Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் தமிழர் - தேர்தல் 2019

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் - தேர்தல் 2019

தற்போது வரை 💪😍😍🔥🔥🔥

Arakkonam - 24495
Arani - 32151
Chennai Central - 30684
Chennai North - 49412
Chennai South - 34818
Chidambaram - 26049
Coimbatore - 58289
Cuddalore - 32785
Dharmapuri - 16769
Dindigul - 49741
Erode - 38849
Kallakurichi - 29806
Kancheepuram - 62390
Kanniyakumari - 13135
Karur - 32553
Krishnagiri - 27145
Madurai - 32178
Mayiladuthurai - 30721
Nagapattinam - 41361
Namakkal -38378
Perambalur - 52494
Pollachi - 31181
Ramanathapuram - 26762
Salem - 25376
Sivaganga - 56315
Sriperumbudur - 35627
Tenkasi - 58855
Thanjavur - 55643
Theni - 14317
Thiruvallur - 41207
Thoothukkudi - 43107
Thiruchirappalli - 64979
Tirunelveli - 49528
Tiruppur - 41670
Tiruvannamalai - 27192
Viluppuram - 24399
Viluppuram - 52552
Puducherry - 15568

Total - 14,18,481

L’image contient peut-être : 2 personnes, personnes souriantes
 
 

 

  • Replies 161
  • Views 17.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ( சுமார் 15 லட்சம் வாக்குகள்) 4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

www.ns7.tv | #Results2019 | #Verdict2019 |#ElectionResultsWithNews7Tamil | #News7Tamil

L’image contient peut-être : 1 personne, sourit, texte
 
 
 

ஒரு உண்மையான சனநாயக பண்பின் அடிப்படையில் 4% உறுப்பினர்கள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்து இருக்கலாம். அந்த நிலைமை இங்கு  இல்லை.

ஆனால், அண்ணன் சீமான் கூறுவது போல இது ஒரு ஆரம்பமே. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

தற்போதைய நிலவரப்படி #நாம்_தமிழர்_கட்சி சிறப்பாக வாக்குகள் பெற்றிருக்கும் தொகுதிகள்...

1. வட சென்னை (6.37%)
2. தென் சென்னை (4.38%)
3. திண்டுக்கல் (5.01%)
4. காஞ்சிபுரம் (5.39%)
5. மதுரை (4.55%)
6. நாகப்பட்டினம் (4.43%)
7. பெரம்பலூர் (4.46%)
8. இராமநாதபுரம் (4.79%)
9. சிவகங்கை (5.66%)
20. திருபெரும்புதூர் (6.55%)
11. தென்காசி (5.02%)
12. தஞ்சாவூர் (5.36%)
13. தூத்துக்குடி (4.15%)
14. திருச்சிராப்பள்ளி (6.37%)
15. திருநெல்வேலி (5.08%)
16. விருதுநகர் (4.98%)

அருமை... வாழ்த்துகள்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

5 வீதத்திற்கே வாழ்த்துக்கள் என்பது டெபாசிட் போகவில்லை என்பதற்கான வாழ்த்தா அல்லது டெபாசிட் போனதுக்கான வாழ்த்தா?🤣😂

சீமானின் நாம் தமிழர் தொடர்ந்தும் இப்படியே 5 வீதக் கட்சியாக இருப்பதுதான் தமிழர்களுக்கு நன்மை பயக்கும்💪🏽💪🏽💪🏽

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

5 வீதத்திற்கே வாழ்த்துக்கள் என்பது டெபாசிட் போகவில்லை என்பதற்கான வாழ்த்தா அல்லது டெபாசிட் போனதுக்கான வாழ்த்தா?🤣😂

சீமானின் நாம் தமிழர் தொடர்ந்தும் இப்படியே 5 வீதக் கட்சியாக இருப்பதுதான் தமிழர்களுக்கு நன்மை பயக்கும்💪🏽💪🏽💪🏽

பலவாறும் சொல்லி  வந்தார்கள்

புதுச்சின்னம்

அதை  மக்களுக்குள் கொண்டு போவது  கடினம்

இதனால் போனமுறையை  விட குறைவான  வாக்ககளே  கிடைக்கும் என.

5 வீதம் என்பது  சின்னத்தை  நிரந்தரமாக்க.

மற்றும்படி 5 வீதம்  என்பது தவிர்க்க  முடியாத  சக்தியாக்க.

 

ஒத்த ரூபாய் காசு கொடுக்காமல் வாங்கிய #சுத்தமான_வாக்கு...

 

 

1 hour ago, விசுகு said:

பலவாறும் சொல்லி  வந்தார்கள்

புதுச்சின்னம்

அதை  மக்களுக்குள் கொண்டு போவது  கடினம்

இதனால் போனமுறையை  விட குறைவான  வாக்ககளே  கிடைக்கும் என.

5 வீதம் என்பது  சின்னத்தை  நிரந்தரமாக்க.

மற்றும்படி 5 வீதம்  என்பது தவிர்க்க  முடியாத  சக்தியாக்க.

 

ஒத்த ரூபாய் காசு கொடுக்காமல் வாங்கிய #சுத்தமான_வாக்கு...

 

 

சட்ட மன்ற தேர்தலில் 1% வாக்குகள்; இந்த முறை 5% வாக்குகள் ..........!!!!!  👍👍👍👍

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினின் அரசியல் தோல்வி.  

பாராளுமன்ற தேர்தலில் வென்று, காங்கிரசுக்கு ஆதரவு தந்து மத்தியில் ஆட்சியிலும் பங்கு பற்றி க் கொண்டே, தமிழக அரசை கலைத்து தேர்தலை சந்தித்து முதல்வராக வரவேண்டும் என்பதே ஸ்டாலினின் திட்டமாக இருந்தது.

