Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக, இளைஞரணி உருவாக்கப்பட்டுள்ளது – மாவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mavai-Senathirajah.jpg

எமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக, இளைஞரணி உருவாக்கப்பட்டுள்ளது – மாவை

எமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக இளைஞர் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எங்களது விடுதலைப்போரில் இளைஞர்களும் பங்கேற்க கூடியவர்களாக ஜனநாயக நடைமுறைகளில் இந்த இளைஞர்களை பங்குபற்றக்கூடியவர்களாக இளைஞர் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) தமிழரசுக் கட்சியின் இளைஞரணிக்கான நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இன்றுவரை, இலங்கை அரசியலில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அரசியல் அமைப்பு நெருக்கடிகள், அவற்றுக்கப்பால் தமிழர்களுடைய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பது மற்றும் தமிழர்களுடைய பிரதேசங்களிலே அதிலும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படாமல் உள்ளார்கள்.

இந்த அடிப்படையைக் கொண்டு 30/1 என்ற மனித உரிமை பேரவை தீர்மானம் 2015 ஆம் ஆண்டும் அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டும் தற்போது 2019 ஆம் ஆண்டு 30/1 என்ற தீர்மானமும் 34/1 என்ற தீர்மானமும் 40/1 என்ற தீர்மானமும் மனித உரிமை பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

அவற்றை இலங்கை அரசு தாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கின்றது. தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கிவிட்டு, ஜனாதிபதியும் அரசாங்கமும் கூட தமக்கு அதில் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளமையால் நிறைவேற்ற மாட்டோம் என ஒரு புறத்திலும் எங்களால் முடிந்ததை நிறைவேற்றுவோம் என்றும் கூறி வருகின்றார்கள்.

ஆகவே எங்களுடைய மாநாட்டில் இனப்பிரச்சினைத் தீர்வு எட்டப்படாத நிலையிலும் மனித உரிமைப் பேரவையில் எட்டப்பட்ட தீர்மானங்களையும் இந்த அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதனை நாம் வலியுறுத்த வேண்டியிருக்கும்.

இனப் பிரச்சினைக்கும் மனித உரிமை பேரவைக்கும் இந்த அரசு செவிசாய்த்து இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதற்கான அவகாசம் ஒன்று விதிக்கப்படும். இதனடிப்படையில் வேண்டிய தீர்மானங்களை நாங்கள் நிறைவேற்றுவோம்.

இந்நிலையில் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்தவேண்டுமானால் அத்தகைய தீர்மானங்களையும் நாங்கள் எடுக்கவேண்டும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றோம்” என்று அவர் தெரிவித்தார்.

http://athavannews.com/எமது-விடுதலைப்-போரில்-பங/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக, இளைஞரணி உருவாக்கப்பட்டுள்ளது – மாவை

விடுதலைப் போர் என்றால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

கல்  எங்கே.....???😡

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

விடுதலைப் போர் என்றால் என்ன?

காலம் தாழ்த்தி கேட்டிருந்நாலும், தேவையான கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

மாவையர் தனது மகனுக்கான அரசியல் இருப்புக்கு அத்திவாரம் போடுகிறார் இவர் சோறு திங்கிறாரா அல்லாது அதுக்குப்பதிலாக  ப்... யைத் திங்கிறாரா? இவர்களுக்கு வெதம் மானம் ரோசம் சூடு சுறணை மனச்சாட்சி எதுவுமே இல்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்

தலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக்கட்சி கொடி

இலங்கை தமிழரசுக் கட்சியின்  இளைஞரணி நிர்வாகத்தெரிவு மற்றும் மாநாடு இன்று வவுனியாவில் இடம்பெற்ற போது தமிழரசுக் கட்சியின் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டமையினால் சிறு குழப்பம் ஏற்பட்டது.

DSC04291.JPG

இளைஞரணி நிர்வாகத்தெரிவு இடம்பெறுவதற்கு முன்னர் கட்சியின் கொடி ஏற்றுவதற்காக அனைவரும் நிகழ்வு இடம்பெற்ற வவுனியா நகரசபையின் மண்டபத்திற்கு முன்பாக கூடியிருந்த நிலையில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவால் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த கட்சியின் கொடி தலைகீழாக காணப்பட்டமையை கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் கொடி இறக்கப்பட்டது. 

DSC04293.JPG

இதனையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அவ்விடத்திற்கு வந்து கொடியை சீர் செய்து கொடுத்திருந்த நிலையில் மீண்டும் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.

http://www.virakesari.lk/article/54297

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

எமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக, இளைஞரணி உருவாக்கப்பட்டுள்ளது – மாவை

நீங்களேல்லாம் திருந்தவே மாட்டீர்களா?

அல்லது உங்களை திருத்த ஆட்களே இல்லையா?


டேய் மானங்கெட்டவர்களே! 😡

அந்த அழிவுச்சூடு இன்னும் ஆறவேயில்லை. அதற்குள் எப்படி உங்களால் இப்படி பேச முடிகின்றது????

எம்மிடம் வார்த்தைகள் இல்லை.....

சினிமாவிலிருந்தாவது தருகின்றோம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் முடிவிலி தான்,  தொடங்கின இடத்திலேயேயே வந்து நிக்கிறம்.

மாவையரும் முந்தி இளைஞர் அணி பொறுப்பாளர் என்ற மாதிரி இருந்தவர் என்று ஒரு ஞாபகம்.  அவருடன் இன்னுமொரு இளைஞர் அணியைச் சேர்ந்தவரின்பழம் பழுத்துக் கொண்டிருக்கு வௌவால் எல்லாம் தேடி வரும்” என்ற பிரபலமான சுலோகங்களும்,  விரலை வெட்டி இரத்தத் திலகம் இட்டு அரங்கத்திலே மயங்கி விழுந்த இளவல்களுமாக நினைவில் எல்லாமே அப்படியே இருக்கு.

 மீண்டும் வண்டில் சவாரி விடலாம் என்ற நப்பாசையடன் யாராவது இருந்தால் அது சரி வராது என எண்ணம் போகின்றது. அது போக வாரிசு அரசியல் என்பது இலங்கைத் தமிழரிடையேயே அவ்வளவு வரவேற்பிற்குரிய விடயமாக என்றுமே இருந்ததில்லை என சம்பந்தப்பட்டவர்கள் உணர்வது நல்லது.

கச்சியேகம்பப் பெருமாளே ………….

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவையார்....  அடுத்த தேர்தலுக்கு.... தமிழரசு கட்சிக்கு, 
தெருவெல்லாம்,   நோட்டீஸ் ஓட்ட  ஆள் சேர்க்கிறார். :grin:

முயல் பிடிக்கிற...  *** மூஞ்சையிலை  பாக்க உங்களுக்கு தெரியாதா? 😝

On 4/20/2019 at 8:25 PM, தமிழ் சிறி said:

எமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக, இளைஞரணி உருவாக்கப்பட்டுள்ளது – மாவை

தமிழரசுக் கட்சியின் தற்போதைய விடுதலைப் பிழைப்பான ஒட்டுண்ணிப் பிழைப்புகளுக்கு இளைஞர்களையும் பழக்குகிறார்கள்!
இதில் பிச்சைக்கார மனோநிலை கொண்ட சில பட்டதாரிகள் இணையலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.