Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கிளிநொச்சியில் கைது..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
April 6, 2019

DSC00118.jpg?zoom=0.9024999886751175&res

சட்டவிரோதமாக வெளிநாடு தப்பிச்செல்ல இருந்த நிலையில் 26 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

 

நேற்றைய தினம் (05-04-2019) கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் வீடு ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த வீட்டினை சுற்றி சோதனையிட்டே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்படடவர்களில் சிறுவன் ஒருவனும் உள்ளடங்குகின்றான். இவர்கள் மட்டகளப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC00105.jpg?zoom=0.9024999886751175&resDSC00101.jpg?zoom=0.9024999886751175&resDSC00100.jpg?zoom=0.9024999886751175&resDSC00099.jpg?zoom=0.9024999886751175&res

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கிளிநொச்சியில் கைது.

Apr 5, 2019 @ 14:20


சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 பேரை கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களிடம் இது தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://globaltamilnews.net/2019/117702/

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
  • போர் முடிந்து இவ்வளவு காலத்திற்கு பிறகும் வெளிநாடு செல்ல ஆசைப்படினம்...இப்படி ஏஜென்சிக்கு காசு கொடுத்து ஏமாறுவதை விட அந்தக் காசைக் கொண்டு ஒரு சுய தொழில் செய்யலாம் 
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:
  • போர் முடிந்து இவ்வளவு காலத்திற்கு பிறகும் வெளிநாடு செல்ல ஆசைப்படினம்...இப்படி ஏஜென்சிக்கு காசு கொடுத்து ஏமாறுவதை விட அந்தக் காசைக் கொண்டு ஒரு சுய தொழில் செய்யலாம் 

திரைகட‌லோடி திரவியம் தேடு என்று சொன்னதால் வந்த வினை.....என்று நான் நினைக்கிறன்.

எவ்வளவு பணம் கொடுத்திருப்பார்கள் ?50 லட்சம்....இந்த 50 லட்சத்தை வைத்து கொண்டு அவர்களால் முன்னுக்கு வரமுடியாது ...
கார்,வீடு உறவுகளை முன்னேற்றுதல் அத்துடன் வெளிநாட்டுக்கு போனவன் தாயகம் திரும்பியவுடன் செய்யும் அலப்பறை இவைகள் யாவும் ஒருத்தனை வெளிநாடு செல்ல தூண்டுது...

அதுசரி கிளிநோச்சியிலிருந்து எப்படி வெளிநாடு செல்ல முடியும்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, putthan said:

 

அதுசரி கிளிநோச்சியிலிருந்து எப்படி வெளிநாடு செல்ல முடியும்.....

ஏஜென்சிகாரர் எல்லாரையும் கூப்பிட்டு வைச்சு ஒரு மீற்றிங் குடுத்திருப்பனம்..😃

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

ஏஜென்சிகாரர் எல்லாரையும் கூப்பிட்டு வைச்சு ஒரு மீற்றிங் குடுத்திருப்பனம்..😃

நான் நினைச்சன்  கிளிநொச்சியில் விமான நிலையம் திறந்திட்டாங்கள் எங்கன்ட மத்திய அரசாங்கம் என்று

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவூடாக படகில் ஏரிச் செல்லக் காந்திருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:
  • போர் முடிந்து இவ்வளவு காலத்திற்கு பிறகும் வெளிநாடு செல்ல ஆசைப்படினம்...இப்படி ஏஜென்சிக்கு காசு கொடுத்து ஏமாறுவதை விட அந்தக் காசைக் கொண்டு ஒரு சுய தொழில் செய்யலாம் 

எத்தனை கோடி கொடுத்தும் போறத்துக்கு ஆட்கள் தயாரா இருக்கினும் பிள்ள இங்கினைக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

கவலையான விசயம்...போர் முடிந்த பிறகும் இப்படி ஊரை விட்டு இருக்கின்ற தமிழர்கள் எல்லாம் போக வெளிக்கிட்டால் ...சிங்களவர்கள் கத்தியின்றி,யுத்தமின்றி வென்று விடுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

கவலையான விசயம்...போர் முடிந்த பிறகும் இப்படி ஊரை விட்டு இருக்கின்ற தமிழர்கள் எல்லாம் போக வெளிக்கிட்டால் ...சிங்களவர்கள் கத்தியின்றி,யுத்தமின்றி வென்று விடுவார்கள் 

சிங்களவர்களை விட முஸ்லீம்கள் மும்முரமாக உள்ளார்கள் நேற்றோ முந்தநாளோ தெரியல விஜய கலா அக்கா சொல்லிருக்கா இடம்பெயர்ந்த முஸ்லீம்களை குடியமர்த்த வேண்டுமாம் அப்ப நம்ம தமிழ் மக்கள் ??