ஆனால், எடப்பாடியோ சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும் கவனம் செலுத்தினார். மத்தியில் காங்கிரசும்  மாநிலத்தில் ஸ்டாலினும் முதல்வராக முடியவில்லை. அதவேளை திமுக க்கு கிடைத்த எம்பிக்கள் 20 மட்டுமே மிகுதி கூட்டணிகளுக்கே.

வாழ்வின் முதல் தடவையாக சரியான முடிவை எடுத்த வகையில், வைகோ மகிழ்வுடன் உள்ளார்.  

எடப்பாடி இப்போது தேவையான பெரும்பான்மையுடன், மத்தியில் ஆட்சியில் இருக்கப்போகும் பாஜக ஆதரவுடன் அசைக்க முடியாத ஆதரவுடன் 2021 வரை பதவியில் இருக்கப் போகிறார். தளம்பிக் கொண்டிருந்த 3பேரும் மறுபடி எடப்பாடி ஆதரவு நிலை எடுக்கப் போகின்றனர்.

அத்துடன் தினகரன் அரசியலும் முடியும் அல்லது முடித்து வைக்கப்படும். அவருடன் இருந்த செந்தில் பாலாஜி திமுக சென்று வென்று விட்ட நிலையில், தங்கத்தமிழ்செல்வன் போன்றோர் இனி இவருடன் இருப்பது சந்தேகமே.

மூன்றாவது இடத்துக்கு ஆன போட்டியில் கமலும் சீமானும் போட்டி இட்டாலும், கமல் நகர்புறத்தில் எடுத்ததை, சீமான் கிராமப்புறங்களில் எடுத்ததன் மூலம் தராசு சமநிலையில் உள்ளது. அநேகமாக நாளை சரியான புள்ளி விபரம் தெரியும்.

சீமானுக்கு அரசியல் இப்போது முழுநேர வேலை. கமலுக்கு அப்படி இல்லை. ஆகவே, அடுத்த இரண்டு ஆண்டுகள் கமல் களத்தில் ஓடி வேலை செய்வாரா, அல்லது சினிமா பக்கம் சென்று விடுவாரா தெரியவில்லை. இருப்பினும், குறுகிய காலத்தில் அவர், NOTA வுக்கு செல்ல இருந்த பல வாக்குகளை எடுத்துக் கொண்டார் என்பதால், சீமான் தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்டுள்ளார் என கூறலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கமல், தினகரன் இப்படிப் பல புதியோர் களத்தில் நிற்கும் போது, 5 சதவீதம் எடுப்பது லேசான விசயம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

சினிமாப் பிரபல்யம் உலக நாயகன்.. காசு நாயகன்கள் எல்லாம்... தங்கள் சில பல செல்வாக்குகளை இந்தத் தேர்தலில் காட்டியும்.. தி மு க.. அதிமுக என்பன வலுவான கூட்டணிகளோடு நின்றும்..

நாம் தமிழருக்கு வாக்குச் சதவீதம் 4% ஆல் அதிகரித்திருப்பது மக்கள் மாற்றத்தை நோக்கிப் போகிறார்கள் என்பதையே ஆகும். அதிலும் மக்கள் சரியான மாற்றம் ஒன்றை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறார்கள் என்று அர்த்தமாகும்.

இந்த வாக்கு வங்கியை... உள்ளூராட்சி சபைகள்.. நகர சபைகள்.. மாநகர சபைகள்.. பஞ்சாயத்து சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி.. தமக்கான மக்கள் சேவையை அடிமட்டத்தில் இருந்து ஆரம்பிக்குமாக இருந்தால்..

நிச்சயம் நாம் தமிழருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

கிருபண்ணா போன்றவர்கள்.. தலைவரையும் கொடியையும் மறந்திட்டால்.. மறைச்சிட்டால் எல்லாம் கிடைக்கும் என்று சொல்லித் திருச்சிச்சினம்.. மீளாய்வு.. ஆராய்வுன்னு எழுதித் தள்ளிச்சினம்.. பின் புலித்தத்துவம்.. முன் புலித் தத்துவம்.. என்று பல தத்தக்கபித்தக்க போட்டிச்சினம்.. என்னத்தை கடந்த 10 ஆண்டுகளில் சாதிச்சவை என்று கேளுங்கோ... பூச்சியம்.

ஆனால்.. சீமான்.. நாம் தமிழராக.. ஒருங்கிணைந்து தமிழகத்தில்.. இத்தனை இலட்சம் மக்களை தேசிய தலைவரின் படத்துக்குப் பின்னால் அணி வகுக்க வைச்சிருப்பது.. சிலருக்கு கசக்கத்தான் செய்யும். குறிப்பாக.. அவரை.. மறைக்க மறக்க நினைப்பவர்களுக்கு. 

நாம் தமிழர் எனி தீர்மானிக்க வேண்டியது மக்களுக்கான பாதையில்.. மக்களோடு சேர்ந்து பயணிப்பதை தான். அதுவே அவர்களுக்கான.. அதிகாரத்தை மக்கள் ஏகோபித்து வழங்க உதவும். அதுக்கு பிரபாகரன் என்ன யார் அல்லது எது பலம் சேர்த்தாலும் இனத்தின் விடிவுக்காக நன்றி மறப்பின்றி.. பாவித்தால் அதுவும் அவர்களின் தியாகத்தால்.. கிடைக்கும் தமிழ் மக்களுக்கான.. ஓர் சின்ன நன்மையே ஆகும். 

 
 
 
3 minutes ago, nedukkalapoovan said:

ஆனால்.. சீமான்.. நாம் தமிழராக.. ஒருங்கிணைந்து தமிழகத்தில்.. இத்தனை இலட்சம் மக்களை தேசிய தலைவரின் படத்துக்குப் பின்னால் அணி வகுக்க வைச்சிருப்பது.. சிலருக்கு கசக்கத்தான் செய்யும். குறிப்பாக.. அவரை.. மறைக்க மறக்க நினைப்பவர்களுக்கு. 

