிட இவை மட்டும் போதாது. குறிப்பிட்ட சதவீதமானோரின் குறிப்பிட்ட சில துறைகளில் காட்டிய திறமையை மட்டுமே இவை சொல்கின்றன. உயர்தர, பல்கலைக்கழக காலத்துக்கு அப்பால் வேலை, குடும்ப வாழ்க்கை என்ற அளவில் அவர்களது புள்ளிவிபரங்களையும் அறிய ஆவலாயுள்ளேன். சும்மா ஒரு ஒப்பீட்டுக்காக!😊)

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

கடந்த ஒரு தசாப்தமாக வடபகுதியில் - குறிப்பாக யாழ்ப்பாணத்தில் துரிதமாக ஏற்படும் சமூக மாற்றம் அங்குள்ள மாணவர்களின் கல்வித்தரத்தையும் பாதித்துள்ளது. நீர்வேலியான் குறிப்பிட்டது போல போதைவஸ்துப் பாவனை, திறமையான மாணவர்களின் வெளியேற்றம், இன்னும் ஒரு பக்கம் வறுமையின் காரணமாக கல்வியைத் தொடரமுடியாத நிலை ஒரு பகுதியினரையும், மறுபக்கம் மிதமிஞ்சிய வெளிநாட்டுப் பணம் இன்னும் பல மாணவர்களின் கல்வியார்வத்தையும் பாதிக்கின்றன.

இதுவும் ஒருவிதமான இன அழிப்பு தான்.

படித்தவர்களையும் வசதியுள்ளவர்களையும் குடாநாட்டைவிட்டு துரத்தும் ஒரு முயற்சி தான்.யாழில் சொந்த வீடிருந்தும் எத்தனையோ பேர் கொழும்பு வத்தளை கொட்டாஞ்சேனைப் பகுதியில் வாழ்கிறார்கள்.ஏனென்று கேட்டால் தனியே இருக்க முடியாது.வாள்வெட்டு திருடர்கள் மத்தியில் எப்படி இருப்பது?
நாலு தமிழருக்கு ஒரு ஆயுதப்படை என்று இருந்தும் எப்படி இதுவெல்லாம் என்கிறார்கள்.

அதைவிட மறைமுகமாக சாதிப் பிரச்சனையை தூண்டிவிட்டுள்ளனர்.எப்போதுமில்லாதவாறு நீறு பூத்த நெருப்பாக உள்ளது.அவனவன் பயத்தினால் பொத்திக் கொண்டிருக்கிறான்.

ஒருமுறை ஊர் போய்வந்தால் மீண்டும் போகத் தான் வேண்டுமா என்று தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாத்தையும் விட இங்கை படிச்சு கிளிக்கிறதை விட வெளி நாட்டில போய் அள்ளலாம் என்ற நினைப்புமம் ஒரு காரனம்.

9 hours ago, ஈழப்பிரியன் said:

தனியே இருக்க முடியாது.வாள்வெட்டு திருடர்கள் மத்தியில் எப்படி இருப்பது?

அதைவிட மறைமுகமாக சாதிப் பிரச்சனையை தூண்டிவிட்டுள்ளனர்.எப்போதுமில்லாதவாறு நீறு பூத்த நெருப்பாக உள்ளது.அவனவன் பயத்தினால் பொத்திக் கொண்டிருக்கிறான்.

ஒருமுறை ஊர் போய்வந்தால் மீண்டும் போகத் தான் வேண்டுமா என்று தோன்றுகிறது.

ம்... இப்படிப் பல பிரச்சினைகள். என்ன தான் ஊர் வாழ்க்கை சொர்க்கமாகத் தெரிந்தாலும் இவற்றை எல்லாம் நினைக்கத் தலை சுத்துது அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

அதைவிட மறைமுகமாக சாதிப் பிரச்சனையை தூண்டிவிட்டுள்ளனர்.எப்போதுமில்லாதவாறு நீறு பூத்த நெருப்பாக உள்ளது.அவனவன் பயத்தினால் பொத்திக் கொண்டிருக்கிறான்.

ஒருமுறை ஊர் போய்வந்தால் மீண்டும் போகத் தான் வேண்டுமா என்று தோன்றுகிறது.

அது சரி இப்ப ஊர் இரவில எத்தினை மணிக்கு அடங்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, சுவைப்பிரியன் said:

இவை எல்லாத்தையும் விட இங்கை படிச்சு கிளிக்கிறதை விட வெளி நாட்டில போய் அள்ளலாம் என்ற நினைப்புமம் ஒரு காரனம்.

வெளிநாட்டுக்கு போனால் அள்ளலாம் எண்டு நினைக்கிறவையள் தான்......வெளிநாட்டிலை கக்கூஸ் கழுவிக்கொண்டிருக்கினம் எண்டு கவிதை கட்டுரை அங்கையிருந்து எழுதிக்கொண்டிருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தர் 'சித்தி' அடைத்தால் பரவாயில்லை, நூறு சதவீதம் 'சித்தி'யா என்று பயந்து போய் திரியை வாசித்தால் கதை வேறை மாதிரி இருக்கு..! 🤩

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.