முஸ்லீம் அரசியல் வாதிகள் அவர்களுக்கு சிறப்பாக செய்ய்யும் போது நம்ம தமிழ் அரசியல் வாதிகள் மட்டும் குழல் ஊதுவது வேடிக்கைதான் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

கவலையான விசயம்...போர் முடிந்த பிறகும் இப்படி ஊரை விட்டு இருக்கின்ற தமிழர்கள் எல்லாம் போக வெளிக்கிட்டால் ...சிங்களவர்கள் கத்தியின்றி,யுத்தமின்றி வென்று விடுவார்கள் 

ரதி, நீங்கள் சொன்னதில் ஒரு சின்னக் கவலை......

நாங்களும் ஊருக்குப் போய் இருக்கப்போவதில்லை, ஊரானுக்கும் வெளியில வரத்தான் விருப்பமாக் கிடக்கு. ஆனால் எல்லோருக்கும் நாடு மட்டும் வேணும்.

உங்களைக் குத்திக்காட்டவேணும் எண்டு நினைக்கவில்லை, ஏறக்குறைய நானும் அப்படித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

ரதி, நீங்கள் சொன்னதில் ஒரு சின்னக் கவலை......

நாங்களும் ஊருக்குப் போய் இருக்கப்போவதில்லை, ஊரானுக்கும் வெளியில வரத்தான் விருப்பமாக் கிடக்கு. ஆனால் எல்லோருக்கும் நாடு மட்டும் வேணும்.

உங்களைக் குத்திக்காட்டவேணும் எண்டு நினைக்கவில்லை, ஏறக்குறைய நானும் அப்படித்தான்.

ஒரு தீவைப்பார்த்து வேண்டி அங்கே எல்லோரும் போய் குடியேறுவோமா 

( அங்கேயும் அடிச்சிக்கிட்டுதான் இருப்போம்)

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2019 at 9:03 AM, பிழம்பு said:
 
April 6, 2019

DSC00118.jpg?zoom=0.9024999886751175&res

சட்டவிரோதமாக வெளிநாடு தப்பிச்செல்ல இருந்த நிலையில் 26 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

 

நேற்றைய தினம் (05-04-2019) கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் வீடு ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த வீட்டினை சுற்றி சோதனையிட்டே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்படடவர்களில் சிறுவன் ஒருவனும் உள்ளடங்குகின்றான். இவர்கள் மட்டகளப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC00105.jpg?zoom=0.9024999886751175&resDSC00101.jpg?zoom=0.9024999886751175&resDSC00100.jpg?zoom=0.9024999886751175&resDSC00099.jpg?zoom=0.9024999886751175&res

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கிளிநொச்சியில் கைது.

Apr 5, 2019 @ 14:20


சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 பேரை கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களிடம் இது தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://globaltamilnews.net/2019/117702/

 

On 4/6/2019 at 3:20 PM, putthan said:

திரைகட‌லோடி திரவியம் தேடு என்று சொன்னதால் வந்த வினை.....என்று நான் நினைக்கிறன்.

எவ்வளவு பணம் கொடுத்திருப்பார்கள் ?50 லட்சம்....இந்த 50 லட்சத்தை வைத்து கொண்டு அவர்களால் முன்னுக்கு வரமுடியாது ...
கார்,வீடு உறவுகளை முன்னேற்றுதல் அத்துடன் வெளிநாட்டுக்கு போனவன் தாயகம் திரும்பியவுடன் செய்யும் அலப்பறை இவைகள் யாவும் ஒருத்தனை வெளிநாடு செல்ல தூண்டுது...

அதுசரி கிளிநோச்சியிலிருந்து எப்படி வெளிநாடு செல்ல முடியும்.....

கிடைத்த ரகசிய தகவலுக்கும் ....
கிளிநொச்சியில் கூடியத்துக்கும் ....
இவர்களிடம் காசு வசூலித்ததுக்கும்.