 

சீமான் விடுதலைப்புலிகளையும் தலைவர் பிரபாகரனது கருத்துக்களையும் உளப்பூர்வாமாக உள்வாங்குபவராகத் தெரியவில்லை. அவரைப்பொறுத்த வரையில் தன்னைப் பிரபல்யமாக்க தற்போதைக்கு தேவையானவை புலிகளின் பெயர். தமிழ்த் தேசியவாதம் பேசி தமிழ் உணர்வாளர்களை தனது படிக்கல்லாக்கி அதிகாரத்தில் அமர்வது தற்போதைய அவரது நோக்கு

அவரது வளர்ச்சி ஆரோக்கியமான தமிழ்த் தேசிய வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nedukkalapoovan said:

நாம் தமிழர் எனி தீர்மானிக்க வேண்டியது மக்களுக்கான பாதையில்.. மக்களோடு சேர்ந்து பயணிப்பதை தான். அதுவே அவர்களுக்கான.. அதிகாரத்தை மக்கள் ஏகோபித்து வழங்க உதவும். அதுக்கு பிரபாகரன் என்ன யார் அல்லது எது பலம் சேர்த்தாலும் இனத்தின் விடிவுக்காக நன்றி மறப்பின்றி.. பாவித்தால் அதுவும் அவர்களின் தியாகத்தால்.. கிடைக்கும் தமிழ் மக்களுக்கான.. ஓர் சின்ன நன்மையே ஆகும்

 ஆனால் வாலுகளுக்கு எதுவும் ஏறாது! திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சிக்கலுக்குள் இருந்த இந்த காலகட்டத்திலேயே  ஐந்து வீதம் என்றால் அவர்கள் பலமாக மீண்டு வரும்போது  சீமான் மீண்டும் ஒரு வீதத்திற்கு போய்ச் சேருவார்🤣😂

 

இது ஓர் வாட்ஸப் பதிவு..

எமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு காசும் புகழும் தேவை என்றால்.. நாலு படத்தை எடுத்து அதை வெற்றி பெற வைப்பதில் தீவிரம் காட்டி இருக்கலாம். தேசிய தலைவரும் அவரை எல்லாம்.. கூப்பிட்டு ஒரு நட்புறவாடல் செய்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

எம்மவர்கள் எமது தலைவரையும்.. போராளிகளையும் போராட்டத்தையும் காட்டிப் பிழைத்ததை விடவா.. சீமான பிழைச்சிட்டார்..?!

பிரபாகரனை.. புலியை தூக்கிய படியால்.. அவர்கள் பட்ட வேதனையும் சோதனையும் தான் அதிகம். அதை தூக்காமல்.. பெரியார்.. அண்ணா.. திராவிடம் என்று சீமானும்.. வை.கோ ரேஷ்சில் பெரிய திராவிடக் கட்சிகளுக்குள் கலந்திருப்பாரானால்.. இப்போ... அவரின் பதவிகளை அனுபவித்துக் கொண்டிருப்பார். 

ஆனால்.. பிரபாகரனை புலியை தூக்கி சீமான் அனுபவித்தது சிறையும்.. வழக்குகளும் தான் அதிகம். 

எமக்காக குரல் கொடுப்பவர்களை எமது அரைகுறைப் புத்தியால் மட்டும் பார்க்கக் கூடாது. நியாயத்தோடு அவர்கள் தொழிற்படும் சூழலை கருத்திக் கொண்டு.. அந்த சூழலில்.. இன்றிருக்கும் நாம் அன்று எதிர்பார்த்த மாற்றங்களின் அளவு என்ன என்பதை எல்லாம் கணக்கிட்டு கருத்துச் சொல்லனுமே தவிர..

தமிழ் தேசிய அரசியலை நிராகரிக்க.. எனி எந்தத் தமிழனாலும் முடியாது. அப்படி நிராகரித்தால்.. தமிழன் என்ற இனம் இந்த உலகில்.. இல்லாமல் போகும். அவ்வளவும் தான். 

3 minutes ago, கிருபன் said:

ஆனால் வாலுகளுக்கு எதுவும் ஏறாது! திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சிக்கலுக்குள் இருந்த இந்த காலகட்டத்திலேயே  ஐந்து வீதம் என்றால் அவர்கள் பலமாக மீண்டு வரும்போது  சீமான் மீண்டும் ஒரு வீதத்திற்கு போய்ச் சேருவார்

இதை விட பலமா..?!

கிட்டத்தட்ட எல்லாரும் கூட்டணி.

மதிமுக.. பாமக.. தே திமுக.. காங்கிரஸ்.. இடதுசாரி தாடிக்காரக் கூட்டம்.. எல்லாமே.

இதில் கமல்.. சுதாகரன் அவரவர் வாக்கு வங்கியை இனங்காட்ட தனித்து நின்றார்கள். அதிலும் செல்வாக்கு.. பணம்.. தேர்தல் பொருள். சுத்தமா கொள்கை கிடையாது.

ஆனால்.. நாம் தமிழர் மட்டுமே கொள்கையோடு தனித்து நின்றார்கள். சல்லிக் காசும் மக்களுக்கு கொடுக்கவில்லை.. வாக்கு வாங்க.

எது பலம்.. எது பலவீனம்..??! 

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வரூபம் எடுத்த "மய்யம்" மெளர்யாவும்..வீறு கொண்டு போராடிய காளியம்மாளும்..வட சென்னையில் அனல் போட்டி

சென்னை: "யார் என்று தெரிகிறதா?" என்று வட சென்னையில் வைத்துக் காட்டி விட்டார் கமல்ஹாசன். அட்டகாசமான ஒரு போட்டியை வட சென்னை பார்த்திருக்கிறது. புதிதாக பிறந்து வந்த மக்கள் நீதி மய்யமும், அதற்கு சளைக்காமல் சலங்கை கட்டி ஆடிய நாம் தமிழர் கட்சியின் காளியம்மாளும் அதிமுக, திமுக கூட்டணிகளை அதிர வைத்துள்ளனர். வட சென்னையில் தேமுதிக அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டது. திமுக சார்பில் கலாநிதி வீராசாமி போட்டியிட்டார். இவர்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்க மக்கள் நீதி மய்யம் முன்னாள் காவல்துறை அதிகாரி ஏஜி மெளர்யாவை களம் இறக்கியது. நாம் தமிழர் சார்பில் காளியம்மாள் அக்கா களம் கண்டார்.

மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழரும் என்ன வாக்குகளை பெற்று விடப் போகிறார்கள் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் இருவரும் அதிர வைத்து விட்டனர்.

திமுக வாரிசு வட சென்னையில் திமுகவுக்கே வெற்றி. அக்கட்சி வேட்பாளர் கலாநிதி வீராசாமி, முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன். திமுக காரர், வீராசாமி வாரிசு என்ற பலத்தின் பின்னணியில் போட்டியிட்ட அவரது வெற்றி பெரிய விசேஷம் இல்லை.

தேமுதிக மோகன்ராஜ் தேமுதிக சார்பில் அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிட்டார். இவருக்காக விஜயகாந்த்தே களம் இறங்கி தெருத் தெருவாக வேனில் அமர்ந்து பிரச்சாரம் செய்தார். தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்தார். ஆனால் மோகன் ராஜ் வெல்ல முடியவில்லை. 2வது இடமே அவருக்குக் கிடைத்தது.

புதிய சக்திகள் இப்படி இரு பெரும் கட்சிகள் போட்டா போட்டி போட்ட நிலையில் அத்தனை பேரையும் கவர்ந்திழுத்து தனி ஆட்டம் ஆடியுள்ளன மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும். இதுதான் படு ஆச்சரியமாக இருக்கிறது. பார்க்கவே வித்தியாசமாக இருக்கிறது. ஒரு பைசா கூட செலவு செய்யாமல் இந்த கட்சிகள் இறங்கி அடித்து அசத்தியுள்ளன.

மெளர்யாவுக்கு ஒரு லட்சம் ஒரு லட்சம் ஓட்டுக்களைத் தாண்டிப் பெற்று அதிர வைத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மெளர்யா. இவருக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. மோகன்ராஜை விட 25,000 ஓட்டுக்களே குறைந்து பெற்றுள்ளார் மெளர்யா என்பது முக்கியமானது. இது மிகப் பெரிய சாதனையாகும். எல்லாம் கமல் அடித்த டார்ச் லைட் வெளிச்சத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பு என்பதில் சந்தேகமே இல்லை.

கலக்கிய காளியம்மாள் அடுத்து நம்மைக் கவர்ந்தவர் காளியம்மாள்தான். அக்கா அக்கா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் காளியம்மாள், குறுகிய காலத்தில் தமிழர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர். எளிய குடும்பத்தைச் சேர்ந்த மீனவப் பெண்மணி. அத்தனை அழகாக பேசுகிறார். புள்ளி விவரங்களை அடுக்கிப் பேசுகிறார். அடுக்குமொழி பேசத் தெரியாதவர். ஆனால் உலுக்கி எடுத்தது இவரது ஒவ்வொரு பேச்சும்.

பாசக்கார அக்கா காளியம்மாளின் பிரச்சாரம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. இவருக்காக சீமான் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். தமிழக அளவில் மிகவும் கவனிக்கப்பட்ட முக்கிய வேட்பாளர்கள் வரிசையில் காளியம்மாளும் இடம் பிடித்ததே நாம் தமிழர் கட்சியின் மிகப் பெரிய சாதனையாகும். காளியம்மாள் 59,000 வாக்குகளைத் தாண்டி போய் விட்டார். இது மகத்தான சாதனைதான்.

புதிய சக்தி இப்படி பெரிய கட்சிகளுக்கு மத்தியில் மக்கள் நீதி மய்யமும்,நாம் தமிழர் கட்சியும் புகுந்து விளையாடியிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. வருங்கால அரசியலின் தவிர்க்க முடியாத சக்திகள் இவர்கள் என்பதையும் ஆணித்தரமாக நிரூபித்து விட்டனர். டாக்டர் தமிழிசை சொல்வது போல இவர்களுக்குக் கிடைத்திருப்பது நிச்சயம் வெற்றிகரமான தோல்விதான்!

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/ntk-and-mnm-shine-well-in-north-chennai/articlecontent-pf376887-351657.html?c=hboldsky

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

இது ஓர் வாட்ஸப் பதிவு..

எமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.

இப்படி வாட்ஸப்பில்.. பதிவு போடுறவை.. கடந்த 10 வருசமா தமிழ் மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் என்ன விடிவை பெற்றுக் கொடுத்திட்டு.. சீமானை திட்ட வெளிக்கிட்டினம்.

காணும்.. நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேணாம். சீமான்.. தலைவர்.. பெயர் படம்.. உயிர் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு போய் அவர் தலைவரின் பெயரால்.. அரசியல் செய்து பிழைத்தாலும் பறுவாயில்லை..

எம்மவர்கள்.. போல தலைவரை ஒளிச்சு வைக்காமல்.. இருப்பதே அவரின் கொள்கைக்கு செய்யும் மறைமுக உதவியாக இருக்கும். தலைவர் ஒளிக்கப்பட வேண்டியவரல்ல. ஒரு இனத்துக்கான போராளி என்று நிரூபிக்கப்பட வேண்டியவர். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

 ஆனால் வாலுகளுக்கு எதுவும் ஏறாது! திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சிக்கலுக்குள் இருந்த இந்த காலகட்டத்திலேயே  ஐந்து வீதம் என்றால் அவர்கள் பலமாக மீண்டு வரும்போது  சீமான் மீண்டும் ஒரு வீதத்திற்கு போய்ச் சேருவார்🤣😂

 

இது ஓர் வாட்ஸப் பதிவு..

எமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.

தனது அரசியலுக்கு பிரபாகரன் பய்னன்படுத்துகிறார் என்று நம்மில் பலர் அதுவும் புலிகளை பிடிக்காதவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

சீமானுக்கு, பிரபாகரன் தேவையில்லை. அவரது பேச்சுவன்மைக்கு இன்றும் கூட ஒரு கூட்டணி சேர்ந்தால், பெரிய பெட்டி வாங்கிக் கொள்ள முடியும்.

தமிழகத்தில் சாதி பிரச்சனைகள் காரணமாக, வெளியார் தலைமை வருகிறது, வெல்கிறது. இதுவே ரஜனி ஆசைப்படவும், MGR, அவர் மனைவி ஜானகி, துணைவி ஜெயலலிதா பதவிக்கு வரவும். அண்ணாதுரை, கலைஞர் பதவிக்கு வரவும் முடிந்தது.

வெளிநாட்டவராக இருந்தாலும், தமிழர் என்ற காரணத்தினால் பிரபாகரன் காட்டப்படும் போது, சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் அவர் ஏற்றுக் கொள்ளப் படுகின்றார். அந்த ஒரு காரணத்துக்காகவே, சாதியம் கடந்து சீமான், பிரபாகரன் படத்துடன் சகல தமிழக, மறைந்த சாதிய தலைவர்களின் சிலைகளுக்கு அஞ்சலி செலுத்தி மாலை அணிவிக்க முடிகிறது. 

ஈழத்தில் சாதிய வேறுபாடுகளுக்கு அப்பால் போராட்டத்தில் ஈடுபட வைத்தவர் பிரபாகரன் என்கிற ஒரே காரணத்துக்காகவே பிரபாகரன் சீமானால், அதே காரணத்துக்காக அங்கே முன்னிறுத்தப்படுகின்றார்.

ஈழத்தில் பிரபாகரனை வெறுத்த நானறிந்த பலரும், சீமானின் இந்த நோக்கத்தினை ஏற்றுக் கொள்கின்றனர்.

அது புரியாமல், சீமான் பிரபாகரனை வைத்து பணம் சம்பாதிக்கின்றார் என்று தமக்கு தோன்றியதை எல்லாம் பேசுகின்றனர்.

எத்தனை பேர் கொடுக்கிறார்கள்? இந்திய அரசுக்கு தெரியாமல் பணம் போக முடியுமா? சீமானின் இயக்கத்தினுள் எத்தனை உளவாளிகள் உள்ளனர் என்பதை சீமானே வெளிப்படையாக சொன்னாரே.

ஒன்று புரிந்து பேசுவோம் அல்லது புரியாமல் பேசிக்கொண்டே இருப்போம்.   

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

சீமானுக்கு காசும் புகழும் தேவை என்றால்.. நாலு படத்தை எடுத்து அதை வெற்றி பெற வைப்பதில் தீவிரம் காட்டி இருக்கலாம்.

ம்க்கும்😁 சீமான் படமெடுத்து அது ஓடி தயாரிப்பாளர்களும் அவரும் கோடீஸ்வரர்களாகி விடுவார்களாக்கும்🤣😂

தமிழ்நாட்டில் தேர்தல்களில் தொடர்ந்தும் சீமானின் நாம் தமிழர் நிற்கவேண்டும். 5 வீதம் வாக்கு வாங்கி கிச்சுகிச்சு மூட்டவேண்டும். வாலுகள் அதை பெருமையாகக் கொண்டாடவேண்டும் என்று எல்லாம் வல்ல இயற்கையையும், ஆதி மூலர்களையும், எங்கபாட்டன் முருகப்பெருமானையும் வேண்டிக்கொள்கின்றேன்😆

10 minutes ago, Nathamuni said:

சீமானுக்கு, பிரபாகரன் தேவையில்லை. அவரது பேச்சுவன்மைக்கு இன்றும் கூட ஒரு கூட்டணி சேர்ந்தால், பெரிய பெட்டி வாங்கிக் கொள்ள முடியும்.

அட இப்படி சீமான்கூட யோசிக்கமாட்டார்.😛

நாம் தமிழர் பாகம் - 3 திரி ஒன்றை ஆரம்பிக்க நேரம் வந்துவிட்டது😃

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு இப்ப புலி இல்ல.. கழுவி ஊத்திறதுக்கு.. சீமானை ஊத்திக் காலத்தைக் கழிக்க வேண்டியான். இதை விட எதைச் சாதித்தீர்கள்.. புலிகள் இருக்கும் போதும் சரி.. இல்லாத கடந்த 10 ஆண்டுகளிலும் சரி. ஒரே தசாப்தத்தை.. இப்படி வெட்டி நக்கல் அடித்தே கழித்தது தான் மிச்சம். 

கடைசி சீமானாவது முன்னேறட்டும்.. விட்டு விடுங்கள். உங்களால் முடியாததை அவர் செய்ய முனைவது எரிச்சலாகத்தான் இருக்கும்.. என்ன செய்வது. 😊

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

ம்க்கும்😁 சீமான் படமெடுத்து அது ஓடி தயாரிப்பாளர்களும் அவரும் கோடீஸ்வரர்களாகி விடுவார்களாக்கும்🤣😂

தமிழ்நாட்டில் தேர்தல்களில் தொடர்ந்தும் சீமானின் நாம் தமிழர் நிற்கவேண்டும். 5 வீதம் வாக்கு வாங்கி கிச்சுகிச்சு மூட்டவேண்டும். வாலுகள் அதை பெருமையாகக் கொண்டாடவேண்டும் என்று எல்லாம் வல்ல இயற்கையையும், ஆதி மூலர்களையும், எங்கபாட்டன் முருகப்பெருமானையும் வேண்டிக்கொள்கின்றேன்😆

அட இப்படி சீமான்கூட யோசிக்கமாட்டார்.😛

நாம் தமிழர் பாகம் - 3 திரி ஒன்றை ஆரம்பிக்க நேரம் வந்துவிட்டது😃

சீமானே வெல்ல இன்னும் காலம் இருக்கு, அதுவரை உழைக்கவேண்டும் ன்று எப்பவோ,  சொல்லீட்டார். 