ஒரு கோடு கீறி பார்க்க முடியாதா ?? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

...நாங்களும் ஊருக்குப் போய் இருக்கப்போவதில்லை, ஊரானுக்கும் வெளியில வரத்தான் விருப்பமாக் கிடக்கு. ஆனால் எல்லோருக்கும் நாடு மட்டும் வேணும்..

எப்படியாவது வெளிநாட்டில் கால் பதித்துவிட்டால் இங்கே செய்யும் முயற்சியை வெளிநாட்டில் செய்தால் அதிக வரும்படியும் சுகபோகமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஆசையும் தான்..

அதை நேர்வழியில் அடைய முயற்சி செய்வதில் நிச்சயம் தவறில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு தீவைப்பார்த்து வேண்டி அங்கே எல்லோரும் போய் குடியேறுவோமா 

( அங்கேயும் அடிச்சிக்கிட்டுதான் இருப்போம்)

போர்க்காலத்தில் சில போராளி குடும்பங்கள் மியன்மார் (பர்மா) பிரதேசத்தில் உள்ள சில தீவுகளை வாங்கி அங்கே குடியேறி நீண்ட காலமாக வாழ்ந்தார்கள். சுனாமியின் போது ஒட்டுமொத்தமாக எல்லோரும் இறந்து போனார்கள்.

மொரிசியஸ் நாட்டில் தீவுகளை மிகச்சிறிய தொகைக்கு (சட்ட தேவைகளுக்கான தொகை) நூறு வருடங்களுக்கு குத்தகைக்கு தருவார்கள். அதற்கான நிபந்தனை மக்களுக்கு வேலைவாய்ப்பு தரும் நிறுவனம் ஒன்றை அங்கு அமைக்க வேண்டும் என்பதாகும். தமிழர்களும் இந்துக்களும் நிறைந்த அளவில் வாழும் நாடு இது. வசதியான நாடு. முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் முதன்முதலில் அமைக்கப்பட்ட நாடு. 

அமரிக்க கரிபியன் தீவு ஒன்றை யாழ் நகரில் பிரதான வீதியில் கடை வைத்திருந்த கனடிய தமிழர் ஒருவர் விலைக்கு வாங்கி வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரஞ்சித் said:

ரதி, நீங்கள் சொன்னதில் ஒரு சின்னக் கவலை......

நாங்களும் ஊருக்குப் போய் இருக்கப்போவதில்லை, ஊரானுக்கும் வெளியில வரத்தான் விருப்பமாக் கிடக்கு. ஆனால் எல்லோருக்கும் நாடு மட்டும் வேணும்.

உங்களைக் குத்திக்காட்டவேணும் எண்டு நினைக்கவில்லை, ஏறக்குறைய நானும் அப்படித்தான்.

நீங்கள் சொல்வது எனக்கு விளங்குது...எனக்கு ஊரில் போய் இருக்கின்ற பிளான் இருக்கு...நிற்க,அநேகமாய் நாங்கள் எல்லாம் போர் நடந்து கொண்டு இருக்கும் காலத்தில் தான் வந்தோம்(போரால் பாதிக்கப் பட்டோமா,இல்லையா என்பது இரண்டாம் பட்சம்.). 😑

 

  • கருத்துக்கள உறவுகள்

5 hours ago, ரதி said:

நீங்கள் சொல்வது எனக்கு விளங்குது...எனக்கு ஊரில் போய் இருக்கின்ற பிளான் இருக்கு...நிற்க,அநேகமாய் நாங்கள் எல்லாம் போர் நடந்து கொண்டு இருக்கும் காலத்தில் தான் வந்தோம்(போரால் பாதிக்கப் பட்டோமா,இல்லையா என்பது இரண்டாம் பட்சம்.). 😑

 

கெதியா மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஊருக்கு வாங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கெதியா மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு ஊருக்கு வாங்கோ

முந்தநாள் வரதராசப்பெருமாள் என்ன சொன்னவர்? 😎

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

முந்தநாள் வரதராசப்பெருமாள் என்ன சொன்னவர்? 😎

அரசியலில் முட்டாள்கள் இருப்பது வழமைதானே அதாவது குட்டையில் ஊறிய மட்டகைகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.