கணக்க கவலைப்படாதீங்க.... இன்னும் பல திரி கொழுத்துவம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஸ்டாலினின் அரசியல் தோல்வி.  

பாராளுமன்ற தேர்தலில் வென்று, காங்கிரசுக்கு ஆதரவு தந்து மத்தியில் ஆட்சியிலும் பங்கு பற்றி க் கொண்டே, தமிழக அரசை கலைத்து தேர்தலை சந்தித்து முதல்வராக வரவேண்டும் என்பதே ஸ்டாலினின் திட்டமாக இருந்தது.

ஆனால், எடப்பாடியோ சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும் கவனம் செலுத்தினார். மத்தியில் காங்கிரசும்  மாநிலத்தில் ஸ்டாலினும் முதல்வராக முடியவில்லை. அதவேளை திமுக க்கு கிடைத்த எம்பிக்கள் 20 மட்டுமே மிகுதி கூட்டணிகளுக்கே.

வாழ்வின் முதல் தடவையாக சரியான முடிவை எடுத்த வகையில், வைகோ மகிழ்வுடன் உள்ளார்.  

எடப்பாடி இப்போது தேவையான பெரும்பான்மையுடன், மத்தியில் ஆட்சியில் இருக்கப்போகும் பாஜக ஆதரவுடன் அசைக்க முடியாத ஆதரவுடன் 2021 வரை பதவியில் இருக்கப் போகிறார். தளம்பிக் கொண்டிருந்த 3பேரும் மறுபடி எடப்பாடி ஆதரவு நிலை எடுக்கப் போகின்றனர்.

அத்துடன் தினகரன் அரசியலும் முடியும் அல்லது முடித்து வைக்கப்படும். அவருடன் இருந்த செந்தில் பாலாஜி திமுக சென்று வென்று விட்ட நிலையில், தங்கத்தமிழ்செல்வன் போன்றோர் இனி இவருடன் இருப்பது சந்தேகமே.

மூன்றாவது இடத்துக்கு ஆன போட்டியில் கமலும் சீமானும் போட்டி இட்டாலும், கமல் நகர்புறத்தில் எடுத்ததை, சீமான் கிராமப்புறங்களில் எடுத்ததன் மூலம் தராசு சமநிலையில் உள்ளது. அநேகமாக நாளை சரியான புள்ளி விபரம் தெரியும்.

சீமானுக்கு அரசியல் இப்போது முழுநேர வேலை. கமலுக்கு அப்படி இல்லை. ஆகவே, அடுத்த இரண்டு ஆண்டுகள் கமல் களத்தில் ஓடி வேலை செய்வாரா, அல்லது சினிமா பக்கம் சென்று விடுவாரா தெரியவில்லை. இருப்பினும், குறுகிய காலத்தில் அவர், NOTA வுக்கு செல்ல இருந்த பல வாக்குகளை எடுத்துக் கொண்டார் என்பதால், சீமான் தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்டுள்ளார் என கூறலாம்.

நாதம்ஸ்,

எனக்கென்னவோ நீங்கள் பிரண்ட பக்கத்துக்கு குறி சுடுறாப்ப்போல படுது.

நீங்கள் சொல்லியதை விட ஸ்டாலின் அசுர பலத்தோடு எழுந்துள்ளார் என்பதே உண்மை.

உடனே என்னை ஸ்டாலின்னின் கூஜா எண்டு சொல்ல வேண்டாம். திமுக வை நானும் வெறுக்கிறேன் ஆனால் அரசியல் அனுமானம் என்பது எமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதே.

ரத்தான கதிர் ஆனந்த் தொகுதி தவிர திமுக போட்டியிட்ட 19 இலும் 19/19 வெற்றி.

தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெல்லுவதே வழமை. அதிலும் 13/22 என்பது இடைத்தேர்தல் என்று பார்க்கும் போது கணிசமான வெற்றியே.

அடுத்த முக்கியமான விசயம், தானே வெல்லும் குதிரை என்பதை ஸ்டாலின் நிருபித்துள்ளார். குறிப்பாக மதுரையில் சிபிஎம் வேட்பாளர் வென்றது. அழகிரி ஆதிக்கம் திமுகவில் கிட்டத்தட்ட ஒடுக்கப் பட்டே விட்டதை சொல்கிறது.

இப்போ திமுக கூட்டணியில் உள்ள யாரும் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியே போக மாட்டார்கள்.

தேமுதிக, பாமக இப்போதே திமுக பக்கம் வர நூல்விடத் தொடங்கி இருப்பார்கள்.

இந்திய அரசியலில் மோடி அலையில் மூழ்காத இரு தலைவர்கள் என்றால் அது நவீன் பட்நாயக்கும் ஸ்டாலினும்தான். எனவே இந்திய அரசியலிலும் ஸ்டாலினுக்கு ஏறுமுகமே.

காங்கிரசின் 70 எம்பிகளில் 10 தமிழ் நாட்டில். தமிழ் நாட்டில் தனித்து நின்றால் அதுவும் பூச்சியமே. அப்படி இருக்கு ஒரு தேசிய கட்சியின் நிலை.

எனவே இப்போதைக்கு பாஜக, அதிமுக, நாத, மநீம, அமமுக தவிர்ந்த ஏனைய அனைத்து தமிழ்நாட்டு கட்சிகளின் ஒரே போக்கிடம் திமுகவே.

ஸ்டாலின் கூட்டணி அமைப்பதில் அப்படியே அப்பன் போலவே செயல்படுகிறார். மத்திய தேர்தலில் 50% விட்டுக்கொடுப்பு ஆனால் சட்டசபை தேர்தலில் 65% கீழ் ஒரு சீட்டும் குறையாமல் திமுக போட்டியிடும்.

அநேகமாக அடுத்த ஆட்சி தனிப்பெரும்பான்மை அல்லது, மைனாரிடி திமுக அரசாகவே அமையக்கூடும்.

எதுக்கும் இந்த பதிவை favorite இல் போட்டு வையுங்கள். ஒன்றில் நீங்கள் அல்லது நான் I told you so என்று சொல்லப் போகிறோம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

நாதம்ஸ்,

எனக்கென்னவோ நீங்கள் பிரண்ட பக்கத்துக்கு குறி சுடுறாப்ப்போல படுது.

நீங்கள் சொல்லியதை விட ஸ்டாலின் அசுர பலத்தோடு எழுந்துள்ளார் என்பதே உண்மை.

உடனே என்னை ஸ்டாலின்னின் கூஜா எண்டு சொல்ல வேண்டாம். திமுக வை நானும் வெறுக்கிறேன் ஆனால் அரசியல் அனுமானம் என்பது எமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதே.

ரத்தான கதிர் ஆனந்த் தொகுதி தவிர திமுக போட்டியிட்ட 19 இலும் 19/19 வெற்றி.

தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெல்லுவதே வழமை. அதிலும் 13/22 என்பது இடைத்தேர்தல் என்று பார்க்கும் போது கணிசமான வெற்றியே.

அடுத்த முக்கியமான விசயம், தானே வெல்லும் குதிரை என்பதை ஸ்டாலின் நிருபித்துள்ளார். குறிப்பாக மதுரையில் சிபிஎம் வேட்பாளர் வென்றது. அழகிரி ஆதிக்கம் திமுகவில் கிட்டத்தட்ட ஒடுக்கப் பட்டே விட்டதை சொல்கிறது.

இப்போ திமுக கூட்டணியில் உள்ள யாரும் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியே போக மாட்டார்கள்.

தேமுதிக, பாமக இப்போதே திமுக பக்கம் வர நூல்விடத் தொடங்கி இருப்பார்கள்.

இந்திய அரசியலில் மோடி அலையில் மூழ்காத இரு தலைவர்கள் என்றால் அது நவீன் பட்நாயக்கும் ஸ்டாலினும்தான். எனவே இந்திய அரசியலிலும் ஸ்டாலினுக்கு ஏறுமுகமே.

காங்கிரசின் 70 எம்பிகளில் 10 தமிழ் நாட்டில். தமிழ் நாட்டில் தனித்து நின்றால் அதுவும் பூச்சியமே. அப்படி இருக்கு ஒரு தேசிய கட்சியின் நிலை.

எனவே இப்போதைக்கு பாஜக, அதிமுக, நாத, மநீம, அமமுக தவிர்ந்த ஏனைய அனைத்து தமிழ்நாட்டு கட்சிகளின் ஒரே போக்கிடம் திமுகவே.

ஸ்டாலின் கூட்டணி அமைப்பதில் அப்படியே அப்பன் போலவே செயல்படுகிறார். மத்திய தேர்தலில் 50% விட்டுக்கொடுப்பு ஆனால் சட்டசபை தேர்தலில் 65% கீழ் ஒரு சீட்டும் குறையாமல் திமுக போட்டியிடும்.

அநேகமாக அடுத்த ஆட்சி தனிப்பெரும்பான்மை அல்லது, மைனாரிடி திமுக அரசாகவே அமையக்கூடும்.

எதுக்கும் இந்த பதிவை favorite இல் போட்டு வையுங்கள். ஒன்றில் நீங்கள் அல்லது நான் I told you so என்று சொல்லப் போகிறோம்.

 

ஈழத்தமிழராகிய நாம், உள்நாட்டுத் தேர்தல்களைக் காட்டிலும், இந்திய - தமிழகத் தேர்தல்களில் அதிக கவனம் செலுத்துவது ஏன் என்று நினைக்கிறீர்கள்?

உள்நாட்டுத் தேர்தல் முடிவுகள் எமது வாழ்வில் செலுத்தும் ஆதிக்கத்தை விட, இந்தியத் தேர்தல் எமது வாழ்வில் அதிக ஆதிக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் ஒரு சக்தியாக கடந்த 40 வருடங்களாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? இது உண்மையாகவே ஒரு சாபமாகத் தோன்றவில்லையா? எமது தலைவிதியை அந்நிய நாட்டு .... தீர்மானிப்பதற்கு நாம் செய்த தவறுதான் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

நாதம்ஸ்,

எனக்கென்னவோ நீங்கள் பிரண்ட பக்கத்துக்கு குறி சுடுறாப்ப்போல படுது.

நீங்கள் சொல்லியதை விட ஸ்டாலின் அசுர பலத்தோடு எழுந்துள்ளார் என்பதே உண்மை.

உடனே என்னை ஸ்டாலின்னின் கூஜா எண்டு சொல்ல வேண்டாம். திமுக வை நானும் வெறுக்கிறேன் ஆனால் அரசியல் அனுமானம் என்பது எமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதே.

ரத்தான கதிர் ஆனந்த் தொகுதி தவிர திமுக போட்டியிட்ட 19 இலும் 19/19 வெற்றி.

தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெல்லுவதே வழமை. அதிலும் 13/22 என்பது இடைத்தேர்தல் என்று பார்க்கும் போது கணிசமான வெற்றியே.

அடுத்த முக்கியமான விசயம், தானே வெல்லும் குதிரை என்பதை ஸ்டாலின் நிருபித்துள்ளார். குறிப்பாக மதுரையில் சிபிஎம் வேட்பாளர் வென்றது. அழகிரி ஆதிக்கம் திமுகவில் கிட்டத்தட்ட ஒடுக்கப் பட்டே விட்டதை சொல்கிறது.

இப்போ திமுக கூட்டணியில் உள்ள யாரும் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியே போக மாட்டார்கள்.

தேமுதிக, பாமக இப்போதே திமுக பக்கம் வர நூல்விடத் தொடங்கி இருப்பார்கள்.

இந்திய அரசியலில் மோடி அலையில் மூழ்காத இரு தலைவர்கள் என்றால் அது நவீன் பட்நாயக்கும் ஸ்டாலினும்தான். எனவே இந்திய அரசியலிலும் ஸ்டாலினுக்கு ஏறுமுகமே.

காங்கிரசின் 70 எம்பிகளில் 10 தமிழ் நாட்டில். தமிழ் நாட்டில் தனித்து நின்றால் அதுவும் பூச்சியமே. அப்படி இருக்கு ஒரு தேசிய கட்சியின் நிலை.

எனவே இப்போதைக்கு பாஜக, அதிமுக, நாத, மநீம, அமமுக தவிர்ந்த ஏனைய அனைத்து தமிழ்நாட்டு கட்சிகளின் ஒரே போக்கிடம் திமுகவே.

ஸ்டாலின் கூட்டணி அமைப்பதில் அப்படியே அப்பன் போலவே செயல்படுகிறார். மத்திய தேர்தலில் 50% விட்டுக்கொடுப்பு ஆனால் சட்டசபை தேர்தலில் 65% கீழ் ஒரு சீட்டும் குறையாமல் திமுக போட்டியிடும்.

அநேகமாக அடுத்த ஆட்சி தனிப்பெரும்பான்மை அல்லது, மைனாரிடி திமுக அரசாகவே அமையக்கூடும்.

எதுக்கும் இந்த பதிவை favorite இல் போட்டு வையுங்கள். ஒன்றில் நீங்கள் அல்லது நான் I told you so என்று சொல்லப் போகிறோம்.

 

இல்லையே,

கடந்த முறை ஜெயலலிதா வென்ற 37, அணைத்துமே அதிமுகவினது.

இம்முறை கூட்டணி சேர்ந்த வெற்றி. தனியானதல்ல.

ஸ்ராலின் வெற்றி முதல்வராவதில் தானே உள்ளது. அதில் கோட்டை விட்டார் அல்லவா?

கடந்த முறை வெற்றியின் போதே மோடிக்கு ஜெயலலிதா தேவைப்படவில்லை. இந்த முறை அசுரவெற்றியால், ஸ்ராலின் தேவையே இல்லை.

ஆக.... வெற்றியாளர் ஸ்ராலின் அல்ல, எடப்பாடி.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நான் இப்படி எல்லா தேர்தல்களையும் அவதானிப்பேன். கிட்டத் தட்ட இது ஒரு spectator sport போல. உலக கிண்ணம் பார்பதில்லையா அப்படி.

ஆனால் என்ன பென்ஜமின் நெட்டன்யாஹு பற்றி யாழ்களத்தில் வந்து கதைக்க ஆளில்லாதபடியால் அதை வேற தளத்தில் பேசுவேன் 😂.

ஆனால் திரை, சின்னத்திரை, மெல்லிசை, சங்கீதம், நாட்டியம், நாவல், என சகலதிலும் இலங்கை படைப்புகளை விட இந்திய படைப்புகளை விரும்பி நுகரும் நாம், இதில் மட்டும் வேறுபடாமல் இருப்பது ஒன்றும் அதிசயம் இல்லையே.

6 minutes ago, ரஞ்சித் said:

ஈழத்தமிழராகிய நாம், உள்நாட்டுத் தேர்தல்களைக் காட்டிலும், இந்திய - தமிழகத் தேர்தல்களில் அதிக கவனம் செலுத்துவது ஏன் என்று நினைக்கிறீர்கள்?

உள்நாட்டுத் தேர்தல் முடிவுகள் எமது வாழ்வில் செலுத்தும் ஆதிக்கத்தை விட, இந்தியத் தேர்தல் எமது வாழ்வில் அதிக ஆதிக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் ஒரு சக்தியாக கடந்த 40 வருடங்களாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? இது உண்மையாகவே ஒரு சாபமாகத் தோன்றவில்லையா? எமது தலைவிதியை அந்நிய நாட்டு .... தீர்மானிப்பதற்கு நாம் செய்த தவறுதான் என்ன?

 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஆனால் என்ன பென்ஜமின் நெட்டன்யாஹு பற்றி யாழ்களத்தில் வந்து கதைக்க ஆளில்லாதபடியால் அதை வேற தளத்தில் பேசுவேன் 😂.

அப்படி ஏன் நினைக்கிறீர்கள். இங்கே பல விடயங்கள் தெரிந்த பலரும் இருக்கிறார்கள். நீங்கள் இங்கும் பேசலாம்.😊

ஒரு காணொளியில் இளையவர் ஒருவர் வாக்குக்கு கொடுத்த பணத்தை திருப்பி கொடுப்பதை பார்த்தேன் 
இந்த வாக்களித்த மக்களில் கணிசமானோர் இளையோர் 
இளையவர்கள் நாளைய பெரும்பன்மை வாக்காளார்கள் 

மாற்றம் ஒன்றுதான் மாறாதது 
மாறுவது எல்லாம் உயிரோடு 
மாறாதது எல்லாம் மண்ணோடு 

மாற்றம் என்பது இலகுவானது அல்ல
அதுவும் ஊறிப்போன எண்ணங்களில் மாற்றம் வருவது என்பது கடினம்
சரியான மாற்றத்தை கொண்டுவருவது அதைவிட கடினம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.